அனிதா வேலை செய்யும் கடைக்கு சென்ற ஆரதி…, சுபாவிடம் அனிதாவின் நடவடிக்கை பற்றி விசாரித்து அதன் முலம்
அவள் அடிக்கடி அருகில் இருக்கும் ஜூஸ் கடைக்கு செல்வது தெரியவர அங்கு சென்று விசாரித்தாள். அக்கடையில் கேமரா எதுவும் இல்லை என்ற பதில் அவளை ஆரம்பப் புள்ளிக்கே எடுத்து வந்தது.
கடைக்காரரின் உதவியோடு அருகில் இருக்கும் அனைத்து கடைகளிலும் பொருத்தப்பட்டிருக்கும் கேமராவை ஆராய்ச்சி செய்ய உருப்படியான எந்த தகவலும் வரவில்லை. இதை சித்துவிடும் தெரிவிக்க நினைத்து அவனுக்கு அழைத்தவள்,
“பித்து இங்க அனிதா வேலை செஞ்ச கடைக்கு பக்கத்துல இருக்க எல்லா கடையிலையும் விசாரிச்சிட்டேன் . அனிதா தனியா வந்த வீடியோ இருக்கு. அந்த சந்திரன் கூட சேர்ந்து வந்த மாதிரி எந்த வீடியோவும் இல்லை. “
“ம்ம்.. பரவால்ல ஆதி. நான் அனிதா நம்பரை சர்ச் பண்ணி பார்த்ததுல.. அவ அடிக்கடி ஒரு நம்பருக்கு கால் பண்ணி பல மணி நேரம் பேசி இருக்கா. ஆனா அந்த நம்பர் இப்போ உபயோகத்துல இல்ல. அந்த நம்பர் யாரு பேர்ல வாங்கி இருக்காங்கன்னு விசாரிக்கச் சொல்லி இருக்க ஆதி. இதுல கண்டிப்பா நமக்கு ஏதாச்சும் ஒரு தகவல் கிடைக்கும். இதை வைச்சே அவனை கண்டுபிடிச்சிடலாம்.”
“அதெல்லாம் சரிதான். ஆனா அனிதா டைரில இவன அடிக்கடி கடைக்கு எதிர்ல பார்த்ததா எழுதி இருக்காலே. அப்புறம் எப்படி ஒரு கடையில கூட.. அவனோட முகம் பதிவாகல. அவன் நம்மள ஃபாலோ பண்றானா… ஒருவேளை இப்போ நம்ம விசாரிக்கிறது கூட அவனுக்கு தெரிஞ்சிருக்கும்’னு நினைக்கிறேன்.”
“ஆதி நீ சொல்றது புரியுது. ஏதாச்சும் ஒரு கடைக்காரர் உதவி செஞ்சி இருப்பாங்க. எப்படி எல்லாரும் உதவி செய்ய முடியும். எதிர்ல இருக்க கடைனா நேரா இருக்க கடையின்னு அவசியம் இல்லையே. அதுக்கு பக்கத்துல இருக்கு கடை ஏதாச்சும் இருக்கலாம். அந்தக் கடையில கேமரா இல்லாமல் கூட இருக்கலாம். தப்பு பண்ணவன் ஏன் ஸ்மார்ட்டா மாட்டிக்க கூடாது’ன்னு பிளான் பண்ணி பண்ணியிருக்க கூடாது. அனிதா விஷயத்துல நீ ரொம்ப எமோஷனல் ஆகுற.. ஃபர்ஸ்ட் ரிப்போர்ட்டர் ஆரதியா நிதானமா யோசி…” என்றவன் மேலும் பேசாமல் அழைப்பைத் துண்டிக்க,
ஆரதிக்கு சித்துவின் வார்த்தையில் இருக்கும் உண்மை புரிய நிதானமாக அங்கிருக்கும் ஒவ்வொரு கடையும் நோட்டம் விட ஆரம்பித்தாள். அதே நேரம் அனிதாவின் விஷயத்தில் மட்டும் எதற்காக நிதானம் இல்லாமல் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறோம் என்பது மட்டும் புரியவில்லை அவளுக்கு.
