Toggle navigation
Home
Tamil Novels
What's new
Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள்,
[email protected]
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Advertising
புது வெள்ளை மழை 5
Post Views:
2,368
புது
வெள்ளை
மழை
அத்தியாயம்
– 5
அன்று
காலையிலேயே
அன்பரசுவின்
தனித்
தொலைபேசி
அழைத்தது
.
அன்றைய
நாளிதழை
படித்துக்
கொண்டு
இருந்தவர்
,
எழுந்து
சென்று
தொலைபேசியை
எடுத்தார்
.
“
ஹலோ
…”
“
என்ன
அன்பரசு
நல்லா
இருக்கீங்களா
?”
தன்னை
யார்
பேர்
சொல்லி
அழைப்பது
என
யோசிக்கும்
போதே
, “
என்ன
யாருன்னு
தெரியலையா
? ASP.
நந்தகுமார்
பேசுறேன்
.”
அவன்
பேரைக்
கேட்டதும்
,
அன்பரசுவின்
முகம்
கடுத்தது
.
“
என்னை
அடிக்க
எல்லாம்
ஆள்
ஏற்பாடு
பண்ணி
இருக்கீங்க
.
இன்னும்
கொஞ்சம்
நல்ல
ஆளா
ஏற்பாடு
பண்ணி
இருக்கலாம்
.
இப்ப
பாருங்க
மாட்டிகிட்டாங்க
.”
என
நந்தகுமார்
சொல்ல
,
கேட்ட
அன்பரசு
பதட்டம்
கொண்டார்
.
“
அடுத்தத்
தடவையாவது
நல்ல
ஆளா
ஏற்பாடு
பண்ணுங்க
.”
என
யோசனை
சொல்லிவிட்டு
,
அவன்
போன்னை
வைத்து
விட
,
அதிர்ச்சி
விலகாத
அன்பரசு
தொலைபேசியைக்
காதிலேயே
இன்னமும்
வைத்திருந்தார்
.
சிறிது
நேரம்
சென்றே
அதை
உணர்ந்தவர்
,
போன்னை
வைத்துவிட்டு
அறையை
விட்டு
வெளியே
வந்தார்
.
“
கிருஷ்ணா
,
வாசு
…”
என
அவர்
கத்தி
அழைக்க
….
ஆளுக்கொரு
பக்கம்
இருந்த
இரு
மகன்களும்
அடித்துபிடித்து
ஓடி
வந்து
அவர்
முன்
நின்றனர்
.
“
நாம
அனுப்பின
ஆளுங்க
மாட்டிகிட்டாங்க
.”
“
ஓ
…”
என
அலட்சியமாகக்
கிருஷ்ணன்
சொல்ல
…
“
அனுப்பினது
நாமதான்னு
அவனுக்குத்
தெரிஞ்சிருக்கு
.”
என்றார்
அன்பரசு
.
இப்போது
கிருஷ்ணனின்
முகம்
மாறியது
.
“
எப்படிப்பா?
அவங்களுக்கே
நாம
தான்
அனுப்பினதுன்னு
தெரியாதே
…
அப்புறம்
எப்படி
நம்மைச்
சொல்லி
இருக்க
முடியும்
?”
“
எனக்கும்
அதுதான்
தெரியலை
….
ஆனா
அந்த
ASP
எனக்கே
போன்
பண்ணி
சொல்றான்
?”
“
இதுக்கு
ஏன்
பா
கவலைப்படுறீங்க
?
அவனால
நம்மை
என்ன
செய்ய
முடியும்
.”
“
அவன்
நினைக்கிறது
செய்ய
முடியும்
.
அதுவும்
இப்பதான்
எலெக்ஷன்
முடிஞ்சது
.
நம்ம
தயவு
இப்ப
அரசியல்வாதிகளுக்கும்
தேவை
இல்லை
…
இன்னும்
அஞ்சு
வருஷம்
கழிச்சுதான்
நம்மைப்
பத்தி
யோசிப்பாங்க
.”
