“என்ன மச்சான் வந்து ரொம்ப நேரம் ஆச்சா…” என அறையில் அமர்ந்திருந்த விஷ்ணுவை பார்த்து கேட்டுக்கொண்டே ப்ரசன்னமானான், விஷ்ணுவின் நண்பன் பிரசன்னா.
“எஸ் மிஸ்டர் பிரசன்னா… ஐயம் இன் டியூட்டி… இப்படி தான் மச்சான்னு எல்லாம் கூப்புடுவிங்களா?…” என ஸ்ட்ரிக்ட் ஆக விஷ்ணு கேக்க,
“எப்பா… டேய்…” என சொல்லி அவனின் தோலில் அடித்த பிரசன்னா, “ஸ்கூல்ல எல்லாருக்கும்ப்ராபெர் ஆஹ் அனௌன்ஸ் பண்ணணும்ல, அதுனால அண்ணா கூட எல்லாத்தையும் பார்த்துட்டு வந்தேன்…” என விளக்கி சொல்ல,
அவன் பின்னால் சொன்னதை கருத்தில் கொள்ளாத விஷ்ணு, “ஒரு ஸ்கூல் கரெஸ்பாண்டெண்ட்டோட பையனே இப்படி டிசிப்ளின் இல்லாம விளையாட்டு தனமா அடிச்சி பேசுனா… அப்பறம் இந்த ஸ்கூல்ல படிக்குற ஸ்டுடென்ட்ஸ் எப்படி இருப்பாங்க…” என கேள்வி கேக்க,
“போதும்டா… இது மட்டும் எங்க அப்பாக்கு முன்ன சொல்லிடாத…” என கையெடுத்து கும்பிட்டான் பிரசன்னா.
சிறு தோல் குலுக்களுடன் அவனை பார்த்த விஷ்ணு, “எல்லாம் முடிஞ்சிது தானே…” என அவன் கேக்க,
“ம்… ஆல் டன்…” என சொல்லி கையில் கட்ட விரலை உயர்த்தி காட்டியவன், “அப்பா ரொம்ப ஹாப்பி…” என்று சொன்னான் பிரசன்னா.
அப்போ கதவை திறந்து உள்ளே வந்தார் வெள்ளிங்கிரி, பிரசன்னாவின் தந்தை. தற்போது சிந்து வேலை செய்யும் பள்ளியை வாங்கி இருப்பது அவர் தான்.
அவர்களுக்கு சொந்தகமாக ஒரு கலை கல்லூரியும், தொழில் நுட்ப கல்லூரியும் உள்ளது. இப்பொதுழு அதனுடன் இந்த பள்ளியும் இணைகிறது.
நிறைத்த தலை, பவர் கண்ணாடி, சஃபாரி சூட் போட்டு மிடுக்குடன் உள்ளே வந்தவர், விஷ்ணுவை பார்த்து புன்னகைத்துக்கொண்டே ” முன்னவே வந்தாச்சா…” என கேட்க,
“ம்ம்… ஒரு ரவுண்டு அட்டெண்டன்ஸ் போட வந்தேன்…” என பதிலளித்தான்.
“ரொம்ப சந்தோசம் விஷ்ணு… காலெஜோட சேர்த்து ஒரு ஸ்கூல் இருந்தா நல்லா இருக்கும்ன்னு யோசிச்சிருக்கேன்… அது இப்போ நடந்துருக்கு…” என சிரித்தபடி சொன்னார்.
“ஒகே ப்பா… அப்போ நீங்க பாருங்க… நான் கிளம்புறேன்…” என்றான் விஷ்ணு.
“என்ன விஷ்ணு அதுக்குள்ள கிளம்புறேன்னு சொல்லுற…” என அவர் கேக்க,
“டியூட்டில இருக்கேனே…” என சொல்லி சிரித்தான் காவல்காரன்.
“ஓகே… இதுக்கு மேல உங்கிட்ட ஏதும் கேக்க முடியுமா என்ன…” என்றவர், “எக்ஸ்- கரெஸ்பாண்டண்ட் கூட ஒரு லைவ் வீடியோ கால் கனெக்ட் பண்ணுறேன்… அவரே விஷயத்தை ஸ்டாப்ஸ்க்கு எல்லாம் சொல்லுற மாறி… அரசல் புரசலா இந்நேரம் தெரிஞ்சிருந்தாலும் இப்படி சொன்னா நல்லா இருக்கும்ன்னு ஒரு யோசனை…” என அவர் பகிர,
“உங்க சாய்ஸ் தானே இனிமே…” என்று சொன்ன விஷ்ணு, “ஓகே… நான் கிளம்புறேன்… பாக்கலாம் ப்பா…” என்றான்.
