Skip to content
Post Views: 2,130
அத்தியாயம் _9
தன்னை தேடி ஹாஸ்டல் வரை வர வேண்டிய அவசியம் என்ன?
யோசனையோடும் தயக்கத்தோடும் வெளியே வந்தாள் .
காருக்குள் இருந்து கை அசைத்து அருகில் வருமாறு அழைத்தான் .
Advertisement
காருக்கருகில் வந்து நின்றாள் .
உள்ளே வருமாறு சைகை செய்தான் .
கார் கதவை திறந்து உள்ளே ஏறினாள் .
Advertisement
என்ன ஸார் …என்னை தேடி இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க ?
Advertisement
ஏன் காரணம் இருந்தால் தான் வரணுமா ?
கண்டிப்பா ….நீங்க என்ன வேலை இல்லாம வெட்டியாவா இருக்கீங்க ?
வாழை பழத்தில் ஊசி ஏற்றுவது போல் இருந்தது அவள் பதில் .
Advertisement
” ஏன் ஊருக்கு போகல ? “
” எனக்கு போக தோனலை …! “
“ஏன் ? “
வேலை பார்க்கிற இடத்தில் மட்டும் தான் நீங்க என்னோட ஓனர் .
அடிபட்ட பார்வையுடன் அவளையே பார்த்தான் .
சரி நான் கிளம்பறேன் ..அவள் கார் கதவை திறந்தாள் .
ஏய் ..இரு …இரு …!
அவள் கேள்வியாய் நோக்கினாள் .
என் வீட்டில் எல்லோரும் புது டிரெஸ் போட்டு பலகாரம் சாப்பிட்டு சந்தோஷமா தீபாவளி கொண்டாடும் போது ….நீ மட்டும் ஹாஸ்டலில் தனியா இருக்கியே ….?
“அதுக்கு ? “
இது அம்மா பண்ணின சுழியம் , வெள்ளை பணியாரம் …சூப்பரா இருக்கும் டேஸ்ட் பண்ணி பாரு .
“இதை கொடுக்கவா வந்தீங்க ? “
அதுக்கு மட்டும் இல்லை …இதுக்கும் தான் கையில் ஒரு பையை திணித்தான் .
” என்ன இது …? “
” பிரிச்சு பாரு ! “
நான் செலக்ட் பண்ணின ஸாரியா ? நினைத்தேன் .
ஹலோ …செலக்ட் பண்ணினது தான் நீ …வாங்கினது நான் .
அதுக்கு ?
இந்த வைட் வித் ரெட் ஸாரியை உனக்கு போட்டு காமிக்கும் போதே …நான் உனக்கு இதை பிரசன்ட் பண்ணனும் முடிவு பண்ணிட்டேன் .
ஸாரி …நான் நேத்து சொன்னது தான் . சேரி யார் வாங்கி கொடுத்தாலும் வாங்கிக்க கூடாது …
அவனிடமே திருப்பி கொடுத்தாள் .
நான் வாங்கி கொடுத்தால் வாங்கிக்கலாம் .
நீங்க என்ன ஸ்பெஷல் ? நீங்க எனக்கு யாரோ லிஸ்டில் தான் இருக்கீங்க !
யார் யாருக்கோ ஸாரி வாங்கி கொடுக்க முடியாது . ஸோ …நீ எனக்கு யாரோ லிஸ்டில் இல்லை .
இது உனக்கு நான் விருப்பப்பட்டு வாங்கினது .
ப்ளீஸ் வாங்கிக்கோ …அவள் கை பிடித்து திணித்தான் .
அவள் வாங்காமல் முரண்டு பிடித்து கார் கதவை திறக்க …ஸ்வாதி சொல்றதை கேள்…அவள் கரம் பற்றி இழுத்தான் .
கையை விடுங்க …மாகாளி ஸ்வரூபம் தரித்து இடது கையை ஓங்கினாள் .
அசையாமல் அப்படியே …அவளையே பார்த்து கொண்டிருந்தான் .
விடுங்கன்னு சொல்றேன் இல்லை ….உங்களுக்கு அவ்வளவு தான் மரியாதை …உருவி கொள்ள போராடினாள் .
ச்சீ …உங்களை போய் நல்ல மனுஷன்னு நம்பினேனே …அவள் கண்ணில் நீர் திரண்டது .
