“சித்பா உங்களை தாத்தா வரட்டாம்” என அசந்து தூங்கிக் கொண்டிருந்த வாசனை எழுப்பினாள் ஆரன்யா. (கிருஷ்ணனின் மகள்)
Advertisement
“வரேன்டா” கண் திறக்காமல் புரண்டு படுத்தவனின் செவியில்,
“விடியக் காலைல தானே வந்தான். எதுக்கு இப்பவே எழுப்பறீங்க?” என மேகலை சலித்துக் கொள்வதும்,
Advertisement
Advertisement
“மணி ஏழாச்சு மேகா! இன்னும் என்ன தூக்கம்” என அமரேசன் பதில் கொடுப்பதும் கேட்டது.
“உங்க ரூல்ஸ்க்கு ஒரு அளவில்லையா? இப்போ நீங்க ரிடேர்ட் ப்ரின்சிபால். மறந்து போய் அடிக்கடி வீட்டையும் ஸ்கூல் போல நடத்தறீங்க” என்றார், மேகலை கண்டனமாக.
Advertisement
“நேர காலமே எழுந்துக்கறது உடம்புக்கு நல்லது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இதுவும் ரொம்ப முக்கியம்” என அமரேசன் பாடம் எடுக்கத் தொடங்கி விட, மேகலைக்கு எதற்கு பேச்சுக் கொடுத்தோம் என்றாகி விட்டது.
இது வாடிக்கை தான்.
அமரேசன் ஓய்வு பெற்ற அதிபர் என்பதால் இப்படிப்பட்டவர் அல்ல. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அப்படி ஒரு விம்பத்தைக் கொடுத்தாலும் அவர் வளர்ந்த விதமே இம்மாதிரி தான் இருந்தது.
பழக்க வழக்கங்கள் எல்லாவற்றிலும் ஒரு நெறிமுறையைக் கடைப்பிடிப்பவர். அதனால் பிள்ளைகளையும் அப்படியே பழக்கி விட்டிருந்தார்.
மேகலைக்கு இப்படியான வாழ்க்கை முறையில் சற்றும் உடன் பாடில்லை என்பதால், மனைவியைத் தனக்குப் போல் மாற்ற முயற்சித்தவருக்கு இறுதியில் கிட்டியதென்னவோ தோல்வி தான்.
காலையில் ஐந்துக்கெல்லாம் எழுந்து விட வேண்டும். அதேபோல் இரவு பதினொரு மணிக்கு முன்பு தூங்கி விட வேண்டும் என எதற்கும் சட்டம் தான். ஆண் பிள்ளைகள் என்றாலும் சரி மாலை ஆறு மணிக்கு மேல் பொழுதுக்காக எல்லாம் வெளியில் சுற்றக் கூடாது என பலவித விதி முறைகள்.
கிருஷ்ணன் உட்பட வாசன் வரை இன்னுமே இதையெல்லாம் கடைப்பிடித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது தான் இங்கு ஹைலைட்!
“கீர்த்தி!”என மகனை அழைத்தவாறு அவன் அறை நுழைந்தவர், மின் விசிறியை அணைத்து விட்டு திரைச் சீலைகளை திறந்து விட்டார்.
“எழுந்துக்கோ ப்பா”என அவன் பாதங்களில் தட்டி விட்டு செல்ல, அலுப்பு இருப்பினும் எழுந்து கொண்டான் கீர்த்தி வாசன்.
முகம் கழுவி விட்டு கூடம் வந்தவனிடம், காபியைக் கொடுத்தாள் சௌந்தர்யா.
“தேங்க்ஸ் அண்ணி” என வாங்கிக் கொண்டவனின் கண்களில் தூக்கம் மிச்சமிருந்தது.
அதைக் கண்டு கொண்ட மேகலை, “அவர் தான் சொல்றாருன்னா உன் கொழுந்தனுக்கு கொஞ்சம் தூங்கி எந்திருச்சா என்னவாம்?ஸ்கூல் இன்னைக்கு லீவ் தானே போட்டிருக்கான்.” என்றார் மூத்த மருமகளிடம்.
“நீங்களே ஏன்னு கேளுங்களேன் அத்தை!” என புன்னகைத்த சௌந்தர்யா சமையலறை நுழைந்து கொள்ள,
“கல்யாணம் முடிய மட்டும் எனக்கு இவன் கூட பேச்சில்லை” என அடுக்களையை எட்டிப் பார்த்து குரல் கொடுத்தார், மேகலை.
“இப்போ தான் நிச்சயமாச்சில்ல! அப்போ பாதி கல்யாணம் முடிஞ்ச மாதிரி தான் இல்லையாமா?அப்போ பாதியாவது பேசலாம்ல”என குறும்பாய் தாயிடம் வாசன் கேட்க,
“நீங்க வெச்சிட்டு ரெடியாகுங்க அண்ணி. வேலைக்கு டைம்மாகுதில்ல. நான் பாத்துக்கறேன்” என சொல்லி அவள் கரத்திலிருந்ததை வாங்கி மேசையில் அடுக்கி வைத்தான் வாசன்.