“
இதுக்குத்தான்
நீங்களே
தேர்தல்ல
நில்லுங்கன்னு
நான்
சொல்றேன்
.”
“
அதைபத்தி
அப்புறம்
யோசிக்கலாம்
.
முதல்ல
இது
என்னன்னு
பார்க்கணும்
.
அங்க
இருக்கிற
நம்ம
ஆளுங்ககிட்ட
சொல்லி
என்ன
ஏதுன்னு
பார்க்க
சொல்லு
.”
“
சரிங்கப்பா
.”
“
அவன்
பார்வை
நம்ம
மேலதான்
இருக்கும்
இன்னும்
கொஞ்ச
நாளைக்கு
எதுவும்
வேண்டாம்
.”
“
சரிங்கப்பா
…”
இதெல்லாம்
ஒரு
பெரிய
விஷயம்
இல்லை
என்றாலும்
,
அன்பரசு
கொஞ்சம்
பதட்டமாகவே
இருந்தார்
.
ஒரு
வாரம்
அமைதியாகச்
சென்றது
.
அவருக்கு
இன்னும்
நந்தகுமாருக்கு
எப்படி
அந்த
விஷயம்
தெரியும்
எனப்
புரியவில்லை
.
வீட்டு
வேலைகளில்
எப்போதும்
பங்கெடுக்காத
கீதா
,
அன்று
அவள்
தம்பி
விக்னேஷ்
வந்திருந்ததால்
,
அவனுக்கு
உணவை
தானே
பரிமாறிக்கொண்டு
இருந்தாள்
.
அப்போது
கயல்விழி
சமையல்
அறையில்
இருந்து
வந்தவள்
,
தனது
அறைக்குள்
சென்றாள்
.
வழியில்
இருந்த
உணவு
மேஜையில்தான்
விக்னேஷ்
சாப்பிட்டுக்
கொண்டு
இருந்தான்
.
ஆனால்
அவள்
அவனைத்
திரும்பியும்
பார்க்கவில்லை
.
அவளை
ஓரக்கண்ணில்
பார்த்துக்
கொண்டிருந்த
விக்னேஷ்
தனது
அக்காவிடம்
மெதுவான
குரலில்
பேசினான்
.
“
நீயும்
அப்பாவும்
,
இதை
ஏன்
என்
தலையில
கட்டணும்னு
பார்க்குறீங்களோ
தெரியலை
?”
“
டேய்
வீணா
வர்ற
அதிர்ஷ்டத்தை
வேண்டாம்ன்னு
சொல்லாத
.”
“
எச்சில்
இலையில
சாப்பிடுறது
அதிர்ஷ்ட்டமா
?”
“
நான்தான்
சொன்னேன்
இல்ல.
..
அன்னைக்குச்
சாயங்காலம்தான்
ஒரு
கோவில்ல
கல்யாணம்
நடந்தது
.
அன்னைக்கு
ராத்திரியே
மாட்டிகிட்டா
….
எதுவும்
நடக்கலை
.”
“
அதுவும்
இல்லாம
அப்படி
எதாவது
நடந்திருந்தா
…
அங்கயே
அவளையும்
அவங்க
அண்ணன்
வெட்டியிருப்பார்
.”
தனது
சகோதரி
எத்தனை
சமாதானம்
சொல்லியும்
,
விக்னேஷின்
மனம்
அதை
ஏற்றுக்கொள்ளவில்லை
.
அதை
அவனது
முகமும்
காட்டிக்கொடுத்தது
.
“
உனக்கு
இவளோட
சேர்த்து
எவ்வளவு
சொத்து
வரும்
தெரியுமா
?
இந்த
வீடும்
நம்ம
அதிகாரத்துக்கு
வரும்
.
என்
மாமனார்
இருக்கிற
வரை
,
இவளை
அங்க
வச்சுக்கோ
.
அதுக்குப்
பிறகு
அவளை
இங்க
துரத்தி
விட்டுடு
.
