வீட்டிலிருந்து வெளியேறிய ஆரதி நேற்றைய தினம் சென்றிருந்த அனிதா வேலை பார்க்கும் கடைக்கு சென்றவள் மீண்டும் அங்கிருக்கும் கடைகளில் பேசி கேமராவை ஆய்வு செய்ய, அதில் பெட்டிக் கடைக்கார தாத்தா சொன்னது போல் ஒரு பைக் அடிக்கடி வருவதும் போவதுமாக இருக்க அதை சேகரித்து கொண்டாள். இதைப்பற்றி சித்திவிடம் தெரிவிக்க, போனில் அழைக்க, அவனது அழைப்பு எடுக்கப்படாமல் இருந்தது.
‘பித்து இன்னுமா தூங்கிட்டு இருக்க. இரு உனக்கு வந்து வச்சுக்குற’ மனதில் நிகழாத எண்ணங்களை நிகழ்ந்ததாக எண்ணிக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டு சென்றாள்.
வீட்டிலிருந்து வெளியேறியவன் கால் போன போக்கில் நடந்து கொண்டிருக்க, அந்த நேரம் வந்த ஆரதியின் அழைப்பு நிகழ்வுக்கு கொண்டு வந்தது. ‘காலையில வீட்டுல பேசுனது தெரிஞ்சுதான் கூப்பிடுறாளா..! இவ கிட்ட எப்படி இது விஷயமா பேசுவேன். ஒரு சின்ன வார்த்தை கூட அவ மனச காயப்படுத்த கூடாதுன்னு நினைப்பேன். இப்போ நானே அவ்ளோட கஷ்டத்திற்கு ஆளாகிட்டேன்.’ மனதில் ஆரதியோடு பயணித்துக்கொண்டிருந்தவன் ரோட்டில் பயணிப்பதை மறந்து… சென்று கொண்டிருக்க, எதிரில் வந்த காரில் மோத போனவனை இரும்புக்கரம் கொண்டு தன்னிடம் இழுத்த கண்ணன், சித்துவின் கன்னத்தில் ஒரு அறை கொடுக்க.. அந்த நேரம் அண்ணனை எதிர் பார்க்காதவன் அவனிடமே தஞ்சம் புக…
கண்ணில் அதே ரௌத்திரத்துடன் தன் தம்பியை அனைத்து இருந்தான் ஆழி கண்ணன்.
வீட்டிற்கு வந்தவள் வீட்டிலுள்ள அலங்காரத்தை கண்டு வாசலிலே நிற்க, காலையில் நடந்த பிரச்சனையை அறிந்துதான் ஆரதி வந்திருக்கிறாள் என்பதை உணர்ந்த பெரியவர்கள் எதிர்கொள்ள தயங்கி நிற்க, அவர்களின் நடவடிக்கையை கண்டவள் ஏதோ சரியில்லை என்பதை மட்டும் புரிந்து கொண்டு தன் அறைக்குள் சென்று விட்டாள்.
சிறிது நேரம் கழித்து சித்துவின் அறைக்குள் செல்ல… அவன் அங்கு இல்லாமல் போக மீண்டும் ஃபோனில் அழைத்தாள். அண்ணனின் தோள் மீது சாய்ந்து பயணித்துக்கொண்டிருந்த சித்துவின் கைகளில் திடீரென தடுமாற்றம் பிறக்க என்னவென கவனித்தவனை ஆரதி அழைப்பு பதில் கொடுத்தது. அதைப் பார்த்துவிட்டு தன் அண்ணனை நிமிர்ந்து பார்க்க,
“இன்னும் பத்து நிமிஷத்துல வீட்டுக்கு போய்டுவோம். அங்க போய் பாத்துக்கலாம்.”
“மாமா சித்து ரூம்ல இல்ல. எங்க போனா. போன் பண்ணா கூட எடுக்க மாட்றான்.”
அவளின் வார்த்தையிலே எதுவும் தெரியவில்லை என்பதை உணர்ந்த நாராயணன் மேற்கொண்டு பேச தயங்க,
மாமாவின் நடவடிக்கையில் பார்வையைத் தன் தந்தையிடம் திருப்ப, அவரும் அவளைக் கண்டு குனிந்து கொண்டார்.
