Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

42. Lavanya Rajesh - நெஞ்சமெல்லாம் நிலவாக நீ

நெஞ்செமெல்லாம் நிலவாக நீ – 5

“ஹாய் டுயுட்!” என்று ரேவந்திடம்  சொல்லி விட்டு,

வேறு ஒரு மாணவனுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தாள் லக்கி.

ரேவந்த் போய் கபிலனை பார்த்து ஹாய் சொல்லி விட்டு பிக்கிள் பால் விளையாட  தயாராகி வந்தான்.

அதற்குள் லக்கியும் அந்த மாணவனை அனுப்பி விட்டு, ரேவந்தோடு விளையாட வந்தாள்.



Advertisement

விளையாட்டின் நடுவே ரேவந்த் அவளைக் கவனித்தான்.

முகமே கொஞ்சம் சரியில்லாமல் இருந்தது!

“என்னாச்சு லக்கி.. இன்னிக்கு டல்லா தெரியறே!”

Advertisement

“டல்லா தெரியறேனா!

Advertisement

அச்சோ.. அப்படியா என் ஃபேஸ்ல எல்லாத்தையும் காட்டிட்டு இருக்கேன்?” என்றவள்,

“போச்சு அக்கா வேற இதுக்கு லக்சர் அடிப்பாளே!” என்று மனதுள் சொல்லிக் கொண்டு,

“ஒண்ணுமில்லை டுயுட். இன்னிக்கு காலேஜ்ல ப்ராக்டிகல் எக்ஸாம்”. என்று அவள் சொல்லிக் கொண்டு இருக்கையிலேயே, இடையிட்டான் ரேவந்த்!

Advertisement

“என்ன ரொம்ப ஃடப்பா இருந்துச்சா? அவுட்புட் வரலையா?”

“இல்ல அதெல்லாம் நல்லா பண்ணிட்டேன். அவுட்புட்டும் வந்துச்சு. ஆனா.. இந்த வைவால தான்..”

“ஏன்.. வைவால சொதப்பிட்டியா?”

“சொதப்பல்லாம் இல்ல! பெரிய பல்ப் வாங்கிட்டேன்!”

“என்னது பல்பா?”

“ஆமா.. நான் பயங்கரமா ப்ரிபேர்ட்டா போயிருந்தேன்.

அவங்க வளைச்சு வளைச்சு கேட்டாலும் டக்டக்ன்னு பதில் சொல்லி அசத்தனும்னு போய் இருந்தேன்!

ஆனா..”

“ஆனா.. என்ன? அங்க போய் எல்லாம் மறந்துடுச்சா?”

“அதெல்லாம் இல்ல..

அவங்க தான் எனக்கு ரொம்ப ஈசியா,

எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனைக் கால் என்கிற மாதிரி ஒரு மொக்கை கேள்வி கேட்டு எனக்கு பல்ப் கொடுத்துட்டாங்க!

ஏன்? என்னையா பார்த்தா அவ்வளவு மக்கு பொண்ணு மாதிரியா இருக்கு!

இந்த கேள்விக்கு இது பதில் சொன்னா போதும்கிற மாதிரி!

க்ரேட் இன்சல்ட்! அதான் இப்படி வயலின் வாசிச்சுட்டு இருக்கேன் சோகமா!”

அதைக் கேட்ட ரேவந்துக்கு பயங்கர சிரிப்பு வந்து விட்டது!

அவன் சிரிப்பதை பார்த்து காண்டானாள் லக்கி!

“சிரிக்காதீங்க. ஐ யம் சீரியஸ். டோன்ட் மேக் மீ ரோஸ்ட் யூ!” அவள் செல்லமாக எச்சரித்தாள்.

“இல்ல.. இல்ல. சிரிக்கல”

“என் கண்டிசன் உங்களுக்கு ஃபன்னியா  இருக்கு இல்ல. பாருங்க உங்களுக்கும் இப்படியே ஆகும்!

