எழிலரசியின் கண்கள் மாடி ஊஞ்சலில் அமர்ந்து இருந்த வேந்தனையும்.. அப்போதுதான் உதித்த ஆதவனையும் வீடியோகாலில் பார்த்து ரசித்தபடி தன் அறையில் சத்துமாவு கஞ்சியை குடித்துக் கொண்டு இருந்தாள்.
தன்னை ரசித்தால் தன்னவளின் முகத்தில் தோன்றிய சிவப்பை ரசித்தவாறே.. ” முயல்குட்டி மாமா கனவுல வந்து நீங்க கேட்டது எல்லாம் கொடுத்து விட்டனோ!.. முகம் ரொம்பவே பளிச்சுனு இருக்கு. “
அவனின் அரசி புன்னகையுடன் ‘ ஆம் இல்லை ‘ என தலையாட்ட…
அவள் அசைக்கும் அழகை கண்களில் சேமித்துவிட்டு புன்னகையுடன்.. ” ம்.. காலையிலேயே நீ என்னைய படுத்த ஆரம்பித்து விடுவ. நானே ரூட்டை மாத்திக்கிறேன். அரசிம்மா நாம்ம கல்யாணத்திற்கு 15நாள் முன்வரை இந்த டைமில் தினமும் அறைமணிநேரம் அன்றைய நாளையில் செய்யப்போவது, முந்தைய நாள் எல்லாம் சரியா நடந்தா பற்றி பேசிக்கலாம். “
” ம் ஓகே தனு. நீங்க நல்லா தூங்கினிங்களா?.. ” ஆம் என தலையாட்ட..
” ம்.. தனு கடை பற்றி சில தகவல் கொடுத்துயிருந்தீங்கள.. அதில் ஸ்விட் செய்பவர்கள் சிலர் ஹோட்டலில் இருக்காங்கல.. ஏன் இன்னைக்கே டிரையல் போல.. நீங்க கொடுத்த ஸ்விட் வகைகளில் மூன்றை மதியம் இரண்டு, மாலை ஒன்று என்று.. அவர்களையே செய்ய வைத்து ஹோட்டலில் கொடுப்போமா?. இதை இன்னைக்கே செய்ய முடியுமா?.. இல்ல ஒன்னு மட்டுமாவது செய்ய முடியுமா?.. மாமாவெல்லாம் இதுக்கு ஒத்துப்பாங்களா?. இல்ல ஹோட்டலில் செய்து பார்க்க இது சரியா வருமா?.. ஆனா கண்டிப்பா பண்ண வேண்டும். எப்படி?.. “
எழிலரசி அவர்களின் கடை, மில்லில் கணக்கு வழக்குகளை சரி பார்ப்பது, அனைத்தும் சரியாக நடக்கிறாதா?.. தவறு இருந்தால் அவளே உடனடியாக மாற்றமும் செய்யலாம் என்ற வகையில் மட்டுமே இதுநாள் வரை அவளது வேலையாக இருந்தது. மற்ற வேலைகளை அப்பா, அண்ணா செய்ததால்.. அதில் அவளாக புதிகாக செய்வதற்கு எதுவும் இல்லை.. அதற்கான தேவையும் இல்லாமல் இருந்தது.
ஆனால் இப்போது எழிலரசிக்கு விரைவில் முடிக்க வேண்டிய இனிப்பகத்தில் அதிக கவனமும்.. அதேசமயம் தான் மட்டுமே முடிவு எடுக்க முடியாத சூழ்நிலையும் இருந்தது. இனிப்பகம் வேந்தனின் புது திட்டம் என்பதால்.. கடையை ஆரம்பிக்கும் முன் கண்டிப்பாக இனிப்பு பதார்த்தங்களை டிரையல் செய்ய வேண்டும்.
