Toggle navigation
Home
Tamil Novels
What's new
Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள்,
[email protected]
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Advertising
புது வெள்ளை மழை 10
Post Views:
2,278
புது
வெள்ளை
மழை
அவன்
வேலைகளை
முடித்துக்
கொண்டு
கமிஷனரை
பார்த்து
மூன்று
நாட்கள்
விடுமுறை
கேட்டான்
.
“
என்னப்பா
ஹனிமூன்னா
?”
எனக்
கேட்டு
அவர்
கண்
சிமிட்ட
….
புன்னகைத்த
நந்தா
,
இல்லை
எனத்
தலையசைத்தவன்
, “
மெட்ராஸ்க்கு
போகணும்
.”
என்றான்
.
“
சரி
,
ஆனா
எதாவது
எமெர்ஜன்சின்னா
உடனே
வந்திடு
.”
என
அனுமதி
கொடுத்தார்
.
அவர்கள்
டிபார்ட்மெண்ட்
மூலமாகவே
,
அன்று
இரவு
ரயிலுக்கு
மெட்ராஸ்
செல்ல
,
டிக்கெட்
ஏற்பாடு
செய்தவன்
,
மீதி
இருந்த
வேலைகளை
முடித்துக்
கொண்டு
வீட்டிற்குச்
செல்ல
…
பின்
மதியம்
ஆகிவிட்டது
.
அவன்
வீட்டிற்குள்
நுழைந்த
போது
,
ஹால்
சுவற்றில்
சாய்ந்து
பத்மா
உட்கார்ந்து
இருக்க
…
அவர்
மடியில்
தலைவைத்து
கயல்விழி
படுத்து
இருந்தாள்
.
குழலி
சோபாவில்
உட்கார்ந்து
இருந்தார்
.
டிவி
வேறு
ஓடிக்
கொண்டு
இருந்தது
.
“
வாங்க
அத்தை
.
எப்ப
வந்தீங்க
?
சாப்டீங்களா
?”
நந்தாவின்
குரல்
கேட்டு
கயல்விழி
வேகமாக
எழுந்து
அமர்ந்தாள்
.
“
காலையில
வந்திட்டேன்
மாப்பிள்ளை
.
சாப்பாடும்
ஆச்சு
.”
பத்மா
சொல்ல
…
நந்தாவின்
பார்வை
அருகில்
இருந்த
மனைவியிடம்
சென்றது
.
அவள்
தலை
நிமிர்ந்தால்
அல்லவா
,
அவள்
முகம்
பார்க்க
முடியும்
.
நந்தா
சென்று
உடைமாற்றி
வந்தான்
.
“
எங்க
மா
வருணும்
,
தாரணியும்
?”
“
உன்
தங்கச்சி
ஷாப்பிங்
கூடிட்டு
போய்
இருக்கா
?’
“
வந்த
இடத்துலேயும்
அவனை
விடலையா
”
எனக்
கேட்டபடி
சாப்பிட
அமர்ந்தான்
.
“
நீ
போய்ப்
பரிமாறு
.”
பத்மா
கயலை
போகச்
சொல்ல
…
அவள்
நானா
என்பது
போல்
பார்த்தாள்
.
“
இனி
இந்த
வேலையெல்லாம்
நீதான்
பண்ணனும்
.
போ
…”
எனப்
பத்மா
சொல்ல
…
வேறுவழியில்லாமல்
கயல்விழி
நந்தாவுக்குப்
பரிமாற
வந்தாள்
.
கயல்விழி
ஒவ்வொன்றாக
எடுத்து
பரிமாற
,
அவளைப்
பார்த்தபடியே
நந்தா
அப்பளைத்தை
எடுத்துக்
கடித்தான்
.
அவர்கள்
இருவருக்கும்
தனிமை
கொடுத்து
பத்மாவும்
,
குழலியும்
எழுந்து
அறைக்குள்
சென்றனர்
.
“
நீ
சாப்பிட்டியா
?”
“
ம்ம்
…”
“
இதுல
உட்கார்ந்துக்கோ
…”
நந்தா
அருகில்
இருந்த
இருக்கையைக்
காட்ட
…
கயல்விழி
பட்டும்படாமல்
ஓரத்தில்
அமர்ந்தாள்
.
அவனைப்
பார்த்து
அவள்
பயப்படுவது
நன்றாகவே
தெரிந்தது
.
இவ
எப்ப
பயத்தை
விடுறது
?
என
நந்தாவுக்குக்
கவலையாக
இருந்தது
.
