அரை மணி நேர பயணத்துக்கு பிறகு மந்தவெளி காவல் நிலையத்திற்குள் வந்த கண்ணன்….. ஆதியை தேடி காவல் நிலையத்திற்குள் செல்ல, அங்கோ….,
சித்து, ஆதி இருவரும் அங்கிருக்கும் மொத்த அதிகாரிகளோடு முடியை பிடித்து அடிக்காத குறையாக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அதைப்பார்த்த கண்ணனுக்கு கோப தீ உச்சம் தொட…. “ஆதீதீதீ”…. என்ற அழைப்பில் அங்கே நிசப்தத்தை உருவாக்கினான்.
அண்ணனை கண்டவுடன் அவன் சொன்னது நினைவு வர… ஆதிக்குப் பின்னால் சென்று மறைந்து கொண்டான் சித்து. அதற்கு மாறாக ஆதியோ கண்ணனிடம் சென்று.. ” “எடுபிடி “என ஆரம்பிக்க அவன் பார்த்த பார்வையில்…
“கண்ணா இங்க பாரு இந்த போலீஸ்காரங்க இவ்வளவு திமிரா பேசுறாங்கன்னு. பாவம் இந்த அம்மா பொண்ண காணோம்னு கம்ப்ளைன்ட் கொடுத்து நாலு மாசம் ஆகுது. என்ன’ன்னு கேக்க வந்தா மரியாதை இல்லாம பேசுறாங்க. நானும் சித்துவும் கூட அவங்க கிட்ட முதல்ல பொறுமையா தான்… எவ்வளவு தூரம் விசாரணை போயிருக்குன்னு கேட்டோம். அதுக்கு பதில் சொல்லாம கண்டபடி திட்ட ஆரம்பிச்சுட்டாங்க கண்ணா.” என்று ஆரதி கண்ணனிடம் முறையிட….. அவ்விருவரையும் பார்த்துக்கொண்டிருந்த அதிகாரிகளின் முகத்தில் சொல்ல முடியாத பயம். அங்கு கண்ணனை அவர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் நின்றிருந்த அதிகாரிகளிடம் சென்ற கண்ணன்...,
“உங்க வேலை கம்ப்ளைன்ட் வந்தா அதை விசாரிக்கிறது தானே. அதை விட்டுட்டு பாதிக்கப்பட்டவங்களை மரியாதை இல்லாம பேசி இருக்கீங்க. ஒரு பொண்ண காணோம் னு சொல்றது உங்களுக்கு அவ்ளோ விளையாட்டா. நாலு மாசமா இத்தனை பேரும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க…”என்று கேட்டபடி அங்கிருக்கும் இருக்கையில் அமர்ந்தவன்.. “அனிதா சம்பந்தப்பட்ட கேஸ் ஃபைல் எடுத்துட்டு வாங்க .” என்றான் அதிகாரமாக.
அவனின் அதிகாரத்தில் மிரண்ட அதிகாரிகள் அடுத்த நொடி அனிதா சம்பந்தப்பட்ட கம்ப்ளைன்ட்டை அவன் கையில் கொடுக்க….., அதை பார்த்தும் முகத்தில் கோப தீ மீண்டும் எழ…அந்த காகிதத்தை எடுத்து அவர்கள் முன் வீசி முறைக்க ..பதறியடித்து நின்றிருந்தனர் அங்கிருக்கும் மொத்த போலீஸ்காரர்களும்.