அப்படி செய்தால் மட்டுமே சாப்பிடுபவர்களின் விருப்பங்கள், சுவையில் மாற்றங்கள், விருப்ப இனிப்பு வகைகளின் எண்ணிக்கைகள், செலவுகள் இன்னும் சிலவும்.. அதன் கூடவே சீக்கிரமே.. தங்கள் இனிப்புவகைகள் நன்முறையில் எல்லா மக்களையும் சென்றடையும்.
தான் ஆரம்பிக்கும் முதல்படியை தனுவிடம் இப்போதைக்கு மனதில் இருந்த சந்தேகங்கள், கேள்வியை எல்லாம் கேட்டுவிட்டோம்மா?.. என்று யோசித்து அவனை பார்க்க..
அவனோ புன்னகையுடன் தன்னவளை பார்த்திருந்தான். என்ன!. என்பது போல அவள் அவனை பார்க்க..
” முயல்குட்டி ஒரே இரவில் எல்லாம் பார்த்து.. இவ்வளவு யோசித்துயிருக்கிங்க. பக்கத்தில் வா. ” அவளின் நெற்றியில் முத்தம் கொடுத்தான்.
” முயல்குட்டி யாரும் ஒன்னும் சொல்லமாட்டாங்க. ஸ்விட் செய்யறவங்களுக்கு வேற வேலை ஏதாவது இருக்கும். அதனால நீ சொன்னதில் ஒரு ஸ்விட் மட்டும் இன்னைக்கு பண்ண சொல்லி ஆரம்பிப்போம். பின்ன நீ ஒருவாரத்திற்கு மட்டும் ஒரு பிளான் போட்டு கொடு. நாம்ம அப்பா, பெரியப்பாவிடம் கேட்டு.. ஹோட்டலில் இல்ல தனியா இனிப்பகம் பேர் போட்டே.. சின்ன ஸ்டால் வைத்து டிரையல் பார்க்கலாம். ”
” ம்.. சரி தனு. கோயில் போகனும் இல்ல.. நேரம்ஆச்சு. நான் கிளம்பியவுடன் கால் பண்ணுறேன். என்கூட சாப்பிடனும் அதனால லைட்டா சாப்பிட்டு வாங்க. ”
” ம்.. ” என்ற தலைசைப்புடன் இருவரும் வைத்தனர்.
” அம்மா.. ம்மா சாப்பாடு ரெடியா?.. ”
” ரெடிதான் வசுந்தரா.. வந்து உட்காரு. நீ எல்லாம் எடுத்து வச்சுட்டியா?.. ” சித்ரா கூறிக்கொண்டுயிருக்க..
” என்னம்மா இன்னைக்கு சாப்பாடு வாசனை விதவிதமா வருது. ” கேட்டபடியே சமையல் அறையில் நுழைந்த வசு.. அங்குயிருந்த உணவுகளை பார்க்க ஆரம்பித்தாள்.
இனிப்பு பாசிபருப்பு பனியாரம், உளுந்துவடை, இட்லி, சாம்பார், தேங்காய், மல்லி, தக்காளி சட்னி. பூரி, உருளைகிழக்கு மசால் அதை வைத்து அடுப்பில் மசால்தோசை ஊற்றிக் கொண்டுயிருந்தார்.
” ம்.. என்னம்மா அண்ணா இங்க இருப்பதால் ஒரே நேரத்தில் இவ்வளவு சாப்பாடா?.. “
சித்ரா புன்னகையுடன் ” ஆமா வசுகுட்டி.. அவன் தான் மற்றது எல்லாம் சாப்பிடுறானே அதான் இன்னைக்கு பண்னேன். சரி சரி நீ சாப்பிடு.. ” வசு சரி என தலையசைப்புடன் வெளியே வர.. சித்ரா எல்லா உணவையும் எடுத்து வைத்துவிட்டு அவளிற்கு எடுத்து வைத்துக் கொண்டுயிருந்தார்.
அப்போது வேகமாக படிக்கட்டில் இறங்கி வரும் சத்தம் சாப்பிடும் பகுதி வரை கேட்க.. அம்மாவும், மகளும் பழுப்புநிற சட்டை, அடர்ஊதாநிற ஜீன்ஸ் பேன்ட் அணிந்து புன்னகையுடன் அவர்கள் அருகில் வரும் வேந்தனை பார்த்தனர்.
