“அடியேய்.. பாப்பா.. இப்போ நீ தான்டீ வில்லங்கமா பேசறே..!
நா கொஞ்சம் ஒட்டிக்கோ கட்டிக்கோ அளவுக்கு கூட யோசிக்கல. ஆனா நீ.. சீமந்தம் வரை பேசறே. இதுலயே தெரியலையா யாரு மோசமுன்னு..” என்றவனுக்கு அவள் சொன்ன விசயம் கற்பனையில் எழ வெட்கம் வேறு வந்து தொலைத்தது.
Advertisement
“பின்னே.. சும்மா சீண்டிக்கிட்டே இருந்தா.. நாங்களும் என்ன தான் பண்ணறது..?
Advertisement
அதான் தடாலடியா ஒரு முடிவுக்கு வந்திடலாமுன்னு பாக்கறேன். என்ன மாமா ரெடியா..?” என்று சவாலாய் யமுனா அழைக்க,
இந்த ஜென்மத்துல நீங்க என்ன விட்டுடமாட்டிங்கன்னு நம்பிக்கை இருக்கு.
அப்படி ஒரு வேள நீங்க விட்டாலும், விடாம விக்ரமாதித்தன் வேதாளமா உங்க முதுகுல காலத்துக்கும் சுமக்க வைப்பேனே ஒழிய.. உங்கள விட்டுட்டு போற ஐடியா எல்லாம் எனக்கு இல்ல..” என்றாள் தீவிரமான பாவனையில்.
அதில் இளகியவன், “வேதாளம் எப்பவும் விட்டுட்டு போயிடும். விக்ரமாதித்தன் தான் போய் பிடிச்சிட்டு வருவான்.. தெரியுமா..?” என்றிட,
“ஆமா. இப்போ அது தான் ரொம்ப முக்கியம். போங்க..” என்றவள்,
“இங்கே பாருங்க தயா.. எனக்கு தாலின்னு ஒண்ணு ஏறினா அது உங்க கையால தான். அது இல்லன்னா நா உயிரோட இல்ல ன்னு அர்த்தம்..” என்றாள் உறுதியாக.
“ஏய்.. லூசு.. என்ன பேச்சு இது..? என்ன நடந்தாலும் சரி உன்னை யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன்.
என்னை தாண்டி வேற யாரும் உன்னை கட்டிக்க விடமாட்டேன்.. அப்படி ஏதாவது நடந்தாலும் நீ என்னோட தான் கடைசி வரை வாழ்ந்தாகனும்..” என்றவனின் விழியில் வழிந்த தீவிரம் அவளறியவில்லை.
“ஊருக்கு போனதும் சமயம் பாத்து நீயும் பேசிடு. நானும் வீட்டுல பேசிட்டு.. அப்புறமா முடிவு பண்ணலாம் சரியா..?
என்ன வந்தாலும் தைரியமா ஃபேஸ் பண்ணனும். அதவிட்டுட்டு இப்படி இன்னொரு தடவ பேசினா நடக்கறதே வேற..” என்றான் தொடர்ந்து.
“ம்ம்.. சரிங்க. ஆனா போனதும் வீட்டுல இதை பத்தி பேச முடியாது. தீபாவளி முடுஞ்சதும் பொறுமையா விசயத்த சொல்லி பார்க்கறேன்.
கொஞ்சமே கொஞ்சம் பயமா இருக்கு தயா..” என்றாள் குரல் தழுதழுக்க.
“பாப்பா.. என்ன நீ..? எல்லா வீட்டுலையும் ஆரம்பத்துல கோபம் தான் படுவாங்க.
இவ்வளவு வருஷமா வீட்டுக்காக எவ்வளவு பொறுப்பா எல்லாமே எடுத்து செஞ்சிருக்கே..?
அப்ப உன்னோட முடிவுல தப்பு இருக்காதுன்னு அவங்களுக்கும் தெரியும். எதையும் பொறுமையா அவங்களுக்கு சொல்லி புரிய வச்சிடலாம்.
அப்படி ஒருவேள உன்னால பேச முடியாதுன்னா சொல்லு நானே நேர்ல வர்றேன்..” என்றிட,
“இல்ல.. இல்ல தயா.. நானே பேசிட்டு சொல்றேன்..” என்று அவள் அவசரமாய் சொல்ல,
“ம்ம்.. சரி. பார்த்து ரெடியாகு. பஸ் ஸ்டேண்ட் போற டைமுக்கு ஆட்டோ எடுத்துட்டு வர்றேன்.. சரியா..?” என்றான் அக்கறையாக.
அவளிடம் சொன்னது போலவே அவர்களை சரியான நேரத்திற்கு அழைத்து சென்று பஸ் ஏற்றி விட்டு, ‘அவர்களுக்கு வழியில் தேவைப்படும்..’ என நினைத்ததை எல்லாம் வாங்கி கொடுத்தவன், மறுநாள் காலை தனக்கான பஸ்ஸில் ஏறினான்.
இருவரின் பயணமும் அவரவர் ஊரை நோக்கி ஆரம்பித்தது தங்களின் காதலை வீட்டில் சொல்லிவிடும் எண்ணத்தோடு.
இவர்களின் காதலுக்கு பச்சை கொடி காட்டுவார்களா.. இரு வீட்டிலும்..?!