அதிகாலை வேளை குடும்பமாய் ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்த பூனைகளை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான்.
வேறு யார் எல்லாம் நம் விக்ரா பய தான்.
முதலில் மினி, அதன் மேல் கால்களை போட்டபடி ஷினி, ஷினியை அடுத்து, பிறந்து இருபதே நாட்களான மூன்று குட்டி பூனைகள் வரிசைகட்டி படுத்திருந்தை பார்த்தவன்.
புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து நேத்து எனக்கும் ஸ்கூபிக்கு அடி வாங்கி விட்டுட்டு குஜாலா கால் மேல கால்போட்டா தூங்கிட்டு இருக்கீங்க.
இன்னைக்கு உங்களை சுத்தல்ல விடுறனா இல்லையானு பாரு என சூளுரைத்து கொண்டு, கடைசியாய் படுத்திருந்த இரண்டு குட்டிபூனைகளையும் எடுத்து மறைத்துவைத்துவிட்டு, மீண்டும் வந்து குத்த வைத்து அமர்ந்தவன், முதலில் மினியை தூக்க வந்து பின் என்ன நினைத்தானோ, ஷினியின் கால்களை பிடித்து தூக்கி கொண்டு சென்றான்,
தலைகீழாய் தொங்கியதில், தூக்கம் விடுபட பதறி போய் கன்னாபின்னாவென கத்த துவங்க, ‘‘ச்சை’ எதுக்கிப்படி கத்துற’ என பொத் என கீழே போட,
அதுவோ தரையில் விழுந்து ‘ஆத்தி இவனா! என்ன செய்ய காத்திருக்கானோ?’ என திருதிருவென விழித்தது.
“மூனு புள்ளைகளை அட் அ டைமில் பெத்து போட்டுட்டு புள்ளைகளுக்கு காவலா கடைசில படுக்காமல், உன் பொண்டாட்டிகிட்ட படுத்து தூங்குற, அதுவும் காலை மினி மேல போட்டு, வெட்கமா இல்லை” என முறைக்க
“எம்பொண்டாட்டி மேல தான காலை போட முடியும்’ நீண்ட வசனத்தை ‘ம்யாவ்’ என்ற ஒற்றை வார்த்தையில் வெளிப்படுத்த
“என்ன கத்துற? உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு ஆனவத்துல ஆடுறியா.. நல்லா ஆடு.. ஆனால் என் முன்னாடி, ஸ்கூபி முன்னாடி ஆடதே.. கன்னிபசங்கன்னு தானே எங்களை வச்சுகிட்டு அட்டூழியம் பண்ணிட்டு திரியுற!
நீ என்னடா அட்டூழியம் பண்ற? பண்றேன்டா நானும் ஸ்கூபியும்! இன்னும் கொஞ்ச நாளில் கல்யாணம் பண்ணிகிட்டு உன்முன்னாடியே நாங்க பண்றோம்டா அட்டூழியம்” இவன் வீராவேசமாய் பேசிக்கொண்டிருக்கும் போதே
“கர்மம் கர்மம், கல்யாணமா? நீயும்,ஸ்கூபியுமா? ஏன்டா பொண்ணு கிடைக்கலைன்றதுக்காக நாயைப்போய், அதுவும் ஆம்பள நாயைப்போய், ச்சைய்” தப்பர்த்தம் கொண்டு சமரசு காறி உமிழ
‘ஸப்பா.. இந்த எம்டன்கிட்ட வாக்கப்பட்டு நான் படுற பாடு’ மூக்கிற்கு மேல் கோபம் ஏறிநிற்க, வேண்டுமட்டும் அவரை முறைத்து பார்த்தவன்,
