போனை கட் செய்து கீழே வைத்து விட்டு, தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள் சிந்து.
போன் பேச ஆரம்பித்ததிலிருந்து அவளையே பார்த்திருந்த வித்யுவோ, “என்ன சிந்து?… என்ன சொல்லு…” என கவலையாக கேக்க,
சிந்துவிடம் மௌனமே,
“இவளை என்னனு நினைச்சி தான் இவ வீட்டுல பெத்தாங்கண்ணே தெரியல… ஏற்கனவே வேலை வேலைன்னு ஓடிட்டு தான் இருக்கா… இவளுக்குன்னு ஒத்த பைசா எடுத்துக்காம, தொடச்சி எடுத்து எல்லாத்தையும் குடுக்குறா… இன்னும் இவ என்னதான்னு பண்ணணுமோ…” என அவளை பாவமாக வித்யு பார்க்க,
சிந்துவிடம் அசைவே இல்லை…
தோழியின் இந்த நிலை வருத்தமளிக்க, அவளின் முகத்தை நிமிர்த்தி, “என்ன இப்போ புதுசா?… எதுக்கு இந்த சோகம்…?” என அவளிடம் பேச்சுகுடுக்க,
“என் தங்கச்சி மாசமா இருக்கலாம்…” என சிந்து சொல்ல,
“சரி இருந்துட்டு போட்டும்… அதுக்கு என்ன…” என வித்யுவும் பேச,
சிந்து, “அவளை வீட்டுக்கு அழைக்குறாங்களாம்… அதுக்கு பணம் வச்சி குடுத்து அழைக்கணுமாம்… அதான்…”
“இது என்னடி புதுசா இருக்கு… எந்த ஊருல வழக்கமாம் இது…” என வாயில் கைவைத்து கேக்க,
“யாருக்கு தெரியும்…” என பதில் சொல்ல,
“என்னவோ இருந்துட்டு போகட்டும்… நீ என்ன சொன்ன அதுக்கு…” என வித்யு அவளை பார்த்து கேக்க,
“சொல்றதை கேட்டுக்கிட்டேன்…” என முடித்தாள் சிந்து.
“ஏண்டி நீ இப்படி இருக்குற… உனக்கு முன்னவே கல்யாணம் பண்ணிக்கிட்டதும் இல்லாம, இப்போ உன் வீட்டுக்கே வந்து உக்காந்துகிட்டு சொகுசா இருக்குறதுக்கு நீ சம்பாரிச்சி போடணுமா… இது எங்கயாவது அடுக்குமா…” என வித்யா திட்ட,
சிந்து, “பச்… விடு வித்யு…” என்றாள் சலிப்பாக.
“என்னத்தடி விட சொல்லுற… நீ இப்படியே உங்க வீட்டுல சொல்றதுக்கெல்லாம் நல்லா மண்டையை ஆட்டுனேன்னு வை… உன்னைய எங்காவது விக்குறதுகூட யோசிக்கமாட்டாங்க… சொல்லிட்டேன் இப்போவே…” என வித்யு கடுப்பாக தோழியை பேச,
சிந்து அவளின் பேச்சில் அமைதியாக,
“நீ இப்படி எல்லாத்துக்கும் அமைதியா போறதுனால தான், எல்லாத்தையும் உன் தலையில கட்டிட்டு அவங்க எல்லாம் சொகுசா இருக்காங்க… ஆனா உனக்கு இந்த ஆண்டவன் இப்படியொரு குடும்பத்தை குடுத்துருக்கவே வேணாம் போல…” என சொன்னாள் வித்யு ஆற்றாமையாக,
தோழியின் ஆதங்கமாக பேச்சில், முகம் வாடாமல் மென்மையாக சிந்து சிரிக்க,
“சிரிக்காதடி… நீ எப்படி இப்படி இருக்கடி… உன் அண்ணன்காரன் எங்க எல்லாம் நம்ம தலைல விடிஞ்சிடுமோன்னு அவன் பொழப்பைப்பாத்துட்டு ஓடிட்டான்… உன் தங்கச்சிக்காரி, எங்க இருக்குற நகையை உனக்கு போட்டுடுவாங்களோன்னு உஷாரா அவ எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு, உனக்கு முன்னவே கல்யாணத்தை பண்ணி, சொகுசா வாழுறா… உங்க அப்பா தான் எதோ கொஞ்சம் உருப்படியா இருந்தாரு, எப்போ நீ அவரை விட நிறைய சம்பாரிக்குறன்னு தெரிஞ்சதோ, அப்போ இருந்து உன் முகத்தை கூட பாக்காத சுத்துறாரு… உன் அம்மாவை பத்தி சொல்லவே வேணாம், காசு இருந்த மட்டும் போதும்… இப்படி எல்லாரும் அவங்கவங்க சுயநலமா இருக்காங்க… நீ மட்டும் எதுக்குடி அப்பறம் இவ்வளோ பெரிய தியாக செம்மல்லா இருக்க…” என தோழியின் நிலையை பார்த்து வெடிக்க,
