வேந்தன் எழிலரசி பேசிக் கொண்டுயிருந்த நேரத்தில்.. மற்றவர்களுக்கு பலகாரங்கள் கொடுக்கப்பட்டது. பின் அனைவரும் அவர்களுக்குள்ளே பலகதைகள் பேச ஆரம்பித்தனர். ஒரு புதுஜோடியோ தாங்கள் அவர்களுடன் இணைவதற்காக தங்களின் அடுத்த கட்டத்தில் அடியொடுத்து வைத்தனர்.
வேந்தனும்.. எழிலரசியும் வர அனைவரின் பார்வையும் அவர்களிடம் திரும்ப.. அவர்கள் இருவரின்அருகில் இருவரின் பெற்றோரும் வந்தனர்.அவர்களின் பெற்றோர்களுக்கு கோயிலில் இருவரும் சம்மதம் என்று சொன்னாலும்.. அனைவரின் முன் சொன்னால்தானே இன்னும் திருப்தியாக இருக்கும்என்று எண்ணி அவர்களை பார்த்தனர்.
வேந்தனும்.. அரசியும் வந்தவர்கள் இருவரின் பெற்றோர்களின் நடுவில் நின்று.. பின் அரசியின் அனுமதி பார்வை பார்த்துவிட்டு.. அனைவரின் முன்பும் மெல்லிய புன்னகையுடன்.. ” இருவருக்கும் எங்கள் இருவருடனான திருமணத்திற்கு விருப்பம் மற்றும் சம்மதம்.. இருவரின் சார்பாக நான் உங்களிடம் தெரிவிக்கிறேன். ” கூறி முடிக்கும் போது தன்னவளை ஒருமுறை பார்த்து திரும்பினான்.
‘ பெற்றோர்கள் தங்களின் மகிழ்ச்சியை முதலில் தத்தமது பிள்ளைகளையும்.. அடுத்து மருமகள்.. மருமகனாக வரப்போகிறவர்களை கட்டியணைத்தும்.. ஆசிர்வதித்தும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். பின் அவர்களை வேந்தன், எழிலரசியின் தாத்தாக்கள்,பாட்டிகள், அம்மாச்சிகளிடம் அழைத்து சென்றனர்.. பின் அவர்களை அறிமுகப்படுத்தி அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கினர். ‘
‘ அவர்கள் அனைவருக்கும் அவர்களின் சம்மதத்தில் மிகுந்த மகிழ்ச்சி கொண்டனர். பின்ன.. முதல் வெளி சம்மந்தம் இல்லையா?.. முதல் வரன் இருவருக்கும்.. அது நல்லவிதமாய் அமைந்தது என்ற மகிழ்ச்சியே.. அவர்கள் பெற்றோர்கள் முதற்கொண்டு இதே எண்ணம்தான். அவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது.. அவர்கள் இருவரின் இணைப்பும் இன்று முடிவு செய்யப்படவில்லை என்று. பெரியவர்கள் அடுத்த என்ன என்று பேச ஆரம்பித்தனர். ‘
‘ இளம் கூட்டத்தினர் சமையல் அறை அருகில் அமர்ந்திருத்தனர்.. பின்னர் இளம் கூட்டத்தினர்கள் அனைவரோடும் ஒன்றாக சென்று அமர்ந்தனர் வேந்தனும்.. எழிலரசியும். அவர்கள் இருவருக்கும்இனிப்பு பலகாரங்கள் கொடுக்க.. சேர்ந்தமர்ந்து பேசிக் கொண்டே உண்டனர். ‘
வேந்தன் அவள் சாப்பிடுவதை ரசிப்புடன் பார்த்துக் கொண்டே அவன் நிதானமாக சாப்பிட்டுக் கொண்டுயிருந்தான்.. அரசியிடம் மெதுவாக.. ” முயல்குட்டி.. எப்படியிருக்கு நான் செய்த ஸ்விட்?.. “
அரசி அவனை ஆச்சரிய பார்வை பார்த்து.. ” தனு நீங்க செய்ததா?.. ரொம்ப நல்லாயிருக்கு. ஆனா எப்படி இங்க?.. ”
புன்னகையுடன் ” உபயம் என் மச்சான் தான்.”
” மச்சான்னா?.. ம்ம்.. என்ன அண்ணாவா?.. ”
” முயல்குட்டி.. இது உனக்கான என்னோட ஸ்பெஷல் ஸ்விட்.. ”
மெல்லிய புன்னகையுடன்.. ஆனந்தத்துடனும்.. ” ம்.. சோ கியூட் தனு. ஆனா நீங்க கொண்டுவந்தது.. உங்க வீட்டல இருக்கறவங்களுக்கு தெரியும்மா?.. ” அவன் ‘ இல்லை ‘ என தலைஆட்ட..
” என்ன தெரியாதா?.. இது மட்டும் மற்றவர்களுக்கு தெரிஞ்சது.. அவ்வளவுதான்.. ஏதாவது தப்பா நினைப்பாங்க.. தனு. ”
” இதில் தப்பா நினைக்க என்ன இருக்கு?.. அதெல்லாம் நினைக்க மாட்டாங்க முயல்குட்டி.. அப்படியே நினைச்சாலும் நான் என்ன பண்ண?.. அதுக்கெல்லாம் கவலைபட மாட்டேன் அரசிம்மா. நான் கல்யாணம் பண்ணப்போற பொண்ணுக்கு சப்ரைஸ் கிப்ட் கொடுக்கிறேன். அவ்வளவுதான். “
‘ இதுதான் வேந்தனின் குணம்.. அவன் குடும்பத்தின் மிகுந்த அன்பு வைத்துயிருப்பவன்.. குடும்பத்தின் கடமை, பொறுப்புகளையும் தெளிவாக அறிந்து.. உணர்ந்து செய்வான். அதேநேரத்தில் தன்னுடைய விருப்பங்களை.. யாருக்கும் பாதிப்பும், பிரச்சனையும் வராத பஞ்சத்தில் யாருக்காவும்விட்டு கொடுக்கமாட்டான். அதன் அடிப்படையில் தான்.. தன்னவளுக்காக அவன் செய்திருப்பது, செய்யப்போவது. ‘
” சப்ரைஸ் கிப்ட் கொடுக்கலாம் தனு.. கடையில் வாங்கி வந்தா பிரச்சனை இல்ல.. ஆனா நீங்களா இனிப்பு செய்து.. யாருக்கும் தெரியாமா கொண்டுவருவது.. சற்று அதிகம்தான் தனு. ” கூறிக் கொண்டு இருக்கும் போதே..
