” அப்பா என்ன விஷயமா.. வர சொன்னீங்க?.. ”
” வேந்தா கல்யாணம் மண்டபம், சாப்பாடு முடிவு பண்ணியிருக்கு. அதை பார்த்துட்டு ஓகேயானு சொன்னா.. புக் செய்திடலாம். அலங்காரம் மட்டும் உங்களுக்கு பிடித்தா முடிவு செய்து இரண்டுநாளில் சொல்லுங்க. நம்ம கல்யாணம் முறை உனக்கு தெரியும்.. அது இல்லாம வேறு ஏதாவது வேண்டும் என்றாலும் சொல்லுங்க. அதன்பிறகு எல்லாம் இறுதியா முடிவு செய்து பத்திரிக்கை பார்த்து கொடுக்க முடியும்.
பிறகு இனிபகத்திற்கு எத்தனை பேர்?. எப்படி அழைத்து?. அதையும் ஒரு வாரத்தில் முடிவு செய்திட்டு சொல்லு. அப்பதான் இனிப்பகத்திற்கு, கல்யாணத்திற்கு என்று.. சரியான ஆள்போட்டு.. டென்ஷன் இல்லாம எல்லாவற்றையும் சரியா செய்ய முடியும். ”
எல்லாவற்றையும் தலையசைப்புடன் கேட்டவன்.. ” சரிங்க அப்பா. நாங்க பார்த்து சொல்றோம். ”
” ம்.. சரிப்பா. நான் தூங்க போறேன். ” இருவரும் தலையசைக்க..
கமலேஷ், வேந்தனும் தோட்டத்திற்கு வந்தனர். ” கமல் நீ வசு மீது ஏதும் வருத்தமா இருக்கியா?.. ”
” வருத்தம் இல்ல மச்சான். ஆனா கொஞ்சம் கவலையா இருக்கு. உங்க உறுதிக்கு பிறகு.. அவ எது சொன்னாலும் சரினும், உடனே நடக்கனும் மாதிரி நினைக்கிறா. முன்னாடி இதுமாதிரி தான் இருந்தா.. ஆனா வெளிய தெரியாது இல்ல.. அதுக்குள்ள அவ கேட்பது உடனே கிடைத்து விடுவதால் நமக்கு தெரியலைனு நினைக்கிறேன். ஆனா இப்ப நீயும், எழிலரசி மறுத்து சொன்னது, அதன் பிறகு கார்த்திக் அண்ணா முதற்கொண்டு நீ கேட்பது எல்லாம் கிடைக்காது, நடக்காதுனு.. அவளுக்கு கொஞ்சம் அட்வைஸ் பண்ணினாங்க. ஆனா அது எதுவும் மனதில் ஏற்றுக்கொண்ட மாதிரி தெரியல. ”
” இப்பவே நாம்ம இப்படியெல்லாம் இருக்கனும், இதெல்லாம் வேண்டுனு தினமும் ஒன்னு சொன்னா. சரி இதெல்லாம் எல்லோர்க்கும் இருக்க எண்ணம்தானு நானும் அப்ப சாதாரணமா கேட்டேன். ஆனா அப்ப அவ சொன்னதில் தனக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கனும், தனக்கு செய்வதை விட அதிகம் செய்யக்கூடாது, தனக்கு பிறகு தான் மற்றவர்களுக்கு, தன்னுடையது தான் பெஸ்டா இருக்கனும் சொன்னா. “
” நேற்று கூட தாரா.. எழில ரொம்ப வாட்ச் பண்ணிடே இருந்தா.. கூடவே நந்தினி வேற அது என்ன?. இது உனக்கு தெரியுமானு அவள கேள்வி மேல கேள்வி.. இதுக்கு நடுவுல அத்தை கூட ரொம்ப நேரமா இரண்டு பேரும் பேசினாங்க. இப்ப அவ பேசினதில் கூட நீ எழிலரசிக்கு முக்கியதுவம் கொடுப்பதால் தான் சாதாரணமா தூங்கியதை.. பெரிய விஷயமா பேசி எழில் பற்றி குறையாவும், பொறுப்பே இல்லாம நடந்துக் கொள்றாங்கனு நம்ம கிட்ட சொல்லுறா. அத்தகூட அமைதியா இருக்காங்க. ”
” நேற்றிலிருந்து பேசுவது, நடந்துக் கொள்வதை பார்த்தா.. இப்ப அவ கேட்பது நடக்கல அப்படினா எந்த எல்லைக்கும் போவாளோனு.. எனக்கு கொஞ்சம் கவலை, பயமா கூட இருக்கு. அதான் வசுவிடம் இனி நாம்ம கவனமா பார்த்து நடந்துக்கொள்ள வேண்டும்.. இல்ல நாம்ம எதையும் சமாளிக்க தயாரா இருக்கனும். ”
” ம்.. நானும் சிலது கவனிச்சேன். இத்தனை நாளா நாம்ம அதிக செல்லமும், எதையும் கேட்டவுடன் அதிகம் அவளிடம் கேள்வி கேட்காம செய்தும், வாங்கியும் கொடுத்ததால அவ இப்படி நடந்துக்குறா.
