தெய்வானைக்கும் அங்கே நின்றவர்களை கண்டு கோவம் ஒரு பக்கம் அழுகை ஒரு பக்கம் என நின்றாள்…
“என்ன சொல்லுறாங்கண்ணா,” இடைநிலை காவலரை கேட்டான்,
Advertisement
அங்க வந்து இன்ஸ்பெக்டர்..
Advertisement
“அது வந்து சார் பொண்ணுக்கு பாதிப்பு அதிகம்… பையனுக்கு கால்ல மட்டும் தான் அடி” என்றார் மெல்லமாக,
Advertisement
ஆனா அவர் என்ன தான் மெல்லமாக சொன்னாலும்.. ஊசி கீழே விழுந்தாலும் சத்தம் கேட்டிருக்கும்.. நிசப்தமாக இருந்த இடத்தில் அவர் வார்த்தை அச்சு பிசகாமல் அனைவர் காதில் விழுந்தது…
“அய்யோ சார் என் புள்ளைங்களை காப்பாத்துங்க” என்று கதறினாள் தெய்வானை..
சிங்காரவேலன் , மனைவியை தாங்கிக்கொண்டு ” என் பசங்களுக்கு என்னாச்சு சார்” என்றான்…
“அது நாங்க சொல்ல முடியாது.. டாக்டர் தான் சொல்லனும்னு” இன்ஸ்பெக்டர் சொல்லி முடிக்க,
ஐ சி யூ கதவை திறந்துக்கொண்டு வெளியே வந்தார் டாக்டர்…
“இப்படி எப்படி இருக்காங்க டாக்டர்” என்று அனைவரும் சூழ்ந்துக்கொண்டனர்..
“சாரி டாக்டர் அந்த பொண்ணோட நிலை ரொம்ப மோசமாதான் இருக்கு.. நாலு பேரும் அந்த பொண்ணை ரொம்ப சித்திரவதை பண்ணி இருக்காங்க.. அந்த பொண்ணால இனிமே ஒரு குழந்தைக்கு தாயாக வாய்ப்பு இல்லை” என்றதும்…
“அவ என்னடா தேவையில்லாம பேசுறா, நீ தான் தேவையான வங்களுக்கு மட்டும் பேசுற..” என்ற அன்னைக்கு அவன் பதில் சொல்லாமல்..
“முதல்ல அமைதியா இருங்க.. பசங்களுக்கு என்னாச்சுன்ற கவலையை விட, உங்களுக்கு கோவம் தான் பெருசா இருக்கு” என்றான் அனைவரையும் பார்த்து..
“எதுக்கு அமைதியா இருக்கணும் இவலால தான் என் பேத்திக்கு இந்த நிலமை.. சாமப் விட்டாளே பெரிய பத்தினி மாறி” என்று பல்லைக்கடித்தார் காளியம்மா..
“ஆமா பெரியம்மா நா பத்தினி தான் எங்க இல்லைன்னு சொல்லுங்க பாக்கலாம்.. என் வலியை நீங்க அனுபவிக்ணும்னு நா ஒரு நாளும் நெனைச்சதில்லை, நம்ம பண்ணுற நல்லது கெட்டது நம்ம புள்ளைங்களுக்கும் போகும்னு அப்பத்தா ஒவ்வொரு தடவையும் சொல்லி சொல்லி தான் வளத்தாங்க” என்னை என்று சொல்லும்போதே! குரல் உடைந்தது..
“அம்மா அழாதிங்க , பார்த்திப்பா வாங்க போகலாம்” என்றாள் பயத்தில்..
“நம்ம யாருக்குடி பாவம் பண்ணோம் இங்கிருந்து போக, செஞ்சதை சொல்லிக்காட்டக்கூடாது.
இவங்க எண்ணத்துக்கு சொல்லிக்காட்டலாம் தப்பில்லை” என்று மகளிடம் சொன்னவள் அவர்கள் பக்கம் திரும்பினாள்..
“இதோ! நிக்குறானே இவன் பண்ண பாவம் தான் இன்னைக்கு அந்த குழந்தைகளை படுக்கையில தள்ளியிருக்கு… அது மட்டுமா இவன் தான் போலிஸ்கு பணத்தை கொடுத்து அந்த பாடு படுத்தினது” என்றதும் அனைவரும் அதிர்ச்சியில் அவனை நிமிர்ந்து பார்த்தனர்..
“நீ பொய் சொல்லுற எம்புருஷன் அப்படி பணணிருக்க மாட்டாரு” என்றாள் தெய்வானை..
“இப்ப கூட உனக்கு புத்தி வரலயில்லை, எங்க என் கண்ணை பார்த்து உம்புருஷனை ‘இல்லைன்னு’ சொல்ல சொல்லு மாட்டான்.. அவன் பணம் கொடுத்ததை கண்ணால் கண்ட சாட்சி நானும் என் புருஷனும் இருக்கோம்.. இவன் எனக்கு ஆயிரம் கெட்டது பண்ணினதுல ஒரே ஒரு நல்லது பண்ணி இருக்கான்.. அவன் போலிஸ்ல சொன்னதால் தான் இன்னைக்கு என் பொண்ணு என்கிட்ட இருக்கா” என்றாள் நெஞ்சை நிமிர்த்தி..
அனைவரும் சிங்காரவேலனை நிமிர்ந்து பார்த்தனர்..
அவனோ திருட்டு முழி முழித்துக்கொண்டு நின்றான்..
“அது… அது” என்று தயங்கியதிலே , உண்மை தெரிந்து போனதா அனைவருக்கும்..
“பாவி பாவி உனக்கு என்னடா நாங்க பாவம் பண்ணோம்.. ஒரு பொண்ணை கட்டிக்கொடுத்ததுக்கு.. எங்க தலையில நெருப்பள்ளி கொட்டிட்டியே!” என்று அவரை நெருங்கினார் காளியம்மா…
“அவனுக்கு அந்த தைரியத்தை கொடுத்தது யாரு நீங்க தானே!” என்றாள் தேவகி..
வெற்றி அமைதியாக நின்றானே தவிர எதுவும் பேசவில்லை, ‘மணியரசுக்கு கண்ணை காட்டி ஒதுங்கி நின்றான்..
“பார்த்திப்பா என்னை இங்க இருந்து கூட்டிப்போறீங்களா.. எனக்கு மூச்சு முட்டுது” என்றாள் வேல்விழி..