” அரசி.. முதன்முதலா உங்க வீட்டுக்கு உன்னை பார்க்க வரேன். நான் எப்பயோ இங்க வந்துயிருக்க வேண்டியவன்.. இப்பதான் வரேன். எனக்கு எவ்வளவு ஸ்பெஷல்னு உனக்கு புரியாது.. போ முயல்குட்டி. நான் உனக்காக செய்து.. உன் பக்கத்தில் அமர்ந்து நீ சாப்பிடுவதை பார்த்து ரசிக்கனும் என்று தான்.. யாருக்கும் தெரியாம உனக்கு கொண்டு வந்தா.. அவங்க இவங்கனு சொல்லிகிட்டுயிருக்க. ” கூறி அமைதியாக கைகளை தட்டின்மீது தடவிக் கொண்டுயிருந்தான்.
” ஓ.. தனு!.. கோபமா?.. என் தனுல.. இங்க பாருங்களே.. “ ம்ஹூம்.. அவன் திரும்பவில்லை. புன்னகையுடன் ” தனு என்ன இது ?.. வித்தியாசமான சுவையா இருக்கு. ”
வேகமாக.. ” அது.. ” என்று தொடங்கி.. ” ஒன்னும்மில்ல.. ”
” சரி.. எனக்கு ஒன்னும் இல்லப்பா.. ஆனா நீங்க சொல்லுகிற வரை உங்க முயல்குட்டி இத சாப்பிடமாட்டா. ” என்று கூறிவிட்டு.. அவளும் தட்டை தடவிக் கொண்டுயிருந்தால்.
சிறிய முறைப்புடன்.. ” சாப்பிடு முதலில்.. நான் சொல்லுறேன்.. ” என்று கூறியும் அரசி சாப்பிடாமல்இருக்கவும்..
” இப்ப உடனே சாப்பிட்டா நீயா சாப்பிட முடியும்.. இல்ல நான் இதை எடுத்து.. உன்னை சாப்பிடவைக்கிற விதமே வேற.. யார் இருக்காங்கனு கூட பார்க்கமாட்டேன்.. பார்த்துக்கோ. ” சொன்னதை செய்வேன் என்பது போல பார்க்க..
அரசி வேந்தன் கூறியதை கேட்டவுடன்.. அவளின் ஞாபகம் சற்றுநேரம் முன் தன்னை நண்பர்களின் முன் தூக்கியதை நினைத்துப் பார்த்தாள். பிறகு சுற்றும் பார்க்க.. அங்கு பெரியவர்கள் இல்லை.. சிறியவர்களாக இருக்க.. இவன் ஊட்டிவிட்டா கூட அதுவும் வில்லங்கம்!.. ஆகிவிடும்.. இதுல சாப்பிட வைக்கிற விதமே வேறனு!..செல்லுறான்..
” சரி தனு.. நீ இரண்டு தடவை சொன்னதால சாப்பிடுகிறேன்.. சரி சொல்லுங்க. “
வேந்தன் அவள் யோசிப்பதையும்.. பிறகு சாப்பிடுகிறேன் கூறியதை பார்த்தும்.. அவள் எதை நினைத்துயிருப்பாள் என்று அறிந்தும்.. புன்னகையுடன் அவள் தலையை மென்மையாக ஆட்டி.. ” சும்மா சொன்னேன் முயல்குட்டி.. நீ ரொம்ப கற்பனை பண்ணாத. ” என்று சிரிப்புடன் கூற..
‘ என்ன நான் கற்பனை பண்றனா?.. கற்பனை பண்ணுறமாதிரி இவன் சொல்லிட்டு.. என்னையபண்ணாதவா.. அவள் அவனை முறைக்க.. ‘
” ரொம்ப முறைக்காத.. சரி சாப்பிடு அரசி. ” அவள் சாப்பிடுமுடிக்கும் வரை பார்த்திருந்து.. பின்அவளை முகத்தை பார்த்து..
” இது சுரைக்காய் சிறிது துறுவி எடுத்து.. அது பாதிவெந்ததும்.. முந்திரி, பாதாம் பாலோட கற்கண்டு சேர்த்ததை.. சேர்த்து நல்லா வெந்தவுடன்.. நெய் சேர்த்து.. எல்லாவற்றையும் நல்லா கலந்து.. நெய் தனியா வரனும்.. பிறகு நெய்யில வறுத்த திராட்சை, முந்திரிசேர்க்கனும். ”
அரசி சாப்பிட்டுக் கொண்டே.. ” ம்.. எனக்கு பிடித்துயிருக்கு!. நீங்களும் இதைதானே சாப்பிடுறிங்க?.. ” என்று கேட்டுவிட்டு அவனின் தட்டை பார்க்க.. அதில் வேறு இனிப்பு இருக்க.. ” என்ன நீங்க இதை சாப்பிடவில்லையா?.. வேறு இருக்கு. ”
வேந்தன் அவளை ஆசையாக பார்த்து.. ” இது உனக்கு மட்டும்தான். ”
” அப்ப்பபா!.. புல்லரிக்க வைக்கிறிங்க.. ரொம்ப ரொம்ப பண்ணுறிங்க.. இந்தாங்க சாப்பிடுங்க. ” எனக் கூறி இருவரின் உணவையும் மாற்றிக் கொண்டனர்.
‘ வேந்தன் சிரிப்புடன் அவளின் இனிப்பை எடுத்து சாப்பிட்டே.. இரண்டு போரும் சாப்பிட்டதை மாற்றி இப்படி சாப்பிடனும் தானே உனக்கு பிடித்தது ஒன்று.. ஒன்னு நான் முதன்முதலில் செய்தது ஒன்றும் என இரண்டு ஸ்விட் நான் செய்து கொண்டு வந்தேன்..’ என மனதில் கள்ளபுன்னகை உதித்து.. இனிப்பு சாப்பிடும் அரசியை பார்த்தான்.
” தனு இதுக்கூட நல்லாயிருக்கு ” எனக் கூறியவுடன்… அவன் ‘ அப்படியா!.’என்பது போல ஒருபார்வை பார்க்க.. அவளும் ‘ ம்ம்.. ‘ என்று பார்த்தாள். இப்படியாக இருவரும் வார்த்தைகள், பார்வைமொழியில் பேசிக் கொண்டுயிருந்தார்கள்.