அவ செய்யறத செய்யட்டும், பேசறத பேசட்டும். அவ குறையே, குற்றச்சாட்டே வைத்தாலும் பரவாயில்ல. வெளிய சொல்லட்டும். இவற்றையெல்லாம் வசு மனசுலே வைத்துயிருந்தால் அவ உடம்புதான் பாதிக்கும். அதுகூடவே அவ சொன்னாதான் நமக்கு.. நம்ம தப்பும் புரியும், அவளை நாம்ம சரியான வழிக்கு கொண்டு வரவும் முடியும். நாம்ம எதுக்கும் தயார இருப்போம். நீ ரொம்ப போட்டு குழப்பிக்காத. சரியா. நேரம் ஆச்சு நீ கிளம்பு. ” தலையசைப்புடன் வீட்டிற்கு கிளம்பினான்.
அவனையே பார்த்திருந்தவன்.. கமலேஷிற்கு அவன் பதில் அளித்தாலும் மனதில் சஞ்சலம் இருக்கதான் செய்தது. இப்போதிருக்கும் மனநிலையில் தன்னவளின் இறுக்கிஅணைப்பு தேவையாக இருந்தது. மணியை பார்த்தான் 10.30 அவள் உறங்கியிருப்பாள். உள்ளே செல்ல மனம் இல்லாமல் தன் அரசிக்கு பிடித்த மலர்களின் அருகில் நின்று பார்த்தபடி சில நிமிடங்கள் இருந்து விட்டு வீட்டின் கதவை தாள்போட்டு தன் அறைக்கு சென்றான்.
பகலவன் தன் ஆதிக்கத்தை தொடங்கிய நேரம்.. வேந்தன் வீட்டின் அழைப்புமணி ஓசை கேட்க..
ஹாலில் அமர்ந்துயிருந்த வசுந்தரா யார் இந்நேரத்தில்?.. என்று எண்ணியவாறு வாசலை நோக்கி சென்றாள். அங்கு இரண்டு பாக்ஸை கையில் வைத்தபடி ஒருவர் நின்றிருந்தார்.
அவள் வருவதை பார்த்தவர்.. ” இங்க வேந்தன் என்பவருக்கு கொரியர் ம்மா. அவர் இருக்காறா?. ”
அண்ணாவுக்கு இவ்வளவு காலையில் கொரியரா?. ” அவர் தூங்கிக் கொண்டு இருந்தாலும் இருப்பார். நான் அவர் தங்கைதான் என்னிடம் கொடுங்க. ” அவள் கையை நீட்ட.
” இல்லம்மா கண்டிப்பா அவர்கிட்ட தான் கொடுக்கனும் சொல்லி தான் அனுப்பினாங்க. நீங்க அவரையே கூப்பிடுங்களே. ” அவர் கூறும் போதே.. அழைப்பு மணி கேட்டு ஹாலில் யாரும் இல்லை என நினைத்து.. அங்கு பார்க்க வந்த சித்ராவும் இதனை கேட்ட..