ஆமா நீங்க சொன்னீங்க இல்ல.. உங்க ஃபேக்டரில ஏதோ இஸ்யூ ன்னு! போங்க..

இன்னிக்கு ஆபிஸ் போனாக்க, உங்களுக்கும் அங்க எனக்கு கிடைச்ச மாதிரியே பல்ப் கிடைக்கும்!

இதுக்கு எதுக்குடா சென்னை வந்தோம்னு நினைக்கிற அளவுக்கு!” அவள் செல்லமாக அவனை சபித்தாள்!

“வித் மை ப்ளசர்” என்று அதை ஏற்றுக் கொண்டான் ரேவந்தும்!

தொடர்ந்து விளையாடினார்கள்.

கொஞ்சநேரம் சென்று, நேரம் பார்த்தவள் பதறி.

“அய்யோ டுயுட். லேட்டாகிடுச்சு.  இதோட இன்னிக்கு கேம் போதும்.

இப்ப கிளம்பலன்னா,  அப்புறம் வீட்டுக்கு போக லேட் ஆகிடும்!”

“என்ன இது.. சும்மா வீட்டுக்கு போகணும் ஆத்தா வையும்கிற மாதிரி பேசிட்டு..

இப்ப என்ன? லேட்டானா,  நானே உன்னை என் காரில் டிராப் பண்றேன்”.

“அய்யோ! உங்களோட காரிலா! சான்சே இல்லை!

 அப்புறம் மொத்தத்துக்கும் ஆப்பு வச்ச மாதிரி, இந்த பார்ட்டைம் வேலையையே விடுற மாதிரி ஆகிடும்!”

“அவ்வளவு ஸ்ட்ரிக்டா உன் மம்மி. அவங்களுக்கு போன் போட்டுக் கொடு. நான் பேசுறேன்”

“மம்மியா? எங்க இருக்காங்க?”

“எங்க அவங்க?”

“உஷ்.” என்று சத்தமிட்டு, மேலே காட்டினாள்.

“அம்மா இல்ல எனக்கு!”

“சாரி.. அப்போ டாடிக்கிட்ட கொடு பேசுறேன்.”

“அவரும் உஷ்..” என்று மேலே காட்ட, ரேவந்துக்கு மிகவும் கஷ்டமாகிவிட்டது!

இத்தனை வயதில் தனக்கே கூட இன்னும் அவர்கள் இழப்பிலிருந்து மீள முடியவில்லை!

இந்த குட்டிப் பொண்ணு பாவம் இல்ல!

“சாரிடா.. ஆனா. பாரு.. நானும் உன் இனம் தான்!

எனக்கும் அம்மா அப்பா உஷ்” என்று அவனும் மேலே காட்டினான்!

“அச்சோ..” என்றாள் லக்கி.

“அப்ப வீட்டில் யாரு இருக்கா?”

“என் பெரிய அக்கா இருக்கா. சின்ன அக்காவுக்கு கல்யாணம் ஆகி யூஎஸ் ல இருக்கா.”

“உன் பெரிய அக்காவுக்கு கல்யாணம் ஆகலையா?”

“இல்ல பண்ணிக்க மாட்டேங்கிறா!

பாஷா பட ரஜினி மாதிரி எங்க அப்பாவுக்கு அவ வாக்கு கொடுத்துருக்கா போல.

இப்ப தான் ஒரு குத்து விளக்கை ஏத்தி முடிச்சுருக்கா. இன்னும் நான் இருக்கேன்!”

“கிரேட்..”

“என் அக்கா உலக மகா பயந்தாங்கொள்ளி!

என்னை கொஞ்ச நேரம் தனியே விட மாட்டா.

நான் சென்னையில் படிக்க ஆசைப்பட்டேன்னு தான், அவளும் எனக்காக இங்க வேலை வாங்கிட்டு வந்திருக்கா!

