மீனாட்சி கொதித்து கொண்டு இருந்தார். தங்கள் மகளை பேசியதோடு தங்களையும் அவ்வளவு பேசி இருக்கிறார்கள், சும்மா விடுவதா… கணவரிடமும் சொல்லி விட்டார்,
“மூச்… இனி நீங்க வாய திறக்க கூடாது. என்னையும் வாய திறக்க கூடாதுன்னு சொல்ல கூடாது. நான் தான் பேசுவேன். நேத்து வாழ வந்த புள்ளையா என்னா பேச்சு பேசி புட்டா அந்த பொம்பளை. இத நாம சும்மா விட்டோம், நாளைக்கு யாரும் பேசுவாங்க… கண்டமாதிரி பேச தான் நான் புள்ளை பெத்து வச்ருக்கேன்னா?…” என்று அவேசமாக பேசிய மீனாட்சி.
“ நான் தான சீர் தர மாட்டேன்னு சொன்னேன். நானே பேசிக்கிறேன். நீங்க யாரும் தலையிட வேண்டாம். நான் அந்தம்மா கிட்ட பேசுறேன், அந்தம்மாவும் எங்கிட்ட பேசட்டும். பதில் நான் கொடுக்கிறேன். பொண்ண பெத்தவங்க இறங்கி போவாங்கன்னு நினைப்பு. அந்த காலமெல்லாம் மலையேறி போச்சு… நாட்டுல பொண்ணு கிடைக்காமல் அலையுறாங்க, இங்க தங்கசிலை மாதிரி பொண்ணை கட்டி கொடுத்தா, தேளா கொட்டுறாங்க…” என்று கோபம் குறையாமல் தான் மீனாட்சி பேசினார்.
“ ரைட்டு… இனி, நாட்டாமை டூ பங்காளி… பங்காளி டூ நாட்டாமை… சரிதான்!…” என்று மனதிலே மாமியாரை கலாய்த்து கொண்டிருந்தாள் ரம்யா. அவளும் அங்கு தான் நின்று இருந்தாள். அவளுக்கு நல்ல பொழுது போக்கு, ஆச்சரியமும் கூட.
“திருமணம் முடிந்த முதல் மூன்று மாதம் தான் பொற்காலம். எத்தகைய மாமியாராக இருந்தாலும் புது பெண் என்று தாங்க தான் செய்வார்கள். இங்கு என்னவென்றால் முழுதாக மூன்று மாதம் கூட முடிய வில்லை நீயா! நானா தான் நடந்து கொண்டிருக்கு…” என்று ரம்யாக்கும் ஆச்சர்யம் தான்.
மறுநாள் பரபரப்பாக விடிந்தது மதுமிதாக்கு. கரிகாலன் மேல் என்ன தான் நம்பிக்கை இருந்தாலும், கொஞ்சம் பயமும் கலந்து இருந்தது. அவன் தாயோடு மல்லுக்கு நின்றதற்கு தன் மீது வருத்தம் வரும் என்று தான் யோசித்தாள். தவிர, கோபமோ, இவர்கள் சொல்வது போல் வீட்டை வீட்டு வெளியேற்றுவான் என்று அவள் யோசனையாக கூட நினைக்க வில்லை. அந்த நம்பிக்கை கரிகாலன் மேல் மிகுந்து இருந்தது.
கருப்பாயி, காலை தான் வீடு வந்தார். அவர் முகமும் இறுகி கிடந்தது. மருமகளிடம் தோத்தது போல் ஒரு தோற்றம். அத்தனை சண்டையிலும் தான் வெளியேறினோம். ஆனால், அவள் இந்த வீட்டிலே நின்று விட்டாளே… இது தன் வீடா அல்லது அவள் வீடா… விடிய தொடங்கும் முன்னே வீடு வந்து விட்டார்.
எந்த காரணமும் இல்லாமல் வீடு, வாசல், பின் கட்டு என்று தண்ணீர் ஊற்றி மாங்கு மாங்கு என்று கழுவி கொண்டிருந்தார். மது ஒதுங்கி தான் நின்றாள். முதல் நாள் முகத்திற்கு நேர சண்டை போட்டாலும், இரவு வீடு வராதது, மதுக்கு ஒரு வித குன்றலை கொடுத்தது. அது அவர் பொருட்டு வந்ததில்லை, அவள் பொருட்டு வந்தது. தான் ஒருவரை காயப்படுத்தி விட்டோம் என்ற உணர்வு, அவளை தள்ளி நிறுத்தியது.
மதுக்கு சிறு வயது முதல் மனம் அறிய யாராவாது காயப்படுத்தி விட்டால், தூக்கம் அண்டாது. மனம் அரித்து கொண்டே இருக்கும். யார் எப்படி இருந்தாலும் தன் நிலை, குணம் மாற கூடாது என்று நினைக்கும் பெண். நேற்றைய மாமியாரின் வரைமுறை இன்றிய பேச்சு காயப்படுத்த, அவளும் பேசி விட்டாள். தற்போது உள்ளம் அறிக்க, நிலையில்லாமல் நின்றாள். சரியில்லை என்றாள் ஒதுங்கி தான் செல்ல வேண்டும், சண்டையிட்டு காயப்படுத்தி கொள்ள கூடாது. காலம் கடந்து யோசித்தாள்.
நேரம் செல்ல சகுந்தலா, வசந்தி, தேவி என்று ஒருவர் பின் ஒருவராக வந்து விட்டார்கள். குறை சொல்லி கூட யாரும் அவளிடம் பேச வில்லை. தன்னை சிறிது அலங்கரித்து கொண்டாள் மது. மெருன் கலர் புடவை, குடை சிமிக்கி என்று மிதமான அலங்காரம் தான். கணவன் வருகிறான், பார்த்து இரண்டு நாள் ஆகிவிட்டது. கொஞ்சம் புத்துணர்வாக இருக்க விரும்பினாள்.
