அன்று இரவு வேலு வீடு செல்ல வில்லை, களத்து மேட்டிலே தங்கினான். அவனுக்கு துணையாக கலைவாணனும், மாறனும் உடன் இருந்து கொண்டார்கள். வேலு மனதளவில் தன்னை தயார் படுத்தி கொண்டான், துணிந்து விட்டால் நடுகடல் கூட முழங்கால் மட்டுமே. நாளைக்கு எதுவும் நடக்கும் தான் திடமாக நிற்க வேண்டும், தன் முகம் பார்த்தே தன் விட்டார் தைரியம் கொள்வர்கள். வேலுக்கு கொஞ்சம் பயம்மும் இருந்தது தான் தாமரையை நினைத்து, அவள் எதையும் தன் சிந்தனையில் இருந்தே நோக்குவாள், பிரித்து அறிய தெரியாது. மற்றவர்கள் சொல்வதிலிருந்து நியாயத்தை வைத்து மட்டுமே முடிவு செய்வாள். நாளை என்ன மாதிரி முடிவு எடுப்பாள் என்று கணிக்க முடியாது.
தாமரை விட்டார் அத்து விடுவதில் உறுதியாக இருப்பது தெரியும்! ஆனாலும் ஒரு நம்பிக்கை வேலுக்கு, முதற்கட்ட பேச்சு வார்த்தையிலேயே விலக்கி விடமாட்டார்கள். கணவன், மனைவி நிலைப்பாடு, உறுதி, இரு குடும்ப மக்களிடமும் பேசிய பின்பும் நாற்பத்தி ஐந்து நாள் கெடு குடுத்த பின் தான் முடிவு செய்வார்கள்.
வேலுக்கு , தன் மனைவியுடன் சேர்ந்து வாழும் ஆசை இல்லாமல் இல்லை, மரணம் வரை சென்று வந்தவளை ஒருமுறையாவது காண மனம் துடித்தது. அவனை தடுப்பார் யார்? போய் பார்த்து விட்டால், அவளின் அழுகையும், இவனின் சமாதானமும் நிலைமையை பழைய மாதிரி கொண்டு வந்து விடும். தந்தை இல்லாமல் இரு தாய்மார்கள், குழந்தை, வீட்டு பொறுப்பு, அத்தோடு தங்களின் ஆதாரம் விவசாயம்,அதை யார் பார்ப்பது. இத்தனை கடமைகள் தன் தலை மேல் நிற்க, முன் போல் தாமரை பின்னே சுற்ற முடியாது. இனி, தெளிவாக பேசி புரிந்த கொண்ட பின் தான் அவளை அழைத்து வர வேண்டும்.
தாமரைக்கும் பொட்டு தூக்கம் இல்லை. விடிந்தால் பஞ்சாயத்து, அவள் கருத்தை கேட்டு இங்கு எதுவும் முடிவு செய்ய வில்லை. தந்தையும், தாயோடு சேர்ந்த அவர் வீட்டு உறவுகளும் தான் தீர்த்து விட முடிவு செய்தார்கள். உனக்கு இது தான் நல்லது, இதை ஏற்று கொள். உன் மாமியாரின் வாய்க்கு இனி நீ அங்கு போய் இருப்பது கஷ்டம் என சொந்தங்களின் பேச்சும் அவளை கலவரப்படுத்தியது. இந்த ஒரு வாரமும் உடை மாற்றுவது, பாத்ரூம் கூட்டி செல்வது, தன்னை சுத்தப் படுத்துவது, வாந்தி எடுத்தால் கூட கையில் ஏந்தி, ஒரு குழந்தை போல் பார்த்து கொண்ட தாய், தந்தை சொல் கேட்காமல். தன்னை உதாசீனப்படுத்தி ஒதுக்கி தள்ளிய கணவனையும், பல பேர் முன் அசிங்க படுத்திய மாமியாரையும் நம்பி மீண்டும் அந்த வீட்டிற்கு செல்வதா?
மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தால் தாமரை. உடலும், மனமும் புண்ணாகி கிடக்க, அதிக சோர்வு வாட்டியது. வாயிலிருந்து அடி வயிறு வரை ஒரே எரிச்சல், மயக்கம் வரும் அளவுக்கு பசித்தது, ஆனால் உணவு இன்னும் குடுக்க வில்லை. நீர் ஆகாரம் மட்டும் தான் இரண்டு நாள் போகட்டும் என்று விட்டார்கள். நீர் வெளியேறும் போது கடுத்தது. ஏதோ ஒரு வேகத்தில் செய்து விட்டாள், தன் உயிர் போராட்டமும், மருந்தின் வீரியமும் உயிர் தப்பிய பின்னும் விடவில்லை.
