தனக்கு முன்பாய் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தார் மீனா. சமையலறையில் மீனா இருப்பதை உணர்ந்து சத்தம் செய்யாமல் நைசாய் தன் அறைக்குள் சென்று புகுந்து கொண்டாள்.
ஆனால் அவளுக்கு முன்பாக ‘மியாவ்’ என சவுண்ட் கொடுத்து இவளை பாவமாய் பார்த்திருந்தது ஷினி..
வண்டாண்டா மறுபடியும் கம்ளைண்ட் பண்றதுக்கு.. “எல்லாம் உன்னால தான் ஷினி. ஒழுங்கா நீ உண்டு உன் பொண்டாட்டி புள்ளைங்க உண்டுனு இல்லாமல் அந்த நாரபய கையிலயா போய் சிக்குவ..
அந்த ஸ்கூபிய பார்த்து கத்துக்கோ, அது ஜோடிய பார்த்ததும் என்ன பாய்ச்சல்ல பாய்ஞ்சு ஓடுறான். அவனை மாதிரி ஓட தான் தெரியலை..
அறிவு கெட்ட ஷினி.. நீ மாட்டுனது இல்லாம நானும் சேர்ந்து போய் மாட்டி! என்னைய என்னலாம் பண்ணினான் தெரியுமா?” ஷினியிடம் புலம்பி தள்ளிகொண்டிருந்தாள் லாவன்யா.
கடந்த சில மணி நேரங்களுக்குள்ளாக விக்ரா செய்து வைத்த செயல்களை கைவிட்டு எண்ண கூட முடியவில்லை அத்தனை செய்திருந்தான்.
அவனது செயல்களை தடுக்க நொடி கூட அனுமதி கொடுக்காத பட்சத்தில் தன்னால் என்ன செய்ய முடிந்திடும்? ஒன்றும் செய்ய முடியாமல் அமைதியாய் அவன் கொடுத்த அனைத்தையும் பெற்று கொண்டு வந்த தன் மீதே அத்தனை ஆத்திரம் வந்தது.
‘ஏன் அவனை திட்டலை, அடிக்கலை, மிதிக்கலை! எங்க போச்சு உன் அறிவு, எங்கே கொண்டு போய் அடகு வச்ச?’ மனசாட்சியே இவள் திட்டிக்கொள்ள
அவள் மனமோ ‘அடிச்சனே கன்னத்துல, கடிச்சனே உதட்டுல’ என வியாக்கானம் பேச
‘ஹா…ன்.. நீ தான் மெச்சிக்கனும் அதெல்லாம் தண்டனைனு, அந்த நாரப்பய எப்படி அனுபவிச்சான்னு எனக்கு தான் தெரியும்?’ கண்ணாடி பார்த்து கத்தி கொண்டிருந்தவள், அந்த கண்ணாடியிலும் இவன் உருவம் மின்னி மறைய ‘ச்சைய்’ எரிச்சலுற்றவள் தங்கு தங்கென நடந்து சென்று கட்டிலில் குப்பறபடுத்து, காலால் அடித்து கொள்ள,
‘விக்ராவை பற்றி மீண்டும் புகாரளிக்க வந்த ஷினியோ’ ‘இவ வேலைக்காக மாட்டா’ என கட்டிலின் ஓரத்தில் படுத்து கொண்டது.
அங்கே அறையை விட்டு வெளியே வந்த விக்ராவோ, துணி ஒன்றில் இதழ் இரத்தத்தை துடைத்தபடி வெளியே வந்தான்.
சுற்றி சுழன்ற விழிகள் லாவாவும் இல்லை மீனாவும் இல்லை என உணர்ந்தது. ஆனால் அதே நேரம்
“ஆமாமாம் உம்பொஞ்சாதி இருக்கும் போது நான் இருக்குறதெல்லாம் உன் கண்ணுக்கு தெரிவனா என்ன?” சிலுவிழுப்பதை அலம்பலாய் கோதையம்மாள் ஆரம்பிக்க
‘ஆத்தி இந்தா ஆரம்பிச்சுடுச்சுல்ல.. இனி பிச்சுக்கும் காதும், கண்ணும்’ என நாச்சி சமையலறைக்குள் ஓட்டமெடுக்க, சமரசுவை முறைத்தபடி இவனும் தன் தாயை பின் தொடர்ந்து உள்ளே வந்தான்.
