தன் கைப்பேசியில் நடாஷாவின் எண் மிளிர “என்ன அவசரமோ?” என்ற கவலையில் உயிர்ப்பித்தாள். “ராகா, ஒரு எமர்ஜென்சி. என்னோட சிஸ்டர் ட்ரீட்மெண்ட் பண்ணிட்டு இருக்காங்கன்னு உனக்குத் தெரியும்ல. ஷி இஸ் வெரி க்ரிடிகல்”
“ஓ.மை காட். ஐம் சாரி நட்ஸ்? நான் எதாவது ஹெல் பண்ணனுமா?” என்று நடாஷாவின் கவலை அவளையும் தொற்றிக் கொள்ள, பதட்டமாக வினவினாள் ராகா!
“ஐ நீட் யூ ஹியர்” என்ற நடாஷாவின் குரலில் நிறைய அதிகாரம் தொனிக்க, “ஹியர் நா? எங்க நட்ஸ்?” என்றாள் ராகா.
“இங்க மேரேஜ் வென்யூல. மால்டீவ்ஸ்ல. இவங்களால நான் இல்லாம தனியா சமாளிக்க முடியாது!”
“ஆனா நட்ஸ்! நான் எப்படி? யு நோ த இஸ்ஸூஸ்”
“ராகா, அதெல்லாம் பேச இப்போ டைம் இல்ல. ஜஸ்ட் நாளைக்கு ஒரு நாள் மேனேஜ் பண்ணு. நான் எப்படியாவது நாளைக்கு நைட்குள்ள அங்க ரீச் ஆகப் பார்க்கறேன்.”
“ஆனா நட்ஸ்.. அங்க.. நான்..”
“ப்ளீஸ் அண்டர்ஸ்டேண்ட் ராகா!” என்று கூறிய நடாஷாவின் குரல் அழுத்தமாய் ஒலித்தது. அதுவுமில்லாமல், தனக்கு ஒரு இக்கட்டான நிலைமை எனும் போது ராகா கேட்காமலேயே உதவி செய்தவள் நடாஷா. அந்த நன்றியின் காரணமாக ராகா சம்மதித்தாள்.
“தேங்கியூ கேர்ள். ஐ நோ ஐ கேன் டிரஸ்ட் ஆன் யூ! நான் இப்போ மாலே ஏர்போர்ட்ல இருக்கேன். உனக்கு இன்னும் நாலு மணி நேரத்தில மும்பையில இருந்து ஃப்ளைட் புக் பண்ணியிருக்கேன். உன்னைத் திண்ணடூ ஐலாண்ட்க்கு கூட்டிப் போகச் சம்படி வில் கம். ப்ளீஸ் ஹரி அப்” என்று பதற்றமாகப் பேசி முடித்தாள் நடாஷா.
********
மும்பையில் இருந்து மூன்று மணி நேரம் பயணித்து, மாலத்தீவின் தலைநகரமான மாலே நகரின் விமான நிலையத்தை வந்தடைந்த போது, மாலை ஐந்து மணி ஆகிவிட்டிருந்தது. இந்தப் பயண நேரம் முழுவதுமே சத்யாவை சந்திக்க ராகா மனதளவில் தன்னைத் தயார் படுத்திக் கொண்டாள். என்னவோ இந்த ஆறு மாத காலகட்டத்தில் சத்யாவின் மீது தோன்றியிருந்த வெறுப்பும், மனக்கசப்பும் வடிந்து போயிருக்க, அவனைப் பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்றெல்லாம் கடந்த சில வாரமாகவே தோன்றிக் கொண்டே இருந்தது.
அவர்களது திருமணத்திற்கு வேலை செய்யச் செல்ல நேரிடும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை ராகா! அதனால், இத்தனை மாதங்கள் கழித்து அவனைச் சந்திக்கும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று மனதில் திரும்பத் திரும்ப உருவேற்றிக் கொண்டாள்.
நடாஷா சொன்னது போல, மாலே விமான நிலையத்திற்கு, ராகாவை அழைத்துச் செல்ல புகைப்படக் குழுவைச் சேர்ந்த விஜயை அனுப்பியிருந்தாள். ராகாவிற்கு விஜய் ஓரளவு பரிட்சயம். இருவருமாக நிலையத்தில் இருந்து வெளிப்பட்டு, ஃபெர்ரி ஸ்டேஷன் சென்றனர்.
