ஆழி!! இந்த ஏற்பாட்டை எப்ப பண்ண. இதை பண்ண தான் வேலை இருக்குன்னு கிளம்பி போனியா. சத்தியமா எதிர்பார்க்கல….ஆழி. கார்ல வரும்போது சொன்னல அந்த நாளை விட சிறப்பான ஒரு நாள தர முடியும்’னு அது வெறும் வார்த்தை இல்லன்னு இப்ப புரிஞ்சிக்கிட்டேன். எப்படிடா உனக்கு மட்டும் இதெல்லாம் தோணுது.”மனையாளின் ஆச்சரியத்தில்.. மகிழ்ந்த கண்ணனும்,
“நிஜமாவே நேத்து ராத்திரி வேலை இருந்துச்சு ரதி. மறுநாள் இங்க கூட்டிட்டு வர தான் பிளான்… அது அப்படி இப்படின்னு சொதப்பி எப்படியோ வந்துடுச்சு. நம்ம நிச்சயதார்த்தம் நடந்த அப்பவே மாமா கிட்ட சொல்லி சின்ன வயசுல இந்த வீடு எப்படி இருந்ததோ அதே மாதிரி எல்லா பொருளையும் ரெடி பண்ணி வீட்டை மாத்திட்டேன். இது வீடு மட்டும் இல்ல . என் ரதியோட பல பொக்கிஷங்களை பத்திரப்படுத்தி வைச்சிருக்க பெட்டகம். அஞ்சு வயசுல என் தம்பிய பார்க்குற ஆர்வத்தை விட உன்னை பார்க்க இந்த வீட்டுக்கு ஓடி வந்த நாட்கள் நிறைய… ரதி. அப்ப தெரியாது நீ தான் என்னோட மனைவியா இதே வீட்டுக்குள்ள இருக்க போறேன் னு . ஏதோ கிட்டத்தட்ட 25 வருஷத்தை வேகமாக சுழற்றி நிறுத்தின மாதிரி இருக்கு… ரதி. இன்னும் கேட்டா நம்ம கல்யாணத்தையே இந்த வீட்டுல நடத்தணும்’னு தான் ஆசைப்பட்டேன். உனக்காக தான் நந்தவனம் ல நடந்துச்சு. இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல….. என் பொண்டாட்டியோட சீமந்தத்தையும், பிள்ளை பிறப்பையும் இதே வீட்டுல சிறப்பா நடத்திடலாம்.” என்ற கண்ணனின் செயலும் சிறப்பாக தன் மனையாளிடம் செயல்பட…. தம்பதியருக்கு துணையாக கதவும் சாத்தப்பட்டது.
ஆரதியின் பிறந்த ஊரில் தான் இருவரும் இருக்கின்றனர் தங்களின் தேனிலவுக்காக. நாராயணனும் சண்முகமும் ஒரே ஊர் என்றாலும் நாராயணின் வீடு வசதி நிறைந்ததாக இருக்கும். சண்முகத்தின் வீடோ பழமை மாறாத தோட்டங்களுக்கு நடுவில் இருக்கும் பண்ணை வீடு. சிறு வயதிலிருந்தே கண்ணன் சரஸ்வதியிடம் அதிகம் வளர்ந்ததால் இவ்வீட்டின் சூழ்நிலையை பெரிதும் ரசிக்க ஆரம்பித்து இருந்தான். அத்தோடு சிறு வயது ரதியையும் சேர்த்து. கால மாற்றங்களால் ஆரதியின் படிப்பிற்காக… அதே ஊரில் வேறு ஒரு வீடு கட்டி குடியேறிவிட்டனர் சண்முகம் குடும்பத்தினர். பல வருடங்களாக இந்த வீடு பூட்டியே இருந்தது. ஒவ்வொரு முறையும் விடுமுறைக்காக வரும் கண்ணனின் மனம் இந்த வீட்டைச் சுற்றியே ஓடிக்கொண்டிருக்கும். சிறுவயதில் கேட்க முடியாத சூழ்நிலையில் அமைதியாக இருந்து விடுவான். இன்றோ இவ்வீட்டின் மருமகன் அல்லவா…..! உரிமையாய் மாமனாரிடம் தயார்படுத்த சொல்லிவிட்டு தன் மனைவியுடன் கொஞ்சிக் கொண்டிருக்கிறான் நேரம் காலம் பார்க்காமல்.
