அறைக்குள் அழுது கொண்டிருந்த மஹாலட்சுமியை சமாதானப்படுத்தி சாப்பிட வைத்தது ரதிதேவி தான். கண்ணனை அடித்ததால்.. மகாலட்சுமி மீது ரதி தேவிக்கு வருத்தமே. இருந்தாலும் அழும் அவரை அப்படியே விட மனசில்லாமல்… சாப்பிட வைத்தவள் சித்துவிற்கும் சாப்பாடு எடுத்து செல்ல,
அறையில் சித்து கையில் போனுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தான்.
“உள்ள வரலாமா…..”என்று ரதிதேவி உத்தரவு கேட்க,
போனில் பார்வையைப் பதித்திருந்த சித்தேஷ் குரல் வரும் திசையில் பார்க்க அங்கே ரதிதேவி நிற்பதை கண்டவன் , “என்னங்க இது கேட்டுட்டு உள்ள வாங்க…” என்றான்.
“என்ன அண்ணன் கூட சண்டை போட்ட மாதிரி போன் கூட சண்டை போல..”
“அதெல்லாம் ஒன்னு இல்லைங்க. கண்ணாக்கு தான் கால் பண்ணிட்டு இருக்கேன். எடுக்கவே மாட்றான். அம்மா வேற சாப்பிடாம போனதா சொன்னாங்க. கண்ணா அதிகமா வெளிய சாப்பிட மாட்டான். எவ்வளவு பசியா இருந்தாலும் நேரா வீட்டுக்கு வந்து தான் சாப்பிடுவான். ரொம்ப தூரமா வேற ட்ராவல் பண்ணிட்டு இருக்கான்…. அதான் சாப்பிட்டானா என்னன்னு கூட தெரியல. வீம்புக்காரன் போன் பண்ணா எடுக்க மாட்றான்.”
“அண்ணன் மேல அவ்வளவு பாசமா…”
ரதிதேவியின் வார்த்தையில்.. கிண்டலை விட கோபம் அதிகமாக இருப்பதை உணர்ந்த சித்து, “உங்களுக்கு அண்ணா மேல ரொம்ப பாசமோ. எனக்கும் கண்ணாக்கும் நடுவுல சண்டை புதுசு இல்ல. ஆனா இந்த முறை கொஞ்சம் அதிகமா போயிருச்சு. என் உடம்புல இருக்க பாதி தழும்பு அவனால தான். அம்மாவும் எப்பவும் என்னை மட்டும் தான் திட்டுவாங்க. கண்ணாவை ஒரு வார்த்தை சொல்ல மாட்டாங்க. சண்டை அப்ப கூட என்னதான் அடிக்க வந்தாங்க அது தவறிக் அவன் மேல பட்டுடுச்சு.”
“கண்டிப்பா தப்பு இல்ல. அவன் மட்டும் இல்ல.. வேற யாரு ஆதியை அடிச்சாலும் என்னோட ரியாக்சன் இதுவாத்தான் இருக்கும்.”
“அப்படி என்ன கூட பிறந்த அண்ணாவை விட … அவங்க உங்களுக்கு முக்கியமா போய்ட்டாங்க.”
“என்கூட பிறந்தவனுக்கே ஆதி தான் முக்கியம்..” என்ற சித்துவின் வார்த்தையில் புரியாது முழித்த ரதி தேவி …”என்ன சொல்றீங்க புரியல.”
“இந்த வீட்டில இருக்க எல்லாருக்குமே ஆதி முக்கியம் தான். போகப்போக உங்களுக்கே புரியும்…” என சித்து கூற…,
கோபத்தை மறைத்துக் கொண்ட ரதிதேவி அவனை சாப்பிட சொல்லிவிட்டு அங்கிருந்து ஆரதி அறைக்குள் நுழைய ,
அவளோ, கண்ணனின் புகைப்படத்தை அனைத்தவாறு கண்ணில் உப்பு படலம் தேங்கி நிற்க உறங்கிக் கொண்டிருந்தாள். அவளையே பார்த்திருந்த ரதிதேவி என்ன நினைத்தாலோ.. அணைத்துக் கொண்டிருக்கும் கண்ணனின் புகைப்படத்தை அவளிடமிருந்து பிரிக்க முயற்சிக்க,
அதன் அசைவில் நெளிந்த ஆரதி புகைப்படத்தை இன்னும் தனக்குள்ளே அணைத்துக் கொண்டு “ஆழி” என்று முணுமுணுக்க, எரிச்சலின் உச்சத்திற்கு சென்றாள் ரதிதேவி.