“என்ன நடக்குது இந்த வீட்டுல. ஒரு கேள்வி கேட்டா பதில் சொல்லாம இப்படி முழிக்கிறிங்க.”
நிலைமையை சரி செய்ய நினைத்த மஹாலட்சுமி வெகுநாள் கழித்து தன் ஆசை மருமகளிடம்,
“ஒன்னும் இல்லடா சித்து கொஞ்சம் வேலையா வெளிய போய் இருக்கான். இன்னைக்கு வீட்ல ஒரு முக்கியமான பங்க்ஷன். அதான்.”
தன் அத்தை தன்னிடம் பேசியதில் உளமாற குதுகளித்தவள் “அத்த இப்பதான் என்கிட்ட பேசணும்னு தோணுச்சா உங்களுக்கு. ஆமா என்ன பங்க்ஷன்!” என்றவள் உணவு மேஜையில் இருக்கும் தண்ணீர் குவளை எடுக்க,
“கண்ணனுக்கும் ரதி தேவிக்கு கல்யாணம் பண்ணலாம்னு முடிவு எடுத்து இருக்கோம் ஆதி. அதுக்காக தான் சின்னதா ஒரு ஒப்பு தாம்பூலம் மாற்ற……..”
மகாலட்சுமியின் வார்த்தை பாதையிலே தடைப்பட்டது… ஆரதி கையில் இருக்கும் நீர்க்குவளையை கொண்டு வீட்டின் சுவற்றை பாதி மறைத்த அளவு இடம் பெற்றிருந்த தொலைக்காட்சி பெட்டியை அடித்ததில் . அடித்த வேகத்தில் அதுவும் சுக்கு நூறாக…சிறு மின்பொறி துகள்களை சிதறவிட்டு நொறுங்கி இருந்தது.
சித்து தன் கோபத்தை சிறு மேஜையில் காட்டி இருக்க ஆரதியோ அப்பெரிய தொலைக்காட்சிப் பெட்டியில் கட்டி இருந்தாள். அச்சட்டத்தில் அங்கிருந்தவர்கள் அனைவரும் பதறிக் கொண்டு தன் காதுகளை அழுந்த முடியும் சில நொடிகளுக்கு ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது அவர்களின் காதுகளில் அச் சத்தம்.
“யாருக்கு யார் கூட கல்யாணம். என் ஆழிக்கு பொண்டாட்டியா இங்க நான் ஒருத்தி இருக்கும்போது வேற எவளையோ பார்க்கிற தைரியம் உங்களுக்கு எங்கிருந்து வந்துச்சு. ஆஹான்… சொல்லுங்க யாரை கேட்டு இந்த கல்யாணத்த முடிவு பண்ணீங்க.”
அப்பொழுதுதான் வெளியில் சென்றுவிட்டு வந்த மணிகண்டனும் மகேஸ்வரியும் புரியாது விழிக்க அவர்களுடன் வந்த ரவி தேவியும் அப்படியே நின்றிருந்தாள்.
அவள் நிற்பதை அறிந்த ஆரதி, “யாரடி நீ .. உனக்கும் என் ஆழிக்கும் என்ன சம்பந்தம். எதுக்காக இந்த வீட்டுக்குள்ள வந்த. என் ஆழிய கல்யாணம் பண்ணனும்னு நெனச்ச உன்ன கொன்றுவேன்… இந்த வீட்ல நீ வந்ததில் இருந்து நடந்த ஒன்னு கூட சரியில்லை. நல்லா இருந்த குடும்பத்துக்குள்ள உன்னால தான் எல்லா பிரச்சினையும். மரியாதையா திரும்ப ஓடிரு. இல்லனா இந்த ஆரதியை வேற மாதிரி பார்க்க வேண்டி வரும்.” என்றவள் ரதிதேவியை நெருங்கிக் கொண்டே செல்ல அதை கவனித்த மணிகண்டன் மகளை தன் புறம் இழுத்துக் கொண்டு,
“என்ன சார் இதெல்லாம். என்னதான் நடக்குது இங்க. நம்ம ஏற்கனவே பேசி வைச்சது தானே. இந்த பொண்ணு வந்து என்னென்னமோ பேசுது. அதுவும் என் முன்னாடியே என் பொண்ண கொன்னுடுவன்னு வேற சொல்லுது. உங்க முகத்துக்காக தான் பாத்துட்டு சும்மா இருக்கேன். இல்ல இங்க நடக்கிறதே வேற.”
