நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அதற்குப் பிறகு இரண்டு முறை சுகந்தன் நேடலிக்கு தொடர்பு கொண்டான் அவள் எடுத்தாள்.
“Hai suka (ஹாய் சுகா.)” என்றாள்.
“Hai, Natalie sorry. My phone was in silent mode. Did not notice your call. Sorry. ( ஹாய் லாட்டரி மன்னித்துக்கொள் என்னுடைய போன் சைலன்ட் மோடில் இருந்ததால் நான் உன்னுடைய அழைப்பை கவனிக்கவில்லை)” என்றான் கந்தன்.
“No big deal. I was in the grocery store just next to your community. My car key got stuck in the car. So, called the car insurance company for help. Since he took some time to arrive, I thought I could stay in your home. so, called you. ( ஒன்னும் பிரச்சினை இல்லை. நான் உங்கள் குடியிருப்பின் பக்கத்திலிருக்கும் காய்கறி கடையில் இருந்தேன். என்னோட கார் சாவி காருக்குள் மாட்டிக்கொண்டது. அதனால கார் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிக்கு கால் பண்ணி உதவி கேட்டேன். அவர் வருவதற்கு நேரமானது. அதுவரையில் உன் வீட்டில் இருக்கலாம் என நினைத்தேன். அதனால கால் பண்ணினேன்)”
“oh, I am sorry. Natalie. (ஓ மன்னித்துக்கொள் மேற்றளி)” என்றான் மீண்டும் சுகந்தன்இரங்கிய குரலில்.
“Its ok suka. No worries. I stayed inside the grocery store for a while. then, the insurance guy came and helped me. so, I am back home now.( பரவாயில்லை சுகா. கவலை வேண்டாம். நான் அந்த காய்கறி கடையில் கொஞ்ச நேரம் இருந்தேன். அந்த இன்சூரன்ஸ் கம்பெனியில் இருந்து ஆள் வந்து எனக்கு தேவையான உதவியை செய்தான். அதனால நான் இப்போ வீட்டுக்கு வந்துட்டேன்.)”
“oh good to know Natalie (அப்படியா ரொம்ப நல்லது நேடலி)”.
Ok. suka. Got some work. See you later( சரி சுகா. எனக்கு ஒரு வேலை வந்துவிட்டது அப்புறம் பார்க்கலாம்.) என்றாள்.
“see you, Natalie (பார்க்கலாம் நேடலி)” என்றுவிட்டு தொடர்பைத் துண்டித்தான் கந்தன்.
“சே! தேவையில்லாம அவசரப்பட்டு சாதனா கிட்ட கோபமா பேசிட்டோம். கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம். அவள் கோபம் அதிகமாகி இருக்கும்.” என்று தன்னைத்தானே நொந்து கொண்டான்.
கதவை சாத்திவிட்டு பொத்தென்று படுக்கையில் விழுந்தாள் சாதனா. அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அவன் சொன்னதில் பாதி உண்மை இருந்தது. இவளுக்கு உண்மையாகவே நேடலியை பார்க்க பொறாமையாக தான் இருந்தது. இன்னும் கேட்டால் அவன் சொன்னது போல அவள் பின் அவன் சென்று விடுவானோ என்று ஒரு சிறு பயம் இருப்பது கூட உண்மைதான்.
“ஆனால் எதுக்காக அப்படி நாம பயப்படனும்? அவன் யார் கூட போய் எப்படி இருந்தால் நமக்கு என்ன?” என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள் .
‘இல்லை அவன், அவள் கூட போக கூடாது’. என்று அவள் மனம் சொன்னது இன்னொரு மனம் ‘நீயும் அவன் கூட வாழ மாட்ட. அவனை வேற யார் கூடயும் வாழ விடமாட்ட. நீ பேசறது உனக்கு நியாயமா படுதா?’ என்று கேட்டது.
எனக்கு அவனை பிடிக்கும். அவன் கூட வாழ கூட ஆசைதான். ஆனால் அன்னிக்கி என்னை வெளியே போன்னு சொன்ன மாதிரி திரும்பவும் அவன் குடும்பத்திற்காக என்னை அப்படி சொல்ல மாட்டான்னு என்ன நிச்சயம்? சரி ஏதோ ஒரு கோபத்தில் அப்படி சொல்லி இருந்தாலும் அடுத்த நாள் இல்லை அதுக்கப்புறம் இந்த ரெண்டு வருஷத்துல எப்பயாவது என்கிட்ட சாரி கேட்டு இருக்கலாம் இல்ல? இந்த ரெண்டு வருஷமா இவன் என்ன பண்ணிட்டு இருந்தான்? இந்த ரெண்டு வருஷம் இல்லாம இப்போ இவனுக்கு என்ன ஞானோதயம் வந்தது? இல்லை, இவன் எனக்காக வரலையா? வந்த இடத்தில் என்னைப் பார்த்து பேசுகிறானா?
அவன் முதன் முதலாக அவளை பார்த்த போது ராஜேஷை தான் பார்க்க வந்ததாக சொன்னான். அதுக்கப்புறம் பார்த்த எல்லா இடத்திலேயும் எதேச்சையா தான் பார்த்ததா சொன்னான். ஒருவேளை இதெல்லாம் உண்மைதானா? இவன் என்னை சமாதானப்படுத்தி கூட்டிட்டு போக நினைக்கவே இல்லையா?’ என்று நினைத்துக் கண்ணீர் விட்டாள்.
இப்படி பலவாறு யோசித்து குழம்பினாள் சாதனா.