வெகுநேரம் தெருவில் நின்று பார்த்தவளின் கண்ணில் விழுந்தது ஜூஸ் கடைக்கு அருகில் இருக்கும் சிறிய பெட்டிக்கடை. அங்கு வாலிபர்கள், பெரியவர்கள், சிறியவர்கள் என கூடிநின்று பேசுவதும், வட்ட புகைகளால் அருகில் இருப்பவர்களின் நாசியை தொந்தரவு செய்வதும் கண்ணில் பட, ஏனோ கால்கள் தானாக அக்கடையை நோக்கி சென்றது.
அங்கிருக்கும் வாலிபர்கள் இவளை வித்தியாசமாக பார்க்க.., அதை கண்டுகொள்ளாமல் கடைக்காரரிடம் நைசாக பேச்சு கொடுத்து மெல்ல மெல்ல அனிதாவின் பெயரை அவர் செவியில் உள்நுழைக்க ஆரம்பித்தாள். ஆரதியின் பேச்சில் பதில் கொடுக்க ஆரம்பித்த அப்பெரியவர் தானாகவே அனிதாவை தெரியும் என்று முன் வந்து நிற்க,
“நான் அவளோட அக்கா தான் தாத்தா. கொஞ்ச நாளா என் தங்கச்சி என் கிட்ட பேசாம வீட்டுல சண்டை போட்டுட்டு எங்கேயோ போயிட்டா. நாங்களும் நிறைய இடத்துல தேடிப் பார்த்துட்டோம். எங்கேயுமே கிடைக்கல. போன் பண்ணா கூட எடுக்க மாட்டேங்குது. அவ ரொம்ப நல்ல பொண்ணு தாத்தா. எந்தப் பையன் கிட்டேயும் பேச மாட்டாள். அவகிட்ட யாராச்சும் பேச வந்தாலும் பயந்து ஓடிடுவா. இப்போ எங்க என்ன பண்றாளோ தெரியல. என்னோட அம்மா அனிதாவை நினைச்சு அழுது அழுதே ஹாஸ்பிடல்ல இருக்காங்க. யாராச்சும் அவளைப் பத்தி சின்னதா ஒரு தகவல் சொன்னா கூட போதும். நிச்சயமா என் தங்கச்சிய கண்டுபிடிச்சிடுவேன்.”
“உன் தங்கச்சி மேல உனக்கு இருக்க பாசம் புரியுது மா. ஆனா உன் தங்கச்சி நடவடிக்கை ஒண்ணும் நான் பார்த்த வரைக்கும் சரியில்லை. இங்க அடிக்கடி ஒரு பையன.. பாத்து சிரிப்பா. வேலைய விட்டு போகும் போது இந்த பையனும் அவ பின்னாடியே போவான். (Phentermine) எப்ப பாரு முகத்துல ஹெல்மெட் போட்டுட்டு இருப்பான். உன் தங்கச்சி வந்தா மட்டும் தான் அதை கழட்டி முகத்தைக் காட்டுவான். டெய்லி இந்த கடையில வந்து உட்கார்ந்துட்டு உன் தங்கச்சி வரதையும் போறதையும் பார்க்குறது தான் அவனுக்கு வேலையே.”
“இதுக்குத்தான் நான் வாயைத் திறக்க மாட்டேன். சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க. நமக்கு எதுக்கு வம்புன்னு உண்மை தெரிஞ்சாலும் அமைதியா இருக்க வேண்டியதா இருக்கு.”
“ஐயோ தாத்தா நான் உங்களை தப்பு சொல்லல. என்னோட தங்கச்சியா இப்படி பண்ணான்னு நம்ப முடியல. நீங்க கோவிச்சுக்காம அந்த பையன பத்தி ஏதாச்சும் தெரிஞ்சா சொல்லுங்க தாத்தா. அந்தப் பையன கண்டுபிடிச்சா என் தங்கச்சியையும் கண்டு பிடிச்சிடலாம்.”