“என்ன பண்ணுவீங்க. சொல்லுங்க என்ன பண்ணுவீங்க. யாருகிட்ட பேசினீங்க….என் ஆழி கிட்டையா …! பேசி இருந்தா அப்புறம் தெரிஞ்சிருக்கும். “
காலையில் சித்து கொடுத்த அதிர்ச்சியிலிருந்தே மீளாதவர்கள் ஆரதியின் பெரும் அதிர்ச்சியில் பேசவும் மறந்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் நின்றபடியே நிற்க, அதைக்கண்ட மகேஸ்வரி,
மகேஸ்வரியின் வார்த்தையில் கடுகடுத்த ஆரதி தன் குடும்பத்திடம் திரும்பி, “எதுக்காக ஆழிக்கு இந்த பொண்ணு கூட கல்யாணம் பேச முடிவு எடுத்தீங்க. “
ஆரதியின் கேள்விக்கு நால்வரும் பதில் கூறாமல் அதிர்ச்சியில் அப்படியே நிற்க ரதிதேவி தான் எதையோ ஆரதியிடம் கூற வந்தாள். அவளை சிறிதும் கண்டுகொள்ளாத ஆரதி மீண்டும் அதே கேள்வியை தன் தந்தையின் முன் வைக்க சண்முகத்திற்கு மட்டுமில்ல அங்கிருந்த அனைவருக்கும் பதில் கூற முடியாத நிலை.
“மாமா நீங்களாச்சும் சொல்லுங்க…… இல்ல இங்க நடக்கிறதே வேற” என கை நீட்டி எச்சரித்த ஆரதியை கண்ட சரஸ்வதி,
“ஏய்!! ஆதி!!…என்ன இது பெரியவங்க முன்னாடி கைநீட்டி பேசுற. மொதல்ல கைய கீழ இறக்கு டி. “
தாயின் வார்த்தையும் சட்டை செய்யாத ஆரதி…மகாலட்சுமி கூர்ந்து அழுத்தமாக.. பார்க்க ..,முதல் முறையாக அப்பார்வை அவரின் மனதை அசைத்து இருந்தது.
“என்ன விட இவ எந்த விதத்துல உங்களுக்கு உசத்தியா போயிட்டா. என்னைய இத்தனை வருஷமா மருமக மருமக னு ஆசையாக கூப்பிட்டுட்டு இன்னிக்கு எவளையோ ஒருத்திய கட்டிவைக்க நினைக்கிறீங்க. எதுக்காக இப்படி பண்ணிங்க சொல்லுங்க அத்தை.”
.
ஆதி! இப்ப எதுக்காக கத்துற. என்ன ஏதுன்னு பொறுமையா பேசு. நீ என்ன சொல்ல வரேன்னு எங்களுக்கு புரியல. எதுக்காக உனக்கு இவ்வளவு கோபம் வருது…. சும்மா சும்மா கத்தாம விஷயம் என்னனு சொல்லு.” சரஸ்வதி.
“என் வாழ்க்கைக்காக பேசுறது உங்களுக்கு கத்தற மாதிரி இருக்கா. யாரைக் கேட்டு ஆழிக்கும் இவளுக்கும் கல்யாண பேச்சு எடுத்திங்க. இத்தனை வருஷமா எனக்கும் அவனுக்கும் தானே கல்யாணம் பண்ணனும்னு பேசிட்டு இருந்திங்க. “
“அண்ணா ! அவதான் எதோ புரியாம பேசிட்டு இருக்க நீங்க வேற. நம்ம கண்ணன் கிட்ட பேசிட்டு தானே இந்த கல்யாண பேச்சு எடுத்தோம்.”
தன் தாயின் வார்த்தைகளில் ஒரு நொடி அதிர்ந்தவள் கண்ணில் நீர் கோர்க்க, “ஆழி கிட்ட கேட்டு தான் இந்த ஏற்பாட்டை பண்ணிங்களா.”