இரவு வீட்டிற்கு வந்த நாராயணனுக்கு சண்டை தெரியவர… அவர் முதலில் திட்டியது மஹாலட்சுமியை தான். அதில் இன்னும் வருந்திய மஹாலட்சுமி கண்ணில் நீருடன் தவிப்பாக அவரையே பார்க்க, மனைவியின் பார்வையில் தெரியும் பொருளுணர்ந்து கோபத்தை தனிக் ஆரம்பித்திருந்தார் நாராயணன். பின், கண்ணனுக்கு அழைக்க அவனோ தந்தையின் அழைப்பையும் நிராகரிக்க ஆரம்பித்திருந்தான்.
வீட்டில் இருந்து தொடர்ந்து வரும் அழைப்புகளை பார்த்தாலும் ஏனோ எடுக்க மட்டும் கண்ணனுக்கு மனம் வரவில்லை. அவனைப் பொறுத்தவரை வேலைக்கு சேர்ந்த நாள் முதல் இன்று வரை அதற்காக நேரம் காலம் பார்க்காமல் ஓடி இருக்கிறான். சிலநேரம் வீட்டையும், பலநேரம் அவனையும் மறந்து வேலையில் சுழன்று இருக்கிறான். அப்படிப்பட்டவனை…ஆரதி சொன்ன வார்த்தை நிலத்தை துளையிட்டு சேதப்படுத்திய இரும்பு போல் ஆழமாய் காயப்படுத்தி இருந்தது.
கோபம், அவமானம் , தன்னை புரிந்து கொள்ளாத ஏக்கம், புரிய வைக்க முடியாத இயலாமை என அவனை அவனே தாழ்த்தி வருத்தி கொண்டிருக்க …. நெஞ்சின் ஒரத்தில் தாயின் கண்ணீரும், ஆரதியின் அதிர்ந்த முகமும் வருவதை தடுக்க முடியவில்லை கண்ணனால்.
அனிதாவை கண்டுபிடித்து தர போடப்பட்டிருந்த ஆட்கொணர்வு மனுவில் கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடியவே….. சித்தேஷ் உயர்நீதிமன்றத்திற்கு வந்திருந்தான். மந்தவெளி காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர், அனிதாவை கண்டுபிடிப்பதில் சிக்கல் இருப்பதாகக் கருதி…. உயர்நீதிமன்றத்தில் மனுவாக உரிய விளக்கம் கொடுத்து அனிதாவை கண்டுபிடிப்பதற்கான கால அளவை நீட்டிக்க கோரியிருந்தார்.
அதை விசாரணைக்கு எடுத்த நீதிபதி.. ஏற்கனவே மூன்று மாதங்களாக நிலுவையில் உள்ள வழக்கில் மேலும் கால அளவை நீட்டிக்க கோரியிருந்த இன்ஸ்பெக்டரை சில நிபந்தனைகளோடு அந்த மனுவை ஏற்றுக்கொண்டு… ஒரு மாதத்திற்குள் அனிதாவை கண்டுபிடித்து தருமாறு உத்தரவிட்டிருந்தார்.
இதை அறிந்த சித்தேஷ்… ராசாத்தி அம்மாவிற்கு தகவல் தெரிவிக்க தொலைபேசியில் அழைக்க, அது ஆரதி சொன்னது போல் ஏற்கப்படாமல் இருந்தது.
கொல்கத்தாவில்,
ஏற்கனவே தனிப்படை அமைப்பு கொல்கத்தாவில் இருப்பதால் …. அவர்களிடம் விசாரணையின் நிலையை விசாரிக்க….
