“எங்க கூட்டிட்டு போற மாமா” என்ற மகிழின் கேள்விக்கு.. “நீ தானேடி நேத்து நைட் கூட்டிட்டு போ மாமான்னு சொன்ன.. அதான் போறோம்” என பதிலளித்தான் நந்தா.
முகிலைப் பதம் பார்த்த அதே குடையால் நந்தாவையும் இரண்டு விளாசியவள் “இந்த வியாக்கியானத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.. ஊருக்குள்ள போகாம காட்டுத் தடத்துல ஏன் போறிங்கன்னு கேட்கறேன்” என மீண்டும் கேட்டவளுக்கு பதில் சொல்லாமல் வண்டியை நிறுத்து அவளை இறங்கச் சொன்னவன் “நேத்து என்ன சொன்ன மயிலு.. ஏன் திடீர் முடிவு” எனக் கேட்கவும்
“கொஞ்சமாவது சந்தோஷம் இருக்கா பாரு.. எப்பன்னு கேட்பிங்கன்னு பாத்தா ஏன்னு கேக்கறிங்க” என அவள் முகத்தைத் திப்பிக் கொண்டு அங்கிருந்த பாறை ஒன்றின் மீது அமர்ந்தாள்.
நந்தா ஒரு பொறுமையற்ற மூச்சு “விளையாடத மயிலு.. சரியான காரணம் இல்லாம நான் எங்க வீட்ல பேச முடியாது.. ஏற்கனவே நான் பண்ணின குளறுபடி அப்படி.. சரியா.. ஒழுங்கா பதில் சொல்லு” என சற்று குரல் உயர்த்தியே கேட்டான்.
“காரண காரியம் எல்லாம் எனக்குத் தெரியாது மாமா.. நீ என்னை உங்க வீட்டுக்கு அழைச்சுட்டுப் போவியா மாட்டியா.. அதுக்கு மட்டும் பதில் சொல்லு” என இவளும் பதில் கேள்வி கேட்டாள்.
மகிழின் கோவம் பற்றி அறிந்தவன் “முகில் கல்யாணம் நடக்கனும்னு என்னோட வரேன்னு சொல்றியா” என கோவத்தை கை விட்டுத் தன்மையாகவே கேட்டான்.. அவள் இல்லை என்பது போல தலையசைக்கவும்.. “அப்ப.. என்னை மன்னிச்சுட்ட.. அப்படித் தானே” என அவன் ஆர்வமாகக் கேட்கவும்.. அதற்கும் இல்லையென தலையசைத்து பெரிய பல்பைக் கொடுத்தாள் அவன் மனைவி.
“அப்புறம் என்ன தான்டி காரணம்.. எங்க வீட்ல நாலு எருமை மாடு இருக்கு.. அங்க வந்து அதை மேய்க்கப் போறியா” என்று எரிச்சலுடன் வெடுவெடுக்க
“நாலு தானா.. உன்னை விட்டுட்டியே மாமா.. உனக்காக இம்போர்டட் புண்ணாக்கு வாங்கி சீதனமா எங்கப்பாவைத் தரச் சொல்றேன்” என அவனைக் கலாய்த்து முறைப்பை வாங்கிக் கொள்ள.. நந்தா “ஒழுங்கா சொல்றியா இல்லை.. உன்னை இங்கேயே விட்டுட்டு நான் மட்டும் போகவா” என மிரட்ட
சிரித்தவள் “ஐயோ பயந்துட்டேன்.. அட மங்குனி மாமா” என தலையில் அடித்துக் கொண்டவள்.. “நான் உன்னோட வரன்னு சொன்னதுக்கு முகில் கல்யாணம் காரணம் இல்லை.. உன்னை மன்னிக்கவும் இல்லை” என அதையே கூறி அவன் முறைப்பை இன்ச் பை இன்ச் அதிகம் செய்தவள் “ஏத்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.. அதான்” என்றாள்.
அவன் குழப்பமாக “எதை” என்கவும் “அன்பை தான்” என்றாள் மகிழ்.. ‘வெறுப்பேத்துறியா’ என்பது போலப் பார்த்தவன் “ஏன்” என மீண்டும் கேட்க..