சட்டென்று அவள் கையை விட்டவன் …ஸ்டியரிங்கில் முகம் புதைத்து கொண்டான் .
கோபத்தில் மூச்சு திணற …கார் கதவை திறந்து கொண்டு வெளியே போய் விட்டாள் .
பிரபாவிற்கு தன்னை நினைக்க …நினைக்க ஆத்திரமாய் வந்தது .
தன்னிடம் நெருங்காதவள் பின் தன் மனம் ஏன் போகிறது என்று அவனுக்கு புரியவில்லை .
இது நடக்குமா ? கை கூடுமா …என்றெல்லாம் ஒன்றுக்கு ஆயிரம் முறை யோசித்து இருக்கிறான் .
ஆனால் முடிவு தான் எட்டப்படவில்லை .
நெடு நேரம் இருக்கும் நிலையிலேயே இருந்தவன் …தாயிடம் இருந்து போன் வரவே …கிளம்பினான்.
“——–“
ஸ்ரீமதி அண்ணன் கரம் பற்றி கெஞ்சினாள் .
அண்ணா என்னை நல்ல இடத்தில் வாழ வச்சிட்டு …நீங்க இப்படி வாழ்க்கையே இல்லாம இருக்கீங்களே …அவள் கண்ணீரில் கரைந்தாள் .
அண்ணா …அம்மா ஹெல்த் கண்டிஷன் உங்களுக்கு புரியலையா ?
சாப்பிடாம …அழுது ஓய்ந்து ..Low Bp யில் இருக்காங்க . இப்படியே இருந்தா அம்மாக்கு ஏதாவது ஆகிடுமோன்னு எனக்கு பயமா இருக்கு .
நீங்க ஒரு கல்யாணத்தை பண்ணி அவங்களுக்கு சந்தோஷத்தை கொடுங்க . அவனிடம் கை கூப்பினாள் ஸ்ரீமதி .
இதை தவிர உனக்கு வேற பேச்சே இல்லையா ? கோபத்துடன் தன் அறைக்குள் நுழைந்து …ஓங்கி அறைந்து கதவை சாத்திவிட்டு கட்டிலில் விழுந்தான் .
தான் டீன் ஏஜ் பையன் இல்லை …உருகி உருகி காதலை சொல்ல ….முப்பத்து மூன்று வயதாகிவிட்டதே …!
எப்படி என் காதலை சொல்ல ? நெற்றி பொட்டில் அடித்து கொண்டான் .
ஸ்வாதியை கட்டாய படுத்துகிறோமோ என்றும் தோன்றியது .
அவள் கண்ணீரோடு போனது …அவன் மனதை பிசைந்தது .
ஸாரி என்று மெசேஜ் பண்ணிவிட்டு படுத்து கொண்டான் .
கல்யாணி பாலாஜிக்கு அழைத்து பேசினார் .
ஸ்ரீமதி கணவர் ஒரு பெண் பார்த்து வைத்திருப்பதை சொன்னார் .
அவனுக்கு யாரையாவது பிடித்திருந்தால் சொல்லட்டும் எனக்கு ஓகே தான் . ஜாதி , குலம் , அந்தஸ்து பார்க்காமல் ஏத்துக்கிறேன்
எனக்கு என் பிள்ளை தனி மரமா நிற்க கூடாது அவ்வளவு தான் .
ஒன்னு அவனுக்கு யாராவது பெண்ணை பிடித்தால் சொல்லட்டும் …இல்லையா மாப்பிள்ளை பார்த்திருக்கிற பெண்ணை ஓகே சொல்லட்டும் .
அதெல்லாம் முடியாது …நான் இப்படியே தான் இருப்பேன்னு சொன்னா …நான் இந்த கொடுமை எல்லாம் கண்ணால் பார்க்காமல் எங்கேயாவது போய் தொலையறேன் .
ம்மா…இவ்வளவு காலம் பொறுமையா இருந்தீங்க ..இன்னும் கொஞ்ச நாள் பொறுமையா இருங்க .
கண்டிப்பா அவன் தனி மரமா நிற்க மாட்டான் .
சீக்கிரம் அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையும் .
அவன் மனசுல ஏதோ இருக்கு . அவனுக்கு நாம் கொஞ்சம் அவகாசம் கொடுக்கணும் என்று கல்யாணி அம்மாவிற்கு சமாதானம் சொன்னான் .