வந்தவன் இருவரையும் பார்த்து ‘ என்ன இப்படி பார்க்குறாங்க?. ‘ என்பது போல பார்க்க..
” என்ன வேந்தா 7.30 மணிக்கே கிளம்பி வர?.. வீட்டல இருப்பேன் பார்த்தேன். ”
புரியாமல் அம்மாவை பார்த்தான். மறந்து விட்டாரோ!.. ” அம்மா இன்னைக்கு அரசி கடைக்கு வருவதால்.. அரசிய அழைச்சுட்டு.. முதலில் கோயிலுக்கு போயிட்டு பின்ன கடைக்கு போகனும். மதியத்திற்கு மேல தான் ஆபிஸ் வேலை பார்க்கனும். ”
” ம்.. பத்து, பதினொன்று மணிக்கு மேல போவியோனு நினைத்தேன். ” அவர் மறக்கவில்லை.. ஆனால் இவ்வளவு காலையில் எதிர்பார்க்கவில்லை.
வேந்தன் தலையசைப்புடன் என்ன உணவு என்பதை பார்க்க.. ஒருநொடி இவ்வளவு ஹேவியா?.. என்று அவன் நினைக்கும் வேலையில்.. இரு பாசிப்பருப்பு பனியாரம் இரண்டு இட்லி, ஒரு வடை, ஒருபூரியை சித்ரா எடுத்துவைக்க..
உணவை பார்த்தும்.. ” அம்மா எனக்கு இதுவே போதும். ” சாப்பிட சாப்பிட எடுத்து வைத்து விடுவார் என்பதால் முன்பே கூறிவிட்டான்.
” ஏன்பா இவ்வளவு கம்மியா சாப்பிடுற. நான் வேண்ணா மசால்தோசை எடுத்துட்டு வரட்டா?. ” பிடிக்கவில்லையோ என்று அவசரமாக கேட்க..
” அதெல்லாம் வேண்டாம் மா. நீங்க செய்த இதுவே ரொம்ப அதிகம். அதுவந்து அரசி.. அவகூட சாப்பிடனும் சொல்லியிருக்கா. அப்ப சாப்பிட இடம் வேண்டும் இல்ல. ” சாப்பிட்டுக் கொண்டே கூறினான்.
” ம்.. ” தலையசைப்புடன் அவர் தன் அருகில் இருந்த வசுவை பார்க்க..
” ம்மா ஆசையா செய்துயிருக்கிங்க ஏதாவது பேச்சு கொடுத்து சாப்பிட வைங்கம்மா. ”
அவரும் சரி என்பது போல பேச ஆரம்பிக்கும் போது.. அங்கு ரவிந்திரன் வருவதை பார்த்து அமைதியாகி விட்டார். பின்வந்தவருக்கு உணவு வைத்து.. எல்லோரும் வசதியாக எடுக்கும் படி வைத்துவிட்டு பின் அவரும் சாப்பிட அமர்ந்தார்.
” வேந்தா எழிலரசியோட கோயிலுக்கு போயிட்டு.. பிறகுதானே கடைக்கு வரிங்க?. ”
” ஆமாப்பா. ”
” என்னங்க அவங்க இப்ப கோயிலுக்கு போக போவது உங்களுக்கு முன்னமே தெரியும்மா?. ”
முன்னாடியே சொல்லியிருந்தால் உணவு வகைகளை குறைத்துயிருக்கலாம். வேந்தன் சாப்பிடாமல் இருப்பதால் தனக்கு தேவையில்லாமல் வருத்தமும் கூட தானே.. என்று எண்ணி கேட்க. தந்தை, மகன் இருவரும் ஒருசேர அவரை ஒரு பார்வை பார்த்தனர்.