என்னை ஹாஸ்டலில் எல்லாம் விடக் கூடாதுன்னு.

அவளுக்காக தான் நான் எந்த டோர்ணமேன்ட்டுக்கும் விளையாட போகாம, இப்படியே என்னோட ஆசைக்கு ட்ரைனரா மட்டும் இருந்திட்டு இருக்கேன்!

என்னை வெளியூர் அனுப்பிட்டு என் அக்கா பயந்துகிட்டே இருப்பா.

இல்லாத கற்பனை எல்லாம் அவளுக்கு வரும்.

ஸ்ட்ரெஸ் ஆவா! அவளுக்கு அப்படி ஸ்ட்ரெஸ் உண்டாக்க கூடாதுன்னு தான் நான் விளையாட போறதில்லை!”

அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே கார் ஓட்டினான் ரேவந்த்.

அப்போது லக்கியின் போன் அடித்தது.

“அக்கா தான்” என்று சொல்லியபடி,

“சொல்லுக்கா.. ஆமா இன்னிக்கு கொஞ்சம்  நேரம் ஆகிடுச்சு. வந்துட்டு தான் இருக்கேன்”.

“நம்புக்கா. இன்னும் பத்து நிமிசத்தில் வீட்டில் இருப்பேன்.”

“ம்ம்..” என்று அவள் சொல்லியதைக் கேட்டுக் கொண்டு,

“அக்கா ஒண்ணு பண்றியா, பேசாம என் உடம்பில் ஒரு ஜிபிஎஸ் டிவைஸ் ஒண்ணை வச்சு தச்சு விட்டுடு.

 அப்ப தான் நான் எங்க இருக்கேன்னு உன்னால ஈசியா ட்ராக் பண்ண முடியும்.

வைக்கா போனை. வந்துட்டேன்” என்று போனை வைத்தாள் லக்கி.

“என்ன பார்க்குறீங்க?

என் அக்கா, இதுக்கு மட்டும் பாசிபிலிட்டி இருந்தா அதையும் செய்வா.

என்னை இன்னும் அவ இடுப்பை விட்டு கீழே விட மாட்டேங்கிறா!

மைக்ரோ மேனேஜ்மன்ட் பண்றதுல அவளை அடிச்சுக்க முடியாது!” என்றாள் லக்கி குறைப்பட்டுக் கொள்வது போல ஆனால் பெருமையாக!

“சான்சே இல்லை” என்று சொல்லி ரேவந்த், லக்கி சொன்ன இடத்தில் அவளை இறக்கி விட்டு விட்டு சென்றான்.

அவனுக்கு ஃபேக்டரி அட்மின் ஆபிசில் இருந்து போன் வந்தது.

ஹெச் ஆர் ஹரி தான் பேசினான்.

“சார். அந்த சூர்யகுமார் இப்ப ஒரு பர்சனல் பிரச்சினையில மாட்டிட்டு இருக்கான்!

அவன் ஓய்ஃப் அவன் மேலே போலிஸ் கம்ப்ளைண்ட் கொடுத்துருக்கா!

டொமஸ்டிக் வயலன்ஸ் கேஸ் போடடுட்டாங்க.

இப்ப நாம அதை வச்சே அவனை தூக்கிடலாம். ஜெயந்த் சாரும் ஒண்ணும் சொல்ல முடியாது!”

“ஓகே நீங்க ஃபர்தர் ப்ரசீடிங்க்சை பாருங்க” என்று போனை வைத்தவனுக்கு கொஞ்சம் நிம்மதி!

கூடவே லக்கியின் அந்த இனிய சாபமும் நினைவில் வந்து அவனுள் புன்னகையை வர வைத்தது!

மை லக்கி ஏஞ்சல்!

இது மாதிரி எல்லா பிரச்சினையும் தீர்ந்தால் நல்லா இருக்கும் என்று நினைத்தவனுக்கு உடனே ஜெயந்தும் அவன் அம்மாவும் நினைவில் வந்தார்கள்!

