Toggle navigation
Home
Tamil Novels
What's new
Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள்,
[email protected]
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Advertising
புது வெள்ளை மழை 8
Post Views:
2,225
அத்தியாயம் – 8
“
அம்மா
சாரி
மா
.”
“
என்ன
நந்தா
இதெல்லாம்
?
என்னால
யார்
கேட்கிற
கேள்விக்கும்
பதில்
சொல்ல
முடியலை
.”
“
ப்ளீஸ்
மா
புரிஞ்சிக்கோங்க
.”
“
உன்
கல்யாணத்தைப்
பத்தி
நான்
ஏகப்பட்ட
கனவு
வச்சிருந்தேன்
.”
“
அதையெல்லாம்
பரணி
கல்யாணத்துல
நிறைவேத்திடலாம்
மா
.”
நந்தா
சாதாரணமாகச்
சொல்ல
.
“
யாரு அவனா
?
வீட்டுக்கு
அடங்கின
நீயே
…
இப்படி
அவசரமா
கல்யாணம்
பண்ற
.
அவன்
கல்யாணம்
பண்ணிட்டுதான்
சொல்வான்
.”
“
அப்படியா
டா
?”
தாரணி
பரணியிடம்
கேட்க
,
அவன்
ஆமாம்
இல்லை
என்று
இரண்டுவிதமாகவும்
தலையசைக்க
,
அதைப்
பார்த்த
மற்ற
மூவருக்குமே
சிரிப்பு
வந்தது
.
“
அண்ணா
நாங்க
எப்ப
அண்ணியைப்
பார்க்கிறது
?”
பரணி
கேட்க
,
“
நீங்க
எல்லாம்
கிளம்பிட்டு
கீழ
இருக்க
ஹோட்டல்ல
டிபன்
சாப்பிட்டு
முடிங்க
.
அதுக்குள்ள
நானும்
வருணும்
போய்த்
தாலி
வாங்கிட்டு
வந்திடுறோம்
.
வந்ததும்
கோவிலுக்குப்
போகலாம்
.”
என்றான்
.
அவன்
சொல்லிக்
கொண்டிருந்த
போதே
வருண்
அங்கே
வந்தான்
.
“
நீ
ரெடியா
வா
…
நாம
கிளம்பலாம்
.”
என
அவனோடு
நந்தா
வெளியே
சென்றான்
.
அப்போது
ராதிகாவின்
அம்மா
எதிரே
வந்தவர்
, “
என்ன
வேலை
டா
பண்ணி
இருக்க
நீ
.”
எனக்
கோபமாக
ஆரம்பிக்க
,
“
அத்தை
,
வந்து
பேசுறேன்
.
இப்ப
கொஞ்சம்
அவசரமா
போகணும்
.”
என்றபடி
நந்தா
வாயிலுக்கு
விரைய
,
அவன்
பின்னே
வருணும்
ஓடினான்
.
வெளியே
வந்த
பின்
“
ஹப்பா
தப்பிச்சோம்
டா
…”
நந்தா
சொல்ல
,
“
நீ
தாலி
கட்டுற
வரை
இவங்க
கண்ணுல
படாம
இரு
.
வேன்ல
உங்க
அம்மாகிட்ட
என்ன
சண்டை
தெரியுமா
?
சமாளிக்கிறதுகுள்ள
நாக்கு
தள்ளிடுச்சு
.”
என்றான்
வருண்
.
அத்தை
மிகவும்
மோசமாகப்
பேசி
இருப்பார்
என்று
தெரியும்
.
தன்னால்
தானே
அம்மாவுக்கு
இவ்வளவு
கஷ்ட்டம்
என
நந்தாவுக்கு
மிகவும்
வருத்தமாக
இருந்தது
.
அவனைக்
கவனித்த
வருண்
, “
நாம
இப்ப
கவலைப்பட்டுட்டு
இருக்க
நேரம்
இல்லை
.
வேலையைப்
பார்ப்போமா
?”
என்றதும்
,
இருவரும்
டீ
குடித்து
விட்டு
,
நகை
கடைக்குச்
சென்றனர்
.
முன்பே
தகவல்
கொடுத்து
இருந்ததால்
…
அந்தக்
காலை
நேரத்தில்
நகை
கடை
திறந்து
வைக்கபட்டு
இருந்தது
.
தங்க
சங்கிலியில்
கோர்த்த
தாலியும்
,
வெள்ளியில்
மெட்டியும்
வாங்கிக்கொண்டு
,
இருவரும்
வெளியே
வந்தனர்
.