“ம்மா வீரா வேற ஒரு பொண்ணை விரும்புறான், லாவாவை எனக்கு முடிச்சு வை.. நான் கேட்டா உன் புருஷன் வீம்புக்குன்னே ஏடாகூடாமா ஏதாவது செஞ்சு வப்பாரு” கடகடவென இவன் பேசி முடிக்க
அவன் பேசியதை உள்ளெடுத்து அதன் அர்த்தம் உணர்ந்து இறுதியில் அதிர்ச்சியாகி, “என்னடா சொல்ற.. நம்ப வீராவுக்கு பொண்ணு கூட பழக்கமிருக்கா?” ஆச்சர்யபட்டவர் “நீயாவது ஏட்டிக்கு போட்டியா பொண்ணுக கூட பழகுறவன். வீரா அப்படி கிடையாது. நான் நம்ப மாட்டேன்” நாச்சி உறுதியாய் மறுக்க
கடுப்பான விக்ராவோ “ம் சாயங்காலமே உம் மருமவளை வீராவை விட்டே கூட்டிவர சொல்றேன். அப்பவாச்சு நம்புவல்ல” என்றவன், தாயிடம் பேச்சை முடித்து கொண்டு
“டேய்.. வீரா” என வீடே அலரும் படி அழைத்து கொண்டு வெளியே வந்தான்.
வரும் போதே பைக் சாவியையும் எடுத்து கொண்டே வந்தான்.
வாசலுக்கு வெளியே நின்று பல் விளக்கி கொண்டிருந்த வீராவின் அருகில் வந்து “டீ, வர்க்கி எல்லாம் திங்க முன்னாடி பல்லு விளக்கனும், திண்ணுபுட்டு பல்லு வெளிக்குறது தான் கேடு உனக்கு.. வாடா” என பிரஷ்ஷை பிடுங்கி எறிந்துவிட்டு வாய் நிறைய நுரை ததும்ப நின்றிருந்தவனை தர தரவைன இழுத்து சென்றான் விக்ரா.
“அய்யய்யோ வாய் கொப்பிலிக்கலையே” வாய் திறந்து திட்ட கூட முடியாமல், வாயக்குள் இருந்ததை துப்பிவிட்டு, அரக்கபரக்க சுற்றிய விழிகளில், அண்டா நிறைத்த நீரும் அதில் கிடந்த சொம்பும் விழ, போகிற போக்கில் சொம்பில் தண்ணீரை வாரி கொண்டு சென்றது அவன் இன்னொரு கை.
‘ஐய்யோ நேரமாச்சே.. டையத்துக்கு போகனுமே?’ என்ற வேகத்தில், டூவிலர் விக்ரா கைகளில் லாவகமாய் ஓடிக்கொண்டிருக்க, பின்னால் அமர்ந்திருந்த வீராவோ
“டேய் எங்கடா போறோம்?” “சொல்லி தொலைடா, அதுவும் இவ்வளவு ஸ்பீடா?” கேட்க, பதில் வரவேயில்லை விக்ராவிடமிருந்து.
அவனும் விடாது கேட்டுகொண்டே வந்தவன், ‘இந்த நாய் பதில் சொல்லிட்டாலும்’ என நொந்து, சொம்பில் இருந்த நீரை வாய்க்குள் ஊற்றி, அந்நாந்து பார்த்து சலபுல சலபுல என கொப்பளித்து புளிச் என துப்ப, அது எதிரில் சென்று கொண்டிருந்த நாயை சோப்பு நுரையின்றி குளிக்க வைக்க, ஏற்கனவே இருவரிடம் கல்லடி வாங்கி வந்த கடுப்பு இவன் புறமாய் திரும்ப, கோரப்பற்களை காட்டி உறுமிக்கொண்டு இவனை நோக்கி பாய, இருபக்கமும் கால் போட்டு அமர்ந்திருந்த வீரா, ‘ஜங்’ என எகிறி குதித்து சீட்டிலேயே குத்த வைத்து உக்கார்ந்தான்.
