“முதல்ல நீ இதை பண்ணிகுடுப்பா… ஏற்கனவே லேட்…” என பதில் சொல்லி முடிக்க, அவரின் அலைபேசி ஒலித்தது.
அதை பார்த்து, நெத்தியில் உள்ள வேர்வையை துடைத்துக்கொண்டே, அட்டென்ட் செய்து “சார்…” என அழைக்க,
மறுமுனையில் இருந்த விஷ்ணுவோ, “குமார் அண்ணா… நீங்க அப்படியே நிதானமா உங்க வேலையை பாருங்க… நான் அப்படியே நடந்து கமிஷனர் ஆபீஸ் போயிடுறேன்…”
“இந்தா பத்து நிமிஷம் சார்… வந்துட்டேன்…” என அவசரமாக சொல்ல,
“ஒன்னும் அவசரமில்ல… நீங்க பொறுமையாவே வாங்க…” என்று சொல்லி வைத்தான்.
அவனின் பதிலை கேட்ட குமாரோ “இன்னைக்குனு இப்படியா ஆகணும்… மனுஷன் என்ன தொனில பேசுறாருன்னு கூட தெரியமாட்டுதே…” என புலம்பலாக சொல்லி, மேலும் சில நிமிடங்கள் கடந்து, ஒரு வழியாக வாகனத்தை எடுத்து கொண்டு புறப்பட்டு, விஷ்ணு சொன்ன ஸ்பாட்டிற்கு அடுத்த அரைமணி நேரத்தில் வந்து சேர்ந்திருந்தார்.
“என்ன குமார் அண்ணா… ரொம்ப சீக்கரம் வந்துட்டீங்க போல…” என வாகனத்தில் ஏறி அமர்ந்துகொண்டு கேட்க,
“இல்லிங்க தம்பி… அது…” என அவர் இழுக்க,
(வண்டியில் இருக்கும் சமயத்தில் மட்டும் தம்பி என்று அழைப்பார் குமார். மற்றபடி அவனின் பதவிக்கு மதிப்பளித்து சார் என்று தான் வரும்.)
“அதுன்னு இன்னும் இழுத்துட்டு தான் இருக்கீங்க… அடுத்து சரணம் இன்னும் வரலையே…” என விஷ்ணு கேக்க,
“தம்பி…” என சொல்லி பாவமாக பார்த்தார் குமார்.
“பத்தலையே… இன்னும் உங்க கிட்ட எதிர்பாக்குறேன்…” என அவன் அசால்ட்டாக இன்னும் பேச,
“எங்க போகட்டும்ங்க சார்…” என அவர் உஷாராகி மாற்றி கேக்க,
“தியேட்டர்க்கு விடுங்க… ஒரு படம் பாத்துட்டு வருவோம்…” என சலிக்காமல் பதில் சொல்ல,
விளக்கெண்ணெய் குடித்தது போல மூஞ்சியை வைத்து அவனை பார்க்க,
விஷ்ணு, “என்ன படம் பாக்க வேணாமா?… அதுக்கேன் இப்படி மூஞ்சியை வச்சிருக்கீங்க… வேணும்னா அப்போ ஷாப்பிங் போவோமா?…”
வேகமாக இல்லை என்பது போல மண்டையை ஆட்டினார் குமார்.