பத்திகிட்டு வந்தது கருப்பாயிக்கு. ராத்திரி முழுக்க பொட்டு தூக்கம் இல்லை. இழவு வீடு போல தாய், மகன், மகள் எல்லாம் சுருண்டு போய் கிடக்க, இவளுக்கு புது பெண் பகுமானம் கேட்குதா… மாமியார் என்ற பயம் வராமல் நான் விட மாட்டேன். என்னை பகைத்து கொண்டு, என் வீட்டில் காலூன்றி நின்று விடுவாயாக!… பார்த்து விடலாம். நான் பார்த்து என் வீட்டுக்கு கொண்டு வந்த சிறுக்கி, என்னை மீறி நிற்பாயா… அதையும் பார்போம்… மனம் முழுக்க வெத்து கோபம் நிறைந்து நின்றது கருப்பாயிக்கு.
கணவன் வரும் நேரம் எதிர்பார்த்து நின்றவளுக்கு, வந்தது அவள் வீட்டு கார். அப்பவும் தவறாக தோன்றவில்லை மதுக்கு. நகையை கொடுக்க வருகிறார்கள் போல என்று எண்ணி தான் வரவேற்றாள்.
இறங்கியதும் மீனாட்சி, வாசலிலே சத்தம் போட்டார்.
“எங்கடி உங்க மாமியார்… பொண்ணை கொடுத்த இடம்ன்னு அமைதியா போனா, என்னவும் பேசலாமா… யார் கொடுத்தா உரிமை. இப்பவும் நான் சொல்றேன், சீர் தர மாட்டேன். எங்க… எங்கிட்ட கேட்க சொல்லு பாப்போம்…” என்று வந்ததும் ஆரம்பிக்க.
அதிர்ந்து போய் பார்த்தாள் மதுமிதா. என்ன நடக்கிறது?… தந்தை புறம் திரும்பி பார்க்க. அவர் அமைதியாக பார்த்து நின்றார்.
அதற்குள் சத்தம் கேட்டு எல்லோரும் வெளி வாசல் வந்து விட்டார்கள். வீட்டின் வெளியே தாழ்வாரம் இறக்கி இருக்க, அங்கு தான் வாக்கு வாதம் நடந்தது.
வசந்தியின் கணவன் சேர் எடுத்து போட, அமராமல் நின்று கொண்டார்கள்.
“சார்… குடும்பத்துக்குள்ள சண்டை, சத்தம் வர தான் செய்யும். வாதம் பண்ணுங்க, பேசி தீருங்க. ஆனா, ஒதுக்கி வைக்காதீங்க. நடப்பு தாண்டி அது தான் பிரச்சனையாகும். உங்க மக வீடு. அப்படி நினைச்சு உக்காருங்க….” என்றவன் வசந்தி முறைப்பதையும் கண்டு கொள்ளாமல் இரண்டு கலர் வாங்கி வந்து கொடுத்தான்.
இம்முறை சேரில் அமர்ந்து, வாங்கி வந்த கலரையும் குடித்தார்கள். கருப்பாயி பேசியதிற்கு பதில் பேச தான் வந்தார்கள். தவிர வெட்டி கொள்ள வர வில்லையே. மகள் வாழும் வீடு, மருமகன் பிறந்த இடம் ஒதுக்க முடியாது.
வெளி வந்தார் கருப்பாயி. முகத்தில் ஒரு இறுக்கம். வரவேற்பு, நல விசாரிப்பு எதுவுமில்லை. பொதுவாக சொல்வது போல் தன் பேச்சை தொடங்கினார்.
“ஊர், உலகத்தில நடக்காதாதா… எங்கையும் பொண்ணு கொடுத்தா, சீர் கொடுக்குறது வழக்கம் தான… அஞ்சா நாளோ, ஏழாம் நாளோ, மாசம் செண்டு கூட கொடுக்க வேண்டி தானா. கொடுக்காம விட்டா எம் மகன் கௌரவம் என்னாகுறது. உம் மருமக என்ன கொண்டு வந்தான்னு கேட்டா?… நான் என்ன சொல்ல முடியும், சும்மா வந்தான்னா… பரிசம் போடும் போதே எல்லாம் பேசியது தானா…” என்று முதல் வாதத்தை சண்டை இல்லாமல் தொடங்கி வைத்தார்.
மது தன் மருமகள், மகன் பொண்டாட்டி… அதட்ட, அடக்கி வைக்க உரிமை இருக்கு. இவர்களிடம் அவ்வாறு பேச முடியாதே. சண்டை தொடங்கிய இடம் தங்கள் பக்கம் என்றாக கூடாது என்பதை மனதில் நிறுத்தி உதாசீனமும் இல்லை, வரவேற்பும் இல்லை என்று மையாமாக தான் பேச்சை தொடங்கினார்.
மீனாட்சிக்கு அது எல்லாம் கிடையாதே. நேற்று முழுக்க ஆத்திரத்தில் கொதித்து கொண்டிருந்தவர். தன் மகள் ஒழுக்கத்தை விமர்சித்தார் என்று நெஞ்சு கொதிக்க ஓடி வந்தவர். ஊர் பாக்குது என்ற நினைபெல்லாம் இல்லை. எப்படி என் மகளை பேசலாம், கட்டி கொடுத்தா எண்ணவும் பேச உரிமை வருமா!…
“பேசி வச்ச சீர் தரணும்னா, பேசி வச்ச மாதிரி வீடு இருக்கணும். கவர்மென்ட் வேலை, சொந்த வீடு இருக்குன்னு சொல்லி தான் பொண்ணு கட்டி போனீங்க. இப்ப அந்த வீட்டை காணாம் மொட்டை சுவர் தான் இருக்கு. நீங்க பேசுனா மாதிரி வீட்டை காட்டுங்க, நாங்க பேசினதுக்கு மேல சீர் செய்றோம். இந்த வீட்டை பார்த்து பொண்ணு தாரேன்னு சொல்லல, அப்ப எப்படி இங்க நான் சீர் கொண்டு வந்து இறக்க முடியும். ஊர்ல யாரும் கேட்டா வீடு கட்ட, சீர் வரும்ன்னு சொல்ல வேண்டி தானே…” என்றார் மீனாட்சி.
