அத்தியாயம் 4
“அம்மா,அம்மா,அம்மா,”என மழலைக்குரல் கேட்க அம்மா வந்துட்டேன் செல்லம் என அகல்யா சமையலறைக்குள் இருந்து குரல் கொடுத்தாள்.
“ஏங்க அவள கொஞ்சம் தூக்குங்களேன் நான் வேலை முடிச்சிட்டு வந்துட்றேன்.”என உறக்கமாக கத்தினால் அகல்யா.
“ஏஏஏ நான் மேல ரூம்ல இருக்கேன்,நீயே பாத்துக்கோ”
“என்னால முடியல ப்ளீஸ் வாங்க”
“சரி வரேன் கத்தாத”
செல்வம் தன் குழந்தை சாராவோடு சிறிது நேரம் விளையாடினான்.
“என்ன ஏதோ ஸ்மெல் வருது…….. ஏய் இங்க வாடி உன் பொன்னு பாத்ரூம் போய்ட்டா…………..” மூக்கைமூடிக்கொண்டு செல்வம் கத்தினான்.
வேகவேகமாக சமையலறையில் இருந்து ஓடி வந்தாள் அகல்யா.
“ஏம்மா ஓடி வர பார்த்து மெதுவா போ நான் முடிச்சுக்றேன் மிச்ச வேலைய, நீ குழந்தைய பாத்ரூம் கூட்டிட்டு போய்ட்டு அப்படியே குளிக்க வச்சி தூங்க வை,மாசமா இருக்க பொண்ணு உஷாரா இருக்கனும்.”என பர்வதம் கூற அகல்யாவிற்கு அப்பாடா என இருந்தது.அவள் குழந்தையை குளிக்க வைத்துவிட்டு வந்ததும்,செல்வம் அகல்யாவை அழைத்தான்.
“நீ குழந்தைய தூக்கிட்டு மேல வா ரூம்க்கு”செல்வம் மாடியிலுருக்கும் அறைக்கு விறுட்டென சென்றுவிட்டான்.
அகல்யாவிற்க்கு ஒவ்வொரு படியும் பழனி மலை ஏறுவது போல இருந்தது.கீழ் அறையிலேயே குழந்தையை போடலாம்,ஆனால் தன் கணவரோடு சிறிது நேரம் கழிக்க அவளுக்கும் ஆசைதான்.ஆனால் இந்த மாடி படிக்கட்டை ஏறுவதற்க்குள் மூச்சு தள்ளிவிட்டது அவளுக்கு,இதில் கையில் ஒன்றரை வயது சாரா வேறு எகிறிக்கொண்டே இருந்தாள்.
ஒரு வழியாக கட்டிலில் அமர்ந்து சாராவை தூங்க வைக்க மடியில் போட்டு ஆட்டினாள்.
“இவ்ளோ வேலை செஞ்சும் ப்ரெஷ்ஷா இருக்கியேடி பொண்டாட்டி,உன் முகத்துல இருக்க வேர்வை கூட மேக்கப் போட்ட மாதிரியே இருக்கு!!!!”செல்வம் பேசிக்கொண்டே இருக்க அகல்யா குழந்தையை கீழே போட்டதும் அவள் கால்களை நீட்டி மெதுவாக அழுத்திக் கொடுத்தான்.
“ஆஆஆஆ….. வலிக்குது ஸ்லோவா புடிங்க…”
“சரி,சரி மேடம் ஏன் ஸைலன்டா இருக்கிங்க,எப்பவுமே ஸெளன்டா தான இருப்பிங்க,உங்க அமைதிக்கு என்ன அர்த்தம்.”
“எனக்கு டய்ர்டா இருக்கு குழந்தையும் பார்த்துக்கிட்டு இருக்கிறது வெறுப்பா இருக்கு ஈவ்னிங்கா எங்காயாச்சும் போகலாமா?????”
“சரி,சரி,நான் மில்லுக்கு போய்ட்டு போன் பண்றேன்.”
“சாரா தூங்குறா நான் கீழ போய் வேலை எதாச்சும் பாக்குறேன்.”
“கொஞ்ச நேரம் இரு என்கூட, அப்பறமா போவ,இங்க வந்து படு வா”
“ம்ம்ம் சொல்லுங்க என்ன ?????”
