Toggle navigation
Home
Tamil Novels
What's new
Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள்,
[email protected]
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Advertising
புது வெள்ளை மழை 14 1
Post Views:
2,229
புது
வெள்ளை
மழை
அத்தியாயம்
– 14
மறுநாள்
காலை
கயல்விழி
கண்விழித்த
போது
,
நன்றாக
விடிந்து
இருந்தது
.
பக்கத்தில்
நந்தா
படுத்திருந்த
இடம்
காலியாக
இருக்க
….
அதைப்
பார்த்தவள்
,
உடனே
படுக்கையில்
இருந்து
எழுந்து
கொண்டாள்
.
இரவு
முழுவதும்
நன்றாக
உறங்கி
எழுந்ததால்
…
சுறு
சுறுப்பாக
உணர்ந்தாள்
.
குளித்து
முடித்துப்
புடவையைச்
சுற்றிக்கொண்டு
வந்தவள்
,
அப்போதுதான்
திறந்திருந்த
மறுபக்க
கதவை
கவனித்தாள்
.
அந்தக்
கதவை
மூடிவிட்டு
,
உடைமாற்றியவள்
,
வேகமாகத்
தயாராகி
அறையின்
கதவை
திறந்து
கொண்டு
வெளியே
சென்றாள்
.
அப்போது
கூடப்
பூட்டிய
அறையில்
இருந்து
நந்தா
எப்படி
வெளியே
சென்றிக்க
முடியும்
என்று
அவள்
யோசிக்கவில்லை
.
அவள்
கீழே
வந்த
போது
,
இன்னும்
யாரும்
எழுந்திருக்கவில்லை
.
பால்
பாக்கெட்
எடுப்பதற்காக
வாசல்
கதவை
திறந்தவள்
,
வெளியே
ஒரு
பெண்மணி
வாசல்
கூட்டி
பெருக்குவதைப்
பார்த்து
,
அங்கேயே
நின்றாள்
.
“
நீதான்
இந்த
ஊட்டுக்கு
புதுச்சா
வந்திருக்க
மருமகளா
?”
என்றபடி
தண்ணீர்
தெளித்தவர்
,
கோலப்பொடி
எடுக்கச்
செல்ல
….
“
அதை
என்கிட்டே
கொடுங்க
.
நான்
கோலம்
போடுறேன்
.”
என்றபடி
அதை
வாங்கிய
கயல்விழி
,
எழிலாகக்
கோலம்
போட
அந்தப்
பெண்மணி
நின்று
பார்த்துக்
கொண்டு
இருந்தார்
.
“
ரொம்ப
ஜோரா
போடுறியே
.
எனக்கு
இம்மாம்
பெரிசா
எல்லாம்
போட
வராது
.
ரெண்டு
மூன்னு
கம்பி
கோலம்தான்
தெரியும்
.
அதையே
எல்லா
ஊட்லையும்
போட்டுடுவேன்
.
இனிமே
நான்
தண்ணி
தொளிச்சிட்டு
போயிடுறேன்
.
நீயே
கரீட்டா
போட்டுடு
.”
அந்தப்
பெண்மணி
மெட்ராஸ்
பாஷையில்
பேச
….
அவர்
எதோ
வேற்று
மொழி
பேசுவது
போல்
கயல்விழி
அதிசயமாகப்
பார்த்துக்
கொண்டு
இருந்தாள்
.
இவளிடம்
பதிலை
எதிர்பார்க்காமல்
,
அவர்
அதே
வரிசையில்
இருந்த
அடுத்த
வீட்டிற்குச்
செல்ல
….
கயல்விழி
விட்ட
இடத்தில்
இருந்து
மீண்டும்
கோலம்
போட
ஆரம்பித்தாள்
.
அப்போது
அவள்
தலையில்
எதோ
பட
…
மேலே
அண்ணாந்து
பார்த்துவிட்டு
,
மரத்தில்
இருந்து
எதோ
விழுந்தது
என
நினைத்துக்
கொண்டு
,
மீண்டும்
அவள்
குனிந்து
கோலம்
போட
,
இந்தமுறை
முதுகில்
எதோ
வந்து
பட்டதும்
,
சட்டென்று
அவள்
எழுந்து
நின்று
மேலே
பார்க்க
…
அங்கே
மாடியில்
அவள்
கணவன்தான்
நின்று
கொண்டிருந்தான்
.
அவள்
அவனைப்
பார்க்க
…
மேலே
வரும்படி
விரலை
அசைத்து
அவன்
கூப்பிட
..