“கண்ணன் கிட்ட கேட்காம எப்படி கல்யாண ஏற்பட்ட பண்ண முடியும். உன் அம்மா ஏற்கனவே கண்ணனுக்கு கால் பண்ணி இந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்க சம்மதமான்னு கேட்டா கண்ணனும் எனக்கு சம்மதம் னு சொன்னதுக்கு அப்புறம்தான் இந்த கல்யாண பேச்சை எடுத்தோம்.” சண்முகம்.
“இல்ல ..இல்ல… கண்டிப்பா சம்மதம் சொல்லி இருக்க மாட்டான் . அவன் காதலிக்கிறது என்னதான் ….என்னதான் … என்னதான்… “
“என்னதான் ஆதி சொல்ல வர. அன்னைக்கு மகாலட்சுமி கிட்ட நீ தான கண்ணனை கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லன்னு சொன்ன. அதுமட்டுமில்லாம நீங்க எப்ப பார்த்தாலும் சண்டை மட்டும்தான் போட்டு இருக்கீங்க. இன்னைக்கு வந்து இல்ல இல்லன்னு கத்திட்டு இருக்க. இங்க இருக்க யாருக்கும் ஒன்னும் புரியல. கண்ணன் கிட்ட ரதி தேவியை கல்யாணம் பண்ணிக்க கேட்டது உண்மை. கண்ணனும் முழு சம்மதம் சொன்னதுக்கு அப்புறம் தான் இந்த கல்யாணம் ஏற்பாடு நடக்குது. உன்னை காதலித்து இருந்தா அப்பவே மறுத்து இருப்பான் தான ஆதி. கண்ணன் விரும்புறது ரதிதேவியை தான் உன்னை இல்ல. “
சண்முகத்தின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த ரதிதேவி மீண்டும் ஆரதியின் அருகில் சென்று எதையோ கூற முற்பட இந்தமுறையும் அவளை தவிர்த்த ஆரதி….
தன் தந்தையின் வார்த்தையை நம்ப முடியாமல் ஆழியின் அன்பில் உயிர் வாழ்ந்து கொண்டிருந்தவளின் இதயம் தன் செயல்பாட்டை நிறுத்துவது போல் விட்டு விட்டு துடிக்க… இதில் உண்மை இல்லை என்று அறிந்தாலும் மனதின் ஓரத்தில் ஒரு வலி உண்டாவதை தடுக்க முடியவில்லை.
தன்னையும் அறியாமல் தன் பலவீனத்தை உணர ஆரம்பித்தவள் பேச்சு எழாமல் அங்கிருப்பவர்களை மாறி மாறி பார்த்தபடி ..கீழே சரிய அவளின் உயிரைத் தாங்கும்… மன்னவன் அவளையும் தாங்கினான்…
“ரதி….” என்ற அழைப்போடு.
தாங்கிய கைகளில் பாதுகாப்பையும், காதலையும் பெருமளவு உணர்ந்த பெண் உள்ளம்… அழைப்பில் வேறொருத்தி பெயர் வர… நிழலுக்கும் நிஜத்துக்கும் நடுவில் சிக்கிய பாவமான நிலை. மெல்ல தன் உதடை அசைத்து…
“உன் ரதி அங்க இருக்கா போ..” கண்ணனின் கைகளை தட்டி விட்டு எழ முயன்றவள் மீண்டும் தடுமாற,
இந்தமுறை சித்துவும் தன் ஏஞ்சலை தாங்கிக் கொண்டு உணவு மேஜையின் நாற்காலியில் அமர வைத்தான்.
நாற்காலியில் அமர்ந்தவளை ஒரு கை கொண்டு அணைத்துக்கொண்டே மறு கையால் நீரை புகட்ட… அதை தட்டி விட்டவள்… திரும்பி..,
“சித்து உன் அண்ணா கிட்ட சொல்லு ரதி அங்க இருக்கான்னு. அது மட்டும் இல்ல ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஏற்பாடு பண்றாங்க. சந்தோஷமா அவள கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ சொல்லு.”
ஆதியின் வார்த்தையில் அண்ணன் தம்பி இருவரும்.. திடுக்கிட்டு பரிதவிக்க..