தோழி தன் குடும்பத்தை பற்றி புட்டுப்புட்டு வைக்க, சுருக்கென்று தைக்க தான் செய்தது… இருந்தும் அவள் சொல்லிய அனைத்தும் நூறு சதவீதம் உண்மையே…
சிந்துவின் அப்பா முருகேசன் ஒரு மெக்கானிக். தாய் வேணி இல்லத்தரசரி. நடுத்தர வர்க்கத்திற்கும் கீழே தான் இவர்களின் இருப்பு. சிந்து முதுகலை படிப்பு முடிந்த சமயம், அவளுக்கு மாப்பிளை பார்ப்பதற்காக ஏற்படாக, வீட்டின் சுமை எங்கே தன் தலையில் விடிந்துவிடுமோ என்று, அவளின் அண்ணன் கார்த்திகேயன் வீட்டை விட்டு வெளியேற, சிந்துவோ வீட்டின் நிலையை எண்ணி கொஞ்ச நாள் வேலைக்கு சென்று அதற்கடுத்து திருமணத்திற்கு பார்க்கலாமென்று வீட்டில் பேச, அவளின் தாய், அதில் அகமகிந்து போயி உடனே அவளிற்கு பச்சை கொடி காட்ட, அதற்கடுத்து அவள் பணம் சம்பாரித்துக்கொடுக்கும் இயந்திரமாக மாற்றப்பட்டாள் அம்மாவினால்.
அவர்கள் ஊருக்கு அருகில் இருந்த கரூரில் உள்ள ஒரு பள்ளியில் வேலைசெய்ய, அடுத்த சில மாதத்திற்குள் சிந்துவின் தங்கையான பூஜா, தான் ஒரு பையனை விரும்புவதாகவும், அவருடன் எனக்கு கல்யாணம் செய்யாவிட்டால், தான் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டினாள்.
சிந்து தான் பெற்றோர்களிடம் பேசி, கடனை வாங்கி, அவளுக்கென்ன இருந்த சொற்ப நகைகளையும் தங்கைக்கே குடுத்து திருமணத்தை நடத்தியும் முடித்தாள்.
ஆகமொத்தம் அவளே அவளின் தலையில் பெரிய சுமையாய் சுமக்க, குடும்பத்தினர் அவளின் தலையில் ஏற்றிவிட்டு, இங்கே அவர்கள் சுகமாக வாழுகின்றனர்.
கல்யாணம் முடிந்து சில நாட்கள் சென்று, தங்கையும் அவளைடைய கணவனும் வீட்டிற்கு வர, நல்லபடியாக உபசரிப்பு நடந்துகொண்டிருக்க, இயல்பாக பூஜாவின் கணவரான கிஷோர், சிந்துவிடம் பேச… இதை பார்த்த பூஜாவோ, நேராக தாயிடம் சென்று தன் கணவனை இழுத்து வைத்து பேசுவதாக குறை சொல்லி, சிந்துவின் நடத்தையை தப்பாக பேச, அதை கேட்ட தாயும் சிந்துவிடம் என்னவென்று கூட கேக்காமல் அவளை தகாத வார்த்தைகளால் தினமும் பேச ஆரம்பித்தார்.
இதனை காது கொடுத்து கேக்க முடியாமல், வெளியில் வேலைக்கு போவதாக சிந்து வீட்டில் சொல்ல, இதற்க்கு சிந்துவின் அம்மாவோ என்ன உன் அண்ணனை மாறி நீயும் ஓடப்போறியா, உன்னைய எதுக்கு அப்பறம் வளத்து, படிக்க வச்சிருக்கேன் என பேசி, வேலைக்கு மட்டும் தான் செல்கிறேன்… மாதா மாதம் பணம் வீட்டிற்கு அனுப்புவேன் என சூடத்தில் சத்தியம் வாங்கி அனுப்பி வைத்தார் சிந்துவின் தாய்.