” வசும்மா போய் அண்ணாவ கூப்பிட்டு வா. ”
இல்லை.. என்ற தலையசைப்புடன்.. அழைப்பு மணியை 3 முறை நன்றாக அழுத்தினாள். ரவிந்திரன் உணவகத்திற்கு சென்றதால் வந்த தைரியம்.
ஓசை கேட்ட வேந்தனோ யார்?. என மேல்மாடியில் இருந்து வாசலை பார்த்தான். கையில் பாக்ஸ்வுடன் ஒருவர்..
” அம்மா கொரியரா?.. ” சித்ரா ‘ ஆம் ‘ என தலையசைக்க..
புன்னகை முகமாக அங்கு வந்து.. கையெழுத்திட்டு வாங்கியவன்.. சீக்கிரமாக கொண்டுவதற்கு நன்றி தெரிவித்து.. ஒருநிமிடம் என்று கூறியவன் தங்களின் உணவகத்தின் கார்டில் தன் பெயரும், போன் எண்ணை எழுதி ஏதேனும் உதவியோ, தேவையோ எனில் தன்னிடம் கேட்கலாம், பார்க்கலாம்.. என்று புன்னகையுடன் கூறி அனுப்பினான்.
வேந்தன் நேராக அறைக்கு செல்ல.. இருவரும் அவனின் செயலில் திகைப்புடன் பார்த்தனர். அறைக்கு சென்றவன் சில நிமிடங்களிலேயே கிளம்பி வந்தான். கீழே யாரும் இல்லை.. அம்மாவை அறையில் பார்க்க குளிக்கும் அறையில் இருந்து சத்தம் வர.. சிறு குறிப்பு எழுதி டைனிங் டேபிள் மீது வைத்தும், அவர் பார்க்க தவறினால் என்று வசுவிற்கு மெசேஜ் செய்துவிட்டு கதவை சாற்றி அவன் கிளம்பி விட்டான். சில நிமிடங்கள் கழித்து இருவரும் ஹாலிற்கு வந்தனர்.
” ம்மா.. அண்ணா வெளிய கிளம்புறேனு மெசேஜ் பண்ணியிருக்காங்க. ”
சித்ரா சரி.. என தலையசைப்புடன் சமையல் அறைக்கு வரும்போது அவரும் குறிப்பை பார்க்க.. ஒரு நிமிடம் அதையே பார்த்திருந்தார். அம்மாவின் நிலைத்த பார்வையை பார்த்தவள் என்னவென்று அருகில் வந்து அவளும் குறிப்பை பார்க்க அவள் முகம் கோபம், ஆற்றாமையை காண்பித்தது.
” ஏன் காலையிலேயே.. அண்ணா அவங்க வீட்டிற்கு போய்யிருங்காங்க.?. ஓ.. ம்மா இப்ப பார்சல் வந்துச்சே.. அதில அவங்க பேர் இருந்துச்சு. சரி அவங்களுக்கு ஏதாவது பரிசுபொருள் இருந்தாலும் இவ்வளவு காலையிலேயோ?.. ”
அவளாகவே கேள்வி, பதில் என பேசிக்கொண்டுயிருக்க.. மகள் கூறுவதை கேட்ட சித்ரா ஒன்றும் கூறாமல் தன் வேலையை பார்க்க சென்றுவிட்டார். ஒன்றும் கூறாமல் சொல்லும் அம்மாவை அவள் புரியாமல் பார்த்தாள்.
தன்னவளின் வீட்டில் தற்போது யாரும் இல்லை என்று சற்றுமுன் அவளிடம் பேசும் போது அறிந்தான். அது தெரிந்த சில நிமிடத்தில் பார்சல் வர.. இன்பா மில்லில் இருப்பதால் தான் வீட்டிற்கு செல்கிறேன் என அவனிற்கு தகவல் அளித்து உடனே கிளம்பிவிட்டான்.
