என்னவள்_40
“ஹாய் பிருந்தா எல்லா ஃபோட்டோசும் சூப்பர் அதுவும் அந்த சிவப்பு கலர் சேலையில் எடுத்த ஃபோட்டோ செம…ரொம்ப அழகாக இருக்கற என்று வாட்சப்பில் மெசேஜ் வர… கூடவே என்னோடதும் அனுப்பி வைக்கிறேன் பார்க்கறையா…என்ற கேள்வியும் அடுத்ததாக வந்து இருந்தது. “
“நன்றி அண்ணா… அனுப்புங்க பார்க்கறேன் நேற்றைக்கு உங்க டிக்டாக் செம சூப்பர்…காலேஜில் எல்லோரும் அதை பார்த்தோம்..என்று தட்டிவிட்டாள் இங்கேயிருந்தபடி பிருந்தா .”
“என்ன அண்ணாவா பேர் சொல்லியே கூப்பிடலாமே…இது அவ்வளவாக நல்லா இல்லை பிருந்தா.நாம என்ன அப்படியா பேசறோம்…நம்ம நல்ல ஃப்ரெண்டு தானே…அப்புறம் எதுக்கு இந்த அண்ணா…என்னவோ எனக்கு வயதானது போல இருக்கு..அப்புறம் பிருந்தா…எத்தனை நாள் உன்னை ஃபோட்டோவில் மட்டும் பார்க்கிறது. ஒரு தடவை நேரில் பார்த்தா என்ன…நாம எப்போது நேரில் சந்திக்கலாம் என்று கேள்வியை தாங்கி வர…”
பேச்சு வேறு திசையில் திசை மாறுவதை கண்டு கொண்ட பிருந்தா…”.வேற எப்படி கூப்பிடனும்ன்னு எதிர் பார்க்கறிங்க ணா… புதுசா ஏன் இப்படி கேட்கறிங்க… இத்தனை தாளா இப்படிதானே கூப்பிடறேன் உங்களோட மேனரிசம் நிறைய எங்க கார்த்திக் அண்ணா மாதிரி இருக்கு அதனால்தான் வாட்சப் நம்பரே கொடுத்தேன். இனி இதுமாதிரி பேசாதிங்க…”
“ஒ…அப்படியா பிருந்தா ஸாரி…ஸாரி. . ஆயிரம்முறை ஸாரி .. சரி…நாம ஏன் ஒரு தடவை நேரில் பார்க்க கூடாது. ரொம்ப நாள் ஆசை பிருந்தா உன்னை நேரில் பார்க்கணும் அப்படிங்கறது….நாளைக்கு பார்க்கலாமா…உன்னோட காலேஜ்ஜிற்கு கட் அடிச்சிட்டு நான் சொல்லற இடத்திற்கு வர முடியுமா…என்னோட ஃபாலோவர்ஸை எல்லாம் நேரில் பார்க்கணும் அப்படிங்கறது என்னோட பல நாள் ஆசை என்ன சொல்லற…வரமுடியுமா”.
“உங்க பேச்சு சரி இல்லைங்கணா…இத்தனை நாளா இப்படி நீங்க பேசினது இல்லை இன்றைக்கு பேசற விதம் வேற மாதிரி வருது…ஸாரிணா…இனி சாட்டிங்கிற்கு வராதிங்க நீங்கள் எதிர் பார்க்கற பொண்ணு நான் கிடையாது. ஏதோ தெரியாமல் இத்தனை நாளும் பேசிட்டேன்” என்றபடி கோபமாக ஃபோனில் இருந்த அந்த நம்பரை ப்ளாக் லிஸ்டில் போட்டு வைத்தாள்.
இந்த காலத்தில் யாரை நம்பறது யாரை நம்பக்கூடாது எதுவுமே புரியவில்லை நல்லவன்னு பேசினால்…என்றபடி ஃபோனை ஒரமாக வைத்து விட்டு சக்தியை தேடி வெளியில் வந்தாள்.
