அதிகாலையில் எழுந்த கண்ணன், அங்கிருந்து கிளம்ப தயாராகி கண்ணாடி முன் நின்று தலை சீவிக்கொண்டு இருக்க, … பஞ்சு மெத்தையில் முழு மேனியையும் போர்த்தி மறைத்திருந்தவளின் பாதங்கள் மட்டும் பால் வெண்மையாய் கண்ணாடியில் தெளிவாய் தெரிய.. தானாய் கை நின்றது. ரசித்தவனின் கால்களும் தானாய் அவள் அருகில் நகர்ந்தது.
கண்ணாடியில் தெரிந்த பால்வண்ண பாதங்களில் அன்று அவன் வைத்த நகப்பூச்சு பாதி அழிந்தும் அழியாமலும் பத்துவிரல் கிரீடமாய் மின்ன மதியவன் மயங்கித்தான் போனேன்.
மெல்ல வருடிக் கொடுத்து ஒவ்வொரு விரலிலும் இதழ் ரேகைகள் பதிக்க, கால்கள் உள்ளிழுத்துக் கொண்டது. கடற்கரை மணலில் ஒளிந்து விளையாடும் நண்டு போல ஒவ்வொரு விரலும் சினிங்கி மறைய தன் கடமையை மறந்து பாதத்தில் தஞ்சம் அடைந்தான்.
வழக்கம்போல் அதிகாலை அலாரமே அவனை நிகழ்வுக்கு கொண்டு வர… தன்னை மீட்டுக் கொண்டு, “ஆதி.. நான் கிளம்புறேன். பத்திரமா இரு. உன்கிட்ட நிறைய பேசணும்’னு வந்த.. முடியல. நான் இல்லாத நேரத்துல அவன் கூட ஊர் சுத்திட்டா இருக்க. ரெண்டு நாள்ல வந்து உன் காலை உடைக்கிற இரு. நான் வர வரைக்கும் எங்கேயும் போகாத. திரும்பவும் அழுதுட்டு இருக்காதா.. டைம் கிடைக்கிறப்போ பேசுற ஆதி . நான் வந்தத யார்கிட்டயும் சொல்லாத.” என்றவன் மெல்ல முத்தமிட்டு விலக,
“எங்க போற…”காற்றாய் வார்த்தை வெளிவர,
“இவ்ளோ நேரம் என்னடி சொல்லிட்டு இருந்த.. மண்ட கலங்கி போச்சா..”
“எனக்காது கவங்கி போற அளவுக்கு ஏதாச்சும் இருக்கு கோலி கண்ணா. உனக்கு தான் அங்க ஒண்ணுமே இல்லாம சும்மா கிடக்கு.”
“ஒரே ஒரு மெசேஜ்க்கு ஓடி வந்தால இப்படித்தான் பேசுவ. நான் கிளம்புறேன் ஆதி. மணி ஆச்சு.” செல்பவனை மீண்டும் கைப்பிடித்து தடுத்தவள்..,
“அதெல்லாம் ஒண்ணும் போக வேண்டாம். அங்க இருக்கறவங்க கிட்ட நான் பேசிட்ட. நைட்டுக்கு கிளம்பினா போதும்.
“ஆதி விளையாடாதே..”
“ப்ச்! உண்மையாதான் ஆழி. இப்ப குளிக்க போனல அந்த கேப்புல தான் பேசினேன். அவங்களே அங்க சும்மாதான் இருக்காங்களா. சோ உன்னையும் வரவேண்டாம்னு சொல்லிட்டாங்க. ஆளே இல்லாத கடைக்கு டீ ஆத்த போகாம தூங்கு.” என்றவள் உறங்கச் செல்ல,
தலை முடியை இழுத்தவன் ..”பாவம் டி அவங்க தூங்கிட்டு இருந்திருப்பாங்க. இப்ப எதுக்கு எழுப்புன. இதெல்லாம் தப்பு ஆதி. அங்க முடிக்கவேண்டிய வேலை கொஞ்சம் இருக்கு. என்னை மாதிரி தான அவர்களும் பேமிலி விட்டுட்டு போயிருக்காங்க. ரெண்டு நாள்ல திரும்பி வந்துடுவ… ஆதி.”
பேசிப் பயனில்லை என்பதை அறிந்தவள்.., அமைதியாக உறங்கச் செல்ல, அவனுக்கு தன் போவதா வேண்டாமா என பெரும் குழப்பம். அவனது குழப்பத்தை…. தீர்க்கவே, உறங்கச் சென்றவள் தன் போனில் இருக்கும் குறுஞ்செய்தியை காட்ட..,
” குளிச்சி தண்ணிய வேஸ்ட் பண்ணிட்டேன்.” என அவனும் உறங்கச் சென்றான்.
