அந்த வாரத்தில் பி.என். ஐ. (BNI) மீட்டிங் இருந்தது அலுவலகத்தில்.. அது தொடர்பாக வேலையில் அலைந்து கொண்டிருந்தனர் அனைவரும். அதில் விதி விலக்காக எதையும் கண்டுகொள்ளாமல் தன் வேலையைப் பார்த்து கொண்டிருந்தது கலை மட்டுமே. ஏதோ தீவிரமாகக் கணினியில் டைப் செய்து கொண்டிருந்தவனிடம் தான் இருப்பை காட்டியது தொலைப்பேசி.
அலைபேசியின் சத்தத்தில் கணினியிலிருந்து பார்வையை விலக்கி அலைபேசியைப் பார்த்தான். தாய் தான் அழைத்திருந்தார். அலைபேசியை அழுத்தமாகப் பார்த்தவன் ப்ளூடூத்தை கனெக்ட் செய்துவிட்டு அழைப்பை ஏற்றான்.
“சொல்லுங்கம்மா…” என்றான்.
“”பாப்பா பிறந்து மூணாவது நாளில் போனவன் டா நீ.. இரண்டு வாரம் ஆச்சு இன்னும் இந்தப்பக்கம் வரலை, கால் பண்ணா எடுக்கிறது இல்லை, என்னதான் நினைச்சிட்டு இருக்க நீ, டெய்லி வந்து பார்த்திட்டு போன்னா சொல்கிறேன். வாரத்துக்கு ஒருநாள் வந்துட்டு போகறதுக்கு என்ன உனக்கு. மாப்பிள்ளை பாரு கொஞ்ச நாளைக்கு ஒர்க் ஃப்ர்ம் ஹோம் வாங்கிட்டாரு. அது மாதிரி நீயும் வாங்கிட்டு வர வேண்டியது தானே. எல்லாமே நாங்க தான் சொல்லனுமா உனக்கு…வீட்டுக்கு வான்னு ஒருத்தர் உன்கிட்ட கெஞ்சீட்டே இருக்கணுமா…” என சௌந்தர்யா திட்டிக் கொண்டிருக்க இவனோ “ஃபுல் ஃபார்ம்மில் இருப்பார் போலத் திட்டும் வரை திட்டட்டும்…” என நினைத்தவன் கவனம் முழுவதும் கணினியில் மட்டுமே இருந்தது.
இந்த மாதத்திற்கான மொத்த மெட்டீரியல்ஸ் அமௌன்ட்டையும் போட்டுக் கொண்டிருந்தவன் எதிரில் வந்து நின்றாள் ஆரி. சாந்தமான முகத்துடன் வந்து நிற்கிறாள் என்று நினைத்தால் தான் தவறு. தொலைப்பேசி ஏந்தி நிற்கும் பத்திரகாளியாய் தான் நின்றாள்.
அவளைக் கேள்வியாகப் பார்த்தவன் “சரிங்க மா அப்பறம் பேசறேன். எம்.டி வந்து இருக்காங்க என்னனு கேட்டுட்டு வரேன்…” என்றவன் சௌந்தர்யாவின் அழைப்பை துண்டித்துட்டு விட்டு காரிகையைக் கண்டான்.
