புது மஞ்சள் புது தாலி
அத்தியாயம் 4.2
ஏ பூர்ணா , இனி தள்ளி நிக்காத இது தான் என் நம்பர் அப்பப்ப போன் பண்ணு நேரமாச்சு உன் மாமா வந்துருவாக நா போறேன் என்று கவிதா கிளம்ப ,
அவளையே பார்த்துக் கொண்டிருந்த வேலுவை அசட்டை செய்து தன் போக்கில் உணவை உண்ண, ஏட்டி! இப்பவாது என்ன நடந்தது சொல்லுவே நெஞ்சு அடிச்சுகுது , ஒன்னும் தெரியாம நா கேடக்கென், திடுதிப்புனு அய்யா மாரடைப்புல போய்டாங்க பவி பிறந்த சமயம் எல்லாம் நாந்தென் பார்க்கணும் கல்யாணம் தெரியும் தான் எப்படியோ அவ பொலப்ப பார்த்து நல்ல இருக்கட்டும்னு நெனச்சேன் என்று பெருமூச்சு விட்ட படி தாமரை சொன்னத நான் கேட்ருக்ககூடாது , எல்லாருக்கும் நல்லதுனு நெனச்சேன், என்னால நீயும் காயப்படமா இருப்பல அதான் ஒதுங்கி போனேன் தப்பபோச்சு.
இல்லவே, நீ செஞ்சது தான் சரி, தாமரைய சாடவு சொல்லாத , எல்லா பொண்ணுகளும் அப்படித்தான் , தன்ன மட்டுமே புருசன் சுத்தி வரணும் , தன்னுடைய பேச்சுக்கு மதிப்பு குடுக்கணும், தன்னை தாண்டி யாரையும் பெருசா நினைக்க கூடாத இப்படி எல்லாம் ஒவ்வொரு பொண்ணுக்கும் கனவு இருக்கும் , நானும் அப்படி தான். நீ சும்மா அவ கிட்ட சொம்பு இப்படி , அப்படினு அளந்து விட்றுப அது அவள தூண்டி விட்ருசு, சும்மாவே உங்க அம்மைக்கு நான்ன நாட்டு வெல்லம் மருமகளுக்கு அவங்களும் கொஞ்சம் ஒத்துஊத என்ன நீ ஊதி தள்ளிட ,
அவன் முகம் சுருங்கி போனது அவளின் வார்த்தையில் சம்முவோ அவனிடம் , ஏம்ல! மூஞ்சிய சுறுக்குற நெசந்தனே ஆன இதம்லே நிதர்சனம் எந்த ஆம்பிளைக்கும் அவன் குடும்பம் தான் முதல்ல , அந்த குடும்பத்தில அம்மா, பொண்டாட்டி, புள்ளைக்கு தான் இடம் நட்புக்கு இடம் இருக்காது , நீ உன் குடும்பத்துக்காக என்ன ஒதுக்கி வச்சதுல துளி கவலை இல்லை, நீ யோசிச்சு பாரு உன் அம்மையும் பொண்டாட்டியும் என்னிய வேண்டாம்னு சொல்லியும் நீரு என் கூட பழகி இருந்த அது தம்லே தப்ப போயிருக்கும். இதுக்கு நீ வெசன படவேண்டிய அவசியம் இல்லவே.
வேலு மனம் வேதனையடைந்தது ஏன் தங்களை யாரும் புரிந்து கொள்ள வில்லை என்று அதை சம்முவிடம் கேட்கவும் செய்தான. ஏட்டி, எல்லாரும் நம்மள தப்ப புரிஞ்சுக்கிட்டாங்க ?