அடுத்து இவங்களை சமாளிக்கணும் என்று நினைத்தான்.

 உடனே அவனுக்கு யுவியின் நினைவும் வர,

என்ன பண்ணிட்டு இருக்கான் அவன். ரேஷ்மாவைப் பார்த்து விட்டு வந்த பிறகு அவனிடம் இன்னும் பேசியிருக்க வில்லை!

எனவே அவனை போனில் அழைத்தான்.

“ஹலோ.. சொல்லுடா” என்றான் யுவநிலவன்.

“என்ன சொல்றது? நீ போன காரியம் என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுக்க நான் அவ்வளவு க்யுரியஸா இருக்கேன்.

 நீ என்னடான்னா, ரேஷ்மாவை மீட் பண்ணிட்டு வந்தததுக்கு அப்புறம் ஒரு போன் கூட பண்ணல இன்னும்!

நான் பண்ணினப்போ நீ பிஸியாக இருந்த! நீ கால் ரிட்டர்ன் பண்ணினப்போ நான் மிஸ் பண்ணிட்டேன்!

இப்படி போயிட்டு இருந்தா எப்படிடா? இப்பவாச்சும் சொல்லுடா..

சரி.. சரி,,, நான் அவ்வளவு அவசரமா உன் கிட்ட ஷேர் பண்ற அளவு பெரிய அப்டேட் ஒண்ணும் இல்லை!

ஜஸ்ட் மீட் பண்ணியிருக்கோம். பிசினெஸ் டீல் பேசினோம். அவ்வளவு தான்!”

“என்ன அவ்வளவு தானா? அவளுக்கு உன்னை அடையாளம் தெரிஞ்சுதா இல்லியா?”

“என் பேர் நினைவு இருந்தது. ஆனா ஃபேஸ் மறந்து போச்சுன்னு சொன்னா.

 ஆனா மறக்காம என் அப்பா அம்மா பத்தி விசாரிச்சா”.

“ஓ.. இப்பவே! ஆனா.. நீ சுத்த வேஸ்ட்டுடா.. கொஞ்சமாச்சும் அவ கிட்ட பர்சனலா பேசினியா இல்லியா?”

“ம்ம். இல்லடா. பிசினெஸ் மட்டும் தான் பேசினோம். அப்புறம் நான் கிளம்பிட்டேன்!”

“என்ன கிளம்பிட்டியா? ஏண்டா அவளே உன் பேரன்ஸ் பத்தி விசாரிச்சுருக்கா..

அப்படியே அவளை உன் வீட்டுக்கு கூப்பிட்டு இருக்கலாம் இல்லை?”

“ஏய்.. எப்படிடா.. எடுத்தவுடனே அப்படியெல்லாம் பேசுறது? தப்புடா..”

“என்ன தப்பு.. என்னடா நீ! நான் உன்னை எவ்வளவு நம்பினேன்!

 நீ யாராவது ஒருத்தர் கிட்ட பேசினா, அதுக்கு அப்புறம் அவங்க,

 நீ வெள்ளைக் காக்கா பறக்கிறதைப் பார்க்க ரொம்ப பிடிக்கும்ன்னு சொன்னா கூட,

அவங்களும் ஆமா எனக்கும் பிடிக்கும். ரொம்ப அழகா பறக்கும் அதுன்னு சொல்லிடுவாங்க!

 அந்த அளவு பேச்சு சாமர்த்தியம் உள்ள ஆள் நீ!

எத்தனை வாட்டி ஹாஸ்டல் வார்டனை ஐஸ் வச்சு ஏமாத்தி இருக்கோம்.

ஏன் ப்ரின்சியவே ஏம்பா நான் சரியா தானே பேசுறேன்ன்ற அளவுக்கு குழப்பி விட்ட ஆள் நீ..

