ஒவ்வொரு மனிதருக்குள்ளும் தெய்வ நிலையும், மிருக நிலையும் சம விகிதத்தில் நிலைப்பட்டு இருக்குமாம். சூழ்நிலை எதுவாகிலும் தெய்வீகத்தை காத்து நின்று மிருக நிலையை அடக்குவதே மனித மாண்பு. ஆனால், இங்கு தெய்வ சந்நிதியில் மனித மிருகம் கட்டவிழ்க்க பட்டு, தங்களது உக்கிர முகத்தை காட்டி கொண்டிருந்தது.
“என் மனைவியை நான் அடிப்பேன்”… “ எங்கள் வீட்டு பொண்ணை நாங்கள் என்னவும் செய்வோம்”… “பெத்தவங்க எங்களுக்கு இல்லாத உரிமையா”… என்று தங்கள் வீட்டு பெண்களை அடக்கும் ஆண்கள் கூட, அடுத்த வீட்டு ஆண்கள் ஒரு சொல் சொல்ல விட மாட்டார்கள். பெண்கள் மீது கை வைப்பதும், அவர்கள் ஒழுக்க குணத்தை விமர்சிப்பதும். பெண்களின் நுண்ணிய உணர்வுகள் சார்ந்தவை என்பது போய், அவர்கள் சார்ந்த குடும்பத்தின் கௌரவ நிலையே பாதிக்கப்பட்டதாக எண்ணும் ஆண்களும், தன் வீட்டு பெண்கள் மீது கை வைக்க அமைதியாக போவதா, தான் என்ன ஆண் மகன்? என சமூகத்தின் ஆண்கள் வரையறைக்குள் நிற்கும் ஆண்களும். தங்கள் நிலை, கல்வி, தகுதி மறந்து அவர்களின் மூர்க்கத்தமான கோபத்தையே வெளிப்படுத்துவார்கள்.
இங்கு, சூழலும் அவ்வாறே அமைந்து விட்டது. தாமரையின் குழப்ப மனநிலை புரிந்து கொண்டு, அவளுக்கான நேரத்தை கொடுத்து பிரச்சனையை பேச்சு வார்த்தையிலே சுமூகமாக முடிக்க எண்ணி மூன்று பேரும் வர,
அரசியின் பேச்சில் நிதானத்தை இழந்த சிவம் உடன் பிறப்பே என்றாலும் அடிக்க பாய, குறுக்கே புகுந்து தடுத்தாள் வாணி. தன் தாய் மாமனே தடுத்து பேச வர, அவளுக்கும் கன்னத்தை சேர்த்து ஒரு அடி விழ, தடுமாறி விழ போனவளை பெரியாத்தா தாங்கி, மகளை அடித்த கோபத்தில் நேருக்கு மாறாக வசை பாட, மற்றவர்கள் மூவர் மேலும் பாய்ந்து விட்டனர்.
கூச்சல் சத்தம் அதிகமாக என்னவோ என்று பதறி போய் வேகமாக வந்த மூவரும் பார்த்தது தங்கள் வீட்டு பெண்களை அடிக்கும் பூமணி வீட்டாரை தான். அதிர்ந்து நொடி நேர மாற்றத்தின் பின் மூவரும் பாய்ந்து விட்டார்கள் கூட்டத்திற்குள். யாருக்கு அடி விழுந்தது என்றால் அனைவருக்கும் தான், யார் அடித்தது என்றால் அனைவரும் தான்.
ஐயனார் கோவிலை சுற்றி மரம் வெட்டி கிடக்க, அடுத்து என்ன கை கொண்டு அடித்து, தடுத்தது போக. விறகு கட்டை கொண்டு வெளுக்க ஆரம்பித்து விட்டார்கள்.
கோபமும், ஆத்திரமும் நேரம் சென்று குறைய அடித்து கொள்ளும் தங்கள் வீட்டு ஆண்களை பதற்றமாக பார்த்தார்கள் பெண்கள். சற்று நேரம் முன்பு அவர்களும் அடித்து கொண்டவர்கள் தான், தலை கலைந்து, சேலை ஒதுங்கி, வளையல் நொறுங்கி எதையும் கவனிக்கும் மனநிலை அவர்களுக்கு இல்லை. தன் குழந்தையோடு ஒரு மூலையில் ஒதுங்கி கொண்டாள் தாமரை. அவளுக்கும் நல்ல அடி தான், கையில் குழந்தை இருக்கு என்றெல்லாம் பார்க்க வில்லை, அரசி ஒரு பிடி பிடித்து தான் விட்டார். இவ்வளவு பிரச்சனையும் அவள் ஒருத்தியால் தானே!