“என்ன இதெல்லாம். ஒரு பொண்ணு சம்பந்தப்பட்ட கேச இவ்வளவு சாதாரணமா வச்சிருக்கீங்க.” என்று கத்திக் கொண்டிருந்தவன் அங்கு ராசாத்தி இருப்பதை அறிந்து தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு…”அம்மா நீங்க கொஞ்சம் வெளிய இருங்க. நான் பேசிட்டு கூப்பிடுறேன்… “என்று கூற,
அதைக்கேட்ட ஆதியோ,
“அவங்க எதுக்கு வெளியே போகணும். உங்க துறையில நடக்கிற தப்ப அவங்களுக்கு தெரியாம மறைக்க பார்க்கிறீயா. அவங்களும் எல்லாத்தையும் தெரிஞ்சிக்கட்டும் . நாலு மாசமா எவ்வளவு கஷ்டப்பட்டுடு இருக்காங்கன்னு தெரியுமா. பொறுப்பில்லாம இருக்க இவங்களுக்கு சப்போர்ட் பண்ணாத கண்ணா” என ஆரதி கண்ணனிடம் சண்டையிட…
“வாயை முடு. நான் எப்படி நடந்துக்கணும்’னு நீ சொல்லாத. இங்க நான் டெபிடி கமிஷனர் உன்னோட கை பொம்மை இல்ல. யாரை இருக்க சொல்லணும் யாரை போக சொல்லணும்’னு எனக்கு தெரியும். பேசாம நிக்கிறதா இருந்தா நில்லு இல்லனா நீயும் வெளியே போ.” என்று அருகில் இருக்கும் டேபிளை தட்ட… கண்ணனின் கோபத்தில் எதுவும் பேசாமல் சித்துவை அழைத்துக் கொண்டு வெளியேறினாள் ஆரதி.
அவள் சென்றதும் அவள் மீது இருந்த கோபத்தையும் சேர்த்து அங்கு இருப்பவர்களிடம் காட்டி அவர்களின் இதயத்தை எகிற வைத்தவன்… வீசிய அனிதா சம்பந்தப்பட்ட காகிதத்தை கையில் எடுத்து இன்ஸ்பெக்டரிடம் கொடுத்து “இன்னும் ஒரு வாரத்துல இந்த கம்ப்ளைன்ட் காண பதில் எனக்கு வந்தாகணும்.இல்லன்னா ஆழிக்கண்ணன் எடுக்க போற முடிவுல உங்க எல்லாரோட வாழ்க்கையும் மொத்தமா தொலைஞ்சிடும்.” என்று சிங்க மேன உருமி விட்டு செல்ல அந்த இடமே விபத்தில் சிக்கி சிதறிய கண்ணாடி துண்டுகளாய் இருந்தது.
“டேய்!! சித்து எதுக்கு இப்படி பித்து பிடிச்சவன் மாதிரி உக்காந்து இருக்க. என்றவள் மீண்டும்… “சித்து பித்து நல்லா இருக்குல்ல. இனிமே நீ சித்து இல்ல பித்து.”என அவனுக்கு பட்ட பெயர் வைத்துக் கொண்டிருந்தவளின் தலையில் அடித்த சித்து, “யாருக்கு பித்து பிடிச்சி இருக்கு. நானே இப்போ அண்ணன் வந்திடுவான். எப்படி சமாளிக்கிறது’ன்னு தெரியாம பயந்து உக்காந்துட்டு இருக்கேன். நீ காமெடி’னு கண்ட கருமத்தை பேசிட்டு இருக்க. பைத்தியமே…”
“யாரு பைத்தியம் .உனக்கு தான் பைத்தியம். உன் அண்ணன் ஒரு ஆளு…. அவனுக்கு என்னமோ இவ்ளோ பில்டப் தர. சின்ன பையன் டா அவன். சின்ன வயசுல டவுசரோட சுத்திகிட்டு கிடப்பான்….. இப்போ என்னமோ என் முன்னாடியே சத்தம் போடுறான். வரட்டும் இன்னிக்கி..” என்று எகத்தாளமாக பேசிய ஆரதியை பார்த்த சித்து….,
“என்ன வரட்டும்….. வந்துட்டான். கொஞ்சம் திரும்பிப் பார்த்துவிட்டு அப்புறம் பேசு.”
“என்ன பித்து பயம் காட்டுறியா.” என கெத்தாக பார்வையை லேசாக வாசல் பக்கம் திருப்பி பார்க்க அங்கே அவளைப் பார்த்தபடி இல்லை இல்லை முறைத்த படி நின்றிருந்த ஆழிக்கண்ணன் தெரிய நல்ல பிள்ளையாக சோபாவில் அமர்ந்து கொண்டாள் ஆரதி.