இரண்டு நாட்கள் சென்று இருக்க…. அவ்வீட்டில் ஒலித்த சத்தங்கள் எல்லாம் எடுபுடி…ரிப்பேரு…..ஆழீழீழீ….ரதீதீதீதீ… ….கண்ணா… ஆதி…. மட்டும் தான். இடம் மறந்து, பசி மறந்து, குடும்பம் மறந்து, வேலை மறந்து சிலநேரம் தங்களையும் மறந்து… தம்பதிகள் இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்து இருந்தனர். சித்துவிடம் பேசி ஆரதிக்கு தேவையானதை எடுத்து வர ஏற்பாடு செய்திருந்தான் கண்ணன்.
ஒவ்வொரு நாளும் தங்களுக்கே உண்டான நாளாக இருவரும் மாற்றிக் கொண்டிருக்க…. சிறுவயதில் மறைந்து மறைந்து ரசித்த அத்தனையும் வெளிப்படையாக ரசிக்க ஆரம்பித்து இருந்தது இருவரின் கண்களும்.
ஒரு வாரங்கள் கடந்து இருக்க…. இரவு 2 மணி போல் ஆரதியின் கைபேசி விடாமல் அடித்துக் கொண்டிருந்தது. இருவருக்கும் ஃபோனில் வேலை இல்லை என்பதால் நட்ட நடு ஹாலில் தனியாக விட்டுவிட்டு சென்றிருக்க அதுவோ கதறிக் கொண்டிருந்தது. யார் செய்த புண்ணியமோ கண்ணனின் காதிற்கு அது எட்டிவிட மெதுவாக கண் சிமிட்டி நிதானத்திற்கு வந்தவன் எழுந்து ஹாலிற்கு வந்தான். ‘இந்த ராத்திரியில்..அழைப்பது யாராக இருக்கும்’ என்ற யோசனையோடு பார்த்தவனுக்கு கொலை வெறியே வந்துவிட்டது…. சித்துவின் முகம் பொருந்திய அழைப்பொலியில்.
“என்னடா ஒரு வாரமா எந்த தொந்தரவும் பண்ணலையேன்னு நினைச்சேன். வந்துட்டேன் கடன்காரன்… முதல்ல இவனை எங்கையாது நாடு கடத்தனும்..”போனை எடுக்காமல் அதனுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்க, மீண்டும் அழைப்பு வந்து கொண்டே இருந்தது. வேகமாக அதை எடுத்து திட்ட ஆரம்பித்தவனை முந்திக் கொண்ட சித்து,
“அறிவு இல்லையாடா உனக்கு. எத்தனை தடவை கூப்பிடுறேன். எடுக்கத் தெரியாதா. இந்த நேரத்துல என் ஏஞ்சல் தான் தூங்கிட்டு இருப்பா. உனக்கு என்ன கேடு வந்துச்சு எடுக்க வேண்டியது தான… போனை வைச்சிட்டு வந்து கதவைத் திற டா… எவ்ளோ நேரம்தான் வெளியவே நிற்கிறது…” படபடவென பேசி விட்டு போனை வைத்துவிட்டான்.
கண்ணனுக்கு தான் தம்பி மீது கொலை வெறி வந்து விட்டது. வேக வேகமாக வெளியில் சென்றவன் கதவை திறக்க…., “இங்க பாரு நான் தொந்தரவு பண்ணனும்’னு வரல. ஆதி கிட்ட ஒரே ஒரு விஷயம் சொல்லிட்டு போகணும் அதான் வந்தேன். சொல்லிட்டு விடிய காலையிலே கிளம்பிடுவேன். என்னால உனக்கு எந்த தொந்தரவும் வராது. நம்பி உள்ள விடு…” அண்ணன் கேட்கப் போகும் ஒவ்வொரு கேள்விக்கும் நல்ல பிள்ளையாக முன்னரே பதில் சொல்லி விட கோபம் மறந்து சிரிப்பு வந்து விட்டது கண்ணனுக்கு.
“அப்படி என்னடா விஷயம். போன்ல சொல்லி இருக்கலாம்ல. வீட்டுக்குள்ளலாம் விட முடியாது அப்படியே ஓடிடு…..”
“ப்ச்!!! பச்ச புள்ள.. போன் பண்ணதுக்கே எடுக்க முடியாம இருக்கீங்க. இதுல விஷயம் என்னன்னு சொல்றவரைக்கும் சும்மா இருப்பியா நீ. அதுவுமில்லாம என்னோட ஆதியை பார்க்க யாரோட பர்மிஷன்னும் எனக்கு வேணாம். நீயா வழிய விட்டா நல்லது இல்லை’னா…”
“இல்ல’னா….”