“———“
அவன் அனுப்பிய ஸாரி மெசேஜை வெறித்து பார்த்து
கொண்டிருந்தாள்
பிரபா ஸார் ஏன் இப்படி நடந்துக்கிறார் ? அவர் உணர்ச்சிகளை தூண்டும்படி நான் ஏதேனும் நடந்து கொண்டேனா ?
தன்னையே கேட்டு கொண்டு …விடை தேட முயன்றாள் .
மொபைல் அலறி அடங்கியது …பிரபாவாய் இருக்குமோ யார் என்று எடுத்து பார்த்தாள் .
பாலாஜி அழைத்திருந்தான் .
மீண்டும் போன் ரிங்காகவே ..எடுத்து காதில் வைத்தா
ஸ்வாதி உங்களால் என் எனக்கு ஒரு காரியம் ஆகணும் !
சொல்லுங்க ஸார் …நான் என்ன பண்ணனும் ?
உங்களுக்கு வாட்சப்பில் ஒரு போட்டோ அனுப்பி இருக்கேன் பாரும்மா .
நான் தான் மேரேஜில் இன்ட்ரஸ்ட் இல்லைனு சொல்லிட்டேனே !
வெயிட் உனக்கு பார்க்கலைம்மா …உன் ஓனருக்கு ..!
என்ன ஸார் சொல்றீங்க ?
ஆமா ஸ்வாதி …பிரபாவிற்கு பார்த்திருக்கும் பெண் போட்டோ உனக்கு அனுப்பி இருக்கேன் .
நாங்க எவ்வளவு சொன்னாலும் …மேரேஜ் வேண்டாங்கிறான் . நீ சொன்னா கேட்டுப்பான்னு தோணுது .
உன் மேல ரொம்ப மரியாதை வச்சிருக்கான் .
யாரோ ஒரு பெண் அவன் மனதில் இருக்காளோன்னு சந்தேகமா இருக்கும்மா .
ஸ்வாதிக்கு வியர்க்க தொடங்கியது .
நான் எப்படி சொல்லி …அவள் தடுமாறினாள் .
நீ சொன்னா கண்டிப்பா கேட்டுப்பான் .
ஸ்வாதிக்கு ஏனோ மனதில் நடுக்கம் பரவியது .
சொல்லி பார்க்கிறேன் ஸார் . ..அவள் போனை கட் பண்ணினாள் .
வாட்சப்பில் வந்திருந்த பெண்ணின் போட்டோ பார்த்தாள் .
பெண் மிக அழகாக இருந்தாள் .
ஸ்வாதிக்கு இதயம் வலித்தது .
தனக்கு ஏன் வலிக்கிறது என்று தோன்றாமல் இல்லை .
விடை தெரியா விட்டால் பரவாயில்லை . அவளுக்கு தான் இந்த கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு காரணம் தெரியுமே !
“———-“
இயல்பாய் மறுநாள் வேலைக்கு கிளம்பினாள் .
வேலையில் தன்னை முழு மூச்சாய் ஈடு படுத்தி கொண்டாள் .
பாலாஜி சொன்னது நினைவிற்கு வந்தது . பிரபா சாரிடம் பேச வேண்டும் என்று மனதிற்குள் நினைத்து கொண்டாள் .
பிரபா சார் லைஃப்ல ஏதோ பிரச்சனை போல…அது தான் இன்னும் மேரேஜ் பண்ணிக்காம இருக்கார் .
ஏதாவது லவ் பெயிலியர் ஆக இருக்குமோ ?
இருக்கும் …ஸார் பர்சனாலிட்டிக்கும் , அந்தஸ்திற்கும் நிறைய பெண்கள் விரும்பி இருப்பார்கள் .
பாலாஜி ஸாரிடம் கேட்போமா ?
ச்ச்சே …அவர் பாஸ்ட் ஹிஸ்டரி தெரிந்து நாம என்ன பண்ணப் போறோம் .
அத்துமீறி எழுந்த ஆர்வத்தை அடக்கி கொண்டு …
வேலையில் தீவிரமானாள் .
“——-“
பிரபாவிற்கு வேலையில் மனம் ஒட்டவில்லை .
ஏற்கனவே மன அழுத்தத்தில் இருக்கும் நாம் மனநோயாளி ஆகி விடுவோமோ ? பயந்தான் .
நண்பனின் நிலை எண்ணி பாலா மிகுந்த வேதனை அடைந்தான் .