சித்ராவின் முகத்தில் ஒரு வருத்தம் தெரிய.. ” சித்ரா.. வேந்தன் என்னிடம் எதுவும் சொல்ல. வேந்தன் ஏதாவது செய்ய ஆரம்பிக்கும் போது பிரகதாம்பாள் கோயில் போய் வருவான் தானே. அருணாச்சலம் சொல்லியிருக்கார்.. இவன் மாதிரியே எழிலரசியும் கோயில் போய்ட்டு வந்து தான் முக்கியமானதை செய்ய ஆரம்பம்பிக்குமாம். அதனால வேந்தன் கிளம்பியிருப்பதை பார்த்து எல்லாம் ஒரு யூகத்தில் தான் கேட்டேன். ” அவர் வேந்தனை பார்க்க.. இப்போது வேந்தன் அவரை ஒரு பார்வை பார்க்க..
என்னடா ரவி.. யாரும் வாயவே திறக்க மாட்டாங்க போல. ‘ உங்களுக்கு அரசியை பற்றி மாமாவிடம் இந்தளவிற்கு என்ன பேச்சு என்று?. ‘ பார்வையாலே கேள்வி கேட்குறானே!..
” டேய்.. உன் மாமனாரை பேச வைக்கவும்.. அரசிமா!. என்ற ஒரு பேர் சொல்ல வேண்டியிருக்கு. அப்பதான் உன்ன மாதிரி அவரும் வாயவே திறக்குறாரு. உங்களுக்கு எப்படி தெரியும்?. என்று கேட்காத. உன் அரசி புராணம் பற்றி ஆகாஷ் தான் சொன்னான். ” புன்னகையுடன் அவரும் வேந்தனும் மெல்லிய குரலில் பேசிக் கொண்டுயிருந்தனர்.
இருவரையும் பார்த்த இருவர்.. ” என்னப்பா இரண்டு பேர் மட்டும் ரகசியம் பேசிக்கிட்டு இருக்கிங்க. “
சித்ரா கூறியதிலிருந்து ரவிக்கு வசுவின் சிறுபிள்ளை தனத்தால் ஏதாவது எழிலரசியிடம் பிரச்சனை வந்துவிடுமோ?. என்று.. அவளின் மேல் வருத்தமும், சிறு பயம் கூட வந்துவிட்டது. இன்னும் சில நாட்கள் அவளை கவனித்து.. அவளிடம் பொறுமையாக பேச வேண்டும் என நினைத்தார்.
” ரகசியம் இல்ல வசும்மா.. சும்மா தான் பேசிட்டுயிருந்தோம். ” வேந்தனின் பக்கம் திரும்பும்போது..
” அப்பா அரசி.. இன்னைக்கே சின்ன டிரையல் போல மதிய சாப்பிட்டிற்கு நம்ம வைக்கும் ஸ்விட் இல்லாம.. கூடுதலா ஸ்விட் ஒன்று இல்ல இரண்டு ஸ்விட் வைக்கலாமானு கேட்டா. நான் செய்பவர்களிடம் உடனடியா இரண்டு செய்ய சொல்ல முடியாது. ஒன்னு வேண்டுமானால் பார்க்கலாம் சொன்னேன்.
அதனால நாங்க கடைக்கு முன் நீங்க முத்தண்ணாவிடம் இன்னைக்கு ரவைஅல்வா மதியம் சாப்பிட்டிற்கு இல்ல ஈவினிங் பண்ண முடியுமா?.. கேட்டு வைக்கிறீங்களா. நாம்ம நேரடியா போய் கேட்டா தான் சரியான பதில் வரும். அதனாலதான் ப்பா. ” அவன் அப்பாவிடம் பேசிக் கொண்டுயிருக்கும் போதே காலியான தன் தட்டில் சித்ரா உணவு வைப்பதையும் கவனித்தான்.
