பகுதி – 29
அவர்களை வழியனுப்பிவிட்டு வந்த வெற்றி ப்ரீதாவை தேட… அவள் அங்கே இல்லை. அவளைத்தேடி தங்கள் அறைக்கு சென்றான். அவனைப் பார்த்தும் ப்ரீதா முறைத்தாள்.
“என்னடி இப்படிப் பார்க்கிற? நீயும் வேதாளம் ஆகப்போரியா என்ன?
“என்கிட்டே எல்லாத்தையும் மறைச்சிட்டீங்க இல்லை… உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லை.” ப்ரீதாவின் குரலில் அழுகை எட்டி பார்க்க….
அவளை இழுத்து தன் மடியில் உட்கார வைத்த வெற்றி, “அப்படி இல்லை… நானும் ரிஷியும் சந்தோஷமான மனநிலையில ஒரு தடவையும் பேசலை… எப்பவுமே எதாவது பிரச்சனை வரும்போது தான் பேசிப்போம். இதைச் சொன்னா அதையும் சொல்லணும். நீ உங்க அம்மாகிட்ட சொன்னா…. அதுவேற இன்னும் பிரச்சனை ஆகிடும். அந்தப் பயம் தான்.”
“நீங்க அம்மாகிட்ட சொல்ல வேண்டாம்னு சொன்னா… நான் சொல்லி இருக்க மாட்டேன்.”
“தப்பு தான். ப்ளீஸ் புரிஞ்சிக்கோ ப்ரீதா….” வெற்றியின் கெஞ்சல் வேலை செய்ய…
“சரி பொழச்சு போங்க…” என ப்ரீதா சிரிக்க….
“ஹப்பா… இதுங்க ரெண்டும் சேர்றதுக்குள்ள… நம்ம ரெண்டு பேருக்கும் டைவேர்ஸ் வாங்கிக் கொடுக்காம இருந்தா சரிதான்.” என்றான் வெற்றி.
ரிஷியும் சாதனாவும் ஒரு பெரிய ஹோட்டலின் நீச்சல் குளத்தின் அருகே அமர்ந்து, பேசியபடி இரவு உணவை சாப்பிட்டனர்.
சாப்பிட்டு முடித்து அங்கிருந்த தோட்டத்திற்குள் இருந்த பெஞ்சில் சென்று அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். சாதனாவின் முகம் மலர்ந்த ரோஜாவை போல் அழகாக இருக்க…. ரிஷிக்கு அப்படியே அவளை அள்ளிக்கொள்ள வேண்டும் போல் இருந்தது.
தான் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்த சாதனா… ரிஷியின் முகம் பார்க்க…. அவன் பார்வையில் அவ்வளவு மயக்கம் தெரிந்தது.
[the_ad id=”6605″]
ரிஷி லேசாகச் சாதனாவை தன் பக்கம் இழுத்தவன், அவளை முத்தமிட…. சாதனாவும் அவனைப் பதிலுக்கு முத்தமிட…. ஒரு எல்லையில் நிற்க… இவர்கள் காதலர்கள் இல்லையே…. தம்பதிகள். அதுவும் ஏற்கனவே கூடி மகிழ்ந்தவர்கள்…. அப்படி இருக்க விலக மனம் வருமா….
வேண்டாம் டா… இன்னும் அவள் முழுசா சரி ஆகலை…. திரும்ப அவ மனசு உடஞ்சா… அவளைச் சரி பண்றது ரொம்பக் கஷ்ட்டம் என்று உணர்ந்த ரிஷி, தன்னை அடக்கிக் கொண்டவன், சாதனாவின் இதழில் அழுத்தமாக ஒரு முத்தமிட்டு எழுந்து, அவளையும் கைகொடுத்து எழுப்பிக்கொண்டு அங்கிருந்து சென்றான்.
காரில் ஏறிய பிறகும் அவளை வீட்டில் விட மனம் இல்லாமல் “ஒரு லாங் டிரைவ் போலாமா…” என்றான். சாதனாவும் மகிழ்ச்சியாகத் தலையசைத்தாள்.