“என்ன அண்ணா… மண்டை மட்டும் வேகமா ஆடுது… ட்ரீட்மெண்ட் பாக்கணுமா?…” என இன்னும் அசராமல் விஷ்ணு கேக்க,
இதற்கு மேல் முடியாது என என்பதை சொல்லும் விதமாக, “விட்ருங்க தம்பி என்னைய… டயர் பழுதை பாக்காம விட்டுட்டேன்… தப்பு தான்…” என அவராகவே சரணடைய,
விஷ்ணு, “அது தான் எனக்கு தெரியுமே…” என்றான் கூலாக,
“இப்போ நான் என்னனு சமளிக்குறதுன்னு கூட தெரியலையே…” என மனதில் நொந்துகொண்டு, முழி பிதுங்கி அவனை இன்னும் பாவமாக பார்க்க,
“உங்க மைண்ட் வாய்ஸ்க்கும், உங்க முழிக்கும் மேட்ச் ஆகலையே…” என கேட்டு இன்னும் அவரை படுத்தி வைக்க,
“தம்பி… நான்… நான் ஒண்ணுமே நினைக்கலைங்க தம்பி…” என கதறாத குறையாக குமார் அவசரமாக இடையீட,
“ரைட்டு… இப்போ தான் ரொம்ப சந்தேகமா இருக்கு… உங்க மைண்ட் வாய்ஸ் என்னனு சொல்லணும்… இல்லனா வண்டியை ஒழுங்கா பராமரிக்குலன்னு சொல்லி ரெண்டு நாள் சஸ்பெண்ட் பண்ணிடுவேன்…” என விஷ்ணு சீரியஸ் ஆகா சொல்ல,
அவனின் பேச்சில் பயந்து, “தம்…பி…” என பதறி அழைத்து, அவர் நினைத்ததை சொல்ல வர,
அதற்குள் “சார்…” என அழைத்துக்கொண்டு ஒரு இன்ஸ்பெக்டர் வந்து, குமாரை காப்பாற்றினான்.
“சொல்லுங்க கனகவேல்… அந்த எம். எல். ஏ, அல்லக்கை எங்கன்னு தெரிஞ்சிதா…” என விஷ்ணு விசாரிக்க,
“எஸ் சார்… இங்க கிணத்துக்கடவு கிட்ட உள்ள ஒரு கிராமத்துல மறஞ்சி இருக்கறதா தகவல் வந்திருக்கு சார்… அங்க உள்ள இன்ஸ்பெக்டர்க்கு இன்போர்ம் பண்ணியாச்சு சார்… அவங்க ரவுண்டு அப் பண்ணிடுவாங்க சார்…” என தகவலை பகிர்ந்தான்.
விஷ்ணு, “ஒகே… இன்னும் எவ்வளோ மணி நேரம் ஆகும்…”
“ஒரு ரெண்டு மணிக்குள்ள, எல்லா டீடெயில்ஸ்யும் உங்களுக்கு வந்துரும் சார் வித் அந்த ஆளோட…” என்ற சொன்னான் நம்பிக்கையாக,
“ஆல்ரைட்… நான் அப்போ கமிஷனர் கிட்ட பேசிடுறேன்…” என அவனிடம் சொல்லி, “அந்த எம். எல். ஏ க்கு இருக்கு…” என மெதுவாக முணுமுணுத்தான் விஷ்ணு.
“சார் பைல்…” என சொல்லி ஒரு கோப்பையை நீட்ட,
“அதை பெற்றுக்கொண்டு… அந்த எம். எல். ஏ மேல ஒரு கண்ணு வச்சிட்டே இருங்க… எங்க போறாருன்னு… ஒரு காட்டு காட்டணும்… வேலை இல்லாம இருக்கோம்னு நினைப்பு போல… இருக்கட்டும்…” என விஷ்ணு இன்ஸ்பெக்டரிடம் சொல்ல,
“ஒகே சார்…” என பதில் சொன்னார் கனகவேல்.
“ஒகே… நீங்க மட்டும் இன்வோல்வ் ஆகுங்க… வேற யாருக்கும் விஷயம் வெளில தெரிய வேணாம்…” என விஷ்ணு அறிவியுறுத்த,
“ஒகே சார்…” என சொல்லி சல்யூட் வைத்தார் இன்ஸ்பெக்டர்.
அவரிற்கு தலையசைத்து விட்டு, “குமார் அண்ணா போலாம்…” என விஷ்ணு சொல்ல,
“சார் கமிஷனர் ஆபீஸ்க்கா…” என குமார் கேக்க,
“இல்ல கத்திரிக்கா வாங்குறதுக்கு…” என இடக்காக விஷ்ணு பதில் சொல்ல,
“இன்னைக்கு எனக்கு நேரமே சரியில்ல…” என முணுமுணுப்பாக சொல்லி, வண்டியை கிளப்பினார் குமார்.