“கிட்ட தட்ட நமக்கு கல்யாணம் ஆகி நாலு வருஷம் ஆகுது ஆன நீ பாக்க இப்ப தான் புதுப்பொண்ணு மாதிரி இருக்கியேடி,அழகி சில்க்குடி நீ,செல்லம்”
“எப்ப பாரு இதே தான் உங்களுக்கு.”
“என் பொண்டாட்டிய தான நான் கொஞ்சுறேன்,ஏன்டி உன் அழகுக்கு நான் எப்பவுமே அடிமை டி.”
“சரி,சரி,போதும் வழிஞ்சது.”அவள் கூற,செல்வம் அவளை அணைத்து முத்தமிட்டான்.அவன் கொஞ்சலில் மயங்கி போனாள் அகல்யா ,எவ்வளவு சோர்வும் தன் கணவன் ஸ்பரிசத்தால் கரைந்து போனது.
“சரி,அண்ணன் ,அண்ணி ஊருக்கு வராங்க தெரியுமா,அத்தை சொன்னாங்களா?”
“இல்லையே சொல்லல,எப்ப வராரு மினிஸ்டரு??”
“தெரில,என்கிட்டயும் இன்னு சொல்லல அவங்க போன்ல பேசும்போது கேட்டுச்சு,நாளைக்குன்னு நினைக்குறேன்”
“அப்போ மேடம் இன்னும் பிஸி தான்,அவங்க போற வரைக்கும் ஓடினே இருப்பீங்க,சரி சாராவ அம்மா ரூம்ல போட்ரு நான் குளிக்க போறேன்.”
“சரி,சீக்கரமா வாங்க.”
அகல்யாவுக்கு தெளிந்த மனம் மீண்டும் சோர்வானது.அனைத்தும் நலம் தான் இருந்தும் அவளுக்கு ஏதோ ஒரு வெறுப்பு உணர்வு இருந்துக்கொண்டே இருந்தது.
நான்கு வருடங்கள் காற்றைப்போல பறந்து விட்டது. சாரா பிறந்த பிறகும் கணவன் மனைவி இருவருக்குமான காதலுக்கும் கொஞ்சலுக்கும் அளவே இல்லை.அவளெக்கு ஒரு வயது ஆகும்போது அகல்யா மறுபடியம் கருவுற்றிருந்தாள்.
செல்வம் சற்று தயங்கியபோதும் அகல்யா மிகவும் தைரியமாகவே இருந்தாள்.நமது குடும்பம் கூட்டு குடும்பம் தாத்தா பாட்டி என குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள் சமாளித்து விடாலாம் என அசாத்தியமாக நம்பினாள்.
மெதுவாக கீழே வந்த அகல்யாவை பர்வதம் அழைத்தார்.
“அகல்யா நான் கொழம்பு இட்லி எல்லாம் செஞ்சிட்டேன் நீ வடை மட்டும் சுடு மா போதும்.”
“சரி,அத்தை.”
காலை ஒன்பது மணிக்கே அகல்யாவிற்க்கு மதியம் பணிரெண்டு போல வியர்த்தது, அடுப்பின் அணல் அவளுக்கு மிகவும் கடினாமாக தோன்றியது.அனைவரும் சாப்பிட வரும்போது சரியாக பர்வதம் உள்ளே வந்தார்.
“நீ போ மா போய் சாப்படு மாசமா இருக்க பொண்ணு பசியோட இருக்க கூடாது,போ”
“இல்ல அத்த இது லாஸ்டு தான் நான் முடிச்சிட்டே சாப்புட்றேன்.”
“இல்ல மா நீ போ.”
அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே பரந்தாமன் உள்ளே வந்தார்.”நீ போ மா.”
அகல்யா சாப்பாடு போட்டுக்கொண்டு வெளியே வராண்டாவிற்கு சென்று அமர்ந்துக்கொண்டாள்.
உள்ளே தந்தை மகன் தாய் மூவரும் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் சாப்பிட்டு முடித்தனர்.
மாமனாரும் செல்வமும் காரில் மில்லுக்கு சென்றுவிட்டனர்.
அகல்யாவும் பர்வதமும் பேசிக்கொண்டே வீட்டு வேளைகளை கவனித்துக் கொண்டு இருந்தனர்.