விரைந்து
கோலத்தை
முடித்துவிட்டு
கயல்விழி
மாடி
ஏறினாள்
.
அவள்
அறைக்குச்
செல்ல
…
அங்கே
நந்தா
இல்லை
.
பக்கவாட்டு
கதவை
தட்டும்
சத்தம்
கேட்க
, “
ஐயோ
இங்கயா
இருந்தாங்க
.”
எனப்
பதறியபடி
கதவை
திறந்தாள்
.
“
எதுக்கு
என்னை
இங்க
வச்சு
பூட்டிட்டு
போன
?”
நந்தா
முறைத்து
பார்த்தபடி
கேட்க
, “
எனக்கு
நீங்க
இங்க
இருந்தீங்கன்னு
தெரியாது
.”
என்றாள்
கயல்விழி
பாவமாக
.
நந்தா
வேண்டுமென்றே
இன்னும்
முறைக்க
, “
சத்தியமா
தெரியாது
.
நீங்க
கீழே
போயிடீங்கன்னு
நினைச்சேன்
.”
இன்னும்
சிறிது
நேரம்
அவன்
முறைத்தால்
,
நிச்சயம்
அழுது
விடுவாள்
எனத்
தெரியும்
.
“
சரி
இங்க
வா
…”
என
அவளை
அழைத்துக்
கொண்டு
வெளிப்புறம்
மாடிக்குச்
சென்றான்
.
மாடியில்
ஒரு
அறை
மட்டுமே
இருக்க
,
மீதி
இடம்
வெட்டவெளியாக
இருந்தது
.
அதில்
நிறையப்
பூ
செடிகள்
வைத்து
இருந்தனர்
.
ஒரு
பக்கம்
நந்தா
உபோயோகபடுத்தும்
உடற்பயிர்ச்சி
கருவிகள்
இருந்தது
.
“
நான்
இங்கதான்
இருந்தேன்
.
நீதான்
பார்க்காம
பூட்டிட்டு
போயிட்ட
.
ஆமாம்
முனியம்மாகிட்ட
ரொம்பச்
சுவாரசியமா
பேசிட்டு
இருந்த
போலிருக்கு
.”
“
அவங்க
பேர்
முனியம்மா
வா
?
அவங்க
பேசின
பாஷையே
எனக்குப்
புரியலை
.”
“
தமிழ்ல
தான
பேசினாங்க
.”
“
அது
தமிழா
?”
“
என்னமா
கண்ணு
?
இது
கூடப்
புரியாட்டி
காட்டியும்
,
நீயெல்லாம்
இம்மாம்
பெரிய
ஊர்ல
எப்படிக்
குப்பை
கொட்ட
போற
?”
நந்தா
மெட்ராஸ்
தமிழில்
பேசிக்காட்ட
,
“
குப்பை
எங்க
கொட்டனும்ன்னு
சொல்லிட்டு
போனாங்களா
?”
கயல்விழி
அப்பாவியாகக்
கேட்க
,
அவன்
வாய்விட்டுச்
சிரித்தான்
.
“
போங்க
,
நீங்க
பேசுறதே
எனக்கு
ஒன்னும்
புரியலை
.
நான்
கீழ
போறேன்
.”
கயல்விழி
திரும்ப
,
நந்தா
அவள்
கையைப்
பிடித்து
இழுத்தவன்
, “
சாரி
,
சும்மா
விளையாட்டுக்கு
.
இங்க
வா
உனக்கு
ஒன்னு
காட்டுறேன்
.”
என
ரோஜா
செடியின்
பக்கம்
அழைத்துச்
சென்றான்
.
“
எனக்கு
ரோஜா
பூன்னா
ரொம்பப்
பிடிக்கும்
.
நீ
இதுக்குத்
தினமும்
தண்ணி
ஊத்துறியா
?”
“
ம்ம்
.
..
சரி
,
எவ்வளவு
ஊத்தணும்
.”
“
இன்னைக்கு
நான்
ஊத்துறேன்
பார்த்துக்கோ
.
நாளையில
இருந்து
நீ
ஊத்து
.”
என்றவன்
,
ரோஜாவிலேயே
நிறையத்
தினுசு
வைத்திருந்தான்
.
“
கயல்
,
இன்னைக்கு
உன்னைக்
காலேஜ்ல
சேர்க்க
போறேன்
.”
“
எந்தக்
காலேஜ்
?”
“
அம்மா
வேலை
பார்க்கிற
காலேஜ்ல
கூடச்
சேர்க்கலாம்
.