“தாடி, நீ மேட்ச் த பாலோயிங் தப்பா பண்ணிட்டு திரியுற.. அதுக்கு அர்த்தம் அது இல்லை, நான் தனியா, ஸ்கூபிக்கும் தனியா, இரண்டு பேருக்கும் ஜோடி கிடைச்சப்புறம் கல்யாணம் பண்ணிப்போம்னு சொல்லிட்டிருந்தேன்” இவன் விளக்க
“ச்சை முதல்ல வெளக்கமாறு மாதிரி விளக்கம் கொடுக்கெறத நிப்பாட்டுவே! நேத்து நீ குடிச்சிட்டு வரும் போது விட்டுட்டு வந்த ஒத்த செருப்பை கண்டுபிடி நாயே.. ஒரு ஜோடி செருப்பையே பத்தரபடுத்தாத உனக்கு கல்யாணம் பண்ண ஜோடி கேக்குதாக்கும் ஜோடி”
“அதுவும் பூனைக்கிட்ட போய் சபதம் போடுறளவுக்கு, போவே.. அண்ணன்காரன் கல்யாணம் பண்ணாம கிடக்குதான், உனக்கு கல்யாணம் கேட்குதா, கல்யாணம், புடுங்கிடுவேன்ல” என ஏசிவிட்டு முன்னுக்கு செல்ல
“எல்லாம் உன்னால தான், நேத்து எங்கண்ணன் கிட்ட, இப்போ எங்கப்பன்கிட்ட.. கிழி வாங்கி விடறதே உனக்கு வேலையா போச்சு. உனக்கு இருக்குடி இன்னைக்கு” என முறைத்துவிட்டு சென்றான் விக்ரா.
அப்போது தான் ஒவ்வொருவராய் எழுந்தமர்ந்த பாண்டிகளுக்கு டீயும் வர்க்கியுமாய் வாரி வழங்கி கொண்டிருந்தார் நாச்சி.
கடுப்புடன் முன்னால் தன் கணவனையும், எடுப்புடன் அவருக்கு பின்னால் வந்த தன் மகனையும் கண்டு இருவருக்கும் டீயை கொண்டு வந்து கொடுக்க
“உம்புருஷனுக்கே குடு, எனக்கு வேண்டாம்” என முறைத்து கொண்டு சோபாவில் சென்று அமர்ந்து கொள்ள, எத்தனையோ வற்புறுத்தியும் வேண்டாம் என்றவனின் பார்வை, டங்கு டங்கு என இடிக்கும் சத்தத்தில் திரும்ப, அங்கமர்ந்திருந்ததோ கோதையம்மாள்.
வெத்தலை பாக்கு இடிக்கும் எந்திரத்தில் வர்க்கியை போட்டு தட்டியெடுத்து அதை டீக்குள் நிறைத்து, இரண்டொரு நிமிடங்கள் கழித்து சவக் சவக் என சத்தம் கொடுத்து தின்ற கோதையை பார்த்து
‘இதுக்கிருக்குற குசும்பு இருக்கே’ ‘உஃப்’ இதழ் குவித்து ஊதியவனோ, லாவா, மினி, வீரா, சமரசு என இவர்களால் காயப்பட்டு அதை தீர்க்க வழியறியாமல் கடுப்புடன் அமைதியாகிப்போனான்.
“டேய் சரியில்லைடா இவன்” என செல்லம் ஆரம்பிக்க, வீராவோ
“நேத்துல இருந்தே சரியில்லைவே அவன். கொஞ்சம் தனியா விடு, அவனே நேரம் வரும் போது சொல்லுவாம்லே.. அப்புறம் பார்த்துக்கலாம் இவனை” என்று விட, சங்கரும் கூட பார்வையாளன் ஆகிப்போனான்.
விக்ராவின் மேல் ஒரு கண்ணை வைத்தபடியே தங்களுக்கு முன் தட்டில் இருந்த வர்க்கியை காலி செய்ய துவங்கினர்.
ஆனால் விக்ரா மட்டும் எழுந்ததில் இருந்தே டீ கூட அருந்தாமல் சோபாவிலேயெ கிடக்க, இவனுக்கு என்ன ஆச்சு நாச்சி தலையை பிய்த்து கொள்ளா குறையாய் வலம் வந்தார்.