அவளின் மிக பெரிய வேதனையாக இருந்தது, குழந்தைக்கு பாலூட்ட முடியாது என்பது தான். பாலில் விசம் கலந்திருக்கும் கொடுக்க கூடாது என்று சொல்லி விட. மனம் துவண்டது, குழந்தையை காணும் போது எல்லாம் மிகுந்த குற்றவுணர்வாகி போனது. அவள் அத்தை சொல்லிய “ பிள்ளைய கொள்ள பார்த்த” என்ற சொல் மனதை அறுத்தது. பெற்ற பிள்ளையை ஒரு தாய் கொள்ள நினைப்பாள, கணவன் கூட தன்னை புரிந்து கொள்ள வில்லையே ஆற்றாமையாக இருந்தது.
தாமரைக்கு வேலு மீது நம்பிக்கை சுத்தமாக இல்லை. குழந்தை பிறக்கும் வரை உள்ளங்கையில் வைத்து தாங்கியவன், தன் கண் பார்த்து நடப்பவன், தன் விருப்பத்தையே பெரிதாக கருதி முடிப்பவன், இதுவரை ஒரு கடுங் சொல் சொல்லாதவன் தன்னை கை நீட்டி இரு முறை அடித்து விட்டானே. குழந்தை பற்றி தன்னுடைய எதிர்பார்ப்பும், ஆசையும் தெரிந்தும் தன்னை நம்பாமல் பேசிவிட்டேன். அத்தோடு, இதுவரை தன்னை காணவும் வர வில்லை, தன் செயலுக்கு மன்னிப்பும் கேட்க வில்லை, கணவன் மீது கோபம் அதிகமாகியது. அதுமட்டுமில்லாமல் மனதில் சிறு நினைவு, மற்றவர்கள் சொல்வது போல் மாமியார் கைக்குள் சென்று விட்டானோ என்று!.
மறுநாள், காலை ஊரில் உள ஐயனார் கோவில் ஆல மரத்தின் அடியில் தான் பஞ்சாயத்து. இரு குடும்பத்தோடு, ஊரின் பெரிய தலைக்கட்டுகள் மட்டுமே! . ஆண்கள் கிளம்பி கோவில் வர, அவர்களோடு இணைந்தார் அரசி, பெரியாத்தா, மற்றும் வாணி. இவர்கள் வருகையை கண்ட கலை, மாறனை முறைக்கு.
“ மாமா! கிராமத்து மக்க நாசுக் பாக்கமாட்டாங்க, வண்ண வண்ணமா பேசுனா, யாரு சரிக்கு சரி பேசுறது. பூமணிக்கு ஏத்த ஜோடி எங்காத்தா அரசி தான் “ மாறன் விளக்கிய பின் அமைதியாகி விட்டான் கலை.
வேலு நிதானமாகவும், தெளிவாகவும் இருந்தான். தாமரைக்கு தான் படபடப்பும், பயமும் அதிகமாகியது எல்லாரையும் பார்த்து. இவர்கள் பக்கம் ஆறு பேர் மட்டும் வர, சிவம் தான் முப்பது பேரை திரட்டி கொண்டு வந்தார். அவர்களை யோசனையாக கலை பார்க்க, மாறன் தான் தைரியம் சொன்னான், ஊர் நம்மது அவர்களால் என்ன செய்ய முடியும், இருந்தும் தன் தம்பிக்கு அழைத்து சொல்லி விட்டான். வேலு நிமிர்ந்து தாமரையை பார்த்தான், இடைப்பட்ட நாளில் பாதியாக குறைந்து இருந்தாள். வேதனை தான், தாமரை அப்படி கூட நிமிர்ந்து வேலு முகம் பார்க்க வில்லை.
பெரியவர்கள் வந்து ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தையை ஆரம்பித்தார்கள். இரு தரப்பும் ஒருவருக்கொருவர் குறைகளை சொன்னார்களே ஒழிய, அத்து விடு என்று யாரும் சொல்ல வில்லை. எந்த தரப்பு அப்படி சொல்கிறதோ அவர்கள் தான் அடுத்த தரப்பிற்கு தண்டம் வழங்க வேண்டும். கலைக்கு கொஞ்சம் சிரிப்பு வரும் போல் இருந்தது, அரைத்த மாவையே அரைத்து கொண்டிருக்கும் அரசி மற்றும் பூமணியை பார்த்து.
