“தம்பி அது வந்து…” என்று அவர் மறுபடியும் அவர் பேச ஆரம்பிக்க,
“என்ன?… என்ன திட்டம் போட்டுட்டு வந்திருக்கீங்க ரெண்டு பெரும் சேர்ந்து இந்த தடவை?…”
அவன் கேட்டதும், வேகமாக, “இல்ல இல்ல தம்பி… அப்படியெல்லாம் எதுவும் இல்ல தம்பி…” என்று ஒப்பிப்பது போல சொல்ல,
“உங்கள நம்ப சொல்லுறிங்களா என்னை?…”
“தம்பி… அது என்னவோ புத்திகெட்டு போயி…” என்று பேச வர,
“ஆன்… அப்பறம்…” என்று பிரகதீஷ் இடையீட்டு கேட்டு,
“உங்ககிட்ட நான் ஒன்னும் இப்போ கேக்கல…நான் பேச சொல்லும் பொது மட்டும் பேசுங்க… இப்போ போயி அங்க உக்காருங்க…”
“சாமி… ஈசுவரா… இத ஒன்னை மட்டும் சொல்லிட்டு போயிடுறேன்…”
அவன் என்ன என்பது போல் பார்க்க,
“எனக்கு தெரியாது தம்பி, உனக்கு அந்த பிள்ளையை இவ்வளவு பிடிக்கும்னு, நீ அன்னைக்கு என்கிட்டே கோவமா பேசும் போது தான் தெரிஞ்சிகிட்டேன் சாமி இந்த அம்மா…”
“முன்னாடியே தெரிஞ்சிருந்தா, உங்க அக்காகூட சேர்ந்து இப்படி புத்திகெட்டு போயிட்டு நடந்துருக்க மாட்டேன்… உன்கிட்ட பேசுனதை கூட, நான் உங்க அக்காகிட்ட ஒன்னும் சொல்லிக்கலை தம்பி…”
“நீ ஒத்தையா இருக்கியேன்னு நினைச்சி தான், உங்க அக்காக்காரி சொன்னதை, உங்கிட்ட கேட்டுட்டேன்… இப்போ நான் திருந்திட்டேன் தம்பி… நம்பு சாமி இந்த அம்மாவை…” என்று விளக்கமளித்து, அவனை ஆதங்கமாக பார்க்க,
அவனோ, “சரி சொல்லிட்டீங்களா… போயி உக்காருங்க… டீ எடுத்து வரேன்…” என்று அவர் சொல்லியதற்கு பதில் சொல்லாது கத்தரித்து பேச,
அவனை இப்போது கொஞ்சம் பாவமாக பார்த்தார், காமாட்சி.
“நீங்க இப்ப திடிர்னு இவ்வளோ நல்லவங்களா மாறிக்குறதை பார்த்து, எனக்கு அப்படியே புல்லரிக்குது… பண்ணறதையெல்லாம் பண்ணிட்டு நேக்கா இப்போ பேசி தப்பிக்குறீங்க…”
“இதுலாம் உங்களுக்கு எவ்வளோ கை வந்த கலையா இருக்கு…”
“நான் ஏதாவது கேவலமா கேட்டுட போறேன்… முதல்ல என் முன்னாடி நிக்காம கிளம்புங்க…” என்று உறுமிவிட்டு டீயை எடுத்து வெளியே சென்றான்.
அவன் டீ எடுத்து வரைதல் பார்த்த, மனோகரோ
“மாப்பிளை டீ எடுத்து வரான்… நீ இங்க அழுந்தி உக்காந்து என்ன கனவு கண்டுட்டு இருக்கியா… சீ, எழுந்து முதல்ல அதை வாங்கு…” என்று அமர்ந்திருந்த லீலாவை பேச,
அதுவரையில் தன் எண்ணத்திலே சுழன்றுகொண்டிருந்த லீலாவோ, கணவனின் பேச்சில் திடுக்கிட்டு அவனை பார்த்து விழித்தாள்.