பர்வதத்தின் செல்பேசி அடித்தது.
மகன் ஆதித்யா சென்னையிலிருந்து அழைத்திருந்தான்.
பர்வதம் செல்பேசியை எடுத்துக்கொண்டு அறைக்கு சென்று விட்டார்.
அகல்யா அவர் வருவதர்க்குள் ஓரளவு சமையலுக்கான ஏற்பாடுகளை செய்துக்கொண்டிருந்தாள்.
பர்வதம் முகம் முழுதும் பொலிவாக வெளியே வந்தார்.
“அகல்யா நீ போ போய் வேற வேலை இருந்தா பாரு நான் சமைச்சுக்றேன்.”
“இல்ல அத்தை நான் ஏதாவது ஹெல்ப் பண்ணிட்டு போகட்டா,”
“சரி, போய்ட்டு கடைல தயிர் வாங்கிட்டு வா,அப்பறமா பின்னாடி தோட்டத்துல கறிவேப்பில இருக்கும் கிள்ளினு வா.”
சரி என தலையாட்டிக்கொண்டு கடைக்கு சென்றுவிட்டாள்.
“அத்தை தயிர்,கறிவேப்பிலை இந்தாங்க ,எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு நான் கொஞ்சம் போய் படுக்கட்டா.”
“அந்த சாதம் வடிச்சிருக்கேன் அத கொட்டிடு,இந்த காய் பொறியல் பண்ணிட்டேன் அத சுண்ட வச்சிடு,டேபிள் தொடச்சிட்டு சாப்பாடு எடுத்து வச்சிட்டு போய் ரெஸ்ட் எடுத்துக்க மா நான் போய் டெய்லர் கடைக்கு, பக்கத்துல போய்டடு வந்துட்றேன்.”
அகல்யா அவர் கூறிய சிறு சிறு வேளைகளை முடிப்பதற்க்குள்,மணி ஒன்று.
மதிய உணவு வேளை வந்து விட்டது.
“சாப்ட்டு போய் ரெஸ்ட் எடுமா, இதுக்கமேல எங்க போறது நீ ஒரே அடியா சாப்டு போ.”என பர்வதம் கூற.
“பக்கத்துல போறன்னு போனவங்க இப்ப தானா வந்தாங்க,எனக்கு தெரியாத அது லேட் ஆகிடுச்சு இனி ரெஸ்ட் எடுக்க முடியாதுன்னு.”மனதுக்குள் பொறுமி தீரத்தாள் அகல்யா.ஆனால் முகத்தில் எதுவும் காட்ட முடியவில்லை.
சரி என தலையாட்டி விட்டு சென்றுவிட்டாள்.
“அப்பறம் அண்ணனும் அண்ணியும் இன்னிக்கே வராங்களாம் போன் பண்ணாங்க,சீக்கரமா ஈவ்னிங் வந்து டீ போட்டுறியாமா நான் கொஞ்சம் போலிக்கு மாவு ரெடி பண்ணிவெச்சிருக்கேன்,அதையும் பண்ணிடலாம்.”
“சரி ,அத்தை.”
அகல்யா சாராவைத தூக்கிக்கொண்டு அறைக்கு சென்றுவிட்டாள்.
செல்பேசியில் செல்வத்தை அழைத்தாள்.
“ஏங்க,ஆதி அண்ணா இன்னிக்கே வராங்களாம்.”
“சரி,என்ன அப்ப இனி ஜாலிதான் என்ன வெரைட்டி வெரைட்டியா செய்வீங்களே சூப்பர் போ.”
“ஆமா,நீங்க எப்ப வருவீங்க .”
“நான் இப்ப வரலடி, நான் இங்கயே சாப்டுக்றேன்.நீ பாரு.”
செல்வம் அழைப்பை துண்டித்து விட்டான்.
அகல்யா உறங்க முயற்சி செய்துக் கொண்டிருக்க “டமால்”என ஒரு சத்தம்.
திரும்பி பார்த்தால் சாரா தண்ணீரை கீழே ஊற்றி, அதில் முகப்பவுடரை கொட்டி உடம்பெல்லாம் பூசிக்கொண்டு காலியான டப்பாவை விசிறிப் போட்டிருந்தாள்.
“சாரா………”