அதில் கடுப்பான விக்ரா “அவ்வளவு தான் வந்துட்டோம், மூடிட்டு உக்கார்டா” என வள்ளென விழ
நாயே நாய் தொரத்துது நாயே! வேகமா போய்த்தொலை நாயே” பதிலுக்கு கத்தியதில், மனமும் கூடவே உடலும் பதறியதில் வண்டி விக்ராவின் கையில் தடுமாற,
அதற்குள் அருகில் நெருங்கி கவ்வவந்த நாயிடமிருந்து தப்பவதற்காக, உடலை இங்குமங்கும் அசைக்க , அதில் உலட்டிக்கொண்டு சென்ற பைக்கை சடன் பிரேக் போட்டு நிறுத்தியதில் பைக் கிச்சென்று நிற்க, பிடிமானம் இல்லாத வீராவோ சொய்ங் என இவன் தலைக்கு மேல் பறந்து எதிரில் வந்த பெண்ணின் மீது பாய்ந்தான்.
‘ஆஹா.. மிஷன் சக்ஸஸ்’ மனதினுள் சொல்லி கொண்ட விக்ராவோ ‘வந்த வேலை முடிஞ்சது’ என முகமெல்லாம் பூரிக்க, விழுந்து கிடந்தவர்களை பார்த்திருந்தான்.
பின் வண்டியை ஸ்டான்ட் போட்டு நிறுத்திவிட்டு அருகில் வந்து
“உன் ஆளோட கட்டி உருண்டதெல்லாம் போதும் எழுந்திருடா எரும” என வசைபாடிக்கொண்டே எழுப்பி நிறுத்தினான் விக்ரா.
“டேய் எனக்கு ஆள் இருக்கு நீ சொல்லி தான் தெரியும், எவடா அவ” நடந்த களோபரங்களை விட்டு இவனிடம் பாய்ந்தான் வீரா.
“ந்தா.. இவ தான். தெரியாத மாதிரி நடிக்கிற” அப்போது தான் எழுந்து நின்று உடையை உதறிக்கொண்டிருந்தவளை கைகாட்டினான் விக்ரா.
“ஏய் நீ எங்கடி இங்க?” என இவனும்.
“மறுபடியும் நீயாடா” என இருளும்
“இன்னைக்கு தான் பொண்ணு வாடையே பட்ருக்குன்னு சந்தோஷப்பட்டேன். உன்மேலயாடி விழுந்தேன். டெட்டால் வச்சு தான்டி கழுவனும் என் உடம்ப” வீரா முகம் சுளிக்க
“கழுவு யாரு வேணாம்னு சொன்னாங்க. இதோ கையில வச்சிருக்கியே ஒரு சொம்பு அது நிறைய டெட்டால கரைச்சு அப்படியே கடகடன்னு குடிச்சிடு. அப்போவாவது உன் வாய்க்கொழுப்பு குறையுதான்னு பார்ப்போம். கொல்லைக்கு போய்ட்டு கழுவாம வந்துட்டான் சொம்போட.. இதுல உடம்பு முழுசா கழுவனுமா. எகத்தாளம் புடுச்சவன்” இவள் எகிற
“இந்தாடி, வாய்க்கொழுப்பு உனக்கா எனக்கா? என்ன பேச்சு பேசிகிட்டு திரியுற. பொம்பள புள்ள கணக்காவா பேசிட்டு கிடக்க” என இவர்கள் சண்டை பிடிக்க துவங்க
“சண்டையெல்லாம் அப்புறமா வச்சுக்கோடா.. இப்போ ஓகே தானே” என விக்ரா இடையில் புகுந்து இழுக்க
“எதுக்கு ஓகே” என இருவருமே கோரசாய் கேட்க
“கல்யாணம் பண்ணறதுக்கு தான்?” இருவருக்குமாய் இவன் பதில் சொல்ல
“யாரை யாருக்கு கல்யாணம் பண்ணிவைக்க போற” இம்முறை அதிர்ச்சியுடன் கூடி கோரசாய் வந்து விழுந்தன வார்த்தைகள்.
“இவனை உனக்கும், உனக்கு இவனையும் தான்” இப்போதும் இருவருக்குமாய் இவன் பதில் கூறினான்.
அதை கேட்ட அடுத்த நொடியே “ச்சைய்..” என அவளும்
“ச்சை ச்சை“ என டபுள் ‘ச்செய்’ களோடு வீராவும் முகம் சுளிக்க
வீராவையே வைத்த கண் வாங்காமல் பார்த்த விக்ரா,
‘ச்சைய்யா.. இருக்குடா உனக்கு’ இம்முறை கோரசாய் நினைத்தது விக்ராவும் அவளும் தான்.