அவன் அழைப்பைத் துண்டித்த அடுத்த நிமிடம் ” என்ன மிஸ்டர் ஏகலைவன் பண்ணிட்டு இருக்கீங்க? டீமை கவனிக்கறீங்களா இல்லையா? எம். சேண்ட்( m_sand) நேத்தே கேட்டு இருக்காங்க நீங்க இன்னும் அதை சைட்டுக்கு அனுப்பாம இருக்கீங்க. அங்க ஒர்க்கர்ஸ் எல்லாம் வேலை இல்லாம இருக்காங்க. எந்தந்த சைட்டுக்கு எப்ப எப்ப மெட்டீரியல்ஸ் போகணும் தெரியாதா உங்களுக்கு அதுக்காக தானே உங்களை வேலைக்கு வைச்சு இருக்கேன் . அதுகூட பாத்துக்க மாட்டீங்களா? இன்னும் அரைமணி நேரத்துல சைட்டுக்கு எம்.சேண்ட் போயிருக்கணும். இல்லைன்னா நடக்கிறதே வேற…” எனக் கத்திவிட்டுச் சென்றவளிடம்
‘இன்று காலையில் தான் எம்.சேண்ட் வேண்டுமென்று கேட்டார்கள் என்று நிரூபிக்க முடியும் தான். ஆனால் எதுவும் பேசவில்லை தினேஷை அழைத்தான் மீண்டுமொரு முறை உறுதி செய்து கொண்டான் இன்னும் கால் மணி நேரத்தில் அவர்கள் கேட்ட மண்வகை சென்று விடும் சென்றதும் பேசிக் கொள்வோம் என்று நினைத்தவன் அதே போல் கால் மணிநேரத்தில் ஆரியின் அறையில் சாந்தமான ருத்ர மூர்த்தியாய் நின்றான்.
“மெட்டீரியல்ஸ் ரீச்சிடு மேம்…” என்றான் பொதுவாக.
“ஒகே… தென்…” என்பதைப் போல் பார்த்தாள் வழக்கம் போலவே இந்த ஆட்டிட்யுட் இவனுக்குக் கடுப்பை தான் கிளப்பியது. அந்த கடுப்பை முகத்தில் தேக்கி தினேசை அழைத்தான். அவன் உள்ளே வந்ததும் அவன் அலைபேசியை வாங்கி அவளிடம் காட்டியவன் தினேசை செல் என்னும் படி தலையசைத்து விட்டு ஆரியிடம் திரும்பியவன் “எங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணது இன்னைக்கு காலையில் தான் மேடம்… அவங்க இன்பார்ம் பண்ணதும் அடுத்த நிமிடம் அங்க மெட்டீரியல்ஸ் போகணுன்னா எப்படி? ஷாப் ஓபன் பண்ணி இருக்க வேண்டாமா?…” அதற்கு அவளிடம் பதில் இல்லை.. சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு இவனே தொடர்ந்தான்.
“நாங்க சைட்டுக்கே போயி பார்த்தாலும் இத்தனை நாளைக்கு தான் மெட்டீரியல்ஸ் வரும்னு எங்களுக்குத் தெரியாது. எது எது எப்ப முடியுன்னு என்ஜினீயர்ஸ் தானே சொல்லணும். அப்படி சொல்றவங்க அட்லீஸ்ட் ஒரு நாள் முன்னாடியவது சொல்லணும்…”
“இப்படி சுடுதண்ணியில காலை விட்ட மாதிரி மார்னிங் ஒர்க்கர்ஸ் வந்ததும் சேண்ட் இல்லை வேணும்னு சொன்னா எங்க டீம்மால என்ன செய்யும் முடியும் சொல்லுங்க. நாங்க இன்ஃபார்ம் பண்ணா கூட ட்ராஃபிக் அண்ட் டைமிங் பத்தி யோசிக்க வேண்டாமா? இப்ப கூட நம்ம நார்மலா வாங்கற இடத்தில சேண்ட்டை(sand) பர்செஸ் பண்ணல. அந்த சைட்டுக்கு பக்கத்துல இருக்கற இடத்தில வாங்கினது தான். அதனால் தான் சீக்கிரமா ரீச் ஆயிருக்கு… இனிமே இன்ஃபார்ம் பண்ணது எப்பன்னு என்ஜினியர்ஸ் கிட்ட கேட்காம என்கிட்ட வந்து பேசாதீங்க…” என முகத்தில் அடித்தது போல் பேசியவனைப் பலமாக முறைத்தாள் ஆனால் எதுவும் பேசவில்லை..
காலையில் எப்போதும் போல பள்ளிக்கு சென்று விட்டு அலுவலகத்திற்கு வரும் வழியிலேயே சைட் அனைத்தையும் பார்த்து விடுவது ஆரியின் வழக்கம். இன்று அப்படி சொல்லும் போது தான் குறிப்பாக சில சைட்டில் மட்டும் ஒர்க்கர்ஸ் யாரும் வேலை செய்யாமல் அமர்ந்திருந்ததை பார்த்தாள். வந்ததே கோபம் அந்த சைட் என்ஜினீயரை அழைத்து விசாரிக்க அவனோ ஒரே பேச்சில் மெட்டீரியல்ஸ் வரவில்லை வேலை செய்யவில்லை என்று கூறிவிட்டான்.
