எழிலரசி மனம் முழுவதும் தெளிந்து இருப்பதை பார்த்த.. அவள் வேந்தனின் மனம் நிறைவாக இருந்தது. அதன் பிரதிபலிப்பு இருவரின் முகத்திலும் புன்னகையிலும் தெரிந்தது. அரசி காரில் இருந்து இறங்கும் முன் கதவு திறந்து நின்றவன்.. அவளை மறைத்து அவள் உணரமுன் நெற்றியில் மென்பதித்து பின் தன்னவளிற்கு வழிவிட்டு நின்றான்.
‘ இவனை ‘ என வெக்கப்புன்னகையுடன் இறங்கியவள்.. ” தனு ரோட்டில் நிட்டுட்டு என்ன பண்ணுகிறீங்க?. யாராவது மாடியில் இருந்து பார்த்து இருப்பாங்க. ”
” பந்தல் போட்டுயிருக்கு மாடியில் இருப்பங்களுக்கு எப்படி முயல்குட்டி தெரியும்?. ”
பொருட்களை தன்னவளிடம் கொடுத்து விளக்கம் கூறிக் கொண்டுயிருந்தவனின் தோளில் அடிவிழ ‘ எவன்அவன்?. ‘ திரும்ப.. ‘ அய்யோ இவனா?. ‘ அதிர்ந்து பார்க்க..
” மாமா மாடியில் தெரியாது.. ஆனா முன்னாடி இருப்பவர்களுக்கு தெரியுமே. ”
‘ நான் பார்த்த போது முன்னாடி யாரும் இல்லையே?. ‘ யோசனையுடன் சுற்றி பார்க்க.. அதைபார்த்து.. ” மாமா.. நான் வண்டிய பார்த்ததும் உள்ள இருந்து வந்த போது பார்த்தேன். ” வேந்தனை பற்றி ஆரம்பித்திலேயே புரிந்த கொண்ட மச்சான் சந்தரு.
பார்த்தேன் என தைரியமாக சொல்பவனை முறைக்க.. அதனை புரிந்து.. ” மாமா.. நீங்க பண்ண மற்ற வைக்கு இதெல்லாம் சின்ன விஷயம். உள்ள வாங்க.. எல்லாம் உங்களுங்காக தான் காத்திருக்காங்க. ”
காத்திருக்காங்களா?. ஏன்?. என புரியாமல் இருவரும் இருந்தாலும்.. தன் அரசியை ஒருகையில் பிடித்தும், சீர் பொருட்களை பிடித்தபடி.. மாறிய வண்ண தோற்றத்துடன் இருக்கும் பெரிய வீட்டை பார்த்து.. மகிழ்வுடன் தன்னவளுடன் உள்ளே செல்ல.. எழிலரசியும் தன் முதல் புகுந்த வீட்டிற்கு கல்யாண பெண்ணிற்கே உண்டான பொலிவு முகத்துடன் தன் தனு உடன் வந்தாள்.
வீட்டில் இருந்தவர்களும் இருவரின் முகத்தில் தெரிந்த கல்யாண கலையை பார்த்து ரசித்து புன்னகையுடன் வரவேற்க.. அவர்களும் பதில் புன்னகையுடன் பொருட்களை அறையில் வைத்துவிட்டு..
புதிதாக உருவாகியிருந்த அம்மா,அப்பாவிற்கு ஒரு அறை நடுவில் திக்கான மரதால் தடுப்புசுவர் வைத்து தாத்தா, பாட்டிக்கு ஏற்றார் போல் மறுஅறை ரெடியாகி இருந்தை பார்வை இட்டு வந்தமர்ந்த பின்.. ஜீஸ் கொடுத்ததை ஷோபாவில் அமர்ந்து குடித்தனர்.
வேந்தனின் முன் சித்ரா நகை பெட்டியினை காண்பித்து.. ” என்னடா இது?. ” புரியாமல் அவன் வாங்கி பார்க்க..
அதில் பூ அடுத்து பொட்டு என்ற வடிவதில் இருஅடுக்கு வைர நெக்லஸ் இருந்தது.
மெல்லிய புன்னகையுடன்.. ” நெக்லஸ் தானே. இதுக்கு என்ன இப்போ?. ”
அவனை அங்குயிருந்த வினோ, விஸ்வநாதன் இன்னும் ஒருசிலர் தவிர.. முறைப்புடன் பார்த்து.. அதில் சித்ராவே.. ” அது தெரியாதா.. இது போலவே பத்து வந்துயிருக்கு. ”
அது பற்றி தெரியாமல் தன்னவளை பார்க்க.. ” தனு நான் பெரியவங்களுக்காக ஆடர் பண்ணியது.. நாம்ம வீட்டில் இருந்து கிளம்பிய பின் யாரும் இல்லைனு.. இங்க கொடுக்க சொல்லி ரோஹித் சொல்லியிருக்காரு. அவருக்கே இங்க வந்த பின்னாடி தான் சொல்லியிருக்காங்க. இதை பார்த்தபின் தான் நான் போனில் வந்துயிருக்கும் மெசேஜ் பார்த்தேன். ”
புன்னகையுடன்… ” நீ தானே பண்ண.. நீயே சமாளி. ”
அவனை முறைத்து.. முன் இருந்தவர்களை பார்க்க.. ‘ உன் வேலை தானா?. ‘ என்ற பார்வையை அனைவரும் கொடுத்தனர்.