நேராக சித்து விடம் வந்த கண்ணன் “உன்கிட்ட என்ன சொல்லி அனுப்பினேன். ” எனக் கேட்க…,
“அ..து… அது வந்து அண்ணா நான் எவ்வளவோ சொல்லியும் ஆதி தான் கேட்கல…”என வார்த்தையை பாதியில் நிறுத்த, சித்து பயப்படுவதை பார்த்த ஆரதி கோபமாக கண்ணனிடம்,
“கண்ணா இப்ப எதுக்கு தேவையில்லாம அவனை மிரட்டிட்டு இருக்க. அவன் போக வேண்டாம்’னு தான் சொன்னான். நான்தான் கேட்காம உள்ள போனேன். என்னமோ சின்ன குழந்தை மாதிரி அவனை உன் கண்ட்ரோல் ல வச்சுட்டு இருக்க…” என்று கையை நீட்டி வழக்கம்போல் அவனிடம் சண்டையிட்ட ஆரதியின் கையை பற்றியவன் அதை முதுகு புறமாக இறுக்கியவாறு “உனக்கு எத்தனையோ தடவை சொல்லிட்டேன் ஆதி. நான் ஒரு விஷயம் பேசும்போது குறுக்கே பேசாதன்னு . திரும்பத் திரும்ப அதையே பண்ணிகிட்டு இருந்தா நான் பொறுமையா இருக்க மாட்டேன். நான் வர வரைக்கும் எதுவும் பேசாதன்னு சொன்னேன் தான. எதுக்குடி…. உனக்கு இவ்வளவு அவசரம். முதல்லே போய் பேச வேண்டி தானே எனக்கு எதுக்கு கால் பண்ண. என்னோட வேலையெல்லாம் விட்டுட்டு வந்தா…. அங்கேயும் இதே மாதிரி பேசுற. இதான் ஆதி உனக்கு கடைசி…. இனி இப்படி நடந்துகிட்டா வேற ஒரு கண்ணனை நீ பார்க்க வேண்டி வரும்.”என்று அவள் கையை மீண்டும் இறுக்க ,அங்கு வந்த மகாலட்சுமியோ “கண்ணா என்ன பண்ற முதல்ல கைய விடு. எதுவா இருந்தாலும் நிதானமா பேசு.” என்ற தாயின் வார்த்தையில் ஆதியின் கையை விட்டவன் முறைப்பை மட்டும் விடாமல் தொடர்ந்தான்.
பெரியவனின் முறைப்பில் எதுவோ சரி இல்லை என யூகித்த மகாலட்சுமி சிந்துவிடம்,
“சித்து என்னடா பண்ணா ஆதி. அவன் எதுக்கு இவ்வளவு கோவமா பேசுறான்…..” என்றவருக்கு நான்கு மணி நேரத்திற்கு முன் நடந்ததை விவரிக்கத் தொடங்கினான் சித்து.
ஆரதி அங்கு நடந்த அனைத்தையும் கண்ணனிடம் கூறியிருக்க.. ஆரதியைப் பற்றி நன்கு அறிந்தவன்… “இங்கு பாரு ஆதி நான் அங்க வர வரைக்கும் நீ எந்த பிரச்சனையும் பண்ணாத. எதுவா இருந்தாலும் நான் வந்து பேசிகிறேன். இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க வந்துருவேன். அதுவரைக்கும் நீ வெளியே இரு உள்ள போகாத.” என்றவன் சில நிமிட யோசனைக்கு பிறகு…. தன் எண்ணிலிருந்து சித்துவிற்கு அழைக்க அது அழைப்பு காத்திருப்பில் இருப்பதாக வர கடுப்பாகினான்.
சிறிது நேரத்தில் சித்துவே கண்ணனுக்கு அழைக்க…. வேகமாக எடுத்தவன்,
“அறிவு இருக்காடா உனக்கு. எதுக்கு போன் யூஸ் பண்ற. போன் பண்ணா வெயிட்டிங் ல இருக்கு. அப்படி யாரு கூட தாண்டா பேசுவ.. ஒரு எமர்ஜென்சிக்கு கூப்பிட்டா டக்குனு போன் எடுக்க மாட்டியா. இதுல இவன் பெரிய வக்கீல் வேறயா. கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்காடா.” என்று சித்துவை பேச விடாது… தகர தளத்தில் கொட்டும் மழையை போல சடசடவென அடிக்க.. “டேய் எமர்ஜென்சி னு சொல்லிட்டு இவ்ளோ நேரம் வெட்டியா கத்திட்டு இருக்க. முதல்ல விஷயம் என்னன்னு சொல்லு…” என்ற சித்துவின் வார்த்தையில் அமைதியாகியவன்..
