“சூரி ண்ணா… ஏதாவது ஐடியா சொல்லேன்… இன்னும் எவ்வளவு நேரம் தான் இப்படியே யோசிக்குறேன்னு சொல்லுவ…” என வைஷு திட்ட,
“நான் தான் சொல்லுறேன்ல… உன் அண்ணங்காரன் ஒரு கல்லூலி மங்கன்… கண்டிப்பா அவன் வாய தொறக்குறதென்ன, அசைக்க கூட மாட்டான்…” என திடமாக சொன்னான் சூரி.
“பச்… போ ண்ணா…” என சலித்தவள்,
“இந்த அம்மாவையும் இன்னும் காணும்… ரெண்டு மணி நேரம் போயிட்டு வந்துருவேன்ன்னு சொல்லிட்டு போனாங்க…” என பள்ளி சென்றிருக்கும் அன்னையையும் சேர்த்து திட்டினாள்.
“நீ இந்த விஷயத்தை தானே முதல்ல சொல்லிருக்கணும்… அதை விட்டுட்டு நல்ல கும்பகர்ண கணக்கா தூங்கி எழுந்து வந்து சொல்லுற… இப்போ நான் என்ன பண்ணுறதுன்னு தெரியலையே…” என வாய் நிற்காமல் புலம்பினாள்.
“நான் பேசலாம்னு நைட் வந்தா நீ உன் ஜீவ் கிட்ட மொக்கை போட்டுட்டு இருந்த…” என்றவன்,
“வைஷு… என்ன இப்போ… வேணும்னா நாம ஸ்கூல் போயி பாத்துட்டு வருவோமா?….” என சூரி யோசனை சொல்ல,
“நோ நோ ண்ணா… முதல்ல அண்ணாகிட்ட கேட்டு கன்போர்ம் பண்ணனும்… அதுக்கப்பறம் தான் எல்லாம்…” என்றாள் முடிவாக,
“அப்போ நான் சொன்னதை நம்பலை நீ…” என சூரி கேக்க,
“நீ சொல்லிருந்தாகூட கொஞ்சம் யோசிச்சிருப்பேன் தான்… ஆனா மானு சொன்னான்னு சொன்னதுனால நம்புறேன்…” என சிரிப்பை அடக்கியப்படி சொன்னாள்.
“அடிங்க…” என அவளின் தலையில் கொட்டினான் சூரி.
“சரி அதுலாம் விடு… இப்போ எப்படியும் நீ தான் கேக்கணும்… நீ தான் ஆருயிர் நண்பன்…” என வைஷு முடிவாய் சொல்ல,
“எதே… ஆருயிர் இல்ல… என் ஒரே உயிரை எடுக்குற நண்பன்னு வேணும்னா சொல்லு…” என்றவன்,
“உனக்கு தானே உன் அண்ணன் வாயால கேக்கணும்னு ஆசைப்படுற… அப்போ நீ தான் கேக்கணும்…” என ஜகா வாங்கினான் சூரி.
“நீ தானே சொன்னேன் மானு சொன்னதா…” என வைஷு கேக்க,
“என்ன பண்ணிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்…” என கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார் விசாலாட்சி.
“என்ன ம்மா… இதுதான் வர நேரமா…” என வைஷு கேக்க,
“சொன்னா நேரத்துக்கு வர முடியுமா… கொஞ்சம் முன்னபின்ன தான் ஆகும்…” என அன்னை பதில் தந்து,
“ரெண்டு பேரும் சாப்பிட்டீங்களா…” என கேட்டார் விசாலாட்சி.
“சூரி ண்ணா… பதினோரு மணிக்கு தான் எழுந்தே வந்தான்…” என வைஷு புகார் வாசிக்க,
“நீ போயி அவனை எழுப்பலையா?…” என அன்னை கேக்க,
“நான் எழுந்து வரும் போது, நல்லா சோபால படுத்து தூங்கிட்டு இருந்தா மம்மி… இதுல என்னை சொல்லுறா…” என சூரி சொன்னான்.
“என்னமோ சொல்லுங்க ரெண்டு பேரும்…” என சொல்லிக்கொண்டே எழுந்து கிட்சேன் சென்றார்.