உடன் இருந்தவர்களில் இவர்களின் சகஜமான பேச்சு பார்க்க ஒன்றும் தெரியவில்லை.. ஆனால் அரசியின் அத்தை மகள் மேகாவிற்கும், வேந்தனின் தங்கை வசுந்தராவிற்கும் சந்தேகமா?.. இல்லை ஏதோ அவர்களின் நெருக்கமான பேச்சில் பிடிக்காத உணர்வா?.. என்று தெரியவில்லை.. இருவரையும்.. இந்த இருவரின் விழிகளும் புரியாத பார்வை பார்த்தனர். இவ்வாறு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் சில நிமிடங்கள் கடக்க..
சிறிது நேரத்தில் பெரியவர்கள் இடையே சிறு யோசனை தேயந்த முகத்துடன் பேச்சு வார்த்தை நடைப்பெற்றது. அதனை வேந்தன் அரசியிடமும்.. அருகில் இருந்த நண்பர்களிடமும் பேசிக் கொண்டுயிருக்கும் போது எதார்த்தமாக பார்க்க.. ‘ அங்கு என்ன நடக்கிறது?. ‘
வேந்தனும் அரசியும் தங்களின் திருமண விருப்பதை கூறி.. மகிழ்ச்சியான பேச்சுக்கள் பெரியவர்கள்.. சிறியவர்கள்.. குழந்தைகள் என சென்று கொண்டுயிருந்த இருந்தபோது பெரியவர்களின் முகத்தில் ‘ இப்போது என்ன செய்வது?.. ‘ என்ற ரிதியில் அவர்களின் முகங்கள் பிரதிபலித்தன. இதனை பார்த்த வேந்தன் என்னவென்று அறிய.. அரசியிடமும்.. அருகில் இருந்தவர்களிடம் ‘ இதோ வருகிறேன் ‘ என்று கூறிவிட்டு.. இருவரின் அப்பா.. மாமா.. அண்ணாக்கள்இருந்த இடத்தை நோக்கி வந்தான். அரசி அவனை பார்த்துக் கொண்டுயிருந்தாள்.
வேந்தன் ரவிந்தரனின் அருகில் போய் நின்றான்.. அவன் நின்றவுடன் பேச்சுவார்த்தை நின்றுவிட.. ‘ அவனிடம் என்ன கூறுவது?. ‘ என்பது போல நின்றார்கள். அவனின் இன்றைய விருப்பம் அறிந்தவர்கள் ஆயிற்றே.
அவர்கள் எதுவும் வேந்தனிடம் கூறாமல் இருக்கவும்..வேந்தனே ஆரம்பித்தான்.. ” அப்பா என்ன பிரச்சனை?.. ” அங்கு இருப்பவர்களின் முகத்தை பார்த்து.. ” என்ன யோசனையில் இருக்கிங்க?.. ”
” இப்ப உறுதி பண்ணலாம் இருந்தோம்மில்ல.. ” ஆம் என அவன் தலையாட்ட ” அதில் ஒரு பிரச்சனை வேந்தா.. இன்னைக்கு பண்ணலாம்மா?.. வேண்டாம்மா?.. என்று யோசனையா இருக்கு.”
‘ வேந்தன் பண்ணலாம்மா?.. வேண்டாம்மா? என்ன நடக்குது இங்க?.. என்றும் பொறுமையை கையாள்பவனுக்கு. இன்று ஏதோ அவனுக்கு அந்நேரத்தில் பொறுமை சற்று குறைவாக இருந்ததுபோல.. ‘
” என்ன பிரச்சனை?.. என்று என்னிடம் சொல்லாம நீங்களா பண்ணலாம்மா?.. வேண்டாம்மா ?.. என யோசிக்கிறிங்க.. என்ன நடந்தது?.. ” என நிதானமாக.. அதே சமயம் அழுத்தமாகவும் கேட்க..
‘ அங்கு இருப்பவர்களுக்கு மிகவும் கோபத்தில் உள்ளான் என.. அவன் முகத்தை பார்த்தாலே தெரிந்தது. கண்டிப்பாக இன்று நடக்க வேண்டும் என கட்டளையிட்டவன் ஆயிற்றே இவன்.. ‘
அவனின் மாமா ராகவன்.. ” வேந்தா.. கணேஷ் ஆடர் விஷயமா தேனி போயிருந்தான். கார் ஏதோ பிரச்சனையாமா. அதனை சரி பண்ணி வருவதற்கு சாயங்காலம் ஆகுமாம். அவன் இல்லாம உறுதி நிகழ்ச்சிய பண்ண முடியாதுல்ல.. அதுதான் என்ன பண்ணுறது தெரியலனு?. யோசிக்கும் போது தான் நீ வந்த.. அதான் உன்கிட்ட என்ன சொல்வது?. என்று நாங்க தெரியாம இருந்தோம். ”
‘ வேந்தன்.. ராகவன் மாமா.. கணேஷ் என்று கூறியதும் கமலேஷ் எங்கே?.. என்று பார்த்துக்கொண்டே.. அவர் கூறியதை கேட்டான்.. அவன் கண்ணில் கமலேஷ் பட்டவுடன்.. அவனைஅழைக்க.. அவன் கவலை தேய்ந்த முகத்துடன் தான் அருகில் வந்தான். ‘
” வேந்தா.. நாங்க இங்கு வரும்போது கால் பண்ணப்ப.. நீங்க போங்க நான் நிகழ்ச்சி முடிவதற்குள் வந்துவிடுவேன் தான் சொன்னார். அதுக்கும் மேல கேள்விக்கேட்டா எதாவது நான்உளறிடுவேனோ என்று.. அதான் நானும் ரொம்ப வேற எதுவும் கேட்காம.. நாங்களும் இங்கு வந்துட்டோம். இப்ப இப்படி சொல்கிறார்.. என்ன பண்ணலாம்?.. ” என அவனும் கேட்க.