அழுத்தமான அழைப்புமணி ஓசை தொடந்து வந்தது.. ” வரேன்.. வரேன்.. ” வந்து கதவை திறக்க..
‘ அடர்நீளநிற ஜீன்ஸ், பால்நிறம் அதே நிறநூலினால் வேலைபாடு அமைந்த கோடு.. அறைகை சட்டை அணிந்து.. அவளை எப்போதும் மயக்கும் சற்று விரிந்த புன்னகையை வெளிபடுத்தி.. கையில் சிறு பூங்கொத்துடன் நின்றவனை.. தன்னை மறந்து பார்த்து நின்றாள் வேந்தனின் அரசி. ‘
‘ அரசி வாரம் ஒருமுறை அனுப்பும் பூங்கொத்தும், ஒருமாதத்திற்கு சென்னை ஆபிஸ், வீட்டில் அவன் ரெகுலராக பயன்படுத்தும் பொருட்கள் அனுப்பியது தான் காலை பார்சலில் வந்தது. அந்த பூங்கொத்தில் சரிபாதியை எடுத்து.. தன் சரிபாதியின் முன் நின்றான். ‘
” ஓய் முயல்குட்டி.. இதை வாங்கிட்டு வீட்டுக்குள்ள விடுவியா?.. இல்ல இப்படியோ இங்க நின்னே மாமாவ சைட் அடிச்சுட்டு.. அப்படியே திருப்பி அனுப்ப போறியா?. ” வாய் கேள்வி கேட்க.. அன்னிச்சையாக கண்கள் தன்னவளை தலைமுதல் கால்நுனி வரை பார்க்க ஆரம்பித்து முடித்திருந்தது. ‘ தப்பான நேரத்தில் வந்திட்டியே வேந்தா. ம்.. இப்படி வந்து நிக்கிறா. மாட்டின நீ. ‘
கருப்புகலர் ரவுண்டுநெக் டீசெட், அடர்பச்சைநிற முழுநீள பாவாடையும் அணிந்து, அனைத்து கூந்தலையும் தூக்கி கிளிப்பில் அடக்கி இருக்க.. அப்போது தான் குளித்திருக்கிறாள்.. அவள் முன்நெற்றியில், பின் கழுத்தில் சில முடிகள் மட்டும் அதுவும் தண்ணீர் மின்னிய முடிகள். கழுத்தில் மெல்லிய செயின் மட்டுமே. யாரும் பார்ப்பதற்கு ஒன்றும் தெரியாதுதான். ஆனால் அவளவனை மயக்கியதே!. அவளின் மேல் வந்த வாசனை, பளிச்சென்று மின்னிய முகம், ஈர உதடு, உடை அவனின் பார்வை சட்டென்று மாறி மையலுடன் பார்க்க வைத்தது.
தன்னவனின் பார்வையின் மாற்றம் தெரிந்த பின் அவள் சுதாரித்தாள். அவனின் கையில் இருந்த ‘ மஞ்சள், இளம்சிவப்புநிற ரோஜாவை சுற்றி சில பச்சைஇலைகள் அடங்கிய பூங்கொத்து ‘ வாங்கி அதன் அழகை ரசித்தவள்.. அவனை கண்டுக்கொள்ளாமல் இருந்த அந்த ஒருநிமிடத்தில்..
அவளவன் சத்தமில்லாமல் கதவை சாற்றி கதவின் மேல் சாய்ந்து கள்ளப்புன்னகையுடன் அவளை பார்த்து நின்றான். அவள் நிமிர அவனின் சிரிப்பில் தன்னை பார்த்தவள் அவனின் முன் நேரடியாக முதல்முறையாக இவ்வாறு இருக்க.. அவள் நாணி ஓட நினைத்தவளின் கையை பற்றி இழுத்து தன்மீது சாய்த்து அவளின் இடையை இறுக்க பற்றிக்கொண்டான்.