அன்னிக்கு மட்டும் அந்த சண்டை வராமல் இருந்திருந்தால் எவ்வளவு நல்லா இருந்திருக்கும் என்று ஏங்கும் பொழுதே அன்று நடந்தது கண்ணில் காட்சியாக தெரிந்தது.
சுகன்யாவின் சீமந்தம் கோலாகலமாக நடந்தது. தாமரையின் ஆசைப்படி அவளுக்கு வைர வளையல் வாங்கி போட்டிருந்தான் சுகந்தன்.
சாதனா “இப்போ உனக்கு இருக்கிற கடனில் இந்த வைர வளையல் வாங்கி போட்டே ஆகணுமா?” என்று கணவன் படும் கஷ்டத்தை பார்த்து பொறுக்கமுடியாமல் சாதனா கேட்டாள்.
ஆனால் அவன் “ஒரு தடவை தானே சீமந்தம் செய்யப்போகிறோம். பரவாயில்லை. அம்மா ஆசைப்படி பண்ணியாச்சு. எனக்கும் சந்தோஷம்தான்.” என்றான் சாதாரணமாக.
“இதோட முடிஞ்சு போச்சா? குழந்தை பிறந்ததும் அதற்கும் நகை போடணும் இல்லையா? எல்லாத்தையும் யோசிச்சு பண்ணு.” என்று சொன்னதோடு நிறுத்தி கொண்டாள் சாதனா.
ஆனால் இவர்கள் பேசியது ஜன்னல் வழியாக வெளியில் நின்று பேசிக்கொண்டிருந்த தாமரை மற்றும் சேகர் காதுகளில் விழுந்தது.
சேகர் தாமரையை பார்த்தான்.
“பாத்தீங்களா அத்தை உங்க மருமகள் எப்படி பேசிட்டு இருக்காங்க?” என்றான்.
“அவள் ஏதோ புரியாம பேசிட்டு இருக்கா. நீங்க அதை பெருசா எடுத்துக்காதீங்க மாப்பிள்ளை. அவள் பேச்சு இந்த வீட்டில் எடுபடாது. என் மகன் நான் சொல்றதை தான் கேட்பான். அவள் சொல்வதை கேட்க மாட்டான். அவளுக்கு இங்க பெருசா மதிப்பு கிடையாது. எனக்கும் என் பையனுக்கும் சுகன்யாவும் நீங்களும் தான் முக்கியம்.”
“அப்படியா சொல்றீங்க?” என்றான் சேகர்.
“நிஜமா தான் சொல்றேன் மாப்பிள்ளை. எங்களுக்கு நீங்க தான் முக்கியம். இதை இத்தோட விட்டுடுங்க. அவள் கிட்ட நான் பேசறேன்.” என்றார் தாமரை.
வெளியில் வந்த சாதனா, தாமரை சேகர் இருவரையும் பார்த்தாள். இருவரும் அவளைப் பார்த்து முறைத்த மாதிரி தெரிந்தது. ‘ஒருவேளை கேட்டிருப்பார்களா?’ என்று ஒரு கணம் நினைத்தாள். ஆனால் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.
“வாங்க மாப்பிள்ளை.” என்று கூப்பிட்டாள். ஆனால் அவன் பதில் பேசவில்லை.
அன்று இரவு சுகந்தன்பதினோரு மணிக்கு வீட்டுக்கு வந்தான்.
எல்லோரும் அவரவர் அறையில் இருக்க அவனே சாப்பாடு எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிட்டு முடித்து விட்டு தன் அறைக்கு வந்தான். அறைக்குள் நுழைந்த அவன் மின் விளக்கை போட்டான். சாதனா தூக்கத்திலிருந்து எழுந்தாள்.
“என்ன சுசுகந்தா? இவ்வளவு லேட்? எங்க போயிட்டு வர?” என்று கேட்டாள்.
“அதை ஏன் கேட்கிறாய்? இன்னிக்கி ஆபீஸ்க்கு மாப்பிள்ளை வந்திருந்தார். அவருக்கு ஐந்து லட்சம் பணம் தேவைப்படுகிறதாம். என்கிட்ட கேட்டார்.”
“என்ன உன்கிட்ட கேட்டாரா? உன்கிட்ட ஏது இவ்வளவு பணம்? இப்பதானே நீ வைர வளையல் வாங்கி கொடுத்து இருக்க. இப்போ அஞ்சு லட்சத்துக்கு நீ எங்க போவ?” என்று கேட்டாள்.
“அவருக்கு கொஞ்சம் முக்கியமா அவரோட வியாபாரத்துக்கு வேணுமாம்.”
“அப்போ அவர் அவங்க அப்பா, அம்மா கிட்ட கேக்க வேண்டியது தானே?”
“அதை நான் அவர்கிட்ட சொல்ல முடியுமா? ஒருத்தர் கிட்ட கேட்டு இருக்கேன். பாப்போம். அவர் இல்லைன்னு சொன்னா என்ன பண்றதுன்னு தெரியல. யோசிச்சு யோசிச்சு தலை வலிக்குது.” என்று தலையை பிடித்துக் கொண்டான் கந்தன்.
“என்கிட்ட அஞ்சு லட்சம் இருக்கு. ஆனால் அப்பாவுக்கும் எனக்கும் ஜாயிண்ட் அக்கவுண்ட். நான் பணம் எடுத்தால் அப்பாவுக்கும் தெரியும்.” என்றதும்
“இப்ப யாரு உன் கிட்ட பணம் கேட்டா? தேவையில்லாம உங்க அப்பா கிட்ட இதை பத்தி பேசி பிரச்சனை பண்ணாதே.” என்றான் சுகந்தன்எரிச்சலாக.