“மாலே ஐலாண்ட்ல இருந்து திண்ணடூ ஐலாண்ட் போக, டூ அவர்ஸ் ஆகும் ராகா! ரெண்டே போட் சர்வீஸ் தான் இருக்கு. ஸ்பீட் போட்ல போறது ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும்.” என்று இலகுவாகப் பேசிக் கொண்டே உடன் வந்தான் விஜய். மாலே தீவு, ஃப்ர்ரி ஸ்டேஷன், கடல், சீ கல் பறவை எனக் கண்ணைக் கவரும் விஷயங்களை அழகாய் தன் தோளில் தொங்கிய காமிராவில் பதிவுசெய்து கொண்டே வந்தான்.
ஃப்ர்ரி படகில் மாலை ஆறு மணிக்கு ஏறினர். மெல்லமாய் இருள் சூழ ஆரம்பிக்க, கடலினுள் அமிழத் துவங்கும் சூரியனையும், கற்றை முடிகள் காற்றில் பறக்க ஆழ் கடலின் அழகில் கட்டுண்டு மெய் மறந்து கண்மூடி போட்டின் கம்பியைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்த ராகாவையும், அழகாய் படம் பிடித்த விஜய், அதை ராகாவிடம் காட்டவும் செய்தான்.
அவன் தோளோடு உரசி நின்று அவன் கையில் பிடித்திருந்த காமிராவில் தன் நிழல் பிம்பத்தை ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு, முதுகைத் துளைப்பது போன்று யாரோ பார்ப்பதாய்த் தோன்ற, சட்டென்று திரும்பியவள் அதிர்ந்து நின்றாள்.
ஃப்ர்ரியின் மற்றொரு மூலையில் நின்று அவளையே விழி அகலாமல் பார்த்துக் கொண்டிருந்தான் சத்யா.
மிருதுவின் குடும்பம், சத்யாவின் குடும்பம், மற்ற உறவினர்கள் எனத் திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் முந்தினமே மாலே வந்திருந்தனர். ஆபீஸ் வேலைகள் சிலவற்றை முடித்துவிட்டு அன்றைய தினம் மதியம் தான் வந்து சேர்ந்தான் சத்யா இந்த ஃப்ரிரி போட்டைப் பிடித்து இரவுக்குள் திண்ணடூ தீவிற்குச் சென்றுவிடுவதாய் ஏற்பாடு.
நாற்பது அடி நீள ஃப்ர்ரி போட்டின் தளத்தில் சுற்றுலா பயணிகள், தேன் நிலவு தம்பதியினர் என்று ஒரு பத்து, இருபது பேர் இருப்பர். மாலை சூரியன் கடலினுள் மறையும் அழகை தரிசித்துக் கொண்டு வேடிக்கை பார்த்தவண்ணம் நின்றிருந்தவனுக்கு, புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த ஆடவன் தோளில் இலகுவாய் கைவைத்துப் பேசிக் கொண்டிருந்தது முதலில் ராகா தானா என்றே நம்ப முடியவில்லை.
“இவள் எங்கே இங்கே வந்தாள்? இல்லை, சில வாரங்களாய் அவளைப் பற்றிய எண்ணங்கள் அதீதமாகத் தோன்றுவதால் பார்க்கும் இடத்தில் எல்லாம் அவள் சாயல் தோன்றுகிறது” என்றே முதலில் எண்ணினான். ஆனால், அந்தச் சிறிய தலையசைப்பும், வலது கையில் கட்டியிருந்த கடிகாரமும், அதீத ஆர்ப்பாட்டம் இல்லாவிட்டாலும், அவளிடமிருந்து மிளிர்ந்த அவள் அழகிய திமிரும், தனித்துவமாய் எதிரொலித்தது.
அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த அந்த நொடி அவன் மனதில், மிருதுவா, ராகாவா என்ற குழப்பத்திற்கு இடமே இன்றி ராகா தான் என்று உறுதியாக முடிவாகியது. “சே! இந்த ஆறு மாச கவுன்சிலிங் எனக்கு எதுவுமே சொல்லித்தரலியா? இவளைப் பார்த்ததும் ஏன் உடனே தடுமாறணும்? ஒருவேளை கிடைக்கணும்னு இருந்தா அவ வருவான்னு நான் தினம் தினம் சொன்னது உண்மையாகப் போகுதோ! அதனால தான் இன்னைக்கு இவ வந்திருக்காளோ?” என்று நினைத்துக் கொண்டவனுக்கு, ஒரு பக்கம், அந்த ஆடவனுடன் அவள் அப்படி இடித்துக் கொண்டு நின்றது ஏனோ ரசிக்கவில்லை.
“ஒருவேளை லவ்வரா இருப்பானோ? அதனால தான் இப்படி இடிச்சுகிட்டும், தோள்ல கை போட்டுப் பிக்சர்ஸ் பார்த்துகிட்டும் நிக்கறாளோ? ஏன் நீ மூவ் ஆன் ஆன மாதிரி! அவ ஆகியிருக்கக் கூடாது?” என்று யோசித்துக் கொண்டே அவளைக் கண்ணிமைக்காமல் பார்க்க, அந்த நொடி சொல்லி வைத்தது போல, ராகா சட்டென்று திரும்பி சத்யாவைத் தான் பார்த்தாள்.
அவள் பார்க்கிறாள் என்று தெரிந்ததும் அங்கிருந்து விலகி வேறு திசையில் சென்று நின்று கொண்டான். அவனைக் கவனித்த ராகாவின் கைகள் அவளையும் மீறி “ஹாய்” என்று கையசைத்திருக்க, சத்யா கவனிக்காது விடுவிடுவென்று அங்கிருந்து நகர்ந்தது தெரிய, ஒரு மாதிரியாகிப் போனது ராகாவிற்கு.
“சை! எதுக்குக் கை காட்டின! இடியட்” என்று திட்டிக் கொண்டவள், அதன் பின்னர்ச் சத்யா எங்கே இருக்கிறான் என்று தேடுவதை முற்றிலும் நிறுத்திவிட்டு தன் பணியில் கவனம் செலுத்தினாள்.
திண்ணடூ தீவிற்கு வந்திறங்கியதும், வெளியே இருந்த டாக்ஸியில் ஏறி சத்யா முன்னதாகவே ரிசார்டிற்கு வந்துவிட்டிருந்தான். ராகாவும் விஜயும் சற்றே தாமதமாகவே வந்திறங்கினர்.ரிசார்ட் வந்ததுமே வனிஷாவும், மைக்கிலும் அவள் மேற்பார்வை செய்யவேண்டிய பணிகளைப் பட்டியலிட ராகாவிற்கு வேறு நினைப்புகள் இல்லாமல் போனது.
மிருதுளாவிற்கு ராகாவைப் பார்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. “ஹெல்த் பரவாயில்லையா?” என்று அக்கறையுடன் விசாரித்தாள்.
மாலையில் மணமகளுக்கு நலுங்கு வைக்கும் நிகழ்ச்சிக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் சரிபார்த்து, ஒழுங்காக நடைபெறுகிறதா என்று பார்வையிட்டுக் கொண்டே, ஒரக்கண்ணில் அங்கே மிருதுளாவுடன் அமர்ந்திருந்த சத்யா என்ன செய்கிறான்? தன்னைப் பார்க்கிறானா? தேடுகிறானா? என்றெல்லாம் அவ்வப்போது கவனித்துக் கொண்டு நடமாடினாள்.
முடிந்த மட்டிலும், அவன் கண்பார்வையில் இருந்து விலகிக் கொண்டுவிடத் தோன்றும். ஆனால் அலுவல் காரணமாக அங்கேயே உழலவும் வேண்டியிருக்கும். சில நேரம் அவன் பார்வையில் தென்படுவதும், சற்றைகெல்லாம் மற்றொரு பெண்ணுடன் அவன் நிற்கின்றானே என்ற ஏக்கம் கோபமாக மாறிவிட, அவன் பார்வை வட்டத்தில் இருந்து விலக்கிக் கொள்வதுமாக அடுத்தத் தினம் மாலை வரையிலும் இந்தத் தவிப்பிலேயே கடத்தி விட்டாள்.