அவனை உற்று பார்த்தவள் ஏன்னா , நாம தப்பாதாம்லே இருக்கோம் என்க , அவன் அரண்டு விட்டான் நெஞ்சில் கை வைத்து, ஏட்டி என்னடி கோட்டி கழுத என்னாலே சொல்ற என அதிர்ச்சியாக வினவ
சம்மு அவன் முகம் பார்த்து சிரிப்பு வந்தாலும் அடக்கி , நேசமத்தான் சொல்றேன்லே கேட்டுக்கோ , உங்க அப்பரு பெரிய சம்சாரி எல்லாரையும் நல்ல விதமா நடத்துவரு,ஊருக்கு ஒன்னுன அவகதான் மொத நிப்பக , பழக்க வழக்கம் சுத்தமா இருக்கும் தன் காட்டில கூலி வேலை செய்றவங்களுக்கும் மரியாதையா நடத்துவர்ரு, பண கஷ்டம்னு போன நல்ல செய்வாரு ஆன அவரோட வட்டத்துக்குள்ள கூலி காரங்களுக்கு இடம் இருக்காது அவரோட பழக்கம் எல்லாம் அவர மாதிரி சம்சாரி கிட்ட தான் இருக்கும் ,
உங்க அம்மையும் அப்படித்தான் அவங்க அந்தஸ்த்துக்கு ஏத்த வீட்டுல தான் கை நனைப்பாங்க சொந்தமா இருந்தாலும் எங்கள மாதிரி கூலி காரவக வீட்டுக்கு வரதே பெருசு,
இங்க மட்டுமில்ல எல்லா இடத்திலும் இப்டித்தான் அவங்கவங்க தோதுக்கு ஏத்த மாதிரி காசுக்கு தக்க வட்டம் போட்டு அதுக்கு சமதியான ஆள் வட்டத்துக்கு உள்ளேயும் , வெளியேயும் மாறி மாறி இருப்பாங்க,
நம்ம ரெண்டு பேரும் அப்டியா ! வேலு பெரிய சம்சாரி , சம்மு கூலி . வேலுக்கு தோட்டம் , தோப்பு, வீடு , சொத்து , சொந்தம் ஜனக்காட்டு அப்படி ஏகபட்டது இருக்க ,
சம்மு கூலி வேலை , ஓட்டு வீடு , சொந்தம் சொல்லிக அம்மாவ விட்ட யாரு இருக்க , வேலு வீட்டுல வேலை செஞ்சு வயித்த கழுவுற நான் அவன் வீட்டு மேசையில உட்கார்ந்து சாப்பிட முடியுமா இல்ல விடுவாகள?
வேலுக்கு முகமே செத்து விட்டது , அவள் சொல்வது அனைத்தும் உண்மை தான், அய்யா பழக்கம் எல்லாம் அவகள மாதிரி சம்சாரி தான் வேற்றுமை இல்லாம பழகினாலும் யாரும் உள்ள வந்தது இல்ல , அம்மா பத்தி சொல்லவே வேண்டாம் என்ன சொல்வது பெருமூச்சுடன் அவளை பார்க்க ,
என்னாலே , நான் சொன்னது நெசம் தான உங்க அம்மைக்கும் , தாமரைக்கும் தன் காட்டில் கூலி வேலை செய்யும் சம்முவ பிடிக்கும் ஆன வேலுக்கு பிரியமான உரிமையான தோழி சம்முவ பிடிக்காது. அதுவும் திமிர யாரையும் மதிக்காத தன்மானம் பாக்குற சம்முவ பிடிக்கவே பிடிக்காது , அவங்கள பார்த்து கை யேடுத்து கும்புடுறவ மத்தியில் நிமிர்ந்து நடக்குற கூலி வேலைக்காரி சம்மு அறவே பிடிக்காதுலே ,
வேலு அவளின் உஷ்ன குரலில் அதிர்ந்து போய் பார்த்தான் அவர்கள் காட்டில் வேலைக்கு செல்லும் போது எத்தன பேச்சு ,எவ்வளவு உதாசீனம் நேரம் செல்ல செல்ல சம்மு கோபம் கூடி கொண்டே போனது அவளின் ஆதங்கம் வார்த்தைகளாய் வர தொடங்கியது , அப்படி என்னாலே நீரு பெரிய சம்சாரி என பரிகாசம் செய்தவள்.
எங்கோ ஒரு மூலையில் சரியா பஸு கூட வராத மலையோர ஊரு அதா சுத்தி இருக்கிற உம்மட நிலம் பெருசோ , பெரிய தோட்டம் , தோப்பு. நாங்க தான் பார்த்தோமே உங்க பவுச.
கோவில் திறப்புக்கு பட்டு சேலைய கட்டி , அந்த கல்லு தோடு , அட்டியல் , காசு மாலைய போட்டுகிட்டு நால பக்கமும் சுத்தி வாரது பாக்கடும்னு , இந்த ஊரு சிரிக்கிகளும் எட்டி எக்கி பாக்குராளுக ஒரே மகாராணி தோரணை தான் .