” உன்னோட உயிர் தோழி உயிரை எடுக்கிற வேலையா ஆரம்பிச்சுட்டா. வந்து முழுசா ஒரு வாரம் கூட ஆகல அதுக்குள்ள ஒரு பிரச்சினையே தலையில போட்டுக்கிட்டா. இப்போ அவ மந்தவெளி போலீஸ் ஸ்டேஷன் ல இருக்கா. அங்க ஏதோ பிரச்சினை போல. நீ சீக்கிரமா அங்க போ. நான் சொல்ற மாதிரியே பண்ணு. எக்காரணத்தைக் கொண்டும்… ஆதி போலீஸ் ஸ்டேஷன் குள்ள போய் இது சம்பந்தமாக பேசக்கூடாது. கொஞ்ச நேரத்துல நான் அங்க வந்துருவேன். அதுவரைக்கும் அமைதியா இருன்னு சொல்லி இருக்கேன். அவ ரொம்ப நேரம் பொறுமையா இருக்க மாட்டா. ஏதாச்சும் பண்றதுக்குள்ள சீக்கிரமா அங்க போ. ” என்று அடுத்தடுத்து கட்டளைகளை பிறப்பித்தப்படி கண்ணன் பேச…..
“இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினா போன வச்சுடுவேன்.” என்ற சித்துவிற்கு….”டேய்” என திரும்பவும் கண்ணன் ஆரம்பிக்க பட்டேன போனை வைத்து விட்டான் சித்தேஷ்.
அழைப்பு வைக்கப்பட்டதற்கான… ஓசை வர கடுப்பான கண்ணன் தன் வலது காலால் தரையை ஓங்கி அடித்து கோபத்தை வெளிப்படுத்தி கொண்டிருக்க, மீண்டும் சித்துவிடம் இருந்து அழைப்பு வர… கோபத்தில் பல்லைக் அடித்தவன் சித்துவின் உதவி இப்போது தேவைப்படுவதால் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு, பொறுமையாக அழைப்பை ஏற்று சித்துவின் பதிலுக்காக காத்திருக்க…”உனக்கு இப்போ எவ்ளோ கடுப்பா இருக்கு. அதே மாதிரிதான் எனக்கும் இருந்துச்சு. என்னை ஏதுன்னு சொல்லாம இது பண்ணு அது பண்ணு கடுப்பைக் கிளப்புற. உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல… நான் தான் இன்னிக்கு சிக்கினனா. உன்ன தான கூப்பிட்டா நீ போக வேண்டியது தான. காலையில உன்னை வெறுப்பேத்துனதுக்கு இப்போ பதிலுக்கு நீ என்ன வெறுப்பேத்தி பார்க்கிற அதானே. ” என்று கண்ணனின் பொறுமையை மேலும் சோதிக்க ஆரம்பிக்க ஆரம்பிக்க…,
“சித்து விளையாட்டு போதும். அவளுக்கு மட்டும் அங்கு ஏதாவது பிரச்சனை ஆச்சு … அவ்வளவுதான் நீ செத்த என்கிட்ட. ஒழுங்கு மரியாதையா இன்னும் பத்து நிமிஷத்துல நீ அங்க போற. நானும் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவேன். அதுவரைக்கும் அவளை தடுத்து வை. இல்லன்னா தம்பியின் கூட பார்க்க மாட்டேன்.”என்ற கண்ணனின் வார்த்தையில்… பயப் பந்து உருள “நான் போறேன் நீ சீக்கிரமா வா” இன்ற வாக்கியத்தோடு அழைப்பை துண்டித்தான்.
கண்ணன் வருவான் என காத்திருந்த ஆரதிக்கு சித்துவின் வருகை ஏமாற்றமாக தான் இருந்தது. இருந்தும் முகத்தில் காட்டிக் கொள்ளாமல்…”என்னடா அந்த எடுபிடிக்கு நீ ஒரு எடுபிடியா.” என அன்போடு வரவேற்க..,
“ச்ச !ச்ச! என் அண்ணனுக்கு எடுபிடி இல்ல உனக்கு எடுபிடி. அவன் என்ன உன்னை மாதிரி என்னை மாதிரியும் வெட்டியா இருக்கிறவனா. போலீஸ்காரம்மா அதுவும் டெபுடி கமிஷனர். உன்ன மாதிரி சில வெட்டி வேலைக்குலாம் நானே போதும்’னு தான் என்ன அனுப்பி விட்டான்.” என்றபடி
ஆதியிடம் வந்தவனின் பார்வையில் தட்டுப்பட்டது காலையில் சந்தித்த ராசாத்தி தான்.