“அவனைப் பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாது மா. தினமும் இங்கு வந்து சிகரெட் பிடிச்சிட்டு உன் தங்கச்சிய நோட்டமிட்டுட்டு இருப்பான். அவ்வளவுதான்…”
“பார்க்க எப்படி இருப்பான் தாத்தா. “
“அதான் சொன்னேனே ம்மா எப்ப பாரு ஹெல்மெட் போட்டுட்டு இருப்பான்னு. சின்ன பையனா தான் இருப்பான்… ஹோண்டா சிபிஆர் பைக்ல வருவான். 8 மணி போல.. உன் தங்கச்சி வேலையை விட்டு வரும்போது.. நைஸா இந்த கடைக்கு வர மாதிரி வந்து அவன் கூட கொஞ்ச நேரம் பேசிட்டு போ வா. எப்பவுமே தனியா தான் வருவா யாரையும் கூட்டிட்டு எல்லாம் வர மாட்டா. “
“சரி தாத்தா அந்த பைக் கலர் ஹெல்மெட் கலர் இதெல்லாம் கொஞ்சம் உங்களுக்கு ஞாபகம் வருதா சொல்றீங்களா..”
“ஆரஞ்சு வெள்ளை கலந்த மாதிரி இருக்கும். ஹெல்மெட் மட்டும் கருப்பு கலர்ல இருக்கும். வண்டி நம்பர் கூட என்னமோ வரும்… அது… சரியா ஞாபகம் இல்ல மா ஆனா நாலு நம்பர் ல லாஸ்ட் மூணு நம்பர் மட்டும் 999 ல இருக்கும். “
ஒன்றும் இல்லாமல் நின்ற அவளுக்கு இத்தகவல் பெரிய வரமாக இருக்க மனதினுள் சித்துவிற்கு நன்றி சொல்லியவள் தன் வீடு நோக்கி புறப்பட்டாள்.
ஆரதி வீட்டிற்கு வரும் நேரம் சித்து வீட்டில் இருக்க, என்றும் இல்லாத அதிசயமாய் ரதிதேவி சித்து இருவரும் பேசிக் கொண்டிருக்கும் காட்சியே ஆரதி கண்ணில் விழு அவர்களை பார்த்துக்கொண்டே தன் அறைக்கு சென்றுவிட்டாள்.
அவள் பார்த்ததை சித்துவும், ரதிதேவியும் கவனித்தாலும்.. எதுவும் பேசாமல் தங்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்க அன்றைய பொழுதும் மெல்ல மெல்ல அடங்கி நாளைய எரிமலை வெடிப்பிற்கு தயாரானது.
கொல்கத்தாவில் தன் வேலைகளை முடித்துவிட்டு சென்னை திரும்பிக் கொண்டிருந்த கண்ணனுக்கு ரதிதேவி இடமிருந்து தொடர்ந்து அழைப்புகள் வர…. அதை எடுப்பதா வேண்டாமா என்று பெரும் குழப்பத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான் கண்ணன். குறுஞ்செய்தியும் அழைப்புகளும் தொடர்ந்து விடாமல் அடித்துக்கொண்டிருக்க வேறு வழியில்லாமல் அதை ஏற்ற அவனுக்கு…,
” சார் நீங்க எங்க இருக்கீங்க.. சீக்கிரமா வீட்டுக்கு வாங்க. இங்க என்னென்னமோ நடந்து போச்சு. “
ரதிதேவியின் பேச்சில் எதுவும் புரியாமல் அலுப்புக்கு ஆளானவன்..,
“ரதிதேவி என்ன விஷயம்னு தெளிவா சொல்லுங்க. இப்படி பாதிய சொன்னா என்ன அர்த்தம்.” என்றவனுக்கு,
காலையில் வீட்டில் நடந்த சம்பவங்களை விவரிக்கத் தொடங்கினாள் ……….,
அனிதாவைப் பற்றி சித்துவிடும் பேச.. நினைத்த ஆரதி அவனின் அறை கதவை தட்ட… அதைக்கண்ட சரஸ்வதி,
“நேத்து வீட்டுக்கு சீக்கிரமா வந்தவன் நைட்டு எங்க போனான்னு தெரியலை. வேலை இருந்திருக்கும் போல. முடிச்சுட்டு ரொம்ப லேட்டா தான் வந்தான். இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும். நீயும் இன்னைக்கு வேலைக்கு போகாத. வீட்ல இன்னைக்கு ஒரு முக்கியமான ஃபங்ஷன் இருக்கு.”