அதுவரை அவர்களின் சம்பாஷணையை பார்த்து கொண்டிருந்த பிரசன்னா, “ப்பா… அண்ணன் எல்லாத்தையும் பார்த்துட்டு இருக்கான்… நீங்க அவன்கூட ஜாயின் பண்ணிக்கோங்க… நான் இவனை சென்ட் ஆஃப் பண்ணிட்டு வரேன்…” என்று சொல்லிவிட்டு நண்பனுடன் இணைந்து நடந்தான்.
“இப்போ எதுக்கு நீ என்கூட காருல ஏறுற… இது தான் உங்க ஊருல சென்ட் ஆஃ பண்றதா…” என விஷ்ணு நண்பனை கேக்க,
“இப்போ எனக்கு என்ன கதைன்னு தெரிஞ்சே ஆகணும்…” என்றான் பிரசன்னா.
“உன்னைய பத்தி தெரிஞ்சும்… நான்…” என அவன் சொல்ல வர,
அதற்குள், “செருப்பில்லை… பூட்ஸ் தான் இருக்கு வேணுமா…” என அலட்டிக்கொள்ளாமல் விஷ்ணு கேக்க,
“உன்னைய…” என அடுத்து பேச வர,
“இங்க பாரு… உங்கிட்ட இப்போ பேசுறதுக்கெல்லாம் எனக்கு நேரமில்ல… நான் டியூட்டில இருக்கேன்… நீ இப்போ கார்ல இருந்து இறங்குரியா?…” என விஷ்ணு அலட்டிக்கொள்ளாமல் சொல்ல,
“டியூட்டில இருக்கறவன் உன் டிஸ்ட்ரிக்ட் இல்லாம எதுக்குடா அவினாஷிலா இருக்குற…” என பிரசன்னா கேக்க,
“பார்டர் பிரச்சனை… திருப்பூருக்கும், கோவைக்கும்னு ஒரு கம்ப்லைன் வந்துச்சு… அதுதான் என்னனு பாக்க வந்தேன்…” என அவனிடம் பேசிக்கொண்டே அவனுடைய காரை கிளப்பினான்.
” உன் ஆளுக்காக தானே இதையெல்லாம் பண்ணுன… ஒழுங்கா சொல்லுடா…” என பிரசன்னா கேக்க,
“ஏன்?… ஆளுன்னா தான் பண்ணனுமா… இந்த தங்கச்சியா இருந்தாயெல்லாம் பண்ண கூடாதா?…” என விஷ்ணு இடக்காக கேக்க,
“எதே தங்கச்சியா?…” என அதிர்ச்சியாகி கேக்க,
“ஆமா… தங்கச்சி தான்…உனக்கு…” என அசராமல் சொன்ன விஷ்ணு, காரை ஒரு ஓரமாக நிறுத்தி இறங்கினான்.
“ஆஹ்…” என அவன் சொன்னதை கேட்ட பிரசன்னா, விஷ்ணு இறங்குவதை பார்த்த அவனும் இறங்கி நின்று நண்பனை பார்க்க,
“நான் சொன்ன போல மிஸ். சிந்துஜா கிட்ட சொல்லுற… புரிஞ்சிதா…” என விஷ்ணு தோரணையாக கேக்க,
“ம்ம்… நீ நடத்துடா…” என்றான் பிரசன்னா.
விஷ்ணு, “நான் நடத்திக்கிறது இருக்கட்டும்… இப்போ நீ நடந்தே ஸ்கூல்க்கு போ…” என நக்கலாக சொல்ல,
“போடா… உன்னைய பத்தி தெரிஞ்சும், நானும் உங்கிட்ட இப்படி பேசுறேன் பாத்தியா…” என அடுத்து சொல்ல வந்தவன், உஷாராகி விஷ்ணுவை பார்க்க,
விஷ்ணு நமுட்டு சிரிப்புடன் அவன் போட்டிருந்த பூட்ஸை பார்க்க,
“நான் சொல்லல…” என சொல்லிக்கொண்டே தலையில் தட்டி கொண்டவன், “என்னைய விட்டுட்டு நீ கிளம்பு… உங்கிட்ட கேக்க வந்தது என்னோட தப்புதான்…” என சரணடைய,
“அதை நான் இறங்க சொல்லும் போது பண்ணிருக்கணும்… இங்க இருந்து அரை கிலோமீட்டர் தான்… நடந்துபோ… உடம்புக்கு ரொம்ப நல்லது…” என அவனிடம் அசால்ட்டாக சொல்லிவிட்டு காரில் கிளம்பினான் விஷ்ணு.