“சார்!! முன்னாடி சொன்ன மாதிரி அந்த நம்பர் ஒரே இடத்தில் மட்டும் தான் இத்தனை நாளா சிக்னல் காட்டுச்சு. ராபர்ட் பத்தின நியூஸ் எப்போ மீடியால வந்துச்சோ… அப்பவே அந்த சிக்னல் கட்டாயிடுச்சு. அப்படின்னா அந்த நம்பரை யூஸ் பண்ணிட்டு இருக்க ஆளுக்கு எல்லா விஷயங்களும் தெரிஞ்சிருக்கு… அதனாலதான் நம்ம கண்டுபிடிப்போம்’னு தெரிஞ்சு போன ஆஃப் பண்ணி வச்சிருக்கான்.
” கடைசியா சிக்னல் எந்த இடத்துல நின்னுச்சி அங்க விசாரிச்சு பார்த்தீங்களா…?”
“விசாரிச்சோம் சார். சிக்னல் நின்ன இடம்…. மக்கள் அதிகமா வாழுற வந்துலான் என்ற ஏரியாவுல தான் சார். அங்க விசாரிச்சு பார்த்ததுல … ராபர்ட் முகம் ஒருத்தருக்கு கூட தெரியலன்னு சொல்கிறாங்க சார். ஆனா சிக்னல் அந்த இடத்துல தான் காட்டுது… இந்தக் கேஸ் நமக்கு ரொம்ப சிக்கலா இருக்கும்’னு தோணுது சார்…” என்ற போலீஸ்காரரின் வார்த்தையை ஆமோதிப்பது போல்… தலையாட்டிய கண்ணன்..,
“நிச்சயமா சார். நம்ம இங்க வருவோம்’னு அவன் கெஸ் பண்ணி இருக்கான். அப்படி இல்லன்னா யாராச்சும் தகவல் சொல்லி இருக்கணும். இறந்தது ராபர்ட் னா… அப்போ ராபர்ட் பேருல இங்க இருக்குறது யாருன்னு தெரிஞ்சா மட்டும் தான் இந்த கேஸை முடிக்க முடியும்.” என்றான்.
“நீங்க சொல்றது உண்மைதான் சார். இத்தனை நாளா அமைதியா இருந்த கேஸ் இப்போ எப்படி இவ்வளவு பெருசாச்சு. ஒன்றுமில்லாத இந்த ரவுடியை எதுக்கு தான் மீடியாக்காரங்க இவ்வளவு பெருசா பேசி ஹீரோவாக்குறாங்கன்னு தான் எனக்கு புரியல சார்.” என்ற தனிப் படை அதிகாரியின் சலிப்பில் உள்ள உண்மையை அறிந்த கண்ணன்.. “அது அப்படித்தான் சார். அவங்கள பொறுத்த வரைக்கும் போலீஸ்காரங்க எல்லாருமே தப்பு பண்றவங்க. இல்லன்னா தப்புக்கு துணை போறவங்க. அவங்கள சொல்லியும் குத்தம் இல்ல சார். நம்ம நாட்டுல நடக்குற பாதி தப்புக்கு நம்ம ஆட்கள் தான துணை போறாங்க… “
“இப்போ என்ன சார் பண்றது…”
சிறிது நேரம் மௌனமாக கண்களை மூடி யோசித்த கண்ணன்…, “ராபர்ட் இங்க உண்மையான உருவத்து ல இருக்கனும்’னு அவசியம் இல்லையே சார். மாறு வேஷத்துல கூட இருக்கலாம். அதனால மக்களுக்கு அடையாளம் தெரியாம இருக்கலாம். என்னோட எண்ணம் சரியா இருந்தா ராபர்ட் கண்டிப்பா இங்க தான் இருக்கனும். தூரமா தேடிக்கிட்டு இருக்க நம்ம… பக்கத்துல இருக்க தடையத்தை விடுற மாதிரியே தோணுது..