‘ வேந்தன் அவனின் குடும்பத்தினர்களுக்கு.. கமலேஷ் கூறுவதை பார்த்தால்.. கணேஷ் கூறியதற்கும்.. நடந்துக் கொள்ளவதற்கும் இடையில்.. ஏதோ ஒன்றை நினைத்து அவர் இவ்வாறு செய்கிறார் என்று புரிந்தது. ‘
‘ அதே நேரத்தில் எழிலரசி குடும்பத்தினற்கு இந்த விஷயத்தில் என்ன கூறுவது?.. என தெரியாமல்இருக்க.. மற்றவர்கள் வேந்தன் என்ன கூறப்போகிறான்?.. என்று அவனை பார்க்க.. அவனோ எங்கோ பார்த்துக் கொண்டுயிருந்தான். எங்கு பார்க்கிறான்?.. என இன்பா பார்க்க.. வேந்தன் பார்த்துக் கொண்டுயிருந்தது அங்கு புன்சிரிப்புடன் தன் தோழி சத்யாவிடம் பேசிக் கொண்டுயிருந்த எழிலரசியை. வேந்தன் தங்கையை பார்த்திருந்தாலும் அவரின் முகம் மிகவும் யோசனையில் இருப்பதை பார்த்து.. ஓ.. எழிலை பார்த்துக் கொண்டே ஏதோ முடிவு ஒன்றை எடுக்க போகிறார்போல. ‘
அவன் எண்ணியதற்கு ஏற்றவாறே.. சிறிது நேரத்தில் வேந்தன் ” 15 நிமிடம்.. நான் முடிவு சொல்கிறேன். ” என்றுக் கூறிவிட்டு
‘ அருகில் யாரும் அமராமல் இருந்த ஒற்றை ஷோபாவில் அமர்ந்தான். அவன் அமர்ந்த 5 நிமிடத்தில் போனில் சில தகவல்களை பார்த்துவிட்டு.. சுற்றுப்புறம் மறந்து போனில் உரையாட ஆரம்பித்தான். ‘
‘ ஆனால் சுற்றி இருந்தவர்கள் நடப்பதை கவனிக்க ஆரம்பித்தார்கள். பெரியவர்கள் தீவிரமாகஅவர்களாக பேசும் போது சிலர் கவனித்தும்.. சிலர் கவனிக்காமலும் இருந்தார்கள். அந்த சிலரில் சாதாரணமாக பேசுகிறார்கள் என்று எண்ணியிருக்க.. பின் சிறிது நேரத்தில் வேந்தன் வந்தவுடன்தான்.. என்னவென்று?. பெரியவர்கள் அனைவரும் கவனிக்க ஆரம்பித்தனர். அவனின் முகபாவனையும்.. பேச்சையும்.. கமலேஷ் வந்த சிறிதுநேரத்தில் அவன் ஷோபாவில் அமர்ந்துயிருப்பதை பார்த்தார்கள். ‘
‘ பார்த்தவர்கள் சில நிமிடங்கள் அவனையே பார்த்திருந்தார்கள்.. ஏனெனில் இவ்வளவு நேரம் சிரிப்புடன்.. கலகலப்புடன் பேசிக்கொண்டு அமர்ந்துயிருந்தவனா.. இவன்?.. என்று. வேந்தன் புதுவிதமானவனாக தெரிந்தான். ‘
‘ பெரிய கம்பெனிகளில் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் நார்மலாக இருப்பதற்கும்.. அவரவர் பொறுப்புகளில் இருப்பவர்களுடன் நடக்கும் பேச்சுவார்த்தைகள் மற்றம் கம்பெனி மீட்டிங் இவற்றில் நடந்துக் கொள்வதற்கும் வேறுபாடு.. அவர்களின் நடை, உடை, பேசும்பாவனை ஆகியவற்றில் மாற்றம் தெரியும். அப்படிதான் இருந்தது வேந்தனின் தற்போதைய தோரணை. ‘
‘ அவனின் செயல்பாடுகளை ஒரு கூட்டமே பார்க்கிறது என்று அவன் உணரவில்லை. ஒரு முடிவு எடுத்துவிட்டு அதனை செயல்படுத்த.. முதலில் இருக்கும் தடைகளை நீக்குவதற்காகவும்.. அதனை காரணமாக சொல்ல முடியாத அளவிற்கு என்னவெல்லாம் தெளிவாக இருக்க வேண்டும் என யோசித்து அதனை செய்துக் கொண்டுயிருந்தான். அவ்வாறு செய்தவனை தான் அனைவரும் பார்த்தார்கள். ‘
‘ முதலில் போனை ஆழ்ந்து பார்த்தான்.. பிறகு போனில் பேச ஆரம்பித்ததில் தமிழில் ஆரம்பித்து.. பின் ஆங்கிலத்தில் தன்னுடைய ஸ்லாங் முறை மாற்றி பேசவும்.. அவர்களுக்களில் ஆண்களுமே அவனை பார்த்து ரசித்தார்கள் என்றே கூறலாம். பெண்களும் படம் பார்ப்பது போல சுவாரசியமாக இருந்தது. அவர்கள் வீட்டில் ஆண்களும் இருவேறாக இருப்பார்கள் தான்.. இருந்தாலும் அவர்களுக்கு இவனின் நடவடிக்கை முற்றிலும் புதுமையாக இருந்தது. ‘
‘ வேந்தன் உட்கார்ந்துயிருக்கும் தோரணையும்.. கண்களில் இருந்த கூர்மையான பார்வையும். பேசும்போது இருந்த ஆளுமையும்.. அதில் தெளிவான, அழுத்தமான பேச்சாகவும் இருந்தது. எந்த மொழியில் பேசினாலும் சில உடல்மொழிகள் ஒன்றாகதான் இருக்கும். எளிதில் அதை கண்டுவிடமுடியும். ‘
‘ வேந்தன் குடும்பத்தார் முற்றிலும் வேறான வேந்தனை பார்த்தார்கள் என்றால்.. எழிலரசியின்குடும்பத்தார் எழிலரசியை நினைத்து பயந்தார்கள். அவள் வீட்டில் செல்லமாக வளர்ந்தவள்.. இவனை அனைத்து விதத்திலும் அவள் புரிந்து நடந்துக் கொள்வாளா?.. அதேபோல வேந்தனும்.. எழிலரசியை எல்லாவிதத்திலும் புரிந்து நன்றாக பார்த்துக் கொள்வாறா?.. என்று எண்ணி பயந்தார்கள். ‘
‘ அவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது.. அரசியின் ஆசைகள்.. விருப்பங்கள்.. எண்ணங்களைஅவள் சொல்லாமலே நிறைவேற்றுவான் அரசியின் இந்த மன்னவன் என்று. ‘
‘ அந்த இடம் சிறிது நேரத்தில் அமைதியானது. அவன் புன்னகையுடன் பேசுவதை பார்த்து.. பேச்சு வார்த்தைகளை முடிக்க போகிறான் போல என தெரிந்தது. அவனும் அவ்வாறே முடித்தான். பின்அவனை பார்த்துக் கொண்டுயிருந்தவர்களை அவனும் பார்த்தான்.. புன்னகைகைத்தான்.. அவ்வளவுதான். அதற்கு மேல் ஒன்றும் நினைக்க தோன்றாமல் நேராக அவன் சென்றது தன்னவள்அரசியிடம். ‘
அரசி இருக்கும் இடத்திற்கு செல்ல.. அங்கு இவனை ஒரு நொடி ‘ என்ன இங்கு வந்து நிற்கிறான்?.. ‘ என தான் நினைத்தார்கள்.. அதில் அரசியும் அடக்கம். அவர்களுக்கு பிரச்சனை என்னவென்று கமலேஷ், சாருலதா மூலம் அறிந்துக் கொண்டார்கள். பின் போனில் பேசுவதை கேட்டார்கள் தான். ஆனால் தெளிவாக என்னவென்று புரியவில்லை.. இருப்பினும் முடிவு ஒன்றுஎடுத்து.. அதனை செயல்படுத்தி விட்டான். அதனை நேராக சென்று பெரியவர்களிடம் கூறுவான் என்று நினைக்க.. அவன் அங்கு வந்து நிற்கவும்.. எவரும் ஒரு நொடி ஒன்றும் கேட்கவில்லை.. கேட்க தோன்றவில்லை என்றுதான் கூற வேண்டும்.