“இது தானே பேசி வச்சது. பரிசம் போடும் போதும், ஊர் பெரியவங்க முன்னாடி சீர், நகை பேசும் போது சொன்னது இதை தான!… அதை மீறி எதுவுன்னா பொண்ணை பெத்த எங்களை தான் கூப்பிட்டு பேசணும். சின்ன பிள்ளை கிட்ட என்ன பேச்சு. அநாவசிய பேச்சு கூடாது. எதையும் மறைச்சு, ஏமாத்தி பொண்ணை கட்டி கொடுக்கல. எல்லாம் கரிகாலனுக்கும் தெரியும். அவன் சரி சொல்லி தான் கல்யாணம் வரை வந்தது. பிடிக்கலைன்னு ஒரு வார்த்தை கரிகாலன் சொன்ன, கல்யாணம் வரை நான் கொண்டு வந்திருக்க மாட்டேன்…” என்று சுந்தரமும், தன் பங்கு நியாயத்தை வைத்தார்.
தன் பெண்ணின் கடந்த காலத்தை தோண்டி எடுத்து விமர்சனம் செய்ய வேண்டுமா… கோபம் நெஞ்சு முட்ட இருந்தது. ஆனால், பெண் வாழும் வீடு, மாப்பிள்ளை மேல் உள்ள மரியாதை என்று அவர் வாயை கட்டி போட்டது. கோபத்தில் தாங்கள் ஏதாவது பேசி, மதுக்கு தீரா இடும்பை கொண்டு வந்து விட கூடாதே… பெண்ணை பெற்றவர் சற்று தளைந்து போனார். வேற வழியும் இல்லையே…
வேற யாரும் வாய் திறக்கவில்லை. தங்களுக்குள் எதுவும் பேசலாம், பொதுவில் பேச முடியாதே. கருப்பாயி பேச மற்றவர்கள்,அமைதியாக, வேடிக்கை மட்டுமே பார்த்தார்கள். இது மாமியார், மருமகள் பஞ்சாயத்து என்பது போல்.
“ நாங்களும் ஏமாத்தள… வீட்டு வேலை போய்டு தான் இருக்கு. அதுக்கு முந்தி கல்யாணம் வச்சது யாரு?… என்ன அவசரமோ! நீங்க தான் உடனே ஆச்சுன்னு வச்சீங்க, அதோட பத்து பவுன் போட்டா தான் ஆச்சுன்னு உங்க வீட்டுக்கார அம்மாவும் கறார சொல்ல. தவுச்சு போனான் புள்ளை. நாலு லட்சத்தி ஐம்பது மேல வந்துருச்சு உங்க பொண்ணு கழுத்துல போட்ட தாலி கொடி. அதுக்கு மேல அவன் என்ன செய்வான். மருமகன் கஷ்ட படுறான், கொஞ்சம் செஞ்சு தூக்கி விட்ட என்னா… உங்க மக தான வாழ போறா… மஞ்ச கயிறு ஈரம் கயல, போட்ட நகையை பின்னாடியே வந்து வாங்கி போய்டீங்க. நீங்க போட்டதை வாங்கி போன நியாயம், நாங்க போட்டதை கேட்டா அது அநியாயமா. நல்ல இருக்கு உங்க நியாயம்…” பேச்சில் எகத்தாளம் கலந்து இருந்தது கருப்பாயிக்கு. நேராகவே வரதட்சணை கேட்டு விட்டார்.
“கரிகாலன் கிட்ட கேட்டு தானே நகையை வாங்கி போனோம். அது உங்களுக்கு குறையா இருந்தா, உங்க மகன் கிட்ட தான் பேசணும். அதோட, வீட்டு வேலைக்கு நகை வேணுமான்னு கேட்டோம். மருமகன் தான் வேணாம், உங்க பொண்ணுக்கு நீங்க போட்டதுன்னு சொல்லிட்டான்” என்று சுந்தரம் சொல்ல.
“அவன் சொன்ன ஆச்சா… சம்மந்தக்காரங்க நாங்க இருக்கோம், எங்களை ஒரு வார்த்தை கேட்க வேணாமா… நல்லது, கெட்டதுக்கு எங்களை தான முத கலக்கணும். அவன் சின்ன பையன், அவனுக்கு என்ன தெரியும்…” கடுப்பு கூடியது பேச்சில்.
பிரச்சனையின் நுனி பிடி பட்டது மீனாட்சிக்கு. இவனுக்கு பொண்ணை கட்டி கொடுத்தா, இவன் குடும்பத்தையே சவராட்டனை செய்ய வேண்டுமா… எரிந்தது மீனாட்சிக்கு. பெண் பிள்ளை வாழ்க்கை, அவர் வாயை கட்டி போட்டது.
கரிகாலன் கிட்ட சொல்லி தான்” என்று மீண்டும் தொடங்கும் போதே,
“கரிகாலன் என்ன கரிகாலன்… அவன் என்ன வானத்துல இருந்தா குதிச்சான். அவனை பெத்தவா நான் நிக்குதேன். எங்கிட்ட தான் கேட்கணும்” என்று எகிறி வந்தார் கருப்பாயி.
தன் கணவனை முகத்தில் அடித்தது போல் பேசிய பேச்சை மீனாட்சிக்கு ஒப்ப வில்லை. எவ்வளவு மரியாதை மிக்கவர்.