தன்னவளின் கழுத்துவளைவில் முகம் புதைக்க தோன்றிய மனதை கட்டுப்படுத்தி அவளின் கன்னத்தில், இதழில் மென்முத்தமிட்டு.. நெற்றி முட்டி நின்றான்.
” ஐந்தாவது வாரமாஅனுப்பியிருக்க.. ஓவ்வொரு வாரமும் பூங்கொத்த பார்த்தவுடன் உன்னைய இறுக்கிஅணைக்க தோனும். அதான் இந்தவாரம் இப்பதான் வந்தது உடனே வந்துடேன். ஐ லவ் யூ முயல்குட்டி “ அழுத்தமாக இறுக்கி அணைத்தவன்.. அவளும் தன்னவனின் உணர்வுகளை ஏற்று அவனின் கன்னத்தை கொஞ்சி, கிள்ளி, அழுத்த இதழ் முத்தம் பதித்து அவனின் அணைப்பில் இருந்தாள். பூங்கொத்து ஆபிஸ் போய்…பின் அனு இல்ல யாராவது இங்குயிருக்கும் முகவரி கொடுத்து வந்துயிருக்கும் என நினைத்தாள்.
சில நொடிகளில் ” ஏன்டி.. யார் வந்துயிருந்தாளும்.. இப்படியே தான்.. கதவ திறந்துயிருப்பியா?.. ”
அவனை முறைத்தவள்.. ” ஆமாம்.. இப்படி விடாம பெல் அடித்தா.. என்ன பண்ணுவேனாமா?.. யாரும் வீட்டில இல்லனு தெரியும்தானே. இப்படியா அடிப்பாங்க?. சத்தம் கேட்டு நான் பயந்தே போய்டேன். ”
” சாரிடி. என் முயல்குட்டி பயந்துபோச்சா!. ” அவள் கண்களில் முத்தமிட்டவன்..
” இனி இப்படி.. யாரும் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ரூம்விட்டு வெளியே வரக்கூடாது. “
ஏன்?. என்பது போல பார்க்க.. அவளின் புருவத்தில் இருந்த நீரை கைவிரலால் நீவி எடுத்து சுண்டிவிட்டு.. ” என் முயல்குட்டி இப்படி நீர்வடிய என் முன்னாடி மட்டும் தான் இருக்கனும். ”
அவனை பாவமாக பார்த்து.. ” அப்ப என்னைய அருவி, மழையில் நனைய விட மாட்டிங்களா?. “
புன்னகையுடன்.. ” விடுவேனா. ஆனா நீ எவ்வளவு நேரம் இருக்க வேண்டும் ஆசைபடுறியோ.. அவ்வளவு நேரமும் நானும் கூடவே இருப்பேன். ”
ஏன்?. ஏன்டா?. லுக்விட.. ” எல்லாம் அப்படிதான். ஒன்னு ஒன்னும் உனக்கு இப்ப விளக்கம் கொடுக்க முடியாது. உனக்கு விளக்கம் வேண்டுனா நீ ஞாபகம் வைத்திருந்து கல்யாணத்திற்கு பிறகு கேளு.. அப்ப நான் ரொம்பவே விரிவா பதில் சொல்லுறேன். ” நெற்றி முட்டி கூற.. அவள் புரியாமல் முழிக்க.. அவள் காதில் மெதுவாக.. மெல்லிய குரலில்.. ” ஏன் முயல்குட்டி நான் இதுமாதிரி நீர்வடிய யார் முன்னாடி நின்னா உனக்கு பிடிக்கும்மா?.. ”
பொறுமையாக கேட்டவள் தன்னவனை கற்பனையில்.. மின்சார பாய்ந்து உடல் சிலிர்த்து.. அந்நிலையில் மற்றவர் முன்.. ” பிச்சுவிடுவேன் உங்கள. ” அவன் கன்னத்தை அழுத்தமாக கிள்ளி சொல்ல.