“என்ன பங்க்ஷன்…”
“நீ கேட்டா உடனே பதில் சொல்லனுமா… இன்னிக்கி வேலைக்கு போகாத லீவ் போடு. இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கே தெரியும். “
ஏற்கனவே அனிதா வழக்கில் தாமதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆரதிக்கு இன்றைய நாள் விடுப்பு எடுப்பதில் விருப்பம் இல்லாமல் போக தாயிடம், “செல்லவில்லை” என்றவள் அவர் பேசாமல் சென்றதும் வேக வேகமாக வீட்டை விட்டு வெளியேறினாள்.
இதை அரியாத சரஸ்வதி… இன்று ஒப்பு தாம்பலம் மாற்றுவதால் வேலையாட்களை அழைத்து வீட்டை அலங்கரிக்க சொல்லிருக்க, அவர்களும் அந்த வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். வெகு நேரம் உறங்கி விட்டு வெளியில் வந்த சித்துவிற்கு வீட்டின் தோரணங்கள் புரியாத செயலாக இருக்க, தன் தாயிடம் விசாரிக்க சென்றவன் பேச்சற்று நின்றான்…….சண்முகத்தின் ,
“என்ன சரஸ்வதி இது. அவளைப் பத்தி உனக்கு தெரியாதா. எங்கயும் போக மாட்டேன்னு சொல்லிட்டு யார்கிட்டயும் சொல்லாம கிளம்பி இருக்கா. இன்னமும் நம்ம பொண்ணுக்கு.. பொறுப்பு கொஞ்சம்கூட இல்லை. இவளை கட்டி கிட்டு… நம்ம மருமகன் சித்து என்ன பாடு பட போறாருன்னு தெரியல . என்றவரின் வார்த்தையில் தான்.
சில நொடிகள் அவ்வார்த்தை அவனுள் ஊடுருவி… சுரக்கும் ரத்தங்களே அணை கட்டும் தடுப்பாய்.. தடுக்கும் வேலையில் ஈடுபட்டு கொண்டிருக்க.., சண்முகத்தின், ‘இவளை கட்டிகிட்டு நம்ம மருமகன்’ என்ற வார்த்தையே மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.
ஒத்த வயதுடைய பெண்… என்பதையும் தாண்டி ஆரதி சித்துவிற்கு நல்ல தோழி. தன் தாயை விட மனதில் உயர்ந்த இடத்தில் இருப்பவள் ஆரதி. அன்று கண்ணனை அடித்தது கூட… அவள்மேல் சித்து கொண்டுள்ள அலாதி அன்பின் காரணமாக தானே..
மஹாலட்சுமியை விட ஆரதியிடமே அவன் அன்பை அதிகமாக உணர்ந்து இருக்கிறான். கண்ணனை அவள் காதலிப்பது சித்து அறிந்த ஒன்றே….. ஆனால் இன்றுவரை கண்ணனிடம் ஒரு முறை கூட தன்னை விட்டுக்கொடுக்காத அவளின் அன்பில் பலமுறை கண்ணனின் முன் கர்வமாக நின்றிருக்கிறான். தாய்க்கு அடுத்து.. ஒரு சகோதரியாக, தோழியாக, வழிகாட்டும் ஆசானாக.. பார்க்கும் ஆரதியை தன்னுடன் சேர்த்து அதுவும் கல்யாண எண்ணங்களை திணிக்கும் வார்த்தை நெருப்பில் எரியும் விறகை போல் சுட்டது அவன் மேனி எங்கும்.