“உங்க கிட்ட நாங்க ஏன் கேட்கணும். நாங்க நகை போடுறது எங்க பொண்ணு நல்லா இருக்கணுன்னு தான். அவளுக்கு தான் நகை சொந்தம். அதை தாண்டி அவ புருசனை கேட்கலாம். அதை விட்டு உங்க கிட்டலாம் ஏன் கேட்டு நிக்கனும். உங்க மகன் சம்பந்தமா எதுவும் பேசுங்க, எம் மக விசயம் மருமகன் பார்த்தா போதும்…” என்று முகத்திலடித்தது போல் முடித்து விட்டார் மீனாட்சி.
எந்த காலத்தில் இருக்கிறார்கள் இவர்கள் எல்லாம். இன்னமும் மருமகள் தங்களுக்கு அடங்கி இருக்க வேண்டும் என்று, மகன் சம்பாத்தியத்தில் உரிமை கோரலாம், மருமகள் கொண்டு வந்த நகையிலும் உரிமை கோரலாமா… இதற்கு தாங்கள் விளக்கம் வேறு கொடுத்து கொண்டிருப்பது எரிச்சல் தான் அதிகமாக்கியது.
மீனாட்சியின் பேச்சு, வாதத்தின் தடத்தை மாற்றி விட்டது. அவர்கள் அறியாமலே சண்டைக்கு தயாராகி நின்றார்கள்.
“ஓ… அப்ப நாங்க வாயவே தொறக்க கூடாதா… என்ன பெரிய மருமகன். கரிகால பாண்டியன் இந்த கருப்பாயி பெத்த மகன் தான். நான் பெத்து வளத்து ஆளாக்கி, உங்க மகளுக்கு முழுசா தூக்கி கொடுக்கணுமா… உங்க மக கிட்ட இத தான் சொல்லி கொடுத்து அனுப்பி விட்டீங்களா… அப்ப, நல்லா கேட்டுகோங்க எம் மகன் என்னை தாண்டி நிக்க மாட்டான்…” ஆவேசம் மிகுந்த பேச்சு கருப்பாயிக்கு.
“என்ன பேசுறீங்க. பெத்த தாய தாண்டி நிக்க யாராவது சொல்வாங்களா… உங்க மகன் உங்க விருப்பம், எம் மகளை இழுக்காதிங்கன்னு தான் சொல்றோம்…” என்று புரிய வைக்க முயற்சி செய்தார் சுந்தரம்.
“அது எப்படி முடியும். எம் மகனை கட்டி, எவ்வீட்டுக்கு வாழ வந்தவ… எங்க சொல் கேட்டு, எங்கைக்குள்ள தான் நிக்கணும். எம் வீட்டு முறையை தான் பழகணும்…” என்றார் நிதர்சனமாக.
“அப்படி எல்லாம் இருக்க முடியாது. நீங்க மறைமுகமாக உங்களுக்கு அடிமையா இருக்க சொல்றீங்க. எம் மக அப்படி இருக்க மாட்டா…” என்று மீனாட்சி சொல்ல.
“அப்படி இருக்க முடியாட்டி இங்க வாழவே மாட்டா உங்க பொண்ணு. மாமனார், மாமியார், மச்சான், கொழுந்தன்னு அணுசரிச்சு போனா தான் பொண்ணு. அது தான் வாழ்க்கை, கூட்டு குடும்பம். நாங்க எல்லாம் அப்படி தான் வந்தோம். அதுக்கு பேரு அடிமை இல்லை. வரைமுறை உங்களுக்கே புரியல, உங்க மகளுக்கு என்னத்தை சொல்லி வளத்தீங்க…” என்றார் கருப்பாயி.
மதுக்கு பயம் மனதை கவ்வியது. இவர்கள் பேசுவது அவளுக்கு ஒரு பொருட்டு அல்லா. அவளுக்கு கணவன் பற்றி நன்கு தெரியும். தன் மனது அறிந்து இழுத்து செல்பவன். ஆனால், தற்போது நடக்கும் சூழல், இரு குடும்ப பகை என்று ஆகிவிட கூடாதே…
மீனாட்சியும் விட்டு விட வில்லை. “ அதை நீங்க சொல்ல வேணாம். எங்க மருமகன் சொல்லட்டும். உங்க பொண்ணு வேணாம்ன்னு எம் மருமகன் சொல்லட்டும்” என்றார் நிமிர்வாக.
“அது தான உங்க சாமர்த்தியம். உனக்கு நான் செஞ்சேன் அதுக்கு நீ கடமை பட்டுருக்க, அப்படி சொல்லியே வலிய உங்க பொண்ணை கட்டி கொடுத்தீங்க…” என்ற கருப்பாயிக்கு கோபம். தன் மகனை உரிமை கொண்டாடுகிறார்கள், பொண்ணை கட்டி கொடுத்து முழுதாக தங்கள் பக்கம் இழுக்க பார்க்கிறார்கள் என்று.
விசயம் தீவிரமடைந்து விட்டது. இனியும் கரிகாலன் வர வில்லை என்றால் காலத்துக்கும் தனி கட்டை தான். நடத்தி முடித்து விடுவார் அவன் தாய். பதறி போய் வசந்தியின் கணவன் போன் செய்தான் கரிகால பாண்டியனுக்கு. மதுரை தாண்டி வந்து விட்டதாக செய்தி வந்தது.
கையை பிசைந்து கொண்டு மருகி நிற்கும் மதுவை பார்க்கையில் கொஞ்சம் பாவமாகவும் இருந்தது.