“கண்மணி அவன் சும்மா நடிச்சிட்டு இருக்கான். முதல்ல ப்ரபோஸ் நீ தான் பண்ணனுமா, அவன் பண்ண மாட்டானாம். நீ ப்ரபோஸ் பண்ணல்லன்னா வீரா சூசைட் பண்ணிப்பானாம்”
“நானா? எப்ப? எங்க?” முதல் ஆளாய் அரண்டான் வீரா.
“அதெல்லாம் நான் நாள், இடம், நேரம் எல்லாம் குறிச்சுட்டேன்” விக்ரா அசால்ட்டாய் கூற
“யார்கிட்ட கேட்டு இதெல்லாம் செய்ற நீ” பதறினான் வீரா
“எந்த வெண்ணகிட்டேயும் கேட்க வேண்டிய அவசியமில்லை” என்றவன், கண்மணி புறமாய் திரும்பி
“நீ அவனை கல்யாணம் பண்ணிக்கலன்னா அவன் நிஜமாவே சூசைட் பண்ணிப்பான். இட்ஸ் சீரியஸ் கண்மணி” என விக்ரா சீரியஸாகவே பேச
“எது இந்த சொம்பை வச்சா?” என இவளோ முழு விளையாட்டோடு கேட்டாள்.
“ப்ச், விளையாடாதே கண்மணி, ஒருவேளை சூசைட் பண்ணி செத்துட்டான்னா நீ தான் ஜெயிலுக்கு போகனும்” கெஞ்சலை விட்டு மிரட்டினான் விக்ரா.
“அதெப்படி நான் போவேன்” இவள் விவரமாய் கேட்க
“ஒருவேளை நீதான் காரணம்னு உன் பெயரை லெட்டர் எழுதி வச்சுட்டு செத்துட்டான்னா?” விடுவேனா என இவனும்
“கண்மணின்ற பேரில இந்த ஊரில் ஏழு எட்டு பேரு, ஏன் எங்க சென்டரிலேயே அஞ்சு பேர் இருக்கோமே” விடவே மாட்டேன் என இவளும் மாறி மாறி பேசிக்கொண்டிருக்க
இது ஆவுறதுக்கில்லை என வீராவின் புறமாய் திரும்பியவன் “டேய் அவ பேரு கூட அவ போட்டோவையும் ஒட்டிட்டு சாவு, இல்லையில்லை வீட்டு அட்ரஸையும் எழுதிட்டு சாவு, என்ன சரியா” சொல்லியதோடு,
கண்மணி பக்கமாய் திரும்பி “லெட்டர்ல ஒட்ட உன் போட்டோ என்கிட்ட இல்ல” என தன் போனை எடுத்து அவளை படம் பிடித்தவன்
“உனக்கு அரை மணி நேரம் டைம்.. நீ அவனை ஏத்துக்கலைன்னா அவன் செத்துருவான், அதோ அந்த மரத்துல தூக்கு போட்டு, மூச்சடச்சு, நாக்கு தள்ளி, கண்ணு பிதுங்கி, உடம்பு விரைச்சு செத்து போவான்” இவன் சொல்ல, தூக்கு போடாமலேயே நாக்கு தள்ளி கண் பிதுங்கியது வீராவிற்கு.
எதிரில் நின்றிருந்த கண்மணியோ உண்மையா பொய்யா என தெரியாமல் “நீங்க பொய் சொல்றீங்க.. நான் நம்ப மாட்டேன். எனக்காக எல்லாம் இவன் சாக மாட்டான்” என பேச்சு பேச்சாக இருந்தாலும் படபடத்து போனவள், அவர்களிடமிருந்து வேகமாய் விலகி சென்றாள்.
விக்ராவோ “அரைமணி நேரம் தான்.. நீ வரல்லைன்னா இவன் பொணம் தான். போன பிறகு அய்யோ அம்மான்னு கதறினாலும் திரும்ப வர மாட்டான் யோசிச்சுக்கோ” என அவள் காதில் விழுமாறு கத்தி பேசிவிட்டு வீராவின் கை பிடித்து விருவிருவென இழுத்து சென்று, மரத்தடியில் நின்று கொண்டான்.