பேச்சுக்களுக்கு நடுவே தன் மகனைக் கண்ட நாராயணன், “வா சித்து. நைட்டு வீட்டுக்கு வந்துட்டு எங்க போன. ரொம்ப லேட்டா வந்ததா உங்க அம்மா சொன்னா. “
குரலில் உயிர் இல்லாமல் …, “இங்க என்ன நடக்குதுன்னு கொஞ்சம் சொல்றீங்களா.”
மகனின் வார்த்தையில்.. சில நொடி யோசித்த நாராயணன் தங்களுக்குள் பேசி முடிவெடுத்ததை அவனிடம் சொல்ல..,
சோபாவிற்கு அருகில் போடப்பட்டுள்ள சிறிய கண்ணாடியிலான மேஜை சுக்குநூறாக உடைந்தது.. சித்துவின் கோபத்தில். அச்சத்தத்தில் அங்கிருந்த அத்தனை பேரும் தானாக எழுந்து நிற்க,
“யாரைக்கேட்டு இந்த முடிவு . நீங்க கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைக்கிற ஆரதி என் அம்மாவுக்கு அடுத்தபடியாக பார்க்கிற இன்னொரு அம்மாவ . அவ கிட்ட இப்ப வரைக்கும் தாய் பாசத்தையும், சகோதரி கண்டிப்பையும் பாத்திருக்கனே தவிர காதலை இல்ல. இந்த வார்த்தையை மட்டும் அவ கேட்டிருந்தா அவ்ளோ தான். எங்கள பெத்த உங்களுக்கே எங்க மனசு புரியல…” என்றவனின் வார்த்தையில் ஸ்தம்பித்து நின்ற வீட்டின் பெரியவர்கள்.. என்ன பேசுவதென தெரியாமல் மௌனமாகவே சித்துவை பார்த்து இருக்க,
கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தவன்..
மேற்கொண்டு இங்கு நின்றால்.. இதுவரை பார்க்காத தன் கோபத்தை இக்குடும்பம் பார்க்கும் என்பதை உணர்ந்து அங்கிருந்து வெளியேறினான். கையில் சிறு ரத்த காயங்களோடு …. செல்லும் தன் மகனைப் பார்த்த மஹாலட்சுமிக்கு தன் உயிரும் அவனோடு செல்வதைப் போல் இருக்க, மூச்சை இழுத்து மயங்கி சரிந்தார். அவரை எழுப்பி நிதானத்திற்கு கொண்டு வர அங்கு இருப்பவர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது.
சித்துவின் வார்த்தையில் தான் தாங்கள் செய்திருக்கும் தவறு பெரியவர்களுக்கு புரிய, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் மனதினுள் அவமானத்தை சுமந்து கொண்டிருந்தனர். அதிலும் சரஸ்வதி சண்முகம் தம்பதிக்கு.. கண்ணன் மருமகனாக வரவேண்டும் என்ற எண்ணம் பலிக்காமல் போக ..சித்து தன் மகளை மணந்து கொள்வான் என்ற நம்பிக்கையே அவர்களுக்கு போதுமான சந்தோஷமாக இருந்தது. அதுவும் இன்று நிறைவேறாமல் போக… மகளின் எதிர்காலத்தை குறித்த கவலையில் ஆழ்ந்து இருந்தனர்.
மஹாலட்சுமியோ, இரண்டாவது முறையாக ஆரதியை இந்த வீட்டு மருமகளாக்கும் எண்ணம் பலிக்காமல் போனதை அறிந்து உள்ளுக்குள் உடைந்து இருந்தார்.