“ பார்த்தீங்களா என்ன பேச்சு பேசுறாங்கன்னு. இது நமக்கு தேவையா…. வலிய கட்டி கொடுத்தோம்மாம். எம் பொண்ணுக்கு இது வேணுமா… என்ன குறை எம் பொண்ணுக்கு. அழகு, படிப்பு, அந்தஸ்து, கௌரவம், வசதி எது குறை. கொஞ்சமும் யோசிக்காம அவசரப்பட்டு தகுதி இல்லாத இடத்துல வந்து தள்ளி விட்டீங்க…” என்றார் மீனாட்சி கணவனை பார்த்து. நியாய மனம் கொதித்தது.
அவரின் பேச்சு கருப்பாயை தூண்டி விட, “யாருக்கு தகுதி இல்லை. வாயடக்கி பேசுங்க. நாங்களா உங்க வீட்டு படியேறி வந்து பொண்ணு கேட்டோம். நீங்க தான் கட்டி தாரேண்ணு சொன்னீங்க. பட்ட நன்றிக்கு எம் புள்ளை தலையாட்டி நின்னுச்சு. உங்க புருசன் மேல அம்புட்டு மரியாதை. அவருக்காக மட்டும் தான் எம் மகன் கல்யாணத்துக்கு சரின்னு சொன்னான். ஊர்ல இல்லாத இளவரசியை நாங்க தேடி வந்தோமாக்கும்…” என்றார் கருப்பாயி. முற்றிலும் காயப்படுத்தும் நோக்கம் தான்.
“ அதானே… இந்த பொண்ணு பேர் கெட்டு போச்சு. விசாரிச்ச வரை பொண்ணு சரியில்லை. அவசரபடாதீங்க. பொறுத்து செய்வோம்ன்னு சொல்லியும் தம்பி தான் சுந்தரம் சார் நல்லவர். இந்த வாழ்க்கை அவரால தான். அந்த நன்றிக்கு நான் எதுவும் செய்வேன். பொண்ணு எப்படி இருந்தாலும் பரவாயில்லைன்னு சொல்லி தாலி கட்டுன புள்ளையா பார்த்தா தகுதி இல்லன்னு சொல்றீங்க…” என்ற கரிகாலன் அத்தை பேச, ஊர் சனம் கூடி விட்டது.
நடந்த பேச்சு வார்த்தை வீட்டுக்கு வெளியே தாழ்வாரத்தில். அந்த வழி போன எல்லாரும் நின்று பார்க்க தொடங்கி விட்டார்கள்.
“உண்மையா உங்க பொண்ணுக்கு தான் தகுதி இல்லை. அழகா இருந்தா, படிச்சா, பணமும், பகட்டும் மட்டும் போதுமா… குணம், அது தானே வேணும். அந்த குணம் இல்லாம ஊர் பேச்சு வாங்கி ஒருத்தனும் கட்ட மாட்டேன்னு சொல்லவும் தான, எம் மகனை நீங்க தேடி வந்தீங்க. வாய் செத்தவன், அமைதியா போவான்னு. நன்றி கடனை காட்டி காலத்துக்கும் கட்டி போட நினைச்சீங்க” என்று ஆவேசமாக கருப்பாயி பேச.
மொத்தமாக ஒடுங்கி போனாள் மது. இதை தானே அவள் வெறுத்தது. அவள் கடந்தகாலம் வெகு இயல்பாக நடு தெருவில் விமர்சிக்க பட்டது. வேற ஒருவனோடு திருமணம் முடித்த பெண்ணை பேசுகிறோம் என்ற உணர்வு கொஞ்சமும் இல்லாமல் விமர்சித்து கொண்டிருந்தார்கள். தான் அவர்கள் வீட்டு பெண் இல்லையா, அவர்கள் மகனின் மனைவி. அந்த நினைப்பை கூட அகற்றி, ஊர் முன் அவளை தாழ்த்தி நிறுத்தினார்கள்.
வேர்க்க, விறுவிறுக்க ஓடி வந்து கொண்டிருந்தான் கரிகால பாண்டியன். வசந்தி கணவன் மூலம் விசயம் கேள்வி பட்டது முதல் பதற்றம் தான். ஒரு நாள் தானே, சென்று வந்து விடுவோம் என்று எண்ணி இருந்தான். அது எவ்வளவு பெரிய மடத்தனம் என்று அவர்கள் வீட்டு ஆட்களே காட்டி விட்டார்கள்.
“அத்தை சின்ன பாண்டி வாரான்” என்ற குரலில் மதுக்கு பரபரப்பு தொற்றிக் கொண்டது. கணவன் வர எல்லாம் சரியாகும் என்ற எண்ணம்.
ஓடி வரும் அவன் முகத்தையே பார்த்து நின்றாள் பெண். கொஞ்சம் நொண்டிய படி தான் ஓடி வந்தான். என்ன ஆயிற்று காலில் ஏதேனும் அடி பட்டு விட்டதா, என்று கணவனை தான் ஆராய்ந்தாள்.
இந்த மனைவி முகம் பார்க்க தான், அத்தனை அவசரமாக கிளம்பியவன். இன்று நேரெதிரே நின்றும் அவளை காண விழைய வில்லை. சூழல் கனத்து கிடந்தது. எல்லோர் முகமும் இறுகி கிடக்க, அவர்களை ஆராய்ந்தவன், சுந்தரம் முகம் பார்த்து,
“ சார்” என்று தான் ஆரம்பித்தான்.