“என் வீட்டுக்கு நீங்க வந்திருக்கீங்க… அப்போ நான் தானே மாமா குடுக்கணும்…” என்று பிரகதீஷ்ஷே குடுத்தான்.
பின்னால் வந்த காமாட்சியோ, இவர்களின் சம்பாஷணையை பார்த்து நிற்க,
“இதுலாம் ஒன்னும் சொல்லிக்குற போல இல்ல அத்தை… பாத்துக்கோங்க உங்க பொண்ணோட லட்சணத்தை…” என்று தன் அதிருப்தியை மாமியாரிடம் காட்டினான்.
“அப்பா, எங்க மாமா?…” என்று வினவ,
“கொஞ்சம் உக்கார முடியாம இருந்தாங்க… நான் தான் செத்த படுக்க சொன்னேன்…”
“நீங்க குடிங்க மாமா… நான் அப்பாக்கு எடுத்துட்டு போறேன்…” என்று அவன் உள்ளே செல்ல,
அங்கு படுத்திருந்த தந்தையை பார்த்து, “என்ன ப்பா… களைப்பா இருக்கா?…”
“அதுலாம் ஒன்னும் இல்ல தம்பி… ரொம்ப நேரமா உக்காந்திருந்தது கொஞ்சம் முதுகு புடிச்ச மாறி இருந்தது.
“இதை குடிச்சிட்டு நீங்க ரெஸ்ட் எடுங்க… நான் அப்பறம் வரேன்…” என்று சொல்லிவிட்டு எழ,
“என்ன தம்பி, என்னவாச்சும் சொல்லனுமா?…” என்று கேட்டு அவனின் முகத்தை பார்க்க,
“ம்ம்… அது ஒன்னும் இல்ல ப்பா… நீங்க படுங்க, நாளைக்கு பாத்துக்கலாம்…”
“ஆத்தாளும், மவளும் வேண்டாதபடி பேசி தான், மருமகளை வீட்டை விட்டு கிளம்ப வச்சிருக்காங்கன்னு மட்டும் தான், நானும் நினச்சேன்…”
“தம்பி சொல்லி தான் இந்த விஷயமே தெரியும்…” என சொல்லி முடித்தார்.
“மாமா, உங்க பொண்ணை, நான் என்ன பண்ணாலும் நீங்க இடையில வர கூடாது… மாப்பிளை உனக்கும் தான் சொல்லிட்டேன்…”
“அவளுக்கும் பொண்ணு இருக்கே… அவ பொண்ணை இதே மாறி பண்ணுவாளா… எனக்கு சொல்லவே வாய் கூசுது…”
“ச்ச்சீ… இவயெல்லாம் பொம்பளையா… ஒரு பொண்ணோட வாழ்க்கையை அவளுக்கே தெரியாம அழிக்க பாத்துருக்கா… இதுல என் தங்கச்சியும் கூட்டு…”
“இதுக்கெல்லாம் இப்போவே ஒரு முடிவு கட்டுறேன்…” என்று ஆத்திரத்துடன் சொல்லி முடித்தான்.
“மாமா…” என்று பிரகதீஷ் பேச்சை தொடங்க,
“ஒன்னும் இப்போ என்கிட்ட கேக்காத மாப்பிளை…”
“மது வீட்டைவிட்டு போன விஷயம் கேள்விப்பட்டு, நான் கேட்டதுக்கு, உன்னை வேணாம்னு விட்டுட்டு போயிட்டதா, சொல்லி பூசி மொழிகிறுக்கா என்ட… இன்னும் என்னலாம் பண்ணிருக்கானு தெரியல…”
“இப்போதான் தெரியுது எனக்கு, நீ எதுக்கு வீட்டுல ஒன்னும் சொல்லாம வர சொன்னன்னு… இதுவும் நல்லதுக்கு தான் மாப்பிளை…”
“இதுதான் மாப்பிளை, ஈசுவரும் என்கிட்ட கேட்டுட்டு இருந்தான்…” என்று தன் மாப்பிள்ளையிடம் சொல்ல,
“அப்பறமென்ன, வாங்க மாமா போயி அழைச்சிட்டு வந்துடலாம்…” என்று சொல்லிவிட்டு வெளியேறினான்.