“இந்த அம்மா என்ன ஆதி இங்க இருக்காங்க.”
“இவங்கள உனக்கு தெரியுமா சித்து.”
“முன்னாடி பழக்கமில்லை ஆதி. காலையில உன்னை விட்டுட்டு வரும்போது ரோட்ல மயங்கி இருந்தாங்க. நான்தான் ஹாஸ்பிடலில் சேர்த்து அனுப்பிவிட்டேன்.”என யோசனையாக அவரையே பார்த்திருக்க…
ஆதியோ தனக்கு தெரிந்த அனைத்தையும் சித்தி விடும் சொல்லி முடிக்க….”சரி ஆதி நீ இங்க இரு நான் உள்ள போய் என்ன ஏதுன்னு விசாரிச்சுட்டு வரேன்”
“நானும் கூட வரேன்” என்ற ஆதிக்கு..
“இல்லை ஆதி அண்ணா தான் உன்னை இதுல தலையிட வேண்டாம்’னு வெளியவே நிற்க சொன்னான்.” அவன் வார்த்தையில் கடுப்பான ஆதி… “ஓஹோ!! சார் என்னை இதுல தலையிட வேண்டாம் ‘னு சொன்னாரோ. அப்படி என்னை சொல்ல அவரு யாரு. அவன்தான் எதோ சொல்றான்னு பார்த்தா நீயும் அண்ணனுக்கு சப்போர்ட் பண்ணிட்டு வந்து நிக்குற. ரெண்டு பேரும் பேசி வச்சுக்கிட்டு பண்றீங்களா. அவனை கூட விடு. அவன் எப்பவுமே என்கிட்ட இப்படித்தான் நடந்து ப்பா. உனக்கு என்ன வந்துச்சு. முதல்ல உன்னை இங்கு யார் வர சொன்னா. மரியாதையா சொல்ற இங்கிருந்து ஓடிடு… இல்ல அடிச்சு கால ஒடச்சிடுவேன். ” என்று மிரட்டியவாறு காவல் நிலையத்துக்குள் நுழைய, வேறு வழியில்லாமல் சித்துவும் ராசாத்தி அம்மாவை அழைத்து கொண்டு அவள் பின்னாலே சென்றான்.
அவளை பேச விட்டால் பிரச்சனை என்று உணர்ந்து சித்து..,
” சார் நான் இவங்களோட சொந்தக்காரன் தான். இவங்க பொண்ண காணோம்னு உங்க கிட்ட கம்ப்ளைன்ட் கொடுத்ததா சொன்னாங்க.
அது இப்போ என்ன நிலைமையில இருக்குன்னு தெரிஞ்சுக்கலாமா.” என்று அங்கு இருக்கும் அதிகாரியிடம் வினவ…. எரிச்சலடைந்த அவரோ,
“யப்பா இப்போதான் அந்த அம்மா கிட்ட சொல்லி அனுப்பினேன். அதுக்குள்ள நீ வந்துட்டியா. இன்னும் எத்தனை பேர்தான் வருவீங்க. யாரு கேட்டாலும் ஒரே பதில் தான். விசாரிச்சுட்டு இருக்கோம். தகவல் தெரிஞ்சா கண்டிப்பா சொல்லுவோம். அவங்களோட போன் நம்பர் என்கிட்ட இருக்கு… பொண்ணை கண்டுபிடிச்சதும் தகவல் சொல்றோம். அப்ப வாங்க.” என்று தன் மேலதிகாரிக்கு பயந்து அவசரமாக அவர்களை வெளியேற்ற… ,
அவரின் அலட்சிய பதிலில் கடுப்பான சித்து “என்ன பதில் சார் இது. நாலு மாசமா ஒருத்தவங்க கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு நடைய நடந்துட்டு இருக்காங்க.