சக்தி இவளை பார்க்கவும் “என்ன பிருந்தா படிச்சு முடிச்சாச்சா..என்ன முகமே சரி இல்லை இன்றைக்கு என்று கேட்க…”
“அண்ணி ஃபோனில் ஒரு இடியட் கடுப்பேத்திட்டான் இப்ப எல்லாம் யாரை நம்பறதுன்னு தெரியலை அதுதான் முகம் இப்படி இருக்கு.”
“முகம் தெரியாதவங்க பேசறது எல்லாவற்றிக்கும் கவலை பட ஆரம்பிச்சா கடைசி வரைக்கும் கவலை மட்டும் தான்படனும் அதை அந்த நிமிடத்தில் விட்டுடு…உங்கள் அண்ணா ஃபோன் பண்ணறதா சொன்னாங்க நீ பேசலையா…”
“கார்த்திக் அண்ணாவா…”
“சரிதான் எத்தனை அண்ணாமா உனக்கு இருக்கறாங்க…இவர் மட்டும் தானே..”
“போங்க அண்ணி இருங்க கேட்கறேன் என்று எழுந்து சென்றாள். பிருந்தா பேசி முடித்தவள் அண்ணி அண்ணா உங்ககிட்டேயும் ஏதோ கேட்கணும்னாங்க என்னன்னு கேட்டுடுங்க என்று ஃபோனை நீட்ட…”
“என்ன கார்த்திக் என்றபடி ஃபோனை வாங்கினாள் ” எதிர் முனையில் கார்த்திக் “இங்கே டிப்பாட்மெண்ட்டல் ஸ்டோருக்கு வந்து இருக்கிறேன். உனக்கு ஏதாவது வாங்கணுமா சக்தி …”
“எனக்கு என்ன? புரியவில்லை எல்லாம் தான் வீட்டில் இருக்கே…”
“அது…வந்து…பிருந்தா ஃபேஸ்பேக் இது அதுன்னு… நிறைய காஸ்மெடிக் ஐட்டம் சொன்னா உனக்கு ஏதாவது தேவை இருக்குமா…அதுதான் கேட்டேன். “
“நான் எதுவும் போடறது இல்லை. வேணும்னா காஜல் வாங்கிட்டு வாங்க எனக்கு போட பிடிக்கும்” என்று முடித்து கொண்டாள். ஃபோனை பிருந்தாவிடம் தர…வாங்கி கொண்டவள் அண்ணி “அண்ணாவுக்கு மேக்கப் ஐட்டம் எதுவுமே தெரியாது…அங்கே யாராவது வேலை செய்யாற பொண்ணு கிட்ட கொடுக்க சொல்லுவாங்க அப்படி தான் ஒவ்வொரு தடவையும் வாங்கிட்டு வருவாங்க என்று சொல்ல… இவளும் ஒரே ஒரு பொருள்தான் சொல்லி இருக்கிறேன் அதனால் பிரச்சினை எதுவும் வராது. சரி இந்த குட்டி பையன் ஏன் ரொம்ப நேரமாக தூங்கிவிட்டு இருக்கிறான் அவனை எழுப்பலாமா…”
“அண்ணி அம்மாகிட்ட திட்டு விழும் அம்மாவுக்கு தூங்கும் போது எழுப்பினால் பிடிக்காது.குட்டி எழுந்ததும் இன்றைக்கு கோவிலுக்கு போகணும்ன்னு சொல்லிட்டு இருந்தாங்க நீங்களும் புறப்படுங்க போயிட்டு வரலாம். “
“இன்றைக்கு டயர்டாக இருக்கு பிருந்தா நீங்கள் மட்டும் போயிட்டு வாங்க இன்னோரு நாளைக்கு நான் வரேன். “
“சரி அண்ணி…இருங்க நான் போய் பார்த்துவிட்டு வரேன் வேந்தன் எழுந்தா தூக்கிட்டு வரேன் என்றபடி தனது தாயாரின் அறைக்குள் நுழைந்தாள்.”