வேந்தன் வந்துநின்றதும் அனைவரையும் பார்த்தான்.. அவர்கள் எதுவும் செய்யாமல் இருக்கவும்.. பொறுமையிழந்து.. ” அரசி.. என்கூட வா.. ” என்றுக் கூறி கையை காண்பித்து நின்றான்.
சுற்றியிருந்தவர்களில் அவனின் அக்கா.. பெரிய தங்கை.. நண்பர்கள் அவனை முறைத்துக் கொண்டுயிருந்தார்கள்.. அதனை புன்னகையுடன் ஏற்று அரசியை பார்த்து நின்றான்.
அரசிக்கு ‘ இவனை எண்ணதான் பண்ணுறது.. எல்லாம் முறைக்கிறாங்க.. இவன் சிரிக்கிறான். ஆனா அழகாகதான் சிரிக்கிறான்!.. என அவள் ஒருபுறம் அவனை ரசித்தாலும்.. மறுபுறம் யாரை பற்றியும்நினைக்காம முடிவு ஒன்னு எடுத்து என் முன்னாடி கையை நீட்டி நிக்கிறானே. ‘ என யோசிக்கும்போதே.. அவன் தன் அரசியிடமே.. பொறுமையை இழந்தான்.
வேந்தன் ” என்கூட வா மு.. ” என ஆரம்பிக்கும் போது அவனை முறைத்துக் கொண்டே அவள் எழுந்துவிட்டாள். பின் சுற்றியிருந்தவர்களை பார்க்க ‘ அய்யோ!.. ‘ என்ற உணர்வில் இருந்தார்கள். இது நல்லதிற்கு இல்லை என்று. பெரியவர்கள் முன் தவறு என்று.
அரசி அவனின் அருகில் சென்றவள்.. ” த ” ஆரம்பித்து.. அப்போது அவளுக்கு வந்ததே ஒருசந்தேகம்!.. ‘ இவனை என்னவென்று கூறி அழைப்பது?. ‘ அவள் முளை யோசிக்க.. உனக்கு அதற்கு ‘ நேரம்மில்லமா.. நீ போ.. ‘ என்று முளை அவளை துரத்த.
மெதுவாக ” இங்க பாருங்க.. உங்க கூட வரமுடியாது.. நாம்ம டைனிங் ஏரியா பக்கத்தில் போய் உட்கார்ந்து பேசலாம். “
அவன் ஏதோ செல்ல வர.. ” நீங்க எதுவும் கூற வேண்டாம்.. வாங்க..” என்று கூறி.. அவள் சென்று அமர்ந்துவிட்டாள். புன்னகையுடன் அவனும் அமர்ந்து.. அவன் அவளிடம் பேச ஆரம்பித்துவிட்டான்.
‘ இவர்களையே பார்த்தவர்கள் இப்போது வேறு ஒரு வேந்தனை பார்த்தார்கள்.. அவ்வளவு கனிவான முகத்துடன் அரசியிடம் ஏதோ விளக்கிக் கூற.. அதனை அரசி கேட்க.. பிறகு இருவரும் எதுவும் பேசாமல் இருந்தனர் சில நிமிடம்.. பின் அரசிக் கூற அவன் கேட்டுக் கொண்டுயிருந்தான். சிறிது புன்னகையுடன் எழுந்த வேந்தன் அவளின் அருகில் செல்லப் போக.. பின் சிரித்து பின்னால் வந்து ஏதோ ஒன்று பேசிவிட்டு.. ஹாலில் இருந்த அப்பா, மாமா, வருங்கால மாமனாரிடம் சென்று நின்றான் வேந்தன். ‘
தன் அருகில் வந்து நின்றவனை பார்த்த ரவிந்திரன்.. ” என்னப்பா உங்களுக்கு ஏதாவது யோசனை இல்ல.. முடிவு கிடைத்ததா?.. ”
” ம்.. இது சரியா இருக்கும் என நினைக்கிறேன்..அது வந்து நாம்ம இந்த நிகழ்ச்சிய இன்றைக்கு சாய்ந்திரம் 6 மணிக்கு மேலே வைத்துக் கொண்டா என்ன?.. ” கூறியபின் அவர்கள் அமைதியாகஇருக்கவும்..
அவனே தொடர்ந்து.. ” இங்க இருப்பவர்கள் பெரும்பாலும் இதே ஊரில் தானே இருக்கோம்.. மாமாவும், வினோதினியும் நாளை காலைதான் கிளம்புவதா இருக்காங்க.. கண்ணன் மாமா இரவுதான் போறாங்க.. நானும் அலுவலக வேலையில் சிலவற்றை மாற்றிவிட்டேன்.. நாளைக்கு சென்னைக்கு போகலாம்.கணேஷ் மாமாவும் இருப்பாங்க. என்ன சொல்லுறிங்க?.. ”
ரவிந்திரன் யோசனையுடன் ” அதுவரைக்கும் நாம்ம?.. “
” இங்கேயே இருக்கலாம் சம்பந்தி. ” ” இங்கேயே இருங்க என அரசி கூறினாள். ” என அருணாச்சலமும்.. வேந்தனும் ஒரு சேர கூற.. அவர்களின் கூட இருந்தவர்கள் மகிழ்வுடன் சிரித்துவிட்டார்கள்..