அந்நேரம் கிருஷ்ணனும் பரதனும் வர,
“முப்பது பேருக்கு மேல நேத்து பங்ஷனுக்கு கூட்டிட்டு போனீங்களாம். அவங்க கிட்ட நாம இத்தனை பேர்னு சொல்லலையே. இல்ல, நான் சென்னைக்கு போனப்பறம் இது பத்தி அவங்க கிட்ட இன்போர்ம் பண்ணிட்டு போனீங்களா?” என கேட்டான் நிதானமாய்.
தொண்டையை செருமிக் கொண்ட கிருஷ்ணன்,
“அதான் ஃபங்க்ஷன் நல்ல படியா முடிஞ்சு போச்சுல்ல. இப்போ எதுக்கு அது” என அமர,
“அப்போ சொல்லல ரைட்?” என்றான் விடாது.
“ஆமா கீர்த்தி, சொல்லல”என அலட்சியமாய் வாணி வர,
“ஏன்?” என்றான் தீவிரத்துடன்.
“என்ன தம்பி? நாம மாப்ள வீட்டுக்காரங்க. எப்டி இருந்தாலும் அவங்க சமாளிச்சு தானே ஆகணும். வரோம்னு சொல்லிட்டோம். அதுக்கு மேல வேற என்ன சொல்லனும்?” என்றாள்.
வாசனுக்கு அவள் பேசியது அதிருப்தியைக் கொடுக்க,
“என்ன இருந்தாலும் நம்ம சொல்லிருக்கனும் அண்ணி. இத்தனை பேரை கூட்டிட்டு போய் அவங்களுக்கு பதட்டைத்தை கொடுத்திருக்க வேணாம்” என்றவன்,
அமரேசன் வரவும்,
“ப்பா! நீங்களாவது சத்யன் அங்கிள்ட்ட இன்போர்ம் பண்ணிருக்கலாமே?”என அனைவருக்கும் சாப்பாட்டை பரிமாறியபடி.
“அன்னைக்கு காலைல தான் அத்தனை பேர்னு தெரியும்பா. இல்லைன்னா முன்னாடியே அவங்க கிட்ட சொல்லிருப்பேன்” என்றார்.
அமரேசனுக்கு இத்தனை பேர் என்றெல்லாம் தெரியாது. அவர் பொறுப்பை மூத்த மகன்களிடம் ஒப்படைத்திருந்தார்.
முதலில் பதினைந்து பேர் என்றிருக்க, அதை மாற்றி அமைத்தது வாணி, சௌந்தர்யா, கௌசல்யா மூவரும் தான்.
வாணியின் சொந்தம், சௌந்தர்யாவின் சொந்தமென அத்தனை பேரையும் அழைத்து விட, அவர்களும் அமரேசன் வீட்டுக்கு வந்து விட்டனர்.
கிருஷ்ணனனும்,பரதனும் விஷயம் தெரிந்து மனைவியரைக் கடிந்து கொண்டாலும்,வீட்டுக்கு வந்து விட்டவர்களை என்ன செய்வது? திருப்பி அனுப்ப முடியாமல் நிச்சயத்திற்கு அழைத்து சென்றிருந்தனர்.
“அதெல்லாம் அந்தப் பொண்ணு சொல்லிருக்கும்ங்க. அதான் தம்பி இந்த குதி குதிக்குது” என முந்திக் கொண்டாள் வாணி.
இடைச் சொருகலாய், “வீட்டுக்கு வர முன்னமே குடும்பத்தை பிரிக்க பார்க்கறா” என முணுமுணுப்பு வேறு.
வாணியின் பேச்சின் மூலம் இவர்கள் வேலையாகத் தான் இருக்கும் என கண்டு கொண்டான் வாசன்.அவள் பேசியதில் எரிச்சலாய் வர,
“நான் இங்க இல்லைன்னாலும் சிவா கிட்ட சொல்லிட்டு தான் போனேன்” என பொதுவாய் சொன்னவன்,
“ண்ணி, இன்னொரு விஷயம். அந்தப் பொண்ணில்ல. வேதா வேதவி” என மீசையோடு மேலுதடு கடித்து சிரிப்பைக் அடக்கிக் கொள்ள, முகத்தை திருப்பிக் கொண்டாள் வாணி.
“விடுப்பா, என்ன இருந்தாலும் நாம அப்டி செஞ்சிருக்க கூடாது தான்.” என்ற அமரேசன்,
“சத்யன் கிட்ட இனிமே இதுபோல நடக்காதுன்னு சொல்லிட்டு தான் வந்திருக்கேன்”என்றார்.
