Toggle navigation
Home
Tamil Novels
What's new
Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள்,
[email protected]
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Advertising
புது வெள்ளை மழை 14 2
Post Views:
2,009
“
துரோகி
,
உன்
தங்கச்சியை
உனக்கு
ரெண்டு
நாளாத்தான்
தெரியும்
.
அதுக்குள்ள
இந்த
நண்பனை
மறந்துட்டியே
.”
அவன்
சொன்ன
செய்தி
கயலுக்கும்
ஆச்சர்யம்தான்
.
இவர்களை
எல்லாம்
சந்தித்து
இரண்டு
நாட்கள்தான்
ஆகிகிறதா
?
ஆனால்
என்னவோ
வெகுநாட்கள்
ஆகிவிட்டது
போல்
தோன்றியது
.
“
சரி
டா
பொழச்சி
போ
.”
என்ற
வருண்
கயலிடம்
இன்னொன்றை
கொடுத்து
, “
இதைக்
குடிச்சிட்டு
என்னன்னு
சொல்லு
பார்க்கலாம்
.”
என்றான்
.
“
எனக்குக்
குடிக்காமலே
தெரியும்
.
இது
ரோஸ்
மில்க்
.”
அவள்
சொன்னதைக்
கேட்ட
நந்தா
வேற
யாரும்
இவளை
டேமேஜ்
பண்ண
வேண்டாம்
,
இவளே
பண்ணிப்பா
என
நினைத்தான்
.
“
நானே
கடைக்குப்
போய்
ஸ்ட்ராபெர்ரி
வாங்கிட்டு
வந்து
,
அதைப்
பால்
விட்டு
அரைச்சு
,
கிரீம்
எல்லாம்
போட்டு
,
உனக்கு
ஸ்ட்ராபெர்ரி
மில்க்
ஷேக்
பண்ணி
கொண்டு
வந்தா
….
நீ
சிம்பிள்லா
ரோஸ்
மில்க்ன்னு
சொல்லிட்ட
.”
“
ஒழுங்கா
குடிச்சு
பார்த்திட்டு
சொல்லு
.”
என்றான்
வருண்
.
அச்சச்சோ
திரும்பச்
சொதப்பிட்டோமா
?
என
நினைத்த
கயல்
,
சிறிது
குடித்துப்
பார்த்துவிட்டு
, “
ஆமாம்
இது
வேற
,
ஆனா
ரொம்ப
நல்லா
இருக்கு
.”
என்றதும்
,
வருண்
புன்னகைத்தான்
.
“
ஏன்
டா
அந்தப்
பொண்ணை
இந்தப்
பாடு
படுத்துற
.
ரோஸ்
கலரை
பார்த்து
ரோஸ்மில்க்குன்னு
நினைச்சிட்டா
,
இது
ஒரு
குத்தமா
?”
என
மகனிடம்
கேட்ட
சுமித்ரா
, “
வா
மா
,
நான்
உனக்கு
வீட்டை
சுத்தி
காட்டுறேன்
.”
எனக்
கயலை
அழைத்துச்
சென்றார்
.
வீட்டை
சுற்றி
காட்டிவிட்டு
,
சுமித்ரா
அவர்
அறையில்
அவளை
உட்கார
வைத்து
வருண்
,
தாரணியின்
கல்யாண
ஆல்பத்தைக்
காட்ட
…
கயல்
ஆர்வமாகப்
பார்த்துக்
கொண்டு
இருந்தாள்
.
பிறகு
இருவரும்
வெகு
நேரம்
பேசிக்கொண்டு
இருந்தனர்
.
இரவு
உணவு
நேரம்
ஆனதும்
,
சுமித்ரா
சமையல்
அறைக்குச்
செல்ல
…
அவரோடு
கயலும்
சென்றாள்
.
அவர்கள்
பின்னே
உள்ளே
வந்த
வருண்
, “
எனி
ஹெல்ப்
மா
?
நான்
மாவு
தேச்சு
தரேன்
.”