விடிந்தால் திருமணம். அன்றைய தின இரவு ராகாவிற்கு நிறைய வேலைகள் இருந்தன. நடாஷா அதிகாலை வந்துவிடுவேன் என்று கூறியிருந்தது மனதிற்குத் தெம்பாக இருந்தது.
“இந்த ஒரு ராத்திரி கடத்திட்டா போதும்” என்று வேண்டிக் கொண்டவள், நள்ளிரவு தனிப் படகில் வந்திறங்கப் போகும் மணவறை அலங்காரத்திற்கான ஆர்கிட் மலர் மாலைகளையும், டெகரேஷன் பூக்களையும் சரிபார்க்கவென அந்த இரவில் ஃப்ர்ரி போட் நிலையம் செல்லத் தயாராகி வெளியே வந்தாள்.
நேரம் அதிகாலை இரண்டு மணி ஆகியிருந்தது. சரியாக அந்த நேரம் தன் நண்பர்களுடனும், ஹரிணியின் கணவருடனும் பேசிக் கொண்டிருந்துவிட்டு, உறங்குவதற்குத் தனது அறைக்குச் செல்ல வராண்டாவின் எதிர்சாரியில் வந்து கொண்டிருந்தான் சத்யா. திருப்பத்தில் அவன் மீது வேகமாக முட்டி மோதிய ராகாவின் மீது இடித்து நின்றுவிட, சுவற்றின் பக்கம் தடுமாறிய ராகா விழுந்துவிடாமல் இருக்கவென அவளைச் சுற்று அரனாய் கைகளைக் கோர்த்துக் கொண்டான்.
சத்யாவை அந்த நிமிடம் அங்கே எதிர்பாராத ராகா, சுவற்றின் நுனியில் இடி வாங்கிக் கொண்டு “சஸ்ஸ்ஸ்” என்று வலியில் கத்தியிருந்தாள்.
சத்யாவின் கைகள் அவள் விழுந்து விடாமல் தாங்கிப் பிடித்ததோடு அல்லாமல், அவளைத் தன் அருகே இழுக்கவும், அவன் பிடியில் இருந்து விடுவித்துக் கொள்ள இயலாமல், அதே நேரம் அவன் கையணைப்பிலேயே நின்று விடவும் ஏங்கியது அவள் மனம்.
“ஆர் யூ ஒ.கே ராகா?” என்று கேட்டுக் கொண்டே அவள் முகத்தின் பாவனைக்களைத் தேடிய சத்யாவின் கண்கள், கொஞ்சமாய் விரிந்து கிடந்த அவள் அதரங்களை ஏக்கத்துடன் பார்க்க, சத்யாவின் எண்ணம் புரிந்த ராகா, மெல்லமாய்ப் பக்கவாட்டில் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
உதட்டில் படிந்திருந்த புன்னகையைத் தனக்கான சம்மதமாய்ப் பாவித்த சத்யா, அவள் முகத்தைத் தன் பக்கம் மெல்லமாய்த் திருப்பி, வலிக்காமல் அவள் கீழுதட்டைக் கவ்வி இழுக்கத் துவங்கினான். அவன் அணைப்பிலும், அவன் உதட்டின் உரசலிலும் தன்னை மறந்து லயித்திருந்த ராகா, சத்யாவின் கழுத்தைச் சுற்றிலும் தன் கைகளை மாலையாகக் கோர்த்து அவள் உயரத்திற்கு ஏதுவாக அவனைக் கீழே இழுத்தாள்.
கள்ளுண்ட களிப்பில், கட்டியணைத்துக் கொண்டு இருவரும் நின்றிருக்க, அந்த நேரம் தூக்கம் வராமல் வெளிவராண்டாவிற்கு வந்த மிருதுவின் கண்களில் இருவரும் விழுந்திருந்தனர்.
*******
“சத்யா!” என்ற கூச்சல் சப்தம் எங்கிருந்து வருகிறது என்று தெரியாமல் முதலில் சுயநினைவுக்கு வந்தது ராகா தான். அதிலும் மிருதுவின் அறையின் வாயிலில் இருந்து கேவல் சப்தம் கேட்கவும், சத்யாவின் அணைப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட ராகா, திடுக்கிடலுடன் மிருதுவை ஏறிட்டாள்.