‘டீ வேணாம்னா காபி தண்ணி கொண்டாரவாவே! இல்லை சோறு பொங்கிட்டேன், சோறு சாப்பிடுதியா! இப்படி வயித்தை காயப்போட்டு கிடக்காதவே!’ என பல முறை முயற்சி செய்தும் அசையாமல் இருந்த மகனை பார்க்கையில் நாச்சிக்கு திக்கென இருக்க,
நேற்றைய அமைதியை சமரசுவும் கவனிக்க தானே செய்தார், அதை மனதில் கொண்டு “அவன் பிறந்ததுல இருந்து இவ்வளவு அமைதியாய் நேத்தைக்கும் இன்னைக்கும் தான் இருக்கான், அது உனக்கு பொறுக்காதே.. போடி போ.. உம்மவனுக்கு கொண்டாரவா, கொண்டாரவான்னு கேட்டுகிட்டே கிடக்க, கொண்டாந்து கொடுடி தின்காம எங்க போவ போறான்.. தின்னுட்டு நாய் பூனைக்கிட்டலாம் சபதம் போட வேணுமில்ல, அதுக்கு துரைக்கு தொம்பு வேணாம்” என நக்கலடிக்க
“ம்மோவ்.. தாடியை வாயை மூட சொல்லு”
“இல்லைன்னா என்ன புடுங்கிடுவியா” என இவர் எகிறிக்கொண்டு வர
“இவரு எப்போ பாரு புடுங்குறதுலையே தான் இருக்காரு” சத்தமாய் சொல்லியபடி அகட்டி கிடந்த கால்களை ஒடுக்கி வைத்து அமர, கொல்லென சிரித்தான் வீரபாண்டி.
சங்கரும் செல்லமும் கூட விக்ராவிற்கு பயந்து வாய்க்குள் சிரித்து கொள்ள
“இந்தா வந்துட்டாருல்ல, எம்மவனை வம்பிழுக்க, ஏய்யா, உமக்கு வயக்காட்டுல வேலை இல்லையா?” என நாச்சி ‘டீ வர்க்கியை’ டங்கென அவர் முன் வைக்க
“ஆமான்டி வயசான நான் வயக்காட்டு போவனும், உன் மவன் வயசுக்கு வந்துருக்கான், குச்சு கட்டி உக்கார வைடி.
அப்படியே பக்கத்துவீட்டுல உலக்கை இருக்கும் வாங்கி வந்து உம்மவன் கிட்ட போடு, படி தாண்டாம கிடப்பான்” இவரும் பாய,
பதிலுக்கு நாச்சி மல்லுகட்ட ஆரம்பிக்கும் அந்த நேரம், லாவன்யா வந்தாள் வீட்டினுள்.
அவளின் இடது புறம் மினியும், ஷினியும் இருக்க, ஷினியை ஒட்டி பிறந்த இருபதே நாட்களான ஒரு குட்டி பூனையும் வந்தது.
விக்ரா, லாவாவின் விழிகள் நச்சென மோதி நிற்க,
“வா தாயி.. என்ன இந்த பக்கம்” லாவாவை வரவேற்று, “நாச்சி புள்ளைக்கு, டீ தண்ணி கொண்டுவா” என நாச்சியிடம் வேலை ஏவிவிட்டு
“வா தாயி வந்து உக்காரு” என அழைக்க, லாவாவும் தன் தாய் மாமனின் அருகில் வந்து அமர்ந்தாள்.
சமரசுவின் விழிகள் சட்டென விக்ராவை பார்க்க, அவனோ பார்வையை படாரென திருப்பி கொண்டான்.
சிறிது நேரம் முன்பு கூட இவன் ஷினியோடு வம்பிழுத்தது நியாபகம் வர “அந்த இரண்டு பூனைகளையும் கண்ணுலையே காங்க விடாதவன் இந்த எடுபட்டபய தான். ஏலே என்னலே பண்ண அந்த பூனைய”
“ம்..” தெனாவட்டாய் சமரசுவை பார்த்து உருமியவன் லாவாவிடம் திரும்பியவன் “குக்கர்ல வச்சு அவுச்சுட்டேன்” எனவும், லாவாவிற்கு இதயமே நின்று போக,
சமரசு என்ன சொல்ல வந்தாரோ, அவரை முந்திகொண்டு விருட்டென எழுந்த லாவாவிற்கு சுருசுருவென கோபம் ஏற, அவனை நெருங்கி
“உண்மைய சொல்லு பூனையை என்ன பண்ண?” என மூக்கின் மேல் கோபமேற கேட்டாள்.