பஞ்சாயத்து தலைவருக்கு கண்ணை கட்டியது. இவர்கள் இருவரையும் பேச விட்டால், விடிய விடிய கூட வாதம் போகும் என்று உணர்ந்து. முடிவாக என்ன தான் சொல்கிறீர்கள் என்று பாதிக்க பட்டவர்கள் பக்கமே கேட்டார். இப்படி ஒரு வார்த்தை வரும் என்று தான் பூமணி வீட்டார் வேறு ஒரு யோசனையும் வைத்திருந்தார்கள். அது என்னவெனில், வேலு தன் மனைவி, பிள்ளையோடு டவுனுக்கு தனி குடித்தனம் போகவேண்டும், ஏதேனும் நல்லது, கெட்டதுக்கு தன் தாய்மார்களின் வீடு சென்றால் போதுமாம்.
கொதித்து போன அரசி, வாய் திறப்பதற்குள். அவரை அமர்த்தி விட்டு வேலுவே பேசினான்.
“ பெரியவங்களுக்கு வணக்கமங்க! அய்யா, நான் கட்டுனது சொந்த மாமன் மவள தான், எம் மாமனும் இந்த ஊரு தான். எதையும் ஒளிச்சு, மறச்சு, பொய் சொல்லி கல்யாணம் கட்டல, இதுதான், என் குடும்பம், உறவு, வம்மை, வளமை சொல்லி தான் கல்யாணம் பண்ணுனேன். அவங்களுக்கும் எல்லாம் தெரியும். இப்ப எங்கப்பரும் இல்லாம, தலை மகனா நான் தான் குடும்பத்தை தாங்கணும். இவங்க சொல்ற மாதிரி விட்டு ஒதுங்க முடியாதுங்க. எங்க அம்மை ரெண்டு பேருக்கும் ஆதரவு யாரு? நான் ஒத்த பிள்ளையா நிக்கேன்! தோட்டம் தொராவு அதிகம் யாரு பார்ப்பா! வெள்ளைக்காரன் காலத்துக்கு முந்திய காலத்திலே விவசாயம் பார்த்த குடும்பம் நாங்க, எங்க வாழ்வாதாரமும், அடையாளமும் அது தான், விவசாயம் விட்ட வேற என்ன எனக்கு தெரியும். இவங்க சொல்ற எதுவும் சாத்தியப்படாது. குத்து கல்லு மாதிரி மகன் நான் இருக்கும் போது எங்கம்மைகா ரெண்டு பேரும் ஆதரவு இல்லாம ஏன் நிக்கனும், ஆதரவு தேடி அக்கா வீடு சென்றாலும் அது நான் செத்ததுக்கு பின்ன தான். எல்லாம் தெரிஞ்சு தான பொண்ணு குடுத்தாங்க, அப்ப அனுசரிச்சு தான் போவணும்” என்று வேலு முடிக்க
வேலுவின் தாய்மார் இருவருக்கும் கண் கலங்கியது, எவ்வளவு மரியாதையாக வாழ்ந்த குடும்பம். இன்று மகன் குற்றவாளியாக கை கட்டி நின்று பேசும் போது மனம் வலித்தது.
தலைவர் தாமரை வீட்டு ஆட்களை பார்க்க, “ பொண்ணு ரொம்ப பயப்படுதுங்க, சரி இல்லனாலும் புருசன அனுசரிச்சு போலாம், மாமியாரை என்னாண்டு பாக்குறது. என்ன பண்ணனாலும் குத்தம் சொல்றாங்க. சம்சாரி வீடு வேலை அதிகம், எல்லாத்தையும் எடுத்து கட்டி செய்ய முடியுமா! சின்ன பிள்ளை மாமியார் கொடுமைலாம் தாங்குற வயசா? ஊருக்கு வேசம் போடுறாக அவங்க பேச்ச நம்புறீங்க. ஒத்த பிள்ளையோட நிக்குது, அந்த குழந்தைக்காவது மருமகன் யோசிக்கனும். நாங்க என்ன பெத்தவங்கள வெட்டியா விட சொல்றோம். செத்து பொழச்சு வந்துருக்கு, அது விருப்பத்தையும் பார்க்கணும்ல!” நயந்தே பேசினார் பூமணி.