எந்த இடத்துல சிக்னல் கரெக்டா கட் ஆச்சுன்னு பாருங்க சார். இன்னைக்கு அந்த இடத்த ரவுண்டப் பண்றோம். மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்க ஏரியா அது. சோ, பகல் நேரத்துல ரவுண்டப் பண்றது சரியா இருக்காது. இன்னைக்கு நைட் பன்னிரண்டு மணிக்கு மேல.. அந்த இடத்தை சுத்தி ரவுண்டப் பண்ணலாம். இங்க இருக்க இன்ஸ்பெக்டர் கிட்ட அதற்கான ஏற்பாட்டை பண்ண சொல்லுங்க சார்.” என்று கண்ணன் ராபர்ட்டை பிடிக்க வலை விரித்திருக்க… அதில் மாற்றப் போவது யாரோ……
இரவு முழுவதும் அழுததால்… கண்கள் இரண்டும் வீங்கி திறக்க விடாமல் அடம்பிடிக்க…. அதனுடன் போராடி தன் கண்களை மெல்லத் திறந்தாள் ஆரதி. எழுந்தவளின் நினைவில் கண்ணனே நிற்க…… அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்ப நினைத்து போனை எடுக்க நேற்று இரவு அனுப்பிய குறுஞ்செய்திகளே வாசிக்கப் படாமல் இருப்பதற்கான குறியீடு தெரிய கண்ணில் தானாகவே நீர் சுரந்தது. பின் குறுஞ்செய்தியை அனுப்ப மனம் வராமல் போனை வைத்துவிட்டு குளிக்கச் சென்றாள்.
குளித்து முடித்து கீழே இறங்கிவளின் செவியில் விழுந்தது ரதிதேவியின் வார்த்தைகள்தான். அவளும் மகாலட்சுமியும் சமையலறையில் சேர்ந்து சமைத்து கொண்டிருக்க… ஏனோ ஆரதிக்கு தன்னுடைய இடத்தில் வேறு யாரோ இருப்பது போன்ற உணர்வு. முயன்று தன்னை தேற்றியவள் வழக்கம்போல மகாலட்சுமியிடம்…, “அத்தை இன்னைக்கு என்ன கைவண்ணம்..” என கேட்க அவரோ ஆரதியின் பக்கம் திரும்பவே இல்லை.
மகாலட்சுமி பக்கத்தில் நின்றிருந்த ரதிதேவி தான்… உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே “இன்னைக்கு தோசை.. அதுவும் நான் தான் செஞ்சேன். இருங்க கொண்டு வரேன்.” என்று பதில் கொடுக்க,
ஆரதியின் பார்வை என்னமோ தன் அத்தை மீதே இருந்தது. மகாலட்சுமியும் அதை உணரத்தான் செய்தார்… ஆனால் அவள் புறம் திரும்பி பேச மட்டும் அவருக்கு மனம் வரவில்லை.
ரதிதேவி கொண்டுவந்த உணவை மறுத்த ஆரதி தன் வேலைக்கு புறப்பட தயாராக,
ரதிதேவி தான் முகம் வாடியவாறு.. “பாருங்க ஆண்ட்டி…. நான் எவ்வளவு ஆசையா சாப்பிட கொண்டு போனேன். அவங்க வேணாம்’னு சொல்லிட்டு போறாங்க. நான் செஞ்சதால சாப்பிடாம போய்ட்டாங்களா… இனிமே நான் எதுவும் செய்ய மாட்டேன்.” என்றவளை சமாதானப்படுத்த நினைத்த மகாலட்சுமி,
“நீ எதுக்குடா இவ்வளவு ஃபீல் பண்ற. சாப்டலன்னா போட்டும்… நீயும் நானும் சேர்ந்து சாப்பிடலாம்.” என்றவரின் வார்த்தை.. வாசலில் காலனி மாற்றிக் கொண்டிருந்த ஆரதியின் செவியில் விழ தனிமையில் தனித்து விடப்பட்டது போல உணர தொடங்கினாள்.
ஆரதி சென்ற சிறிது நேரத்திலே கீழ் இறங்கி வந்த சித்து.. “அம்மா இன்னைக்கு என்ன டிபன். எங்க இந்த ஆதி எருமைய இன்னும் காணோம்.” என்றவன் மேலே இருந்த ஆரதியின் அறை பக்கம் திரும்பி, “ஆதி….. இன்னும் என்ன பண்ற. சீக்கிரம் வா.. சாப்பிட்டு கிளம்பலாம்.” என்றவனுக்கு பதில் ஏதும் வராமல் போக,
இதை கவனித்துக் கொண்டிருந்த ரதிதேவி தான், “அவங்க இங்க இல்ல. நான் செஞ்ச தோசையை வேணாம்’னு சொல்லிட்டு போயிட்டாங்க.”என்றாள்.