அனைவரையும் புன்னகையுடன் பார்த்து.. ” ம்.. நான் தான் நீங்க, அம்மா, சித்தி, அத்தைங்க எல்லாம் எங்களுக்கு வாங்கிட்டு.. நேரம் இல்லாததால உங்களுக்கு வாங்கியிருக்க மாட்டிங்கனு.. பெரியவங்களுக்காக ஒரேமாதிரி ஆடர் பண்ணினேன். “
” நீங்க மட்டும் யாரையும் கேட்காம.. நீங்களா உங்க இஷ்டத்திற்கு எல்லாம் செய்வீங்களா?. ” கோபத்துடன் வசுந்தரா கேட்டபடி அருகில் வந்து.. ” ஏன் இதை வாங்கி கொடுக்க அவங்கஅவங்களுக்கு பசங்க இல்லையா?. இல்ல உங்கிட்ட அதிக பணம் இருக்குனு எல்லோர் முன்னமும் அவங்களை அவமானம் படுத்துத்துறீங்களா?. ”
ஒரு நொடி அதிர்ந்து தன்னவனை பார்க்க.. அவனும் தங்கையின் பேச்சில் அதிர்ந்து.. தன்னவள் தன்னனை பார்ப்பதை உணர்ந்து.. ‘ சமாளி முயல்குட்டி ‘ என்று கையில் அழுத்தம் கொடுத்தான்.
அவளும் பதில் சொல்ல வசுந்தராவை பார்க்க.. பதில் பேச ஆரம்பிக்கும் போது.. ” எழிலரசி நீ எந்த பதிலும் வசுந்தராவிற்கு கொடுக்க தேவையில்ல. ” அனைவரின் பின்னால் இருந்து இருவரின் பதில் வந்தது.
அப்போது தான் ராகவன், கணேஷ் வீட்டினர் தன் மகன், மகள் குடும்பமாக.. வசுந்தராவுடன் சேர்த்து.. அவர்களின் பாட்டி, அம்மாச்சி வீட்டில் இருந்து அழைத்து செல்லாம் என முடிவெடுத்து இருப்பாதால்.. அவர்களுடன் அருணாச்சலம், ஈஸ்வர், ஆர்த்தி, அருட்செல்வம், சுந்தர்ராஜன் அனைவரும் உள்ளே வரும்போதே வசுந்தராவின் கோபமான வார்த்தைகள் தான் கேட்டது.
அனைவரும் திரும்பி.. வந்தவர்களை பார்த்ததும் உட்கார்ந்து இருப்பர்கள் எழ.. இருகுரல்களுக்கு சொந்தமான அருட்செல்வம், கமலேஷ் கலக்கங்களை மறைத்து தன்னவனின் மிக அருகில் நின்ற எழிலரசியிடம் வந்தனர்.
அருட்செல்வம் எழிலரசியின் தலைதடவி ‘ நான் பார்த்துக் கொள்கிறேன். ‘ என கண்களால் தெரிவித்தான்.
” வசுந்தரா ஒருந்தவங்க பேசுவது.. எதையும் முழுசா கேட்வே மாட்டிங்களா?. “
வீட்டில் உள்ளவர்கள் நகையை பார்த்தும் ‘ ஏன் வேந்தன் தேவையில்லாமல் செய்கிறான்?. ‘ தான் கடைசியில் கூறியது போலதானே காவ்யா, அவர் அம்மா பேசினார்கள்.. அதற்கு மறுப்பு யாரும் தெரிவித்தது போல் இல்லையே என்பதாலும்..
எழிலரசி ஆடர் செய்தது என்று சொன்னதும்.. மெஹந்தி போடுவதற்கு யாரையும் கேட்டாமல் செய்தோம் என்று நக்கல பேசியவர்.. பல லட்சங்கள் மதிப்பு உடையதை வாங்கியதை பொறுக்க முடியாமல்.. இதனை வேந்தன் யாரும் இதை கேட்கமாட்டார்கள் என அவள் கேட்டாள்.
இவர்களை.. இவரின் கேள்வியை எதிர்பார்க்காதவள்.. அம்மாவின் அருகில் சென்று நின்றுக்கொண்டு.. ” நான் தான் ஆடர் செய்தேன் என்று.. அவங்க சொன்னதை கேட்ட பிறகு தான் கேள்வி கேட்டேன். அதுகூடவே நாங்க அவங்க நகை வாங்கும் போது கூட இருந்தோம்… அப்ப எங்களோட இருந்த யாரும் அம்மாக்கு என்று நகை வாங்களனு உறுதியா தெரிந்ததால கேட்டேன். ” தைரியமாக கேட்டேன் என்ற பார்வை எழிலரசியின் மீது செலுத்திவிட்டு.. வீட்டில் உள்ளவர்களை பார்த்தாள். ஆனால் அவர்களில் ஒரு சிலரின் பார்வையை கவனிக்க தவறினால்.
அவளின் பார்வையை புரிந்த செல்வம்.. ” ம்.. ஆடர் செய்து எழில் தான். யாரும் அங்க வாங்கவில்லை தான். அதற்காக வாங்கவே முடியாது என்று கிடையாது. ” பெண்கள் அனைவருமே புரியாமல் பார்க்க..