அன்று வீட்டை விட்டு வந்ததிலிருந்து, இன்று வரை அவள் வீட்டிற்கு செல்லவில்லை. தீபாவளி, பொங்கல் என விசேஷ நாட்களுக்கு கூட அவள் வீட்டிற்கு செல்ல பிரியப்படவில்லை. எங்கே தங்கையும், தாயும் இன்னும் நம்மை தூற்றி பேசுவதற்கு பதில், இங்கயே இருந்துவிடலாம் என்ற எண்ணம்.
இதனையெல்லாம் யோசித்து சிலையென அவள் அமர்ந்திருக்க, வித்யுவோ, தான் தோழியிடம் ஆதங்கமாக பேசுவதாக எண்ணி அவளின் குடும்பத்தை அனாவசியமாக பேசிவிட்டோமோ, அதனால் தோழி வருத்தவாக நினைத்து, “சாரி சாரி சிந்து… நான் வேணும்னு பேசலடி… உங்க வீட்டுல உன்னை பணம் சம்பாரிக்குற மெஷினை போல வச்சிருக்காங்கன்னு ஆத்தமாட்டாம பேசிட்டேன் சிந்து… ப்ளீஸ்டி நீ இப்படி இருக்காதா… நான்… நான்…” என நண்பிக்கு தன்னை தெரியவைக்கும் பொருட்டு பதட்டமாக பேச,
சிந்து, “எனக்கு குடும்பம் சரியாய் அமையலன்னு தான்… உன்ன போல ஒரு நல்ல பிரெண்டை கடவுள் எனக்கு குடுத்துருக்கான்… எல்லாத்துக்கும் ஒரு கரணம் இருக்கும் வித்யு… அதுமாறி நீ எனக்காக தான் பேசுனேன்னு, எனக்கு புரியாம இருக்குமா என்ன… சோ, நீ ரொம்ப யோசிக்காத…” என்றாள் நிதானமாக,
தோழியின் பேச்சில் அவளை வந்து அணைத்துக்கொண்டாள் வித்யு.
“கண்டிப்பா உனக்கு ஒரு நல்ல பையனா கடவுள் உனக்கு அமைச்சுக்குடுப்பான் சிந்து…” என உளமார சொல்ல,
“கல்யாணம் ஆகும்னு சொல்லுற…” என சிந்து எதிர் கேள்வி கேக்க,
சிந்துவிற்கு தோழியின் அக்கறையில் கண்கள் கலங்குவது போல் இருக்க, கண்களை சிமிட்டி கலங்குவதை மறைக்க பார்க்க, அவளின் அலைபேசி ஒலி எழுப்பியது.
திரையில் தெரிந்த தங்கையின் என்னை பார்க்கவும், இதன்னை நாளாக அம்மாவின் மூலமாக காரியம் சாதிப்பவள், இன்று தன்னை அழைக்கிறாள் என யோசித்து அட்டென்ட் செய்ய,
“என்ன பணம் அனுப்புறேன்னு கூட சொல்லலையாமே நீ அம்மா கேட்டதுக்கு… வெளில போயி கை நிறைய சம்பாரிக்குற திமிரா?…” என பூஜா அதிகாரமாய் பேச,
வித்யு பேசின தாக்கமோ என்னவோ, “சம்பாரிக்குற எனக்கு திமிரு இருக்கலாம் தானே…” என சிந்து, தங்கையிடம் எதிர்த்து பேசி விட,
தோழியின் பேச்சை கேட்ட வித்யாவோ, “அப்படிதான் இன்னும் பேசு…” என சைகையில் உணர்த்தினாள் மகிழ்ச்சியாக.
“என்ன வெளில வேலைக்கு போனதும் வாயெல்லாம் ரொம்ப துளுத்துருச்சி போல… அம்மாகிட்ட சொல்லி வெட்ட சொல்லுறேன்… அப்பறம் எப்படி பேசுறேன்னு நானும் பாக்குறேன்…” என இன்னும் திமிராக பேச,
“அப்போ உனக்கு பணம் கொடுக்கமாட்டேன்…” என சிந்துவும் விடாமல் கோவமாக பேச,
“நீ குடுக்கலன்னா என்ன.. எனக்கு எப்படி வாங்கணும்னு தெரியும்… நான் மாசமா வேற இருக்கேன்… அது ஒன்னு போதும்… எப்படி வசதி பாத்தியா எனக்கு…” என பூஜா குரோதமாக இன்னுமின்னும் பேச,
தங்கையின் இரக்கமற்ற பேச்சில், கண்ணை கரித்துக்கொண்டு வந்தது… அதனை கட்டுப்படுத்திக்கொண்டு, “உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா?… இப்படியெல்லாமா பேசுவ…” என குரல் உடைய கேக்க,
“எனக்கு வேணும்னா நான் என்னவேனும்னாலும் பண்ணுவேன்… நீ காசு ரெடி பண்ணி அனுப்பிவைக்கிற…” என இரக்கமில்லாமல் பேசி வைத்தாள் பூஜா.