நகைக்கடைக்கு
எதிரே
இருந்த
துணிக்கடைக்குச்
சென்று
,
நந்தாவுக்குப்
பட்டு
வேஷ்ட்டியும்
,
ரெடிமேட்
சட்டையும்
வாங்கிக்
கொண்டனர்
.
நேரமாகி
விட்டதால்
அவர்கள்
இருவரும்
அரக்க
பறக்க
ஓடிவர
,
மற்றவர்கள்
கிளம்பி
தயாராக
இருந்தனர்
.
நந்தா
சென்று
உடை
மாற்றி
வந்ததும்
,
மற்றவர்கள்
சென்று
வேன்னில்
ஏற
,
நந்தாவும்
அவன்
குடும்பமும்
மட்டும்
தனிக்காரில்
சென்றனர்
.
இவர்கள்
கோவிலுக்குச்
சென்று
சேர்ந்த
போதே
,
முஹுர்த்த
நேரம்
தொடங்கிவிட்டது
.
அன்பரசுவும்
,
பத்மாவும்
வாயிலில்
நின்று
வந்தவர்களை
வரவேற்றனர்
.
“
கயல்விழி
எங்க
அத்தை
?”
நந்தா
பத்மாவிடம்
கேட்க
, “
உள்ளே
சாமி
கும்பிட்டுகிட்டு
இருக்கா
.”
என்றார்
பத்மா
.
அவள்
பத்திரமாக
வந்து
சேர்ந்துவிட்டாள்
என்ற
பிறகே
,
நந்தாவுக்கு
நிம்மதியாக
இருந்தது
.
அவன்
தன்
குடும்பத்தை
அன்பரசுவுக்கும்
,
பத்மாவுக்கும்
அறிமுகம்
செய்து
வைத்தான்
.
“
பரவயில்லையே
,
இந்த
நேரத்துக்குள்ள
இவ்வளவு
பேர்
வந்துட்டாங்களே
.”
என
இருவரும்
வியந்து
போய்ப்
பார்த்தனர்
.
இந்தப்
பக்கமும்
அப்படித்தான்
.
முக்கியமான
உறவினர்களுக்குக்
காலையில்தான்
போன்
செய்து
அன்பரசு
அழைத்திருந்தார்
.
அவர்களும்
குடும்பத்துடன்
வந்திருந்தனர்
.
“
என்னடா
உன்
மாமனார்
டெரர்
பீஸ்ன்னு
பார்த்தா
…
இப்படிப்
பக்தி
பழமா
இருக்கார்
.”
வருண்
நந்தாவின்
காதை
கடிக்க
,
அவன்
நக்கலாகச்
சிரித்தான்
.
கோவில்
முன்புறம்
இருந்த
மண்டபத்தில்
மலர்களால்
மனமேடை
அமைத்து
இருந்தனர்
.
மல்லியும்
கனகாம்பரமும்
சேர்த்து
அதோடு
முல்லைப்
பூவை
தோரணமாகத்
தொங்க
விட்டு
இருந்தனர்
.
பார்க்கவே
அவ்வளவு
அழகாக
இருந்தது
.
நந்தா
வியந்து
போய்ப்
பார்ப்பதை
கவனித்த
பூசாரி
,
அவன்
அருகில்
வந்து
, “
நல்லா
இருக்கா
?
நான்தான்
இப்படி
அலங்காரம்
பண்ண
சொன்னேன்
.”
என்றார்
.
“
எதோ
பொண்ணு
வீட்ல
ஒத்துக்கலைன்னு
சொன்னாங்க
.
இங்க
பார்த்தா
அப்படி
ஒன்னும்
தெரியலையே
…”
என
ராதிகாவின்
அம்மா
ஆரம்பிக்க
.
அதைக்
கேட்ட
நந்தா
“
சீக்கிரம்
கல்யாணத்தை
முடிக்கலாம்
.”
எனப்
பூசாரியிடம்
சொல்ல
,
அவரும்
புரிந்து
கொண்டு
சரி
என்று
சென்றார்
.
“
சாமி
கும்பிட
வாங்க
.”
என
நந்தா
சொல்லிவிட்டு
கோவிலுக்குள்
செல்ல
,
அவனோட
அவன்
வீட்டினரும்
சென்றனர்
.
எல்லோரையும்
தள்ளிவிட்டு
முன்னே
வந்த
ராதிகா
, “
அத்தான்
,
ரொம்ப
ஸ்மார்ட்டா
ப்ளே
பன்றோம்னு
நினைப்பா
?
எனக்கு
என்ன
பதில்
சொல்லப்
போறீங்க
?”
எனக்
கேட்க
,
“
உனக்கு
நான்
எதுக்குப்
பதில்
சொல்லணும்
?”