“ஹ்ம்ம”என்றவன் அதற்கு மேல் பேசாமல் அமைதியாகி விட்டான்.
பின் அனைவரும் சாப்பிட்டு விட்டு கிளம்பி விட, குளித்து விட்டு வந்த வாசனை எதிர் நோக்கியபடி அவனது அண்ணியர்கள்.
புருவம் சுருக்கியவன் டிபனை தானே வைத்து சாப்பிட அமர்ந்தான்.
“போங்கக்கா, போய் பேசுங்க!” என ஓரக்கத்தியிடம் வாணி சொல்ல,
எப்படியும் தாங்கள் நினைப்பது நடக்கப் போவதில்லை எனத் தெரிந்தே அவனிடம் பேசச் சென்றாள் சௌந்தர்யா.
“என்னண்ணி? ஏதாவது சொல்லணுமா?வேலைக்கு உங்களுக்கு நேரமாச்சே?” என சாப்பிடுவதை நிறுத்தி விட்டுக் கேட்டான் வாசன்.
“அது.. வ. வந்து தம்பி”என இழுத்தவர், திரும்பி வாணியைப் பார்த்து வைக்க,
அவளோ “பேசுங்க, ம்ம்” என கண் ஜாடை காட்டினாள்.
“என்னவாம் நம்ம சின்னண்ணிக்கு?” என அடக்கப்பட்ட சிரிப்புடன் அமர்த்தலாகக் கேட்டு வைத்தவனிடம்,
“நே..நேத்து பூ வைக்க போனோமே தம்பி அப்போ.. வேதவியை போட்டோ எடுத்துட்டு வந்தோம்”என ஒரு வழியாக கூறி முடித்தாள் சௌந்தர்யா.
“ஹ்ம்ம்…”என்றவன்,
“விஜிக்கா நேத்து ஃபங்க்ஷன் போட்டோஸ் எல்லாமே எனக்கு அனுப்பிட்டாங்களே” என்றான்.
சௌந்தர்யா என்ன சொல்வதென தெரியாது கைகளை பிசைந்து கொள்ள,
“இது வேற போட்டோ தம்பி! ஃபங்க்ஷன்ல அந்த பொண்ணு மேக்கப்போட இருந்திருக்கும். சில உண்மை முகங்கள் தெரியனும் தானே?” என முன் வந்தாள் வாணி.
“ஓஹோ..!” என புருவம் உயர்த்தினான் வாசன். எதுவோ வில்லங்கமாக சொல்லப் போகிறார்கள் என மட்டும் புரிந்தது இவனுக்கு.
“நீயே பாரு ‘அந்த பொண்ணை’ என சொல்ல வந்தவள்,
“வேதவியை” என மாற்றி தன் போனை நீட்ட, வாணி பேசிய விதத்தில் நமட்டுச் சிரிப்போடு வாங்கிக் கொண்டான் கீர்த்தி.
வேதவியின் ‘நைட்டி லுக்’கை பார்க்கையில் அவன் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என ஆர்வம் பொங்கப் பார்த்த இருவரின் முகமும், அவன் கொடுத்த கமெண்டில் தண்ணீர் தெளித்த புஸ்வானமாகியது.
“என்ன கீர்த்தி இப்படி சொல்ற? நம்ம கிட்ட கலரா இருக்கற போட்டோ தந்து அவங்க ஏமாத்திருக்காங்க! மேக்கப்பை அழிச்சிட்டு பார்த்தா தானே நிஜ கலரு தெரியுது.”என வாணி நொடிப்பும் கடுப்புமாக சொன்னாள்.
“எனக்கொன்னும் அப்படி தெரியலையேண்ணி!” என்றானே பார்க்கலாம்.
அவனுக்கு இப்போது புரிந்தது. வேதவியின் இந்த படத்தை காட்டினால் தான் அவளை வேண்டாமென்று விடுவேன் என எண்ணியிருக்க கூடும்!
‘ஹா ஹா சில்லி!’ என நினைத்தாலும் பெண்களின் இந்த செய்கையில் அவனுக்கு வருத்தமே.
அதிலும், அண்ணி சௌந்தர்யாவிடத்தில் இப்படி என எதிர்பார்த்திராதவனுக்கு கூடுதலாய் தமக்கை கௌசல்யாவும் இதில் கூட்டு என்பது பெரும் கவலையைத் தந்தது.
‘பார்த்துக்கொள்ளலாம்’என நினைத்தவன், அண்ணிமார்களை பார்க்க இன்னுமே இருவரும் வாசன் பேச்சில் தெளியாது இருந்தனர்.