அவரின் பேச்சில் அசந்து நின்றதென்னவோ கலைவாணன் தான். பஞ்சாயத்தில் தீர்ப்பு கொடுத்தால் மீற கூடாது, தீர்ப்பு ஏற்றுக்கொள்ளாத போது அவர்கள் தான் தண்டம் கட்டி ஒதுங்க வேண்டும். இதில் இரண்டும் பூமணிக்கு சாதகம் தான். ஆனால், விடுவார அரசி!
“அடியே பூமணி! உன்னிய இருபத்தி அஞ்சு வருஷமா பாக்குறேன், நீயி போடுற நாடகம் எனக்கு தெரியாதா. எப்படி சரியில்லாத புருஷனா? எங்கடி உம் மவ அந்த ஊமச்சி, அவள பேச சொல்லு. தினக்கி ஒரு புது சீலைய கட்டிகிட்டு ஊர் சுத்தும் போது, கண்டதையும் வாங்கி குவிக்கும் போது, போன்ல என்னவோ! டேய் மாற அது என்னடா?” என்க
“ஸ்டேடஸ் ஆத்தா , எம் மாமன் மதுரை வீரன்னனு பாட்டு” என்று எடுத்து கொடுத்தான் மாறன்.
“ம்ம்ம் அப்படி பாட்டு போட்டு மாமா மாமன்னு அவன கவுத்து கேட்டத எல்லாம் வாங்கி நீட்டினானே. காசா காசுன்ன செலவு செஞ்சான், தண்ணியை மாதிரில அள்ளி தெளிச்சான். யார் வீட்டு காசு, எம் புருசன் ராப்பகல உடம்ப உருக்கி சம்பாரிச்ச காசு.
“மாமியார் கொடுமைய? இந்த சீமை சித்ராங்கிக்கு ஏறுன காரு, படுத்தா ஏ.சி, இவ கேட்டுக்கு அம்பதாயிறத்துக்கு பருசசேலை, புருசன் வீட்டு சீர முப்பது பவுன் நகை” என ஆவேசமாக முந்தியை உதறியவர்,
இரு கைகளையும் விரித்து “முப்பத்தி ஆறு வருசம் ஆச்சு. நானும், எம் கூட பொறந்தவளும் இங்கு வாழ வந்து பத்தாயிரம் தாண்டி சேலை எடுத்து கட்டல. இந்த சிறுக்கி கல்யாண சீலை லட்சத்த தொடும். கொடுமை பண்ணுற மாமியார் தான் இம்புட்டு செஞ்சு அழகு பாகுறனாக்கும். ஊரா கேளுடி சொல்லும் அரசி யாருன்னு”
“பதினொரு வருசம் பிள்ளை இல்லாம பொறந்த ஒத்த மவன்னு இவன் ஒருத்தனுக்கு தான் இம்புட்டும். நம்ம மகன் நல்ல இருந்த போதும், அவன் சிரிச்சு முகமா இருந்த போதும்மன்னு சாகுர வரைக்கும் உழைச்சு செத்தார்டி அந்த மனுசன். சொந்தம்ன்னு அணுசரிச்சு போக மாட்ட ஆன, சொத்துல பங்கு வேணுமோ!” என்று ஆவேசமாக கேட்க
ஒருவரும் வாய் திறக்க வில்லை. வேலுக்கு குற்ற உணர்வு தான் அதிகரித்தது தந்தையை நினைத்து. வேலு தெளிவாக சொல்லி விட்டான், “ ஒன்றாக தான் இருக்க வேண்டும், தாய் இருவரையும் அனுசரித்து தான் செல்ல வேண்டும் என்று”. அதற்கு ஏதோ சொல்ல வந்த பூமணியை தடுத்து நிறுத்திய கலை. ஊர் தலைவரிடம்,
“அய்யா! குடும்ப சண்டை, புருசன் பொண்டாட்டி பிரச்சனை. அவங்க ரெண்டு பேரை மட்டுமே கேளுங்க! வேற யாரையும் உள்ள விடாதீங்க. விசயம் வேற மாதிரி போய் குடும்பம் உடைந்து போகும்” என்று சொல்லி விட. தலைவரும், நேரடியாக தாமரையிடமே கேட்டார்.