காரை ஓட்டியபடி சாதனாவை பார்த்தவன், அவள் முகத்தில் இருந்த மகிழ்ச்சியைக் கவனித்து விட்டு “ஹே அப்படி என்ன சிரிப்பு?” எனக் கேட்க….
“ம்ம்… நாம முதல் தடவை இப்படித்தான லாங் டிரைவ் போனோம். திரும்பி வரும் போது தான போலீஸ்ல மாட்டினோம். அதை நினைச்சேன். சிரிப்பு வந்துடுச்சு…”
“ஒழுங்கா என்னை ஹோட்டல்ல இருந்தே போக விட்டிருந்தா உங்களுக்குப் பிரச்சனையே வந்திருக்காது. நீங்க என்கிட்டே மாட்டிக்கனும்னு விதி இருந்திருக்கு…” எனச் சொல்லிவிட்டுச் சாதனா சிரிக்க…. அந்த நாட்களின் நினைவில் ரிஷியின் முகமும் மலர்ந்தது.
“எனக்கும் அதுதான் இப்ப வரை புரியலை…. உன்னைப் பார்க்கும் போது எல்லாம் திட்டினேனே தவிர…. ஆனா ஏனோ உன்னை விட முடியலை….”
“நாம முதல் தடவை பார்த்த போது…. நம்ம நிச்சயதார்த்தம் போது… அப்புறம் கல்யாணப் புடவை எடுக்கும் போது…. உன்னைப் பிடிக்கலை பிடிக்கலைன்னு சொல்லிட்டு உன்னோட தான இருந்தேன். நான் நினைச்சா போயிருந்திருக்கலாம்.”
ரிஷி சொன்னதைக் கேட்டுச் சாதனா சிரித்தாள்.
“அப்பவே நீ என்னை மயக்கிட்டியோ…”
“அப்படியே நீங்க மயங்கிற ஆளு தான். திட்ட ஒரு ஆள் கிடைச்சா திட்டிட்டே இருப்பீங்க.”
“நான் திட்டிட்டு மட்டுமா இருந்தேன்.” ரிஷி விஷமமாகச் சிரித்துக் கண்சிமிட்ட…. சாதனா முகம் சிவந்தாள்.
“உன்னைப் பிடிக்கலைன்னா உன்கிட்ட இருந்து விலகி தான இருந்திருக்கணும். அப்படி இருக்கனும்னு தான் நானும் நினைச்சேன். ஆனா முடியலை….நீ என்னோடவ அப்படின்னு மனசுக்குள்ள இருந்திருக்கும் போல… அதுதான் ஸ்லிப் ஆகிட்டேன்.” ரிஷி அசடு வழிய….
“என்கிட்டே மட்டும் தான் ஸ்லிப் ஆகி இருக்கீங்களா…..இல்லை…” எனச் சாதனா சட்டென்று கேட்டவள், இப்படிக் கேட்டுவிட்டோமே….அவன் என்ன நினைப்பான் என நினைத்து நாக்கை கடிக்க…. ரிஷி காரை ஓரமாக நிறுத்தியே இருந்தான்.
“சத்தியமா சாதனா, உன்கிட்ட ஸ்லிப் ஆன மாதிரி நான் நேகா கிட்ட கூட ஆனது இல்லை. நீ என்னை நம்புவ தான…”
“கண்டிப்பா நம்புவேன். ஏன் தெரியுமா? உங்களை எனக்கு ரொம்ப வருஷமா தெரியும். அப்பவே பொண்ணுங்க உங்க பின்னாடி சுத்துவாங்க. ஆனா நீங்க யாரையும் கண்டுக்கவே மாட்டீங்க. அதுதான் உங்ககிட்ட எனக்கு ரொம்பப் பிடிச்ச குணம்.”