“அம்மா புறப்பட்டாச்சா…என்று சத்தமிட்டபடி போனவள் சிறிது நேரத்தில் எல்லாம் குழந்தையோடும் தாய் தந்தையோடும் பிருந்தா புறப்பட்டு இருந்தாள் கோவிலுக்கு.. “
கோவிலுக்கு சென்ற சிறிது நேரத்தில் எல்லாம் கார்த்திக் வீட்டிற்கு வந்து இருந்தான் . அவன் வந்த சிறிது நேரத்தில் எல்லாம் ரேஷ்மா இவளுக்கு ஃபோனில் அழைத்திருந்தாள். “சக்தி அங்கே உன்னோட வீட்டிற்கு தான் வந்துவிட்டு இருக்கிறேன். இப்ப வரலாம் தானே என்ற கேள்வியோடு…”
“ரேஷ்மா இது என்ன கேள்வி வா வா வீட்டில் தான் இருக்கிறேன் என்ன திடின்னு ஏதாவது விஷேஷமா…”
“எல்லாம் ஃபோனிலேயே சொல்லணுமா வீட்டுக்கு தான் வரேன் வந்து சொல்லறேன் வெயிட் பண்ணு…என்று ஃபோனை கட் செய்தாள் “.
“யார் வர்றாங்க சக்தி முகமே ப்ரைட்டா இருக்கு என்றபடி இவளுக்கு வாங்கியதை எடுத்து நீட்டினான்.”
“வேலை செஞ்ச இடத்தில் ஃப்ரெண்டு கார்த்திக் ரொம்ப ஸ்வீட் அவ…ரொம்ப நாளா வீட்டிற்கு வான்னு கூப்பிட்டுட்டு இருந்தேன் இப்பதான் வர்றா…”
“அப்படின்னா என்ன உனக்கு அடையாளம் இனி தெரியவே தெரியாது. .அப்படித்தானே உன்னோட ஃப்ரெண்டு வந்துவிட்டு போகிற வரைக்கும்.. இங்கே உட்காரலாமா உனக்கு டிஸ்டப்ட்டா இருக்காது தானே..இல்லை ரூம்பிற்கு போகவா…”
“இதெல்லாம் ஓவர் கார்த்திக் இங்கே என்ன ரகசியமாக பேசப்போகிறோம் இங்கேயே உட்காருங்கள்…அவள் பேச ஆரம்பிச்சா நிருத்தவே மாட்டா…ரயில் எஞ்சின் மாதிரி நிற்காமல் பேசிட்டே இருப்பா…”
சற்று நேரத்தில் எல்லாம் ரேஷ்மா இவர்களின் வீட்டிற்கு வந்து இருந்தாள். “சக்தி பைனலி கல்யாணம் ஃபிக் ஆகிடுச்சு…மாமா ஊரில் இருந்து வந்தாச்சு என்று தனது கல்யாண பத்திரிக்கையை இவளிடம் நீட்டினாள்.”
“இவர் கார்த்திக் என்று அருகில் இருந்த கார்த்திக்கை அறிமுகம் செய்து வைத்தாள்”…
“அண்ணா இந்தாங்க பத்திரிக்கை
முதல் நாளிலேயே வந்திடணும் அப்புறம்
சக்தி உன்னை எதிர் பார்த்து காத்திட்டு இருப்பேன் ஏமாற்றிடக்கூடாது.”
“கட்டாயம் வருவேன் என்றபடி பத்திரிக்கையை பிரித்து பார்த்தவள் என்ன ரேஷ்மா இது முழுசா நாளுநாள்தான் இருக்கு… கல்யாணத்துக்கு எனக்கு தான் லாஸ்ட்டா பத்திரிகை கொண்டு வந்தது.”