அதுவரை தலை குனிந்து நின்ற தாமரை, பயத்துடன் நிமிர்ந்து பார்த்தாள். முதலில் கணவனையும், பின் தாய், தந்தைதயையும் பார்த்தவள் தன் குழந்தையை இறுக பற்றிய படி மனதில் ஒத்திகை பார்த்து தான் யோசித்ததை சொல்லி விட்டாள்.
“ எனக்கு விவாகரத்து வேண்டாம் பெரியப்பா, அதுக்காக எம் புருசன் கூட வீட்டுக்கு போறேன்னு சொல்லல! என்னை கொஞ்ச நாள் தனியா விடுங்க, எனக்கு ரொம்ப கஷ்டமாக, வேதனையா, குழப்பமா இருக்கு. எம் புருசன் கூட போக பயமா இருக்கு. இப்போ என்னால எந்த முடிவுக்கும் வர முடியல. கொஞ்ச நாள் என்னை விட்டு விடுங்க” என கை எடுத்து கும்பிட்டு அழுபவளை பார்க்க எல்லோருக்கும் பாவமாக இருந்தது.
வேலுக்கும் முகத்தில் வேதனை படர்ந்தாலும் சரியென தலையசைத்தான். ஆனால், அரசி தான்,
“இது என்ன பேச்சு, ஒன்னும் தெரியாதவ மாதிரி. கீரையில சாறு ஈருத்தாப்ல நீருண்ணு. ஒன்னு ஒத்து வாழு! இல்லைனா அத்து வாழு. சீமைய ஆளுற மகாராணிக்கு நேரம் குடுகணுமாக்கும். வந்து உம் புருசன் புள்ளையா பாருடின்ன! ஏலே! வேலு அவ இன்னமும் நம்மள தான் சரிகட்டி போக சொல்ற” என தாமரையின் பேச்சிற்கு அரசி கொட்டு வைக்க.
கலைவாணனுக்கு புரிந்தது தாமரையின் மனநிலை, உடனே வேலுவை தள்ளி கொண்டு சற்று வெளியே செல்ல, மாறனும் உடன் சென்றான். எவ்வளவு பெரிய பிரச்சனையும் கொஞ்சம் தள்ளி போட்டு நிதானித்தால் சுபாமாக முடியும் என்று எண்ணம்.
பூமணி தான் வாங்கு வாங்கு என்று வாங்கி கொண்டிருந்தார் தாமரையை. அவர்கள் யாருக்கும் தாமரையின் சொல்லில் விருப்பம் இல்லை. அத்து விடு என்று இவர்கள் இருக்க, இவளது பேச்சு மற்றவர்களுக்கு அல்லவா இவர்கள் மீது சந்தேகத்தை கிளப்பும். சாவு வரை இவள் சென்றதால் தானே. போலீஸ் வரை இவர்கள் சென்றது. வேலு மீதும் அவன் குடும்பம் மீதும் தனிப்பட்டு என்ன கோபம். தாமரை கொண்டு தானே இவ்வளவும். இன்று தாமரையின் பேச்சு யாரை கெட்டவர்களா காட்டும்.
இவர்கள் அடித்து கொள்வதை அசால்டாக பார்த்து கொண்டிருந்த பெரியாத்தா, அரசி, வாணி மூவரும் தாமரையின் அண்ணன் மதன் சொன்ன சேதியில் அதிர்ந்து போனார்கள். அவ்வளவு கோபமும், ஆத்திரமும் அவர்களுக்கு வந்தது. அதன் காரணமும், மதன் சொன்னதன் சாரம்சமும் இது தான்.
இன்றே தாமரைக்கும், வேலுக்கும் உள்ள உறவை தீர்த்து விட்டு, ஜீவனாம்சமாக வேலுவின் வடக்கு தென்னந்தோப்பும், மதுரை ஏர்போர்ட் ரோட்டில் உள்ள ஒரு ஏக்கர் இடமும் தாமரை பேருக்கு பதிந்து பத்திரம் கொண்டு வந்தனர். வேலுவின் கையெழுத்து மட்டுமே பாக்கி. குழந்தையும் இவர்கள் பக்கம் இருக்க மறுக்க முடியாததோடு கொடுத்து தான் ஆக வேண்டும்.