பூமணி அங்கும், இங்குமாக ஓடி கொண்டிருந்தார். மனம் தவிப்பாக, இருக்கும் உறவுகளுக்கு மத்தியில் கண்கள் மகனை தேடியது, இருவது வயது சின்ன பையன். தாயை, உடன் பிறந்தவளை பேசிய கோபத்தில் ரோசம் கொண்டு சண்டைக்கு சென்றவன்.
விறகு கட்டை உள் வந்ததும் இரத்த கறை படிய ஆரம்பித்தது. சட்டை கிழிந்து, வேட்டி அவிழ்ந்து, நிலை தடுமாறி, உடல் வலியோடு இருந்தும் மூர்க்கம் குறைய வில்லை. தங்கள் வீட்டு பெண்களின் ஒழுக்கத்தை விமர்சித்தவர்களை அடித்து விழ்த்துவதே கௌரவம் என்றும், தங்கள் வீட்டு பெண்கள் மீது கை வைத்தவர்களை அடித்து நொறுக்குவதே ஆண் மகன் என்றும் மோதி கொள்பவர்கள் எவ்வாறு தணிவார்கள்.
இடமே புழுதி மண்டலமாக காட்சியளித்தது. சிவத்திற்கு நல்ல அடி தலையில், வேலுக்கு ஒரு பக்க தோள் பட்டையே கழண்டு விடும் போல் இருந்தது. கலைவாணனுக்கும் வலது காலில் இரத்தம் உறைய நல்ல அடி தான். ஆனால், இன்னமும் சத்தமும், சண்டையும் மட்டும் குறையவில்லை.
கண்ணனின் சட்டையை வேலு பிடித்து அடிக்க, இவன் தானே வயது வித்தியாசமின்றி பெரியாத்தாவை எட்டி உதைத்தவன். அதே போல் வேலு, அவனை எட்டி ஒரு உதை விட, வேரோடிந்த மரம் போல் மகன் விழுந்ததை பார்த்த சிவம். ஆத்திரத்தில் விறகு கட்டை கொண்டு வேலுவின் இடது கையில் ஓங்கி ஒரு அடி கொடுக்க, அலறி துடித்து மண்ணில் விழ்ந்தான் வேலு.
தாய் மனம் பதறி துடிக்க உள்ளே வந்தார் அரசி. ஆண்கள் கூட்டம் என்றெல்லாம் கவனத்தில் இல்லை, மகனின் அலறல் மட்டுமே கண்ணில் நிலையாக நின்றது. மேலும் அடிக்க வந்த சிவத்தை தடுத்து, குறுக்கே பாய்ந்து வேலுவை மறைத்தார் போல் அவன் மீது சாய, அடுத்த அடி அரசியின் காலில் தான். “ஆத்தே”என்று ஒரு ஓங்கிய சத்தத்தோடு பேச்சு, மூச்சு இல்லாமல் சரிந்து விழுந்தவர் தான் வேற அசைவு இல்லை.
வேலு தான் கை வலியையும் பொருட்படுத்தாது, தன் தாயை தூக்கி தட்டி எழுப்ப ஒரு அசைவும் இல்லை. பயந்து போனவன் “அம்மா” என்று ஒரு பெரும் அரட்டலில் தான் ஏணையோர் கவனம் அங்கு சென்றது. அய்யோ என்று பதறி மற்றவர்கள் நெருங்கும் முன், ஊர் ஜனக்கட்டு உள்ளே இறங்கி விட்டது.
பிறகு என்ன மேலும் ஒரு கலவரம் வந்து தான் அடங்கினர் மக்கள். தனி ஒருவனுக்கு துணை நிற்காமல் பழி சொல்லிய ஊர்சனம், பெண்கள் மீது கை வைத்து விட்டார்கள் என்ற அளவிலே உள்ளே இறங்கியது.
இளசுகள் துள்ளி கொண்டு அடிக்க பாய, பெருசுகள் தான் குடும்ப சண்டை என்று கணித்தாலும், எந்த தைரியத்தில்! தங்கள் ஊரில், தங்களின் எல்லைக்குள், தங்கள் ஊர் பெண்கள் மீது கை வைத்த அசலூர் ஆட்களுக்கு பயம் காட்டவே, இளவாட்டங்களை கொஞ்சம் துள்ள விட்டு. பிற்பாடு அவர்களை அடக்கி, சமரச பேச்சு வார்த்தையை தொடங்கினர். இல்லையென்றால் பூமணி வீட்டாரை நார் நாரக கிழித்து தொங்க விட்டிருப்பார்கள் ஊர் இளந்தாரிகள்.