எழுந்த சிரிப்பை அடக்கும் வழியாக தண்ணீரைக் குடித்தவன்,
“என் போன்கு இந்த போட்டோவை வாட்சாப் பண்ணிடுங்க ண்ணி” என எழ, ‘பே’ வென விழித்தனர் பெண்கள்.
வேண்டுமென்றே,
“இன்னைக்கு வேதாவ பார்க்க போகும் போது நைட்டியே வாங்கிப் போயிட்டா என்ன!” என தனக்குள் பேசுவது போல் சத்தமாய் முணுமுணுத்து விட்டு சமையலறை நுழைந்து கொண்டான் கீர்த்தி வாசன்.
**************
“ஸ்ஆ! ம்மா” என அலறினாள் வேதவி.
“என்னடி சுட்டு கிட்டியா?” – என சரஸ்வதி சலிப்புடன் கேட்டு வைத்தார்.
பின்னே,ஒன்பது மணி நேரமாக ஒரு பொரியலை பிரட்டிக் கொண்டிருந்தால் அவருக்கும் கடுப்பாகாதா என்ன?
“இது வருதே இல்ல. நான் என்ன செய்றதாம். கைல எண்ணெய் வேற தெறிக்குது” என்றவள் சொன்ன நேரம், ‘பொப்’ என மீண்டும் அவள் கையில் தெறித்து விட அலறி விட்டாள் பெண்.
“ஒரு பொரியலுக்கே இப்படின்னா எப்படி தான் சமையல் கத்துக்கப் போற” என்றவர்,
“என்ன இந்த நேரத்துல வந்திருக்காரு”என அவரும் பரபரப்பாக,
“கட்டிக்க போற பொண்ணை பார்க்க வந்திருக்காரு. ஏதோ நீங்க இதெல்லாம் பண்ணாதவர் போல பதட்டமாகறீங்க!என்னை பார்க்க எங்க வீட்டுக்கு செவரேறி குதிச்சு வந்தீங்களே”என்றார் சரஸ்வதி, கணவனைக் கண்டு கொள்ளாமல்.
மகள்கள் இருவரும் வாய்ப் பொத்தி சிரிக்க,
“இவ வேற, கூறு கெட்டவ! பிள்ளைங்க முன்னுக்க என்னத்த சொல்லி என் மானத்தை வாங்கறா”என முணுமுணுத்தவர்,
“நான் வெளிய போய் மாப்ளய பார்க்கறேன்” என வெளியில் சென்று விட்டார்.
“என்ன வேதா. மாமா சர்ப்ரைஸ் விசிட்டெல்லாம் தராரு” என கிண்டல் செய்தாள் சங்கவி.
வேதவி முறைக்க,
“அவ கெடக்கறா! இப்படியே நிக்காம நீ போய் நல்ல சுடிதார் ஒன்னை மாத்திக்க” என சரஸ்வதி மூத்த மகளிடம் சொன்னவர்,
விழா முடிந்ததும் நேற்றிரவே கனியன் சென்னை சென்றிருக்கவும்,
“கவி, நீ போய் பெரியம்மாட்ட அண்ணனுங்க யாரும் இருந்தா வரச் சொல்லு” என்றார்.
சத்யநாதன்,வாசனை உள்ளே அழைத்து வந்தவர் சற்று நேரம் பேசி விட்டு, அவசர வேலையாக வெளியில் செல்வதாக கூறிச் சென்றார்.
அவர் சென்றதும், சங்கரியின் மூன்றாவது மகன் (வருண்) வந்து கீர்த்தி வாசனுடன் பேசிக் கொண்டிருந்தான்.
“வேதா, இந்தா நீ போய் டீ கொடு” என மகளிடம் கொடுத்தனுப்பினார் சரஸ்வதி.
என்ன தான் வாசனிடம் பேசிருந்தாலும்,முதன் முதலில் நேரில் அவனை சந்திக்கப் போவது ஒரு வித நடுக்கத்தை கொடுத்திருந்தது வேதவிக்கு.
மேல் தளத்தை சுற்றிக் காண்பிக்க கீர்த்தி வாசனை அங்கே அழைத்து சென்றிருந்தான் வருண்.
மெல்ல படியேறிவளின் செவியில் வாசன் குரல் கேட்டது.
காபி ட்ரேயை அழுந்த பற்றிக் கொண்டாள் வேதவி.
“வாக்கா” என்ற வருண் தனக்கான டீயை எடுத்துக் கொண்டு ஹாலில் தேங்கி விட,
“தேங்க்ஸ் வேதவி” என தனக்கானதை எடுத்துக் கொண்டான்,வாசன்.
“வாங்க”என்ற வேதவி, வருணிடம் தலையசைத்து விட்டு வாசனை பால்கனிக்கு அழைத்து சென்றாள்.
சற்று நேரம் இருவருக்குமிடையில் பேச்சற்ற மௌனங்கள் தொடர்ந்தன.