“அன்பு எந்த மோட்ல வந்தாலும் அக்சப்டபிள் தானே.. சோ டியுப்ளிகேட் பிரக்னன்ஸி ரிப்போர்ட் காட்டி கல்யாணம் பண்ணிக்கிட்ட இந்த அன்பையும் ஏத்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்” என்றாள் அவன் நெஞ்சைத் தொட்டு இதழோடும் புன்னகையுடன்.
அவள் கரம் பற்றியவன் ‘நிஜமாவா’ என்பது போலப் பார்க்க.. ‘ஆமாம்’ என்பது போலத் தலையசைத்தாள் மகிழ்.. பற்றிய அவள் வலக்கரத்தை தன் கண்ணில் வைத்தவன் “தேங்க்ஸ் டி” என மகிழ..
அவனிடமிருந்து தன் கையைப் பறித்துக் கொண்டவள் “அதுக்கு டிஸ்க்ளய்மர் இருக்கு.. அதையும் முழுசா கேட்டுக்கோங்க மாமா” என வினயமாகக் கூற.. நந்தா “இன்னும் என்னடி” என்றான் சலிப்பாக.. சந்தோஷத்தை அனுபவிக்க விடமாட்டின்றாளே என்ற கடுப்பில்.
“நீங்க பண்ணது சுத்தமா மறக்கற வரை.. எப்பெல்லாம் நியாபகம் வருதோ அப்பெல்லாம் உங்களுக்கு டேமேஜ் ஹெவியா இருக்கும்.. ஓகேவா” எனக் மகிழ் உரைக்கவும் அடுத்த நொடி அவள் காதைத் திருகியவன் “அடிங்க.. நானும் பாக்கறேன் வந்ததுல இருந்து ஓவரா வாய் பேசிட்டே இருக்க.. இன்னைக்கு யார் டேமேஜ் ஆகப் போறாங்கன்னு பாக்கலாம் டி” என மறு கையால் அவள் முழங்கை பற்றி அருகில் இழுக்கவும்.. மகிழுக்கு மூச்சே நின்றுவிடும் போல இருந்தது.
சாகரம் போல விரிந்த கண்களை ரசனையுடன் பார்த்தவன்.. இத்தனை அருகில் வந்து தன்னை தள்ளாட விடும் அவள் புருவ முடிவில் இருந்த மச்சத்தில் இதழ் பதித்தான்.
அவனை விலக்கியவள் “போலாம் மாமா” என அவனையும் நினைவுக்குக் கொண்டு வர.. அவள் கரத்தை பிடித்தவன் “போகனுமா” என ஏக்கமாகக் கேட்கவும்.. மகிழ் பதில் சொல்வதற்குள் “ஐயோ வயிறு எறிய வைக்கிறானுங்களே” என்ற குரலில் இருவரும் திரும்பிப் பார்க்க..
அங்கே அவர்களை முறைத்தபடி நின்றிருந்த ஸ்பாட் “இதுக்கு அப்புறமாவது பிரிஞ்சு நிக்குதான்னு பாரு ரெண்டும்.. ஏன்டா.. ஏன்டா.. இப்படி” என்கவும் நந்தா “பரமசிவன் கொடுக்கறான்.. நான் ஆனந்தமா இருக்கேன்.. நீ ஏன் வயிறு எறியிற ராசா.. போனவாரம் நீ தானே நிம்மி கிட்ட பேசினேன்.. உன் முட்டாள் மாமன் உங்கிட்ட பேசிட்டான்னு என்னையை கலாய்ச்சியே.. அதுக்கு பழி வாங்க வேண்டாம்” என்றான் வேண்டுமென்றே.
நந்நாவும் ஸ்பாட்டும் வழக்கடித்த படியே இருக்க.. அவர்களை விட்டு சற்றே தள்ளி இருந்தே ஒரு பழைய சிதைந்த விநாயகர் கோவிலில் இருந்து பேச்சுக் குரல் கேட்க.. மூவரும் அங்கே சென்று மெதுவாக எட்டிப் பார்க்க.. ஸ்பாட் அதிர்ந்தான்.