அதை புரிந்த கமலேஷ்.. செல்வத்தை கைபிடிக்க.. அந்த இடத்தில் இருந்த நபரே சொன்னால் சரியாக இருக்கும் என்று அமைதியானார்.
” தாரா.. எழிலரசி சொன்னமாதிரி நினைத்து.. கல்யாண நடக்கபோற வீட்டில் இருப்பவங்க எல்லோரும் ஒரே மாதிரி போட்டா நல்லா இருக்கும் என அம்மா ,அத்தை இப்படி பெரியவங்க அதன்பிறகு பெண்ணுங்களும் மாற்றி போடுவதற்கு ஏற்றார் போல நகையை பார்த்து ஆடர் மட்டும்தான் செய்தாங்க.
செய்தவுடன் பசங்க எல்லோருக்கும் நகையோட படம் மற்ற ட்டைலஸ்.. எழிலரசி ஏன்?. என்ற ரிசனையும் அனுப்பி.. சந்தோஷ் போன் அனுப்பியதோட அவங்க வேலை முடிந்தது. பின்ன நாங்க எல்லாம் நீங்க பார்த்த நேரத்தில் அண்ணா, மாமாவிடம் மெசேஜ் மூலமா கலந்து பேசி ஒன்னா சேர்த்து காசு கொடுத்தது வாங்கியது. “
” மாப்பிள்ளை இதை எங்க கிட்ட சொல்லியிருக்கலாம். ” சடங்கமும், வருத்தமுமாக வசுவிற்கு பதிலாக.. ஆண்களின் அடங்கபட்ட கோபத்தை பார்த்து சித்ரா முந்திக்கொண்டு வேகமாக கேட்க..
அவரையும் விட வேகமாக.. ” ம்.. இப்படியெல்லாம் உங்க பொண்ணு.. உங்க வீட்டு மருமகளா வரபோற.. எங்க குட்டிம்மாவ இப்படி நடுஹாலில் வைத்து கேட்பானு தெரிந்துயிருந்தா.. போஸ்டர் அடித்தே ஒட்டியிருப்போம். ” என்றும் கோபபடாத தன் கணவனின் அருகில் இருந்த ஆர்த்தி தன்கோபத்தை அடங்கி.. அவனையும் கட்டுபடுத்த..
வசுந்தராவை பார்த்து.. ” ஏன் வசுந்தரா உன் வருங்கால புருஷனுக்கு அவமானம் என்று உன் அண்ணாவின் வருங்கால மனைவினு கொஞ்சமும் யோசிக்காம கேட்ட நீ..
உனக்குனு அவர் வாங்கும்போது ஒரு வார்த்தைக்காவது நீயும்… உன் கூட இருந்த பொண்ணுக.. யாருக்காக பேசுரியோ.. அந்த பசங்க யாராவது அவங்க அவங்க அம்மா, அத்தைக்கு நகை வாங்கவது பற்றி பேசினீங்களா. ”
மணமகன், மகளாக அங்குயிருக்கும் மூன்றும் பேரையும் பார்த்து கேட்க. ‘ இல்லை ‘ என தலையசைக்க..
” பின்ன எந்த தைரியத்தில் வசுந்தரா.. எழிலரசிய கேள்வி கேட்ட?. எழில் நினைத்துபோல மற்ற வேலையில் நாங்களும் யோசிக்கல.. உங்க கூட இருந்தவங்களும் யோசிக்காத போது.. அந்த பசங்க எல்லாம் அவமானம் பட்டாலும் தப்பு இல்ல. “
சித்ராவிடம் திரும்பியவன்.. ” சித்தி வேந்தன் மாதிரி நாங்களும் எழிலரசி விரும்பி எதையும் வாங்க.. எங்க சார்பா கொடுக்க.. உரிமை கொடுத்து இருக்கோம். ”
தன் குடும்பத்தில் இருப்பவர்களின் சார்பாக அவனும், அங்கு இருந்தவர்களை பார்த்தும் கூற.. கண்ணா தவிர இருந்தவர்கள் மெல்லிய புன்னகை மட்டும் சிந்தி ஆம் என தெரிவிக்கத்தினர் அனைவரையும் பார்த்து..
” எல்லோருக்கும் சொல்லுறேன்.. எழிலரசி எங்கிட்ட பேசமா இருந்துயிருக்கலாம்.. ஆனா அவ நடவடிக்கைய நாங்க பார்த்த வரைக்கும்.. எழிலரசிய வேந்தன் விருப்பி கல்யாணம் செய்ய போவதாக இருந்தாலும்.. இல்லாவிட்டாலும்.. காசு இருந்தாலும், இல்லாவிட்டாலும்.. மற்றவங்க உரிமையில் அவ என்னைக்கும் தலையிடமாட்டா. தலையிட்டா அவங்களோட எந்த அனுமதி இல்லாம.. இல்ல அவங்களால முடியாது எதையும் செய்யமாட்டா. “
வேந்தன் தன்னவளிற்கு தானே எப்போதும் பரிந்து பேசினால்.. அதற்கு விருப்புகிறாய், மனைவிக்கு சப்போட் செய்கிறாய் என தங்கை முதல் அனைவரும் நினைப்பர். ஆனால் இப்போது பிரச்சனைக்கு பதில் சொல்ல வேண்டியவர்களே விளக்கம் கூறி.. சப்போட் செய்தால்தான்.. இனிவரும் காலங்களில் யாரைரும் தன் முயல்குட்டி இப்படி கேட்கும் நிலை வராது என இவ்வளவு நேரம்அமைதியாக இருந்தவன்..