என்று
சப்பாத்திக்கு
பிசைந்து
வைத்த
மாவை
அவன்
எடுக்க
,
“
கொடுங்க
அண்ணா
,
நான்
தேய்க்கிறேன்
.”
எனக்
கயல்
அவனிடம்
இருந்து
வாங்கிக்
கொண்டாள்
.
அவள்
தேய்த்துக்
கொடுக்க
…
சுமித்ரா
அடுப்பில்
போட்டு
எடுத்தார்
.
வருண்
அங்கேயே
மேடை
மேல்
அமர்ந்து
கொள்ள
…
மூவரும்
பேசிக்கொண்டு
இருந்தனர்
.
“
எல்லாத்தையும்
சுட்டாச்சு
.
சாப்பிடலாமா
?”
“
தயிர்
வெங்காயம்
பண்ணிட்டீங்களா
மா
?”
“
சப்பாத்திக்கு
தயிர்
வெங்காயமா
?”
எனக்
கயல்
ஆச்சர்யப்பட
…
“
உனக்குத்
தெரியாது
இல்லை
.
நந்தாவுக்கு
மத்தியானமும்
,
நைட்டும்
கண்டிப்பா
தயிர்
வேணும்
.
அதே
மாதிரி
தினமும்
மோர்
குடிப்பான்
.”
வருண்
சொன்னதைச்
சிரத்தையாகக்
கயல்விழி
கேட்டுக்
கொண்டாள்
.
“
அதுவும்
ரெடி
டா
.”
“
தாரணி
….”
வருண்
அழைக்க
,
“
இப்ப
எதுக்குடா
அவளைக்
கூப்பிடுற
?”
“
எல்லாத்தையும்
எடுத்திட்டு
போய்
வைக்கத்தான்
.”
“
செஞ்சவங்களுக்கு
எடுத்திட்டுப்
போகத்
தெரியாதா
.”
சுமித்ரா
சொல்லும்
போதே
தாரணி
அங்கே
வர
…
“
நீ
வா
மா
…”
எனச்
சுமித்ரா
கயலை
அழைத்துக்
கொண்டு
வெளியே
வந்துவிட்டார்
.
“
ஏன்
டி
ஒரு
பேச்சுக்காவது
,
நானும்
ஹெல்ப்
பன்னட்டுமான்னு
கேட்க
மாட்டியா
?
நீதான்
எதோ
விருந்தாளி
மாதிரி
ஹால்ல
உட்கார்ந்து
இருக்க
?
கயல்
வேலை
பார்க்குது
.”
“
உங்க
தங்கச்சி
தானே
வேலை
பார்த்தாங்க
.
அப்படியே
நான்
வேலை
பார்த்தாலும்
,
நீங்களும்
உங்க
அம்மாவும்
குறைதான்
சொல்வீங்க
.”
“
ஆமாம்
ஒரு
காய்
நறுக்கச்
சொன்னா
கூட
,
இப்படியா
அப்படியான்னு
நூறு
சந்தேகம்
கேட்ப
.
ஒன்னு
உப்பை
அள்ளி
போட்டு
வைப்ப
…
இல்லைனா
சுத்தமா
போட
மாட்ட
.
தோசை
சுட
சொன்னா
,
அதைப்
பிச்சு
பிச்சு
எடுப்ப
.
இதுல
எதோ
நீ
நல்லா
பண்ணிட்டு
,
நாங்க
குறை
சொன்ன
மாதிரி
சொல்ற
?”
“
உங்க
கூடச்
சண்டை
போட
எல்லாம்
எனக்கு
மூட்
இல்லை
.
இப்ப
எதுக்கு
என்னைக்
கூப்பிடீங்க
?”
“
சமைக்கத்தான்
இல்லை
.
இதையெல்லாம்
அங்க
கொண்டு
வச்சு
பரிமாறவாவது
செய்யலாமே
.”
வருண்
சொன்னதற்குத்
தாரணி
பதில்
சொல்லவில்லை
என்றாலும்
,
அவன்
சொன்னதைச்
செய்தாள்
.