நான்
என்
வீட்டுக்கு
வேலைக்காரியா
வச்சுகிறேன்
.”
கீதா
மனதில்
இருந்த
குரோதம்
வார்த்தையாக
வெளிவந்தது
.
அவளுக்கு
எப்போதுமே
கயல்விழியின்
அழகில்
பொறாமை
உண்டு
.
அவர்கள்
இருவரும்
பேசியதை
அன்பரசுவின்
அறையைச்
சுத்தம்
செய்துவிட்டு
வந்த
பத்மாவின்
காதுகளில்
நன்றாக
விழுந்தது
.
மகள்
இருந்த
அறைக்குள்
வந்து
கதவை
சாற்றிய
பத்மா
, “
உனக்கு
ஏன்
டி
புத்தி
இப்படிப்
போச்சு
?
இன்னைக்குப்
பாரு
கண்டவனுக்கு
எல்லம்
உன்னைக்
கல்யாணம்
பண்ணி
கொடுக்க
வேண்டிய
நிலை
.”
“
உன்
அண்ணிக்காரி
என்ன
பேச்சு
பேசுறா
?
எங்களுக்குப்
பிறகு
உன்
நிலைமை
என்ன
ஆகுமோ
தெரியலையே
.
பொம்பளை
பிள்ளை
வேணும்னு
எவ்வளவு
ஆசையா
உன்னைப்
பெத்து
,
செல்லமா
வளர்த்தேன்
.
இப்படிப்
பண்ணிட்டியே
.”
எனக்
கண்ணீர்
விட
,
கயல்விழியும்
மெளனமாகக்
கண்ணீர்
சிந்தினாள்
.
அன்று
கோவிலுக்குக்
கிளம்பும்
போது
எப்போதும்
துணைக்கு
வருபவர்
உடல்நலக்
குறைவால்
வேலைக்கு
வரவில்லை
.
அன்பரசு
விக்னேஷை
துணைக்கு
அனுப்பி
வைத்தார்
.
அவனுக்கு
இஷ்ட்டம்
இல்லையென்றாலும்
வேறுவழியில்லாமல்
உடன்சென்றான்
.
காரை
வாயிலில்
விட்டுவிட்டு
உள்ளே
செல்லும்
போது
,
பத்மா
முன்னே
செல்ல
…
கயல்விழியின்
அருகே
நடந்து
வந்த
விக்னேஷ்
,
அவளைக்
கடுமையாக
வார்த்தைகளால்
வதைத்தான்
.
“
பார்க்க
ஊமைகோட்டான்
மாதிரி
இருந்திட்டு
என்னென்ன
வேலை
பண்ணி
இருக்க
.”
“
உண்மையா
சொல்லு
,
அன்னைக்குக்
கல்யாணம்
மட்டும்தான்
நடந்துதா
,
வேற
எதுவும்
நடக்கலை
?”
“
நான்
எப்படியும்
உன்னை
லேடி
டாக்டர்கிட்ட
கூடிட்டு
போய்
டெஸ்ட்
பண்ணுவேன்
.
அப்ப
எப்படியும்
உண்மை
தெரிஞ்சிடும்
.”
விக்னேஷின்
பேச்சு
எல்லை
மீறி
செல்ல
,
கயல்விழி
நின்று
அவனை
முறைத்தாள்
.
அவளது
பெரிய
விழியால்
அவள்
முறைத்துப்
பார்த்தது
,
அவனுக்குக்
கொஞ்சம்
நடுக்கத்தையே
கொடுத்தது
.
இருந்தாலும்
சமாளித்துக்கொண்டு
, “
என்ன
முறைக்கிற
?”
என
அவன்
கையை
ஓங்க
…
இதைத்
தூரத்தில்
இருந்து
பார்த்துக்
கொண்டிருந்த
நந்தகுமாருக்குக்
கோபம்
வந்தது
.
கயல்விழி
அந்த
இடம்
விட்டு
விரைந்து
சென்றாள்
.