ஆனா
நீ
அவங்களையே
எல்லாத்துக்கும்
எதிர்பார்ப்ப
.
அதனால
வேற
காலேஜ்தான்
.”
“
இங்க
இருந்து
ரொம்பத்
தூரமா
?”
“
இல்லை
,
ரெண்டு
ஸ்டாப்பிங்தான்
.
மெயின்
ரோடு
போய்ப்
பஸ்
ஏறி
போயிடு
.”
“
தனியாவா
?
இந்த
ஊர்ல
எனக்கு
எதுவும்
தெரியாதே
.”
“
ரெண்டு
நாள்
போனா
பழகிடும்
.
அதை
நான்
பார்த்துகிறேன்
.
இருவரும்
பேசியபடி
செடிகளுக்குத்
தண்ணீர்
ஊற்றி
முடித்தனர்
.
காலை
உணவு
முடிந்ததும்
,
நந்தா
கயலை
அழைத்துக்
கொண்டு
வெளியே
சென்றான்
.
அவளின்
சான்றிதல்களையும்
மறக்காமல்
எடுத்துக்
கொண்டனர்
.
அது
ஒரு
பிரபலமான
மகளிர்
கல்லூரி
.
கல்லூரி
வாயிலில்
காரை
நிறுத்திவிட்டு
,
இருவரும்
இறங்கி
அலுவலகத்தை
நோக்கி
நடந்தனர்
.
“
நான்
திரும்பி
மேத்ஸ்
தான்
படிக்கனுமா
?”
“
உனக்கு
மேத்ஸ்
வேண்டாமா
?
அப்ப
வேற
கோர்ஸ்
படிக்கிறியா
?”
“
ம்ம்
…”
“
பி
.
ஏ
இங்கிலீஷ்
படிக்கிறியா
?”
“
ஐயோ
இங்கிலீஷ்
வேண்டாம்
.
வேற
எதாவது
?”
“
நீ
எதாவது
யோசிச்சு
வச்சிறிக்கியா
?”
“
ஹோம்
சயின்ஸ்
படிக்கவா
?
அது
ரொம்ப
ஈஸியா
இருக்கும்
.”
“
இங்க
அந்தக்
கோர்ஸ்
இருக்குமான்னு
தெரியலை
…”
நந்தா
சொன்னதைக்
கேட்டு
கயல்
முகம்
வாட
… “
இங்க
இல்லைனா
வேற
காலேஜ்ல
சேர்த்து
விடுறேன்
.”
என்றான்
.
கல்லூரி
தாளாளர்
ராஜலக்ஷ்மி
அவர்
அறையில்
இருந்தார்
.
நந்தா
தன்னை
அறிமுகம்
செய்துகொள்ள
…
அவனை
மிகவும்
மரியாதையாகப்
பார்த்தார்
.
கயலின்
நல்ல
நேரம்
அவள்
கேட்ட
கோர்ஸ்
அந்தக்
கல்லூரியில்
இருந்தது
.
கயலை
மீண்டும்
முதல்
ஆண்டில்
சேர்ப்பதால்
…
அவள்
முன்னே
கல்லூரியில்
படித்ததைப்
பற்றி
நந்தா
சொல்லவில்லை
.
“
இவங்க
அப்பாவுக்குப்
பெண்ணை
மேலே
படிக்க
வைக்க
இஷ்ட்டம்
இல்லை
.
ஆனா
எனக்கு
இவ
படிக்கணும்னு
ஆசை
.”
நந்தா
பேசும்
போதே
குறுக்கிட்ட
தாளாளர்
, “
அதுகென்ன
பத்தொன்பது
வயசு
தானே
ஆகுது
.
எங்க
காலேஜ்ல
நிறையக்
கல்யாணம்
ஆன
பொண்ணுங்க
இருக்காங்க
.
அதுல
சில
பேர்
நிறை
மாச
கர்பிணியா
இருந்து
கூடப்
பரிட்ச்சை
எழுது
வருவாங்க
.”
“
பசங்களைப்
படிக்க
வைக்க
நினைக்கிற
பெத்தவங்க
,
பொண்ணுங்களுக்குக்
கல்யாணம்
தான்
முக்கியம்ன்னு
நினைக்கிறாங்க
.”
“
பொண்ணுங்க
அப்படியும்
எப்படியாவது
அடிச்சு
புடிச்சு
படிச்சிடுறாங்க
.”
“
கல்யாணம்
பண்ணிட்டு
படிக்க
வர்ற
பெண்கள்கிட்ட
,
நான்
ரொம்பக்
கறாரா
நடந்துகிறது
இல்லை
.