என
நந்தா
அசராமல்
பதில்
கேள்வி
கேட்டான்
.
ராதிகா
அவனை
முறைக்க
….
அவனும்
பதிலுக்கு
அவளை
முறைத்தான்
.
ராதிகா
பார்த்துக்
கொண்டிருந்த
போதே
,
நந்தாவின்
பார்வை
மாறியது
.
ராதிகா
திரும்பி
பார்க்க
,
அங்கே
கயல்விழி
மணமகள்
அலங்காரத்தில்
கோவிலுக்குள்
நின்று
சாமி
கும்பிட்டுக்
கொண்டிருந்தாள்
.
அவளோடு
பாவடை
தாவணியில்
மாலாவும்
,
சீதாவும்
நின்று
கொண்டிருந்தனர்
.
குங்கும
நிற
புடவைக்கு
ஏற்ப
…
வெள்ளையும்
சிகப்பும்
கலந்த
கற்கள்
பதித்த
நகைகளை
அணிந்து
இருந்தாள்
.
நெற்றியில்
வைத்திருந்த
சுட்டி
கூடக்
கல்
வைத்ததுதான்
.
பார்லரில்
செய்த
அலங்காரம்
போல்
இல்லாமல்
…
வீட்டிலேயே
செய்த
எளிமையான
அலங்காரம்
எனப்
பார்த்ததும்
தெரிந்தது
.
அதிலேயே
பார்க்க
ரதி
போல்
இருந்தாள்
.
அவளின்
குழந்தைத்தனம்
மாறாத
முகத்தைப்
பார்த்த
தாரணி
,
அருகில்
இருந்த
பரணியிடம்
“
டேய்
!
அண்ணி
நம்மை
விடச்
சின்னவங்களா
இருப்பாங்க
போலிருக்கு
டா
…”
என்றதற்கு
,
அவனும்
ஆ
மோதிப்பாகத்
தலையசைத்தான்
.
நந்தா
சென்று
கயல்விழி
அருகில்
நிற்கவும்
,
அவள்
கண்களைத்
திறந்தாள்
.
அவளது
பெரிய
விழிகள்
கலங்கி
இருக்க
…
அதைப்
பார்த்த
நந்தா
,
அவளைக்
குற்றம்
சாட்டும்
பார்வை
பார்க்க
…
கயல்விழி
உடனே
விழிகளைச்
சிமிட்டி
சமாளித்தாள்
.
சாமி
கும்பிடுவது
போல்
அவளுக்குச்
சிறிது
நேரம்
கொடுத்த
நந்தா
,
பிறகே
அவளைத்
தன்
வீட்டினருக்கு
அறிமுகம்
செய்தான்
.
அவள்
எல்லோரையும்
பார்த்து
இருகரம் கூப்பி வணங்கினாள்.
அமைதியான
பெண்
எனப்
பார்த்ததும்
தெரிந்தது
.
நந்தாவின்
பார்வையில்
இருந்து
அவனுக்கு
அவளை
மிகவும்
பிடித்திருகிறது
என்றும்
தெரிந்தது
.
“
முஹுர்ததுக்கு
நேரம்
ஆகுது
.”
பூசாரி
குரல்
கொடுக்க
…
மணமேடைக்கு
இருபுறமும்
ரத்தின
கம்பளம்
விரித்து
இருக்க
…
அதில்
சென்று
உறவினர்கள்
அமர்ந்தனர்
.
“
இந்த
மாலையைப்
போட்டு
நீதான்
கயலை
மணமேடைக்குக்
கூடிட்டு
வரணும்
.”
எனத்
தாரணியிடம்
சொல்லிவிட்டுப்
பத்மா
சென்றார்
.
“
மாப்பிள்ளை
சார்
வாங்க
.”
பூசாரி
அழைக்க
,
நந்தா
சென்றான்
.
நந்தாவின்
தாய்மாமா
அவனுக்கு
மாலை
அணிவிக்க
,
அவன்
மணமேடையில்
அமர்ந்தான்
.
மேடையின்
இருபுறமும்
இரண்டு
பெரிய
குத்து
விளக்குகள்
இருந்தது
.
நடுவில்
தேங்காய்
பழம்
வைத்திருந்த
தட்டில்
திருமாங்கல்யம்
இருந்தது
.
மணப்பெண்ணை
அழைத்து
வரும்படி
குரல்
கொடுக்க
…
தாரணி
கயல்விழியின்
கைபிடித்து
அழைத்து
வந்தாள்
.
அவர்களது
இருபுறமும்
மாலாவும்
,
சீதாவும்
வந்தனர்
.
