ரோலர் கோஸ்டர் பயணமாக அரங்கேறிய தங்கள் முதல் சந்திப்பைப் பற்றி ரம்யா சொல்ல அறிந்துகொண்டதில் பெரும் புத்துணர்ச்சி பெற்றிருந்தான் ஷ்ரவன். அதில் அவர்களுக்குள் நிலவிய பனிப்போரும் இலகுவாய் கரைந்திருந்தது. கடமைக்கென்று உறவாடியவர்கள் சகஜாமாய் பேசிப்பழகினர்.
அனுதினமும் காலையில் தெய்வ வழிபாடுகள், மதியத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்தல், மாலையில் நடைப்பயிற்சி, எனத் தன்னுடன் சிரித்த முகமாகச் செலவழித்த மனையாளின் அன்பில் மகிழவே செய்தான் ஷ்ரவன்.
கணவன் என்ற உரிமை எடுத்துக்கொள்ளாமல் கண்ணியமாய் நடந்துகொண்ட ஷ்ரவனின் குணத்தில் பெண்ணவளும் இயல்பாய்ப் பழகிவந்தாள்.
Advertisement
அன்றுமாலை வழக்கம்போல நடைப்பயிற்சி முடித்துக்கொண்டு வீடு திரும்பிய ஜோடிகளை, வாசலிலேயே மடக்கிய திலகா, “உங்களுக்காகத் தான் காத்துட்டு இருந்தேன். உத்ராக்கு பெண் குழந்தை பிறந்திருக்கா. தருண் உன்னை வீடியோ காலில் கூப்பிடச்சொன்னான் ரம்யா,” முகமெல்லாம் புன்னகையாக அறிவித்தார்.
மின்னல் வேகத்தில் உள்ளே விரைந்தோடிய ரம்யா மடிக்கணியை உயிர்ப்பித்தாள். திலகா, தாமோதரன், ஷ்ர்வன் மூவரும் அவளைச் சூழ்ந்துகொண்டனர்.
தொட்டிலில் உடம்பை வளைத்து முறித்து சோம்பலிட்டு, சொப்பு வாயைக் குவித்து கொட்டாவி விடும் குழந்தையின் தரிசனத்தில் அங்கமெல்லாம் பூரித்தது அவளுக்கு.
Advertisement
“அச்சு அசல் உன் சாயல்டா,” என்றவளின் கண்கள் பனித்தன.
Advertisement
அனைவரும் குழந்தையின் பளிங்கு முகத்தை ஆசை தீர கண்டுகளித்துக் கொண்டிருக்க, ரம்யாவின் விழிகள் உத்ராவைத் தேடியது.
பிரசவமான சோர்வில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிடுக்கிறாள் என கேமேராவை அவள் பக்கம் திருப்பி, மனையாளின் வாடிய முகத்தினை வருடியபடி அவளை எழுப்ப முயன்றான் தருண்.
“இன்னைக்குத் தான் ரெவ்யூ போயிட்டு வந்தோம் தருண். இவருக்கு கழுத்து எலும்பு முறிவு முழுசா சரியாகலடா. ரெண்டு நாளைக்கு ஒருமுறை பிசியோதெரபி பண்ணனுமாம்,” ரம்யா விளக்க,
தெரிந்தவர் ஒருவர் மூலமாக உணவு வரவைத்துக்கொள்கிறேன் அல்லது தானே எளிமையான சமையல் செய்து சமாளித்துக்கொள்கிறேன் என தாமோதரன் மறுவழிகளை அடுக்கியபோதும் தீர்க்கமாக மறுத்தாள் ரம்யா.
“அவ என்னைக்கு ஷ்ரவன விட்டு வெளியூருக்குப் போயிருக்காங்க. அவங்கள ஃப்ரீயா விடுங்க. நாம முதல்ல போயிட்டு வருவோம்,” இடைபுகுந்த திலகா, மாமனார் மருமகள் வாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
மனையாள் பொழியும் நேசத்தின் மற்றொரு பாகத்தைக் கண்டுகொண்டதில் பெருமிதம் கொண்டான் ஷ்ரவன்.
திலகாவும் தாமோதரனும் அங்கிருந்து நகர, “எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, நாங்களும் குழந்தையைப் பார்க்க வரோம்டா,” ஷ்ரவன் தன் பங்குக்கு தம்பியிடம் பொறுப்பாகப் பேச,
“வழக்கமா நீதான் எல்லாரையும் கழட்டிவிடுவ. இந்தமுறை உன் பொண்டாட்டியா???” அண்ணனை வம்பிழுத்தவன்,