இந்த
நிலைமையிலும்
படிக்க
வர்றாங்களே
அதுவே
பெரிசு
.”
“
கயலை
நான்
கண்டிப்பா
எங்க
காலேஜ்ல
சேர்த்துக்கிறேன்
.
ஏற்கனவே
காலேஜ்
திறந்து
ஒரு
மாசம்
ஆகிடுச்சு
.
ஆனா
இப்பவரை
அட்மிஷன்
நடந்திட்டுதான்
இருக்கு
.”
“
அதெல்லாம்
அவ
பிக்அப்
பண்ணிடுவா
மேடம்
.”
“
ஓகே
நந்தா
.
நீங்க
பீஸ்
பே
பண்ணிட்டு
போங்க
.
திங்ககிழமையில
இருந்து
காலேஜ்
வர
சொல்லுங்க
.”
“
ஓகே
மேடம்
தேங்க்ஸ்
.”
இருவரும்
அவரிடம்
விடைபெற்று
,
அவர்
சொன்னது
போல்
அலுவலகத்தில்
பணம்
கட்டிவிட்டு
வெளியே
வந்தனர்
.
அடுத்து
நந்தா
அவளை
அழைத்துக்
கொண்டு
மாம்பலத்தில்
ஷாப்பிங்
சென்றான்
.
அவளுக்குத்
தேவையான
உடைகள்
,
மற்றும்
இன்னும்
கல்லூரிக்கு
செல்ல
தேவையான
பொருட்கள்
வாங்கிவிட்டு
,
இருவரும்
வீடு
திரும்ப
மதியமாகிவிட்டது
.
மதிய
உணவிற்குப்
பிறகு
சிறிது
நேரம்
ஓய்வு
எடுத்துவிட்டு
,
இருவரும்
மாலை
தாரணியின்
வீட்டிற்குச்
சென்றனர்
.
இன்று
ஷாப்பிங்
சென்றபோது
,
தங்கைக்கும்
நந்தா
சில
உடைகள்
வாங்கி
இருந்தான்
.
அதோடு
இனிப்பு
,
பழங்கள்
,
பூ
என்று
நிறையவே
வாங்கிக்
கொண்டு
சென்றனர்
.
வருணின்
அம்மா
சுமித்ரா
வாசலுக்கே
வந்து
அவர்களை
வரவேற்றார்
.
அவரோடு
தரணியும்
இருந்தாள்
.
“
வா
நந்தா
…
வா
மா
கயல்
.”
நந்தா
தான்
வாங்கி
வந்த
இனிப்பு
மற்றும்
பழங்களைச்
சுமித்ராவிடம்
கொடுத்துவிட்டு
நலம்
விசாரித்தான்
.
கயல்
தாரணிக்கு
வாங்கி
வந்த
உடைகளை
அவளிடம்
கொடுத்தாள்
.
ஹாலில்
வருண்னின்
அப்பா
ஆனந்துடன்
நந்தா
உட்கார்ந்து
பேச
…
சுமித்ரா
கயல்விழியை
அழைத்துக்
கொண்டு
உணவு
அறைக்குச்
சென்றவர்
,
அங்கிருந்த
இருக்கையில்
அவளை
அமர
வைத்துப்
பேசிக்கொண்டு
இருந்தார்
.
“
எங்க
வருண்
அண்ணாவை
காணோம்
?
இன்னும்
வீட்டுக்கு
வரலையா
?”
“
நீங்க
வர்றீங்கன்னு
இன்னைக்கு
அவன்
சீக்கிரமே
வந்துட்டான்
.
உனக்கு
எதோ
ஸ்பெஷல்லா
பண்ணிட்டு
இருக்கான்
.”
அவர்
சொல்லிக்
கொண்டு
இருந்த
போதே
…
வருண்
ட்ரேயில்
குடிக்க
எதோ
பானம்
கொண்டு
வந்தான்
.
“
வா
கயல்
….
வாடா
மச்சான்
.”
என்றவன்
, “
முதல்ல
என்
தங்கச்சிக்கு
தான்
.”
எனத்
தான்
கொண்டு
வந்த
பானத்தை
கயலிடம்
கொடுக்க
….
உட்கார்ந்திருந்த
இடத்தில்
இருந்து
வேகமாக
எழுந்து
வந்த
நந்தா
,
அவளிடமிருந்த
இருந்ததைப்
பறித்துக்
கொண்டான்
.
Advertising
Advertising