“இங்க பேசிட்டு இருக்கும் போது… எப்படி எழுந்து போறாங்க பாரு…” என அன்னையை வைதவள்,
“அண்ணா… திரும்ப ஒரு தடவை மானு சொன்னதை சொல்லேன்…” என கேக்க,
அவளை முறைத்த சூரியோ, “உனக்கென்ன நியாபக மறதியா?…” என கேட்டான்.
“பச்… நீ திரும்ப சொன்னதை கேட்டா, ஏதாவது ஐடியா, எப்படி கேட்கலாம்னு வருதான்னு தான்…” என வைஷு சொல்ல,
“என்ன ஒரு அறிவு என் தங்கச்சிக்கு…” என சிலாகித்து சூரி சொல்ல,
“என்ன இங்க குசுகுசுன்னு பேசிட்டு இருக்கீங்க…” என கேட்டுக்கொண்டே, கையில் குலாப் ஜாமுன்னுடன் வந்தார் விசாலாட்சி.
அதனை பார்த்த சூரியோ, “அடடே மம்மி… நீங்களல்லவோ சிறந்த தாய்…” என புகழாரம் சூட்டி, ஒரு ஜாமூனை எடுத்து வாயில் ருசித்தான்.
அவனின் தலையில் குட்டிய வைஷுவோ, “ஒரு ஜாமூனை பாத்துட்டு பல்ல காமிச்சிட்டு போற… இங்க நாம என்ன பேசிட்டு இருக்கோம்…” என கேட்டவள்,
“உங்களை யாரும்மா இப்போ எடுத்து வர சொன்னது, இம்போர்ட்டண்ட் விஷயம் டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கும் போது…” என அன்னையையும் கடிந்தாள்.
விசாலாட்சி, “அப்படி என்ன டிஸ்கஷன்…”
“இந்த சூரி ண்ணா… நைட் சொல்லிருந்தா கூட, நானும் உங்களோட கிளம்பி வந்து பாத்துட்டு வந்துருப்பேன்… இப்போ பாருங்க, ஒரு ஐடியா கூட தோன மாட்டுது…” என புலம்பலாக சொன்னாள்.
“இன்னும் நீ என்ன விசயமனே சொல்லலையே…” என அன்னை கேக்க,
அதற்குள், “வைஷு நான் ஒரு ஐடியா சொல்லவா?…” என இடையில் சூரி கேக்க,
அன்னைக்கு பதிலளிக்காமல், ” மொக்கையா ஏதாவது சொல்லாத ண்ணா… நான் அப்பறம் காண்டாகிடுவேன்…” என வைஷு எச்சரிக்கை செய்ய,
“என்னோட ஐடியாவ கேட்டேன்னா, பாராட்ட தான் செய்வ…” என டீ- ஷர்ட்டின் காலரை தூக்கிவிட்டு சொல்ல,
“முதல்ல என்ன விஷயம்னு எனக்கு சொல்லுங்கடா…” என அன்னை முறைப்படி கேக்க,
“இந்தா சொல்லுறேன் பாருங்க மம்மி… உங்க தவப்புதல்வனான விஷ்ணு பிரசாத் ஒரு பொண்ணை லவ் பண்ணுறார்… அந்த பொண்ணு வேற யாருமில்ல… அன்னைக்கு உங்ககிட்ட சொன்னேன்ல… சிந்து… அந்த பொன்னே தான்… நேத்து சார் அந்த பொண்ணுகூட டேட்டிங் எல்லாம் போய்ட்டு வந்திருக்கார்…” என சொல்லி முடித்தான்.
“அப்படியாடா… அந்த பொண்ணு எப்படிடா ஒகே சொல்லிருக்கும் இவனுக்கு…” என ஆராய்ச்சியை கேட்டு,
பின்பு, “நீ முன்னவே சொல்லிருந்தா நான் இன்னைக்கு ஸ்கூல்க்கு போகும்போது பாத்து பேசிட்டு வந்திருப்பேன்ல…” என பூரிப்பாக கேட்டார் அன்னை.