“இங்க இருந்து நான் கிளம்பும்போது பின்னாடி நீயும் கிளம்ப வேண்டியதா இருக்கும்.” கை இரண்டையும் மடக்கி கட்டிக்கொண்டு தெனாவெட்டாக கூற, அதற்குமேல் கண்ணனிடம் வார்த்தைகள் இல்லை. தம்பியின் தகிடுதத்தமும் , ஆதியின் ஒத்து ஊதலும் நினைவு வர தன் விதியை நொந்து கொண்டு சிரித்த முகமாகவே அழைத்துச் சென்றான் சித்தேஷ் கண்ணனை.
“டேய் பித்து…! நீ எப்படா வந்த… அண்ணனும் தம்பியும் சேர்ந்து என்ன பிளான் பண்ணி இருக்கீங்க.” எழுந்து வந்த ஆரதி நிலைமை புரியாமல் பேச,
‘ஆமா … போடுறாங்க பிளான் னு. நானே இவன் சொல்லிட்டு கிளம்பிடுவானா.. இல்லை இங்கேயே டேரா போட்டுவானான்னு பயந்துட்டு இருக்க இவ வேற…’ என மனதில் கண்ணன்.. யாருக்கும் கேட்காமல் அழுது கொண்டிருந்தான்.
“நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன் பித்து. நீ என்னடா ரொம்ப ஒல்லியான மாதிரி இருக்கு சரியா சாப்பிடுறது இல்லையா?” அதை விட அக்கறையோடு ஆரதியும் வினவ,
“இதுக்கு மேல ஏதாச்சும் பேசினீங்கனா விரட்டி விரட்டி அடிப்பேன் ரெண்டு பேரையும். வந்த விஷயத்தை சொல்லிட்டு சீக்கிரம் கிளம்புடா… என்னமோ பத்து வருஷம் பார்க்காதவங்க மாதிரி உருகி உருகி கொஞ்சிட்டு இருக்கீங்க..” என்ற கண்ணனின் பேச்சில் இருக்கும் கடுப்பை கண்டுகொண்ட சித்து வந்த விஷயத்தை கூற தொடங்கினான்.
“ஆதி… நான் வானதியை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். அதுவும் அடுத்த முகூர்த்தத்துல….” பட்டென இரண்டே வரியில் வந்த விஷயத்தைக் கூறி விட , கேட்டுக்கொண்டு இருந்த இருவருக்கும் தான் ஹார்ட் அட்டாக் வந்து விட்டது.
“சித்து... என்ன பேசுறன்னு புரியுதா..? எதுக்கு இந்த திடீர் முடிவு. அதுவும் அடுத்த முகூர்த்தத்துல பண்ற அளவுக்கு.” கண்ணன் கோவமாக கேள்வி கேட்டுக் கொண்டிருக்க அவனை தவிர்த்து ஆரதியிடம்,
“ஆதி யாருக்கு என்ன தெரியுதோ இல்லையோ உனக்கு என்ன நல்லாவே தெரியும். இதுவரைக்கும் இந்த மாதிரி உன் கிட்ட பேசினது கூட இல்லை. இன்னைக்கு பேசுறன்னா யோசிச்சு பாரு.. நான் எல்லாத்தையும் யோசிச்சிட்டு கடைசியா தான் இந்த முடிவுக்கு வந்தேன். உனக்கு என் மேல நம்பிக்கை இருந்தா… எனக்காக வீட்டுல பேசி இந்த கல்யாணத்தை பண்ணி வை.” அப்போதும் ஆரதி அமைதியாகவே அவன் கண்களை பார்த்து இருக்க கண்ணன்தான் குதித்து விட்டான்.