உடற்பயிற்சிகளை முடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்த சித்து, வானதியின் அறைக்கதவை தட்டி அனுமதி கேட்க,
“வாங்க தம்பி எதுக்காக வெளிய நிக்கிறீங்க. “
“பரவால்ல ஆன்ட்டி. நைட் நல்லா தூங்குனீங்களா. உங்களுக்கு இங்க எல்லாமே ஓகே தானே. ஏதாச்சும் வேணும்’னா என்னை கேளுங்க. இல்ல’னா அம்மா கிட்ட கேளுங்க. அம்மா பண்ணி தருவாங்க. கேட்க தயங்கிட்டு அமைதியா இருந்துடாதீங்க. வானதிக்கு இப்போ ஓகேவா. டாக்டர் கிட்ட பேசி இருக்க ஆன்ட்டி. ஆதி கூட ஹாஸ்பிடலுக்கு போயிட்டு வந்துடுங்க.”என்றவனின் பேச்சை தாயும் மகளும் மறுக்காது கேட்டுக் கொண்டிருந்தனர்.
“சார் லா வேணாம் வானதி. பேர் சொல்லியே கூப்பிடுங்க பரவால்ல. வீட்டிலையும் யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. ஆதி உங்க கிட்ட தனியா பேசணும்’னு ஏற்கனவே சொல்லி இருந்தாள். எந்திரிச்சு வரட்டும் பேச சொல்றேன். உங்க அக்காவை பத்தி கூடிய சீக்கிரமே தெரிஞ்சிடும்.”என்றவனுக்கு வானதி தலையசைக்க, அங்கிருந்து புறப்பட்டான்.
“பித்துஉஉஊஊஊஊ” நடு வீட்டில் நின்று ஆரதி சத்தமிட, அறைக்குள் சென்றவன் அடித்துப் பிடித்து வெளியில் வந்தான். அவனோடு சேர்ந்து வீட்டில் இருப்பவர்களும்.
கண்ணனிடம் பேசாமல்.. அமைதியாக இருந்தவள் திடீரென சத்தமிட… அவளுக்குத்தான் ஏதோ பிரச்சனை என்று ஓடி வந்தவன் , “என்ன ஆதி…”
……………
பதில் கூறாமல் அமைதியாக இருந்த ஆரதியை பார்த்தவன் மேலும் பதறி, “ஆதி என்ன ஆச்சி … சீக்கிரம் சொல்லு. காலையிலேயே டென்ஷன் பண்ணாத.” கூறியவனின் கன்னத்தை பிடித்து இழுத்தவள்…,
“சும்மா சும்மா.. கூப்பிட்டு பார்த்த பித்து. எல்லாரும் வந்துட்டீங்களா. என்ன நல்லா பாத்துட்டீங்களா. ஆரதி ஹேப்பி.. ரொம்ப ரொம்ப ஹேப்பி.” என்றவள் சமையலறைக்குள் நுழைந்து.. போட்டு வைத்திருக்கும் டீ யை எடுத்து கொண்டு பறந்து விட்டாள்.
அங்கிருந்தவர்கள் தான் ஒன்றும் புரியவில்லை. அதிலும் சித்து , “அத்தை உங்க பொண்ணு நைட்டு ஒரு வேளை தான் சாப்பிடாம இருந்தாள். அதுக்கே இப்படி பைத்தியமாகிட்டா போல. இருங்க தெளிய வச்சுட்டு வரேன்.” ஆரதி அறை கதவு முன் நின்று கதவை தட்ட,
பாதி கதவை மட்டும் திறந்தவள் ஓரக்கண்ணால்.. “என்னடா பித்து. எதுக்கு வந்த. “
“உனக்கு என்னடி பைத்தியமா பிடிச்சிருக்கு. லூசு மாதிரி நடுவீட்டுல கத்திட்டு இப்ப என்ன’ன்னு என்னை கேக்குற. எதுக்கு கத்துன…”
“அதுவா.. பித்து. இங்க கிட்ட வா சொல்ற.. என ரகசியக் குரலிலில் அழைக்க,
சித்துவும் அவள் மேல் இருக்கும் அலாதி நம்பிக்கையில் அருகில் செல்ல, ” த்தூதூ… தெரிஞ்சு என்ன பண்ண போற. போடா.” பட்டென கதவை சாத்திவிட்டாள்.