தன்
கண்கள்
கலங்கியது
தெரியாதபடி
,
அவள்
தலை
குனிந்து
செல்ல
,
அதனால்
அங்கே
நின்ற
நந்தாவை
அவள்
கவனிக்கவில்லை
.
நந்தாவுக்கு
இப்போது
என்ன
செய்வது
என்று
தெரியாத
குழப்பம்
.
உரிமையாகக்
கையை
ஓங்குகிறான்
,
யாராக
இருக்கும்
என
யோசித்தபடி
நின்றான்
.
ஏற்கனவே
அவனைப்
பத்மா
இவன்
ஏன்
அடிக்கடி
இங்கு
வருகிறான்
என்பது
போல்
பார்த்து
இருந்தார்
.
அதனால்
கோவிலுக்குள்
செல்லாமல்
வெளியவே
நின்று
இருந்தான்
.
மூவரும்
சாமி
கும்பிட்டுவிட்டு
வெளியே
வர
…
அப்போது
பைக்கில்
இருவர்
கோவிலுக்குள்
நுழைந்தனர்
.
வந்ததும்
அவர்கள்
விக்னேஷை
சரமாரியாகத்
தாக்க
…
நந்தா
அருகில்
செல்வதற்குள்
அவர்கள்
அவனை
நன்றாகச்
சாத்தி
இருந்தனர்
.
“
நீ
இவளை
கல்யாணம்
கட்டுவியாடா
?”
எனக்
கேட்டே
அவர்கள்
அடிக்க
…
நந்தா
வந்து
அவர்களைத்
தடுக்க
….
ஒரு
கட்டத்தில்
விட்டால்
போதும்
என்று
விக்னேஷ்
அங்கிருந்த
காரில்
ஏறி
ஓடி
இருந்தான்
.
“
நீங்க
யாரு
?”
நந்தா
அதட்டலாகக்
கேட்க
….
அதுவரை
அதிர்ச்சியில்
தன்
அம்மாவின்
பின்னே
ஒண்டி
இருந்த
கயல்விழி
தலையைத்
தூக்கி
பார்த்தாள்
.
அவர்கள்
இருவரும்
அவ்வளவு
ஆக்ரோஷமாக
நின்று
இருந்தார்கள்
.
“
உன்னைக்
கொல்ணும்
டி
.
உன்னாலதான்
அவன்
செத்தான்
,
ஆனா
நீ
சந்தோஷமா
இன்னொரு
கல்யாணம்
கட்டிக்கப்
போறியோ
?”
என
இருவரில்
ஒருவர்
கேட்க
….
“
என்ன
என்னால
செத்தான்
?
நீ
வரலைனா
செத்துடுவேன்னு
மிரட்டி
என்னை
வர
வச்சான்
.
அவன்
செத்துட
கூடாதுன்னுதான்
நான்
போனேன்
,
அப்பவும்
செத்துட்டான்
.
என்னை
என்ன
பண்ண
சொல்ற
?”
“
வேணா
என்னையும்
கொல்லு
.
தினமும்
செத்து
செத்து
பிழைக்கிறதுக்கு
,
இன்னைக்கே
செத்து
போறேன்
.”
அவர்களையும்
விட
ஆக்ரோஷமாக
முன்னால்
வந்து
கயல்விழி
பேச
….
இப்போது
அனைவருமே
திகைத்து
போய்
நின்றனர்
.
ஏற்கனவே
பாண்டியின்
சாவிற்குத்
தான்
காரணம்
என்று
மன
உளைச்சலில்
இருந்தவள்
,
அதையே
மற்றவனும்
சொல்ல
…
அதைக்
கேட்க
பொறுக்காமல்
தான்
தன்னையும்
மீறி
பேசினாள்
.
“
இல்லை
உனக்கே
தெரியும்
.
பாண்டி
அவன்
அப்பா
அம்மாவுக்கு
ஒரே
பையன்
.
இப்ப
அவனும்
இல்லாம
,
அவங்க
சாப்பாடுக்கு
கூடக்
கஷ்ட்டபடுறாங்க
.