பேச்சு வார்த்தையை கவனிக்கும் மனநிலை வேலுக்கு இல்லை. தற்போது அவன் கவனம் எல்லாம் தாய் மீது தான். நினைவின்றி விழுந்து கிடக்கும் தாயை மாறன் உதவியோடு மருத்துவமனை தூக்கி செல்ல, பின்னோடு கலைவாணனும், பெரியாத்தாவும் உடன் சென்றார்கள்.
வேலு விட்ட உதையில் கண்ணனுக்கு பின் மண்டையில் நல்ல அடி, இரத்தமும் நிற்காமல் ஓட. அவனை தூக்கி கொண்டு சொந்தங்கள் ஒரு புறம் மருத்துவமனை செல்ல. நடக்க கூட முடியாமல் காலை இழுத்து இழுத்து மெதுவாக நடந்து போய் பஞ்சாயத்து கூட்டத்தில் நின்றார் சிவம். வேற வழியும் இல்லையே! அடுத்த ஊர் மக்களை திரட்டி கொண்டு வந்தது அவர் அல்லவா!. அதனால், நடந்தவைக்கு அவர் தான் பொறுப்பேற்று நிற்க வேண்டும்.
பூமணிக்கு அழுகை வெடித்து கிளம்பியது. நடந்த கலவரத்துக்கு அனைவருமே காரணம் என்ற போதும், முழு பொறுப்பும் அவர்கள் தலையில் தான் விழுந்தது. கணவன் குற்றவாளியாக கை கட்டி நிற்க, மருத்துவமனைக்கு அழைத்து சென்ற மகனின் நிலை என்னவென தெரியவில்லை, மகளோ சித்தம் கலங்கிய நிலையில் இருக்க, அடுத்து என்னவென்றே ஒன்றும் புரியவில்லை. உடல்தளர அங்கிருந்த மரத்தடியில் அமர்ந்தவர், தலையில் கை வைத்து அழுக ஆரம்பித்தார்.
வாணி தலை நிமிர்ந்து ஒருவரையும் பார்க்கவில்லை. ஏனோ அவமானமாக இருந்தது. படித்து, உலக அறிவு உள்ள தாங்களும் இன்று கற்கால மனிதர்கள் போல் அடித்து கொண்டது அசிங்கமாக இருந்தது. அத்தோடு, தங்கள் குடும்ப பிரச்சனைக்கு கணவனையும் உள்ளிழுத்து விட்டு, பதினைந்து வயது மகனின் பெற்றோர், சொந்த தாய் மாமனே ஆனாலும் உடல் குறுக அடிவாங்கியது ஏற்று கொள்ளவே முடியவில்லை.
தாமரைக்கு சுரணையே இல்லை. நடந்தவையின் தாக்கம் அவள் உடல் நடுக்கத்தில் அப்படியே இருந்தது. கண்கள் இரண்டும் இருட்டு கட்டி கொண்டு வர, பிடிமானத்திற்காக அப்படியே மரத்தில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். கிட்டத்தட்ட பத்து நாள திட உணவு ஏதுமின்றி உடல் புண்ணாக கிடக்கிறாள். அவள் கொண்டு ஆரம்பித்தது தான் இன்று அவளை கவனிப்பார் ஒருவரும் இல்லை. தற்போது நடந்த கலவரமும், விழுந்த அடியும் அவளை மொத்தமாக ஒழித்து விட்டது.
பெண்கள் அனைவரும் அவரவர் யோசனையில் இருக்க, குழந்தையின் அழு குரலே நடப்புக்கு திருப்பியது. ஊர் பஞ்சாயத்தும் அவர்களுக்கு சாதகமாக இல்லை. வேலு, தாமரை விவகாரத்தில் நாற்பத்தி ஐந்து நாள் கெடு குடுத்த பின்னர், ஊர் வளமை மீறி அசலூர் ஆட்கள் உள்ளே வந்ததற்கும், ஊர் தலைவர் மீதும், ஊர் மக்கள் மீதும் கை வைத்ததற்கு சிவம் தான் காரணம் என்பதால் அவர்கள் குடும்பம் இரண்டு வருடம் ஊரில் இருந்து வெளியேறுமாறு உத்தரவு பிறப்பித்தது முடித்தார்கள்.