பொறுமையாக யோசித்தவர்.. ” ம்.. ஒரு ஸ்விட் பண்ணிவிடலாம். நான் போய் கேட்க இன்னும் நேரம் ஆகிவிடும். இப்பவே அண்ணாவிடம் சொல்லி கேட்கக் கூறுகிறேன். ”
‘ வேந்தன் வேறு எதுவும் கூறாமல்.. சரி என்ற தலையசைப்புடன் எழுந்து விட்டான். போகும் அவனைதான் வசுவும், சித்ராவும் பார்த்திருந்தனர். 5 நிமிடத்தில் வந்தவன் இரு பாக்ஸ் கையில் எடுத்து வந்தான். பின் ஒன்றில் பனியாரமும், மற்றொன்றில் இருபூரி இருக்க அதில் மேலும் ஒரு பூரியும் உருளைகிழங்கு மசாலாவையும் மட்டும் எடுத்துக் கொண்டான். ‘
” அம்மா.. அரசி என்னுடன் சாப்பிடனும்தான் சொன்னா. அவங்க வீட்டு சாப்பாடுனு சொல்ல. அதனால நீங்க செய்ததை அரசியிடம் கொடுத்து விடுகிறேன். நான் அத்தம்மா செய்ததை சாப்பிட்டுக் கொள்கிறேன். ” வேறு எதுவும் கூறாமல் வசுவை ஒருபார்வை பார்த்து.. மற்ற இருவரிடமும் தலையசைப்புடன் கிளம்பிவிட்டான்.
ரவிந்திரன் பெண்கள் இருவரையும் பார்க்க தப்பு செய்து மாட்டிக் கொண்ட உணர்வில்.. அவரை பார்த்தும் பார்க்காதது போலவும் சாப்பிட்டுக் கொண்டுயிருந்தனர். அவருக்கு வேந்தன் கூறியும்.. இவர்கள் ஏதோ செய்துயிருக்கிறார்கள் என்று புரிந்தது. பின் அவரும் எழுந்து அண்ணாவிடம் பேசியபடி.. அவரும் ‘ வருகிறேன்.. ‘ என்ற தலையசைப்புடன் கிளம்பிவிட்டார்.
அமைதியாக அமர்ந்துயிருந்த சித்ராவிடம்.. ” விடும்மா. நீங்க ஒன்னும் தப்பா எதுவும் பண்ணல. அண்ணா சாப்பிடாதற்கு என்று ஒரு ரிசன் இருந்த மாதிரி.. நீங்க வைத்ததற்கு ஒரு ரிசன் இருக்கு. எனக்கு தேவை நீங்க ஆசையா செய்த உணவு வேஸ்ட்டாக கூடாது. யார் சாப்பிட்டா என்ன?. மதியம் அண்ணா நம்ம கடையிலேயே சாப்பிட்டு தான் வருவாங்க. இப்ப ரெஸ்ட் எடுத்துவிட்டு.. மதியம் லைட்டா சாப்பாடு செய்யுங்க. நானும் கிளம்புறேன். ” கல்லூரி பஸ் பிடிக்க அவசரமாக கிளம்பிவிட.. சித்ரா குழப்பத்தில் அமர்ந்திருந்தார்.
வேந்தன் எழிலரசியின் வீட்டிற்குள் வர.. பாட்டி மட்டும் ஹாலில் அமர்ந்திருந்தார்.
” என்ன பாட்டி நீங்க மட்டும் இருக்கீங்க.. எங்க உங்க பேத்தி இன்னும் கிளம்பலையா?.. ” தன்னவள் தான் வரும் போது இல்லையே என்ற சற்று கடுப்புடன் பேத்தி என கூறி கேட்டான்.
” ம்.. உன் அரசிம்மா இவ்வளவு நேரம் இங்க தான் இருந்தா.. நீ வரலைனு இப்பதான் உன் பேரன் வரட்டும் உன்னைய ஒருவழி பண்ணுறேனு.. அவ உன்னவிட கடுப்புல மாடிக்கு போனா. “
மாடியை பார்த்தபடி.. ” ரொம்ப கோபமோ?. ” ஆம் என அவர் தலையசைக்க..