அழுது கொண்டே மிருதுளா தன் அறைக்குள் ஓட, மிருது நான் சொல்லறதைக் கேளு!ப்ளீஸ் நில்லு!” என்று கூறிய சத்யா, ராகாவின் கைகளை விட்டுவிடாமல் அவளையும் தன்னுடன் இழுத்துக் கொண்டு ஓடினான். ராகாவிற்குத் தன் மீதும், தன் செய்கையின் மீதும் அருவருப்பு உண்டாகியது. “சே! இவளோ பலவீனமானவளா நான்?” என்ற சுயபட்சாதாப உணர்வில் சிக்குண்டவள், சத்யாவின் கைகளை உதறிவிட்டு, நேராகத் தன் அறைக்குள் சென்றாள்.
அங்கே ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாது என்று திடமாய்த் தோன்றிவிட, தன் உடைமைகளை அள்ளிப் பையில் போட்டுக் கொண்டு ரிசார்டில் இருந்து வேகமாக வெளியேறினாள்.
********
சத்யாவும் மிருதுளாவும் அமர்ந்திருந்த அந்தக் கார் மாலே விமான நிலையத்தை நோக்கி அந்த அதிகாலைப் பொழுதில் வேகமாக விரைந்தது. பக்கவாட்டில் கைகளைப் பிசைந்து கொண்டு அமர்ந்திருந்த சத்யாவைக் காண மிருதுவுக்குப் பாவமாக இருந்தது.
“ஃப்ளைட்டுக்கு இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு. அதுக்குள்ள போயிடலாம் சத்யா. டோண்ட் வர்ரி” என்று மிருது கூற, தலையை மட்டுமாய் அசைத்தான் சத்யா.
நேற்றி இரவு நிகழ்வுக்குப் பின் எந்தப் பெண்ணுமே இப்படி அனுசரனையாக நடந்து கொள்வாளா என்று கேட்டால் அது சந்தேகமே! மிருதுவின் அறைக்குள் ஓடிய சத்யா, முழு மூச்சாக எந்தத் தடங்கலும் இன்றித் தன் மனதின் எண்ணம் முழுவதையும் ஒப்பித்திருந்தாள்.
ராகாவுடனான, தன் ஈர்ப்பு, அவளுடனான ஸ்னேகம், நட்பு, நம்பிக்கை என அவன் பேசப் பேச, “இப்படியெல்லாம் கூடச் சத்யாவால் பேச இயலுமா?” என்று மட்டுமே மிருது சிந்தித்தாள். ராகாவையும் சத்யாவையும் ஒன்றாகப் பார்த்த அந்த நொடி நேரம் தான் அவள் மனம் விம்மியது. அதன் பின்னர், சத்யா நடந்தைக் கூற, முதலில் கோபம், அழுகை, என்று தன் உணர்ச்சியைக் கொட்டிய பின்னர், சற்றே தெளிவாக இருபக்கமும் யோசிக்க இயன்றது மிருதுவால்.
“உன்னை ஏமாத்தணும்னு நான் நினைக்கலை மிருது! ஆனா, எனக்கு ராகா கூட இருக்கற கம்பர்ஃட் உன்கிட்ட ஏற்படவேயில்ல. நீ என்ன முடிவெடுத்தாலும் அதை நான் ஏத்துக்கறேன். என்னை மன்னிச்சிரு. உன்னைக் கல்யாணம் பண்ணி, தெரிஞ்சே ரெண்டு பேர்த்தோட வாழ்க்கையையும் என்னால வீணடிக்க முடியலை” என்று கண்ணீர் மல்க மிருதுவிடம் சொல்லிவிட்டான்.
அதன் பிறகு மிருதுவின் நடவடிக்கைகளை இன்னமும் சத்யாவால் நம்ப முடியவில்லை. அழுது, புரண்டு ஆர்ப்பாட்டம் செய்து ஊரைக் கூட்டி அவனைச் சந்தி சிரிக்க வைப்பாள் என்று சத்யா எதிர்பாத்ததைப் பொய்ப்பித்த மிருது, நேரே ராகாவைத் தேடிக் கொண்டு சென்றாள்.