பூமணிக்கு தாங்க வில்லை. ஊர் தலைவர் மறு வார்த்தை மீறி பேசாதவாறு தீர்ப்பு முடித்து விட்டார், “ஏலே சிவம்! தாமரை பிரச்சனைக்கு ஊர் மொத்தமும் உம் பக்கம் தானே நின்னுச்சு! ஒரே ஊரா இருந்தாலும் நல்லதுக்கு தலைப்பட்ட குடும்பத்தை ஒதுக்கி உனக்காக பார்த்ததுக்கு வெளியூர்காரணுகள உள்ளே இழுத்து விடுறையோ! நாங்க இருக்க போய் சரியா போச்சு, இதுவே வெட்டு குத்துன்னு ஆகி இருந்த! யார் பொறுப்பு இந்த இளந்தாரி எல்லாம் ஜெயிலுக்குள்ள போய்யிருப்பானுக! உமக்கு நல்லது நினைச்சா பாவத்துக்கு ஊர் கலவரத்தை உண்டாக்குவியோ! ரெண்டு வருசத்துக்கு ஊர் எல்லையில கால் வைக்காதப்பு! சொல்லிபுட்டேன் அமா!” …… என ஒரே பேச்சாக தலைவர் முடித்து விட, எதிர்த்து ஒருவரும் பேச வில்லை. சிவம் தலை குனிந்தவாறு ஐயனார் மந்தையில் அமர்ந்து விட,
வேகமாக சென்ற பூமணி, மயக்க நிலையில் அமர்ந்திருந்த தாமரையின் அருகில் சென்று, வெடுக்கென அவள் கழுத்தில் இருந்த தாலியை கொத்தாக பற்றி விட்டார். அதிர்ந்து பார்த்த தாமரையை கணக்கில் கொள்ளாமல், தலை வழியாக உருவி, வேகமாக அங்கிருந்த ஓடையில் எரிந்து விட்டார். “ அம்மா” என்று தன்னை மீறி அரட்டி விட்டு, மடங்கி போனாள் பெண். தடுத்து எதிர்த்து கத்தும் சக்தி சுத்தமாக இல்லை. பஞ்சாயத்து கூட்டியதே அத்து விட சொல்லி தான் என்றாலும், இரண்டு வருடமாக கழுத்தில் சுமந்த கனமான தாலி இறங்கும் போது, மனம் வேதனையில் துடிக்க தான் செய்தது. கணவன் எப்படி பட்டவனாக இருந்தாலும், கழுத்தில் சுமந்த தாலி இறங்குவது எந்த பெண்ணிற்கும் எளிது அல்லவே. அந்த வேதனை தாமரைக்கும் இருந்தாலும், தாயை எதிர்த்து கணவனுடன் செல்லவும் தைரியமில்லை, தாலி இழந்து தனி ஒருத்தியாக வாழவும் தைரியம் இல்லை. மடங்கி அமர்ந்து கண்ணீர் விடுவதை தவிர வேறொன்றும் அவளுக்கு தெரியவும் இல்லை.
அனைத்தையும் வாணி பார்த்து கொண்டு தான் இருந்தாள். ஆனால், எதையும் தடுக்க முன் வரவில்லை. அவ்வளவு கோபம் அவர்கள் மீது, தானாவது சொந்த அக்கா மகள் கை நீட்டாலாம். ஆனால், தன் கணவன் எவ்வளவு மதிப்பும், மரியாதையும் உள்ளவன். அவனை கூட கை நீட்டி விட்டார்களே, இனி என்ன சொந்தம். வேறொரு வீட்டிற்கு திருமணம் செய்து அனுப்பி விட்ட பெண்ணை எவ்வாறு அடிக்கலாம், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து பேசுவது கூட இயலாது.
நல்ல ஆண் மகனாக ஊர் மத்தியில் மதிப்போடு நிற்பவனை குன்ற செய்வது, அவன் மனைவி உன்னோடு வாழ மாட்டேன் என்று தாலியை தூக்கி வீசுவது தான். ஊர் சாட்சியாக ஏறிய தாலி, இன்று அந்த ஊர் பார்க்க தூக்கி எறிவது, வாழ்க்கையில் தோற்ற அவமானம் தான். அது ஒரு பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் தான்.