அங்கே முகில் கோவமாகவும்.. அருகில் முத்து ஆச்சரியமாகவும் அந்த இருவரைப் பார்த்தபடி நின்றனர்.. அந்த இருவர் வேறு யாருமல்ல.. மகிழின் அவ்வாவும்.. நந்தாவின் அப்பத்தாவும் தான்.
முகில் தான் காய்ச்சிக் கொண்டிருந்தான் “உங்க வீட்டு நடிப்பா.. எங்க வீட்டு நடிப்பா.. ரெண்டு பேருக்கும் ஆஸ்கர் தான் கொடுக்கனும்” என..
மூவரும் அவர்களை நெருங்க ஸ்பாட் “அடப்பாவிங்களா.. என்னடா சுந்தர்.சி மூவி கிளைமாக்ஸ் மாதிரி ஆளாளுக்குத் தனியா ரகசியத் திட்டம் போடறிங்க” என்க.. அவர்கள் நால்வரும் திரும்பிப் பார்த்தனர்.
முகில் நந்தாவுடன் சண்டையிடுவானோ என பயந்த மகிழ் இருவரையும் சற்று பயமாகப் பார்க்க.. நந்தாவோ வெகு இயல்பாக முகிலிடம் “என்ன மச்சி.. இன்னைக்கு இந்த ரெண்டு கல்ப்பிரட்டும் மாட்டிகிச்சா” என வினவ
முகில் “அப்போ உனக்கு முன்னமே தெரியுமா மச்சி.. ஏன் சொல்லலை என்கிட்ட” என ஆச்சரியமாகக் கேட்க.. மகிழ் தான் குழம்பிப் போனாள்.
ஸ்பாட் மகிழிடம் “ரெண்டு கையால தலையை சொறியனும் போல இருக்கா.. எனக்கும் போன வாரம் இரண்டு பேரும் சிரிச்சுப் பேசினப்ப அப்படித்தான் இருந்துச்சு” என்றான்.
இதற்குள் நந்தா “ம்ம்.. ரெண்டு மாசம் முன்னாடி ஊருக்கே கேக்கற மாதிரி கத்தி வீடியோ கால் பேசினப்ப பாத்தேன்” என இருவரையும் முறைத்தான்.
சாரதா அவ்வா “டேய் என்னடா அதான் தெரிஞ்சுடுச்சுல்ல.. ஓவராப் பேசாதிங்க.. நல்லாப் பேசிட்டு இருந்த எங்களை இப்படி லவ்வர்ஸ் மாதிரி பேச வச்சது உங்கப்பனுங்க தானே” என்றார் அசால்ட்டாய்..
அமிர்து அவ்வா “அதானே.. எங்க ரெண்டு பேர் வீட்டுக் காரங்களே ஒன்னும் சொன்னது இல்லை.. நீங்க யாருடா.. பொடிப்பசங்க” என்றார் அவரை விட அசால்ட்டாய்..
“அப்போ அப்பாரு இருந்த அப்ப இருந்தே பேசுவிங்களா” என நந்தா கேட்கவும்.. இருவரும் ஆம் என்பதாய் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொள்ள
மகிழ் “எப்படி அம்மா அப்பா, அத்தை மாமாக்கு எல்லாம் தெரியாம இத்தனை வருஷம் மெய்ன்டெய்ன் பண்றிங்க” என ஆச்சரியமாக வினவவும்.. நந்தா பின்னொட்டாய் “அதானே.. நாங்க ஒரு பத்து நிமிஷம் பேசுனாலே பூனை வந்து கிராஸ் ஆகுது” என்றான் ஸ்பாட்டைப் பார்த்தபடி
சாரதா அப்பத்தா “நாங்க ரெண்டு பேரும் எங்க மாமியாருகளுக்கே பயப்படாம நடு ராத்திரில அரிச்சந்திரன் நாடகம் பாக்கவும்.. களை எடுக்கறேன்னு பொய் சொல்லிட்டு சினிமா ஷூட்டிங் பாக்கவும் போனவங்க.. உன் மாமியார்லாம் என்ன என் சிப்ஸூ” என்றார் படுகெத்தாய்.