சித்துவின் வார்த்தையை மறுத்தவள்…”இல்ல சித்து .. கல்யாண ஏற்பாடு உன் அண்ணாக்கும் ரதி தேவிக்கு தான். உன் அண்ணா கூட சம்மதம் சொல்லி இருக்கான்.”
ஆதியின் வார்த்தையில் தன் அண்ணனை நிமிர்ந்து பார்க்க ஏற்கனவே எரிமலை தனலாய் அனலை கக்கியவன் இப்பொழுது ஆதியின் வார்த்தையில் அணைத்திருந்த கையில் இறுக்கத்தை காட்ட…., அதை கண்டு கொண்ட சித்து தன் அண்ணனிடமிருந்து ஆரதியை காப்பாற்ற.. முயற்சித்துக் கொண்டிருக்க.., முயற்சி தோல்வியில் முடிந்தது அவன் வயிற்றோடு ஆரதி இறுகி இருக்க.
மனதில் தன் ஆழியை பற்றிய நம்பிக்கை வேரூன்றி இருந்தாலும்… சபையில் அதும் தன் குடும்பத்தாரால் சொல்லப்பட்ட விஷயங்கள் அவளை பலவீனமாக்கி இருக்க… கண்ணனின் அணைப்பு சுகமாகவே இருந்தது. அதில் அவன் வயிற்றோடு கைகளை இறுக்கி கொண்டவள்..,
மூன்றாவது முறையாக அவ்வீட்டில் உடையும் சத்தம் கேட்டது… ஒரு கையால் ஆதியை தாங்கிக் கொண்டு மறு கையால் உணவு மேசையை அடித்து நொறுக்கி இருந்தான் ஆழி கண்ணன்.
மூன்றாவது அதிர்ச்சியில் உறைந்திருந்த மற்றவர்களுடன் சேர்ந்து இந்த முறை சித்துவும் உறைந்து நிற்க…..
ஏனோ ஆரதி மட்டும் இன்னும் அவனோடு நெருங்கி இருந்தால் இறுக்கமாக வயிற்றை கட்டிக்கொண்டு.
கண்ணாடியிலான உணவு மேஜை… இறந்த நிலையில் சிறுசிறு வைரக்கற்களாய் தரையில் படர்ந்து கொண்டிருக்க… வைர கற்களுக்கு அழகு சேர்க்கும் விதமாக கண்ணனின் கைவிரல் ரத்தம் கிரீடமாக சென்று அமர்ந்தது.
இருவர் மனதிலும் நடுக்கத்தோடு தவிப்பும் சேர்ந்து இருக்க… மெல்ல ஆரதி முகத்தை நிமிர்த்தியவன்… கூர்மையாக பார்த்திருக்க,
“ரதி தேவியை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னியா..”
“ஆமா..” திடமாக வந்த வார்த்தையில் அவனிடம் இருந்து விலகிய ஆரதியை மீண்டும் ஒரு கையால் அணைத்துக் கொண்டு மறு கையால் கன்னத்தை பற்றி….
” ரதிய கல்யாணம் பண்ணிக்க சம்மதம்.”
கண்ணனின் வாயிலாக இவ்வார்த்தையைக் கேட்ட ஆரதி…. அதிர்வுடன் மீண்டும் விலக…
அவன் சேர்த்தணைக்க…
இவள் விலக…
சேர்த்தணைக்க…
இம்முறை பிடிவாதமாக விலக… அதை உணர்ந்தவன் வலுக்கட்டாயமாக பிடித்து…
“ரதிய கல்யாணம் பண்ணிக்க சம்மதம். “
“ஆ…ரதி…. ரதிய கல்யாணம் பண்ணிக்க சம்மதம்.”
விடை தெரிந்த வினாவிற்கு… புதியதொரு விடை கிடைக்க… கண்ணில் சொல்ல முடியாத பரவச நிலையில் மீண்டும் தன் காதலின் ஆழத்தை ஆழியின் கண்களில் கண்டவள்… பதிலுக்கு கண்ணீருடன் சேர்த்தணைத்து முத்தமிட்டாள் வாழ்நாள் முழுதும் அவளை தாங்கும் நெஞ்சுக்கு.