– – – – – –
சிந்து சொன்னதை கேட்டதிலிருந்து என்ன பண்ணலாமென்று ஒரு நாள் முழுவதும் யோசனை செய்தவன், ரூபனின் தந்தையின் காதுகளுக்கு, இவ்விஷயத்தை கொண்டு சென்றான் விஷ்ணு, அவனின் தந்தையின் நம்பிக்கை பெற்ற மனிதரை வைத்து.
இதை சொல்ல கேட்ட அவனின் தந்தைக்கு தன் காதுகளையே நம்ம முடியவில்லை… பின்பு அதிர்ச்சி நீங்கி, “எனக்கு என்ன சொல்லுறதுனு தெரியலீங்க சார்… ஆனா இந்த ஸ்கூல் நான் ரொம்ப கஷ்டப்பட்டு மேல கொண்டு வந்திருக்கேன்… எனக்கு இந்த ஸ்கூலை பத்தி எந்த களங்கமும் வர நான் விடமாட்டேன்…” என்று சொன்னவர்,
“வேற யாருக்கும் வேணும்னா ஸ்கூலை விக்க கூட தயாரா இருக்கேன்… நாளைய சமூகத்தை உருவாக்குற இடம்… இதுக்கு ஒரு களங்கம் வர வேணாம்…” என சொல்லி முடித்தார்.
இதே அவன் அடுத்து செயல் படுத்த வசதியாய் போக, அடுத்த இரண்டு நாட்களில், அவனின் நண்பன் பிரசன்னா மூலமாக பேசி, இதோ இப்போது ஸ்கூலையும் புது நிர்வாகத்துக்குள் கொண்டுவந்து விட்டான்.
இதில் ரூபனை பற்றி விசாரித்ததில், அவன் பல மன்மத லீலைகளை அரங்கேற்றிருக்க, அடுத்து அவன் ஸ்கூலில் பணிபுரியும் ஆசிரியர்களை குறி வைப்பது தெரிந்தது.
சீக்ரெட் ஆப்பரேஷனை நடத்திவிட முடிவெடுத்து, அதற்கான அம்புகளை தயார் செய்து சமயம் பார்த்து தாக்குவதற்கு ஆயுத்த படுத்திருந்தான்.
“நல்ல தந்தைக்கு கேடுகெட்ட மகன்…” என இதையெல்லாம் யோசித்தவாறே அவன் காரில் சென்றுகொண்டிருக்க, அவனின் அலைபேசி ஒலித்தது.
அதை ப்ளூடூத்தில் கனெக்ட் செய்தவன், “சார்… நீங்க சொன்ன போல பண்ணியாச்சு சார்…” என மறுபுறத்திலிருந்து குரல் வர,
“எப்படி?… எந்த இடம்…” என விஷ்ணு மணியை பார்த்துக்கொண்டே கேக்க,
சார்… நீங்க சொன்னதில இருந்து அவனை வாட்ச் பண்ணதுல, அவன் ரெண்டு நாளா வீட்டுக்கு போகாம இங்க கோவை இருக்குற அவனோட பிரென்ட் வீட்டுல தான் தங்கிருந்திருக்கான்.
“நல்ல போதை வேற… நடந்து கார்ல ஏறும் போதே தெரிஞ்சிது… அது தான் சம்பவத்தை முடிச்சிட்டு, அப்பறம் நாங்க அந்த இடத்தை ரீச் பண்ணி, இப்போ ஹாஸ்பிடல்ல நாங்களே சேர்த்துட்டோம்…” என அவனுக்கு விளக்கி, அடுத்து ஹாஸ்பிடல் பெயரை சொல்ல,
“வெல்… நான் அங்க வந்துட்டே இருக்கேன்…” என சொல்லி வைத்தான் போலீஸ்காரன்.