“நிஜமாவே மூனு லிட்டர் குக்கர்ல வச்சு அவுச்சுட்டேன்” வேணா அடுப்பங்கறைல போய் பாரு எனவும், நாச்சியை இவள் பார்க்க “அவன் சும்மா சொல்லுதான்டி.. காலையில் எழுந்ததுல இருந்து சமயகட்டுபக்கம் வரவே இல்லை அவன்” என சமாதானம் செய்து
“ஏலே, அவளை என்னைக்கும் அழ வைக்க மாட்டல்ல.. இன்னைக்கு என்னவே ஆச்சு, பூன குட்டிய குடுவே.. அவகிட்ட” நாச்சி கூற
“குடுக்க முடியாது” இருவருக்கும் பொதுவாய் இவன் கூறிட, அப்படியென்றால் பூனை இவனிடம் தானிருக்கிறது என முடிவாய் தெரிய
இருக்கும் இடைவெளியை குறைத்து அவனை நெருங்கியவள் “எனக்கு இப்போ, இந்த நிமிஷமே பூனை குட்டி வேணும், தரப்போறியா இல்லையா” பல்லைகடித்து கொண்டு பேச
“பூனைக்குட்டிக்கெல்லாம் வாய்ப்பே இல்லை. புள்ளகுட்டி வேணா கொடுக்குறேன். நீ மட்டும் ம் சொல்லு இப்போவே தரேன்” விகாரமாய் கேட்டு விசமமாய் பட்டென கண்ணடிக்க, லாவா அவனை எரித்துவிடுவது போல் பார்த்தாள்.
மற்றவர்களுக்கு அவர்கள் ஏதோ குசுகுசுவென பேசி சண்டையிடுவது போல் தெரிய, இது வழக்கமாய் இருவரும் போட்டுகொள்ளும் சண்டை தான் இவர்களுக்குள் யாரும் வராமல் போக,
சமரசு மட்டும் எழுந்து அவனருகில் வந்து
“கடையும் போது வராத வெண்ண, குடையும் போதா வர போது?” சொலவடையில் அவனை திட்ட,
“அதெதுக்கு அவ்வளவு கஷ்டபட்டுகிட்டு? கடையில காசு கொடுத்தா தரப்போறான்” எகத்தாளமாய் இவன் பேச
‘பே’ என விழித்தவரோ “இந்த எடுபட்ட பயகிட்ட கேட்டு பிரயோஜனம் இல்ல தாயி.. வீட்டுக்குள்ளாற தான் எங்கனயாச்சும் வச்சிருப்பான். வா தேடுவோம்” “ஏய் நாச்சி போடி போய் தேடு” “ஏய் நீங்களும் தாண்டா” என எஞ்சிய மூன்று பாண்டிகளுக்கும் கட்டளையிட, அத்தனை பேரும் பூனைகளை தேடும் பணியில்.
அதில் மேலும் சந்தேகம் வலுக்க “செக் பண்ணின பிறகு அதை நான் சொல்றேன். குட்ரா கூடையை” என கூடைப்பக்கம் நகர, இவனோ அவளிடம் இருந்து வேறு பக்கம் நகர்த்த
“நீ பண்றதெல்லாம் பார்த்தா பூனைய கூடைக்குள்ள தான் வச்சிருக்க மரியாதையா கொடுத்துரு” என இவள் அவன் பின்னும் கூடையின் பின்னுமாய் நகர, அவளிடம் கொடுக்காமல் போக்கு காட்டியவனோ
“அதுக்குள்ள இல்லை சொன்னா கேளு..” இவளிடம் கூடை மாட்டகூடாது என அங்கே இங்கே என நகர்த்தி நகர்த்தி அவளை படுத்திகொண்டு இருந்தான் விக்ரா.