அந்த கோபத்தை தான் வந்தும் வராமல் கலையிடம் காட்டிவிட்டாள். தற்போது கலை கூறும் வரையிலுமே வாட்சப் குரூப்பில் குறுஞ்செய்தி வந்திருக்கிறதா இல்லையென்று பார்க்கவில்லை என்று நினைத்தவள் உடனே அதை எடுத்து பார்த்தாள். கலை கூறியது போல எவ்வித குறிஞ்செய்தியும் வராமல் இருக்க கலை மீது தற்போது எழுந்த மொத்த கோபமும் சைட் என்ஜினியர் மீது திரும்பியது. அதற்கு பிறகு சொல்லவா வேண்டும் இவளின் பேச்சை… பேசிய பேச்சுக்கள் அனைத்தும் காச்மூச் தான்…
அந்த மீட்டிங்கும் வந்திருந்தது… காசியும் மீட்டடிங் என்பதால் கோவை வந்திருந்தான். காசி உட்பட பலரும் மீட்டிங் பரபரப்பில் இருக்க கலையோ யாருக்கு வந்த விருந்தோ என்று மீட்டிங் முடிந்ததும் என்ன லஞ்ச்சிற்கு ஏற்பாடு செய்து இருக்கிறார்கள் என்று தான் பார்க்க கேண்டீன் வந்திருந்தான்.
நீந்துவது, நடப்பது, என்பது மட்டுமே இருந்தது… “இந்த இறால் நண்டு இது போல எதுவும் இல்லையா?… எல்லாம் சிக்கன், மட்டன், ஃபிஷ் ஃப்ரை இப்படி தான் இருக்கு…” என வெகுவாக விசாரித்து கொண்டிருந்தவனிடம் அதற்கு தகுந்த பதில் கூறிக் கொண்டிருந்தனர் அங்கிருந்தவர்கள்.
அதே சமயம் லஞ்ச் என்னன்ன என்பதை மேற்பார்வை பார்க்க வந்தவள் கலை கேட்பதை கவனித்தாள் சட்டென இதழ்களில் புன்னகை மலர அதை மறைக்காமல் கலையின் முன் நின்றவள் “இங்க என்ன கலை பண்ணிட்டு இருக்கீங்க…” பளிச்சென்ற சிரிப்போடு கேட்டாள்.
மங்கையின் சிரிப்பை இமைக்காது பார்த்தவன் “அழகா இருக்கீங்க…” அந்த நிமிடம் எவரைப் பற்றியும் யோசிக்காமல் மனதில் தோன்றியதைக் கூறினான். நிமிடத்தில் அவன் கூறியது புரியப்பட விரிந்த இதழ்களைக் குவித்து கண்களைச் சுருக்கி கலையை முறைத்தாள்.
“இதோ பாருங்க காம்ப்ளிமெண்டரி சொன்னா சே தேங்க்ஸ் அதை விட்டுட்டு இப்படி முறைச்சா என்ன அர்த்தம்…” எனக் கடுப்போடு கேட்டவனை அழுத்தமாகப் பார்த்துவிட்டு அவ்விடத்தை விட்டு நகர கலையும் அவளுடன் சென்றான். நேராக அங்கிருந்த டைனிங் ஏரியாவிற்குள் நுழைந்தவள் தன் பின்னாலேயே வந்த கலையை திரும்பிப் பார்த்து “என்ன நினைச்சிட்டு என்கிட்ட இப்படி பேசிட்டு இருக்கீங்க கலை…” எப்போதும் கத்தவில்லை சாந்தமாகத் தான் கேட்டாள் ஆனால் குரலில் அத்தனை எரிச்சல் இருந்தது.
