Skip to content
Post Views: 6,993
அவசரமாய் மதுவைப் பார்க்க உள்ளே சென்ற ரகு, அங்கே கண்டது, முகத்தில் பிரசவ வலியோடு, தெரிந்த கடும் பயம், பதட்டம் கொண்ட அவளை!
அவள் உதடுகள் பயத்தால் நடுங்கிக் கொண்டிருந்தன!
அதைப் பார்த்த ரகு அப்படியே கலங்கிப் போய் விட்டான்!
Advertisement
அவளருகே சென்று, “ரிலாக்ஸ் மது, உனக்கு ஒண்ணுமில்ல, நீ நல்லா தான் இருக்க, ஏன் இப்படி டென்சன் ஆகுற? வைஷு இருக்கால்ல, அப்புறம் என்னடா பயம் உனக்கு?”
“பாப்பா.. பாப்பா..” மது பயத்தில் பிதற்றினாள்.
“பாப்பாவும் நல்லாருக்கு, நீயும் நல்லாயிருக்க, கொஞ்ச நேரத்துல பாப்பா வந்துடும்! ரிலாக்ஸ் மதும்மா..”
Advertisement
“இல்ல பாப்பாவுக்கு.. பாப்பாவுக்கு.. ஏதோ ப்ரோப்ளம்..”
Advertisement
“அதெல்லாம் ஒண்ணுமில்லடா!”
அவள் சமாதானம் ஆக வில்லை!
அதற்குள் வைஷுவும் மற்றவர்களும் வந்து விட்டார்கள்!
Advertisement
ரகு, வைஷுவை அர்த்தமாய் பார்க்க, வைஷு மற்றவர்களை அழைத்துக்கொண்டு வெளியே சென்றாள்.
“மது.. மது.. இங்கப் பாருடி.. எதுக்கு இப்படி டென்சன் ஆற? பதறாம இருந்தா, இன்னும் கொஞ்சம் நேரம் தான்!” ரகு, அவள் தலையை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு சொன்னான்.
அவள் மேலும் அரற்ற, அவன் துடித்துக் கொண்டிருந்த அவள் உதடுகளில் அழுந்த முத்தமிட்டான்! அது பயத்தை, பதட்டத்தைக் கொஞ்சம் குறைத்தது!
“பயப்படாத மது. நானும் டாக்டர் தானே, எனக்கு உன் கண்டிசனும் பாப்பாவோட கண்டிசனும் தெரியாதா, அப்படி ஏதும் இருந்தா, என்னால இப்படி உன்னை கிஸ் பண்ணிட்டு இருக்க முடியுமா சொல்லு! ப்ளீஸ்டி நம்பு! உன் நந்து சொல்றேன்ல, நம்ம பாப்பா நல்லா இருக்கு!”
தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தான் நாலைந்து முறை!
அவள் இப்போது கொஞ்சம் நிம்மதியானாள். பதட்டம் கொஞ்சம் குறைந்தது.
வைஷூவை அழைத்தான் ரகு.
அதற்குள் மதுவுக்கு சிசேரியன் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டிருந்தாள் வைஷு.
மதுவை ஆபரேசன் தியேட்டர்க்கு தூக்கிச்சென்றார்கள்.
வெளியே இருந்த ராஜுவும் ராஜுவின் அம்மாவும் பதறி விட்டார்கள்.
வைஷு ராஜுவின் அம்மாவிடம் மதுவுக்கு கர்ப்பவாய் திறக்காத காரணத்தால், அவளுக்கு சிசேரியன் செய்யப் போவதாக சொல்லிவிட்டு விரைந்தாள்.
இந்த மதுப் பொண்ணு பயந்துகிட்டு மாப்பிள்ளையோட பேசி பழகாம இருந்துருப்பா போல, அதான்! என்று அவர் மெல்ல மெல்ல முணுமுணுத்துக்கொண்டே அந்த சமயபுர மாரியம்மனை வேண்டிக் கொண்டார்.