இதை கேட்டு தான் இவர்கள் மூவரும் கொதித்து போனார்கள். நிலம் வேலு பிறந்த போது வாங்கினது. பவி பிறந்த பின் தான், நெல்லையப்பன் தான் மகன் குடும்பஸ்தன் ஆகி விட்டான், அவனுக்கு என்று சொத்து வேண்டும் என அவன் பேரில் பதிந்தது. வெளியே யாருக்கும் தெரியாது, தாமரையை தவிர. தோப்பு வருட வருமானம் லட்ச கணக்கில் வரும், நிலமும் பிளாட் போட்டால் கோடியை தொடும், எவ்வளவு சாமர்த்தியம். திட்டமிட்டு செய்த இவர்கள் செயல் அரசியின் வாய்க்கு தூபம் போட்டது.
பத்திரம் எழுதியது எல்லாம் தாமரைக்கு தெரியாது, பேசி வச்சது மட்டுமே தெரியும். ஆனால், சிவதிற்க்கு பத்திர விவகாரம் தெரியும், அவர் சம்மதத்தோடு தான் எழுதியது. பின் என்ன செய்வது, அத்து விட்டால் எவ்வளவு காலத்திற்கு தனி மரமாக நிற்பான் வேலு. வேறு திருமணம் செய்து அவனுக்கும் குடும்பம், குழந்தை வந்து விட்டால். அது தானே அவன் வாரிசு. தன் பெண்ணும், பேத்தியும் தனியாக நிற்ப்பதா. அதனால் தான் வருமானமும், பெரு மதிப்பும் உள்ள சொத்தை கேட்டது. கோர்ட் சென்றால் வருட கணக்காகும். அதுவே, ஊர் பஞ்சாயத்து என்றால் நாள் கணக்கில் முடிந்து விடும். குழந்தை பவியின் பொருட்டே வேலுவும் சம்மதிப்பான் என்று திட்டமிட்டு தானே செயல் படுத்தியது.
அரசிக்கு தான் தாங்க முடியவில்ல, தன் உடன் பிறப்பின் துரோகத்தை. காடும், மலையாக கிடந்ததை அண்ணன், தம்பி இருவரும், அவர்களுக்கு வாக்காபட்ட பாவத்திற்கு பெரியாத்தாவும், அரசியும் தான் கையை இரும்பாக்கி உழைத்து பணம் செழிக்கும் தோப்பாக மாற்றியது. அவர்கள் கேட்டது இருவது வருட உழைப்பு அல்லவா! இரண்டு வருடம் கூட ஒழுங்காக வாழதவளுக்கு அதை தூக்கி கொடுப்பதா! என்ன தைரியம்! அத்து விட்டு அவன் மகளை மட்டும் சும்மாவா வைத்திருப்பான். அவனும் வேற யாருக்கோ திருமணம் செய்து வைப்பான் தானே. அப்போ தங்களது இத்தனை வருட உழைப்பும் யாரோ ஒருவனுக்கு போவதா? தன் மகனுடன் சேர்ந்து வாழ்ந்தால் கூட மனசு ஆறி இருக்கும்! தன் மகனின் மனைவி என்றே ஒரே காரணத்திற்காக பரம்பரை சொத்தை தூக்கி குடுக்க வேண்டுமா!
இனி பேச்சே இல்லை. மகன், மருமகன் யார் சொன்னாலும் தாமரை வேண்டாம் அத்தோடு தம்பி என்ற உறவும். இனி ஒரு முறை சொத்து என்ற பேச்சு கூட இவர்கள் வாயில் இருந்து வர கூடாது.
பேச வந்த மற்றவர்களை தடுத்து. அரசியே பேசினார், மற்றவர்கள் தான் அரண்டு நின்றனர்.
“ ஊமச்சி மாதிரி கமுக்கமாக இருந்து, முதுகுல குத்திடியே! எம் மவனோட உண்மையா தான் வாழ்ந்தியா!” என்க
அதிர்ந்து நெஞ்சில் கை வைத்து பார்த்தாள் தாமரை. பூமணி தான், “ உங்க மவன் மட்டும் அத்து விட்டு சும்மாவா இருப்பான். வேற கல்யாணம் பண்ணுவான். எம் மவ புள்ளையோட தனியா நிக்கணுமோ! அவன் கூட வாழ்ந்தவளுக்கு சொத்து வேண்டாமா!” என நக்கலாக கேட்க,
அரசியின் ஒரே கேள்வியில் சர்வமும் ஆடியது தாமரைக்கு.