தங்கையின் சுயநலமா பேச்சு, அதுவும் பிறக்காத சிசுவை பயன்படுத்தி காரியம் சாதிக்க நினைக்கும் அவளை எண்ணி மனது கொதித்தது.
அவளின் நிலையை பார்த்த வித்யாவோ, “என்ன சிந்து?…” என கேட்டு அவளை கலைக்க,
சிந்து, “ஹான்… இப்போ என் தங்கச்சி பேசுனா… அடுத்து இவ விஷம் தடவிய பேச்சை கேட்டு, எங்க அம்மா இன்னும் பாம்பா கொத்தி பேசுவாங்க…” என விரக்தியாக சொல்லி முடித்தாள்.
வித்யு, “இப்படி உன்னை பேசுறவங்களுக்கு தான் நீ இன்னமும் பண்ணிட்டு இருக்க…” என ஆதங்கமாக சொல்ல,
சிந்து, “நான் அவங்க கிடையாதே… அதனால தான்…”
வித்யு, “இவ்வளோ நல்லவளா இருக்காதா சிந்து… அவங்களுக்கான உலகம் நிச்சயம் இது கிடையாது… இது உனக்கும் நல்லாவே தெரியும்…”
சிந்து, “ரொம்ப சரி வித்யு… ஆனா பாரேன்… என்னால இன்னும் எல்லாத்தையும் தூக்கிப்போட்டது வர முடியல… பட் இப்படியே இருக்கமாட்டேன்னு மட்டும் மனசு இப்போல்லாம் அடிக்கடி சொல்லிட்டே இருக்கு…”
“அதான் உன் மனசு சொல்லுதுல்ல… அதை ஒரு தடவையாது கேட்டுத்தொலை டி…” என்றாள் வித்யு கோவமாக,
சிந்து, “இன்னும் எவ்வளோ தூரம் போகுதுன்னு பாக்கும்…”
வித்யு, “இந்த தத்துவ முனிவரம்மா எல்லாம் நீ ஒன்னும் ஆகி கிழிக்க வேணாம்… ஒழுங்கு மரியாதையா அவங்களை தூரப்போட்டு, நீ உன்னைய மட்டும் பாரு… உனக்கு நான் இருக்கேன்…” என சொன்னாள் கையை பிடித்துக்கொண்டு.
தோழியின் பேச்சில் இதழ்கள் சிரிப்பை காமிக்க, அப்போது சிந்துவின் அலைபேசி மீண்டும் இசைத்து தன் இருப்பை காட்டியது.
வித்யு, “வேணாம் சிந்து… போனை எடுக்காத… எப்படியும் உன்னை அவங்க உன்னை நல்லமாறியா பேச மாட்டாங்க…” என அறிவுறுத்த,
“எடுக்கலைன்னா இங்க வந்து பேசுறதுக்கு கூட தயங்க மாட்டாங்க… அதுக்கு இதுவே பரவால்ல… பேச்சு தானே வாங்கிட்டு போறேன்…” என தோழியிடம் சொல்லிக்கொண்டே போனை எடுத்தாள் சிந்து.
சிந்து, “சொல்லுங்க அம்மா…” என்றாள் அமைதியாக,
“மாசமா இருக்குற பொண்ணுகிட்ட, என்னனெல்லாம் பேசியிருக்க நீ… அவ நல்லா இருக்கறதை பாத்து இப்படியா வயிறு எரிவ… நீயெல்லாம் என்ன பொண்ணோ, தங்கச்சிகிட்டயே இவ்வளோ பொறாமை படுற…” என இன்னும் வாய்க்கு வந்ததையெல்லாம் பேச,
கேட்க கூடாது என நினைத்திருந்த விஷயம், அம்மாவின் பேச்சில் வெளியே வந்தது.