” எங்க மத்தவங்க எல்லாம்?.. ”
புன்னகையுடன்.. ” லட்சுமி மட்டும் தான் சமையலறையில் இருக்கா. நீ போய் என் பேத்திய சமாதான படுத்தி சாப்பிட கூப்பிட்டுவா. ”
ம் தலையசைப்புடன் ஒருபாக்ஸ் மட்டும் வைத்துவிட்டு.. மற்றொன்றை எடுத்துக் கொண்டு தன்னவளிடம் சென்றான்.
” என்ன இதை எவ்வளவு டைட்டா கட்டினாலும்.. திருப்ப திருப்ப லூசாகுது. ” திட்டிக் கொண்டுயிருக்கும் போது..
அவளின் கண்கள் தானாக முடிக்கொண்டது. அவளின் மூச்சுகாற்றில் தன்னவனின் வாசனையை மிக அருகில் உணர்ந்தாள். அவளின் கைவிரலுடன் அவளவனின் கைவிரலும் சேர்ந்து சுடிதார் முதுகுபகுதியில் இருந்த நாட்டை டைட்டாக முடிச்சிட்டனர்.
அவளின் சத்தம்.. அவன் வரும்போதே வெளியிலேயே கேட்டது. கஞ்சி மட்டும் குடித்து விட்டு சாப்பிடாமல் காத்துயிருப்பாள்.. நேரம் ஆனதால் பசியில் முயல்குட்டி கடுப்பில் உள்ளாள்.. என அவளின் மனநிலையை எண்ணியபடி அவன் கதவை திறக்க..
அரசி சற்று இளைத்து இருப்பதால் தோள்பகுதி சரியாக நிற்கமாட்டேன் என அடம்பிடிக்க.. கூத்தலை முன்பக்கம் விட்டுயிருந்தவளின் வெற்றுமுதுகு சற்று அகலமாக அதனுடன் பளிச்சென்றும் அவனின் மச்சமும் தெரிய.. நேராக தன்னவளின் பின் நின்றவன் தன்னவளின் நாட்போட கஷ்டப்படும் கைவிரலில் தன் விரலையும் கோர்த்து நாட்டை டைட்டாக போட்டுவிட்டான். பின்தான் பார்த்தான் உடல்முழுவதை சிவப்பாகி அருகம்புல் பூத்துயிருந்த அவனவளை.
சற்றுமுன் பார்த்ததும் சேர்ந்து தன் கண்களை சற்றும் திருப்ப முடியமால்.. அதன் தாக்கத்தால் தன்னவளிடமிருந்து கை எடுக்கும் முன்.. அவளின் ஒருகையின் மேல் தன்கையை சேர்த்து வைத்து முன்பக்க இடையை இறுக்கி.. அவனின் மற்றொரு கைவிரல்கள் மறைந்திருந்த மேல் இருந்த துணியை விலக்கி மச்சத்தின் மீது ஆழந்த அழுத்தமான முத்தம் ஒன்றை வழங்கியதும்.. தன்னவளை தன்பக்கம் திருப்பி நெற்றியிலும் கொடுத்த பின்.. ஊஞ்சலில் அவன் மடியில் அமர்த்திக்கொண்டான் தன் அரசியை.
அவனவளோ அவளவன் கொடுத்த முத்தத்திற்கு அவளின் ஒவ்வொரு அணுவும் பல உணர்வுகளை கொடுத்ததால் கண்களை திறக்க முடியாமல் அதனை சமநிலைபடுத்த கொடுத்தவனின் கைகளுக்குள்ளே தன்னை தன்னவனுக்குள் அடங்கி மடியில் சுகமாக அமர்ந்துக்கொண்டாள். சிலநிமிடங்கள் கடந்தபின் தான் தன்னிலைக்கு வந்தவள் கண்களை திறந்தபோது கள்ளபுன்னகையுடன் இருந்த அவனவளை பார்த்தாள்.