“அப்படி இல்லை சக்தி சரியா இருபது நாளில் கல்யாணம் வச்சாச்சு நான் என்ன செய்ய…அண்ணா குடும்பத்தோட வந்திடணும். “
“சரி ரேஷ்மா வேலைக்கு தொடர்ந்து போகிற ஐடியா வா இல்லை லீவ்வா…என்ன ப்ளான் சக்தி இவளிடம் கேட்க…”
“இப்போதைக்கு வேலையை விடற ஐடியா இல்லை சக்தி ஜூனியர் ரேஷ்மா வந்தால்தான் வேலைக்கு விடுமுறை தர்ற ஐடியாவில் இருக்கிறேன் இங்கே எப்படி… எனக்கு ஜூனியர் சக்தியை எப்போது கண்ணில் காட்டப்போற…சட்டென கேட்டுவிட இவளும் நிமிர்ந்து பார்த்தது கார்த்திக்கின் முகத்தை தான். “
“ஒ…ஒகே ஒகே…ரெண்டு பேரும் கொஞ்ச நாளைக்கு ஃபீரியா வாழ்க்கையை என்ஜாய் பண்ணற ப்ளானா..ஸாரி இனி கேட்க மாட்டேன் என்றபடி நிறைய சக்தியை கிண்டல் செய்து விட்டே புறப்பட்டாள்.”
ரேஷ்மா செல்லும் வரை பொறுமையாக இருந்தது கார்த்திக் அவள் செல்லவும் சக்தியிடம் வம்பிழுக்க ஆரம்பித்தான்.” சக்தி உன்னோட ஃப்ரெண்ட் சொன்னதிற்கு பதில் சொல்லலை.. என்று ஆரம்பிக்க…”
“என்ன பதில் சொல்லணும்…கேட்டபடி எழுந்து சென்றாள். “
“அதுதான்அந்த ஜூனியர் சக்தி விஷயம்…எப்ப வரும் சக்தி என்று கேட்டபடி இவளோடு பின் செல்ல…”
“ஆமாம்…ஆமாம் இங்கே ஒரு முத்தத்திற்கே வழியை காணோமாம் இதில் ஜூனியர் வேறையா…வாய்க்குள் முனங்கியபடி சக்தி மாடியில் இருந்த தங்களது பெட்ரூம்பிற்குள் நுழைந்தாள்”.
“சக்தி சத்தமாக சொல்லு எனக்கு கேட்கலை…என்றபடியே அவளுக்கு பின்னால் வந்து கொண்டு இருந்தான் கார்த்திக். “
“கேட்டா மட்டும் என்ன செஞ்சிடபோறிங்க…எதுவும் நடக்காது கிளம்புங்க…”
“ஏம்மா இத்தனை கோபம் உன் ஃப்ரெண்ட் வரும் போது நல்லா தானே இருந்த அதுக்குள்ள என்ன ஆச்சு..”
“எனக்கு நிறைய வேலை இருக்கு கார்த்திக் இந்த துணி எல்லாம் மடிச்சு வைக்கணும்.”
“இதுக்காகவா இத்தனை கோபம் நகரு…மடிக்கணும் அவ்வளவுதானே..உனக்கு நான் உதவி பண்ணறேன் சக்தி என்றபடி அவள் எடுத்த துணியை இவன் ஒரு புறம் இழுத்து கொள்ள…”
“கோபத்தை கிளப்பாம போங்க கார்த்திக் ஏதாவது சொல்லிடப்போறேன். உங்கள் ஆபீஸ் வேலை ஏதாவது இருந்தா போய் பாருங்க…பின்னாடியே வந்து கடுப்பேத்தாதிங்க…”
“இதென்ன…கொடுமை சரவணா உதவி பண்ணறேன்னு சொன்னா இந்த பொண்ணு இப்படி பேசுது.இது தப்பு சக்தி ஓழுங்காக இதுக்கு மன்னிப்பு கேளு…”
“கார்த்திக் வேண்டாம் தேவை இல்லாமல் இப்ப எதுக்கு என் கிட்ட வம்பு பேசறிங்க நான் உங்களை என் பின்னாடி வரச்சொல்லி சொன்னேனா இல்லை தானே பின்னாடி வந்ததும் இல்லாமல் பேசியே உயிரை எடுக்கறிங்க…ரொம்ப பேசினால் எனக்கு கோபம் வந்துவிடும் யோசிக்க மாட்டேன் எதையாவது எடுத்து அடிச்சிடுவேன்.”
