“ஹோ..! வாய் இப்பல்லாம் ரொம்ப நீளுது.என்ன படிச்சு, என்ன உத்தியோகத்துல இருந்து என்ன பிரயோஜனம். பொழைக்கத் தெரியலையே. அவனவன் இந்த காலத்துலம் எவ்வளவு விவரமா இருக்கான். இவன் என்னடான்னா இப்படி இருக்கான்..” என்றார் மேகநாதன்.
அவர் என்ன சொல்ல வருகிறார், எதைப் பற்றி சொல்ல வருகிறார் என்று நன்றாகத் தெரிந்திருந்தது பொன்னிக்கு. இருந்தாலும் எதுவும் தெரியாததைப் போலவே காட்டிக் கொண்டார்.
“இப்ப எதுவுமே பேச மாட்டியே..! மகனை ஒன்னு சொல்லிடக் கூடாது, அப்படியே கோபம் பொத்துகிட்டு வந்துடும். இதுல இருக்குற ரோஷம், அவனை வளர்த்ததுலையும் இருந்திருந்தா, நான் ஏன் இப்ப இப்படி புலம்பிகிட்டு இருக்கப் போறேன்..” என்று மேகநாதன் வார்த்தைகளை கடித்துத் துப்பிக் கொண்டிருந்தார்.
இவர்களின் ஒரே மகன் தான் வெற்றிவேல். ஒரு பிள்ளைக்கு மேல் இல்லையே என்று பொன்னி ஒரு நாள் கூட வருத்தப்பட்டது கிடையாது. வெற்றியை அவர் படுத்தும் பாட்டைப் பார்த்து, அவ்வப்போது தன்னைத் தானே ஆசுவாசப் படுத்திக் கொள்வார் பொன்னி.
“எப்ப வர்றானாம்..?” என்றார் மேகநாதன்.
“தெரியலைங்க..! அவன் வர்றதப்பத்தி ஒண்ணுமே சொல்லலை. அவன் என்கிட்டே அதிகம் பேசவேயில்லை. கோபமா பேசிட்டு வச்சுட்டான்..” என்றார் பொன்னி.
“அவன் நல்ல விதமா பேசுனாலும், நீ என்கிட்டே இப்படித்தான் சொல்லுவன்னு தெரியும். கேட்குறவங்களுக்கு என்னால பதில் சொல்ல முடியலை. இத்தனை வருஷமா கட்டிக் காப்பாத்துன கௌரவம் எல்லாம் காத்துல பறக்குது. போனை போட்டு, உன் மகனை வரவைக்கிற வழியைப் பாரு. இல்லைன்னா, என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது..” என்று கோபமாய் சொல்லிவிட்டு மேகநாதன் நகர,
“சார், இத்தனை பேருக்கு நான் என்ன செய்ய முடியும் சார்..” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் சார். நீங்க இந்த அளவுக்கு செஞ்சதே பெரிய விஷயம். வி வில் மேனேஜ்..” என்றனர் அனைவரும்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லை. சட்டுன்னு சமைச்சிடலாம். அதான் லேடிஸ் எல்லாம் இருக்காங்களே..” என்று வெற்றி, வர்ணிகாவைப் பார்த்து சொல்ல,
“எங்களைப் பார்த்தா சமையல்காரி மாதிரி தெரியுதா..?” என்றாள் பட்டென்று.
“அதிலென்ன கௌரவக் குறைச்சல். சமைச்சு, மத்தவங்க பசியாத்துறது எவ்வளவு பெரிய விஷயம். நீங்க இப்போ டெண்ட்ல இருந்திருந்தாலும் எல்லாரும் சேர்ந்து தான சமைச்சிருப்பிங்க..?” என்றான் வெற்றி புருவத்தை உயர்த்தியபடி.
“நாங்க பண்றோம் சார். அவ ஏதோ டென்ஷன்ல அப்படி பேசிட்டா. நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதிங்க..” என்றாள் ஜெர்சி.
“அவங்க ஆரம்பத்துல இருந்தே ராங்கா தான் பேசிட்டு இருக்காங்க..” என்றவன், அவளை மேலிருந்து கீழாக பார்த்து வைக்க, அதைப் பார்த்த வர்ணிகா, பல்லைக் கடித்தாள்.