தன்னவளின் சார்பாக அவளை அழகாக புரிந்து வைத்துயிருக்கும் அவளின் அண்ணாவாகிய மாமா செல்வத்தை தோள்அணைத்து “தேங்கஸ் அண்ணா. “
அவனை மென்புன்னகையுடன்.. ” வேந்தன். நீங்க எங்க எழிலரசிக்கு எல்லாம் செய்து.. அவளை நீங்க மனைவியா உங்க வீட்டிற்கு கூட்டுச்செல்லும் போது.. எங்க வீட்டு பொண்ணு மீது கூறும் குற்றசாட்டை.!. வீட்டின் முத்த பிள்ளையா அவற்றை தெளிவுபடுத்தி..
இனி எப்போதும் அவளை யாரும் ஒன்றும் கேட்க கூடாது என்ற இந்த செயல் செய்ததும்.. தன் தங்கை போன்று இருக்கும் வசுந்தராவிற்கு.. இனி யாரையும் கேள்வி கேட்கும்முன்.. எதையும் முழுசா கேட்டமா மற்றவர்களை.. நாம் எந்த சூழ்நிலையிலும் குற்றம்சாட்ட கூடாதுனு கூற வேண்டியதும் என்கடமை.
யார் பேசினா சரியான.. நிரந்திர தீர்வு இருக்கும் என்று என்னைய பேச விட்டு அமைதியா இருந்த.. நீங்க, சித்திப்பா, மாமாக்கு நான் தான் அதுக்கு தேங்கஸ் சொல்லனும். “
அமர்ந்துயிருந்த மற்றவர்களில்.. செல்வம் அருகில் வந்த ராகவன்.. ” ம்.. அது உண்மைதான். நாங்க பேசியிருக்கலாம்.. ஆனா இனி சந்தோஷமோ, வருத்தமோ, சண்டையோ.. நீங்க எல்லாம் தான் ஒருவருக்கொருவர் பேசி தீர்த்துக் கொள்ளனும்.
நாங்க எங்க அப்பா, அம்மா மாதிரி வேடிக்கை மட்டும்தான் பார்ப்போம். ” புன்னகையுடன் தன் தம்பி, மச்சானை பார்த்தபடியே பேசினார்.
அவர்களும் ‘ஆம் ‘ என தலைசைப்புடன் பார்த்துவிட்டு..
எழிலரசியை பார்க்க.. அவள் தன் கோபத்தை ரோஹித், சந்தோஷ், ராகேஷ் மூன்று தம்பிகளை ஐவருக்கும் மட்டுமேயான குரூபில் திட்டி அனுப்பி.. தன்னை நிதானமாகி..
வேந்தனின் கைபிடித்து சாதாரணமாக தான் நின்றாள். அதை படித்த அவளவன்.. ‘ தன் முயல்குட்டிக்கு திட்டவே தெரியல ‘ எனவும்..
மற்றவர்கள் பார்த்து பல பேர்களிடம் திட்டு வாங்கிய அனுபவத்தில் அதனை அழகாக ஏற்று.. அவளை மாற்ற மற்றும் அவர்களின் மனநிலைக்கு ஏற்றவாறு பதில் மற்றும் இமேஜ் அனுப்பினர். அதனை பார்த்த அவளவன் சிரிப்பை அடக்க.. இதை பார்த்த தன்னவளிடம் இருந்து பலகொசுகடிகளை வாங்கினான்.
வசுந்தராவை பார்த்த ரவிந்திரன் அவளும் கோபம், இயலாமையை அடக்கியபடி சாதாரணமாகதான் இருந்தாள். பெருமுச்சு விடுத்து.. ” அண்ணி, சித்ரா எல்லாம் ரெடியா?. சாமி குப்பிட்டு கிளம்ப வேண்டியது தானே.? ”
” ம்.. எல்லாம் ரெடிதான். “ வேந்தனை பார்க்க.. அவனும் புரிந்து கொண்டான்.
ஈஸ்வர், காவ்யா பெரியவீட்டிற்கு பெயிண்டிங், மாற்றம் செய்தது என அந்த வேலைகளை பார்க்க.. சீர் உடைகள், நகைகளை மற்ற பொருட்களை வேந்தன், எழிலரசி வாங்கி வரும் வேலையை ஏற்றனர்.
வசுந்தரா, கமலேஷ், நந்தினிக்கு என்று அண்ணன், தாய்மாமன் சீர் என்று வாங்கியபொருட்களை தன்னவளுடன் வெள்ளி தட்டில் வைத்தான். மற்றவர்கள் உடையது ஏற்கவேயும், சுமதி, ராஜி அத்தை.. யோகாவுடன் வெள்ளி தட்டில் வைத்தனர். இங்கு, தர்ஷினி, அஸ்வின் வீட்டிலும் இதுபோலவே அங்கும் சாமி முன் அனைத்தும் வைக்கபட்டு பூஜை நடைபெறுகிறது.
இப்போது வேந்தன், எழிலரசி தவிர திருமண ஜோடிகள் அனைவரும்.. முறை உணவு செய்தபின் கொடுத்த உடைகளை அணிந்திருக்க.. சாமிமுன் அவர்களுக்கு என்று கொடுக்கபடும் தாய்மாமன் சீர்பொருட்களில் இருக்கும் நகைகள், ஒருவருக்கு மூன்று என்று வைத்துயிருக்கும் உடைகளில் ஒன்றை தான் நலங்கு முடிந்த பின் அணிவர்.