” ஆஆ.. முயல்குட்டி. நான் சொன்னதுக்கே கன்னத்த கிள்ளுற. இப்படி வந்து நிக்குற உன்னய நான் என்ன பண்ண?. ” கன்னத்தை தடவியபடி கூற..
” ம்.. இதை ஞாபகம் வைத்து கல்யாணத்திற்கு பிறகு கேளு தனுமாமா. அப்ப நானும் ரொம்பவே விரிவா பதில் சொல்லுறேன். ” மீசையை பிடித்திழுத்து கூறி..
தன்னவன் ” ஆஆ.. ” திறத்த வாயை கை வைத்து முடி.. கன்னத்தில் அழுத்த முத்தமிட்டு கண்ணடித்து.. மாடிபடி நோக்கி ஒடியபடி.. ” 15 நிமிடத்தில் வரேன் தனு ” கூறி ஒடிவிட்டாள்.
அரசியின் வேந்தன்.. தன்னவளின் செயலால் சிலநொடிகள் ‘ என்ன பண்ணினா!.. ‘ சிலையென நின்றான்.. அதன்பின் சிலை நிகழ்காலம் உணர்ந்து.. தலை இடவலமாக ஆட்டி முடியை கோதியபடி.. அவளின் வார்த்தை மற்றும் செயலை மீண்டும் நினைத்து புன்னகையுடன் ” கேடி முயல்குட்டி!. ” கூறியபடி ஷோபாவில் அமர்ந்தான்.
மாடிக்கு சென்றவள் உணவகம் சொல்வதற்கு ஏற்றவாறு.. ‘ அடர்பச்சை மற்றும் நாவல்பழநிற காட்டன் சுடி ‘ அணிந்து கிளம்பி வர..
வேந்தனோ காலை உணவிற்காக எடுத்து வைத்திருந்ததில் இருந்து தன்னவளிற்கு பிடித்த முட்டை தோசை ஊற்றிக் கொண்டுயிருந்தான். அரசியை மேடையில் அமர வைத்தவன்.. புன்னகையுடன் தோசை மற்றும்.. அத்தம்மா வைத்திருந்த புதினா சட்னியுடன் கொடுக்க.. அதை அவனுக்கு ஊட்டி, அவளும் சாப்பிட்டு முடித்தாள். பின் வேந்தன் அரசியை உணவகத்தில்.. சிலபல அறிவுரை கூறி இறக்கிவிட்டு.. தன் வீட்டிற்கு சென்றான்.
சற்றுமுன் சமையல்அறையில் எடுத்த தன்னவளின் புகைபடத்தை பார்த்தபடி முற்றத்தில் அமரலாம் என நினைத்து அதன் அருகில் நிற்க..
” வேந்தா சாப்பிட வாப்பா. ” சட்டென்று கேட்ட குரலில் ஒரு நொடி அதிர்ந்து..
” இப்பதான் சாப்பிட ஆரம்பித்திங்களா?.. ” ஆம் என தலையசைக்க.. ” நீங்க சாப்பிட ஆரம்பிங்க.. 2நிமிடம். ”
அவன் கீரின் டீ கப்புடன் அப்பாவின் அருகில் அமர.. என்னடா இது?.. என்பது போல ரவிந்திரன் பார்க்க.. ” ப்பா.. நான் அரசிய உணவகத்திற்கு விடப்போனேன்.. அரசி சாப்பிட்டப்ப நானும் சாப்பிட்டேன். ”
பெண்கள் இருவரும் ஓஓஓ.. என்பது போல ஒரு நக்கலாக பார்க்க.. அவன் கவனித்தும் கவனிக்காவது போல இருந்தான்.
” ஏன் இவ்வளவு சீக்கிரமா?. ”
” அதுப்பா.. அரசி, இன்பா தவிர எல்லாம்.. அவங்க ஊரில் அத்தம்மா சொந்தகாரங்களுக்கு உடம்பு முடியலைனு பார்க்க போயி இருக்காங்களா. இன்பாவும் மில்லில் இருக்கான். தனியா இருக்கனும் என்று அரசி உணவகத்திற்கு கிளம்புறேன் சொன்னா. அதான். ” சரி என தலையசைத்தார்.