ராகா அவள் அறையில் இல்லை என்பது தெரிய, கொஞ்சமும் தாமதிக்காமல், சத்யாவை அழைத்துக் கொண்டு இதோ இப்போது விமான நிலையம் நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருந்தாள்.
விமான நிலையத்தின் டிக்கெட் கவுண்டரில் ராகா நிற்பது தெரியவும்,சத்யா ஓடோடிச் சென்று ராகாவின் எதிரில் நின்றான். அங்கே அவனை எதிர்பாராதவள், “எதுக்கு வந்தீங்க இங்க? ப்ளீஸ் கோ பேக். நான் இங்க வந்திருக்கவே கூடாது. நடாஷாவுக்கு ஹெல் பண்ண வந்தது என் தப்பு” என்று கண்ணிலிருந்து சிந்திய நீருடன் பேச, அவளை இழுத்துக் கொண்டு சற்றே ஓரமாய் ஒதுங்கி நின்ற சத்யா,
ராகாவைத் தன் தோள் மீது போட்டு அணைத்துக் கொண்டான். ராகா இன்னமும் புலம்பிக் கொண்டே இருந்தாள். “எதுக்கு வந்த சத்யா? ஏன் என் லைஃப்ல திரும்பத் திரும்ப வர்ற? செட் ஆகாதுன்னு சொல்லிட்டு தானே போனேன். அப்பறமும் என்ன?” என்று அவன் முகம் பார்த்து வினவ, சத்யா பதிலேதும் சொல்லாமல் அவளை இன்னமும் அணைத்துக் கொண்டான்.
“உன்னை லவ் பண்ணறேன். அதனால தான் திரும்பத் திரும்ப வர்றேன்” என்றான் சன்னமான சிரிப்புடன்.
“லவ் பண்ணறியா?”
“ம்ம்ம்”
“கல்யாணம் பண்ணிக்குவியா?”
“லவ் பண்ணா அடுத்து அதானே செய்யணும்?” என்றான் அவனும் நக்கல் குறையாமல்.
“என்னைக் கல்யாணம் பண்ணா உன்னோட கம்பெனி என்னாகறது?”
“நான் மேனேஜ் பண்ணிக்குவேன்”
“உன்னோட ஷேர் பிரைசஸ் என்னாகறது?”
“நான் மேனேஜ் பண்ணிக்குவேன்”
“உங்க இன்வெஸ்டர்ஸ் என்ன சொல்லுவாங்க”
“அவனுங்க கிடக்கறானுக கடங்காரபயலுக” என்றான் இன்னமும் இறுக்கியபடிக்கு.
“மிருது! மிருது பாவம்! அவ வாழ்க்கை என்னாகறது?” என்றெல்லாம் கேட்டுக் கொண்டே நிற்க, சத்யா கண்ஜாடையில் மிருது நிற்கும் இடத்தைக் காட்ட, ராகா அங்கே ஏறிட்டாள்.
மிருதுவின் முகம் குழப்பமில்லாமல் தெளிவாய் ராகாவைப் பார்த்துச் சிரிக்க, என்ன ஏதென்று ராகா யோசிக்கும் முன்னர் மிருது அவர்களின் அருகே வந்தாள். “மிருது! நான்.. ஐம் வெரி சாரி! உன்னை ஹர்ட் பண்ணனும் நான்” என்று ராகா பேசத் துவங்கவுமே, ராகாவின் உதட்டில் கைவைத்து, மேலே பேசாதே என்று தடுத்திருந்தாள் மிருது.
“நீ எதுமே சொல்ல வேண்டாம் ராகா! அதுக்கு அவசியம் இல்லாம, சத்யா ஏற்கனவே நிறையச் சாரியும், எக்ஸ்பிளனேஷனும் குடுத்துட்டார். சத்யாவுக்கு உன் மேல இருக்கற அளவுக்கு என் மேல என்னைக்கும் காதல் வரப்போறதில்லை. இது தெரிஞ்சதுக்கு அப்பறமும், நான் அவரைக் கல்யாணம் பண்ணிகிட்டா நல்லாவா இருப்பேன். நோ! எனக்கு அப்படி ஒரு நேம் சே கல்யாணம் தேவையில்ல.” என்று சற்றே வருத்தம் தொனித்தாலும் தெளிவான சிந்தனையுடன் தான் பேசினாள்.