“நீங்க என்னோட அம்மா தானே…” என சிந்து பொறுமையாக கேக்க,
“ஏய்… என்ன சம்பாரிக்குற திமிரா… என்னையவே பேசுவியா?…” என அவளின் அம்மா அங்கே எகிறி பேச,
தாயின் பேச்சில் வெறுத்து போயி, எதுவுமே பேச தோன்றாமல், “உங்களுக்கு நான் பண்ணுன சத்தியத்தை மீறாம தான் இருக்கேன்… இப்படி பேசி என்னை மீற வைக்க வேணாம்…” என பட்டென்று சொல்லிவிட்டு போனை வைத்தாள் சிந்து.
வித்யுவோ தோழியின் கையை அழுத்தி பிடித்துகொண்டாள்.
சிந்து, “நான் அவங்களுக்கு தான் பிறந்தென்னான்னு இப்போல்லாம் என்னை ரொம்ப யோசிக்க வைக்குறாங்க வித்யு… நான் இன்னும் எவ்வளோ தாங்குவேன்னு தெரியல…”
“மொத்தமா ஒரு நாள் நீ வெடிக்க தான் போற… அன்னைக்கு இருக்கு அவர்களுக்கெல்லாம்…” என வித்யுவும் பதில் பேச,
சிந்து, “ம்… என்னமோ போ…”
“பச்… இந்த மாசம் சம்பளம் வந்ததும் கண்டிப்பா குடுத்துடுவேன்னு சொல்லிட்டு வந்தேன் அந்த போலீஸ் சார் கிட்ட… அதும் முடியல… அதுக்கப்பறம் நான் தர முடியலைன்னு சொல்ல கூட இல்ல வித்யு… என்னை என்ன யோசிச்சிருப்பாங்க… இப்படி நானே ஜம்பமா தரேன்னு சொல்லி இப்படி இழுத்தடிக்குறேன்…” என பாவமாக சொன்னாள்.
“அதுனால என்ன இப்போ போன் பண்ணி உன்னிலையை சொல்லு…” என ஐடியா தந்தாள் தோழி.
———
இரவு ஒன்பதரை மணி, மழை வெளியே இடியுடன் பெய்ய, அந்த காவல் நிலையத்திலும் ஒரு குரல் இடியாய் அலறியது.
“சார்… சார்… வேணாம் சார்… விட்ருங்க சார்…” என ஒருவன் கெஞ்ச, அவனின் கெஞ்சலையெல்லாம் இவன் காதிலே ஏறாமல், லத்தியால் வலிக்க வலிக்க அடித்தான் அவன்.
“அந்த மொளகா பொடியை இவனுக்கு ரத்தம் வர இடத்துல எல்லாம் தடவுங்க…” என அங்கிருந்த இரவு நேர பணிக்கான ஒரு காவலரிடம் உத்தரவிட்டான் ஏஎஸ்பி விஷ்ணு பிரசாத்.
“சார் சார்… வேணாம் சார்… இனிமே இப்படி பண்ணமாட்டேன் சார்…” என அந்த திருடன் கதற,
“ரெண்டு நாளா ஆட்டம் காட்டினல்ல… அதுக்கு என்னோட பரிசு… என்ஜோய் பண்ணனும்… இப்படி சத்தம் போட கூடாது…” என அவனிடம் சொல்லிவிட்டு, காவலரிடம் கண்ணை காட்டிவிட்டு வெளியேறினான்.
“ஏன்டா இவருகிட்ட வந்து மாட்டுன… உனக்கு இதெல்லாம் தேவையா… இதை பூசிவிட்டு, அடுத்தும் வந்து வெளுப்பாரு… வாங்கிக்கோ…” என அந்த காவலர் சொல்ல,
“என்ன மோகன் இன்னுமா பூசல…” என கேட்டுக்கொண்டு வந்துவிட்டான் மீண்டும் அவ்விடத்திற்கு விஷ்ணு.
“சார்… இதோ…” என பதறி சொல்லிக்கொண்டே, அவனிடம் செல்ல,
மிளகாய் தூளை ஒரு கைக்கொள்ளா அளவிற்கு எடுத்துவந்து திருடனின் வாயில் அடைத்தான் விஷ்ணு.
“ரெண்டு நாளா உண்மையை சொல்லாம ஆட்டம் காமிச்சல்ல… அதுக்கு தான்… எப்படி செம ருசியா இருக்குல்ல…” என அவனிடம் கேட்டுவிட்டுட்டு,
“எங்க இன்னொருத்தன்… அவனை புடிச்சிட்டு வாங்க…” என அவன் மோகனிடம் சொல்ல,
“சார் போன்…” என வந்தார் ஓட்டுநர் குமார்.