அந்த
ஆத்திரத்திலதான்
பேசிட்டோம்
.
சரி
நாங்க
வரோம்
.”
என
அவர்கள்
சோர்வாகத்
திரும்பி
சென்றனர்
.
“
ஒரு
நிமிஷம்
இருங்க
.”
என
அவர்களை
அழைத்த
கயல்விழி
,
தன்
கைகளில்
இருந்த
தங்க
வளையல்களையும்
,
கழுத்தில்
இருந்த
செயினையும்
கழட்டிக்
கொடுத்தாள்
.
“
இதை
அவங்க
அப்பா
அம்மாகிட்ட
கொடுத்திடுங்க
.”
கயல்விழி
நகையைக்
கொடுக்க
….
பாண்டியின்
நண்பர்கள்
வாங்க
தயங்கினர்
.
“
நீ
நகையைப்
போடு
…”
என
நந்தா
வாய்திறக்க
,
கயல்விழி
அசையாமல்
நின்றாள்
.
“
இந்த
நகையால
அவங்களுக்குப்
பிரச்சனைதான்
வரும்
.
நான்
பார்த்துகிறேன்
.
என்னை
நம்பு
.”
நந்தா
அழுத்தி
சொல்ல
,
கயல்விழி
தனது
நகைகளைத்
திரும்ப
அணிந்து
கொண்டாள்
.
“
இந்நேரம்
விஷயம்
இவங்க
அப்பா
காதுக்குப்
போயிருக்கும்
.
இன்னைக்கு
நைட்
வெளிய
தங்கிட்டு
,
நாளைக்கு
என்னைப்
பார்க்க
வாங்க
.”
எனத்
தனது
கார்டை
எடுத்து
நந்தா
கொடுக்க
,
அப்போதுதான்
அவர்கள்
இருவருக்கும்
அவன்
காவல்துறையில்
உயர்
அதிகாரி
எனத்
தெரிந்தது
.
கண்களில்
பயம்
வர
அவனை
மிரண்டு
போய்ப்
பார்த்தனர்
.
“
ஒன்னும்
பயப்பட
வேண்டாம்
.
நாளைக்கு
வந்து
என்னைப்
பாருங்க
.
பாண்டி
அப்பா
அம்மாவுக்கு
எதாவது
செய்யலாம்
.”
என
அவன்
மென்மையாகச்
சொல்ல
,
சரி
என்பதாகத்
தலையசைத்த
இருவரும்
அங்கிருந்து
கிளம்பி
சென்றனர்
.
“
உங்களை
நான்
வீட்ல
விடுறேன்
.”
என்ற
நந்தா
,
அவன்
வந்த
காரை
எடுக்கச்
செல்ல
,
பத்மா
கயல்விழியை
அழைத்துக்
கொண்டு
சென்றார்
.
அதுவரை
அங்கே
நின்று
பார்த்துக்
கொண்டிருந்த
பூசாரி
“
பிள்ளை
பத்திரம்
மா
.
அய்யாவுக்குக்
கவுரவம்தான்
முக்கியமா
நினைப்பாங்க
.”
என்றார்
.
பத்மாவுக்கும்
அதே
எண்ணம்தான்
காரில்
ஏறிய
பின்னர்
பயத்தில்
அவர்
அழுது
கொண்டிருந்தார்
.
“
என்ன
ஆச்சு
?”
நந்தா
கேட்க
,
“
இவளை
எதாவது
பண்ணிடுவாங்களோன்னு
பயமா
இருக்கு
.”
அவர்
மறைக்காமல்
சொல்ல
,
நந்தா
என்ன
செய்வது
என
யோசிக்க
ஆரம்பித்தான்
.
“
பரவாயில்லை
விடுங்கம்மா
.
என்னைக்கா
இருந்தாலும்
சாகதான
போறோன்
.
அது
இன்னைக்கே
இருந்தா
என்ன
?
ஆனா
வலிக்காம
கொல்ல
சொல்லுங்க
.”