இப்ப என்னடா ரேஷ்மா மேட்டர்ல மட்டும் இவ்வளவு ஹெசிடேசன் உனக்கு?

அப்ப.. ரேஷ்மாவை உனக்குப் பிடிக்கலையா?”

“ச்சே ச்சே..

அப்படி எல்லாம் இல்லடா.. எனக்கு ரேஷ்மாவை ரொம்ப பிடிக்கும்!

அவளுக்கும் என்னைப் பிடிச்சிருந்தா, அவ தான் என்னோட வொய்ஃப்!”

“பிடிச்சுருந்தா என்னடா.. அதெல்லாம் பிடிக்கும் அவளுக்கு! உன்னைப் போய் பிடிக்காதுன்னு சொல்ல அவ ஒண்ணும் லூஸு இல்லை!

ஆனா நீ அவ கிட்ட பேசணுமே.. பேசாம எப்படி தெரிஞ்சுக்கிறது?” ரேவந்திற்கு அலுப்பாக போய் விட்டது!

அவனுக்கு அவன் பயம்.

எங்கே பார்வதி ஆண்ட்டியின் தொல்லை தாங்காமல், ஜெயந்திற்கு பெண் கேட்டு ராம் அங்கிளே வந்து விடுவாரோ என்று!

இது வரை அவருக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை! இனியும் ஏற்படப் போவதும் இல்லை தான்!

ஆனால் வீட்டில் சதா தொல்லை செய்யும் பார்வதி ஆண்ட்டி!

தினமும் அவர் செய்யும் வற்புறுத்தல்கள்!

ஏற்கனவே ஒரு முறை கட்அண்ட் ரைட்டாக சொல்லியிருந்தார் மனைவியிடம் அவர்.

“நான் தான் அவங்களுக்கு பின்புலமா இருந்து அவங்க சொத்தையும் சொந்தக்காரங்ககிட்ட இருந்து அவங்களையும் காப்பாத்தினேன்.

இன்னமும் காப்பாத்திட்டு இருக்கேன்!

காரணம் என் நண்பனுக்கு அவன் சாகும் போது நான் பண்ணிக் கொடுத்த சத்தியம்!

அந்த சத்தியத்தை இது வரைக்குமே ஒரு குறையுமில்லாம காப்பாத்திட்டு வர்றேன். இனியும் இருப்பேன்.

ஆனா நீ சொன்ன மாதிரி உன் மகனுக்கு பெண் கேட்டுப் போனா, இலை நிறைய விருந்து சமையல் பரிமாறிட்டு,  ஓரத்துல அசிங்கத்தை வச்ச மாதிரி எல்லாமே பாழாகிடும்!

நான் ஒரு நாளும் அந்த வேலைய செய்யவே மாட்டேன்” என்று தீர்மானமாய் சொல்லி விட்டார்!

“அப்போ.. அப்போ.. என் மகனை அசிங்கம்னு சொல்றீங்களா?

அய்யோ இது அடுக்குமா? எங்காச்சும் இப்படி பெத்த அப்பன், தன் பிள்ளைய இப்படி சொல்லுவானா?

ஊரான் வீட்டுப் பிள்ளைய உசத்தியா வச்சுக்கிட்டு, உரிமை உள்ள பிள்ளைய இப்படி கேவலப்படுத்துறீங்களே!” என்று பார்வதி கூச்சலிட்ட போதும் கூட அவர் கண்டுக் கொள்ளவே இல்லை!

ஆனால் வீட்டில் நடக்கும் இந்த மாதிரி தொல்லைகளால் அவருக்கு ரத்தக் கொதிப்பு வந்து விட்டது!

அது தன் நண்பன் நீரிழிவு நோயையும் கூட்டி வந்து விட்டது.

தினமும் இவ்வாறே பார்வதி தொல்லைக் கொடுத்துக் கொண்டிருக்க,

ஒரு நாள் ரேவந்துடன் அவர் மீட்டிங்கில் இருக்கும் போது அவருக்கு ரொம்பவும் முடியாமல் போய்,

பேச்சுக் குழறி. கையில் இருக்கும் ஃபைல்களைக் கூட தவற விட்டார்.