“பொறுக்கி..! எப்படி திங்கிற மாதிரி பார்க்குறான் பாரு..” என்று ஜெர்சியிடம் காதைக் கடிக்க,
“அவரு நார்மலா தான் பார்க்குறாரு. உனக்குத் தான் அப்படித் தெரியுது..” என்றாள் ஜெர்சி.
அதற்கடுத்து நிகா வாயைத் திறக்கவேயில்லை. ஒருவழியாக அனைவரும் சாப்பிட்டு முடித்திருந்தனர்.
வெறும் வேடிக்கையுடன், எதிலும் தலையிடாமல் ஒதுங்கிக் கொண்டான் வெற்றி. வெளியே கைகளைக் கட்டிக் கொண்டு, மழையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“உங்களுக்கு யாரு சார் பிகாரின்னு பேர் வச்சது..? வித்யாசமான பேரா இருக்கே..?” என்றாள் ஜெர்சி.
“எப்போதும் பயணம் செய்பவன்னு அர்த்தமாம். எங்க தாத்தா தான் இந்த பேரை வச்சது. நல்ல வேலை எனக்கு விபரம் தெரியறதுக்கு முன்னாடியே மனுஷன் போய் சேர்ந்துட்டார்..” என்றான் பிகாரி, கடுப்புடன்.
“ஏன் சார் அப்படி சொல்றிங்க..?” என்றனர்.
“இல்லைன்னா, இப்படி ஒரு பேரை வச்சதுக்கு, அவரை நானே போட்டுத் தள்ளியிருப்பேன்..” என்று அவன் சொல்ல, வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டனர் அனைவரும்.
“ஏன்..? ஆபீசர் சார் கம்முன்னு இருக்கார்..?” என்றாள் ஜெர்சி.
“காக்கிச்சட்டை போட்டா, கம்முன்னு தான் இருக்கனுமாம்…” என்று ஒருவன் சொல்லி சிரிக்க, இவர்களின் பேச்சு காதில் விழுந்தாலும், வெற்றி அவர்களைக் கண்டுகொள்ளவேயில்லை.
“அப்படியெல்லாம் இல்லை. சார் ரொம்ப நல்லவருதான். இப்ப கொஞ்ச நாளா தான் இப்படி இருக்கார். என்னன்னு தான் தெரியலை..” என்றான் பிகாரி.
திரும்பி வர்ணிகாவைப் பார்த்துவிட்டு மழையை வெறித்தவன்,
“நிஜமாவே இவளுக்கு என்னை அடையாளம் தெரியலையா..? இல்லை தெரியாத மாதிரி நடிக்கிறாளா..? ஒருவேளை நான் தான் தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கேனா..?” என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
“இல்லை..!கன்பார்மா இது அவதான். எனக்குத் தெரியாதா..? பேர் கூட ஒண்ணா இருக்கே..ஆனா, என்கிட்டே பேசும் போது என்னை யாருன்னே தெரியாத மாதிரி பிகேவ் பண்றாளே? நிஜமாவே இவளுக்குத் தெரியலையா..? இல்ல, கோபத்துல இப்படி பண்றாளா..?” என்று தனக்குள்ளேயே பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தான் வெற்றி.
“அவ தெரிஞ்ச மாதிரி காட்டிகிட்டாலும், நீ என்ன செஞ்சுடுவ..?” என்றது மனம்.
“அதுக்காக யாருன்னே தெரியாத மாதிரி இருக்கா..?” என்றவனுக்கு, அதுவே பெரும் சுமையாக மாறிப் போனது.
“அவளைப் பார்த்தா கோபம் எங்க வருது? நினைப்பெல்லாம் வேற எங்கையோ தான் போகுது..” என்று மனசாட்சியிடம் சொன்னவன் பெருமூச்சு விட்டான்.
பிகாரியுடன் செல்பவர்கள், அவனுடன் சென்றிருந்தனர். இவர்கள் அங்கிருந்த ஹாலிலேயே தூங்குவதற்கு ஆயத்தமாக, அப்போது தான் அதை கவனித்தான் வெற்றி. சற்று உன்னிப்பாக பார்த்தவனின் உதட்டில் தோன்றிய புன்னகையை பிறர் அறியா வண்ணம் மறைத்துக் கொண்டான்.
“கேர்ல்ஸ் எல்லாம் அந்த ரூம்ல தங்கிக்கோங்க..!” என்றான் பொதுவாய் சொல்வதைப் போல.