கூடவே செல்லத்திற்கு போன் செய்து “டேய் ஆறடியில் நீளகயிறு ஒன்னு கொண்டுவாடா, அப்படியே ஸ்டூல் ஒன்னும் வேணும்” என முடிக்கும் முன்
“ஆமால்ல அது குட்டியா இருக்கும்ல” வீராவையும், நிமிர்ந்து அந்த ஆலமரத்தையும் பார்த்தவன் “டேய் செல்லம், பதினாறு அடிக்கு கயிறு ஒன்னு வேணும்.. இல்லையில்லை இரண்டு வேணும்” விக்ரா முடிக்க, கேள்வியாய் பார்த்த வீராவிடம்
“உன் வெயிட் தாங்காமல் ஒன்னு அந்து போச்சுன்னா.. இன்னொன்னு வேணும்லே” கேள்வியும் அவனே பதிலும் அவனே என விக்ரா பேச
“நான் உனக்கு என்ன துரோகம் பண்ணேன்? ஏன் இப்படி என்னை அல்பாய்ஸ்ல கொல்ல பிளான் போடுற” வீரா அழாத குறையாய் கேட்டான்.
“எல்லாமே நல்லதுக்கு, உன் நல்லதுக்கு மட்டும் தான்டா” என
“ஓ.. தூக்குல கட்டி தொங்கவிடறது நல்லதா? அப்படியென்ன நல்லதாம், கொஞ்சம் தெளிவா விளக்குல?”
“தோ பாரு, நான் சொல்ற மாதிரி செஞ்சனா, சீக்கிரமே கல்யாணம் நடக்கும்”
“ஆமாமாம், உன் கல்யாணம் தானே.. நல்லாவே நடக்கும்டா.. நீ சொல்ற மாதிரி தொங்கிட்டன்னா, உனக்கு நான் தடையா இருக்க மாட்டேன்.. அதானே?”
“ப்ச்.. எரும ஒழுங்கா கேளு.. நான் சொல்ற மாதிரி நடந்துகிட்டனா உனக்கு சீக்கரமே கல்யாணம் ஆகும்.. கன்னி கழியும்”
“கர்மம் அது கக்கூஸூலையே கழிஞ்சிட்டு போகட்டும், இவ வேணும்னு யார் அழுதா..” அக்கம் பக்கம் பாராமல் எகிறியவனின் வாயை பொத்திய விக்ரா
“டேய் உனக்கு தான் வாய் இருக்குனு பேசுன மவனே இந்த நிமிஷமே கழுத்துல. கயத்தை கட்டி தூக்கிடுவேன்டா, வாய மூடிட்டு சொல்றதை கவனி” என இவர்கள் பேசினர், பேசினர் பேசிக்கொண்டே இருந்தனர்.
அதற்குள் கயிறுடன் செல்லமும் வந்துவிட்டான்.
“எதுக்குடா கயிறு, ஸ்டூல் எல்லாம்?” என கேட்க
“மூதேவி அதை எடுத்து எடுத்துட்டு வர முன்னாடி இவன்கிட்ட கேட்கனும், எல்லாத்தையும் எடுத்துட்டு வந்துட்டு கேட்குறான் பாரு கேள்விய” வீரமாய் சவுண்ட் விட்டாலும் கிலிபரவியது உள்ளுக்குள்.
‘கயிறு ஸ்டூலு.. ஐய்யோ என்ன செய்ய காத்திருக்கானோ’ பதறி தான் போனான்.
ஆனால் சிறிதும் பதட்டமில்லாத விக்ராவோ செல்லத்தை துணைக்கு வைத்து கொண்டு கடகடவென செயலில் இறங்கி அதை வெற்றிகரமாய் முடித்து நிமிர..
“யார்டா தூக்குல தொங்க போறா?” அத்தனைக்கும் உதவி செய்து முடித்துவிட்டு செல்லம் விக்ராவிடம் கேட்க
“வேற யாரு.. நம்ப வீரா தான்” என அசால்ட்டாய் சொல்ல, செல்லத்திற்கோ ஆட்டம் கண்டது. “டேய்.. எதுல விளையாடனும்னு விவஸ்த இல்லை” கடித்து துப்பிய செல்லத்தை அப்படியே டீலில் விட்டுவிட்டு
“டேய் அரை மணி நேரம் ஆச்சு, வந்துருவாடா அந்த கண்மணி, ஏறுடா ஸ்டூல்ல” வீராவிடம் கூற, ‘கல்யாணம் பண்ணினா அவள் கொல்லுவா, பண்ணலைனா இவன் கொல்லுவான். ஆக மொத்தம் வாழ பிறக்கலை நான்’ வராத கண்ணீரை வரவழைத்து இவனும் ஸ்டூலில் ஏறி நிற்க, அவன் கழுத்தில் தொங்கி கொண்டிருந்த கயிறை சரியாய் மாட்டிவிட்டு
“டேய் வராடா அவ.. உன் ஓட்டை வாய மூடிட்டு நில்லு. ஏதாவது ஒளறி வச்ச சாவடுச்சிடுவேன்” சொல்லிவிட்டு வசைபாடிக்கொண்டிருந்த செல்லத்தை இழுத்து கொண்டு மரத்தின் பின் ஒளிந்தான்.