“போதும் நிறுத்துடா… நீ நடிச்ச வரைக்கும் போதும். உன்னை என்னவோ நினைச்சேன். உம் புத்திய காட்டிட. அப்பவே சொன்னேன் தராதரம் தெரியாமல் சம்மந்தம் பண்ண வேண்டாம் என்று, இந்த மனுசன் தான் கரிகாலன் மாதிரி உத்தமன் யாரும் இல்லைன்னு உன்னை தேடி எடுத்தார். எம் பொண்ணு எப்படியும் இருக்கட்டும், உனக்கு பிடிக்கலைன்னா நேரடியாக சொல்ல வேண்டி தான. அப்படியா கட்டாய படுத்த போறோம். நீ யாரு எங்களுக்கு சொந்தமா பந்தமா… உம் கைய காலை கட்டி கல்யாணம் பண்ணி வைக்க. உம் வீட்டுக்கு பொண்ணு குடுத்த எண்ணவும் பேசலாமா… உங்க பொண்ணு சரியில்லை, நான் உத்தமபுத்திரன் எனக்கு உங்க பொண்ணு தகுதி இல்லன்னு நேருக்கு நேரா சொல்ல வேண்டி தான. அப்படி நீ ஒரு சொல் சொல்லி இருந்தா, உம் பக்கம் நாங்க தலை வச்சு கூட படுத்திருக்க மாட்டோம்…” என்று ஆவேசமாக பேச,
நடப்பு புரியாமல் முழித்து நின்றான் கரிகாலன். ஏதோ சீர் பிரச்சனை என்று தான் தெரியும். அதை தவிர, தன் மனைவி பற்றி பேச்சு எழுந்ததா… புரியாமல் தாயை பார்த்தான். நீங்கள் எதுவும் சொல்லவில்லை தானே என்று பார்வையாலே கேட்பது போல்.
அதுவரை பேசி கொண்டிருந்த கருப்பாயிம், மகன் வந்த பின் வாயை மூடி கொண்டார்.
“ அங்க என்ன பார்வை. நீ சொல்லாமவா இவ்வளவும் நடந்தது. எம் பொண்ணா பத்தி பேசுற தகுதி, இங்க யாருக்கும் கிடையாது. உனக்கு கல்யாணம் பண்ணி கொடுத்ததால யாரும் பேசணும்னு இல்லை. நல்ல பையன், நமக்கு தெரிஞ்ச பையன், கஷ்டபடுற குடும்பமா இருந்தாலும் உங்க குணம் நல்லதுன்னு நினைச்சு தான் சம்மந்தம் வச்சோம். எல்லாத்துக்கும் பழக்கவழக்கம், தாராதம் ஒன்னு இருக்குன்னு நிருபிச்சுட்ட!… நம்ம பேச்சு தான் நம்ம என்ன தரம்ன்னு காட்டும். சரி இல்லாத ஆட்களோடு சேர்ந்தது எங்க தப்பு தான். அன்னைக்கு உன்னை எங்க வீட்டுக்கு வெளியேவே நிக்க வச்சு இருந்தா, இன்னைக்கு எம் மகள பேச நா எழாது. நான் செஞ்சது பெரிய தப்பு தன்” என்று கருப்பாயி மேல் உள்ள கோபத்தை, தங்களது இயலாமையை கரிகாலன் மேல் இறக்கி வைத்தார் மீனாட்சி.
மருமகன் என்ற மரியாதை எல்லாம் காற்றோடு போயாச்சு. அவன் வீட்டு ஆட்கள் பேசியதற்கு அவனே பொறுப்பு எனும் போது, தண்டனையும் அவனுக்கே என்று ஆனது.
“என்ன தராதரம்?… ம்ம் … யாருக்கு தராதரம் இல்லை. உங்க தராதரம் தான் வளர்ந்து நிக்குதே. ஊரே பாரு, நாடே கேளுன்னு கதை எல்லாம் எங்களுக்கும் தெரியும். வெறும் பணம், காசு மட்டும் ஆச்சா… நல்ல பொறப்பு இருந்தாலும், வளர்ப்பு சரி இல்லை. அரசாங்க வேலைக்காரன் எம் மகன். சுயமா சொந்த கால்ல நிக்கும் போதும் ஒழுக்கம் காத்தான். நாங்களும் பொம்பள பிள்ளையை கட்டி கொடுத்தோம், ஒரு சொல் வர விட்டோமா… பதவிசா படிக்க வச்சு, கட்டுக்கோப்பாக கட்டி கொடுத்தோம்.உன்னை மாதிரி கண்ட மேனிக்கு விடல… இது தான் உன் தராதரம்” என்று கருப்பாயி எகிற.
விசயம் பிடிபட்டு கரிகாலன் கத்தி விட்டான். “அம்மா! இதுக்கு மேல ஒரு வார்த்தை வந்துச்சு…” கை நீட்டி எச்சரிக்க.
அங்கிருந்த தூணில் ஒன்டி போனாள் மது. இதுக்கு மேல் என்ன இருக்கு. தானே மறக்க நினைத்து, அதை கடந்து நாலு வருட கணக்கு ஆன பின்னும் தன் மேல் விழுந்த கலங்கம் போகாது போல.
ஆத்திரத்தை கட்டு படுத்த முடியவில்லை மீனாட்சியால், “ எம் வளர்ப்பு சரி இல்லை ஒத்துக்கிரேன். உன் வளர்ப்பு என்னாச்சு… உன் குடும்ப வளமை என்ன… அரசாங்க வேலை, பெருமை தான். அந்த வேலையை வாங்குன படிப்பு நாங்க போட்டது. என் வீட்டு வாசல்ல கையை கட்டி நிப்பான் உம் புள்ளை, எதுக்கு?… என்னை படிக்க வைக்க பெத்தவங்க கிட்ட வசதி இல்லை. ஏதாவது உதவி பண்ணுங்கன்னு தினமும் அரை மணி நேரம் வாசல்ல வந்து நிப்பான். போன போகுது தர்மம் தானேன்னு உதவி செஞ்சு படிக்க வைக்க போய் தான், நீயெல்லாம் எம் மகன் அரசாங்க வாத்தியார்ன்னு பீத்திகிற. பெத்தவளா… உம் மகனுக்கு என்ன செஞ்சா… படிக்கவச்சையா, கல்யாணம் செஞ்சு குடுத்தையா, வேலை வாங்கி குடுத்தையா,இருக்க வீடு தான் கட்டி வச்சயா… உன் மக கல்யாணம் கூட மகன் செலவு தான். இருக்குறது ஒத்த ஓட்டு வீடு அதை தாண்டி என்ன இருக்கு. உம் மக்க மூணு பேரையும் நிக்க வச்சா அதுவும் நிறைஞ்சு போகும். நீ தராதரம் பத்தி பேசுற. மூணு வருஷம் வாசப்படி தாண்டாம நின்னு தான் போவான் உம் மகன். அதான் உங்க தராதரம். அவனை உள்ள விட்டு எம் வீட்டு மருமகன்னா கொண்டு வந்தது தான் எங்க தராதரம். இப்பதான் புத்தி வருது பாத்திரம் அறிந்து தான் பிச்சை போடணும்ன்னு…” என்று கரிகாலனை பார்த்தே மீனாட்சி சொல்லி முடிக்க.