“
நீ
ப்ளஸ்
டூல
என்ன
குரூப்
எடுத்த
?”
“
ப்ரஸ்ட்
குரூப்
.”
“
காலேஜ்ல
?”
“
மத்ஸ்
.”
“
உன்னைக்
காலேஜ்ல
சேர்த்து
விட்டா
படிப்பியா
?”
அவன்
கேட்பது
நிஜம்தானா
என்பது
போல்
கயல்விழியின்
பார்வை
இருந்தது
.
“
சொல்லு
உனக்குப்
படிக்க
இஷ்ட்டமா
?”
அவன்
மீண்டும்
கேட்க
…
கயல்விழி
சம்மதம்
என்பதாகத்
தலையசைத்தாள்
.
பேசிக்கொண்டே
அவன்
சாப்பிட
…
கயல்விழி
மீண்டும்
கொஞ்சம்
சாதம்
வைக்க
…
அதில்
தயிர்
போட்டுக்கொண்டு
சாப்பிட்டு
முடித்தான்
.
சாப்பிட்டு
முடித்துக்
கை
கழுவிக்கொண்டு
வந்தவன்
, “
அம்மா
,”
என
அழைக்க
…
குழலி
எழுந்து
வெளியே
வந்தார்
.
அவரோடு
பத்மாவும்
வந்தார்
.
“
இன்னைக்கு
நைட்
ட்ரைன்ல
நாம
மெட்ராஸ்
கிளம்புறோம்
.
எல்லாத்தையும்
எடுத்து
வச்சுக்கோங்க
.”
என்றான்
.
இன்னைக்கே
கிளம்புறோமா
அதுவும்
நல்லது
எனக்
குழலி
நினைத்தார்
.
போட்டது
போட்டபடி
திடிரென்று
தானே
கிளம்பி
வந்திருந்தனர்
.
சிறிது
நேரம்
மகளோடு
இருந்துவிட்டுப்
பத்மா
கிளம்ப
, “
அத்தை
எனக்குக்
கயலோட
மார்க்
ஷீட்
,
அப்புறம்
மத்த
சர்டிபிகேட்
எல்லாம்
வேணும்
.
நம்பிக்கையான
ஆள்கிட்ட
ஸ்டேஷனுக்குக்
கொடுத்து
விடுங்க
.
நாங்க
இன்னைக்குக்
கிளம்புறது
வேற
யாருக்கும்
தெரிய
வேண்டாம்
.”
என்றான்
.
“
சரிங்க
மாப்பிள்ளை
.”
என்றவர்
விடைபெற்று
சென்றார்
.
மாலை
ஆறு
மணிக்குத்தான்
வருணும்
,
தாரணியும்
வந்தனர்
.
ஏற்கனவே
குழலி
எல்லாவற்றையும்
எடுத்து
வைத்திருந்தார்
.
புடவையில்
இருந்த
கயல்விழியைப்
பார்த்தவன்
, “
உன்கிட்ட
சுடிதார்
இல்லையா
?”
எனக்
கேட்க
…
அவள்
இல்லை
என்று
தலையசைத்தாள்
.
அவள்
எப்போதும்
பாவாடை
தாவணி
அணிவதுதான்
வழக்கம்
.
“
உன்
தங்கச்சி
வச்சிருப்பாளே
…
இன்னைக்குக்
கூடப்
புதுசா
வாங்கினாளே
.”
என
வருண்
போட்டுக்
கொடுக்க
…
தான்
வாங்கியதை
மனமில்லாமல்தான்
தாரணி
கொடுத்தாள்
.
“
அண்ணா
உனக்கு
ரெண்டா
வாங்கித்தான்
தரேன்
.”
நந்தா
சொல்ல
….
அவளின்
முகம்
உடனே
மலர்ந்தது
.
தாரணி
அப்படித்தான்
சின்னப்
பிள்ளை
போலத்தான்
நடந்து
கொள்வாள்
.
தந்தை
இல்லை
என்று
சலுகை
காட்டியதால்
வந்தது
.
நேற்று
இரவு
வீட்டில்
நடந்ததைக்
கூட
யாரும்
அவளிடம்
சொல்லவில்லை
.
அது
எல்லாம்
தெரிந்தால்
மிகவும்
பயந்து
விடுவாள்
.
பிறகு
இவளுக்கு
வேறு
வைத்தியம்
பார்க்க
வேண்டும்
.
சுடிதாரில்
இன்னும்
சின்னப்
பெண்ணாகக்
கயல்விழி
தெரிந்தாள்
.