அவன் வெளியே சென்றபோது,
“அதானே பாத்தேன்… ஏற்கனவே குடிய கெடுத்தது பத்தாதுன்னு, அடுத்து இப்படி நாடகத்தை பாத்து, எவென் குடிய கெடுக்கலாம்னு திரிய வேண்டியது…” என்று எண்ணி அவர்கள் இருவரையும் முறைப்புடன் பார்த்து கொண்டே அங்குள்ள சோபாவில் அமர்ந்தான்.
இவன் அங்கு அமர்வது கூட தெரியாமல், அம்மாவும், பொண்ணும் தொலைக்காட்சி பெட்டியில் நாடகத்தை பார்த்துக்கொண்டிருந்தனர்.
கன நேரத்திற்கு பிறகு, அப்பாவும், பிள்ளையும் பேசிக்கொண்டே வெளியே வர, அந்த சத்தம் கேட்டு இருவரும் திரும்பி பார்த்தனர்.
“மாமா கிளம்பலாமா?…” என்று அங்கிருந்தவர்களை கண்டுக்காமல் பிரகதீஷ் கேட்க,
அவன் பதில் சொல்லுவதற்கு முன்பு,
லீலா வேகமாக, “எங்கடா? வெளில போறோமா…”
அவளுக்கு பதிலென்ன, அவளின் முகத்தை கூட ஏறெடுக்காமல், வெளியே சென்றான்.
மற்ற ஆடவர்களும் வெளியேற, போகும் அவர்களை பார்த்துக்கொண்டே,
“என்ன மோவ்… ஒன்னும் சொல்லாம போறாங்க…”
“இவன் என்னைய பெருசா கண்டுக்க கூட இல்ல… இதுலாம் என்னனு நீ கேக்க மாட்டியா அவன்கிட்ட…”
“நானும் உன்கூட தானே இருக்கேன்… எனக்கென்ன தெரியும்…”
“அவன் பேசலைன்னா அவன்கிட்டயே கேட்டுக்கோ இனிமே… என்கிட்ட இப்படி கேக்குற ஜோலி வச்சிக்காத…”
“என்னமோவ் வேற மாறி பேசுற… நானும் பாத்துட்டே தான் இருக்கேன்…”
“அந்த கனி பொண்ணை, உன் பிள்ளைக்கு கேக்க சொன்னதுல இருந்து, நீ கொஞ்சம் பட்டுக்கமா தான் பேசுற மாறி இருக்கு… என்ன சங்கதி?”
“நானே என்ன வரப்போகுதோன்னு பாத்துட்டு இருக்கேன்… இவ ஒருத்தவ…” என முணுமுணுக்க,
“அதுசரி… என்ன உம்மவன் வீட்டுக்கு வந்ததும் கொஞ்சம் பவுசு கூடி போச்சா…”
“ஆமா, அப்டினே வச்சிக்கோ… நீ என்கிட்ட ஒரண்டைய இழுக்கமா இரு… நான் செத்த கட்டைய சாய்க்கப்போறேன்…” என்று சொல்லிக்கொண்டே கூடத்தில் ஒரு மூலையில் படுத்துவிட்டார்.
அன்னை இப்படி தன்னை பேசியதும், கொஞ்சம் யோசித்து,
“இப்போ எதுக்கு இந்த அம்மா இப்படி நடந்துக்குதுன்னு தெரியலையே… இருந்தாலும் இப்போ நம்ம கொஞ்சம் அடக்கி வாசிச்சிகிட்டா தான், விஷயம் பேசும் போது, சரியாய் இருக்கும்…” என்று முடிவெடுத்து அமைதியானாள் லீலாவதி.