“இதுல நினைக்கிறது என்ன இருக்கு. அழகா தெரிஞ்சிங்க சோ அழகா இருகீங்கன்னு சொன்னேன்… இதுல என்ன தப்பு இருக்கு…” தோளைக் குலுக்கி அசட்டையாகக் கேட்டவனின் பாவனை அத்தனை கோபத்தைக் கொடுத்தது ஆரிக்கு..
“இதோ பாருங்க அன்னைக்கு ஸ்கூல்ல இருக்கும் போது என்னைப் பத்தி கேட்டீங்க ஏதோ அமைதியான மனநிலையை இருந்ததினால என்னைப் பத்தி சொன்னேன். அதையே மனசுல வைச்சுக்கிட்டு இப்படி அட்வான்டேஜ் எடுத்துகிட்டு அழகா இருக்கீங்க, உங்க சுடிதார் நல்லா இருக்கு, உங்க லிப்ஸ் நல்லா இருக்குன்னு கமென்ட் சொல்ற வேலையை எல்லாம் என்கிட்ட வேண்டாம். உங்க பார்வையே சரியில்லை ஏதோ தப்பா இருக்கு… ” கோபத்தில் முகம் சிவக்க குற்றம் சாட்டியவளை உற்றுப் பார்த்தவன் “என் பார்வையில என்ன தப்பு இருக்குன்னு சொல்றீங்க…” என கேட்டான்.
“எப்பவும் நீங்க பார்க்கற பார்வைக்கும் இப்ப நீங்க பார்க்கற பார்வைக்கும் ஆயிரம் வித்தியாசம் இருக்கு… எப்பவும் உங்க பார்வையில ஒரு அசட்டு தனம் இருக்கும். ஆனால் அது இன்னைக்கு இல்ல…” என்றாள் கோபமாக
“சரி சொல்லுங்க… நான் எப்படி பார்த்தேன்…” கைகட்டி அமைதியாக கேட்டான்.
“அது எனக்கு தெரியல ஆனா தப்பா பாக்ககுறீங்க…” என்றாள் இன்னும் கோபமாக…
அவளை அழுத்தமாகப் பார்த்துவிட்டு “தப்பா பார்க்கிறதுன்னா வேற மேம்… நான் உங்க இடுப்பையும், இடுப்புக்கு மேலேயும் பார்க்கல…” என்றான்
“ஏகலைவன்…” அழுத்தி அதே சமயம் இதற்கு மேல் பேசாதே என்பது போல் குரலில் எச்சரிக்கை இருந்தது. அதை எப்போதும் போல கண்டுகொள்ளாதவன்
“இதோ பாருங்க ரசனையா பார்க்கிறதுக்கும் கழிஜ்ஜா பார்க்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கு மறுபடியும் மறுபடியும் நீங்க என்னைத் தப்பா போர்ட்ரேட் பண்றீங்க…” எனக் காய்ந்தவனை நிமிர்ந்து நிதானமாகப் பார்த்தவள்
“நீங்க பார்க்கிற பார்வை, பேசற விதம், நடந்துக்கற முறை எல்லாமே எதுக்காகன்னு நான் தெரிஞ்சுக்கற வரைக்கும் தான் நீங்க என்கிட்ட இப்படி நின்னு பேச முடியும் ஏகலைவன். அது என்னன்னு மட்டும் கண்டு பிடிச்சேன். அந்த நாள் என்கிட்ட இருந்து நீங்க தப்பிக்கவே முடியாது…” என விரல் நீட்டி மிரட்டியவளிடம் மெல்லிய குரலில் “நான் என்ன நினைக்கிறேன் எனக்குமே தெரியலை. சீக்கிரம் கண்டு பிடிச்சு சொல்லுங்க ஹெல்ப்பா இருக்கும்…” நமட்டு சிரிப்புடன் கூறினான்.
அவனது சிரிப்பில் கோபம் மிதுற “கலை…” எனப் பல்லைக் கடித்தபடி அழைத்தாள். தற்போது சொல்லுங்க என்பதைப் போல் பார்ப்பது கலையின் முறையாயிற்று. அவனின் பார்வையில் எழுந்த எரிச்சலை அடக்க டேபிளில் வைத்திருந்த நீரை மடக்கெனக் குடித்தாள்.