“அம்மா, சமயபுரத்தா, என் பொண்ணு நல்லபடியா பெத்து பொழைச்சு வரணும்!”
ரகு மதுவின் தலையைக் கோதி விட்டு, “ரிலாக்ஸ் மது!” என்று சொல்லிக் கொண்டே இருந்தான்!
மதுவின் காதில் விழுந்த கொஞ்ச நேரத்தில் அவளுக்கு முழுமையான அனஸ்தீசியா கொடுக்கப் பட்டது.
கொஞ்ச நேரத்தில் குழந்தை அழும் சத்தம் ! அதை தொடர்ந்து ஆபரேசன் தியேட்டரில் இருந்து, வைஷு கூடவே வர சொல்லியிருந்த குழந்தைகள் டாக்டர் வெளியே வந்தார்!
ராஜுவும் அவன் அம்மாவும் வேகமாக அவரிடம் சென்று “மதுவும் குழந்தையும் நல்லா இருக்காங்கல்ல? என்ன குழந்தை?” என்று பரப்பரத்தனர்!
“அவர் ரெண்டு பெரும் சேப்! நல்லா இருக்காங்க, என்ன குழந்தைன்னு நான் பார்க்கல!” என்று சொல்லிவிட்டு அவர் போய்விட, பின்னால் குழந்தையுடன் வந்த வைஷு “டேய் ரகு உனக்கு பையன் பொறந்து இருக்கான்டா!” என்றாள் சந்தோசமாக!
ரகு ஆசையுடன் குழந்தையைப் பார்த்து விட்டு, “மது எப்படி இருக்கா?”
“கான்சியஸ் வர கொஞ்சம் லேட் ஆகும். போய் பாரு” அவனை உள்ளே அனுப்பினாள்.
“டேய்..நான் மாமா ஆகிட்டேன்!”, ராஜு சந்தோஷ கூக்குரலுடன் மாதுவை போனில் அழைத்தான்!
ராஜுவின் அம்மா, ரகுவின் வீட்டு லான்ட் லைனுக்கு அழைத்து பட்டு பாட்டியிடம் விசயத்தை சொல்ல சொன்னார்.
மதுவுக்கு மயக்கம் தெளிந்த பின், அவளிடம் குழந்தையைக் காட்டி,” நீ ஆசைப் பட்டப் படியே பையன் தான்!”
ரகு அவளைக் கட்டிக் கொண்டு சொன்னான்!
ஒரே சந்தோஷ மயம் எல்லோரிடத்தும்!
மாது குழந்தைகளுக்கான பரிசுப் பொருட்கள் கடையையே வாங்கி வந்திருந்தான்!
“டேய் எதுக்குடா, இவ்வளவு? இங்கப் பாரு, ஏற்கனவே ராஜு, வாங்கி குவிச்சு வச்சுருக்கான்! நீ வேறே இப்படி அள்ளிட்டு வந்துருக்கிற?”
“நான் என்னக்கா கண்டேன், ஒரு பேபி ஷோப்க்கு போனேன், அங்க இருந்த சேல்ஸ் கேர்ள், சார் இதப் பாருங்க, சார் அதப் பாருங்கன்னு ஏகப்பட்ட பொருளை காட்டுனுச்சு! எல்லாமே உனக்கு தேவைப்படும் போல இருந்தது அதான் வாங்கிட்டேன்!”
ஒரு நல்ல நாள் பார்த்து, குழந்தைக்கு பேர் வைக்கும் விழா வைத்தார்கள்.
ரகுவின் அத்தை, மாமா அமெரிக்காவில் இருந்து பரிசுப் பொருட்களை அள்ளி வந்தார்கள். அக்கா ராகினியும் அவள் கணவனும் குழந்தைக்கு தங்கக் காப்பும் செயினும் போட்டார்கள்.
தேவேந்திரன் ஒரு செயின் வளையல், அரைஞான் கொடி, கொலுசு எல்லாம் செட்டாக வாங்கி வந்து விட்டார்.