பின் பாட்டி, அம்மாச்சிகள் பூஜையை முடித்து.. அனைவருக்கும் இனிப்புகள் கொடுக்கபட்டது. பின்மற்றவர்கள் மற்றவைகளை எடுத்து வைத்துக் கொண்டுயிருந்த நேரம்.. தன் அரசியை பாதி நடந்து.. பின் அள்ளிக்கொண்டு தங்கள் அறையில் உள்ள ரெஸ்ட் ரூம் சென்று வந்தபின்.. தன் முயல்குட்டிக்கு பல முத்தங்கள் கொடுத்து.. பின் ‘ அவள் மனதில் ஒன்றும் கவலையே இல்லையே என்ற உறுதியை ‘ அவளிடம் அவன் பல முத்தங்களை வாங்கிக் கொண்டு அவளை பாதி படிகள் தூக்கியும், அதன்பின் நடத்தும் வந்தனர்.
காரில் அனைத்தும் எடுத்து வைக்கப்பட்டு.. கணேஷ், ராகவன் குடும்பம் சுந்தர்ராஜனுடன் ஈஸ்வர், காவ்யா, ராஜேஷ் என அவர்களின் குடும்பத்துடன் கிளம்பியிருக்க..
என்ன தான்.. உள்ளூரில் மணமகன் மாமா குடும்பம் இருந்தாலும்.. இனி அடுத்து இங்கு வரும்போது மணமானவர்களாக.. மற்றொருவரின் உரிமையானவளாக வருவோம் என்ற மகிழ்ச்சி கலந்த கவலையில்.. சிறு கண்ணீர் வசுந்தராவிற்கு வந்து.. அனைத்தும் மறந்து தன் அண்ணன் வேந்தனை கட்டிகொண்டாள்.
வேந்தனும் தன் தங்கையை என்றும்போல் தலைதடவி ஆறுதல் செய்து.. அப்போதும் தன்னவளை மற்றொரு கையால் பிடித்து உன் அண்ணியாகிய என்னில்பாதி அரசியை!. நீ அணைக்காவிட்டாலும்.. அவள் என்னை வழிநடத்தி.. என் மூலமாக என்றும் உன்துணை நிற்பாள் என்ற வாக்குறுதியை தலைமேல் முத்தம் பதித்து தெரிவித்தான்.
இதை வசுந்தரா உட்பட மற்றவர்களும் புரிந்துக்கொண்டனர். பின்னர் அனைவரிடத்திலும் கட்டியணைப்பு, ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு.. தீடிர் திருமண பேச்சு ஆரம்பமாகி.. நான்கு ஜோடிகளுக்கும் நலுங்கு வைக்கலாம் என பெரியவர்கள்முடிவு செய்திருந்த எழிலரசியின் அத்தைகள் வீட்டிற்கு சென்றனர்.
” தனு நாலு பேருக்கும் நலுங்கு வைக்க.. தனித்தனியா பூ அலங்காரம் செய்த பேக் டிராப் அழகாக இருக்கு. “
” ம்.. நந்தினி, வசுவும் அதையும், வீட்டு அலங்காரம், மாறியிருக்கும் சிலவற்றை பார்த்து சித்தி வீடுதானா?. என்று வீட்டையே பார்த்துயிருந்தாங்க. “
புன்னகையுடன்.. ” தனு நானும் தான். “
எழிலரசி அத்தை வீட்டிற்கு வந்தவுடன்.. உபசரிப்பு முடிந்தவுடன்.. நலங்கு ஏற்பாட்டை கவனிக்க.. நாலு ஜோடிகள் தங்கள் சில உறவினர்களுடன் ஆண்கள் தேவகி வீட்டிலும்.. பெண்கள் ராதா வீட்டிலும் இருக்க..
வேந்தன், எழிலரசி மட்டும் அனைவரின் வாழ்க்கையை மாற்றி அமைந்த கடந்த ஞாயிறு.. தங்களின் காதலை கூற முடிவெடுத்த இடத்தில்.. அன்று அழுகையுடன் இருந்த தன்னவளை மடியில் வைத்திருந்த.. மாடியின் பாதியில் உட்காரும் படியான இடத்தில் இன்று மடியில் இல்லாமல்.. அருகில் அமரவைத்து பேசிக் கொண்டுயிருந்தான்.
எல்லோர் வீட்டை விட இந்த வீடு அதிக ஆடம்பரம் இல்லாத.. வீடு கட்டி பல வருடம் ஆனா வீடு. செல்வநிலை உயர்ந்தாலும் வீட்டை மாற்ற தோன்றவில்லை. இரு மருமகள் தன் வீடு போலஇருக்கவும் அவர்களுக்கு ஒன்றும் தோன்றவில்லை. இதுதான் பிடித்துயிருந்தால் சரி என அப்படியே விட்டுவிட்டார்கள்.
ஆனால் எழிலரசி தான்.. தன் வீடு பார்க்கும் போதே இவ்வீட்டையும் மாற்றியமைக்க ஆர்த்தி, இளமதி, தர்ஷினி மூவரிடம் கூறி.. பின் தங்களுக்கு பிடித்தார்போல் மாற்றங்களை சந்துரு, கதிரவனிடம் கொடுத்திருந்தார்கள்.