ஒரு கட்டத்தில் சோர்ந்து போனவள், “இப்போ நீ கூடைய கொடுக்கலை, நான் மாமாவை சத்தமா கூப்பிட்டு கத்துவேன்” இவள் மிரட்ட
இவள் செய்ய கூடியவள் தானே என பதறிப்போனவன்,
கூடையை தலைகீழாய் கொட்டி, உருண்டு சென்ற பாட்டிலை காட்டி “இதுவா பூனை” என அடிகுரலில் கத்த
பூனைக்கு பதிலாய் பாட்டிலை பார்த்து மேலும் குஷியாகிவிட்டாள் லாவா “இது பூனை கடத்தலை விட பெரிய குற்றமாச்சே” சமரசு, விக்ராவை அடித்து துவைப்பது போல் கற்பனைகள் ஓட
“அடியே.. மாட்டிவிட்றாதடி” என பார்வை நால்பக்கமும் சுழல
“நீ சொல்லி நான் கேட்க மாட்டேன். நான் உன்னை இன்னைக்கு மாட்டிவிடுவேண்டா” சத்தமாய் சபதம் எடுத்தவளை,
இழுத்துகொண்டு அருகில் இருந்த அறைக்குள் நுழைந்து, “ஏண்டி நீயும் நானும் பண்ணாத மொள்ளமாரிதனம் இருக்கா என்ன? ஏதோ நீ யோக்கியம் மாதிரி என்னை மாட்டிவிட பார்க்குற.. சாவடிச்சுடுவேன்” கைகள் இரண்டையும் கழுத்தை நெறிப்பது போல் கொண்டு வந்து இவன் மிரட்ட
“ம்ஹீம்..” என மறுத்து கொண்டு வந்த கைகளால் கன்னமிரண்டையும் தாங்கி, அந்த அறையில் கிடந்த கட்டிலை காட்டி “சாவடிப்பேன்” என எக்குதப்பாய் பதில் கொடுக்க
அதன் அர்த்தம் புரிந்தவளுக்கோ புசுபுசுவென கோபம் கிளர்ந்து எழ
“உன்னை நேத்தைக்கே ஒரு வழி பண்ணிருக்கனும். பழகின பாவத்துக்கு விட்டேன்ல.. இருடா இன்னைக்கு உனக்கு ஆப்பு வைக்காமல் நான் சாகமாட்டேன்டா” நேற்றைக்கும் சேர்த்து வைத்து எகிறியவள், “மா..மா” என கத்த எத்தனிக்க,
கன்னத்தில் பதிந்திருந்த கைகள் பிடறிக்கு இடமாறி வேகமாய் இழுத்து அவள் உதடுகளை கவ்விக்கொண்டான்.
முதல் மா மட்டுமே வெளிவந்திருக்க இரண்டாவது மா விக்ராவின் வாய்க்குள் பயணப்பட்டு வயிற்றை போய் அடைந்திருந்தது.
அவள் விழிகள் அகல விரிய, அந்த நீள் விழிகளுக்குள் அழகாய் விழுந்தபடி, அவளின் இதழ்களை மொத்தமாய் கொள்ளை கொண்டிருந்தான் அவன்.
‘ம்..ம்’ மறுப்பாய் எழுந்த மெலிதான சப்தங்களும் அவனது இசைக்கு தாளம் சேர்க்க, இனிதாய் துவங்கியது அவனது காதலாட்டம்.
தடுக்க வந்த அவள் கைகளும், மறுப்பை தெரிவித்த அவள் உடலும், வெறுப்பை உமிழ்ந்த அவள் இதழ்களும் மொத்தமாய் அவனுள் அடங்கி இருக்க, லேசாய் அசையக்கூட முடியவில்லை.
இவனுக்கு போதாத போதும், இன்றைக்கு இவளுக்கு இதுவே அதிகமென தோன்றியதால் பட்டென அவளை விட்டுவிட்டு அறையை விட்டு வெளியே வந்தான்.
ஏதுமறியாதவனாய் மீண்டும் சோபாவிற்குள்ளேயே முடங்கிட, பெரிய பெரிய மூச்சுகளாய் எடுத்த லாவாவிற்கு தன்னை எப்படி நிதானபடுத்தி கொள்வது என தெரியாமல் விழி பிதுங்கி நின்றிருந்தாள் அறையின் வாசலில்.