“பரவாயில்லை சார்..!” என்றவர்கள் தயங்க,
“நோ பிராப்ளம், நான் மேனேஜ் பண்ணிப்பேன். நீங்க ரூம்ல தங்கிக்கோங்க..!” என்றான் அழுத்தி. அதற்கு மேல் அவனின் வார்த்தைகளை அவர்களால் தட்ட முடியவில்லை.
வர்ணிகா கடுப்புடன் செல்வதைப் பார்த்த வெற்றிக்கு அடக்கமாட்டாமல் சிரிப்பு வந்தது.
‘வெற்றி ஒரு விஷயம் கிளியர் ஆகிடுச்சுடா..’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.
அறைக்குள் சென்றவுடன் முகத்தை சுளித்தாள் வர்ணிகா.
“என்னாச்சு வர்ணிகா..?” என்றாள் ஜெர்சி.
“இது அந்த ஆபீசர் யூஸ் பண்ற ரூம் மாதிரி இருக்கு. இங்க தான் நம்ம இருக்கனுமா..? அதுக்கு, ஹாலே பெட்டர்..” என்றாள் எரிச்சலுடன்.
“வெளிய மழை எப்படி பெய்யுதுன்னு பார்த்த தானே. அதுமட்டுமில்லாம குளிரு தாங்க முடியலை. அவரே, பாவம் பார்த்து நமக்கு வசதி பண்ணி குடுத்திருக்கார். அதையும் குத்தம் சொல்லுவியா நீ..” என்றாள் இன்னொருத்தி.
“அந்த ஆளைப் பார்த்ததுல இருந்து நீ வழிஞ்சுகிட்டு தான இருக்கு.. அதனால உனக்கு எல்லாமே நல்ல விதமாத்தான் தெரியும். அவன் என்னைப் பார்க்குற பார்வையே சரியில்லை. முட்டக் கண்ணு ரெண்டையும் முழிச்சு வச்சுகிட்டு…” என்றாள் வர்ணிகா.
“நல்ல பிகரா இருந்தா நாலு பேர் பார்க்கத்தான் செய்வாங்க நிகா..” என்றாள் ஜெர்சி.
“மண்ணாங்கட்டி..!” என்று எரிச்சலுடன் சொன்னவள், கவனமாய் அங்கிருந்த சோபாவில் படுத்துக் கொண்டாள். பாவம் அவளுக்கென்ன தெரியும், வெற்றி பாதி நான் அந்த சோபாவில் தான் தூங்குவான் என்று.
ஹாலில் மல்லாந்து படுத்தவனுக்கு தூக்கம் என்பது துளியும் இல்லை. மனதில் நிம்மதி இருந்தால் தானே நிம்மதியான உறக்கம் வரும். நடந்த நிகழ்வுகள் கண்முன்னால் ஒவ்வொன்றாய் அணி வகுக்கத் தொடங்கியது.
வெற்றியின் வீட்டில்.. அவனும், அவனுடைய அப்பா மேகநாதனும் எப்போதும் எலியும், பூனையும் தான். மேகநாதன் தன்னுடைய அடக்குமுறையிலேயே எல்லாம் நடக்க வேண்டும் என்று நினைக்கும் ரகம். அவர் எந்த வேலை செய்தாலும் ஆதாயம் இல்லாமல் செய்ய மாட்டார். அடிப்படையில் அவர் நல்ல மனிதர் தான். ஆனால், வீட்டில் தன் பேச்சு தான் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்று என்னும் ரகம். மிடில்கிளாஸ் குடும்பமாக இருந்தாலும், சொத்து,சுகத்தின் மீது அலாதிப் பிரியம் அவருக்கு. சரியாக ஒரு வருடத்திற்கு முன்னால், வெற்றியின் வீடே ரணகளத்தில் இருந்தது.
“யாரைக்கேட்டு முடிவு பண்ணிங்க..?” என்று கத்திக் கொண்டிருந்தான் வெற்றி.
“யாரைக் கேட்கணும் வெற்றி..?” என்று மேகனாதனும் அவர் பங்குக்கு கத்திக் கொண்டிருந்தார்.
“என்னப்பா..? இப்படி அசால்ட்டா பேசுறிங்க..? இது என்னோட வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம். என்கிட்டே சொல்லனும்ன்னு உங்களுக்குத் தோணவேயில்லையா..?” என்றான் கோபமாய்.
“இங்க பார்..! பொண்ணைப் பார்க்க அப்படியே சாமி சிலை மாதிரி இருக்கா. நல்ல குடும்பம். நல்ல வசதி. இதுக்குமேல என்ன வேணும் உனக்கு..?” என்றார் மேகநாதன்.