என்றவள்
,
தன்
அம்மாவின்
தோல்
சாய்ந்து
, “
இன்னைக்கு
எனக்குப்
பிடிச்ச
காரக்குழம்பு
பண்ணி
தரீங்களா
…”
இன்றோடு
நம்
கதை
முடிந்தது
என்ற
முடிவுக்கே
அவள்
வந்துவிட
,
அதை
கேட்கும்
போதே
….
பத்மா
கதறி
அழ
தொடங்கிவிட்டார்
என்றால்
,
நந்தாவுக்கு
ஒரு
நொடி
இதயமே
குலுங்கி
விட,
காரை
நிறுத்தியே
இருந்தான்
.
“
கொஞ்சம்
வாயை
மூடுறியா
நீ
.”
என
அவன்
போட்ட
அதட்டலில்
கயல்விழி
மிரண்டு
போய்
விட்டாள்
.
அவளின்
பயந்த
முகத்தைப்
பார்த்தவன்
, “
பாரு
உன்
அம்மா
எப்படி
அழறாங்கன்னு
,
இப்படித்தான்
பேசுவியா
?”
என
அவன்
தன்மையாகவே
கேட்க
,
“
எனக்கு
மட்டும்
சாக
ஆசையா
?”
கேட்கும்
போதே
,
அழுகையில்
அவள்
குரல்
உடைந்தது
.
முகத்தைத்
தன்
அம்மாவின்
தோளில்
மறைத்தவள்
,
அதன்பிறகு
தலையை
நிமிர்த்தவே
இல்லை
.
அங்கே
இவர்கள்
ஊகித்தது
போலவே
நிலைமை
இருந்தது
.
விக்னேஷ்
வீட்டிற்குச்
சென்று
ஒன்றுக்கு
இரண்டாக
வத்தி
வைத்திருந்தான்
.
“
ஒரு
சின்ன
ஜாதிக்காரன்
நம்ம
மேல
கையை
வைக்கிறதா
?
அவனுங்க
கையைக்
காலை
வெட்டனும்
.”
கிருஷ்ணன்
குதிக்க
…
“
இதெல்லாம்
யாரால
?
உங்க
தங்கச்சியால்
.
அன்னைக்கே
நீங்க
அவளையும்
கொன்னு
இருக்கணும்
.”
எனக்
கீதா
வேறு
ஏற்றிவிட
“
இன்னைக்கு
அவ
வரட்டும்
.”
என்றான்
வாசு
அவன்
பங்குக்கு
.
“
முதல்ல
போய்
உங்க
அம்மாவையும்
தங்கச்சியையும்
வீட்டுக்கு
கூடிட்டு
வாங்க
.
பிறகு
பேசிப்போம்
.”
என
அன்பரசு
மகன்களை
அனுப்பி
வைத்தார்
.
தன்
தம்பியை
தனியாக
அழைத்துச்
சென்ற
கீதா
, “
நீ
அவளைக்
கல்யாணம்
பண்ணிப்பியா
?”
எனக்
கேட்க
,
“
உனக்கு
என்ன
பைத்தியமா
?
இதுக்கு
மேல
நான்
அவளைக்
கல்யாணம்
பண்ணிப்பேன்னு
நினைக்கிறியா
?”
என
அவன்
பதிலுக்குக்
கேட்க
,
“
அப்ப
அவ
கதை
இன்னையோட
முடிஞ்சது
.”
என்ற
கீதா
,
அன்பரசுவிடம்
வந்து
,
தன்
தம்பி
கயல்விழியைத்
திருமணம்
செய்ய
மாட்டான்
எனவும்
திமிராகச்
சொன்னாள்
.
என்ன
செய்வது
என
அன்பரசு
யோசித்துக்
கொண்டிருக்க
…
அங்கே
நந்தகுமாரும்
கயல்விழியை
இப்படியே
எங்காவது
கடத்தி
விடுவோமா
என
யோசித்துக்
கொண்டு
இருந்தான்
.
Advertising
Advertising