கோபத்தால் சிவந்த நாசியையும், சுருங்கிய கண்களையும் பார்த்தவன் கண்களுக்குக் கீழே, மேல் கன்னத்தில் அரசியாய் வீற்றிருக்கும் மச்சத்தைத் தேடினான். அது இல்லாமல் போக “எங்க மச்சத்தை காணோம்…” மங்கையின் அருகில் சென்று பார்த்தபடி பதற்றமாய் கேட்டான். அவன் கேள்வியில் புரையேறக் குடித்துக் கொண்டிருந்த நீரை எதிரில் இருந்தவனின் மீதே துப்பியிருந்தாள்.
அந்த நிமிடம் “ஐயோ…” என்பதைப் போல் திருத்திருவென விழித்தாள்.
கண்களை இறுக மூடித் திறந்தவன் மனமோ ‘நல்லவேளை என் ஹைட் இல்லை, இல்லைன்னா என் மூஞ்சில அபிஷேகம் பண்ணிருப்பா…’ என நினைத்தபடியே நெஞ்சிற்குச் சற்றே மேலிலிருந்த ஈரத்தைத் தான் குனிந்து பார்த்தான். ஏனோ சிரிப்பு வந்தது கலைக்கு நெஞ்சிலிருந்த ஈரம் அவனை ஏதோ செய்தது மெல்லிய இளம் புன்னகையுடன் குனிந்து சட்டையைப் பார்த்தான்.
“அச்சோ…” எனப் பதறி ஆடவனின் அருகில் சென்று ஈரத்தைத் துடைக்கவில்லை என்றாலும் கையில் வைத்திருந்த கர்சீப்பை நீட்டினாள்.
மங்கையின் கரத்தை பார்த்தவன் நிமிர்ந்து பார்த்து “நல்லவேளை என் ஹைட் இல்லைங்க நீங்க. இன்னும் கொஞ்சம் வளர்ந்திருந்தா என் மூஞ்சியில இன்னைக்கு அபிஷேகம் பன்னிருப்பீங்க…” என்றபடி கர்சிப்பை வாங்கியவன் சட்டைக்கு மேலிருந்த ஈரத்தைத் துடித்தவன் நிமிர்ந்து ஆரியை பார்த்தான்.
எப்போதும் போல தான் நின்று கொண்டிருந்தாள் ஆனால்
ஆரியையும் மீறி அவளின் கண்கள் பூவையின் சிரிப்பைக் காட்டிக் கொடுத்தது.
“சிரிக்கிறீங்களா? இல்லைன்னு மட்டும் சொல்லாதீங்க உங்க கண்ணு நீங்கச் சிரிக்கிறதை எனக்குக் காட்டிக் கொடுக்குது…” பாவையின் கண்களுக்குள் ஊடுருவியபடி கேட்டான்.
அவனிடம் பதில் பேசவில்லை என்றாலும் கண்களை எட்டிய சிரிப்பை இதழ்களுக்குக் கடத்தியபடி ஆடவனைப் பார்த்தாள். அவனோ மாயோளின் சிரிப்பில் லயித்தபடி “இப்படி முகம் முழுக்க சிரிப்போட உங்களைப் பார்க்கும் போது ரொம்ப ரொம்ப அழகா தெரியாறீங்க..” ஆழ்ந்து கூறியவனை அழுத்தமாகப் பார்த்துவிட்டு நகர்ந்தாள்.
***,
எப்படியும் கதையை இன்னைக்கு முடிக்கறது கஷ்டம் dears… உங்களோட அன்பு என்னை இவ்வளவு தூரம் கூட்டிட்டு வந்து இருக்கு. அதை அப்படியே வெட்டிவிட மனசு இல்லை.. போட்டி date முடிஞ்சா முடியட்டும் கதையை இங்கேயே போடறேன்..கதையை அதோட போக்குல விட போறேன். என்கூட இருப்பீங்க தானே?… இருப்பீங்க நம்பிக்கையில இந்த கதைய இங்கேயே போடறேன்.. நன்றி