கமிஷனர் ஆபீஸ் செல்லும் வழியில், ஒரு பேருந்து நிறுத்தத்தை கடந்து அவர்களின் வாகனம் பயணிக்க, “குமார் ண்ணா வண்டியை ஒரு ஓரமா நிறுத்துங்க…” என விஷ்ணு சொல்ல,
“என்னாச்சுங்க தம்பி…” என கேட்டுக்கொண்டே வாகனத்தை ஓரத்தில் நிறுத்தினார்.
சைடு மிரர் வழியாக அந்த பேருந்து நிறுத்தத்தை மீண்டும் பார்க்க, அங்கே சோக பதுமையாக நின்றிந்தருந்தாள் சிந்துஜா.
“இவ என்ன இப்படி நிக்குறா…” என யோசித்து, “எப்படியாது கண்ணுல மாட்டிடுறா… நேத்து தான் குடமிளகாய் கணக்கா காரமா பேசுனா… இன்னைக்கு என்ன இங்க இப்படி நிக்குறா…” என மெதுவாக முனகிக்கொண்டே, தன்னையே பார்த்துக்கொண்டு இருந்த குமாரை பார்த்து,
“அண்ணா… அந்த பஸ் ஸ்டாப்ல நிக்குற கிறீன் கலர் காட்டன் சாறி கட்டுன பொண்ணை இங்க கூட்டிட்டு வாங்க…” என அவன் சொல்ல,
“தம்பி… கமிஷனர் கிளம்பிடுவார்… சீக்கரம் போகணும்னு சொன்னிங்க…” என குமார் நினைவு படுத்த,
“அவருக்கு என்ன வேலையோ கிளம்புறாரு… நாம நம்ம வேலையை பாப்போம்…” என அவன் பதில் குடுக்க,
“சரிங்க தம்பி… நீங்க சொன்னா சரிதான்…” என சொல்லிக்கொண்டு சென்றார்.
“அன்னைக்கு ஓடி வந்த பொண்ணாச்சே…” என அந்த பொண்ணை பார்த்து அடையாளம் கண்டுகொண்ட குமார், அவளை அழைத்து வந்து விட்டுவிட்டு மீண்டும் அந்த பேருந்து நிறுத்தத்திற்கே சென்றார்.
கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றது அவளுக்கு… சொல்வதற்கு நா கூட எழாமல் தொண்டை அடைத்தது. என்ன செய்வது என தெரியாமல், பரிதவித்து நின்றிருந்தாள் அந்த பேருந்து நிறுத்தத்தில்…
இப்போது இவனை பார்த்ததும் தன்னால் ஒரு ஆசுவாசம் பிறக்க, கண்ணிலிருந்து நீர் நிற்காமல் வழிந்தோடியது.
அவளின் முகம் காட்டும் ஜாலங்களை கவனித்துக்கொண்டே, “எதுக்கு இங்க இப்படி நிக்குற… நீ இன்னும் அவிநாசி போலையா?…” என அவளை ஆழ்ந்து பார்த்து கேள்வியெழுப்பினான் விஷ்ணு.
அவனின் கேள்வியின் கண்ணில் இருந்து கண்ணீர் கொட்டி, அழுகை விம்மி வெடிக்க,
“ஏய்… என்ன ஆச்சு…” என அதட்டி, ” அழாம என்னனு சொல்லு…” என அவன் கேட்க,
“நான் இங்க ஒரு ப்ரோக்ராம் அட்டென்ட் பண்ணிட்டு வரும் போது… என்னோட பர்ஸ், போன் எல்லாம் தொலைஞ்சிட்டு பஸ்ல…” என அழுகையுடன் சொன்னாள் சிந்துஜா.