ராகவனும் வைஷுவும் அதே மாதிரி!
ரகுவின் பெரியப்பாவும், அப்பாவும் பரிசுகள் அளித்து வாழ்த்தினார். பெரியப்பா, பீடியாட்ரிசன் ஆதலால், குழந்தை ஆரோக்கியம் பற்றி அவர்கள் யாருக்குமே கவலை இல்லை!
24 x 7 நேரமும் அவனுக்கு அவரின் கேர் வீட்டோடு!
மானு வீட்டாரும் பரிசுப் பொருளோடு வந்து வாழ்த்தினார்கள்.
மதுவின் தாய் மாமா கூட ஒரு செயின் வாங்கி வந்து போட்டார்.
குழந்தைக்கு “ரித்திமன்” (Riddhiman) என்று பெயரிட்டாள் மது!
தன்விக் குட்டிக்கும் தாருவுக்கும் தலை கால் புரியவில்லை! ரித்து குட்டி, ரித்து கண்ணா ன்னு அவனையே சுற்றி சுற்றி வந்தார்கள்!
“மது எப்ப அவனை நாங்க தூக்குறது? எப்ப அவன் தலை சரியா நிக்கும்?” என்று ஒரே நச்சரிப்பு தன்வியிடம்!
மதுவின் ஆரோக்கியம் திரும்பியது. குழந்தையும் நன்றாகவே ஊறிக் கொண்டு வந்தான்.
மூன்று மாதம் கழித்து..
“நந்து..நந்து.. இங்கப் பாருங்களேன், என் பையன் என்னப் பண்றான்னு?”
மது, உற்சாகமாய் ரகுவை அழைத்து காட்டினாள்.
அங்கே ரித்து குப்புற விழ பிரயத்தனம் செய்துக் கொண்டிருந்தான்!
ரகுவும் அதை ஆசையாகப் பார்த்துக்கொண்டு இருந்து விட்டு, அவளிடம் திரும்பி, “நீ ஆனாலும் சரியான திருடிடி!” என்றான்.
மதுவுக்கு ஒன்றும் புரியாமல், “என்ன திருடியா?” என்று கேட்டாள்
“ஆமாம் திருடி தான்! அதுவும் சாதாரண திருடி இல்லை! உழைப்பு திருடி!”
“என்னது உழைப்பு திருடியா?”
“ஆமாம்! இப்ப என்ன சொன்ன? உன் பிள்ளைய வந்து பார்க்கணும்னா?”
“ஏண்டி.. சட்டையில ஒத்த பட்டனை போட்டுக்கிட்டு டான்ஸ் ஆடி பாட்டு பாடி, என்னை உசுப்பேத்தி விட்டது மட்டும் தான் நீ செஞ்சது! மத்தபடி ரித்து, முழுக்க முழுக்க “என்னோட உழைப்பு!” நீ என்னடான்னா கொஞ்சம் கூட கூசாம என் பையன் என் பையன்னு சொல்லிட்டு இருக்க?”
மதுவுக்கு இப்போது தான் புரிந்தது!
அவள் வெட்கத்துடன் , “என் மாமா நல்லவரு , வல்லவரு, நாலும் தெரிஞ்சவருன்னு நினைச்சுகிட்டு, நீங்க சொன்ன படிஎல்லாம் கேட்டேனே மாமா! அப்புறம் ஏன் இப்படி திட்டுறீங்க?”
“என்னது ! திட்டுறேன்னா? ஏய் அப்படியே பேச்சை ட்ராக் மாத்தாத? கொஞ்சமாச்சும் மானம் ரோசம் இருந்தா, நீ உழைச்சு இன்னொரு புள்ள பெத்துக்கோ, அத உன் பிள்ளைன்னு சொல்லிக்கோ, இத சொன்ன.. அப்புறம் நான் பொல்லாதவன் ஆகிடுவேன்!”