– – – – – –
அங்கே மருத்துவரின் அறையில் அமர்ந்திருந்தான் விஷ்ணு.
“சார்… அந்த பேஷண்ட் உயிருக்கு ஏதும் ஆபத்து இல்ல… பட் ஆக்ஸிடென்ட்ல ரெண்டு காலும் முட்டி வரைக்கும் எடுத்தாச்சு…” என மருத்துவர் சொல்ல,
“ஒகே டாக்டர்… அது ஒன்னும் பிரச்சனை இல்ல… உயிர் இருக்குறதே போதும்…” என விஷ்ணு சொல்ல,
“அப்பறம் சார்…” என அந்த மருத்துவர் சொல்லிவிட்டு விஷ்ணுவை பார்க்க,
“ம்… சொல்லுங்க…” என்றான்.
“அவங்க இந்த ஆக்ஸிடென்ட் ஆனதுல அப்பா ஆகும் தகுதியை இழக்குறாங்க…” என கூடுதல் விவரம் தந்தார்.
“அதுக்கு தானே இந்த ஆக்ஸிடென்ட்…” என நினைத்தவன், “ஒகே டாக்டர்… அவனோட விதி…” என்று சொல்லி முடித்தான்.
இதையெல்லாம் அறியாதவன் மருந்தின் உபயத்தால் மயக்கத்தில் இருந்தான், கால் போன ஆசாமி ரூபன்.
விஷயம் கேள்விப்பட்டு வந்திருந்த அவனின் வீட்டினரிடம் விசாரித்து, அடுத்து அங்கிருந்த இன்ஸ்பெக்டரிடம் போர்மாலிட்டீஸ்ஸை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி கிளம்பினான்.
– – – – – –
இரவு தன் சாப்பாட்டை முடித்துக்கொண்டு அவனின் ரூமிற்க்கு வர, “சார்… கொஞ்சம் பேசணும்…” என மெசேஜ் அவளிடமிருந்து வந்திந்தது.
“இவளுக்கு வர வர இதே வேலையா போச்சு…” என்றவன், “மெசேஜ் பார்த்தும் ஒன்றும் பண்ணாமல் அவனின் வேலையை பார்த்தான்.
“அடுத்து தொடர்ச்சியாக மூன்று மெசேஜ் ஒரு நிமிட இடைவெளியில் வர, அதை பார்த்துவிட்டு, சிரிப்புடன் போனை எடுத்து வைப்ரேட் மோடில் போட்டுவிட்டு, ஒரு கேஸ் பைலை பார்வையிட்டு கொண்டிருந்தான்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் அவனின் போன் வைப்ரேட் ஆக, தலையை இடவலமாக ஆட்டிவிட்டு, ஒரு நொடி மின்னும் அவள் பெயரை பார்த்துவிட்டு அட்டென்ட் செய்து காதில் வைக்க,
அந்த பக்கம் மாதுவோ, “சார்… உங்களுக்கு தெரியுமா… எங்க ஸ்கூல் மேனேஜ்மென்ட் மாறிடுச்சு… அவங்க பையனால ஒழுங்கா ஹாண்டில் பண்ணமுடியிலன்னு சொல்லி, ஸ்கூலை வேற மேனேஜ்மென்ட் மாத்திட்டாங்களாம்… இன்னைக்கு அனௌன்ஸ்மென்ட் பண்ணுனாங்க…” என சிந்து பரபரப்பாக சொல்ல,
“ஒய்… ஆவக்கா… எதுக்கு இப்போ எடுத்ததும் அரக்கப்பரக்க பேசுற…” என கேட்டவன், “போனை எடுக்குறவங்ககிட்ட, ‘எப்படி இருக்கீங்க’ அப்படின்னு எல்லாம் கேக்கமாட்டியா?… இப்படித்தான் எடுத்ததும் லபோதிபோன்னு பேசுவியா?…” என அவன் சிரிப்பை முழுங்கியபடி பேச,
“ஆஹ்… சார்…” என அவனின் பேச்சில் சிலையாக,
“என்ன சுண்டக்காய்க்கு அடுத்து உடனே பேச்சு வராதே…” என அவன் கிண்டலாக கேக்க,
“இல்ல… இல்ல… உங்ககிட்ட சொல்லணும்ன்ற ஆர்வத்துல கவனிக்கல…” என குரல் இறங்கி சொல்ல,