அப்புறம் என்ன ஆச்சு , இரு கையும் விரித்து காண்பித்து நம்ம ஊரு கோவில் திறப்புக்கு வந்த மந்திரிய பார்த்ததும் உங்க அம்மை சேலையை மேல போர்த்தி குனிஞ்சு குனிஞ்சு கும்புடுறாக எனக்கு ஒரே ஆச்சர்யம் நம்ம கொடியரசிய இது! அதுவும் மந்திரி போற வர கைய கீழ இறக்கல அவக போற ரோட்ட பார்த்து நின்னவக தான் அரை மணி நேரமும் கைய கீழ இறக்கி வைக்கல!
தன் தாயை பரிகாசம் செய்தவள் மீது சடவு வந்தாலும் சம்மு கிட்ட பேசி வெல்ல முடியாது , கொடி அப்படித்தான் பசை உள்ள இடத்தில் ஒட்டுபவர் , மற்றவைகளை துட்ச்சமாக பார்ப்பார். இதில் சம்முவே அவரிடம் அதிகம் வாங்கிருப்பாள். யாரையும் இளக்காரமாக பேசிவிடுவார் தனக்கு நிகர் யாருமில்லை என்பது போல்,
ஏலே வேலு , நான் கூலிக்கு அரிசி வாங்குன உன் அம்மை பிச்சை தர நினைப்போடு தான் தரும் , அது என் உழைப்புலே வெயில்ல நின்னு முப்பது மூட்டை அரிசி புடைச்ச தான் ஒரு மூட்டை அரிசி நான் வேலை செஞ்சு தாம்ல அரிசிய கூலியா வங்குறேன் ஓசிய இல்லவே , ஆன உன் அம்மை கூலிக்கு மாறடிக்குற கூட்டன்னு நக்கல பேசுவாக, மனசு தீய எரியம்.
விருந்து என்ன பெரிய விருந்து நான் பசிக்கு சாப்புடுறவ ருசிக்கு இல்லவே , எனக்கு கறி சோறும் ஒன்னு தான் கம்ம களியும் ஒண்ணுதான். தன் கையை வைத்து தொண்டைய தடவி இதுக்கு கீழ போன ஒரு மண்ணும் இல்ல எல்லாம் ஒன்னும் தான் ,
வேலுக்கு கண்களில் நீர் நிறைந்தது அவளின் வேதனை பேச்சை கண்டு உணவுக்காக ஒரு பெண் படும் பாடு தான் எவ்வளவு யாரும் தன் பிள்ளைகளுக்கு சொத்து சேர்க்க விட்டாலும் உணவுக்காக கையேந்தும் நிலைக்கு வைக்க கூடாது.
ஆனால் சம்மு இன்று பேசிவிடும் நிலையில் தான் இருந்தால் தம் மன குமுறலை, உம்ம கிட்ட கூலிக்கு கையேந்துற என்னிய பிச்சைக்காரிய பாக்குற நீரு அங்க கையெடுத்து கும்பிட்டு நிக்குரயே , ஆமலே நான் கூலிக்கு மாரடிக்குற கூட்டம் தான் உம்ம மாதிரி கும்புடு போடுற கூட்டம் இல்லவே , நான் நாய உழைக்கிறேன் வாழ்றேன் உமக்கு ஏன் அடங்கணுங்கிரென்.
வேலு தலை நிமிரவே இல்லை , இதயத்தில் ஒரு வலி அவள் சொல்வது அனைத்தும் நெசம் தான் , கொடிக்கு எப்படியாவது அவளை அடி பணிய வைக்கும் எண்ணம் இருந்தது அதனால் தான் அவ்வளவு பேச்சும் , அதை சம்மு உதறி தள்ள , வள்ளி பிடித்து கொண்டார் .
உம் அம்மை சொல்லுக்கு ரோசம் பார்த்து தான் என்ன பெத்தவ நாப்பத்து ஆறு வயசு ஆம்பிளைக்கு என்ன முடிச்சு போட்டக, இப்போ என்ன ஆச்சு உன் அம்மை பேச்சுக்கு தக்க நான் வாழ வெட்டியா நிக்கேன் , என் அம்மா வயித்தெரிச்சலுக்கு நீரு வெட்டியா வாழம நிக்குற, சொல்லு கொள்ளும் போல வேலு என வேதனையாக சொன்னாள் .