தலை குனிந்து குன்றி போனான் கரிகாலன். தன் வறுமையை அப்பட்டமாக சொல்லி காட்டி விட்டார்.
தன் மருமகன் என்ற எண்ணம் மீனாட்சிக்கும் இல்லை, தன் மருமகள் என்ற எண்ணம் கருப்பாயிக்கும் இல்லை. ஒருத்தருக்கொருத்தர் சளைக்காமல் நிக்க, இரு பக்கமும் மனதால் அடி வாங்கியது இந்த இளம் தம்பதிகள் தான்.
கருப்பாயி என்ன லேசு பட்டவரா, “ அவ்வளவு நெஞ்சுல வச்சுருக்கவ எதுக்கு எம் மவன மருமகனா கேட்டா. உங்களுக்கு தக்க சம்மந்தம் பண்ண வேண்டி தானே… எவன் கூடவோ ஓடி போன உம்…” என்று சொல்ல தான் வந்தார்.
கரிகாலன் நொடியில் அவரை நெருங்கி வந்து, அவர் நின்றிருந்த நிலைப்படியில் ஓங்கி ஒரு அடி தான் கையால் அடிக்க, அரண்டு போய் பின் வாங்கி விட்டார் கருப்பாயி. இது தனக்கு விழ வேண்டியது என்று புரிய, பயந்து கதவின் பின் ஒடுங்கி போனார்.
மதுவின் நிலை சொல்லும் படி ஒன்றும் இல்லை. இதற்கு மேல் என்ன இருக்கு நான் பார்க்க, மயங்காமல் நிக்க தூணில் சாய்ந்து கொண்டாள். வேற ஏதேனும் பாக்கி இருக்க என்று.
மற்றவர்கள் ஓடி வந்து கரிகாலனை பிடித்து கொள்ள, கையை உதறி தன்னை விடு வித்தவன்.
தன் இரு கைகளையும் சேர்த்து கும்பிட்டு சுந்தரம் முன் வந்தான்.
“என்னை மன்னிச்சுடுங்க சார். உங்க பொண்ணை கூட்டிட்டு கிளம்புங்க…” என்றான் ஒற்றை வார்த்தையில்.
பாவம் அந்த மனிதர். விரக்தி சிரிப்பு ஒன்றை சிந்தி, தலையாட்டி கொண்டார் சரி என்று. இவ்வளவுக்கு மேலும் மகள் எவ்வாறு வாழ முடியும். இனியும் இங்கு தான் வாழ வேண்டும் என்று சொன்னால், தானே தன் மகளுக்கு விசம் தருவதற்கு சமம்.
நொடியில் கரிகாலன் உள்ளே செல்ல, மெல்ல திரும்பி மகளை பார்த்தார்.
நெஞ்சில் கை வைத்து அதிர்ந்து நின்றாள் மது. கண்கள் ரெண்டும் சிவந்து கிடக்க, பல்லை கடித்து அழுகையை அடக்கி வைத்தாள். அவளின் ஒட்டு மொத்த நம்பிக்கையும் அடியோடு அழித்து விட்டு திரும்பியும் பார்க்காமல் சென்று விட்டான்.
சுந்தரதிர்க்கு நெஞ்சு வலித்தது. தவமிருந்து பெற்ற மகள். குல தெய்வக் கோவிலில் எடைக்கு எடை நாணயம் கொடுத்து தான் தொட்டிலில் போட்டார். மார்பிலே போட்டு வளர்த்த மகள். கேட்டது அனைத்தும் நிறைவேற்றி, ஒரு பேனா வாங்கினாலும் சிறந்ததாக வாங்கி கொடுப்பார்.
தன் இளவரசி, தன் வீட்டு மகாலட்சுமி, தன் செல்ல மகள். இன்று நாதியத்து, அநாதரவாக வாசலில் நிற்பதை பார்த்து தாங்க வில்லை. அதுவும் அவள் நின்ற நிலை, கல் மனதையும் கரைக்கும்.
கல்யாணத்தில் கட்டிய மஞ்சள் கயிறும், கண்ணாடி வளையல் என்று புது பெண் தோற்றம் தான். ஆனால், எல்லாம் முடிவுக்கு வந்து விட்டது. மகளை காண காண நெஞ்சு பொறுக்க வில்லை.
சுந்தரம் உறுதி கொண்டார். போதும் தம் மகளுக்கு இந்த வாழ்வு. காலத்துக்கும் தாங்க, சுமக்க உன் அப்பன் நான் உயிரோடு தான் இருக்கிறேன். பத்து வயது வரை மார்பில் சுமந்தவன், காலத்துக்கும் என் தோளில் சுமக்க மாட்டேனா… பெற்ற பிள்ளை யாருக்கு பாரமாகும்.