அவனோ.. என்ன?. என்று புருவத்தை ஏற்றி இறக்க. அவனின் மேல் சற்றுமுன் இருந்த கோபம் நினைவில் வர அதனை காட்ட தயாராகும் வேலையில்.. அவளை கண்டுகொண்டவன் இப்போது சற்று விரிந்த புன்னகையை வெளிப்படுத்தி அருகில் வைத்துயிருந்ததை அவள் வாயில் வைத்துவிட்டான். ஒரு நொடி என்ன செய்தான்?. என்ன புரியாமல் விழித்தவள்!.. உணவின் சுவை நாக்கு உணர.. அதன்பின் பாசிபருப்பு பனியாரத்தை கடித்து சாப்பிட ஆரம்பித்தாள்.
தன்னவளை பேசவிட்டாமல் மூன்று பனியாரம் முடியும் வரை அவளுக்கு ஊட்டிக் கொண்டுயிருந்தான். தன்னால் இவ்வளவு நேரம் பசியுடன் இருந்த தன் முயல்குட்டியின் வயிற்றை கவனித்துவிட்டு.. பின் திட்டு வாங்கிக் கொள்ளலாம் என அவன் நினைக்க..
ஆனால் அவளோ எல்லாம் மறந்துவிட்டாள். இப்போதுதான் பாவப்பட்டு தன்னவனுக்கு எடுத்து ஊட்டினாள். ‘ அப்பாடி!.. இப்பவாவது உனக்கு என் ஞாபகம் வந்ததே ‘ என நக்கல் பார்வை, புன்னகையை அவன் உதிக்க. ‘ போடா ‘ என கொஞ்சி அவனையும் இரண்டு சாப்பிட்ட வைத்தாள்.
அவன் பூ வைத்து விட்டதும் இளந்தளிர்பச்சை டாப் மற்றும் லைட் ஊதா போன்ட் ஷால் அணிந்து சுடிதாரில் இருக்கும் தன் அரசியை தலைமுதல் கால்வரை பார்த்துவிட்டு இறுக்கிய அணைப்பில் சிலநொடிகள் தன் முயல்குட்டியை அணைத்து விடுவித்தான்.
அவர்கள் இருவரும் கீழே வர அங்கு அனைவரும் இருக்க ஒரு அதிர்வுடன் பாட்டியை பார்க்க அவர் புன்னகைத்தார். இந்த பாட்டியை.. செல்ல திட்டு திட்டி நேராக அவர் அருகில் சென்று அமர்ந்தான். எழிலரசி சமையல்அறை சென்றுயிருந்தாள்.
வேந்தன் வருவதற்காக சாப்பிடாமல் காத்துயிருந்தவர்கள் அவசர வேலையால் லட்சுமி பரிமாற.. மூவர் உள்ளே தான் சாப்பிட்டுக் கொண்டுயிருக்க.. பாட்டியும், எழிலரசியும் ஹாலில் இருந்தார்கள். அவள் அப்போதுதான் வீட்டு நபர்கள் மட்டும் இருக்க அனைவருடனும் முதன்முறையாக சேர்ந்து சாப்பிடலாம் என்று ஆசையாக இருந்தவள்.. தன்னவன் இன்னும் வராமல் இருக்க கடுப்புடன் அவள் மாடிக்கு செல்லவும்.. வேந்தன் வரவும் சரியாக இருக்க.. பாட்டி தான் அவளை சமாதானம் செய்ய அவனை அனுப்பிவைத்தார்.
” என்ன பேர உன் அரசிம்மாவை சமாதானம் படுத்திட்ட போல.. என்ன ஸ்விட் கொடுத்த அவளுக்கு?.. ”
அவருக்கு புன்னகை மட்டுமே அவனின் பதிலாக இருந்தது. ஆனால் மனதிலோ பாட்டி நல்லா புரிஞ்சு வைத்துயிருக்கிங்க. ஆனா பாருங்க நான் தாமதமாக வந்தததிற்கு எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாத மச்சம் என்ற இனிப்பை இன்று முதன்முறையாக என் கண்களுக்கு முழுதாக காட்சிகொடுத்து.. என் இதழ் பதித்து அதன் தித்திப்பின் சுவையை உணரவைத்து.. அதை என்றும் மறக்க முடியாத ஒரு இனிப்பை என்னவள் முயல்குட்டி தானே.. எனக்கு ஸ்விட் கொடுத்தா!.. என்ற நினைப்பில் அமைதியாக அமர்ந்திருக்க..