அருணாச்சலம் கூறியதில் இருந்து.. வேந்தன் கூறியதற்கு சம்மதம் தெரிவித்துயிருக்கிறார் என்று ரவிந்திரன் உணர்த்து.. புன்னகையுடனே.. ” ம்.. சாய்ந்திரம் வைத்துக் கொள்வதில் எனக்கும் சம்மதம் தான்.” மற்றவர்களை பார்க்க.. அவர்களும் சரி என்று தலையை ஆட்டினர்.
சில விவரங்களை அறிய.. ராகவன் புன்னகையுடன்.. ” வேந்தா நீ ஆபிஸ் கால் பேசியவுடன் எங்ககிட்ட வருவேன் என பார்த்தா.. நீ என்னடானா.. எழில் கிட்ட போய் நிக்கிற. நாங்க என்ன நீ சொல்வதை வேண்டாம் எனக் கூறிவிடுவோம் என நினைத்து எழிலை வைத்து கூறலாம் இருந்தியா?.. இல்ல வேறு ஏதாவது காரணமா?.. “
வேந்தனும் மென் புன்னகையுடன்.. ” அது நான் எடுத்த முடிவு சரியா?.. எனக் கேட்கதான் அரசியிடம் போனேன் மாமா. வெள்ளிக்கிழமை அன்று.. நான் உடனே முடிவேடுத்து.. அப்பா, மாமாவிடம் பேசி எல்லோரையும் பயப்பட வைத்துவிட்டேனு அவளுக்கு வருத்தம்.. கூடவே எனக்கு செம்ம திட்டு வேற. அதான் இப்ப முன்னெச்சரிக்கையா நேரா அரசியிடம் போய் என் பிளான் சொன்னேனா..” எனக் கூறிக் கொண்டுயிருக்கும் போதே..
” இப்ப நீங்க சொன்னதை கேட்டு உடனே.. நல்ல யோசனை என எழில்குட்டி சொல்லுச்சா?.. ”
” அடப்போங்க இன்பா. நான் அரசியிடம் கூறியதே வேற. அதை கேட்டு..அதுக்கும் திட்டு. உங்க வேலைய மட்டும் மாத்தினா போதுமா.. மத்தவங்க வேலைய பற்றி கவலைபட மாட்டிங்களா?.. நீங்கநினைத்தவுடனும்.. சொன்னவுடனும் வந்து நிப்பாங்களா?.. உங்க கம்பெனியில் உங்க வேலையை அவசரத்திற்கு பார்க்க நிறைய பேர் இருப்பாங்க.. இங்கயெல்லாம் அப்படி நினைத்த நேரத்தில் அப்படியே விட்டுவிட்டு வரமுடியாது.. அதனால உங்க ஐடியா சரிப்பட்டு வராது. முடியாது சொல்லிட்டா. ”
” அப்ப நீ சொன்ன சாய்ந்திரம் பிளான் எழிலரசி கூறியதா?.. அப்படி நீ என்ன சொன்ன?.. ”
” அது நான் நாளை காலை சீக்கிரமே வைக்கலாம் எனச் சொன்னேன். ”
ராகவன் புன்னகையுடன் ” என் மக எழில் திட்டியதில் தப்பே!.. இல்லடா வேந்தா.. நாளைக்கு அதுவும் காலையில் கடையில் வேலையை விட்டுவிட்டு இப்ப இருப்பது போல எல்லோரும் இருக்கமுடியும்மா?. ”
“இதை தான் அரசியும் சொன்னா. எல்லாரும் இருக்க முடியாதுனு. உங்களுக்கு இந்நேரம் தெரிந்துயிருக்கலாம்.. நாங்க.. இங்க இருபவர்களில் சில பேர் ஒரே ஸ்கூலும்.. நண்பர்களும்கூட. அதனால் மாலை ஆறு மணிக்கு மேல சின்ன சின்ன நிகழ்ச்சிக்கு கணக்குபார்க்க மாட்டாங்க.. சாய்ந்திரம் வைத்தால்.. ஒரே ஊர் என்பதால் நீங்கயெல்லாம் இங்கயே இருக்கலாம்.. அதனால் நண்பர்கள் எல்லாம் இன்னும் அதிக நேரம் கூடவும் இருக்கலாம்.. நிகழ்ச்சியும் முடியும்.. யாருக்கும் நாளை பிரச்சனையில்ல.. நானும் நாளைக்கு பிளான் பண்ணியது போலவே போகலாம் எனகூறினா.. எனக்கும் இது சரினு தோன்றியது.. அதான் உங்களிடம் கூறினேன். ”
ராகவன்..” நல்ல வேளைடா.. எழிலிடம் ஐடியா கேட்ட.. நீ நினைத்தை நேரா வந்து எங்களிடம் சொல்லியிருந்தா.. நடக்க சான்ஸ் கம்மிதான் டா. ஆனாலும் என் மகளுக்கு இப்பவே பயப்படுற மாதிரியிருக்குகே டா. “
வேந்தன் புன்னகையுடன்..” என்ன மாமா பண்ணுறது.. மனைவிக்கு பயப்படுவது.. அப்படியே ஜீன்ல இருந்து கூடவே வந்துயிருக்கும் போல. அதான் ஆட்டோமேட்டிக்கா எனக்கு வந்துவிட்டது. “ தன் அப்பா, மாமா, அக்காவின் கணவர் என இவர்களை பார்த்துக் கூறினான்.