ரயில்
வருவதற்குச்
சிறிது
நேரம்
முன்புதான்
ஸ்டேஷன்
வந்தனர்
.
உடன்
இரண்டு
காவலர்களும்
சாதாரன
உடையில்
வந்திருந்தனர்
.
நந்தாவின்
பார்வை
எல்லாம்
சுற்றிமுற்றி
அலைந்து
கொண்டே
இருந்தது
.
பாண்டியின்
ஜாதியினர்
சிலர்
அன்பரசுவை
பழிவாங்க
காத்துக்
கொண்டு
இருந்தனர்
.
அவர்களால்
கயல்விழிக்கு
எந்த
ஆபத்தும்
வந்து
விடக்கூடாது
என்றே
இந்தக்
கண்காணிப்பு
.
நந்தா
சொன்னது
போல்
,
நேற்று
வந்து
அவனைச்
சந்தித்த
பாண்டியின்
நண்பர்கள்தான்
,
அவனுக்கு
இதைச்
சொன்னது
.
இன்னும்
கயல்விழிக்குத்
திருமணம்
ஆன
விஷயம்
வெளியே
பரவவில்லை
.
அதற்குள்
அவளை
இடம்
மாற்றி
விடுவது
நல்லது
என
நினைத்தான்
.
ரயில்
நிலையத்தில்
கயல்விழி
தன்
அருகில்
இருக்கும்படி
பார்த்துக்
கொண்டான்
.
திடிரென்று
அவள்
அவனை
ஒட்டி
நிற்பது
போல்
தெரிந்தது
.
அவளை
ஓரக்கண்ணில்
அவன்
ஆராய
….
அவள்
யாரிடமோ
இருந்து
மறையவே
அப்படிச்
செய்கிறாள்
எனப்
புரிந்தது
.
அவள்
பார்வை
சென்ற
திசையைப்
பார்த்தவனுக்கு
ஆச்சர்யமாக
இருந்தது
.
ஏனென்றால்
வந்து
கொண்டிருந்தது
வாசு
.
உடன்பிறந்த
அண்ணனை
பார்த்து
ஒரு
தங்கை
பயப்படுகிறாள்
.
அப்படியென்றால்
அவன்
அவளை
என்ன
பாடுபடுத்தி
இருக்க
வேண்டும்
என்ற
எண்ணம்
தோன்றியவுடன்
,
அவன்
முகம்
கடுத்தது
.
வாசு
அருகில்
வருவதற்குள்
இவனே
சென்று
பாதி
வழியில்
அவனை
எதிர்கொண்டான்
.
“
என்ன
?”
“
அம்மா
இதைக்
கொடுத்திட்டு
வர
சொன்னாங்க
.”
என
ஒரு
பெரிய
கவரை
கொடுத்துவிட்டு
,
அவன்
திரும்பி
சென்றான்
.
இவன்
கேட்ட
சர்டிபிகேட்
அதில்
இருந்தது
.
செல்லும்
அவனையே
அடிக்கடி
கயல்விழி
திரும்பி
பார்த்துக்
கொண்டாள்
.
அவள்
கண்கள்
கலங்கி
இருந்தது
.
பயம்
இருந்தாலும்
அண்ணன்
செல்வதைப்
பார்த்து
கலங்கவும்
செய்கிறாள்
என
நந்தாவுக்குப்
புரிந்தது
.
“
என்ன
டா
?”
நந்தாவின்
அருகில்
வந்த
வருண்
கேட்க
,
“
அவங்க
அண்ணன்
போறதை
பார்த்து
பீல்
பண்றா
டா
…
பார்க்கவே
கஷ்ட்டமா
இருக்கு
.”
என்றான்
.
“
டேய்
இதெல்லாம்
ஒரு
மேட்டரா
வா
…”
அவன்
சொல்லிக்
கொண்டிருந்த
போதே
ரயிலும்
வந்துவிட
,
விரைந்து
சென்று
ரயிலில்
ஏறினர்
.
இவர்களுக்காக
ஒரு
தனிக்
கூபே
பதிவு
செய்து
இருந்தனர்
.
ரயில்
கிளம்பிய
பிறகே
உடன்
இருந்த
காவலர்கள்
சென்றனர்
.
டி
.
டி
.
ஆரிடம்
பேசிவிட்டு
உள்ளே
வந்த
நந்தா
,
கதவை
மூடி
தாழிட்டவன்
,
வருணின்
அருகில்
சென்று
அமர்ந்தான்
.