இருவருக்குள்ளும்
இந்த
மாதிரி
சண்டைகள்
அடிக்கடி
நடப்பதுதான்
.
தாரணிக்குப்
படிப்பு
வந்த
அளவுக்குச்
சமையல்
வராது
.
படிக்கச்
சொன்னால்
விடிய
விடிய
கூட
உட்கார்ந்து
படிப்பாள்
.
ஆனால்
வீட்டு
வேலை
செய்ய
உடம்பு
வணங்காது
.
அவள்
அம்மா
வீட்டிலும்
அவள்
எந்த
வேலையும்
செய்தது
இல்லை
.
சாப்பிட்ட
தட்டிலேயே
கைகழுவிட்டு
எழுந்து
செல்வாள்
.
அது
போல
மாமியார்
வீட்டில்
இருக்க
முடியாது
அல்லவா
.
உள்ளே
நடந்த
சண்டையை
வருண்
காட்டிக்கொள்ளவில்லை
.
சிரித்த
முகத்துடன்
வெளியே
வந்தான்
.
தாரணி
பரிமாற
மற்றவர்கள்
சாப்பிட்டனர்
.
சாப்பிட்டதும்
வருண்
குளிர்
சாதன
பெட்டியில்
வைத்திருந்த
ஐஸ்கிரீம்
கொண்டு
வந்தவன்
,
கயலுக்கு
மட்டும்
நிறைய
வைத்து
, “
சாப்பிடு
உனக்காகத்தான்
வாங்கி
வச்சேன்
.”
என்றான்
.
“
டேய்
உன்
பாசத்துக்கு
ஒரு
அளவே
இல்லையாடா
.
எனக்குப்
புல்லரிக்குது
.”
என
நந்தா
கைகளைத்
தேய்த்து
விட
…
“
எனக்கும்தான்
.”
என்றாள்
தாரணி
.
“
உங்க
ரெண்டு
பேருக்கும்
பொறாமை
.”
என்றான்
வருண்
.
“
இவனுக்கு
அடுத்து
,
நான்
மாசமா
இருந்த
போது
,
தங்கச்சி
பாப்பா
தான்
வேணும்ன்னு
சொல்லிட்டே
இருப்பான்
.
அடுத்தும்
பையன்
பிறந்ததும்
,
அவனை
அங்கயே
விட்டுட்டு
வந்திடுமான்னு
எல்லாம்
சொல்லி
இருக்கான்
.”
“
இப்ப
நீ
வந்து
இவன்கிட்ட
மாட்டிகிட்ட
.”
சுமித்ரா
சிரித்தபடி
சொல்ல
…
கேட்ட
கயலுக்கு
மகிழ்ச்சியாக
இருந்தது
.
அவளுக்கும்
இரண்டு
அண்ணண்கள்
இருக்கிறார்களே
,
அவர்களைப்
பற்றி
நினைத்தவுடன்
கண்கள்
கலங்கியது
.
அவளின்
முக
மாற்றத்தை
கவனித்த
நந்தா
, “
சரி
டா
நாங்க
கிளம்புறோம்
.”
என
எழுந்துகொள்ள
…
மறுநாள்
ஊருக்கு
கிளம்பி
விடுவான்
என்பதால்
…
அவன்
மனைவியோடு
நேரம்
செலவழிக்கட்டும்
என
நினைத்த
வருணும்
அவர்களைத்
தடுக்கவில்லை
.
காரில்
கயல்
எதோ
யோசனையாக
இருக்க
,
நந்தா
அவளிடம்
பேச
நினைத்து
காரை
ஓரமாக
நிறுத்தினான்
.
“
இவ்வளவு
நேரம்
நல்லாத்தானே
இருந்த
.
இப்ப
என்ன
ஆச்சு
?”
“
வருண்
அண்ணா
மாதிரி
எனக்கு
ஏன்
என்
அண்ணனுங்க
இல்லை
?