” டேய் நாங்களாவது கல்யாணத்திற்கு பிறகு தான் அப்படி இருக்கோம். ஆனா நீ இப்பவே பம்முறயே டா.. நீ நடந்து கொள்வதை அடுத்து கல்யாண ஆகப்போற பொண்ணுங்களும் பார்ப்பாங்கடா. இன்பா மாதிரி இருக்க பசங்க பாடுதான் திண்டாட்டம். அவனுங்களை நீ சமாளிக்க முடியாது பார்த்துக்கோ.” என வேந்தனின் மாமா கார்த்திக் கூற
மெல்லிய புன்னகையுடன்..” ம்.. எனக்கு இப்பவே அரசியோட விருப்பத்தை கேட்டு.. அதன்படி செய்வதில் எனக்கு தப்பா தெரியல.. எனக்கு அரசியோட மனதிருப்தி, சந்தோஷம் முக்கியம். அதுக்காக நான் இவர்களை சமாளிப்பது ஒன்னும் பெரிய கஷ்டம் இல்ல மாமா. “
‘ அருணாச்சலத்திற்கு இப்போது மனது முழுதிருப்தியானது. வேந்தன் தன் மகளை தன்னைவிட அதிகமாக புரிந்துக்கொண்டும்.. பார்த்தும் கொள்வார் என்பதை இப்போது நடந்துக்கொண்ட விதத்திலேயே உணர்ந்தார். ‘
‘ இவர்களின் பேச்சை கேட்ட ரவிந்திரனும் மகிழ்ச்சி அடைய.. தன் மகனின் திருமண வாழ்வை பார்க்க இப்போதே ஆவலுற்றார். ‘
” வேந்தா.. இங்கு இருக்கற யோசனை நல்லா இருக்குடா.. நம்ம வீட்டல இருக்குக போவத.. இங்க இருக்க போறோம். ஆனா சாய்ந்திரம் வரைக்கும் நமக்கு பிரச்சனையில்ல.. பெண்களுக்கும்.. குழந்தைகளுக்கு தேவையானது இருக்கானு கேட்டுப்போம். ”
இருவரின் அம்மாக்கள்.. லட்சுமி.. சித்ராவை அழைத்தார்கள். அவர்களிடம் வேந்தன் கூறியதைகூற.. லட்சுமி புன்னகையுடன் ” ம்.. மாலையே செய்துவிடலாம் பொண்ணுங்களுக்கு தேவையானதை அவர்களிடமே கேட்டுக்கலாம். ”
சித்ரா ” ம்.. மாலை வைத்துக் கொள்வதில் பிரச்சனையில்லை.. இன்னும் நல்லா பண்ணிவிடலாம்.. குழந்தைகளுக்கு எப்போதும் வண்டியில இருக்கும்.. பொண்ணுங்களுக்கு தேவையென்றால் வீட்டில் யாராவது ஒருவர் சென்று எடுத்து வரச்சொல்லிவிடலாம். “
” அப்ப சரி சித்ரா உனக்கு, அண்ணிக்கு, சுமதிக்கு தேவையானதையும்.. பிறகு பொண்ணுங்களிடமும் கேட்டு முடிவு எடுத்துக்கோங்க. சம்பந்தி நீங்க மற்றவர்களின் நேர மாற்றத்தை கூறிவிட்டு.. இப்ப சாப்பிட தேவையானது எல்லாம் இருக்கானும்.. வேறு ஏதாவது தேவையா என பார்த்தது சொல்லுங்க.. ஹோட்டல் கால் செய்து கொண்டு வரச் சொல்கிறேன். “
” சரி சம்பந்தி.. எல்லாம் இருக்கும்.. இருந்தாலும்.. நான் போய் அவங்க எல்லாரிடமும் சொல்லிவிட்டு.. பார்த்து சொல்கிறேன். ”
‘ அவரும் லட்சுமியும் சென்றுவிட.. பின் அங்கு ரவிந்திரனுடன் வேந்தனின் பெரியப்பா, மாமா, அக்கா, தங்கை கணவர்கள் அடுத்து என்ன பண்ண வேண்டும் என பேசினர். வேந்தனும் இன்பாவும் தங்கள் இருவரின் செல்ல முயல்குட்டி.. எழில்குட்டியான எழிலரசியிடமும்.. மற்றவர்களிடமும் கூறச்சென்றார்கள். ‘
பின் அருணாச்சலமும்.. லட்சுமியும் அவர்களின் உறவினர்களிடம் விஷயத்தை கூற.. அவர்களில் எழிலரசியின் மாமாக்கள், சித்தி, சித்தப்பா, அவர்களின் பிள்ளைகள்.. மகிழ்ச்சியாக நல்லது.. சாய்ந்திரம் என்பதால் சிலர் இருக்க.. சிலர் வீடு சென்று வருவதாக கூறினார்கள்.
அதில் அருணாச்சலத்தின் தங்கை ராதா ” என்ன அண்ணா?.. இப்ப அவங்க தாய்மாமா வரமாம.. சாய்ந்திரம் பண்ணலாம் எனச் சொல்லுறிங்க. எதுக்கு இவ்வளவு அவசரம்?. ஏன்?.. இன்னைக்கு இல்லையென்றால் இன்னொரு நாள் வைக்கலாம் தானே. அப்புறம் அந்த பையன் சென்னைக்கு போனால் என்ன?.. அவர் இங்கு இல்லாவிட்டாலும் என்ன இப்ப?.. அது ஒன்னும் இல்லையே. இப்பதான் அவங்க சம்மதம் என்றே சொல்லியிறுக்காங்க. நாம்ம பையனை கல்யாணம் அன்றுதான் பொண்னோட ஒன்னா உட்கார வைப்போம். இப்ப நீங்க செய்யிறது ஒன்னும் எனக்கு சரியா படலஅண்ணா.”
” என்ன ராதா.. இதுவரை நம்ம குடும்பத்தில் நடந்த கல்யாண மாப்பிள்ளையும்.. பெண்ணும் அவர்களை பற்றி தெரிந்தவர்களாக இருப்பாங்க. அதனால அவங்க கல்யாணம் அன்று.. இருவரும் ஒரு புரிதலுடன்.. எல்லா சடங்குகளை இருவரும் சேர்ந்து.. மன திருப்தியுடன் செய்வார்கள். ஆனா இவங்க இப்படி இல்லையே.. இந்த மாதிரி சின்ன சின்ன சந்தர்ப்பத்தில் தான் அவர்கள் பழகமுடியும். “
” அதுவும் இல்லாமல் வேந்தன் இன்னைக்கு முடிந்தால் நன்றாக இருக்கும் என்றும்.. இங்கு நிகழ்ச்சியில் அவரும் கூட இருக்கனும் என்றும் விருப்பப்படுகிறார். அவரே கேட்ட பிறகு என்னால மறுக்க முடியில.. அதான் சரினு சொல்லிவிட்டேன். சரிமா.. இப்ப நானும் லட்சுமியும்.. அப்பா, அம்மாவிடம் போய் விஷயத்தை கூறிட்டு.. சாப்பிட எல்லாம் இருக்கானு பார்த்திட்டு சொல்லி விடுறேன். அப்ப வந்து சாப்பிடுங்க. ” எனக் கூறி.. அவர்களிடம் இப்போது எதுவும் பேச்சை வளர்க்க வேண்டாம்.. என நினைத்து அவ்விடம் விட்டு நகர்ந்தார்கள் இருவரும்.