ரதிதேவியின் வார்த்தையில்… நம்பிக்கை இல்லாமல் சித்தேஷ் தன் அன்னையைக் காண, அவரோ ஆரதிக்கு முகம் காட்டாமல் இருந்ததைப் போல் சித்துவிற்கும் இருந்தார். அதில்தான் நேற்று நடந்த சம்பவங்கள் சித்துவிற்கு நினைவு வர,
“அம்மா! இன்னும் உங்களுக்கு கோபம் போகலையா.. ஆதி கிட்ட இப்படித்தான் பேசாம இருந்தீர்களா. அவ பாவம்மா. நீங்க இப்படி அவாய்ட் பண்ணிங்கனா அவ தாங்க மாட்டாள். கண்ணா கூட அவ மேல நிச்சயமா கோபப்பட மாட்டான்.”
“அது எப்படி சாருக்கு உங்க மேல கோவம் இல்லன்னு நீங்க சொல்லலாம். உங்க மேல கோவமா இருக்குறதால தான் இப்ப வரைக்கும் உங்க கிட்ட பேசாம இருக்காரு. அதுவும் ஆரதி மேல ரொம்ப கோவமா இருப்பாங்க சார்.” என ரதிதேவி கூற,
“கண்ணா உன் கிட்ட சொன்னானா எங்க மேல கோவமா இருக்கன்னு. நான் எங்க அம்மா கிட்ட பேசிட்டு இருக்க. நீங்க கொஞ்ச நேரம் பேசாம இருங்க.” என்று சித்துவும் ரதி தேவிக்கு பதில் தர,
“அவ எதுக்கு பேசாம இருக்கணும். பேசக் கூடாத நேரத்துல நீங்கலாம் பேசினீங்க தான. அவள பேசக்கூடாதுன்னு சொல்ல இங்கு யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. அதே மாதிரி வீட்ல இருக்கவங்க சாப்பிடாம போனா அதுக்கு நான் பொறுப்பில்லை. விருப்பம் இருந்தா சாப்பிடுங்க இல்லனா பட்டினியா கிடங்க எனக்கு ஒன்னும் இல்ல ” என்ற மஹாலட்சுமி ரதிதேவி அழைத்து சாப்பிடச் சொல்ல,
அவளோ, “ஆன்ட்டி முதல்ல நீங்க உக்காருங்க. நேத்து கூட சரியா சாப்பிடல . ” மகாலட்சுமியை வலுக்கட்டாயமாக அமர வைத்து உணவு பரிமாற வேறு வழி இல்லாமல் மகாலட்சுமியும் உண்ண ஆரம்பித்தார்.
நாராயணனுக்கு விஷயம் தெரிந்தாலும் ஆரதி,சித்து இருவரிடமும் அதைப் பற்றி பேசவில்லை. மூன்று பேரைப் பற்றி நன்கு அறிந்தவராய் அதில் தலையிடாமல் ஒதுங்கி இருந்தார். காலையில் சாப்பிடாமல் ஆரதி சென்றிருப்பதை அறிந்தவர் அவளது பத்திரிக்கை அலுவலகத்திற்கு சென்றார்.
மாமாவின் வருகையை அறிந்த ஆரதி.. காரில் காத்திருக்கும் நாராயணனிடம் சென்று அமைதியாக அமர, அவரும் ஆரதி பேசும் வரை அமைதி காத்தார்.
“மாமா… அ…அது நான் நே.. நேத்து .. அவரிடம் பேச தயங்கி… வார்த்தையை உள்ளிழுத்து பேசிய ஆரதியை கண்டவர்,
“ஆதி ம்மா …. மாமாக்கு பசிக்கு சாப்டலாமா… டா .” என்று முழுதாக முடிப்பதற்குள் அவரின் தோளில் சாய்ந்து அழ ஆரம்பித்திருந்தாள் ஆரதி.