அருட்செல்வம், அருள்நிதியும் வீட்டின் கலர்மாற்றம் செய்யும்போது அவற்றில் இப்போதைக்கு உடனே அவசியம் ஆனா சமையல்அறை, வீட்டு பொருட்களை மட்டும் மாற்றிவிட்டார்கள்.
மேகாவிற்கு இம்மாற்றம் அவ்வளவு பெரிதாக தெரியாதால்.. தங்கள் வீட்டில் இருந்து கிளம்ப நினைக்கிறார் என.. மாற்றத்தை கூறதோன்றாமல் நந்தினி கூறியதற்கு சரி என கூறிவிட.. அஸ்வினும் வந்து பார்க்கட்டும் என தெரிவிக்கவில்லை. எழிலரசியும் இதை பற்றி கேட்கும் நேரம் இல்லை. அதனால் அவளுக்கும் தெரியாது.
தன்னால் தான் இந்த வீட்டிற்கு மாற்றம் என்று கூட தெரியாமல் வீட்டினை பற்றி ரசித்து கூறுபவளை அள்ளி கொஞ்ச முடியாததால்.. கை மோதிர விரலை பிடித்து தான் அணிவித்த இருமோதிரத்தோடு தன்னவளின் பஞ்சு போன்ற விரலிற்கு பல முத்தங்களை கொடுத்தான். தங்களுக்கு இங்கு வேலை இல்லை.. எதுவும் செய்ய கூடாது என தெரிவித்து விட்டாலும் தங்களை தேடி ஆள் வந்து விடுவார்கள் என அன்று அமர்ந்துயிருந்த அதே இடத்தில் இருந்த சேரில் அமர்ந்துவிட்டார்கள்.
பூ அலங்காரம் முழுவதும் ரோஜா, வெள்ளை, பச்சை நிறத்திலும்.. பந்தலில் மஞ்சள், ரோஜாவண்ண துணியால் அலங்கரிந்து இருந்தனர். அதன் நடுவில்.முதுகுவரை சாயந்து கொள்ளும் படியான தங்கநிற சேர்.. அது தரையிலும் இல்லாமல் உயரமாகவும் இல்லாமல் நடுவில் இருப்பது போல இரண்டு சேர் இருந்தது.
” வேந்தா.. இரண்டுபேரும் உள்ள எல்லோர் கூட இருப்பீங்க நினைத்தேன். நல்ல வேளை இங்கயே இருக்கீங்க. ”
” என்ன பெரியம்மா?. ” உடன் வந்த அக்கா, இளமதி என நாலு பெண்கள் இருந்தனர்.
” வேந்தா.. உன் கூட வேலை செய்த பொண்ணுங்க எல்லாம் நலுங்கு முடிந்தான் வருவாங்க போல. ”
ஆம் என புரியாமல் தலையசைக்க..
” நலுங்கு வைக்க ரொம்ப முக்கியமானவங்க, பக்கத்தில் இருப்பவர்களை மட்டும்தான் அழைத்திருந்தது. ” சரி என பார்த்தான்.
” அதுவந்துடா நம்ம பெண்ணுங்க கூட கல்யாணம் ஆகாத பெண்களை உட்கார வைத்து செய்தா நல்லாயிருக்கும் சொன்னாங்க. நீ நாலு பெண்ணுங்க இன்னைக்கு கண்டிப்பா வருவாங்கனு சொன்னதால யார் கிட்டயும் சொல்லி வைக்கல. இப்ப மூனுபேர் இருக்காங்க. “
அவர்களின் பார்வை எழிலரசியிடம் போய் வர.. புரிந்து.. ” இது பெண்ணுங்களுக்கு மட்டும்தானா இல்ல?. ”
புன்னகையுடன்.. ” பசங்களுக்கும் தான்டா. ”
அரசியை பார்த்தான்.. ” ஆரம்பிக்க எவ்வளவு நேரம் இருக்கு?. ”
” எல்லாம் வந்தாச்சு.. முதலில் பெண்ணுங்களுக்கு ஆரம்பிக்க வேண்டியது தான். ”
” ம்.. சரி எல்லோரையும் உட்கார வைங்க. பத்து நிமிடத்தில் அரசி வருவா. ”
தன்னவளிடம் திரும்பி ஒன்றை கூற.. சரி என தலையசைத்தாள். அவன் தன் காருக்கு சென்று வந்து இளமதியிடம் அரசிக்கான உடையை கொடுத்தான்.
அரசி அடர் ரோஜா அதில் தங்க, ஆரஞ்சு நூல் வேலைபாடுகள் செய்யபட்ட டாப், ஆரஞ்சு வண்ணபேட் மற்றும் ஷால். ஷாலில் பல வண்ண பூக்கள் இருந்த சுடி அணிந்து வந்து தர்ஷினியின் அருகில் நின்றாள்.
” அக்கா என் சேலைக்கு ஏற்ற சுடி. ”
‘ ஆம் ‘ என தலையசைத்தவாரே.. கதிரவன் அருகில் நின்ற தன்னவன் தன் உடைக்கு ஏற்றார் போல ரோஜாஆரஞ்சு ஷேட்கொண்ட சாட், லைட்பச்சை பேன்ட் மாற்றியிருந்தை பார்த்தாள்.
கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு, வசம்பு, ரோஜா மொக்கு, சீயக்காய், அரப்புத் தூள், வெட்டி வேர், விலாமிச்சை வேர், நன்னாரி வேர், கோரைக் கிழங்கு, பூலாங்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், மஞ்சள் , ஆவாரம்பூ, வெந்தயம், பூவந்திக்கொட்டை ஆகியவற்றை எல்லாம் சம அளவு எடுத்து நன்கு சூடு ஏறவெயில் உலர்த்தவும். பின் மிசினில் கொடுத்து அரைத்து..
பின் ஆற வைத்ததில்.. சிறிதுஅளவு வெள்ளிகிண்ணத்தில் எடுத்த வைத்த நலுங்கு மாவை பன்னீரில் கரைத்து வைத்துயிருந்தனர். சந்தனம், மஞ்சள் மற்றும் ஆசிர்வாதம் செய்ய பூக்கள் என வெள்ளி தட்டில் வைத்திருந்தனர். அதனுடன் தலையில் வைக்க சீயக்காய் பொடியில் நல்லெண்ணெய் கலந்து அருகம்புல் வைத்து மற்றொருதட்டில் வைத்திருந்தனர். மணமாகப்போகும் ஆண் மற்றும் பெண்ணுக்கு மட்டுமே எண்ணெய் வைக்கப்பட்ட உள்ளது.
வசுந்தராவுடன் சாருலதா, நந்தினியுடன் அஸ்வினின் சித்தப்பா பெண் ராதிகா., மேகாவுடன் காவ்யா தங்கை வித்யா. எழிலரசி சுடி அணிந்திருந்திருக்க மற்ற பெண்கள் பாவாடை தாவணி அணிந்திருந்தனர்.
அவரவர்களுக்கான இடத்தில் அமர்ந்து பெண்களுக்கான நலுங்கு ஆரம்பிக்கபட்டது. அவர்களின் பாட்டி, அம்மாச்சி, அத்தை, மாமாக்களின் மனைவி என அக்கா, மாமா, அண்ணா என மூன்று ஜோடிக்கு அனைவரும் வைத்தனர். இதில் தர்ஷினிக்கு மாமா, அண்ணா வைக்க எழிலரசிக்கு மட்டும் பெண்கள் மற்றும் அவளவன் மட்டுமே அனைவருக்கும் சேர்த்து வைத்துவிட்டு.. இன்பா, சந்துருவுடன் அருகில் நின்றுகொண்டான்.
தர்ஷினியை விட அவள்தான் முகம் சிவந்து தன்னவனை புன்னகையுடன் அவன் செய்யும் கூத்து.. அதை பார்த்து அருகில் நின்றவர்கள் ஒட்ட.. அதை எதையும் பொருட்படுத்தாமல் தன்னவளை வீடியோ எடுக்கிறேன் என கூறி அதன்வழியாக அவளை உரிமை பார்வையுடன் ரசித்துக்கொண்டு.. அவளை மேலும் சிவக்க வைத்துக் கொண்டுயிருந்தான்.
வேந்தனுடன் சேர்த்து கதிரவனும் தன் பிரியாவை ரசித்து பார்த்தான். மற்றவர்களும் தன் துணைகளை பார்த்தனர். ஆனால் அருகில் அமர்ந்துயிருப்பது தங்கைகள் என்பதால் அதிக நேரம் பார்க்க முடியவில்லை. ஆனால் தர்ஷினியுடன்.. எழிலரசி இருந்ததால் வேந்தனின் மூலம் கதிரவனுக்கு கூடுதல் சலுகை கிடைத்தது.
பின் பெண்கள் அனைவருக்கும் உடை கொடுக்கபட.. அதில் எழிலரசிக்கான உடையை வேந்தன் தான் கொடுத்தான். அனைவரும் அவனை பார்த்து புன்னகைக்க மட்டுமே முடிந்தது. அதை வாங்கியவள் தன்னவனுக்கு செய்யவதை பார்க்க சற்று தள்ளி சத்யாவுடன் நின்று கொண்டாள். மற்ற அனைவரும் குளிக்க சென்றனர்.
கதிரவனுடன் வேந்தன், கமலேஷ் உடன் அத்தை பையன் ரிஷி. அஸ்வினுடன் இன்பா, பார்த்திபனுடன் அத்தை பையன் விவேக் இருந்தார்கள். கமலேஷ் உடன் தான் வேந்தனை நிற்க கூறினர். அது தெரிந்தும் வசுந்தரா எழிலரசியை தன்னுடன் வேண்டாம் என கூறியதால் கமலேஷ் உடன் நிற்க மறுத்துவிட்டான்.
அதனுடன் அண்ணாக ஈஸ்வரும் காவ்யாவும் செய்தனர். வசுந்தராவிற்கு கமலேஷ் உடன் இருக்கமாட்டான் என தெரியும்.. ஆனால் ஈஸ்வர் மட்டுமே செய்ததை வசுவுடன் சேர்ந்து யாரும் எதிர்பார்க்கவில்லை.
ஆனால் எழிலரசிக்கு அவன் யாரையும் செய்யவிடவில்லை.. இதனை வசுந்தரா நன்றாகவே கவனித்துயிருந்தாள். சித்ராவுடன் கோபமாக பேசியபடி குளிக்க செல்ல.. சித்ரா இதற்கு தீர்வு இப்போது இல்லை என கவலையுடன் பார்த்திருந்தார்.