தேவகி ” ஏன் ராதா.. அந்த பையன் எப்படி?.. இந்த எழில் குட்டிய கல்யாணம் செய்ய சரினு சொல்லுச்சு. அதுவும் அந்த பையன் பேசியதை பார்த்தோமே.. எவ்வளவு தோதரணையா பேசுச்சு.. இரண்டு பேருக்கும் ஒத்துவரும்மா?.. “
” தெரியல்ல க்கா?.. ஆனா அந்த பையன் ரொம்ப விவரம்மாவும்.. பிடிவாதக்காரனாவும் இருப்பானு நினைக்கிறேன் அக்கா. நம்ம அருளுக்கும், மேகாவுக்கும் பிரச்சனை வருமோ?.. அதுவும் அண்ணாவ பார்த்தியா.. இப்பவே அந்த பையன் சொல்வதற்கு எல்லாம் இப்பவே சரி சரினு சொல்லுறார். ”
” அவங்க இரண்டுபேருக்கும் பிரச்சனை வர அளவிற்கு நாம்ம விட்டுவிடுவோம்மா டி. அப்புறம்.. அண்ணா ஏன் அந்த பையன் சொல்லி கேட்டு பண்ணமாட்டாரு?.. அந்த பையனோட அத்தை என் பக்கத்தில் உட்கார்ந்து இருந்தப்ப பேசி தெரிஞ்சுக்கிட்டேன்.. அவங்க வீட்டுக்கு ஒரே பையன்.. நல்லா படிச்சுயிருக்கான்.. இப்பவே நல்லா சம்பளம் வாங்குறானாம். அவங்க கடை இல்லாம.. அந்தபையனே தனியா பிஸ்னஸ் ஆரம்பிக்க போறானாமா. அதுமில்லாம வெளி சம்பந்தம் என்பதால்இருக்கும். நம்மக்கிட்டயே இளமதி கல்யாணத்தப்ப எவ்வளவு பொறுமையா அண்ணா நடந்துக்கிட்டாரு.. இப்ப சொல்லனும் மா என்ன?. ”
” ம்.. ஆமா. ஆனா இந்த எழில் குட்டிய பாரேன் க்கா. இன்னைக்கு எந்த வித பயமோ?.. படபடப்போ இல்லாம்மா?.. இருக்கா. ஆனாலும் தைரியம் ஜாஸ்திதான்!.. “
” தைரியம் இல்லாமலா இருப்பா. நாம் பசங்க வேண்டாம்.. வெளிசம்பந்தம் தான் வேண்டும் எனகூறி.. அவ நினைத்தை சாதித்துவிட்டா இல்ல. அதிலையும் நாம்ம நினைச்சே பார்க்காத முதல்வரனே சம்மதம் சொல்லியாச்சு.. அதெல்லாம் இன்னும் ஜாஸ்தியாகதான் இருப்பா. ”
” சரிவிடு க்கா.. இந்த எழில பத்தி நாம்ம பேசி இனி எண்ணாகப்போகுது?.. “
இவர்கள் இவ்வாறு இங்கு இன்றைய நாயகி, நாயகன் பற்றி பேசிக் கொண்டுயிருந்த நேரத்தில் வேந்தன்.. இன்பா, கமலேஷ், திலகன், வினோத் ஆகியோர் பெண்கள் இருக்கும் இடத்திற்கு வந்தனர். வேந்தன் அரசியை ஒரு பார்வை பார்த்துவிட்டு மற்றவர்களிடம் புன்னகையுடன்..
” யோகா அக்கா.. கணேஷ் மாமா வர மதியம் மேல ஆகும் என்பதால.. உறுதி நிகழ்ச்சிய மாலைஆறு மணிக்கு மேல வைக்கலாம் முடிவு எடுத்துயிருக்கு.. அதுவரைக்கும் நாம் இங்கதான் இருக்கபோகிறேன். ”
‘ வேந்தன் இதனை கூறியவுனே.. முதலில் தன் முயல்குட்டியை பார்க்க.. அவள் இவனுக்கு இன்பஅதிர்ச்சியாக.. அவனுக்கு மென்புன்னகையுடன்.. கண்ணடித்தும், சைகையால் சூப்பர் என தெரிவித்து.. தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த. வேந்தன் புன்னகையுடன் தலைக் குனிந்து அதனை ஏற்றுக் கொண்டான். ‘
” சூப்பர் டா!.. மாலை நிகழ்ச்சியும்.. அதோட இங்கு அதுவரை இருக்கும் ஐடியா அதவிட சூப்பர்டா!.. யார் யோசனை இது?.. ” எனக் கேட்க.. வேந்தன் அரசியை பார்த்தான்..
‘ அவனின் பார்வை போகும் திசையை அனைவரும் நோக்க.. அங்கு எழிலை இருப்பதை பார்த்து.. நீயா?.. நீயா?.. நீயா?.. என்பது போல பார்த்தனர்.. ஏனெனில்.. எழில் வேந்தனிடம் பேசிவிட்டு வந்த இவ்வளவு நேரமும்.. இந்த எழில் ஒன்னும் வாய் திறக்காமல் இருந்தாள்.. அதனால் வந்தது இந்த அதிர்ச்சி.’
” என்ன எழில் இவ்வளவு நேரம் இதை சொல்லவே இல்ல?.. அமைதியா உட்கார்ந்து இருந்த. ” என சாதாரணமாக கேட்க.
‘ அவர் கூறியதை கேட்ட எழிலுக்கும்.. வேந்தனுக்கும் சற்றென்று என்ன கூறுவது?.. என தெரியாமல் ஒருவரை ஒருவர் ஒரு நொடி பார்க்க. இவர்கள் பார்ப்பதை யோகா, எழிலின் அண்ணிசுரபி, ஆர்த்தியும் பார்த்துவிட்டனர்.அவர்கள் மூவரும் ஒருவர் ஒருவரை பார்த்து சிரித்துக்கொண்டனர். ‘
தன்னிடம் கேட்ட கேள்விக்கு.. எழில் ஏதாவது கூறி சமாளித்து இருப்பாளோ என்னவோ.. ஆனால் வேந்தன் அரசியை காப்பாற்ற நினைக்கிறேன் என்று.. தன் தலையை தானாக விட்டு.. இப்போது அவன் மாட்டிக் கொண்டான்.