உனக்கு என்னடா பித்தா பிரச்சனை ?
மேரேஜ் உன் சொந்த விஷயம் …நான் இல்லைனு சொல்லலை ..அதுக்காக உன் ஹெல்த்தை கவனிக்காம இருக்கியே …?
உன்னால தான் அம்மாவோட ஹெல்த் கண்டிஷனும் ஓர்ஸா இருக்கு .
பாஜி …நான் எல்லாத்தையும் விட்டுட்டு எங்காவது போயிடவா …? சிவந்த கண்களுடன் நண்பனின் தோள் சாய்ந்தான் .
டேய் பித்தா அடி வாங்க போற …!
கஷ்ட பட்ட காலத்தில் கூட தைரியமா இருந்த….இப்போ உயர்ந்த இடத்தில் இருக்கும் போது என்னடா பேச்சு இது ….நண்பனை அதட்டினான் .
பித்தா …உன் மனசுல என்னவோ இருக்கு . அது கண்டிப்பா நடக்கும் .
ஏன்னா என் பித்தா தவறான எந்த முடிவும் எடுக்க மாட்டான் .
உன் ஆசை நிறைவேறும்டா …எப்பாடு பட்டாவது நான் நிறைவேற்றுவேன் ….மனதில் உறுதி ஏற்றான் .
“———-“
ஸ்வாதி பிரபாவிற்கு மெயில் பண்ணி கொண்டிருந்தாள் .
ஒரு வேளை இந்த வேலையை விடும் சூழல் வந்தால் ….?
பிரபா சாருக்கு நம்மால் முடிந்த ஆலோசனை ….
தன் யோசனையை ….அது கொடுக்க போகும் பலனை விலாவரியாக எழுதி அனுப்பினாள் .
மெயில் பார்த்த பிரபா …அதை அப்படியே பாலாவிற்கு பார்வர்டு பண்ணினான் .
டேய் பாஜி …உனக்கு மெயில் பண்ணி இருக்கேன் பார்த்துட்டு போன் பண்ணு என்று கால் பண்ணி விபரம் சொன்னான் .
பாலா பார்த்துவிட்டு….அடுத்த நிமிடமே பிரபாவிற்கு அழைத்தான் .
இருவருகுமே ஸ்வாதியின் யோசனை சூப்பர் என்று தோன்றியது .
” அவள் ஐடியா சீப் அன் பெஸ்ட் .. “
“———–“
ஸ்வாதி தலைவலி என்று சுக்கு மல்லி காஃபி அருந்தி கொண்டிருந்தாள் .
அவள் அமர்ந்த சேர் அருகே …அவன் வந்து அமர்ந்தான் .
ஹாய் ஸ்வாதி என்ற குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தாள் .
அவன் கண்களில் விஷம் இருந்தது .அவள் கண்களில் பயம் இருந்தது .
உன்னை யார் இங்கே வர சொன்னது ? அவளுக்கு தொண்டை வறண்டது .
உன்னை பார்க்க தான் வந்தேன் . அவன் கண்களில் தெரிந்தது அப்பட்டமான காமம் .
நான் பழைய ஸ்வாதி இல்லை …உன்னை கொன்னுடுவேன் .அவள் அடிக்குரலில் சீறினாள் .
ஆமா நீ பழைய ஸ்வாதி இல்லை ….இப்போ இன்னும் மினுமினுப்பா …காஷ்மீர் ஆப்பிள் பிரெஷ்ஷா இருக்க….அவன் அருவெறுப்பாய் சிரித்தான் .
ச்சீ …போடா வெளியே …அவள் எழுந்து நின்றாள் .
ஷ் …இப்போ எதுக்கு கத்தி கலாட்டா பண்ற ?
இப்போ போறேன் …ஆனா அடிக்கடி வருவேன் .
பை ….செல்லம் …அவள் கன்னத்தை தட்டி விட்டு போனான் .
கூனி குறுகி நின்றாள் ஸ்வாதி .
CCTV யில் மானிட்டர் பண்ணி கொண்டிருந்த பிரபா கொதித்து விட்டான் .
டாமிட் …எவ்வளவு தைரியம் அவனுக்கு …!
யார் அவன் ? வெறித்தனமாய் காரை முடுக்கினான் கூடுவாஞ்சேரி நோக்கி .
——-தொடரும் —–
error: Content is protected !!