விழிவிரித்து விக்ராவையே இவள் பார்த்திருக்க அவனோ பார்வையாலேயே விழுங்கி கொண்டிருந்தான் அவளை.
வீட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் தேடி களைப்புற்றவர்கள், “பூனைய காணவே காணோம்” என ஆளாளுக்கு கைகளை விரித்தபடி விக்ராவை முறைத்து கொண்டு நிற்க
மினியும் ஷினியும் கூட அவனருகில் வந்து நின்று ஏதேதோ சத்தம் கொடுக்க, இரண்டும் விக்ராவை தான் திட்டுகிறது என அத்தனைபேருக்கும் புரிந்தது.
“பூனைய தூக்குற அளவுக்கு அவ்வளவு மட்டமானவன் கிடையாதே இவன்” மனதினுள் நினைத்தபடி, “ஏலே, பூனையை கடத்திட்டியாலே” விக்ராவிடம் சங்கர் கேட்க
“ஆமாம்” இவன் லாவாவைவிட்டு இவனிடம் திரும்ப
“ஏம்லே.. இப்படி பண்ணுத” வீரா சலித்து கொள்ள
“இதோ அந்த மினியும் சனியும்” என இவன் துவங்க
“சனி இல்லை அது ஷினி” வீரா பற்களை கடிக்க
“எனக்கும் ஸ்கூபிக்கும் இது சனி தான். இதுகளை சும்மாவிட நான் என்ன சொம்பையா? கொஞ்சம் கதறருட்டும்” வில்லனானான் விக்ரா.
“அது உனக்கு என்ன பாவம் பண்ணிச்சு அதை போட்டு படுத்திட்டு இருக்க” இம்முறை செல்லம் கேட்க
“என்ன பாவம் பண்ணிச்சா, ஒன்னுக்கு நாழு கன்னிபயலுக இருக்குற இடத்துல, ஜோடியா சுத்தறது என்ன, ரொமன்ஸ் பண்ணதென்ன, கடைசி எக்ஸென்ட் வரை போய் மூனு புள்ளைய பெத்துகிறதென்ன. டெம்ப்ட் ஆக்குதுக” என விக்ரா கடுப்புடன் கூற
“லேய், அது என்னடா எக்ஸ்டென்டு, டெம்புட்டு” நாச்சி அதி முக்கிய கேள்வியை கேட்க
“வந்துட்டா சந்தேகத்துக்கு பெறந்தவ, ஏண்டி அவன் தான் கூறுகொட்ட தனமா பேசுனானா, நீயும் அதென்ன இதென்னன்னு நோண்டிக்கிட்டு “லேய் நீ இப்போ பூனைய கொடுக்கலை நடக்குறதே வேறவே..” என சமரசு சீற
சுதாரித்த நாச்சியோ அப்புறமா கேட்டுகலாம், என அவனருகில் வந்து “அந்த புள்ளைய பாருவே.. ஆசையாசையா இரண்டு பூனைய வாங்கி, மீனா வையுதான்னு, கூட பொறந்த பொறப்பு மாதிரி இங்க வச்சு வளக்குற.. அவளை பார்க்க பாவமா இல்லையா, அழ வைக்காமா கொடுவே” நாச்சி அவனிடம் இறங்கிபேச
அவளிடமே பார்வை பதித்திருந்தவன் மனதில் என்ன ஓடியதோ? எழுந்து நின்று, முழங்கால் வரை போட்டிருந்த ஷார்ட்ஸ் பாக்கெட்டின் இருபுறமிருந்தும் பூனைகளை எடுத்து நீட்ட
“அடக்கிராதகா?” பாண்டிகள் கோரமாய் இவனை பார்க்க
“அட எழவெடுத்தவனே” சமரசு ஷாக்காகி பார்க்க
பதறப்போன நாச்சியோ
“ஏவே.. இப்படி டவுசருக்குள்ள போட்டு வச்சிருக்கியே, எங்கனயாவது கடிச்சிட்டா என்னாகும்வே”
“என்னாகும் பூனை இரண்டு செத்திருக்கும்” சமரசு சொல்ல, விக்ராவோ அர்த்தம் புரிந்து முறைக்க
“ப்போவ்.. பூனை உயிரோட தான் இருக்கு.. ஆனா மயங்கிருச்சே” இரண்டு பூனைகளையும் வாங்கி, நேரங்காலம் தெரியாமல் செல்லம் வாய்விட
“அவன் அழகுல மயங்கிருக்கும்” இன்னும் சமரசு பேச
“தாடி வேணாம்.. நான் எதுனா எசக்க பிசக்கா சொல்லிருவேன்” பொறுமை பறந்தது விக்ராவிற்கு.