“வைங்க ண்ணா… வந்து பேசிக்குறேன்…” என விஷ்ணு சொல்ல,
“இல்ல சார்… ரெண்டு மூணு தடவை வந்துட்டு…” என அவர் பவ்யமாக சொல்ல,
“பச்…” என சலித்து, அங்கிருந்த இன்னொரு காவலரிடம் அவனுக்கு மொளகாப்பொடி பூசி வைங்க… நான் வரேன்…” என சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியே செல்ல,
குமார் அவனின் பின்னோடு வர, நீங்க அவனை பாருங்க என அவரிடம் சொல்லிவிட்டு ஜீப்பிற்கு சென்று போனை எடுத்தான்.
போனில் வந்திருந்த நம்பரை பார்த்த அவன், “இவ என்னடா ரெண்டு வாரம் தலைமறைவாகி அப்பறம் வெளியே வந்து இம்சை பண்ணுறா…” என திட்ட,
அவளிடமிருந்து போன் மீண்டும் வந்தது.
அவன் அதை அட்டென்ட் செய்து, வழக்கமான “விஷ்ணு பிரசாத் ஏஎஸ்பி” என சொல்ல,
“சார்…” என தயங்கி அவனை அழைக்க,
“யாரு…” என கேட்டான் யாரென தெரிந்தும்,
“சார்… என்னை தெரியலையா… நான்… சிந்து… சிந்துஜா…” என அவள் சுணங்கி பதில் சொல்ல,
“ஆஹ்… நீயா சொல்லு… எதுக்கு இவ்வளோ முறை கூப்டருக்க… உங்கிட்ட நான் ஆல்ரெடி சொல்லிருக்கேன் தானே…” என அழுத்தமான குரலில் சொல்ல,
“சார் சார்… ப்ளீஸ்… நீங்க கோவமா பேச வேணாம்…” என அவசரமாய் சொல்ல,
“இந்த ஆரம்பிச்சிட்டா டா…” என மனதில் நினைத்து அமைதியாக,
“சார் சார்… இருக்கிங்களா?…” என அந்த பக்கத்தில் அவள் கேட்க,
“இது கதைக்காகாது…” என முடிவு செய்து, “இங்க பாரு… எனக்கு எதுக்கு இப்போ கால் பண்ணுன… அதும் இத்தனை மணிக்கு…” என அவன் கறாராக கேக்க,
“இந்த டைம் தான் நீங்க பிரீ ஆஹ் இருப்பீங்கன்னு கால் பண்ணுனேன்…” என பதில் தந்தாள்.
விஷ்ணு, “வெல்… அவ்வளோ தெரியுமா என்னை பத்தி…”
அவள் அமைதி காக்க,
“பேசு… உனக்கு என்ன வேணும்… எதுக்கு இப்படி அப்போப்போ கால் பண்ணி இம்சை பண்ணுற…” என அவன் பேச,
“சார் உங்க பணம்…” என அவள் சொல்ல,
“எனக்கு அந்த பணமே வேணாம் தாயே… தயவு செய்து இனிமே பணம் தரேன்னு சொல்லி எனக்கு கால் பண்ணாத…” என அவளிடம் எரிச்சலாக சொல்ல,
“இல்ல சார்…எங்க வீடு சூழ்நிலை சரியில்ல… அதுனால இப்படி லேட் ஆகுது… நான் கண்டிப்பா கொடுத்துவேன்…” என அவள் பதில் தர,
“உங்க வீடு எப்படி எனக்கு தெரிய வேணாம்… நீ அன்னைக்கு நானே சொல்லிடுறேன் சொல்லும் போதே எனக்கு கெஸ் இருந்துச்சி… நானா பணம் கேக்கல… நீயா தான் தரேன்னு சொன்ன… ஆனா இப்போ நானே சொல்லுறேன், கண்டிப்பா உன் பணம் எனக்கு வேணாம்… இனிமே எனக்கு காலும் பண்ணாத, கண்ணுலயும் படாத… காட் இட்?…” என அவன் தோரணையாக சொல்ல,
“இல்ல இல்ல… நான்…” என அவள் பேச வர,
“போனை வைடி… வெள்ளெரிக்கா…” என கடுப்புடன் போனை கட் செய்து, உள்ளே வர,
அந்த கைதியோ இவனை பார்த்ததும் பம்பி, காவலரின் பின்னால் மறைய,
கடுப்புடன் உள்ளே வந்த விஷ்ணுவோ, லத்தி இல்லாமலே அவனை பிரட்டி எடுத்துவிட்டான்.