இது எதுவும் தெரியாமல் தன்னவனை கள்ளத்தனமாக சத்யாவின் பின் நின்று பார்த்திருந்தாள். அவன் குளிக்கச் செல்.. சளிபிடித்தும் விடும் என கூறியிருந்தான். போகாமல் சற்று தள்ளி சத்யாவுடன் நின்று கொண்டாள்.
அனைவரும் பனியன் வேஷ்டியுடன் இருக்க.. அவன் மட்டுமே பேட்ஷர்ட்டில் இருந்தான் இதனை பார்த்து மற்றவர்களில் விருப்பமானவர்கள் முறைத்து விட்டு உட்கார சென்றனர். பின் அவர்களுக்கும் பெண்களைபோல அனைத்தும் முறையினரும் செய்தபின் குளிக்க சென்றனர். சென்றவர்கள் குளித்து.. கிளம்பி வர நேரம் ஆகும் என வந்தவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது.
திருமண ஆண்கள்.. எண்ணெய் தேய்ந்து இருப்பதால் முதலில் குளிக்க செல்ல.. அவர்கள் வந்தபின் சென்ற வேந்தனும் வந்துவிட்டான். திலகனுடன் இருந்த சத்யாவிடம் தன் அரசியை கேட்க..
தன்னை பார்த்திருந்து இப்போது தான் சென்றாள் என அறிந்து கொண்ட போது அவள் முகத்தில் ஏதோ சரி இல்லையென தெரிய.. தன்னவள் குளிக்க சென்ற இளமதி அறைக்கு சென்றான்.
” மாமா நீங்க இங்க ?. “
” அரசி வந்துட்டாளா?. ” இல்லை என தலையசைக்க.. உடனே உள்ளே செல்ல நினைக்கும் வேலையில் ‘ அய்யோ ‘ நின்றுவிட்டு..
” சாருலதா யார்யெல்லாம் உள்ள இருக்கா?. ”
” நாலுபேருமே இங்க தான் இருக்காங்காங்க. ஏசி இங்க தான் இருப்பதால.. சேலை கட்டிட்டு.. மேக்கப் போட்டுயிருக்காங்க. ”
அவனிற்கு தேவையான தகவலை கூறியவுடன் கதவு திறந்துவிட்டு.. அவள் பின்னால் சென்று பாத்ரூம் முன் நின்றான். இவனை தர்ஷினி தவிர யாரும் எதிர்பார்க்கவில்லை.
” அரசி கதவ திற. ” கதவு தாள்பாழ் திறக்கும் சத்தம் வந்த அடுத்தநொடி வேந்தன் உள்ளே சென்று கதவை முடிவிட்டான்.
சில நிமிடங்கள் கடந்து கதவு திறக்க… கூந்தலை தூண்டால் கட்டி.. டாப், பாவாடை அணிந்தவளை வெளியே கோபமுடன் அழைத்து வந்தான்.
ஒருநொடி நின்று ” தர்ஷினி கதிரவன் ரூம்மிற்கு போகனும் வா. ” அவளை பார்த்து கூறிவிட்டு அரசியின் உடைகளை எடுத்தான்.
அவளும் கலங்கிய கண்களுடன் அவனிற்கு முன்னால் சென்று தன்னவன் அறை கதவை திறந்தவள்.. அங்கு எதிர்பாராமல் இருந்த கதிரவனை கண்டதும் ஓடிச்சென்று கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள்.
எதிர்பாராமல் நடந்த நிகழ்வில் கதிரவன் அதிர்ந்த நேரம்.. வேந்தன் கோபமாக வர.. அவன் பின்னால் எழிலரசி சோர்ந்து வந்தாள். வேந்தன் தர்ஷினின் நிலையை பார்க்கும் நிலையில் இல்லை. தன்னவளை அமர வைத்து.. முதலில் கூந்தலை டிரையர் கொண்டு காய வைக்க ஆரம்பித்தான்.
கதிரவன் தன் பிரியாவை தன்னிடமிருந்து பிரிந்து.. அழுது சிவந்துயிருக்கும் கன்னத்தில் இருக்கும் கண்ணீரை துடைத்து.. தண்ணீர் கொடுக்க.. பின் இருவருடன் இருந்த சத்யாவை போனில் அழைத்து.. அறைக்கு வர கூற.. அவளும் இப்போது தான் தெளிந்து திலகனுடன் வந்தாள்.
” என்னாச்சு சத்யா? பிரியா அழுகுறா.. எழிலும் ஒரு மாதிரியா இருக்காங்க. யார் என்ன சொன்னா?. “
” டேய் நானும் அதைதான் பத்து நிமிடத்திற்கும் மேல கேட்குறேன். சொல்ல மாட்டேன் இருக்கா. ” திலகன் பார்வை எழிலரசியின் மீது இருக்க.. அவள் சத்தமில்லாமல் கண்ணீர் மட்டும் வந்து கொண்டுயிருந்தது.
” வேந்தா எழிலரசி சொல்ல சொல்லாம இவங்க சொல்லமாட்டாங்க. ” அப்போது உள்ளே வந்த சாருலதா.. ” நான் சொல்லுறேன் அண்ணா. “
‘ தாயே சொல்லு. ‘ என்ற பார்வை மூன்று ஆண்மகனிடமிருந்து வந்தது.