பெண்கள்
மூவரும்
எதிர்
இருக்கையில்
இருந்தனர்
.
“
ரொம்பப்
பசிக்குது
சாப்பிடலாமா
?”
வருண்
கேட்க
,
குழலி
உடனே
கட்டிக்கொண்டு
வந்த
உணவை
ஆளுக்
ஒன்றாக
எடுத்து
கொடுத்தார்
.
பேசியபடியே
சாப்பிட
,
அதுவும்
ரயிலில்
சாப்பிட
கேட்கவா
வேண்டும்
,
பொழுது
இனிமையாகச்
சென்றது
.
அதுவரை
இருந்த
டென்ஷன்
வடிந்து
,
கயல்விழி
பயணத்தை
அனுபவிக்க
ஆரம்பித்தாள்
.
அவளின்
பரவசமான
முகத்தைக்
கவனித்த
குழலி
, “
நீ
ட்ரைன்ல
போனதே
இல்லையா
?”
எனக்
கேட்டே
விட்டார்
.
“
இங்கிருந்து
ராமேஸ்வரம்
போயிருக்கேன்
.”
“
அப்ப
மெட்ராஸ்க்கு
வந்ததே
இல்லையா
?”
அடுத்தக்
கேள்வி
தாரணி
கேட்க
,
“
ஒருமுறை
ஸ்கூல்ல
டூர்
வந்திருக்கேன்
.
பஸ்ல
தான்
போனோம்
.”
“
மெட்ராஸ்ல
எங்க
எல்லாம்
போனீங்க
?”
“
நிறையச்
சிற்பம்
எல்லாம்
இருக்குமே
மெரீனா
பீச்
.”
என்று
அவள்
சொன்னதும்
,
எல்லோருக்குமே
திக்கென்று
ஆகிவிட்டது
.
மெரீனா
பீச்ல
சிற்பமா
?
என
வியந்து
போய்ப்
பார்க்க
…
கயல்விழி
அதைக்
கவனிக்காமல்
பேசிக்கொண்டே
சென்றாள்
.
அவள்
சொன்னது
எல்லாம்
மஹா
பலிபுரத்தை
பற்றியது
.
ஆனால்
பெயரை
மறந்து
விட்டாள்
.
“
பாரேன்
நாங்களும்
மெட்ராஸ்லதான்
இருக்கோம்
.
ஆனா
மெரீனாவில்
சிற்பம்
இருக்கிறதே
எங்களுக்குத்
தெரியாது
.
நாம
எல்லாம்
நாளைக்கே
அங்க
போய்ப்
பார்க்கிறோம்
.”
வருண்
சொல்ல
…
அவன்
தன்னைக்
கிண்டல்
செய்கிறான்
எனப்
புரிந்து
கொள்ளாமல்
,
உண்மையாகவே
சொல்கிறான்
என
நினைத்து
கயல்விழி
சரியென்று
தலையை
ஆட்ட
…
அப்போது
அவளின்
கணவனின்
கண்களுக்குக்
குழந்தையாகவே
தெரிந்தாள்
.
மேலும்
அவள்
எதுவும்
உளறாமல்
இருக்க
…. “
இவன்
தாரணி
வீட்டுக்காரர்
மட்டும்
இல்லை
.
என்னோட
க்ளோஸ்
ப்ரண்டும்
.”
என
வருணை
பற்றிச்
சொன்ன
நந்தா
, “
வாயால
தான்
இவன்
பொழப்பே
ஓடுது
.”
என
அவனைக்
கேலி
செய்ய
….
அது
புரியாமல்
, “
பாட்டு
பாடுவாங்களா
?”
எனக்
கயல்விழி
அப்பாவியாகக்
கேட்க
….
எல்லோரும்
சிரிக்க
ஆரம்பித்தனர்
.
“
இவரு
பாட்டு
பாடினா
,
யாரு
கேட்கிறது
?”
என்ற
தாரணி
,
வருண்
பாடுவதைப்
போல்
கற்பனை
செய்து
பார்த்துவிட்டு
விழுந்து
விழுந்து
சிரித்தாள்
.
“
ஏன்
எல்லோரும்
சிரிக்கிறாங்க
.”
என்பது
போல்
கயல்விழி
பார்க்க
.
“
அவன்
வக்கீல்
அதுதான்
அப்படிச்
சொன்னேன்
.”
என
நந்தா
புன்னகைக்க
,
கயல்விழிக்கு
ஒரு
மாதிரி
ஆகிவிட்டது
.