“அதென்ன தூங்குற நேரத்துது தான் கால் பண்ணி சொல்லனுமா… நீயென்ன பவளமல்லியா?…” என அவன் கேள்வி கேக்க,
சிந்து, “சார்… அப்படின்னா…”
விஷ்ணு, “ஒரு டீச்சர் தானே நீனு… அப்படின்னான்னு கேக்குற…”
“தெரியாததை தானே கேக்குறேன்…” என மனதில் நினைத்து, அவனிடம், “நான் கூகிள் கிட்ட கெடுக்குறேன்…” என வீராப்பாக சொல்ல,
“ம்க்கும்… ரொம்பதான்…” என உதடை சுளித்தவள், “நீங்க தானே சொன்னிங்க…” என அவள் கேக்க,
“அப்போ நான் என்ன சொன்னாலும் கூகிள்கிட்ட தான் கேப்பியோ?…” என அவன் நக்கலாக கேக்க,
“அப்பறம் நீங்களும் சொல்லமாட்டீங்க… அப்பறம் நான் என்னதான் பண்றதாம்…” என அவளிடம் வார்த்தை சிணுங்கியதாக வர,
அதை கேட்ட விஷ்ணுவோ, “இவ என்னவோ பண்ணுறாடா…” என எப்போதும் போல மனதில் நினைத்து, வெளியில், “சரி சொல்லி முடிச்சிட்டனா… நான் வைக்கிறேன்…” என அவன் சொல்ல,
“இருங்க இருங்க… இன்னும் இருக்கு…” என அவசரமாக சொல்ல,
“அப்போ அதை சொல்லுறதை விட்டுட்டு, வெட்டி கதை பேசிட்டு இருக்க…” என அவன் அதட்ட,
“சார் போதும்…” என்றவள், “நான் சொல்லிமுடிச்சிடுறேன்…” என வேகமாக சொல்லி,
“இங்க கோவைல ஒரு பள்ளியின் பெயரை சொல்லி, இப்போ இருக்குற மேனேஜ்மென்ட்டோட பிரான்ச் தானாம்… என்னைய அங்க ட்ரான்ஸபெர் பண்ணுறாங்க…” என்ற தகவலை பகிர்ந்தாள்.
“பயபுள்ள சொன்னதை செஞ்சிட்டான்…” என நண்பனை நினைத்து, மீசையை கடித்து சிரிப்பை உள்ளிழுத்து, “ரொம்ப சந்தோசம்… அவ்வளோதானே…” என அவன் கேக்க,
அவனின் பேச்சில் மனம் சுருங்க, இருந்தும், “நான் இனிமே அங்க கோவைல தான் இருப்பேன்…” என்றாள்.
“ஒகே… இருந்துட்டு போ…” என்றான் விட்டேற்றியாக,
“என்ன பண்ணிட்டு இருக்க நீ…” என அவளின் அறிவு கேக்க, “ரொம்ப எக்ஸ்பெக்டஷன் வைக்கிறோம்…” என தலையில் அடித்துக்கொண்டு, “அவங்க நார்மல் ஆஹ் தான் இருக்காங்க, பேசுறாங்க… நம்ம எண்ணம் தெரிஞ்சா, என்ன நினைப்பாங்க…” என யோசித்து அமைதியாக,
“என்ன அமைதி அத்திக்காய்… சத்தமே காணும்…” என அவளின் எண்ணத்தை அனுமானித்து அவன் கேக்க,
“ஹான்… இல்ல… ஒண்ணுமில்ல சார்…” என்றாள் பவ்யமாக.
“ஒகே… எப்போதும் ஒதுங்கி போகணும்னு நினைக்க கூடாது… உனக்கானதை நீ தான் பாக்கணும்…” என அவளிடம் சொல்லிவிட்டு, “ரொம்ப மூளையே இல்லாத உன்னோட முள்ளங்கி மண்டையை போட்டு யோசிக்காம தூங்கு… குட் நைட்…” என சொல்லி போனை வைத்தான்.
அவனின் பேச்சை கேட்ட சிந்துவோ, “இப்போ எதுக்கு இப்படியெல்லாம் இவங்க பேசுனாங்க…” என அவனை பற்றி யோசித்தே அன்றைய இரவை அவனின் நினைவோடு கடந்தாள்.