“அம்மா… ரொம்ப எஸ்சைட் ஆகாதீங்க… முதல்ல அண்ணாவை சொல்ல சொல்லுங்க…” என இடைபுகுந்தாள் வைஷு.
சூரி, “உங்க போலீஸ் பையன் என்னமாறி இல்ல… போலீஸ் ஆஹ் இருந்தாலும் அவன் ஒரு கிரிமினல்… முதல்ல அவன்கிட்ட என்னனு நீங்கதான் பொறுப்பான அம்மாவ கேக்குறீங்க…” என சொன்னவன், “எப்படி வைஷு…” என கேட்டான் தங்கையிடம்.
“இது தான் நீ பாராட்டுவன்னு சொன்னதா…” என வைஷு கேக்க,
“அதே தான்… சிந்து ரொம்ப நல்ல பொண்ணு… அதுனால நீங்க போலீசை ஒழுங்கா விசாரணை பண்ணனும்…” என அன்னையிடம் முடித்தான் சூரி.
“என்ன விசாரிக்கணும் போலீஸ்காரன்கிட்டயே…” என கேட்டுக்கொண்டே உள்ளே வந்தான் விஷ்ணு.
“நீயென்னடா இந்த நேரத்துல…” என சூரி கேக்க,
“நான் இல்லாத நேரத்துல, நீ எதுக்குடா என்னைய பத்தி பேசுற?…” என விஷ்ணு முறைப்படி கேக்க,
“நீ இல்லாத அப்போ இல்ல… நீ இருக்குற அப்போ கூட பேசுவேண்டா… என்னங்குற இப்போ…” என சூரி அவனிடம் எகிற,
“அப்போ தயிரியமா எனக்கு முன்னாடி என்னனு சொல்லு பாப்போம்…” என விஷயத்தை வாங்குவாராதற்காக விஷ்ணு கேக்க,
“ஏன் நான் சொல்ல மாட்டேன்னு நினைப்பா…” என முறைத்த சூரி,
“போச்சு… இந்த ண்ணா எல்லாத்தையும் ஒளரப்போகுது…” என மைண்ட் வாய்சில் பேசிக்கொண்டே வைஷு அங்க பார்க்க,
“டேய் நிறுத்துங்கடா…” என அன்னை இடையீட,
சூரி, “நீங்க சும்மா இருங்க மம்மி… இவன் ரொம்ப பண்ணுறான்…” என்றவன்,
“நேத்து சிந்து கூட டேட்டிங் தானே போன… லவ் பண்ணுறவன் வீட்ல சொல்லாம சுத்துவியா?… பதில் சொல்லுடா…” என கேட்டு முடித்தான்.
“”என்னம்மா நடக்குது இங்க…” என வைஷு வாயில் கைவைக்காத குறையாக கேக்க,
“சிந்து தான் உன் அண்ணின்னு சொல்லாம சொல்லிட்டு போறானாம்…” என முடித்தார் அன்னை.
– – – – – –
தான் சிறிது நேரம் பார்த்துக்கொள்கிறேன் என வேணுவிடம் கூறிவிட்டு, அவரை வீட்டிற்கு அனுப்பிவிட்டு வந்து அந்த நிறுவனர் அறையில் அமர்ந்து போனை பார்த்து கொண்டிருந்தான் விஷ்ணு.
சற்று நேரம் சென்று, கதவு தட்டும் ஓசை கேக்க, புன்னகைக்க முயன்ற உதடுகளை அடக்கி, சற்று விறைப்பாக நிமிர்ந்து அமர்ந்து “கம் இன்” என தோரணையாக சொன்னான்.
உள்ளே வந்த காரிகையோ, அங்கிருந்தவனை எதிர்பாக்காமல் உறைந்து நின்றாள். அவள் சிந்து.
“என்ன மேடம்… ஃப்ரீஸ் மோட் ஆஹ்…” என கிண்டலாக கேக்க,
“ஆ… சார்… நீங்க… இங்க…” என வார்த்தைக்கு இடைவெளி விட்டு அவள் கேக்க,
“என்னது கம்பளைண்ட்டா…” என அதிர்ந்து கேட்டாள் சிந்து.