“பிசாசு… பிசாசு ஆதி. பல்ல விளக்குனியா இல்லையா. இனிமே வா உனக்கு இருக்கு.” முகத்தை கைகளால் துடைத்து திரும்பியவனை பார்த்துக்கொண்டிருந்த ரதிதேவி தான், “நல்லா தொடச்சுக்கோங்க.” என்று விட்டு நகர,
ஆதி எதுக்கு கத்துன. நானே ஒரு நிமிஷம் பயந்துட்டேன்.”ஆரதியின் குரலில் தூக்கத்திலிருந்து எழுந்தவன்.. வெளியில் செல்லாமல் அறைக்குள்ளே சிக்கி தவிக்க,
“ஹா ஹா ஹா ஹா… இந்தக் குடும்பமே கொஞ்ச நாளா நான் சோகமா இருக்கிற பார்த்தாங்களா . அதான்… ஒரு கம்பேக் கொடுத்துட்டு வந்தேன். அதுவுமில்லாம எடுபுடி வேற இப்போ என் கையில வசமாக சிக்கி இருக்கானா… அவனை அப்படியே விட்டா ஆரதிக்கு என்ன மரியாதை.”
“அப்பவே நினைச்சேன் டி ரிப்பேரு.. கிளம்ப விடாம பிளான் பண்ணும் போதே. எதுவா இருந்தாலும் நமக்குள்ளேயே வச்சுக்கலாம் ஆதி. நான் வந்ததை மட்டும் வீட்ல சொல்லிடாத. அம்மா மட்டும் இருந்தா கூட பிரச்சினை இல்ல. அத்தை வேற இருக்காங்க ஆதி. அவங்கள பொறுத்தவரைக்கும் நான் ரொம்ப நல்லவன். இந்த மாதிரி அர்த்த ராத்திரியில உன் ரூம் குள்ள வந்தது தெரிஞ்சா.. என்ன நினைப்பாங்க. ப்ளீஸ் ஆதி..”
“இதெல்லாம் என்கிட்ட பேசாம இருந்தல அப்போ யோசிச்சு இருக்கணும். நான் எவ்வளவு பீல் பண்ணி இருப்ப.. ” என்றவள் அவனின் டீ-சர்ட்டை பற்றி, “இங்க இருக்காலே ஒருத்தி.. உன்னை பத்தி பேசி பேசியே என்னை வெறுப்பேத்துவா. அப்போலாம் எனக்கு எப்படி தெரியுமா இருக்கும்… அப்படியே.. இதோ இப்ப பிடிச்சிருக்கல இதே மாதிரி உன் கழுத்தை பிடிச்சி, இந்த முடிய நல்ல ஆட்டி…, ஓங்கி ஓங்கி மிதிக்கணும் போல இருக்கும். இன்னைக்கும் அவ பேசுவா சோ….. என்றவளின் திட்டத்தைப் புரிந்து கொண்டவன் உள்ளுக்குள் உதறல் எடுக்கும் மனதை அடக்கி விட்டு,
“அந்த பொண்ணு மேல உனக்கு என்னடி இவ்வளவு கோபம். பாவம் சின்ன பொண்ணு.. ஏதோ காப்பாத்துனதுக்கு நன்றி சொல்ல வந்திருக்கா. அதை புரிஞ்சுக்காம.. இவ்ளோ டென்ஷன் ஆகுற.”
“ஓஹோ அப்படியா… இந்தாங்க இந்த போனை ஆன் பண்ணி வச்சிக்கோங்க. நான் கீழ போற அங்க நடக்கிறத கேட்டுட்டு அப்புறம் பேசுங்க..”
கீழே அவள் சென்ற நேரம்… வழக்கம்போல் ரதிதேவி கண்ணனைப் பற்றியே பேச… மனதினில் சிரித்துக் கொண்டவள் “அம்மா எனக்கு டிபன் கொடுங்க நான் ரூம் ல சாப்பிட போற.”
“இது என்னடி புது பழக்கம். ஒழுங்கா இங்கயே சாப்பிடு. நைட்டு கூட சாப்பிடல.”தாயின் பேச்சுக்கு மறு வார்த்தை பேசாத பிள்ளையாய் அமைதியாக தட்டில் உணவை எடுத்து வைத்தவள், அமைதியாக உண்டு கொண்டிருக்கும் சித்துவின் காலை ஓங்கி மிதித்து விட்டு வழக்கம் போல் பறந்து விட்டாள்.
இவளின் செய்கை சிந்துவிற்கு தான் விசித்திரமாக தெரிய, புரியாது விழித்திருந்தான். ஏதோ ஒன்று..அவளது சிரிப்பே அவனை நிம்மதி அடைய செய்ய.. கத்திக் கொண்டிருக்கும் அத்தையை சமாதானப்படுத்தினான்.