நான்
இல்லாம
அவங்க
ரெண்டு
பேரும்
சந்தோஷமா
இருப்பாங்க
.”
“
நீயா
ஏன்
அப்படி
நினைக்கிற
?
உனக்குத்
தெரியுமா
?
அவங்க
சந்தோஷமா
தான்
இருப்பாங்கன்னு
.”
“
சந்தோஷமாதான்
இருப்பாங்க
.
என்கிட்டையே
நிறையத்
தடவை
சொல்லி
இருக்காங்க
,
நீ
இந்த
வீட்டை
விட்டு
ஒழிஞ்சு
போனாத்தான்
எங்களுக்கு
நிம்மதின்னு
.”
“
ஓ
அப்படி
வேற
அவனுங்களுக்கு
நினைப்பு
இருக்கா
?
ரெண்டு
பேரும்
சீக்கிரத்துல
ஜெயில்ல
களி
திங்கப்
போறாங்க
.
அதுவும்
உன்
பெரிய
அண்ணனுக்குதான்
அந்த
வாய்ப்பு
பிரகாசமா
இருக்கு
.”
“
வேண்டாம்
,
அப்படி
எதுவும்
பண்ணிடாதீங்க
.
ஏற்கனவே
என்னோட
அண்ணி
,
உன்னாலதான்
என்
புருஷன்
கொலைகாரன்
ஆகிட்டாருன்னு
சொல்லிட்டே
இருப்பாங்க
.
இதுல
ஜெயிலுக்கு
வேற
போனா
,
அதுக்கும்
என்னைத்தான்
திட்டுவாங்க
.”
“
உன்
அண்ணன்
அந்த
ஒரு
கொலையைத்
தவிர
வேற
எதுவும்
பண்ணலைன்னு
நினைக்கிறியா
?
உன்
அண்ணன்
மேல
எக்கச்சக்கமா
கேஸ்
இருக்கு
.
எல்லாத்துக்கும்
ஆதாரம்
திரட்டிட்டு
இருக்கோம்
.
இங்க
இருந்து
போனதும்
,
உங்க
அண்ணனை
அரெஸ்ட்
பண்றதுதான்
முதல்
வேலை
.”
கயல்விழி
பதில்
சொல்லாமல்
கலங்கிய
விழிகளோடு
வேறு
பக்கம்
பார்க்க
…
“
என்ன
அண்ணன்
மேல
பாசமா
?
இந்த
வேலையெல்லாம்
என்கிட்டே
வச்சுக்காத
.”
“
நான்
எதுவும்
சொல்லலையே
…
அவங்க
எப்படி
இருந்தாலும்
,
என்
அண்ணன்
தானே
…
நான்
வருத்தம்
கூடப்
படக்கூடாதா
.”
“
நல்ல
முன்னேற்றம்
,
உன்
வருண்
அண்ணனோட
சேர்ந்து
நல்லா
பேச
கத்துகிட்ட
.”
அதிகம்
பேசி
விட்டோமோ
எனக்
கயல்விழி
பயந்து
போய்ப்
பார்க்க
… “
என்ன
பார்க்கிற
?
நினைச்சதை
பேசுறது
ஒன்னும்
தப்பு
இல்லை
.
எனக்கு
உன்
மேல
கோபமும்
இல்லை
.”
என்றான்
நந்தா
.
கோபம்
இல்லை
என்பதையும்
அவன்
கோபமாகச்
சொல்ல
,
கயல்விழி
அவனையே
பார்த்துக்
கொண்டு
இருந்தாள்
.
‘
இப்படியெல்லாம்
என்னைப்
பார்த்து
தொலைக்காத
டி
.
அப்புறம்
நாளைக்கு
என்னால
கிளம்பவே
முடியாது
.”
என
மனதிற்குள்
புலம்பிய
நந்தா
…
வெளியே
ஒன்றும்
காட்டிக்கொள்ளாமல்
காரை
எடுத்தான்
.
Advertising
Advertising