விஷ்ணு, “நான் சொன்னது காதுல விழலையா?…”
“யாரு சார்…” என அவள் வேகமாக கேக்க,
“எதுக்கு இப்படி அவசர படுறிங்க அவகாடோ…” என கேட்டவன், “முதல்ல இப்படி வந்து உக்காருங்க… ரொம்ப நேரமா நீங்க நிக்குறது எனக்கு கால் வலிக்குற போல இருக்கு…” என்றான்.
“ஆண்டவா… நேத்து நான் சொன்னதை கேட்டாரா?… என்னனு வேற எனக்கு இன்னும் தெரியல… நான் அதையே யோசிச்சிட்டு இருக்கேன்… இதுல கம்பளைண்ட்ன்னு வேற சொல்லி வந்திருக்காரு… அது வேற என்னனு தெரியலையே…” என அவனை பார்த்தவாறே யோசித்தாள் மாது.
விஷ்ணு, “என் மூஞ்சில ஏதாவது மாற்றம் பண்ணனுமா என்ன?…”
“ஹான்… என்ன…” என முழித்தவரே கேக்க,
“இப்படி வச்சகண் விடாம பாத்தா, கண்ணு பட்டுடாது எனக்கு…” என அவன் பாவனையை சொல்ல,
அவளின் மனதோ, “என்னடா இவங்க இப்படி பண்ணுறாங்க…” என்ற ரீதியில் அவனை அளவிட்டது.
அவளின் நிலைமையை பார்த்த விஷ்ணு, வாய்க்குள் சிரிப்பை அடக்க, “என்ன சாப்புடுற…” என கேட்டான்.
“ஹான்… என்ன?…” என இன்னும் முழி பிதிங்கியவரே கேக்க,
“ஓ மை காட்…” என முணுமுணுத்தவன், “ஒய் சுண்டக்கா… முதல்ல இப்படி வந்து உக்காரு…” என சொன்னான்.
கொஞ்சம் தயங்கியவாறே அமர்ந்தவள், அவனையே பார்க்க,
“ம்… இப்படி பாத்துட்டே இருக்குறதுக்கு எனக்கும் ஆசையா தான் இருக்கு… ஆனா அதுக்கு இப்போ நேரமில்லையே… என்ன பண்ணலாம்…” என அவளை ஆராய்ச்சியை பார்த்துக்கொண்டே அவன் கேக்க,
“இவங்க ஏன் இப்படி பண்ணுறாங்கன்னு தெரியலையே…” என மனதிற்குள் புலம்பியவள், கெஞ்சல் பார்வையுடன் அவனை பார்க்க,
“கிளாஸ் இல்லையா உனக்கு…” என தெரிந்து கொண்டே அவளிடம் கேக்க,
“இல்லை…” என தலையசைத்தாள்.
“அப்போ சரி… உனக்கு என்னை பாத்துட்டே இருக்கனும் தானே… பாக்கலாமே…” என கேசுவலாக சொன்னான்.
“அடப்பாவி… எப்படி சொல்லுறாரு பாரு…” என மனதில் நினைத்து வாயில் கைவைத்தாள் சிந்து.
அவளின் செயல்களை அவதானித்து கொண்டே, அங்குள்ள ஸிஸ்டெமில் கவனத்தை வைக்க,
அவனை சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தவள், அவனிடம் எந்த மாற்றமும் இன்றி அவனின் வேலையை பார்த்து கொண்டிருந்தான்.