அறைக்குள் சென்றவள் தனது பழியை தீர்த்துக் கொண்டு அடுத்த சுற்றிற்கு தயாராக இருக்க உணவையும் கொடுத்துவிட்டு நல்ல பிள்ளையாக கீழே இறங்க,
“ஆன்ட்டி.. சாருக்கு என்ன பிடிக்கும்னு சொல்லுங்க. சார் இங்க வரும்போது சர்ப்ரைஸா அதையே பண்ணலாம்.”ரதிதேவியின் வார்த்தையில் கொண்டு வந்த தட்டை டைனிங் டேபிளில் வைத்தவள், மீண்டும் தன் அறை நோக்கி பறக்க,
இந்தமுறை சித்து அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான்.
அதேபோல் கீழே வருவதும் மேலே செல்வதுமாக ஆரதி சுழன்று கொண்டிருக்க… சந்தேகத்தை உறுதி செய்த சித்து, நேற்று அண்ணன் வந்த வழியவே பின்பற்றி ஆரதியின் பால்கனிக்குள் குதிக்க,
காலை உணவுக்காக வீட்டில் வைத்த சாம்பாரும், சட்னியும் ஆடையில் அங்கங்கு சிதறி இருக்க, அறையில் உள்ள பொருட்கள் பாதி அவன் மேலே எறியப்பட்டு கீழே கிடக்க, மெத்தையின் பஞ்சு உயிரை மாய்த்து விட்டு அவன் தலையில் குடியேறி இருக்க, சார்ஜர் ஒயரால் கையிரண்டும் கட்டப்பட்டு… காயங்கள் ஏதும் இல்லாமல் பதமாக அடி வாங்கிக் கொண்டிருக்கும் தன் அண்ணனை கண்ட காட்சியில், அதலபாதாளத்தையே வாயில் காட்டும் அளவிற்கு தானாக வாய் திறந்திருந்தது.
“நான் அப்பவே நினைச்சேன். என்னடா.. நாலு நாள் சாப்பிடாத செத்த கோழி மாதிரி இருந்தவ ஈமு கோழி மாதிரி பறக்குறான்னு.. என்னடி இதெல்லாம். என்ன நடக்குது இங்க. நீ எப்படா வந்த… ரோஷமா இங்கிருந்து ஒருத்தன் கிளம்புனானே அவனை கொல்கத்தாலயே விட்டுட்டு வந்துட்டியா.” சித்துவின் வார்த்தையில் உஷ்ணம் ஏறிய கண்ணன்,
அவிழ்க்க முடியாத கயிறை அறுத்துக் கொண்டு ஓடுவது போல்… ஆக்சன் செய்தவன் , “ஏன்டா எருமை மாடு… உனக்கு வர இவ்ளோ நேரமா. அவ தான் வந்துட்டு போறான்னு தெரியுதுல … அப்பவே வந்து பார்க்க வேண்டியது தானடா. பரதேசி… நல்லா அடி வாங்கட்டுன்னு வெயிட் பண்ணி பொறுமையா வரியா. போலீஸ்காரன் கூட பார்க்காம கைக்கு கிடைக்கிறத தூக்கி தூக்கி அடிக்குறா டா…. சீக்கிரமா வந்து தொலைய வேண்டியதுதான.. என்றவன் ஆரதி கொடுத்த அடியையும் சேர்த்து அவனைப் பழி தீர்த்துக்கொள்ள…,
“எனக்கு எப்படி டா நீ வந்தது தெரியும்.”என்றவனின் வாயில் அடித்த கண்ணன், “நான் வந்தது தெரியாது… அவ என்ன பண்றான்னு என்னை விட உனக்கு தான தெரியும் நல்லா. நீ அப்பவே கெஸ் பண்ணி இருப்ப.. வேணும்’னே லேட்டா வந்துட்டு சமாளிக்கவா செய்ற. தம்பியை தும்சம் செய்து கொண்டிருப்பவனை வேகமாக தடுத்த ஆரதி அவள் பங்கிற்கு அடியை வழங்க,
“ஏய் பிசாசு ஆதி.. அவன் அடிச்சா கூட ஒரு ஞாயம் இருக்கு. நீ எதுக்குடி அடிக்கிற.”
“ஹான். எதுக்கா… அன்னைக்கு என்னோட ஆழிய எதுக்குடா அடிச்ச. ரெண்டு பேரு சண்டை போட்டுட்டு இருந்தா நடுவுல வந்து சமாதானம் பண்ணனும். அத விட்டுட்டு அடிக்கிற பெரிய ஹீரோவா நீ…”என்றவள் மீண்டும் அடியை வழங்க,