நீங்க பொறுமையா பதில் சொல்றீங்க. இப்படிதான் உங்க கிட்ட வரவங்கள அலட்சியப்படுத்துவிங்களா….” என்று கோபமாக கேள்வி எழுப்ப அந்த நேரம் பார்த்து… இன்ஸ்பெக்டர் வர,
“இங்க பாருங்க தம்பி.. இவங்க பொண்ணு இவங்க கூட சண்டை போட்டுட்டு தலைமறைவா இருக்காங்க. அவங்களுக்குள்ள வேற எந்த பிரச்சனையும் இல்லை. நாங்களும் விசாரிச்சிட்டு இருக்கோம். இப்போ இங்க இருந்து கிளம்புங்க..” அவரும் அலட்சியமாகவே பதிலளிக்க…
அவ்வளவுதான் ஆதி தன் பொறுமையை காற்றில் பறக்க விட்டவாறு அவர்களிடம் வாக்குவாதம் நடத்த அதில் சித்துவும் கலந்துகொண்டான்.
சித்து சொல்லி முடிக்க ஏற்கனவே கோபத்தில் இருந்த கண்ணன் “நான் சொன்னேன்னு சொல்லியும் போயிருக்க அப்படித்தானே ஆதி. இனி எதுவா இருந்தாலும் உன் விஷயத்துல நான் தலையிட மாட்டேன்” என்று விட்டு விறுவிறுவென மாடி ஏறினான் .
“ஆதி அவன்தான் கொஞ்சம் பொறுமையா இரு நான் வந்து பேசுறேன்’னு சொன்னா தானம்மா. நீ எதுக்காக அவங்க கிட்ட போய் சண்டை போட்ட. இப்ப பாரு கண்ணா எவ்வளவு கோவமா போறேன்.” என்று மகாலட்சுமியும் ஆதியின் தவறை உணர்த்த முகம் வாடி , “இல்லை அத்தை அவங்க ரொம்ப கஷ்டப்பட்டு பேசினாங்க. அதான் நானும் கொஞ்சம் எமோஷனலா நடந்துக்கிட்ட சாரி அத்தை.. என்னால தான் கண்ணா இவ்வளவு கோவமா இருக்கான்” என்று வருத்தப்பட்டு பேசிய மருமகளை காண பொறுக்காத மகாலட்சுமி ,
“இதுக்கு எதுக்குடா சாரி சொல்லிக்கிட்டு. அவன் கோவம் என்ன புதுசா. உன் மேல இருக்க அக்கறையில தான் இந்த கோபம் கூட. கொஞ்ச நேரத்துல அவனே சரியாகிடுவான்” என்று விட்டு அவரும் அங்கிருந்து நகர…,
அவள் அருகில் வந்த சித்து, “அட லூசு.. இதுக்கு எதுக்கு இவ்ளோ சோகமா டயலாக் பேசுற. அவன சமாளிக்கிறதா கஷ்டம். மேல போய் ஆதி ஸ்டைல்ல டில் பண்ணு … போ” என்றுவிட்டு அவனும் தன் அறை நோக்கி நகர்ந்தான்.