“அப்போ உண்மையா தான் சொல்லுறிங்கங்களா…” என அவனை பார்த்து கேக்க,
” என்னனு சொன்னாதானே உண்மையா இல்லையான்னு சொல்ல முடியும்…” என அவன் திரும்பி கேக்க,
“சார் ப்ளீஸ்… என்னனு தான் சொல்லுங்களேன்… ஏன் இப்படி பண்ணுறீங்க…” என அவள் தினலறாக கேக்க,
” நேத்து ஒரு பையன்கிட்ட லவ் சொல்லிட்டு, நீ பாட்டுக்கு அடுத்து அதை பத்தி என்னனு கூட சொல்லாம போயிருக்க…” என அவன் குற்றம் சொல்ல,
அவனின் பேச்சை கேட்ட சிந்துவுக்கு, புசுபுசுவென கோவம் போங்க, “அப்போ… நான் சொன்னதை கேட்ருக்கீங்க… இருந்தும் ஒண்ணுமே கேக்காதது போல இருந்திருக்கிங்க…” என அவனை கேட்டவள்,
“நான் உங்களுக்கு தெரிஞ்சிருச்சா?… இல்லையான்னு? இப்போ வரைக்கும் யோசிச்சிட்டு இருக்கேன் தெரியுமா… நீங்க என்னை என்னனு நினைச்சிருப்பீங்கன்னு யோசிச்சிட்டு இருக்கேன்… நீங்க இப்போ வந்து இப்படி சொல்லுறீங்க…” என அவள் ஆதங்கமாக அவனிடம் சொன்னாள்.
“எதுக்கு நான் தெரிஞ்ச மாறி காமிச்சிக்கணும்… என்னமோ போறபோக்குல சொல்லுற போல நீ சொல்லுவ… நான் உங்கிட்ட என்ன?, எவடன்னு? கேட்டுட்டு நிக்கணுமோ…” என எதிர்கேள்வி கேட்டான் காக்கி.
“ஏன் நீங்க இப்படி பண்ணுறீங்க…” என முகத்தை சுருக்கி கேக்க,
சிந்து, “நீங்க இப்படியெல்லாம் பேசாதிங்கன்னு சொன்னேன் தானே உங்ககிட்ட நேத்திக்கே…”
“நானும் தான் சொன்னேன்… நீ சொன்னதை கேக்க முடியாதுன்னு…” என அவனும் சரிக்கு சரி பேச,
அவனிடம் வாதிட முடியாமல், “என்னதான் வேணும் உங்களுக்கு…” என படிந்து கேக்க,
“நீ பாட்டுக்கு சொல்லிட்டு போயிட்ட… உன்னால எனக்கு அடுத்து என்னனு யோசிச்சே தூக்கம் போய்டுச்சே… நம்மால ஒரு பொண்ணு லைப் போனதா இருக்க கூடாதுனு…” என சொல்லி பாதியில் நிறுத்தி அவளை பார்க்க,
அவளோ பதட்டத்துடன் அவனையே பார்க்க,
வரவிருந்த சிரிப்பை வாய்க்குள் அடக்கிய படி, ” நாம விரும்புறதை விட, நம்மல விரும்ப பொண்ணு கிடைச்சா வரமாமே… அதான் நானும் என்னோட மைண்ட் செட்டை மாத்திட்டு, உன்னையே கல்யாணம் பண்ணிட்டு அந்த வரம் கிடைக்க யோசிச்சிட்டேன்…” என சொல்லி முடித்தான்.
விழிகள் ரெண்டும் வெளியே விழிந்திடும் அளவிற்கு, அவனை விழி விரித்து பார்த்தாள் சிந்து.
“என்ன உனக்கு ஒகே தானே…” என அவளின் கண்களை ஆழ்ந்து பார்த்துக்கொண்டே அவன் கேக்க,
அவளின் மூளை யோசிப்பதற்குள், அவளின் மனதோ, மூளை சொல்வதை கேக்காமல் நங்கையின் மண்டையை ஆம் என்ற ரீதியில் ரீங்காரமாய் ஆட்டியது.
“சரி… அப்போ நாளைக்கு ஈவினிங் ரெடி ஆஹ் இரு… உன்னைய ஒரு ஸ்பெஷல் பிளேஸ் கூட்டிட்டு போறேன்…” என சொல்லிக்கொண்டே எழுந்து அவளிடம் வந்தவன், கன்னத்தை தட்டிவிட்டு சிரித்துக்கொண்டே வெளியேறினான்.
அவனின் பேச்சே இன்னும் புரிந்தும் புரியாமல் இருக்க, பெண்ணவளிற்கு மயக்கம் வருவது போன்று இருந்தது அவனது இந்த அதிரடி செயல்…