“சாமி சிலை மாதிரி இருந்தா மாலை போட்டு, பூஜை பண்ணுங்க. என் வாழ்க்கையை எதுக்கு பொங்கல் வைக்கிறிங்க..?” என்றான்.
“இது ஒரு பொண்ணோட வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம் வெற்றி. வாக்குக் குடுத்து, பூவும் வச்சாச்சு.. இனி பின்வாங்க முடியாது..” என்றார் பொன்னி.
“நீங்க ரெண்டு பேரும், என்னைப் பெத்த அம்மா-அப்பா தானான்னு எனக்கு அப்பப்போ சந்தேகம் வருது. என்னமோ பண்ணித் தொலைங்க. ஆனா, எதுக்கும் என்னைய கூப்பிடாதிங்க..” என்று கோபமாய் சொன்னவன் அறைக்குள் சென்று தன்னுடைய இயலாமையை அங்கிருந்த பொருட்களிடம் காட்டிக் கொண்டிருந்தான்.
முகம் தெரியாத அந்த பெண் வீட்டாரின் மேல் அவனுடைய கோபம் திரும்பியது.
‘இவர்தான் சொல்றாருன்னா..அவங்களுக்கு எங்க போச்சு புத்தி. யாராவது பையனைப் பார்க்காம, இப்படி எடுத்தோம்,கவுத்தோம்ன்னு பேசி முடிப்பாங்களா..?’ என்று உள்ளுக்குள் வெதும்பிக் கொண்டிருந்தான்.
அவனின் கோபத்தைப் பார்த்து பொன்னிக்கும் உள்ளே பதறத்தான் செய்தது.
‘இதுக்கே இவ்வளவு கோபப் படுறான். எல்லா விஷயமும் தெரிஞ்சா என்ன நடக்குமோ..?’ என்ற பயம் தான் அவருக்கு.
மேகநாதன் இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுக்காமல், கல்யாண வேலையில் பிசியாக இருந்தார்.
இங்கே நடக்கும் கலவரம் எதுவும் தெரியாமல் பெண் வீட்டில் அப்படி ஒரு சந்தோஷத்தில் இருந்தனர்.
“டாடி..! எனக்கென்னமோ இதெல்லாம் சரியாப் படலை. மனசுக்குள்ள ஒரு நெருடல் இருந்துகிட்டே இருக்கு. இப்போ கல்யாணத்துக்கு என்ன அவசரம். அதுவும் இவ்வளவு வேகமா..?” என்றாள் வர்ணிகா.
“நம்ம எங்க தேடுனாலும் இப்படி ஒரு பையன் நமக்குக் கிடைக்க மாட்டான் வர்ணி..! அப்படி ஒரு தங்கமான பையன்னு சொல்றாங்க. விசாரிச்ச வரைக்கும் எந்த கெட்ட பழக்கமும் இல்லையாம். வீட்டுக்கு ஒரே பையன் வேற. பார்க்கவும் அழகா, அம்சமா இருக்கான். நல்ல உத்தியோகம். இதைவிட வேற என்ன வேணும் வர்ணி..” என்றார் ராஜேஷ்.
“எல்லாம் சரித்தான் டாடி..! ஆனா, அவரு நேரா வரவேயில்லை. அட்லீஸ்ட் போன்ல பேசலாம்ன்னு பார்த்தா அதுக்கும் முடியலை. அங்கிள் தான் எதுவா இருந்தாலும் பேசுறாரு..அதான் ஒரு மாதிரி இருக்கு..” என்றாள் வர்ணி.
“மாப்பிள்ளைக்கு வேலை அப்படிம்மா. கண்டிப்பா உன்கூட பேசுவார்..” என்றார் வினிதா.
ராஜேஷ்- வினிதா தம்பதியருக்கு இரண்டு பெண்கள். மூத்தவள் வர்ணிகா. இளையவள் ஸ்ருதி. பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறாள். வசிதியான குடும்பம். பார்ன் வித் சில்வர் ஸ்பூன் லெவல் தான் வர்ணிகா.
இங்கே இவர்களின் குடும்பமே எதிர்பார்ப்பில் இருக்க, அங்கே வெற்றியோ கல்யாணத்தை எப்படி நிறுத்துவது என்ற யோசனையில் இருந்தான்.