அவள்
முகத்தைப்
பார்த்த
வருண்
, “
இதுக்கெல்லாமா
பீல்
பண்ணுவாங்க
.
நீ
என்
தங்கச்சி
மா
.
நீ
என்னை
என்ன
வேணா
சொல்லலாம்
.
அண்ணன்
பக்கம்
வா
.”
எனத்
தள்ளி
அமர்ந்து
ஜன்னல்
பக்கமாக
இடம்விட
….
கயல்விழிக்கு
ஜன்னல்
ஓரம்
உட்கார்ந்து வர ரொம்பவும்
ஆசை
என்பதால்
,
உடனே
மாறி
உட்கார்ந்தாள்
.
அவளைப்
பார்க்க
வசதியாக
நந்தா
எதிர்புறம்
அமர்ந்தான்
.
கயல்விழி
அவனைப்
பார்க்காமல்
வெளியே
வேடிக்கை
பார்த்துக்
கொண்டு
வந்தாள்
.
“
சில
பேர்
என்னைக்
குக்கா
,
டிரைவரா
எல்லாம்
யூஸ்
பண்ணிக்கிறாங்க
.
இதுல
பாட்டு
பாடுறவன்
எந்த
விதத்துல
குறைஞ்சது
?
இதுக்கு
எதுக்கு
ஒருத்தங்க
விழுந்து
விழுந்து
சிரிக்கிறாங்கன்னு
எனக்குப்
புரியலை
.”
வருண்
தாரணியைப்
பார்த்தபடி
சொல்ல
,
“
சொல்லி
காமிக்கிறீங்க
இல்ல
…
இனிமே
உங்ககிட்ட
எதுவும்
கேட்க
மாட்டேன்
.”
என்று
தாரணி
முறுக்கிக்கொள்ள
…
“
ஹே
சும்மா
சொன்னேன்
டி
.
உனக்குப்
பண்ணாம
யாருக்கு
பண்ண
போறேன்
.”
என
வருண்
வழிந்தான்
.
அவனை
நக்கலாகப்
பார்த்த
நந்தா
,
பார்வையைத்
திருப்பிக்
கொண்டான்
.
“
சரி
படுக்கலாமா
?”
குழலி
கேட்க
….
அதுவரை
சாதாரணமாக
இருந்த
கயல்விழியின்
முகம்
மாறியது
.
அவளுக்கு
உறங்குவது
என்றாலே
பயம்தான்
.
கனவு
வருமே
,
அவள்
அதற்காகப்
பயப்பட
…
அதை
உணர்ந்த
நந்தா
,
அவளை
அழைத்துக்
கொண்டு
வெளியே
சென்றான்
.
அவளைப்
பாத்ரூம்
போக
விட்டு
அழைத்து
வந்தவன்
,
வெளியே
வைத்து
அவனிடம்
இருந்த
கை
துப்பாக்கியை
எடுத்துக்
காட்டினான்
.
“
பாரு
என்கிட்டே
துப்பாக்கி
இருக்கு
.
அதோட
யாராலையும்
உள்ள
வர
முடியாது
.
அதனால
கண்டதையும்
நினைக்காம
படுத்து
தூங்கு
,
சரியா
?”
என
அவன்
ஒரு
குழந்தைக்குச்
சொல்வது
போல்
சொல்ல
….
கயல்விழி
சரியென்று
தலையசைத்தாள்
.
பாதுகாப்பிற்காக
ஜன்னலை
மூடிவிட்டு
ஆளுக்கொரு
சீட்டில்
ஏறி
படுத்தனர்
.
கயல்விழியும்
நந்தாவும்
கீழே
இருந்த
இருக்கையிலேயே
ஆளுக்கு
ஒரு
பக்கம்
படுத்து
கொண்டனர்
.
வெகு
நேரம்
வரை
உறங்காமல்
இருந்த
கயல்விழி
தன்னையும்
அறியாமல்
உறங்க
…
அன்றும்
அவளுக்குக்
கனவு
வந்தது
.
ஆனால்
கனவில்
வெட்ட
வந்தவர்களை
,
நந்தா
துப்பாக்கியால்
சுட்டு
விட
….
நேற்று
போல்
அவள்
பயந்து
அலறவில்லை
.
“
அவங்க
போலீஸ்
,
துப்பாக்கி
இருக்கு
,
உங்களைச்
சுட்டுடுவாங்க
.
என
அவள்
உறக்கத்தில்
புலம்ப
…
அதைக்
கேட்ட
நந்தா
சிரித்துக்
கொண்டான்
.
Advertising
Advertising