மகள் அருகில் சென்றவர், “ போகலாம் பாப்பா. உன் பொருள் ஒண்ணையும் விட்டு விடாதே… நமக்கு இங்கு இனி எந்த வேலையும் இல்லை…” என்றவரை கண்டவள், மெளனமாக உள்ளே சென்றாள்.
சுவற்றில் சாய்ந்து கண்களை இறுக மூடி நின்ற கணவனை கண்டு ஒன்றும் சொல்லாமல், தன் உடைகளை அடுக்கி எடுத்தாள். அவள் அரவம் உணர்ந்தாலும் கண்களை திறந்தான் இல்லை.
மெளனமாக வெளியேற மதுக்கு பிடிக்க வில்லை, வலிய சென்று பேசவும் தன்மானம் இடம் கொடுக்க வில்லை. ஆண்கள் எப்பவும் ஒரே மாதிரி தான், எவ்வளவு அன்பு இருந்தாலும் ஒரே அடியில் மனைவியை சாய்த்து விடுவார்கள்.
அவன் முகம் தாண்டி ஒரு எட்டு எடுக்க முடியவில்லை. தன் மனம் ஏன் இவ்வளவு பலவீனம். பிடிக்காத திருமணம், பொருத்த மில்லா வாழ்வு என்று முரண்டு பிடித்தாலும், இந்த பந்தம் முறிவதில் விருப்பம் இல்லை.
அவனை தாண்டி செல்வது தான் அவள் விருப்பம். வெட்கம் கெட்ட மனது கேட்க வில்லை. தன்னை மீறி அழைத்து விட்டாள்.
“கரிகாலன்”
கண்களை திறந்தவன் முகத்தில் துக்கம் பொங்கியது.
“நான் எந்த தப்பும் செய்யல கரிகாலன்” ஏன் விளக்கம் கொடுக்கிறாள். தன்னை வீட்டை விட்டு அனுப்பாதே என்ற…
“நிஜமாவே நீங்க என்னை போக தான் சொல்றீங்களா…”
ஆமாம் என்ற தலையாட்டல் மட்டும் தான்.
“நான் போய்டா… திரும்ப நாம பார்த்துக்கவே முடியாது கரிகாலன்”
சரி என்று தலையசைத்தான்.
“நமக்குள்ள எல்லாம் முடிஞ்சும் போய்டும்…”
தெரியும் என்று தலையாட்டினான்.
“அப்பா கிட்ட பேசுங்க கரிகாலன்…” என்றாள் தவிப்பாக. இதற்கு மேல் என்ன சொல்ல வேண்டும்.
முடியாது என்று மறுப்பாக தலையசைக்க, முடங்கி போனாள் பெண்.
யாருக்கும் கட்டி இழுக்க தோன்ற வில்லை. மது க்கு மனது உடைந்து போனது. எவ்வளவோ பேச்சு கெட்டும் ரோசமாக கூட கணவனை தாண்டி செல்ல மனம் வர வில்லை.
காலத்துக்கும் துணை நிற்பேன் என்றானே, எப்படி திக்கு தெரியாமல் நிற்க வைத்து விட்டானே…
போ என்று சொன்னவனிடம் போக மாட்டேன் என்றா சொல்ல முடியும். எல்லாம் அவ்வளவு தானா… அவன் அன்பை பொய்யாக எண்ணி வெளியேற முடியவில்லை.
அவள் தவிப்பை கண் கொண்டு பார்க்க முடிய வில்லை கரிகாலனால். அவள் முகம் அழுகைக்கு மாற, பார்க்க தெம்பு இல்லாமல் வெளியேறி விட்டான்.
உடை மாற்றி சுடிதார் எடுத்து அணிந்தவல் வள், அவன் கொண்டு வந்திருந்த பையில் காப்பி கொட்டை கலர் சேலை வெளி வந்து கிடக்க, புது சேலை பார்த்தவுடன் தெரிந்தது. புரிந்து கொண்டவள் தன் துணிகளுக்குள் அதை அடுக்கி கொண்டாள்.
சகுந்தலா வரும் சத்தம் கேட்க, வேகமாக மறைத்து வைத்தாள். அதில் தான் கட்டி இருந்த சேலை தனியே கிடந்ததை மறந்து விட்டாள். அவள் அருகில் வந்த சகுந்தலா, வேற பக்கம் பார்த்து கொண்டு,
“எண்ணெய் எடுத்து போக கூடாது. வீட்டுக்கு ஆகாம போய்டும். எண்ணெயை வச்சுட்டு போ…” சொன்ன நொடி வெளியேறி விட,
மது ஒன்றும் சொல்லி கொள்ள வில்லை. வேகமாக வெளி வந்து, காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
அங்கிருந்த வேப்ப மரத்தில் சாய்ந்து நின்ற கரிகாலன் அருகே சுந்தரம் சென்றார்.
“ சார்” என்று இழுக்க.
“ உன்னை நம்பி பொண்ணை கட்டி கொடுத்த எனக்கு நல்ல மரியாதை கிடைச்சது. என் வலி உனக்கு இப்போ புரியாது. நீ வேறொரு கல்யாணம் பண்ணி, உனக்கு ஒரு பெண் பிறக்கும் பார். அப்போ புரியும்…” என்றவர் நில்லாமல் சென்று விட்டார்.
முகம் செத்து கிடக்க வந்தவன், யாரையும் பார்க்காமல் உள்ளே சென்று கதவடைத்து கொண்டான்.
அங்கு சேரில் கிடந்த மனைவியின் புடைவை வாசம், அவள் இருப்பை உணர்த்தியது. மெதுவாக கையில் எடுத்து முகர்ந்தவன், வாசம் மனைவியை நினைவு படுத்த, கண்ணில் கோடாக நீர் இறங்கியது. வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மருகி நின்ற நிலை மனதை அறுக்க, சேலையை முகத்தில் வைத்து அழுத்தி கொண்டான் கரிகால பாண்டியன்.