ரேவந்த் பதறிப் போய் ஹாஸ்பிடல் அழைத்துப் போய் சரியான நேரத்தில் ஊசிப் போடப்பட்டு வரவிருந்த  ஸ்ட்ரோக் தடுக்கப்பட்டது!

அது முதல் தான் அவருக்கு ஓய்வுக் கொடுத்து விட்டு, ரேவந்தே திருப்பூர் ஃபேக்டரியையும் சென்னை ஃபேக்டரியையும் தனியே அவனே கவனித்துக் கொண்டிருக்கிறான்.

வீட்டில் இருந்தாலும் ராம் அங்கிளுக்கு பார்வதி ஆண்ட்டி ரேஷ்மவைப் பெண் கேட்க சொல்லி தொல்லைக் கொடுப்பது நின்றபாடில்லை!

என்றவாது ஒருநாள், செய்யவே மாட்டார் என்றாலும் கூட, பார்வதி ஆண்ட்டியின் தொல்லை எல்லை கடந்து,

ராம் அங்கிள் ரேஷ்மாவைப் பெண் கேட்டு விட்டால், ரேவந்த்தால் சட்டென்று முகத்தில் அடித்தாற் போல மறுப்பு சொல்ல முடியாது.

ரேஷ்மாவின் நிலையும் அது தான்!

ஆனால் அதற்காக அவள் அந்த ஜெயந்த்தைக் கல்யாணம் செய்யவும் முடியாது!

கொஞ்சம் கூட நல்ல நடத்தை, குறைந்த பட்சம் நல்ல பார்வை கூட அவனுக்கு  கிடையாது!

அவன் தான் ராம் அங்கிளின் மகன் என்றால் நம்புவது கடினம்!

குரு துரோணருக்கு பிறந்த மகன் அஸ்வத்தாமன் போல!

ரேவந்திற்காவது ஒரு வாய்ப்பு இருக்கிறது!

ரேஷ்மா வேறு யாரையாவது விரும்பும் பட்சத்தில்!

“ஸாரி..அங்கிள். ரேஷ்மா மனசுல வேற ஒருத்தன நினைச்சுட்டு இருக்கான்னு” சொல்லி தப்பி விடலாம்.

ஆனால் ரேஷ்மாவின் நிலை தான் பாவம்!

அவரே அப்படி கேட்டு எதுவும் வைத்து விட்டால், மிகவும் சங்கடமாக போய் விடும் அவளுக்கு!

அதைக் கொடுக்க கூடாது என்றால், அப்படி ஒரு சூழ்நிலைக்கு அவள் செல்லாதிருக்க, அவள் நிஜமாகவே யாரையாச்சும் லவ் பண்ணனும்!

சும்மா எவனையாவது விரும்புகிறேன் என்று சொல்ல  முடியாதே!

அந்த இடத்தில் ரேவந்த் மனதில் இருப்பவன் யுவநிலவன்!

ஆனால் அவன் மனதில் இருந்து என்ன புண்ணியம்? ரேஷ்மாவின் மனதில் இடம்பெற வேண்டுமே இவன்!

அதுக்கு தான் ஏதாவது செய்வான் என்று எதிர்பார்த்திருக்க, அவனோ, இன்னும் இல்லை என்று சொல்லி கடுப்பு ஏற்றுகிறான்!

“அப்ப கல்யாணம் பத்தி எப்ப தாண்டா பேசப் போற?” என்றான் ரேவந்த் பொறுக்க முடியாமல்!

“டேய்.. இருடா.. அவசரப்படாதே. முதல்ல அவகிட்ட நல்லதொரு ரேப்போ உருவாகட்டும்.

அப்புறம் தான் கொஞ்சம் கொஞ்சமா தான் அவள் மனதில் இடம்பிடிக்கணும்!”