மேலும் சிலநிமிடங்கள் இருவர் மட்டும் தான் பேசினார்கள் அம்மா, மகள் சாப்பிட மட்டும் செய்தார்கள் அவர்களின் பேச்சில் பங்கு பெறவில்லை.. பேசினால் இரவு பேசியதில் ஏதாவது வரும் என அவர்களும் கேட்வும் இல்லை. அதன்பின் அவரவர் வேலையை பார்க்க சென்று விட்டார்கள்.
ஆதவனோ நேற்றைய குளிர்ந்த வானிலைக்கு மாறாக நேற்றைய வேலையை இன்று சேர்ந்து செய்தார் போல் வெயிலின் தாக்கம் வெளியிலும்.. உள்ளே காலையில் வந்தது முதல் தான் நினைத்தை கூறி.. அதனை ஒவ்வொன்றாக செய்ய ஆரம்பித்திருந்தாள். எல்லாவற்றையும் செய்து முடித்தோமா?. என குறிப்பு எடுத்ததை பார்த்திருந்த படியே தலையில் கைவைத்துஅமர்ந்துயிருந்தாள் எழிலரசி.
” ஹேய் எழில் “ வேகமாக கதவை திறந்து.. அவளை அழைத்தபடி அறையில் உள்நுழைந்தவர்கள்.. அழைப்பு குரலில் திடுக்கிட்டு இறுக்கமாக கண்களை முடியிருந்தவள் மெதுவாக திறந்து..
புன்னகையுடன்.. ” வாங்க யோக அண்ணி, ஆர்த்தி அக்கா, சுரபி அண்ணி. ” அவள் எழுந்து வரவேற்றாள்.
அவர்களும் புன்னகையுடன்… ” ம்.. வரோம் எழில் மேடம். ரொம்ப பெரிய ஆளாகிட்டீங்க. ” கூறியபடி.. யோக அறையை கூர்மையாக பார்க்க..
ஏனோ அவர்களின் பார்வையில் காவ்யா பார்த்ததை போன்றுயிருந்ததால்.. அவளின் மனம் வருந்தி.. ஏன் இப்படி?. கண்கள் கலங்கும் நிலைக்கு போகும் வேலையில்.. அவர்களின் வார்த்தையில் மகிழ்ச்சி அடைந்தது.
” எழில்.. வேந்தன் உனக்கு பொறுப்பு கொடுத்ததில் ரொம்ப சந்தோஷமா இருக்கு. நேற்றே கால் பண்ணவேண்டும் நினைத்தேன்.. பின்ன நேரில் பார்க்கலாம் என்று இவங்களோட சேர்ந்து கோயில் போய்யிட்டு நேரா இங்க வரோம். ” அவளுக்கு கோயில் விபூதி, குங்குமம் வைத்துவிட்டார்.
நேற்று காவ்யாவின் பார்வையில், அவர் வாழ்த்து கூறாமலே.. வாழ்த்தியாக பொய்யுரைத்ததில்.. வசு உட்பட சிலருக்கு இந்த விஷயம் உவப்பாக இருக்காது என.. முன்பே தெரியும். ஆனால் காவ்யாவை போல தனக்கு தெரியாமல் இன்னும் சிலர் இருப்பார்களோ என மனதின் ஒரத்தில் கவலையிருந்தது.
இவர்கள் மூவரும் தனக்காக கோயில் சென்று வந்தார்கள் என்றதும் இவர்களை போல.. தனக்கு ஒருவர் போதும்.. தன் தனுவுடன் எதையும் செய்யலாம் என அவளின் மனபாரம் அனைத்தும் ஒருநொடியில் குறைந்தது.
” தேங்க்ஸ் அண்ணி ” கூறியவாறே மகிழ்வுடன் மூவரையும் அணைத்து விடுவித்தாள். சந்தோஷமாக அவர்களும் ஏற்றனர்.