“குரளி வித்தை காட்டுறான்! ஏய்! கைப் புள்ள! இதுக்கு ரியாக்ட் பண்ணாத! இப்படி உன்னை உசுப்பேத்தி, உடம்ப ரணக்களம் ஆக்க பாக்குறான் சிக்கிறாத!” அவள் மைன்ட் வாய்ஸ் என்று நினைத்து சத்தமாக பேசினாள்!
“ஏய்! அங்க என்ன முணுமுணுப்பு? கேட்டதுக்கு பதில காணோம்?”
“ம்ம்.. அதெல்லாம் வைஷு அக்கா, ரெண்டு வருஷம் கூடாதுன்னு சொல்லிட்டாங்க!”
“ஏய் பொய் சொல்லாத! அவ இன்னொரு டெலிவரிக்கு தான் அப்படி சொன்னா! மத்தபடி அவ பாஷையில் சொல்லனுனா நீ ரகு கூட காண்டாக்ட்ல இருக்க கூடாதுன்னு எல்லாம் சொல்லியிருக்க மாட்டா!”
என்று அவளைத் தூக்கிக்கொண்டு போய் அந்த ரெக்ளைனரில் உட்கார்ந்தான்.
அவள் அவனைக் கட்டிக்கொண்டு “எத்தனை பிள்ளை பெத்துகிட்டாலும் எனக்கு என்னோட நந்து தான் முதல் பிள்ளை!” அவனை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு சொன்னாள்!
ரகு சிரித்துக் கொண்டான். கூடவே அவனுக்கு, அவள் பிள்ளைப் பெற்று டிஸ்சார்ஜ் ஆகும் போது பண்ணிய கூத்து அவன் நினைவிற்கு வந்தது!
அன்று, மதுவின் டிஸ்சார்ஜ் சம்மரி தயார் செய்தது, புதிதாக அங்கு வேலைக்கு சேர்ந்திருந்த பெண் ஒருத்தி!
வைஷு அதில் சைன் பண்ணும்போது கவனித்து விட்டு, அவளை அழைத்து, “என்னம்மா இது க்ராவிடா 2 லைவ் 2 என்று டைப் பண்ணியிருக்க? இது மதுவுக்கு தலைப் பிரசவம்!”
“அது வந்து டாக்டர், அவங்க பைலை என்னால் ஓபன் பண்ண முடியல! அதான் அவங்க கிட்டயே கேட்டுட்டு டைப் பண்ணினேன்! அவங்க தான் தனக்கு இது ரெண்டாவது குழந்தைன்னு சொன்னாங்க! மத்தது எல்லாம் கரெக்டா இருக்கா டாக்டர்!”
“எல்லாமே கரெக்ட்டா இருக்கும்மா, இது மட்டும் தான் தப்பு! நீ போய் கரைக்ட் பண்ணிட்டு வா
சொன்ன அவள் ரகுவிற்கு அழைத்து மதுவிடம் பேசினாள்.
“ஏன் மது உனக்கு இது ரெண்டாவது குழந்தைன்னு சொன்ன?”
“ம்ம் அதுவா.. எனக்கு இது ரெண்டாவது தான் அக்கா, மொதொ குழந்தை கொஞ்சம் பெரிசு! ரகுநந்தன்னு பேரு!”
“ஏய்! உங்க ரொமான்சுக்கு நானும் என் ஸ்டாப்பும் தான் கிடைச்சோமா?” அவள் செல்லமாக கோபித்தாள்!
இதை இப்போது நினைத்துக் கொண்டு சிரித்தபடி தனக்கு தாயாகவும் தாரமாகவும் இருக்கும் அவனின் மதுவை அணைத்துக் கொண்டான் ரகு!
அந்த ரூமில் இருந்த விஜிம்மாவின் போட்டோவில் அவரும் சிரிப்பது போல தெரிந்தது அவனுக்கு!
சுபம்!
error: Content is protected !!