“சரி… அதுக்கேன் இங்க நிக்குற… யாராச்சும் வரேன்னு சொன்னாங்களா?…” என அவன் திரும்ப கேக்க,
அவனை கேள்வியாக அவள் பார்க்க,
“ஐ மீன்… உன்னோட பிரெண்ட்ஸ் யாரும் வர்றதுக்காக வெயிட் பண்ணுறியா?…” என விஷ்ணு தெளிவாக கேக்க,
அவள் தலையை மறுப்பாக அசைத்து, “பஸ் ரொம்ப கூட்டம்… என் பர்ஸ் அடிச்சிட்டு இறங்குறத, நான் பாத்தேன்… அதான் அவசரமா நானும் பஸ்ல இருந்து இறங்குனேன்… அதுக்குள்ள அந்த திருடுன லேடி வேற ஆட்டோல ஏறிட்டாங்க… என் கோலிக் அவங்க கிட்ட சொல்லாம இறங்கிட்டேன் அந்த லேடிய பிடிக்குற வேகத்துல…” என மூக்கை உறிஞ்சிக்கொண்டே சொல்ல,
“இவளை என்ன பண்ணலாம்…” என பல்லைக்கடித்து நினைத்து, “சரி தொலைஞ்சிதுன்னு தெரிஞ்ச உடனே அடுத்து என்னனு பாக்குறது இல்லையா?… இப்படி தொலைஞ்ச இடத்துலயே சோக கீதம் வாசிச்சா பர்ஸும், போனும் வந்திருமா?…” என அவன் பொறுமையை இழுத்து கேக்க,
அவள் என்ன சொல்வது என தெரியாமல் கண்ணீருடன் அவனை பாத்து,
“நான்… நான் உங்களுக்கு குடுக்க வேண்டிய பணமும் அதுல இருந்துச்சி… நேத்து நீங்க கேட்டதும் எடுத்து வச்சிட்டேன்…” என்றாள்.
“ஓ மை காட்… இவளை…” என மண்டையை இடவலமாக ஆட்டிவிட்டு, “இது சரிவராது…” என வாய் விட்டு சொல்லி, “குமார் அண்ணா…” என அவரை இங்கிருந்து கையை அசைத்து அழைக்க,
அவரும் அருகில் வந்து அவனை பார்க்க,
“ண்ணா… பர்ஸ் அண்ட் போன் மிஸ்ஸிங்… இங்க பக்கத்துல இருக்குற ஸ்டேஷன்ல, பிக் பாக்கெட் லிஸ்ட் கொஞ்சம் விசாரிச்சு என்னனு பாருங்க… அன்ஆஃபிசியல் ஆஹ் சொல்லுங்க…” என அவரிடம் கூறிவிட்டு,
“பர்ஸ்ல என்னலாம் வச்சிருந்த…” என அவன் கேள்வியெழுப்ப,
அவளும் பதில் சொல்ல,
அடுத்து போன் மாடல் என எல்லாவற்றையும் கேட்டு, குமாருடன் விசாரிக்க சொன்னான்.
“என்ன பேங்க் அக்கௌன்ட் வச்சிருக்க…” என அவளிடம் கேக்க,
அவள் அதற்க்கு பதில் சொல்ல,
அடுத்து அவனே பங்கிற்கு போன் செய்து குடுத்து, அக்கௌன்ட் பிளாக் செய்ய சொன்னான்.
“வேற கவர்ன்மெண்ட் ஐ. டி எல்லாத்தையும் காணும்னு சொல்லி லெட்டர் குடுத்து வாங்கி வச்சிக்கோ… இது கிடைக்கும்னு சொல்ல முடியாது…” என அவளிடம் தெளிவாக சொல்லி முடித்தான் காவல் அதிகாரி.
அவன் சொன்னதிற்கு எல்லாம் தலையை நன்றாக உருட்டினாள் பாவை.
அவளின் உருட்டலை பார்த்த விஷ்ணுவோ, “நல்லா மண்டைய மண்டைய ஆட்டாத… சோக பதுமையா உக்காந்திருந்தா ஒன்னும் ஆகாது… இப்படி தான் அடுத்து பாக்கணும்… புரிஞ்சிதா…” என அவன் பாடமெடுக்க,
அவனுடைய இந்த அணுகுமுறை, சுத்தமாக எதிர்பாக்காதவள், கொஞ்சம் வியப்பாக அவனை பார்த்து வைத்தாள்.