“ஒ…சக்தி மேடம் அவ்வளவு தைரியசாலியா எங்க அடிங்க பார்ப்போம்… என்றபடி முழுக்கை சட்டையை மடித்து விட்டபடி அவளை நெருங்க…கார்த்திக்கின் பேச்சு எல்லாமே தற்சமயம் அவளை சீண்டிப்பார்ப்பது மட்டுமே…”
“என்ன என்ன சொன்னாலும் பதிலுக்கு பேசிட்டு முதலில் நகர்ந்து போங்க என்றபடி அங்கே பெட்ரூமில் வைத்து இருந்தது ஃபில்லோவை எடுத்து அவன் மேல் வீச…”
“கார்த்திக் உன்னோட வம்சத்துக்கே இது அசிங்கம் விடாதே…எத்தனை நாள் பிருந்தா கிட்ட ஃபில்லோ சண்டை போட்டு இருப்ப…போயும் போயும் இந்த சுண்டக்கா சைஸ் இருக்கற இந்த பொண்ணு கிட்ட அடி வாங்குவியா விடாதே…என்றபடி இவனும் ஒரு தலையனையை எடுத்து இருந்தான்.”
“வேண்டாம் கார்த்திக் என்கிட்ட வம்பு பண்ணாதிங்க அப்புறம் நடக்கறதுக்கு நான் பொறுப்பு கிடையாது. திவ்யா கிட்ட இந்த சண்டையில் நான் தோற்றதே இல்லை. “
“வா வா வா இதை தானே நானும் எதிர் பார்த்தேன் நானும் பிருந்தா கிட்ட தோற்றதே கிடையாது வா இன்றைக்கு தெரிஞ்சிடும் யார் பெரிய ஆள்ன்னு…நீயா இல்லை நானான்னு… வெறும் வாய் பேச்சு உதவாது பெண்ணே…எங்கே உன்னோட திறமையை என்கிட்ட காட்டு என்றபடி .. இவனும் ஒரு தலையனையை கையில் எடுத்து இருக்க சுகமாக தொடங்கி இருந்தது இருவருடைய சண்டை…இவள் ஒரு புறம் எடுத்து அவனை அடிக்க சற்றே நகர்ந்து அவள் அடிப்பதை தடுக்க மட்டுமே செய்து கொண்டு இருந்தான்”.
எப்படி நடந்தது என்று தெரியாமலே ஒரு கட்டத்தில் தலையனை அவன் கைகளுக்கு மாறி இருக்க சுகமாக சக்தியின் கையிரண்டை பிடித்துக்கொண்டு தன் மேல் அவளை சாய்த்தபடி கட்டிலில் விழுந்து இருந்தான். இருக்கமான அணைப்பு அது அவளை தன்னோடு இருக்கி அணைத்தபடி அவனும் கண்களை மூடி படுத்து இருந்தான்.
சக்திக்குள் ஏதோ ஒரு மயக்கம் கண்களை திறக்கமுடியாமல் அவனது தோளில் சாய்ந்தபடி அவனது மார்பில் கண்மூடி படுத்திருக்க…கார்த்திக்கின் இதயதுடிப்பு இவளை சுகமாக தாளட்டியது…அதற்கு சற்றும் குறைந்தது இல்லை என்பது போல இவளது இதயமும் இணைந்து துடித்தது.சற்று நேரம் வரை பார்த்தவன் தன் அருகில் ஒரு பக்கத்தில் அவளை சாய்த்து படுக்க வைத்தவன் …அவளது கன்னத்தில் தன் கைகளால் மெலிதாக கோடிழுத்தபடி “சக்தி…படி ஏறி வரும் போது ஒரு முத்தத்திற்கே வழிய காணோம் மற்றது எங்கன்னு தானே சொன்ன… என்றபடி அவனது கன்னத்தில் தன் உதட்டால் முதல் முத்தம் அழகாய் பதித்திருந்தான்..கேட்டிருக்கிறான் என்ன உணர்வு தோன்ற சற்றே… திகைத்தபடி கண் திறந்தாள் சக்தி…கார்த்திக்கின் பார்வை உதட்டில் இருக்க…அவனை பார்க்க முடியாமல் கண்மூடினாள் சக்தி.
தொடரும்.