[the_ad id=”6605″]
“அப்படியா என் பின்னாடி பொண்ணுங்க சுத்துவாங்களா… எனக்குத் தெரியாதே…” என்ற ரிஷி, “ஆனா… என் பின்னாடி சுத்தின உனக்குத் தானே… இன்னும் வேற யாரெல்லாம் சுத்தினாங்கன்னு…” என ஓரக்கண்ணால் அவளைப் பார்த்துக்கொண்டே சொல்ல…..
அதுவரை அவன் பேசியதை ஆர்வமாகக் கேட்ட சாதனாவிற்கு , அவன் கடைசியாகச் சொன்னதைக் கேட்டதும், முகம் வாடிவிட்டது.
“நான் ஒன்னும் உங்க பின்னாடி சுத்தலை தள்ளி நின்னு பார்ப்பேன். அவ்வளவுதான்.”
சாதனா சொல்லி முடித்ததும், ரிஷி அவளை இழுத்து அணைத்துக்கொண்டான். “ஹே… நான் கேலி பண்றேன்னு உனக்குத் தெரியலையா…. உன்னைப் போய் நான் தப்பா நினைப்பேனா சாதனா…”
“உன் ரூம்ல என்னோட போட்டோ பார்த்ததும், எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருந்தது தெரியுமா… நீ தான் அது லவ் இல்லை க்ரஷ்ன்னு சொல்லிட்டியே…”
“எனக்கு நிஜமாவே அது என்ன மாதிரி பீலிங்ன்னு இப்ப வரை தெரியலை ரிஷி. அப்பா எனக்கு நிறைய மாப்பிள்ளை பார்த்தாங்க, நான் வேண்டாம்னு சொல்லிட்டே இருந்தேன்.”
“எனக்குக் கல்யாணம் பண்ற ஐடியாவே இல்லை. மேல படிக்கனும்னு தான் நினைச்சிட்டு இருந்தேன். அப்பத்தான் உங்களைப் பார்த்தேன். எல்லாமே மாறுச்சு. நீங்க தான் மாப்பிள்ளைனதும் மறுக்க மனசு வரலை….”
அவள் சொன்னதைச் சுவாரசியமாகக் கேட்டுக்கொண்டு இருந்தவன், சாதனாவை விலக்கி உட்கார வைத்து விட்டு காரை எடுத்தான். சிறிது நேரம் அமைதியாகக் காரை ஓட்டியவன், “ஒன்னு தெரிஞ்சிக்கோ… க்ரஷ் ஒருத்தர் மேல மட்டும் வராது.” எனச் சற்று இடைவெளி விட்டவன், மீண்டும் தொடர்ந்தான்.
“டெண்டுல்கருக்கு அப்புறம் யுவராஜ், தோனி, கோலின்னு மாறுறது தான் க்ரஷ். அப்படி ஒருத்தர் மேல மட்டும் இருந்தா அது லவ் தான். நீயா எப்ப அது லவ் தான்னு ஒத்துகிறேன்னு நானும் பார்க்கிறேன்.”
“இப்ப என்ன நான் உங்களை லவ் பண்றேன்னு சொல்லனுமா….”
“எனக்குக் காபி பிடிக்கும். அதுமாதிரி நீ லவ் சொல்றேன்னா… எனக்கு அது தேவையில்லை…. அது பீலிங்கோட வரணும். அப்படி வரும்போது சொல்லு…” என்றவன், காரை நிறுத்த… அப்போது தான் சாதனா கவனித்தாள். அவளின் வீடு வந்திருந்தது.
காரில் இருந்து இறங்கியவள், ஜன்னலின் வழியாகக் குனிந்து “நாம என்ன எல்லாம் தலைகீழ பண்றோம்.” எனத் திடீர் சந்தேகம் கேட்க…
ரிஷிக்குச் சிரிப்பு வந்து விட்டது. “பரவாயில்லை… நம்ம வாழ்க்கை அது நமக்குப் பிடிச்ச மாதிரி இருந்தா போதும். எந்த ஆர்டர்ல வந்தா என்ன?” ரிஷி கேட்க…. அதுதான என்று சாதனாவிற்கு ம் தோன்றியது.