அங்கு நடப்பதை முதலில் அதிர்ச்சியாகவும், பின் நிதானமாகவும்… கடைசியில் அவஸ்தையாகவும் உணரத் தொடங்கி இருந்தனர் மணிகண்டனும் மகேஸ்வரியும். இவர்களுக்குள் நடந்த கலவரத்தில் தங்கள் மகளின் கல்யாண பேச்சு ஆரம்பத்திலே தடை பட்டு விடுமோ என்ற எண்ணம் அவர்களுக்கு. ஒருவரையருவர் அர்த்தமாக பார்த்துக்கொண்டு நாராயணனிடம் திரும்பி,
“சார் உங்க ரெண்டாவது பையன் மனசுல என்ன இருக்குன்னு தெரியாம கல்யாண பேச்சு ஆரம்பித்தது தப்புதான். அதேநேரம் உங்க முதல் பையனோட ஆசையாது நிறைவேற்றி வைக்கனும் ல . நல்லவேளை தாம்பூலம் மாத்துறக்கு முன்னாடியே தெரிஞ்சதை நினைச்சி சந்தோஷப்படுங்க. இல்ல’ ன்னா இன்னும் பெரிய அவமானமாகி இருக்கும். நடந்தது நடந்து போச்சு… முன்னாடியே பேசின மாதிரி இன்னிக்கு கண்ணன் ரதிதேவி கல்யாணத்துக்கான ஒப்புதாம்பூலம் மாத்திக்கலாமே …..” மகளின் வாழ்க்கைக்காக பேசும் தந்தையை நிராகரிக்க தோன்றாது ..
“ம்ம் சார். கண்டிப்பா சொன்ன மாதிரி கண்ணன் ரதிதேவி ஒப்பு தாம்பூலம் நடக்கும். என்ன என் பையன் பேசுனதுதான் கொஞ்சம் மனசுக்கு கஷ்டமா இருக்கு. என் மனைவிக்கு ஆரதியை மருமகளா ஆக்கணும்னு ரொம்ப ஆசை. அது இரண்டாவது முறையா தவறானதால கவலையில இருக்கா. வேற ஒன்னும் இல்ல. நீங்க நடக்கவேண்டிய ஏற்பாட்டை பாருங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல கண்ணன் வந்திடுவான்.
தூங்கிக்கொண்டிருந்த ரதி தேவிக்கு கண்ணாடி உடையும் சத்தத்தில் தூக்கம் கலைய தன் அறையில் இருந்து வெளியில் வந்தவளை சித்தேஷ் கத்திய கத்தல் மட்டுமே வரவேற்க அதை அப்படியே கண்ணன் காதுக்கு மாற்றி இருந்தாள்.
ரதி தேவிக்கு தெரிந்த அனைத்தையும் கண்ணனிடம் சொல்லி முடிக்க… கட்டுக்கடங்காத கோபத்தில் செல்போனின் அனலையும் மிஞ்சிய கொதிப்பு அவன் தேகம் முழுதும். அவனின் ரதிக்கு திருமணம் என்பதையே ஏற்காதவன்… தன் தம்பியுடன் திருமணம் என்றதில் விஷத்தைக் கக்கும் நாகமாய் உடம்பு முழுவதும் தன் விரியத்தை பாய்ச்சி கொண்டிருக்க.., அவனின் சூழ்நிலை புரியாமல் அருகில் இருக்கும் போலீஸ்காரர் தோள் மீது கை வைத்து தட்ட… சினத்தில் அதனை தவிர்த்து விட்டு திரும்பி ஒரு பார்வை பார்த்தவனை கண்ட போலீஸ்காரரின் சர்வம் அடங்கியது கண்ணில் இருக்கும் கோபத்தை கண்டு. எதுவும் பேசாமல் வாகனத்திலிருந்து கீழே இறங்கியவன்… சாலையில் செல்லும் மூன்று சக்கர வாகனத்தை நிறுத்தி புறப்பட்டான்…