கயல்விழி
குனிந்த
தலை
நிமிராமல்
,
பதுமை
போல்
நடந்து
வந்து
நந்தாவின்
அருகில்
அமர்ந்தாள்
.
அவன்
ஒருமுறை
அவளைத்
திரும்பி
பார்த்துக்
கொண்டான்
.
ரொம்ப
நேரம்
எல்லாம்
ஆகவே
இல்லை
.
பூசாரி
தாலி
எடுத்து
கொடுக்க
…
அதைக்
கயல்விழியின்
சங்கு
கழுத்தில்
அணிந்துவிட்டு
.
அவர்
கொடுத்த
குங்குமத்தையும்
,
அவள்
நெற்றியில்
வைத்து
இருந்தான்
.
பிறகு
இருவரும்
மாலை
மாற்றினர்
.
வருண்
நந்தாவின்
கழுத்தில்
இருந்த
சின்ன
மாலையைக்
கழட்டி
அவனிடம்
கொடுக்க
…
அதையே
தாரணி
கயல்விழிக்கு
செய்தாள்
.
கயல்விழி
அப்போதும்
நிமிர்ந்து
அவனைப்
பார்க்கவில்லை
.
முதலில்
நந்தா
மாலை
போட
…
அடுத்து
கயல்விழி
கையை
உயர்த்த
..
அவன்
வேண்டுமென்றே
குனியாமல்
இருந்தான்
.
அவன்
குனிந்தால்
தானே
மாலை
அணிவிக்க
முடியும்
.
அவள்
பார்வையை
உயர்த்தித்
தன்
கணவனைப்
பார்க்க
…
அவன் புன்னகையுடன் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்
.
அவன்
விளையாட்டு
புரிந்து
மற்றவர்கள்
சிரித்தனர்
.
இருவரும்
மூன்று
முறை
மாலை
மாற்றிக்
கொண்டனர்
.
அதன்பிறகு
நந்தா
அவளுக்கு
மெட்டி
அணிவித்து
விட்டான்
.
அவ்வளவுதான்
திருமணம்
முடிந்து
விட்டது
.
மீண்டும்
தம்பதிகள்
கோவிலுக்குள்
சென்று
சாமி
கும்பிட்டுவிட்டு
வந்தனர்
.
அப்போதே
உணவு
பந்தி
ஆரம்பிக்க
…
உறவினர்கள்
சாப்பிட
சென்றனர்
.
கீதாவின்
பெற்றோர்
அப்போதுதான்
வந்தனர்
.
அவர்களைப்
பார்த்ததும்
அதுவரை
வெறுப்போடு
எல்லாவற்றையும்
கவனித்துக்
கொண்டிருந்த
கீதா
,
அவர்களை
நோக்கி
விரைந்து
சென்றாள்
.
“
என்ன
அப்பா
இவ்வளவு
லேட்டா
வர்றீங்க
?
விக்னேஷ்
உங்ககிட்ட
வந்து
சொன்னான்னா
இல்லையா
?”
“
இல்லையே
மா
…
காலையில
உங்க
மாமனார்
போன்
செஞ்சு
சொன்னதும்தான்
தெரியும்
.”
“
பார்த்தீங்களாப்பா
நம்ம
தம்பிக்கு
செய்றேன்னு
சொல்லிட்டு
வெளியே
செஞ்சிட்டாங்க
.
நீங்க
வந்து
என்னன்னு
கேளுங்க
.”
“
உன்
தம்பிக்கே
இஷ்ட்டம்
இல்லை
.
பிறகு
அவரைக்
கேட்டு
என்னமா
ஆகப்போகுது
.
அதுதான்
கல்யாணம்
முடிஞ்சிடுச்சே
…”
“
அப்ப
அப்படியே
விட்ருவீங்களா
?”
“
கல்யாணத்துக்கு
முன்னாடியே
தெரிஞ்சிருந்தா
தடுத்து
இருக்கலாம்
.
அப்படி
ஆகிட
கூடாதுன்னு
தானேமா
லேட்டா
தகவல்
சொல்றாங்க
.”
கீதாவுக்கு
மனம்
சமாதானம்
ஆகவே
இல்லை
.
சிலர்
இப்படித்தான்
எதாவது
பிரச்சனை
செய்து
கொண்டே
இருக்க
வேண்டும்
.
காலையிலேயும்
சாப்பிடவில்லை
என்று
நந்தாவும்
வருணும்
முதல்
பந்தியிலேயே
சாப்பிட
அமர்ந்து
இருந்தனர்
.