கதறி அழும் குழந்தையில் கூட கவனம் இல்லாது, அந்த ஓடையையே வெறித்து பார்த்து அமர்ந்திருந்தாள் தாமரை. அங்கிருக்கும் எல்லோருக்கும் குழந்தை அழு குரல் கேட்டாலும், அதை என்னவென்று கவனிக்க தான் யாருக்கும் தோன்றவில்லை.
மனம் கேட்காமல் வாணி ஓடி சென்று குழந்தையை தூக்கி வந்தவள், கன்னம் தொட்டு பார்க்க. தொண்டை உணர்ந்து போய் இருப்பது தெரிந்தது. இங்கு என்ன கிடைக்கும்? சுற்றி முற்றி பார்த்தவள் அடி குழாய் கண்டு, நீர் அடித்து சிறிது நீரை குழந்தையின் தொண்டையில் சரிக்க, வேக வேகமாக தண்ணியை முழுங்கிய குழந்தையை பார்க்க நெஞ்சு அடைத்தது. நல்ல பசியில் இருந்திருக்கும் போல, பெற்றோர் சண்டையிலும், மற்றவர்களின் வறட்டு வீம்பிலும் இந்த குழந்தை அல்லவா அலைக்கலைக்க படுகிறது. வெறும் பச்சை தண்ணியை வேகமாக குடிக்கும் குழந்தையை நெஞ்சோடு அணைத்தவள் , யாரையும் ஏறிட்டு பார்க்காமல் தங்களது வீட்டை நோக்கி நடந்து விட்டாள்.
வேலுக்கு கை எலும்பு முறிந்திருக்க புத்தூரில் மாவு கட்டு போட்டு கொண்டான். அப்ரேசன் எல்லாம் அவனுக்கு ஒத்து வராது, இதுவாகில் சீக்கிரம் தெறி கொள்ளலாம் என்று எண்ணம். அரசிக்கு தான் இடுப்பிலும், காலிலும் நல்ல அடி. வயதானவர் என்பதால் மாவு கட்டு போடுவதும் கஷ்டமே, அவரும் ஆபரேசன் வேண்டாம் என்று விட்டார், “ காலம் போன கடைசில மகன் கையில் எடுக்க கொள்ள இருப்பதா! நடமாடும் அளவு தேறினால் போதும் என்று வலி மருந்து மட்டுமே எடுத்து கொண்டார்”, ஊரில் கெடு வைத்திருப்பது தெரிந்தும், அது பற்றி ஒருவரும் வாய் திறக்க வில்லை.
இறுதி கட்ட பஞ்சாயத்தில் சுமூகமாகவே உறவை முறித்துக் கொண்டார்கள். யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை, அதேபோல் மன அமைதியும் இல்லை. ஆனால், இது தான் சரி என்பது போல அமைதியாக அங்கீகரித்தனர். வேலும், தாமரையும் ஒருவரை ஒருவர் முகம் பார்க்க கூட அஞ்சி விலகி சென்றார்கள்.
கடைசியாக, பாலும், தண்ணியை கொண்டு உறவை முறிக்கும் போது உடலும், உள்ளமும் அதிர, சொல்ல இயலா வேதனை குடி கொண்டது என்னவோ உண்மை தான். கண்களில் நீர் பெருக இரண்டு வருட திருமண வாழ்வு கனவாக தோன்றி மறைந்தது. மனம் தவித்த போதும், நடந்த சம்பவங்களை தாண்டி ஒன்னு சேர இருவர் மனமும் ஒத்துழைக்க வில்லை.
பெரியத்தா தான் நெஞ்சில் அடித்து கதறி அழுதார். சிவத்தின் சட்டையை பிடித்து, “ அய்யா சாமி! நான் செத்தாலும் உம் உடன் பிறப்புன்றது மாறாதுவே! நீயி ஒதுக்கி தள்ளினாலும் நாம ஒரு தாய் பிள்ளைக தாம்! அது காலத்துக்கும் மாறாது. ஆன, புருசன் பொண்டாட்டி அப்படி இல்லவே! மாறி போன திரும்ப ஒட்டாத உறவு, வேத்தாள போவோம் வேணாம் தம்பி! நாம முன்ன நின்னு செஞ்சு வச்சது, நல்லா வாழட்டும்வே! சாபத்த தேடாத! அக்கா சொல்றத கேளும்! வருசம் முழுக்க உம் புள்ளை உங்கிட்ட இருக்கட்டும், எப்பவோ உம் தோது அனுப்புவே. உறவா மட்டும் அறுத்து எரியாதலே! நெஞ்சு தாங்கல!” என எவ்வளவு கதறியும் சிவம் வெட்டி விட்டார்.