“டேய்.. அதுக்கு எல்லாம் நேரம் இல்லடா..

நீ எதாச்சும் பேசி, அவளுக்கு உன்னைப் பிடிச்சுருக்குன்னு சொல்ல வைடா.

இதெல்லாம் உனக்கு ஜுஜுபி மேட்டர்! உன் வாய் சாமர்த்தியத்துக்கு!”

“டேய்.. அப்படி இல்லடா. நான் ஒரு எத்திக்ஸ் வச்சு இருக்கேன்.

என்னோட இந்த வாய் சாமர்த்தியம், அப்புறம் இந்த பிசினெஸ் டாக்டிஸ் எல்லாம் வீட்டுக்கு வெளியே மட்டும் தான்!

வீட்டுக்குள் இல்ல!

அது என் அம்மா, வீட்டில் நடந்த ஒரு சின்ன சண்டையில் சொன்ன வார்த்தையால் நான் எனக்குள் வைத்து இருக்கும் கட்டுப்பாடு!

உன்னோட இந்த வாய் ஜாலாக்கு எல்லாம் உன்னோட க்ளயன்ட்ஸ் கிட்ட வச்சுக்கோ.

என்கிட்ட அப்ளை பண்ணாதேன்னு திட்டிட்டாங்க!

அதிலிருந்து நான் வீட்டில் வேற ஆள்!

அந்த முகம் தான், என் அம்மாவிடம் நான் காட்டும் அதே முகம்தான்  இப்போ ரேஷ்மாவிடமும்!

அதனால ரிசல்ட் கொஞ்சம் லேட்டா தான் வரும்! ஆனா எனக்கு நம்பிக்கை இருக்கு.

என்னை ரேஷ்மாவுக்கு கண்டிப்பா பிடிக்கும்!

நானும் கொஞ்ச நல்லப் பையன் தான்! சுத்த டீ டோட்டலர் வேற!”

“அந்த டேஷ் எல்லாம் எனக்கும் தெரியும்டா. ஆனா எப்போன்னு தான் கவலையா இருக்கு!”

“பொறுமை மச்சான்.. பொறுமை.. இப்ப தான் மதுரா மேம் குட் புக்கில் வந்துருக்கேன்.

 ஒரு சின்ன ப்ராக்ரஸ்!

அடுத்து ரேஷ்மா குட்புக்கிலும் வந்துடுவேன். அப்புறம் அவ மனசிலும்!

என்ன.. பார்வைடா அந்த மதுராவுக்கு!” என்று யுவி சிலாகிக்க,

“இப்ப எதுக்கு அவளைப் பத்தி பேசுற? நீ ரேஷ்மா மனசுல வந்தா போதும்!

வேற எவளைப் பத்தியும் எனக்கு கவலை இல்லை!”

“என்னடா இப்படி பேசுற? மதுரா நீ நினைக்கிற மாதிரி இல்ல.

ரொம்ப நல்லவங்க. ரொம்ப ஹானஸ்ட்.  ரேஷ்மாவுக்கு ரொம்ப லாயலா இருக்காங்க.

என்னைப் பார்த்தாங்க பாரு.. ஒரு பார்வை. அப்படியே என்னை எடை போடும் பார்வை!

நீ நல்லவனா.. இல்லை ஜொள்ளு பார்ட்டியா என்று அளவிடும் பார்வை! நல்லா ஸ்கேன் பண்ணின அவங்க முகத்தில் ஒரு திருப்தியை பார்த்தேன்!”

“ஏய்.. என் வாயில எதாச்சும் வந்துட போவுது! ரொம்ப ஹைப் கொடுக்காதே அவளுக்குப் போய்!

அது என்ன பழக்கம்? ஆபிசில் வேலை செய்றவங்கள கை நீட்டி அடிக்கிற பழக்கம்!

திமிர் பிடிச்சவ.