அண்ணன் தம்பி இருவருக்கும் வாக்கு வாதங்கள் தொடர்ந்து கொண்டே இருக்க… ஆரதியின் பார்வை மட்டும் சித்துவை சுற்றிக் கொண்டிருந்தது. “அந்த பொண்ணு படிச்சுக்கிட்டு இருக்கா எப்படி உனக்கு கல்யாணம் பண்ணி தர முடியும். அப்படி விரும்புறதா இருந்தா வெயிட் பண்ணு. படிச்சி முடிச்சதும் அம்மா கிட்ட பேசி கல்யாணம் பண்ணிக்கலாம். ஆரதி பொறுப்புல அந்த பொண்ணு இங்க இருக்கா. இப்ப எங்க வீட்டுப் பையனுக்கு கல்யாணம் பண்ணி கொடுங்கன்னு கேட்டா என்ன நினைப்பாங்க. எனக்கு கல்யாணமாகி இன்னும் ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள்ள உனக்கு என்னடா அவசரம்…” கண்ணன் கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு சித்துவிடம் பதில் இல்லை. ஆனாலும் தன் எண்ணத்தில் மாறாமல் அண்ணனிடம் தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்டிருக்க… வெகு நேரம் கழித்தே ஆரதி கண்ணனை அமைதிப்படுத்தினாள்.
“சித்து.. கல்யாணம் பண்ணிக்க மட்டும் விரும்புறியா..? இல்ல வானதியையும் சேர்த்து விரும்புறியா..?”
“இரண்டு தான் ஆதி.”
“வானதி உன்ன விரும்புகிறாளா..”
“ஹ்ம்ம்… வாய்விட்டு சொல்லல. நான் உணர்ந்திருக்கிறேன்…. ஆதி.”
“உங்களுக்குள்ள என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்கலாமா…?”
ஆரதி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் மௌனம் காக்க,
“சரி நீ கிளம்பு. நான் என் புருஷன் கிட்ட பேசிட்டு… முடிவு என்னன்னு சொல்ற.” என்றதும் தான் தாமதம் வந்த வேலை முடிந்து விட்ட திருப்தியில் யாரையும் பார்க்காமல் சென்றுவிட்டான் சித்தேஷ் கண்ணன்.
அவன் சென்றபின் இதுவரை இருந்த அழகான காதல் மறந்து இருவருக்குள்ளும் பிளவு ஏற்பட ஆரம்பித்தது. அடுத்தடுத்து இரண்டு நாட்கள் இருவருமே சித்துவை வைத்து சண்டை பிடித்துக் கொண்டிருக்க…. யாரும் யாருக்காகவும் இறங்கி வராமல் இருந்தார்கள். இதற்கெல்லாம் காரணமான சித்து… எந்த மனக் குழப்பமும் இல்லாமல் தெளிவாக தன் வேலையை கவனித்துக் கொண்டிருந்தான்.
அதற்கு மாறாக வானதியோ… சில தினங்களுக்கு முன் இருந்ததை போலவே மிகவும் மோசமான மனநிலையில் இருந்தாள். எண்ணத்தில் அன்று சித்தியிடம் பேசியது நினைவு வந்தது. ஆரதி கண்ணன் இருவரும் தேனிலவுக்கு சென்றிருக்க, வீட்டிலிருந்த ஒவ்வொருவரும்… தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருந்தனர். தினமும் கல்லூரி முடித்துவிட்டு வீட்டிற்கு வரும் வானதியை அன்று சித்துவுடன் சேர்ந்து வெறும் வீடே வரவேற்க… ” சித்து வீட்ல யாரும் இல்லையா?”
“என்ன பாத்தா மனுஷன் மாதிரி தெரியலையா வானு உனக்கு.”
“தெரிஞ்சா எதுக்கு யாருமில்லையானு கேட்க போற சித்து.” சிரித்துக்கொண்டே பதில் சொல்லியவளுக்கு டீயை கொடுத்து வரவேற்றான் சித்து. கண்ணன் திருமணத்திலிருந்து சித்துவை காரணத்தோடு தவிர்த்து கொண்டிருந்தால் வானதி. அதை சித்து உணர்ந்தாலும் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. இன்று அதற்கான தருணமாக அமைந்து விட காரணத்தை கேட்டான்.
பதில் இல்லை வானதியிடம். பதில் வராமல் போனாலும் தொடர்ந்து அவளுடன் பேச்சு வளர்க்க விரும்பிய சித்து அதை சிறப்பாக செய்து கொண்டிருக்க… வானதிக்கு தான் பெரும் அவஸ்தையாக இருந்தது. அவனுடன் ஒன்ற துடிக்கும் மனதை அடக்க முடியாமல் அங்கிருந்து செல்வதாகக் கூறி எழுந்து விட…. “எங்க போற வானு… உட்காரு.” முதல் முறையாக உரிமையோடு வானதியின் கைபிடித்து பேச, அந்த நேரம் வீட்டு வேலையாள் ஒருவர் உள்ளே வந்தார். அவர்களைப் பார்த்து விட்டு எதுவும் பேசாமல் வந்தவர் மீண்டும் வெளியில் சென்று விட வானதிக்கு தான் கோபம் விண்ணைத் தொட்டது.