அவர்களோடு
சேர்த்து
அவர்கள்
விட்டினரையும்
,
நண்பர்களையும்
சாப்பிட
வைத்தனர்
.
சாப்பிட்டு
முடித்து
வந்தவர்கள்
,
அவர்கள்
உறவினர்களை
வேன்னில்
ஏற்றி
,
உடனே
அங்கிருந்து
கிளப்பியும்
விட்டனர்
.
பரணி
அவர்களோடு
சென்றான்
.
செல்லும்
வழியில்
ராமேஸ்வரம்
,
திருச்செந்தூர்
எல்லாம்
சுற்றி
காட்டி
அழைத்துச்
செல்லும்படி
,
அவனிடம்
பணம்
கொடுத்து
அனுப்ப
…
உறவினர்களுக்கு
மிகவும்
மகிழ்ச்சி
.
ராதிகாவுக்கும்
அவள்
அம்மாவுக்கும்
கிளம்பி
செல்ல
துளியும்
விருப்பம்
இல்லை
.
ஆனால்
அவர்களை
இரு
என்று
யாரும்
சொல்லாத
போது
,
எப்படி
இருப்பது
?
“
ஏன்டாப்பா…
நீ
வரணும்னா
நாங்க
வரணும்
…
போன்னு
சொன்னா
போயிடனுமா
?
இவ்வளவுதான்
உன்
கல்யாண
விருந்தா
?”
என
அவர்
கேட்க
,
“
நான்
இன்னைக்கே
வேலைக்குப்
போகணும்
அத்தை
.
மெட்ராஸ்ல
எங்க
கல்யாண
ரிஷப்ஷன்
இருக்கும்
.
அப்ப
உங்களுக்குப்
பெரிய
விருந்தே
கொடுத்திடுறேன்
.”
என
நந்தா
சமாளித்து
அவரை
அனுப்பி
வைத்தான்
.
ராதிகா
அவனிடம்
சொல்லிக்கொள்ளக்
கூட
இல்லை
.
முகத்தை
உர்ரென்றே
வைத்துக்கொண்டு
இருந்தாள்
.
நந்தாவும்
அவளைக்
கண்டுகொள்ளவில்லை
.
அவன்
என்ன
இவளை
திருமணம்
செய்து
கொள்கிறேன்
என்று
சொல்லியா
இருந்தான்
.
அவளாக
மனதிற்குள்
ஆசையை
வளர்த்துக்கொண்டாள்
,
அதற்குத்
தான்
பொறுப்பு
இல்லை
என
நினைத்தான்
.
“
அம்மா
,
நாமும்
கிளம்பலாம்
,
கயல்
எங்கே
?”
நந்தா
கேட்க
,
அப்போது
அன்பரசுவும்
பத்மாவும்
ஒரு
பெரிய
தாம்பலத்தோடு
வந்தனர்
.
அதில்
நிறைய
நகைகளும்
,
ரொக்கமாக
நிறையப்
பணமும்
இருந்தது
.
தாங்கள்
பெண்ணுக்கு
செய்யும்
சீர்
என்று
சொல்லி
,
அதைக்
குழலியிடம்
அவர்கள்
கொடுக்க
..
அவர்
நந்தாவை
பார்த்தார்
.
“
உங்க
பெண்ணை
நான்
அவளுக்காக
மட்டுமேதான்
கல்யாணம்
பண்ணேன்
.
நீங்க
எனக்கு
இவ்வளவு
பணமும்
நகையும்
தருவீங்கன்னு
இல்லை
.”
“
எனக்கு
அவ
மட்டுமே
போதும்.
அவ
போட்டிருக்க
நகைகளைக்
கூடக்
கழட்ட
சொல்லிடுவேன்
,
ஆனா
உங்க
மனசு
கஷ்ட்டப்படும்னு
பார்கிறேன்
.”
நந்தா
பேசப்
பேச
அவனைத்
தவிப்பாகப்
பார்த்த
பத்மா
,
எதோ
சொல்ல
வர
…
அவரைக்
கைகாட்டி
அன்பரசு
தடுத்தார்
.
“
உங்க
இஷ்ட்டம்
.”
என்றவர்
திரும்பி
சென்றார்
.
இந்த
ஒரு
விஷயத்தில்
மட்டும்
கீதாவுக்கு
மிகவும்
சந்தோஷம்
.
அன்பரசுவுக்குப்
புரிந்து
விட்டது
.
தன்
மகளைத்
திருமணம்
செய்ததால்
மட்டும்
அவன்
மாறப்போவது
இல்லை
.
அவனுக்கு
அவர்
என்றுமே
எதிரிதான்
.
Advertising
Advertising