” ஏன் எழில் நாங்க வரும்போது அப்படி உட்கார்ந்துயிருந்த ?.. “அவளின் தலை, கழுத்தில் கை வைத்தவாறே ஆர்த்தி கேட்க..
” கொஞ்சம் தலைவலி அண்ணி. அதான் ”
வெளியில் வெயில்.. புதிதான இந்த சூழலலில் தனியாக முதல்நாள் என்பதால் அறையை முடவில்லை. சமையல் அறையில் இருந்து வேற வெப்பம் அனைத்தும் சேர்ந்து தலைவலி வந்துவிட கண்களை மூடி அமர்ந்திருந்தாள்.
” ஓ.. நான் கூட நினைத்தேன் நேற்று மாதிரி.. இன்னைக்கு அண்ணா கூட இல்லாததால் வருத்தப்பட்டு உட்கார்ந்து இருந்தியோனு. ” புன்னகையுடன் சுரபி கூற..
அவளிற்கு அதுவும் காரணம்தான். ஆனால் எந்நாளும் தனு.. தன் கூடவே இருக்கமுடியாது என.. அதிகம் அதை பற்றி நினைக்கவில்லை.
புன்னகையுடன்.. ” அப்படியெல்லாம் இல்ல அண்ணி.. ம் அப்படியே நான் வருத்தப்பட்ட அடுத்த ஐந்தாவது நிமிடம் தனு இங்க இருப்பாங்க. நான் எதுக்கு கவலைபட போறேன். ”
” அப்படியா.. அண்ணா நீ நினைத்தா 5வது நிமிடம் இங்க இருப்பாங்களா?.. ” ஏதோ தைரியத்தில் ஆம் என தலையசைக்க.. ” அப்படினா இப்ப நீ நினைக்கிற.. அண்ணா வராங்களானு பார்ப்போம். ”
என்ன நினைக்க வேண்டுமா?.! விழித்தவள்.. ” அண்ணி நானா நினைக்கனும் அப்பதான் நடக்கும். நீங்க சொல்லியெல்லாம் நினைச்சா எப்படி நடக்கும்?. என்னலா முடியாது. ”
புன்னகையுடன்.. ” சந்தோஷமா நினைத்து பாரு. உன் தலைவலி சீக்கிரம் போனால் போகும். ” சிறுபெண்போல அதையும் ‘அப்படியா?. ‘ என நம்பி தலையசைத்து கேட்க..
சுரபியும் புன்னகையை கட்டுப்படுத்தி ‘ ஆம் ‘ தலையசைக்க. கண்களை மூடி தன்னவனை நினைத்த அடுத்த நிமிடம்.. ” அரசி ” அழைப்புடன் உள் நுழைந்தான் அவளின் தனுவாகிய வேந்தன்.
உள்நுழைந்தவனை மூவர் அதிர்ச்சியுடன் பார்க்க.. ஒருத்தி ஆனந்ததுடன் தன்னவனின் அருகில் சென்று கைகைய பிடித்துக்கொண்டு.. ‘ எப்படி!.. ‘ கண்களால் கேட்க.. மூவரும் சிரிப்புடன் பார்த்தனர். அவர்களுக்கு அவன் வருவது தெரியும் ஆனால் தாங்கள் கூறும்போது சரியாக வந்தால் தான்.. அந்த அதிர்ச்சி.
வேந்தன் இவர்கள் மூவரை எதிர்பார்க்காதது, அவர்களின் கண் பாஷைகள் புரியாமல் தன் கையை பிடித்திருந்தவளை பார்த்தான்.. ” என்ன இங்க நடக்குது சொன்னா.. நானும் கண்ணாலே உங்களிடம் பேசுவேன். ” சிரிப்புடன் கேட்க..
” அதுவந்து.. ” அவள் கூற வரும்வேலை.. அவள் கையை வாயில் பிடித்தபடி பாத்ரூம் நோக்கி ஓடினாள்.