வேந்தன் தன் முன்னால் இருந்தவர்களை சற்று தாமதமாக தான் உணர்ந்தான். மனதில் அசட்டுபுன்னகை புரிந்து.. ” தாத்தா நான் வருவதற்கு கொஞ்சம் தாமதம் ஆகிடுச்சு. நீங்கயெல்லாம் சாப்பிட்டிங்களா?.. ”
அவனுக்காக காத்திருக்கவும் முடியாமல் வேறுவழியின்றி சாப்பிட்டு முடித்திருந்ததால் சடங்கடத்துடன் அமர்ந்தவர்களை நான் அதை பொருட்டாக கருதவில்லை என்பது போலனா பேச்சை கேட்டபின் தான் அவர்கள் சற்று சகஜநிலைக்கு வந்தனர்.
” சாப்பிட்டோம் வேந்தன். நீங்க போய் சாப்பிடுங்க. நாங்க கடைக்கு கிளம்புறோம். ” இருவருக்கும் நேரம் ஆவதால் ஒரே வரியில் எழுந்தார்..
வேந்தன் சட்டென்று.. ” அரசி.. ” தன்னவளை அழைக்க.. வந்தவளோ வாயில் பனியாரத்தை கடித்தபடி வர வந்தவளை அனைவர் முன்னே முறைக்க..
” இல்ல தனு சூடா இருக்கும்போதே சாப்பிட்டுவிடலாம் என்றுதான். ” அனைவரையும் பார்த்தவள்.. சிரிப்புடன் நின்றுயிருந்தார்கள். இப்போது அனைவரையும் முறைத்த படி தனுவின் அருகில் நின்றாள்.
அவளின் அருகில் மெல்லிய குரலில் ” முயல்குட்டி ” என்று அழைத்தவுடனே.. புன்னகைமுகமாகவே இருவரும் தாத்தா, பாட்டி அப்பா, அம்மாவிடம் ஆசி வாங்கிக் கொண்டனர். பின் அவர்கள் மூவரும் கிளம்ப..
தன்னவளுடன் சாப்பிட அமர்ந்தான் வேந்தன். தான் கொண்டு வந்ததை அவளிடம் கொடுக்க.. ஏன்?.. எதனால்?. என்று கேட்காமலையே சாப்பிட ஆரம்பித்தவளை.. ‘ சோ ஸ்விட் என் முயல்குட்டி ‘ கொஞ்சியபடி புன்னகையுடன் பார்த்திருந்தான். அதனை பார்த்த லட்சுமிக்கு ஒன்றும் புரியவில்லை..
” அத்தம்மா அம்மாவிடம் நான் இங்க அரசியோட சாப்பிட போறேன் சொல்லாம விட்டுவிட்டேன். அவங்க நான் வீட்டில் இருப்போனு நினைத்து நிறைய விதமான சாப்பாடு செய்துட்டாங்க. எல்லாமே என்னால சாப்பிட முடியல அதான் அரசிக்கு எடுத்துட்டு வந்தேன். ” புன்னகையுடன் சரி என தலையசைத்து.. வேந்தனிற்கு இடியாப்பம், வெஜ் குரும்மாவை வைத்தார்.
சில நிமிடத்திலே இருவரும் வேந்தனுடைய காரில் பிரதாம்பாள் கோயில் வந்தடைந்தனர். ஒருமாதத்திற்கு பிறகு தன்னவளுடன் வருகிறான். தன்னவனை நினைத்து அரசி சென்ற ஒருமாதத்தில் அந்த ஐந்து நாட்கள் தவிர மற்ற எல்லாம் நாளும் வந்தாள்.