“கையை விடுங்க. எதுக்காக கைய பிடிச்சி பேசுறீங்க. உங்க ஆதரவுல இருந்தா என்ன வேணா பண்ணுவீங்களா? கேட்க யாரும் இல்லாததால உங்க இஷ்டத்துக்கு தொட்டு பேசாதீங்க. அக்கா மாதிரி ஒன்னும் நான் இல்லை. உங்க தேவைக்காக பழகிட்டு கழட்டி விடலாம்’னு பார்க்கிறீங்களா. வரவர உங்க பேச்சும், பார்வையும் ஒன்னும் சரியில்ல. உங்க அம்மா அப்பா ஆதி அக்கா இவங்களுக்காக தான் அமைதியா இருக்கேன். இல்லனா… அவ்வளவுதான். இன்னொரு தடவ என் கிட்ட இப்படி நடந்துக்கிட்டா… தப்பா நடந்துக்க முயற்சி பண்ணிங்கன்னு கண்ணன் சார் சொல்லிடுவேன். ” வரும் கண்ணீரை அடக்கிக் கொண்டு வார்த்தை வீசி விட அதைக்கேட்ட சிந்துவிற்கு தான் மனம் உடைந்து விட்டது.
பெண்களின் விஷயத்தில் கண்ணியம் காக்கும் ஆண்மகனுக்கு இது பெரும் அவமானமாக இருந்தது. அதும் வானதியே சொல்லும் பொழுது… உள்ளுக்குள் நிறைந்த காதல் முழுவதும் போகும் வழி தெரியாமல் வெடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. வீட்டைவிட்டு செல்பவளை தடுத்து நிறுத்தியவன், “உன்கிட்ட நான் என்ன தப்பா நடந்துக்கிட்ட…” மீண்டும் கை பிடித்து கேட்க,
“இதோ… இப்டி எந்த உரிமையும் இல்லாத என் கையை பிடிச்சி பேசுறதே தப்பு தான். எனக்கு ஆதரவுக்கு யாரும் இல்லன்னு தெரிஞ்சி தான இதெல்லாம் பண்றீங்க. அந்த சந்திரன் மாதிரி தான் நீங்க….” என்றவளின் கன்னத்தில் கை விரல் பதிய பெரும் சத்தத்தோடு அடி விழுந்தது. அடித்தது யாரென சித்து வானதி இருவரும் திரும்பி பார்க்க, அங்கு சரஸ்வதி தான் கோபத்தில் நின்றிருந்தார்.
“என் மருமகனை பார்த்து இன்னொரு வார்த்தை தப்பா பேசுன கொன்னுடுவேன் உன்ன. கண்ணனை விட ஆயிரம் மடங்கு உத்தமன் இவன். உன் அக்கா விஷயத்துல எப்டி வருத்தப்பட்டான்னு எனக்கு தெரியும். இவனா அந்த பொறுக்கி மாதிரி நடந்துப்பான். வார்த்தையை விடும் போது பார்த்து விடு . ” வரும் வார்த்தை ஒவ்வொன்றும் இறுக்கமாக வர… வானதிக்கு தான் வாங்கிய அடியை விட அதிகமாக வலித்தது. எதுவும் பேசாமல் அமைதியாக அங்கிருந்து சென்று விட்டாள். அதிர்ச்சியில் நின்றிருந்த சித்துவை சமாதானப்படுத்த ஆரம்பித்தார் சரஸ்வதி. இரண்டு நாட்களாக அதையே நினைத்துக் கொண்டு இருந்தவன்… ஒரு முடிவை எடுத்து விட்டு ஆதியிடம் அதை சொல்லியும் விட்டான்.
பண்ணை வீட்டில் இருந்து கிளம்ப மூனு நாட்களே இருக்க இருவருக்குள்ளும் பேச்சு வார்த்தை முற்றிலும் குறைந்து இருந்தது.