“ ஓ! வாழ்ந்தவளுக்கு கொடுக்கணும் தான். ஏலே சிவம்! எம் மவனோடு வாழ்ந்து உம் மவ உடம்பு புண்ணாகி போச்சு, அதுக்கு கூலி கேக்குறாள, உம் மவ” என்க
ஏய்! என்று கத்தி கொண்டு அடிக்க வந்து விட்டார் சிவம். இத்தகைய பேச்சை அவர்கள் யாராலும் தாங்க முடியவில்லை. ஆளுக்கு ஆள் கத்தி சண்டை போட, பதற்றமாகி போனது வாணிக்கு. ஆண்கள் மூவரையும் இன்னும் காண வில்லை. வயதான இவர்கள் இருவரையும் விட்டு போக முடியாது நிலைமையும் கை மீறி விட்டது.
ஊர் பெரிய தலைகள் இரு பக்கமும் அமைதி படுத்தினாலும் கேட்க வில்லை. சத்தமும் ஓய வில்லை. பெரியவர் என்ற மரியாதை போய் அவர்கள் இஷ்டத்திற்கு பேச, அரசி ஒருவரே அனைத்து வாய்க்கும் பதில் சொன்னார்.
பெரியாத்தாவும் முயன்று அரசி கை பிடித்து இழுக்க, வாாணியும் அவர்கள் மூவரும் வரும் வரை சமாளித்தாள் போதுமென்று, தன் தாய்மாமன் தானே பேசி அமைதி படுத்த முயற்சி செய்ய ஒன்னும் முடியவில்லை. கூச்சலும், சத்தமும் தான் அதிகம் ஆகியது.
அரசியும் ஓய்வேன என்று பூமணியை நேராகவே தாக்கி விட்டார், “ அடியே! நீயி உம் மவளுக்கு சொத்து கேட்க எம் புருசனுக்க பிள்ளை பெத்த, ஏலே சிவம்! உம் பொண்டாட்டி யாருக்கு பிள்ளை பெத்தாளோ அங்கு போய் கேளுவே சொத்து. காசு வேணும்னா உழைச்சு சம்பாரி மகளை வச்சு வருமானம் பார்த்து அதுல வாழ்வியோ” என்று ஆங்காரத்தில் பேசும் வார்த்தயில் நிதானமின்றி பேசி விட,
கேட்ட அத்தனை பேரும் நொடி அசைய வில்லை. சிவமும் இந்தளவிற்கு எதிர்பார்க்க வில்லை. பேசுவார் என்று தெரியும் அதுவும் தன்னை பகைத்தால் சும்மா விட மாட்டார் தான். ஆனால், இப்படியான உயிர் கொள்ளும் பேச்சை எதிர்பார்க்க வில்லை. இனி என்ன உடன் பிறப்பு?
நொடி நேரத்தில் இடமே கலவரமாக மாறி விட்டது. சிவமும், பூமணி வீட்டாரும் பெண்கள் என்றும், வயதானவர் என்றும் பார்க்க வில்லை. அடிக்க ஆரம்பிக்க, தடுத்த ஊர் தலைவர்கள் நாலு பேருக்கும் அடி தான். வாய் தாட்டியம் உள்ள அரசிக்கு உடல் வலிமை இல்லாத்தால் நொடியில் சுருண்டு விட்டார்.
தாமரை பதில் மூலம் இனி முடிவு சுபம் தான் என்று வந்த மூவரும் பார்த்தது. தங்கள் வீட்டு பெண்களை அடிக்கும் பூமணி வீட்டாரை தான்.
நடந்த கலவரத்தை தூரத்திலிருந்து பார்த்த மணிமாறன் தம்பி சிவமாறன், கோவிலுக்கு பின் புறம் சற்று தள்ளி இருந்த மூவரை காணாது. சேதி சொல்ல ஊருக்குள் ஓடி விட்டான். அங்கிருந்த பொது ஒலி பெருக்கியில், “ஏலே! வின்னகுடி மக்கா! நம்ம ஐயனார் கோவில்ல ஊர் தலைவரையும், நம்மூர் பொம்பளைகளையும் அசலூர்காரனுகா அடிக்கிறாங்க! ஓடியாவே!” என்று சத்தமாக அறிவித்து விட,
ஊரில் இருந்த அத்தனை ஆண்களும் கிளம்பி விட்டனர் ஐயனார் கோவில் நோக்கி!