“அதுக்காகச் சத்யாவை ஒரேயடியா என்னால தூக்கி எரிய முடியாது. என்னோட அப்பா ஹாஸ்பிடல்ல இருந்த சமயம், சத்யா எனக்காக, எங்க கம்பெனிக்காக நிறையச் செஞ்சிருக்கார். ஏன், நீங்களும் தான் என் மேல உண்மையான அக்கறையோட விசாரிச்சீங்க. அதனால தானோ என்னவோ எனக்கு உங்க ரெண்டு பேர் மேலையும் ரொம்பக் கோபம் வரலை.”என்று மிருதுளா சொல்ல, ராகா மிருதுவின் கைகளைப் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். அந்தக் கைகளின் அழுத்தமே ராகாவின் நன்றியை மிருதுவுக்குக் கடத்தியிருந்தது.
சத்யா அதிகம் சப்திக்காமல், “தேங்கியூ” என்று மிருதுளாவிடம் கூற, தலையசைப்புடன் அதை ஏற்றுக் கொண்டாள். தந்தைக்கு உடல் நலம் குன்றிய இந்த ஆறு மாத காலத்தில் மிருதுளா சத்யாவின் உதவியுடன் அவர்களது பிசினஸை கவனிக்கத் துவங்கியிருந்தாள்.
அங்கே நிகழும் ஏற்ற தாழ்வுகள், மனிதர்களின் பலவிதமான முகங்கள் இவையெல்லாம், மிருதுவிற்கு உண்மை மனிதர்கள் யார், நலம் விரும்பிகள் போல நடிப்பவர் யார் எனக் கற்றுக் கொடுக்கத் துவங்கியிருந்தது. அவளுக்கு உறுதுணையாக இருக்கும் சத்யாவும், அவள் நலனில் அக்கறை கொண்ட ராகாவும் வாழ்க்கையில் இணைவதை நினைத்து மகிழ்ச்சி தான் ஏற்பட்டது.
“சரி, இப்போ அடுத்து என்ன? நம்மளை ரிசார்ட்ல காணோம்னு தேட ஆரம்பிச்சிருப்பாங்க. என்ன பண்ணலாம்?” என்று மிருது வினவ, சத்யா ராகாவைத் தான் பார்த்தான்.
“நீ தானே ஈவெண்ட் மேனேஜ்செய்பவள். இந்த இக்கட்டையும் மேனேஜ் செய் பார்க்கலாம்?” என்று சவாலாக அவளைப் பார்க்க, “மேரேஜ் செஞ்சு வைக்கறதுக்கு மட்டும் தான் நீங்க ரெண்டு பேரும் பே பண்ணியிருக்கீங்க. பிரிச்சு வைக்க, தனிக் காண்டிராக்ட் நீங்க நடாஷாவுக்குச் செட்டில் பண்ணனும். வாங்க வாங்க ரேட் என்னனு பேசிட்டே போலாம்” என்று சிரிப்புடன் ஒரு கையில் சத்யாவையும், மற்றொரு கையில் மிருதுவையும் பிடித்துக் கொண்டு திரும்பத் திண்ணடூ தீவு நோக்கி பயணமாயினர்.
“சத்யா! போற வழியில! மாலே டவர்ஸ்க்கு கீழ ஒரு கடைல மஷ்ஷுனின்னு ஸ்மோக்ட் ட்யூனா வச்சு ஒரு டிஷ் விக்கறாங்க. அதை டேஸ்ட் பண்ணிட்டு போலாமா?” என்று கண்களை இடுக்கிக் கொண்டு ராகா வினவினாள்.
“ஆமா, ஆமா, ரிசார்ட் போயி, நிறையப் பேர் கைகால்ல விழுந்து கும்பிட்டு எக்ஸ்பிளைன் பண்ண தெம்பு வேணும், சாப்பிட்டுட்டே போலாம்.!”என்று சிரிப்புடன் சொன்ன சத்யா, ராகாவின் கைகளைத் தன்னுடன் இறுக்கிக் கொண்டான்.
மிருதுவும் அவர்களின் சிரிப்பில் சேர்ந்து கொள்ள, மூவர் மனதிலும் மோகனமான நிம்மதி பரவியிருந்தது.