“ஆதி உங்க மூணு பேருக்குள்ள சண்டை நடந்தது எவ்ளோ உண்மையோ… அதே அளவுக்கு நீங்களே சமாதானம் ஆகிடுவிங்கன்றதும் உண்மை. இதுல தலையிட்டு… மொக்க வாங்க எனக்கு விருப்பமில்லை. அத்தையைப் பத்தி உனக்கு நல்லாவே தெரியும். என்னைக்காது உன்கிட்ட இப்படி நடந்திருக்காளா.. காலைல சாப்பிட வந்த சித்து கிட்ட கூட உன் அத்தை பேசல. உன் கிட்ட மட்டும் பேசலைன்னு நினைக்காத டா. அவளுக்கு சித்து, கண்ணன் எப்படியோ அதை விட ஒரு படி மேல தான் நீ. இதை மட்டும் மனசுல வச்சிக்கோ. அது உன் வீடு… உன்னை சாப்பிட சொல்லி யாரும் கூப்பிட வேணாம். உனக்கு அங்க எல்லா உரிமையும் இருக்கு. இன்னொரு தடவ சாப்பிடாம வராத… அப்புறம் மாமாவும் உன்கிட்ட பேசமாட்டேன்.” என்றவரின் வார்த்தையில் இருக்கும் அன்பை உணர்ந்தவள் வேறு எதுவும் பேசாமல் கொண்டுவந்த உணவை திறக்க,
அவளின் முக மாறுதலை உணர்ந்த நாராயணனின் மனதிலும் நிம்மதி பிறக்க தன் மருமகளுக்கு காலை உணவை ஊட்ட ஆரம்பித்தார்.
சரியாக இரவு 12. 6 என காட்டும் தன் கைக்கடிகாரத்தை சரி செய்தவாறு சுற்றி நிற்கும் போலீஸ்காரர்களிடம் சைகையால் வந்துலான் நகரில் உள்ள குறிப்பிட்ட அந்த வீட்டை சுற்றி வளைக்க சொன்னவன்.. தானும் அவர்களுடன் இணைய ஆரம்பித்தான்.
இரவு நேர அமைதியை… துணைக்கு எடுத்துக் கொண்ட காவல் அதிகாரிகள் நிதானமாக சுற்றி வளைத்து அந்த வீட்டை பார்த்துக்கொண்டே… கண்ணனின் உத்தரவுக்காக காத்திருக்க,
அவனும் சிறிது நேரம் யோசித்து விட்டு… உத்தரவிட,
சடசடவென உள்ளே நுழைந்த காவல் அதிகாரிகள் சுற்றியும் ஆளுக்கு ஒரு பக்கமாக.. கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து அவ்வீட்டின் கதவை தட்ட …..
…..
…..
……
…..
கதவு திறக்கப்படும் ஓசையில் கண்ணன் கையில் இருக்கும்… துப்பாக்கியை மேலே உயர்த்தி திறந்த நபரின் நெற்றிப் பொட்டில் வைத்திருந்தான்.
குற்றவாளியை பிடிக்க வந்திருந்தாலும்… அங்கிருக்கும் ஒவ்வொரு காவல் அதிகாரியும் நிதானமான பதட்டத்தில் இதயத் துடிப்பை அடக்கிக்கொண்டு குற்றவாளியை பிடிக்கும் முயற்சியில் இறங்கி இருக்க… அந்த இதயத் துடிப்பை ஏகத்துக்கும் எகிற வைப்பது போல்……… இருந்தது அங்கிருக்கும் ஒவ்வொரு காவல்துறை அதிகாரிகளுக்கும்.
காரணம்….
கண்ணனின் கைத்துப்பாக்கி நெற்றிப்பொட்டில் சுமந்துகொண்டு அதிர்ச்சியில் வார்த்தை வெளிவராமல்… கண்ணிரண்டும் பிதிங்கி உள்ளங்கையில் விழும் அளவிற்கு நடுக்கத்துடன் நின்றிருந்த பெண்ணை கண்டது தான்.