சிறிது நேரம் ஏதோ யோசித்தவள்… சிரித்தபடி கண்ணனின் அறைக்குள் நுழைந்தாள் …
ஆதியிடம் கோபப்பட்டதால் தன்னையே நொந்து கொண்ட கண்ணன்… குளியல் அறைக்குள் நுழைந்து தன்னை சுத்தப்படுத்தி கொண்டு வெளியே வர..,
கண்ணனின் ரதி அவனது அறைக்குள் சோகமான முகத்தோடு அமர்ந்திருந்தாள். அந்த சோகமான முகத்தில் உருகியவன் அவளது அருகில் அமர்ந்து சாரி கேட்க நினைக்க அதற்குள் ஆதியே “சாரி ஆழி.. அவங்க ரொம்ப அழுதாங்க. அதான் மனசு கேட்காம நானே பேசலாம்னு உள்ள போனேன். சண்டை போடனும் நினைக்கல… அவங்கதான் ஏதேதோ பேசி என்ன கோபப்பட வச்சுட்டாங்க. உன் பேச்சைக் கேட்காம இருக்கணும்னு நான் எப்பவும் நினைச்சதில்லை. சாரி ஆழி ” என சோக முகத்தோடு அவனையே காண…
அவளது ஆழி என்றால் அழைப்பிலே அனைத்து கோபத்தையும் மறந்தவன்.. “ப்ச் எதுக்கு இத்தனை சாரி. ஒன்னு புரிஞ்சுக்கோ ஆதி. நீ தைரியமா இருக்கிறது எனக்கு சந்தோஷம்தான். அதேநேரம் எல்லா விஷயத்துலையும் தைரியம் மட்டும் போதாது. வேலை சம்பந்தமா நடக்கிற தப்பை நீ உரிமையா தட்டிக் கேட்கலாம். உன்னோட வேலை அந்த உரிமையை உனக்கு எப்பவுமே தரும். ஆனால் தனிப்பட்ட முறையில் அந்த உரிமை உனக்கு இல்ல. சில நேரம் நீ எடுத்து வைக்கிற அடி உனக்கே ஆபத்தா முடியலாம். அதுக்காக தான் நான் சொல்றேன். உன்னை கட்டுப்படுத்தி வைக்கனும்னு நான் ஒருநாளும் நினைக்க மாட்டேன் ஆதி…” என்றவன் சற்றுமுன் கோபத்தில் இறுக்கிய கையைப் பற்றி கொண்டு…”வலிக்குதா ஆதி” என அந்த கையை மெதுவாக வருடிக் கொடுக்க , அதில் அவன் மேல் பெருகிய காதலை வெளிக்காட்ட முடியாது அவனையே நெருங்கி சென்று பார்த்திருந்தாள்.
பதில் வராது போக ஆதியை நிமிர்ந்து பார்த்த கண்ணனும் அப்பார்வையில் தன்னை மெதுமெதுவாக தொலைத்து கைகளை முன்னேற விட்டு கன்னத்தை பற்ற இருவருக்கும் நடுவில் இடைவெளி இல்லாத நெருக்கம்.
இடையில் நெருக்கம் இல்லாது போக… இருவரது மூக்கும் ஒட்டிக்கொண்டு மேலும் உதட்டை ஒட்டிக்கொள்ள முன்னேற….. கண்களை மூடி கொண்டு அவனுடன் ஒன்றை நினைத்து பின்னிருந்த கையை முன்னெடுக்க… அதில் மடியிலிருந்த கைப்பேசி கீழே நழுவி விழந்து….. இருவரையும் ஒட்ட விடாமல் நினைவுக்கு மீட்டது.
இருவரும் ஒருவரை ஒருவர் காண சில நொடிகள் தேவைப்பட…. கண்ணனின் நிலையோ மேலும் சங்கடமாகியது. முதலில் அதிலிருந்து மீண்ட ஆரதி… சூழ்நிலையை மாற்ற,
“டேய் எடுபிடி. கையைப் போட்டு இப்டி’யா முறுக்குறது. உன்னால பாரு என் கையை எப்படி வீங்கிப் போச்சு’ ன்னு… என்றவளின் வார்த்தையை உண்மை என நம்பி அவன் பதறியபடி மீண்டும் அவள் கையைப் பற்ற….,
“அம்மா !ஐயோ !பிடிக்காத எடுபிடி வலிக்குது… காலுக்கு இன்னைக்கு நைட் பாலிஸ் வைக்கலாம்னு நினைச்சேன் அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சு.” என தன் நடிப்பை மீண்டும் தொடர..
முதலில் நிஜமாகவே வருந்தியவன். பின் தான் அவளின் நடிப்பை உணர்ந்து சிரித்துக்கொண்டே… அவள் அறைக்குள் சென்று நெயில் பாலிஷ் எடுத்து வந்து தரையில் அமர்ந்து கொண்டு அவளது காலை மடியில் ஏந்தினான் . முதலில் மெட்டி போடும் விரலை மெதுவாக இருகைகளால் தொட்டு அளந்தவன்.. அவள் கூச்சப்பட்டு காலை இழுக்க தொடங்க … அதில் சில நிமிடங்கள் முன் நடந்தது நினைவு வர… தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு நெயில் பாலிஷ் இட தொடங்கினான் கண்ணன்.
அவனது செயலில்… பெண்ணவள் சிலிர்த்திருக்க விட்ட முத்தத்தை மனதில் இட்டு கொண்டிருந்தாள் ரதியின் ஆழிக்கு.