 ராங்கி.

 பொம்பளையா லட்சணமா இல்லாம அது என்ன ஆம்பளைய கை நீட்டி அடிக்கிற பழக்கம்?” ரேவந்த் திட்டிக் கொண்டே போக..

“டேய்… டேய்.. ஸ்டாப். ஸ்டாப்.. என்ன இது இவ்வளவு கோவம் அவங்க மேல?

 நீ இப்ப பேசுறத யாராச்சும் கேட்டா, டிபிகல் மேல் சாவனிஸ்ட்ன்னே சொல்லிடுவாங்க” என்றான் யுவி ரேவந்திடம் இவ்வளவு கோபத்தைக் கண்ட  ஆச்சர்யத்துடன்!

“மேல் ஷாவனிஸ்ட்ன்னு நினைப்பாங்களா? நினைச்சா நினைச்சுட்டு போகட்டும்! ஐடிசி!”

“என்ன? ஐடிசியா? அப்படின்னா?”

“ஐ டோன்ட் கேர்ன்னு அர்த்தம்! அதெல்லாம் ஜென்சி பாஷை!

உன்னை மாதிரி நைன்டீஸ் கிட்ஸுக்கு புரியாது!”

“ஓ.. அப்படியா? ஸார் எப்போ இந்த பாஷை  எல்லாம் கத்துக்கிட்டீங்க?”

“எல்லாம் என் கோச் லக்கியிடம் தான்!”

“லக்கியா யார் அது?”

“என்னோட பிக்கிள் பால் கோச்!

என்னோட குட்டி குரு!

 க்யூட்டி.. லவ்லி லக்கி! அவ கிட்ட இருந்து தான் கத்துகிட்டேன்!”

“டேய்.. என்னடா சொல்ற? உனக்கு விளையாடக் கூட நேரம் இருக்கா?”

“இப்ப இருக்கு. திருப்பூர்ல ஒரு நல்ல ரிசோர்ஸ் கிடைச்சுருக்கான். பேரு நவீன்!

ரொம்ப எஃபிசியன்ட் அண்ட் லாயல்! ராம் அங்கிளோட பெஸ்ட் பிக்(Pick) அவன்!

அவர் ரெஃபரன்ஸ்! நான் இல்லாட்டியும் எல்லா ஓர்க்கும் ஓனர்ஷிப் எடுத்து பண்றான்!

நான் இங்கேயிருந்தே மானேஜ் பண்ணிக்கிறேன்!

இங்க சென்னை ஃபேக்டரியில ஒரு பெரிய இஸ்யூ இருந்துச்சு! இப்ப அதுவும் தானே சால்வ் ஆகிட்டுது.

ஒருத்தன வேலையை விட்டு அனுப்பனும். ஆனா முடியாம இருந்துச்சு.

ஆனா அங்க போனா சம்பந்தப்பட்ட ஆளோட பொண்டாட்டியே அவன் மேல போலிஸ் கேஸ் கொடுத்துட்டா!

அதை சொல்லியே அவனையும் வெளியே அனுப்ப போறோம்”

அதான் நான் இப்ப கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கேன்!

 இப்ப என் ஃபோகஸ் எல்லாம் உங்க கல்யாணத்துக்கு தான்! பார்த்து நடந்துக்கோ” என்று சொல்லி போனை வைத்து விட்டான் ரேவந்த்!

ரேஷ்மா குட்புக்கில் வாடான்னா, மதுராவின் குட்புக்கில் வந்துட்டானாம்!

யார் அவ. சரியான தாடகை! பெண்களில் இப்படியும் சிலர்! லக்கியின் பெரிய அக்கா போல தாயாகவும் சிலர்!

அந்த தாடகையும் தாயும் ஒருவளே! அதுவும் அவனின் அந்த ஸ்வீட்டி தான் என்று யாராச்சும் அவன் கிட்ட சொல்லுங்கப்பா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!