அரசியும் தீர்த்து விட உறுதியாக நின்றார். கோபம் இன்னும் தீர வில்லை நடந்த சம்பவத்தின் விளைவு அப்படி. ஆம், வேலுக்கு கை சரி செய்தாலும் வளைந்தது வளைந்ததுதான் என்று விட்டார்கள். இடது பக்க கை கொஞ்சம் வளைந்து இருப்பதை பார்க்க பார்க்க நெஞ்சு கொதித்தது உடன் பிறந்தவன் மேல். வாணிக்கும் அழுகை பொங்கியது, தாமரை மேல் வெறுப்பு இருந்தாலும் உறவை முறிக்கும் போது தானாகவே கண்ணீர் பெருகியது உடன் வளர்ந்த பாசம்.
கலைவாணன் மனமும் துக்கபடத் தான் செய்தது. பெரியவர்களாக பிரச்சனையை பேசி தீர்க்காமல் தீர்த்து கட்டி விட்டார்களே என்று. அத்தோடு தானும் ஒரு காரணம் அல்லவா! கட்டிய மனைவியை வேற ஒருவன் அடிக்கும் போது, நடுத்தர மனம் கொண்டவனாக இருந்தாலும் கோபம் வந்து தானே தொலைத்தது. பின்ன என்ன தான் ஒரு ஆண் மகன்!. எல்லோரும் சேர்ந்து அல்லவா பிரிவுக்கு வழி வகுத்தது விட்டோம்
குழந்தையை தர முடியாது என்று மல்லு கட்டிய அரசியை, மிரட்டி தாமரையிடம் குழந்தையை கொடுத்தது பெரியாத்தா தான். அவர் மனதில் வேறொரு எண்ணம் இருந்தது. சூழ்நிலை காரணமாக தற்போது வேண்டாம் என்றாலும், பிற்பாடு குழந்தைக்காகவாது ஒன்னு சேரலாமே என்று ஒரு நினைப்பு தான்.
மனம் கணக்க அழுகையோடு பூமணி வீட்டார் ஊரை விட்டு வெளியேற, ஊரைவே இழுத்து பேசியது அரசி தான். இடுப்பில் பலன் இல்லாமல் கம்பு ஊன்றி நடந்தாலும் வாய் பேச்சுக்கு குறைவு ஏது!
கிட்ட நெருங்கிய ஊராரை தள்ளி நிறுத்தி, “ இப்ப என்னத்த பார்க்க வந்தீக! உசுரோட இருக்கோம்னா! எம் புருசன் இந்த ஊருக்கு எம்புட்டு செஞ்சாங்க, எம் மவன் எந்த நல்லது கெட்டதுக்கும் முன்ன நிப்பான். அவனைய பழி சொல்லுதீக! நாளைக்கு உங்க வீட்டையும் நான் பாக்க தானே போறேன்!” என்று கத்தி பேசி கொண்டிருந்தவரை கை பிடித்து தாங்கி சென்றனர் வேலும், வாணியும்.
“ஏலே வேலு! என்னிய செத்து சாத்தி வச்சுருந்தாலும் ஒரு பயல உள்ள விடாத! பொறந்த வீட்டு துணிக்கு கூட பொறந்தவனும் வேணாம், தூக்கி போட புருசன் வீட்டு உறவும் வேணாம். நான் பெத்த மவன் வீட்டோட வச்சு எரிச்சாலும் சரி, இல்லைனா என் புருசன் வீட்டு தோட்டம் கிடக்க ஒரு மூலையில போடுவே! தூக்கி போட மட்டும் சொந்தம் சேக்காத! சொந்தக்கார பயலுகா ஒருத்தன உள்ள விடாத! செத்தாலும் இதுக மூஞ்சிய பார்க்க வேணாம்!” என அரட்டி கொண்டே வீடு சென்றார் அரசி.
பத்து வருடத்திற்கு முந்திய நிகழ்வை நினைத்து வருத்தி கொண்டு படுத்திருந்தான் வேலு. இப்போதும் மனம் புயலடிக்க தான் செய்தது, ஒரு வேளை தாமரையை பார்த்த தாக்கமோ! என்னவோ மனம் அமைதி இல்லாமல் தவிக்க. பொழுதும் விடிவை நோக்கியதால் எழுந்து அமர்ந்தவன், அரவம் கண்டு நிமிர்ந்து பார்க்க. வாசல் தெளித்து கோலம் போட வந்து விட்டாள் சம்பூர்ணா.