“இவனுக்கு நம்பளை சாவடிக்கிறதுல என்ன சந்தோஷமோ? நடக்குறது நடக்கட்டும், இருந்தா பூமிக்கு, இல்லாட்டி சாமிக்கு” என நின்றிருந்தான்.
முதலில் விக்ராவின் பேச்சில் நம்பிக்கை இல்லாது போனாலும், அவனது விளையாட்டு தனம் முகத்தில் தெரியாது போனதில் ‘ஒரு வேளை நிஜமாவே சூசைட் பண்ணிகிட்டானா?’ என்ற கேள்வி அவளை வெகுவாய் குழப்பி விட்டிருந்தது.
நேரமாக நேரமாக படபடவென துடித்து இதயம் எகிறி குதிக்க, வீடு நோக்கி நடந்து கொண்டிருந்தவள், அப்படியே ரிவர்ஸ் எடுத்து மீண்டும் வந்தாள் ஆலமரம் நோக்கி.
அவனை நெருங்க நெருங்க மனதினுள் கிலிபிடித்தது.
கிட்டதட்ட மனம் நொறுங்கி போய், தன் முன்னே இருந்தவனின் கோலம் கண்டு அப்படியே தரையில் முழங்காலிட்டு அமர்ந்து, ஸ்டூலில் தலை சாய்த்து ஓ வென ஒப்பாரியே வைத்தாள்.
“ஏண்டி உனக்கு அழுகுறதுக்கு வேற எந்த இடமும் கிடைக்கலையா? என் உசுருக்கு முட்டு குடுத்துட்டு இருக்குற ஸ்டூலை முட்டி முட்டி அழுதே தட்டி விட்டுறுவா போலவே..” வீராவின் உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தது.
“ஏண்டா இப்படி பண்ற. இம்புட்டு ஆசையா என் மேல.. அப்புறம் ஏன் பிடிக்காத மாதிரியே வெளிய நடந்துகிட்ட? அப்போ விக்ரா சொன்னதெல்லாம் உண்மையா? நீ நிஜமாவே என்னை விரும்புறியா”
ஆறாய் வழிந்தோடிய கண்ணீரை தட்டி விட்டு, “உன் குடும்பத்தோட என் வீட்டு வந்து பொண்ணு கேளுடா.. என் அம்மா அப்பாவை நான் சமாளிச்சுக்கிறேன். இந்த கண்மணி வீராவுக்கு தான், இந்த பையித்தியகாரதனமெல்லாம் இனி பண்ணாதடா” அத்தனை நேரம் ஸ்டுலில் முட்டியே பேசிக்கொண்டிருந்தவள், இவன் பதில் வேண்டி நிமிர்ந்து பார்க்க “ஆத்தி ஜட்டி போடலையே” பிடித்திருந்த கயிறை விட்டு, கைலியை கால் இடுக்கில் திணிக்கும் முன் இவள் பார்த்துவிட, “ஐய்யோ.. ச்சீ” அவனை நிமிர்ந்து பார்க்க முடியா வெட்கம் தடுக்க விருட்டென எழுந்து ஓடினாள் கண்மணி.
எழுந்து ஓடிய வேகத்தில் இவள் கால்பட்டு ஸ்டூல் சாய்ந்திட, மறு நொடியே, “ஐய்ய..யய்யோ…” பெரும் அலறலோடு வீரா தூக்கில் தொங்க, விக்ரா ஓடி வந்து வீராவை தன் தோளில் தாங்க, அதே ஸ்டூலை நேராக்கி அதன் மேலேறி கயிறை அவிழ்த்தான் செல்லம்.
மூவரின் பார்வையும் பாவை ஒருத்தியின் மேலே இருக்க
அவளோ இது எதுவும் அறியாமல் ‘ஐய்யோ.. எனக்கு வெட்கமா வருதே’ என துள்ளி குதித்து ஓடிக்கொண்டிருந்தாள்.