வீரா நடக்கும் அக்கபோறையெல்லாம் உள்வாங்கி சிரிப்பை அடக்க படாத பாடு பட்டு கொண்டிருக்க
செல்லத்திடமிருந்து பூனையை பறித்து, மினி,ஷினியிடம் விட்டவர்
மருது உள்ளே வந்தான் ஸ்கூபிக்கு ஜோடியாக ராக்ஸியுடன்.
ராக்ஸியை கண்டதும் எங்கிருந்து வந்தானோ ஸ்கூபி, சோபாவை ஒரே பாய்ச்சலில் பறந்து தாவி, “ஏய் ஸ்கூபி.. நில்லுடா..” விக்ரா கத்த கத்த மருதுவின் கையில் இருந்த ராக்ஸியின் பெல்ட்டை வாயால் பிடித்திழுத்து, கூடவே ராக்ஸியையும் இழுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடியது.
‘ஆ..’ வென தான் வாய் பிளந்து தான் பார்த்திருந்தனர் அங்கிருந்த அத்தனை பேரும். திறந்த வாய் மூடாமல் அப்படியே விக்ராவை பார்க்க, ஏற்கனவே கிழிச்சு தள்ளுவாங்க இதில் இந்த ஸ்கூபி வேற ஏத்திவிட்டு போய்ட்டான். விக்ரா இன்னும் ஏன் இங்கேயே நிக்கிற.. கட்டுறா நடையை, என திரும்பி தன் அறைக்குள் நடக்க துவங்க
“வயசுப்பையன்றதுனால தான அதோட கஷ்டம் புரிஞ்சு ஜோடிய கூட்டிட்டு வந்தேன். தம்மாதூண்டு இருக்குற மினியே, சனியோட தான் ஜோடியா வந்தது இந்த வீட்டுக்குள்ள. என் ஸ்கூபிக்கு ஜோடி வேணாம்னு சொல்ல உங்களுக்கு எந்த ரைட்ஸூம் கிடையாது” சட்டம் பேசி
“ஜோடி சேர்க்குறது தப்புனா மினி, சனியை பிரிச்சுவிடுங்க முதலில், என் ஸ்கூபியும் யார் பின்னாலையும் போக மாட்டான்” என உறுதியும் கொடுக்க
தலையில் கை வைத்தபடி அப்படியே அமர்ந்துவிட்டார் சமரசு.
நாச்சி “லேய்.. சும்மா இர்ரா.. உங்கப்பா இன்னும் கொஞ்ச நாளைக்கு உசுரோட இருக்கட்டும். போக வச்சுராதடா” அடிகுரலில் இவனிடம் கேட்க
செல்லமும் சங்கரும் சிரிப்பை அடக்கி நிற்க,
வீரா கொலை வெறியுடன் அவனை பார்க்க..
‘டேய் மருது, சித்தப்பூ பார்க்க முன்னாடி நடைய கட்டு, இல்லை உன் மேல பாய்ஞ்சிடுவார் ஸ்கூபி மாதிரி’ மருது நைசாக நழவிவிட
விழி பிதுங்கி நின்றது என்னவோ லாவன்யா தான்.
‘இவன் குணம் தெரிஞ்சும் இவன்கிட்ட வாண்ட்டடா வந்து மாட்டிகிட்டியேடி..’ என பெரும் பீதியுடன் பார்த்து நின்றிருந்தாள்.