ஆரதியிடம் பேசாமல் இருப்பது கண்ணனுக்கு வருத்தமாகவே இருந்தாலும் பெரியவர்களிடம் பேசாமல் முடிவெடுக்க விருப்பம் இல்லை. அதும் கல்யாண விஷயத்தில். சித்துவின் மீது நம்பிக்கை இருந்தாலும்… வானதி பற்றிய முழு முடிவும் அவள் பெற்றோரை சார்ந்தது. சித்துவிற்காக… ஆரதி எதையும் செய்வாள் அதற்கு தானும் துணையாகி விட கூடாது என்பதில் கண்ணன் உறுதியாக இருந்தான்.
இரவு 11 மணியை நெருங்க… ஆரதி அறைக்குள் வராமலே இருந்தாள். அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாத கண்ணன் தன் ரதியை தேடி செல்ல, அவளோ….. தரையில் சோகமாக படுத்திருந்தாள். “ஆதி… எதுக்கு இங்க படுத்திருக்க. எந்திரிச்சு வா.” அருகில் சென்று பேச்சுக் கொடுத்தான் கண்ணன்.
“அங்க வந்தா மட்டும் என்ன… தனியா தான தூங்க போற. அதுக்கு இங்கையே இருக்க..” பார்க்காமலே பதில் சொன்னவளை முறைத்த கண்ணன், “ஆதி விம்பு பண்ணாத அடிச்சிடுவேன்… எந்திரி.” என்றதோடு விடாமல் ஆரதியை எழுப்பி விட…. கோபமாக எழுந்தவளோ, கண் கண்ட கணவன் என்று பாராமல் அடித்து விட்டு, “ரொம்ப அக்கறையா டா உனக்கு. இரண்டு நாள் எங்க போச்சி… இதெல்லாம். அவனுக்காக நீயும் பேசுன நானும் பேசுன..அவ்ளோ தான். அதுக்கு என்னமோ மூஞ்சியை திருப்பிட்டு திறியுற. புது பொண்டாட்டி மாதிரியா நடத்துற என்னை.” என்றவள் தன் பங்கை முடிக்க,
கண்ணனும் ஆரதி கன்னத்தில் சப்பென அடித்து விட்டு, ” நீ புது பொண்டாட்டி’னா அப்ப நான் யாரு. நீயும் தான திருப்பிட்டு அலைஞ்ச மூஞ்சியை . என்ன சொல்ல வரன்னு கூட கேட்காம அந்த லூசு சொன்ன வார்த்தை பிடிச்சிட்டு சண்டை போடுற. எனக்கு அக்கறை நிறைய இருக்கு. உனக்கு தான் டி இல்ல. மதியம் நான் சாப்டாம இருக்குன்னு தெரிஞ்சும்…கண்டுக்காம இருந்துட்டு பேச்சா பேசுற. கஷ்டப்பட்டு லிவ் வாங்கிட்டு வந்த பாரு என்னை சொல்லனும்.” தன் பங்கை முடித்து விட்டு… அங்கிருந்து நகர்ந்தவனை தடுத்த ஆரதி,
“அடிக்கு அடி சரியா போச்சு மாமா. தூக்கு…..” சேகமாக வார்த்தை வர, முகமோ ஏகத்துக்கும் கொஞ்சியது. அதில் அவனும் நிலைமாற…”இனிமே அவன் சொன்ன விஷயம் சம்மந்தமா நமக்குள்ள எந்த பேச்சும் வர கூடாது. ” என கண்டிஷன் போட… சமத்தாக தலையசைத்தவள், “அந்த பரதேசிக்கு கல்யாணம் ஆனா நமக்கு என்ன! ஆகலைன்னா நமக்கு என்ன! மாமா…”
அதன் பின் ஹாலில் என்ன வேலை… இருவருக்கும் . ஆரதியை தூக்கியவன் நெற்றி முட்டி , ” இத அப்பவே சொல்லி இருந்தா இரண்டு நாள் வேஸ்ட் ஆகி இருக்காது புது பொண்டாட்டி…” என்றவனின் நெஞ்சோடு நெருங்கியவள், ” எல்லாம் அந்த லூசு பண்ண வேலை ஆழி. நீ எதுக்கு அவனை உள்ள விட்ட…. பாரு நமக்குள்ள சண்டை வந்துருச்சு.”
“பொண்டாட்டி வார்த்தைக்கு மறு வார்த்தை ஏது டி செல்லம்…. இனி எவன் வந்தாலும் மூனு நாளைக்கு அனுமதி இல்ல… “
நமக்கும் தான் வாங்க வெளிய கிளம்பலாம். அவங்க கதவை அடைக்க போறாங்க.