“கொஞ்சி பேசிட வேண்டாம்.” என்ற பாடலை சாதனா வாய்க்குள் முனங்கியபடி வீட்டுக்குள் சென்றாள். அவளை ஒருமாதிரி பார்த்தபடி வெற்றி வெளியே வந்தான். ரிஷி வெற்றியை பார்த்ததும் காரில் இருந்து இறங்கினான்.
“மேடம் ரொம்பச் சந்தோஷமா இருக்காங்க போல….” வெற்றி கேட்க…. ரிஷியின் முகம் புன்னகையில் விரிந்தது.
“அவளை ஏன் இங்க விட்டு வச்சிருக்க? உன்னோட கூடிட்டு போக வேண்டியது தான…”
“இல்லை அவ முழுசா சரி ஆகட்டும். பிறகு பார்க்கலாம்.”
“இப்பவே நல்லா தானே இருக்கா….”
“அவகிட்ட குழந்தைன்னு ஒரு வார்த்தை சொல்லிப்பாரு. பிறகு உண்மையிலேயே அவ எப்படி இருக்கான்னு தெரியும்.”
ரிஷி சொன்னதும் வெற்றி கவலையாகப் பார்க்க… “இல்லை நீ பயப்படுற மாதிரி எதுவும் இல்லை. எங்க கல்யாணம் இயல்பா நடக்கலை…. அது அவ மனசை ரொம்பப் பாதிச்சிருக்கு. அதோட அபார்ஷன் வேற ஆகிடுச்சா…. எல்லாத்துக்கும் தன்னையே வருத்திக்கிறா…”
“அங்க வீட்ல பகல்ல தனியா தான் இருக்கணும். தேவையில்லாதது எல்லாம் யோசிப்பா… இங்க ப்ரீதா இருக்கா…. அவளோட பேசிட்டு இருந்தா… கொஞ்சம் ப்ரீயா இருப்பா… சாதனா ரொம்ப ஸ்ட்ராங். அதனால சீக்கிரம் சரியாகிடுவா….” என்றான் ரிஷி நம்பிக்கையாக.
அப்போது ரொம்ப நேரமாக வெற்றி வரவில்லை என்றதும், ப்ரீதாவும், அவளோடு ரிஷியை பார்க்கும் ஆசையில் சாதனாவும் வந்தார்கள்.
[the_ad id=”6605″]
“என்ன மச்சானும் மாப்பிள்ளையும் ரொம்பக் கொஞ்சிக்கறீங்க போலிருக்கு…” ப்ரீதா சொல்ல…
“அதுல உனக்கென்ன பொறாமை?….” என்றான் வெற்றி.
“எனக்கு ஒன்னும் இல்லைப்பா …” என்றவள், ரிஷியிடம் “அண்ணா அண்ணியை உன்னோட கூடிட்டு போகலையா…. அம்மா வேற கேட்டுட்டே இருக்காங்க.” என்றதும்,
“அது நாங்க கொஞ்ச நாள் லவ் பண்ணலாம்னு இருக்கோம். அதனால அவ இங்க இருப்பா…”
“என்னது லவ்வா…” என ப்ரீதா இருவரையும் கேவலாமாக ஒரு லுக் விட….
“லவ் பண்றதோட நிறுத்திக்கோங்க. திரும்பக் கல்யாணம் பண்ணி வைன்னு சொல்லிடாத…. அப்பவே கோடிக்கணக்கா கல்யாணத்துக்காகச் செலவு பண்ணியிருக்கோம்.” என வெற்றி உஷாராகச் சொல்ல…. அதைக் கேட்ட ரிஷி சிரித்து விட்டான்.
“ஹா..ஹா… கவலைபடாதீங்க மச்சான். திரும்பக் கல்யாணம் பண்ற ஐடியா எல்லாம் இல்லை…. ஆனா ஹனிமூன் மட்டும் போகணும்.” என்றவன், சாதனாவிடம் தலையசைத்து விட்டு மகிழ்ச்சியுடனே அங்கிருந்து விடைபெற்றான்.