ஸ்பாட் வாய் சும்மா இருக்காமல் “ஃப்ராடு தனத்தை காலங்காலமா பண்றிங்க போல” என்க.. குடும்பம் மொத்தமும் அவனை முறைக்க ‘ஆஹா.. ஒன்னு கூடிட்டாங்க’ என அமைதியாகிவிட
அமிர்து அவ்வா இப்போது “டேய் பேராண்டி பேச்சை மாத்தாதே.. நடு ரோட்ல முத்துவை ஏன் திட்டிகிட்டு இருந்த.. அதைக் கேக்க கூட்டிட்டு வந்தா.. என்னைக்கும் சரியான நேரத்தில வராதவ இன்னைக்கு வந்து தொலைச்சுட்டா” என சாரதாவை முறைத்து முகிலைப் பார்த்தார்.
தலைக்கு மேல போய்டுச்சு.. இனி என்ன என்பதாய் “நான் திட்டலை வ்வா.. இவகிட்ட கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டேன்” என்க.. தலையில் அடித்துக் கொண்ட சாரதா “இதையே இப்பத்தான் கேக்கறியா.. நீ எல்லாம் சுத்த வேஸ்ட் டா” என்றார்.. அங்கே மகிழுக்கு மட்டும் தான் அது புதிய செய்தி போலும்.
பயத்துடன் இருந்த மகிழை உற்றுப் பார்த்த அமிர்து அவ்வா “இந்தப் பூனைக்குட்டி தான் வேணுமாடா.. கியாமியான்னு பேசுது.. இதெப்படி நாளைக்கு என் பண்ணையம் பாக்கும்” என அவளை அளவிட..
‘ஏற்கனவே அவ பேசாம சாவடிக்கிற.. இந்த கிழவி இங்கையே பிரிச்சு வச்சிடும் போல’ என நொந்தவன் முத்துவைப் பார்க்க.. அங்கே அனலடித்தது.
சாரதா அப்பத்தா தான் “விடு அமிர்து.. என் பேத்தி கொஞ்சம் சாது.. உன் பேத்தி மாதிரி மாமியாரை குழம்பு வைக்கச் சொல்ற அறிவு அவளுக்கு இல்லை பாவம்” என்றார் மகிழை வம்பிழுத்தபடி..
“ஆமாமா.. ஃபோன்ல கொஞ்சிட்டு.. நேர்ல சண்டைப் போடுற அளவு எனக்கு அறிவு இல்லைப்பா” என்றாள் அவளும் பதிலுக்கு.. முத்துவும் “அதானே.. என்னை கூட வச்சு ஒரு டைம் ப்ளே பண்ணாங்க.. என்ன ஒரு வில்லத்தனம்” என அவளோடு சேர்ந்து கொள்ள
இரு பாட்டிகளும் சிரிக்க.. அமிர்து அவ்வா “பதினேழு வயசுல கல்யாணம் பண்ணி வரப்ப.. எனக்கு காட்டு வேலை, வீட்டு வேலை எல்லாம் இவ தான் சொல்லித் தருவா.. ரெண்டு மாமியாரும் என்னைப் பந்து விளையாடுனா இவ தான் ஆறுதலா இருப்பா.. நீங்க தலையெடுத்து எங்களைப் பேச வேண்டாம்னு சொன்னா எந்த விதத்துல நியாயம்” என்றார்.
சாரதா அப்பத்தாவும் “ஃபோன்ல காசு இருந்தா பேசுவோம்.. இல்லையா தெருவுல போற யாரையாவது வச்சு சண்டைப் போட்டு விஷயத்தை சொல்லிக்குவோம்.. நீ ஊருக்கு வரதை அப்படித்தான் சொன்னா” என்றார் மகிழிடம்.
அதன்பின் நந்தா மகிழின் முடிவைப் பற்றிக் கூற.. அனைவருக்குமே சந்தோஷம்.. முத்து மட்டும் முகிலிடம் முகம் திருப்பிக் கொண்டாள்.. ஒருவழியாக அனைவரும் பேசி முடித்து.. ஒவ்வொருவராக கிளம்பிப் போக.. நந்தா தன் தந்தையிடம் தங்கள் விருப்பம் பற்றி உரைக்க.. மகிழ்ந்தவர் இரு வீட்டுக்கும் பொதுவாக முத்துவின் தந்தை மூலம் பேச்சு வார்த்தை நடந்தது.