காற்று 4
இரவு நேரம் நெருங்க…அன்று முழுவதும் சத்யனின் மனது எங்கெங்கோ உழன்று கொண்டுதான் இருந்தது.. எதோ சொல்ல முடியாத துயரம்.. நெஞ்சை வாட்டி எடுப்பது போல் உணர்வு..
அவனுக்கு எப்போதும் அமைதி தரும் அந்த கடற்கரையில் சென்று அமர்ந்தவன்.. நேரம் அது போக்கில் கடக்க.. கடலை வெறித்த படி அமர்ந்து இருந்தான் சத்யன்..
இரவு மணி ஒன்பதை தாண்ட..அவனின் நினைவை கலைத்தனர், அங்கு வந்த காவலர்கள்..
“தம்பி.. நேரம் ஆகிடுச்சுபா.. இதுக்கு மேல இங்க உக்கார கூடாது..கிளம்புங்க தம்பி” தன்மையாக கூறிய படி அவர்கள் அங்கு இருந்த மற்றவர்களையும் விரட்டிய படியே சென்றனர்.
சுற்றத்தை உணர்த்தவன்.. மனதை ஒரு நிலை படுத்தி கொண்டு.. வீடு நோக்கி புறப்பட்டான் சத்யன்
அவனுக்காக வாசலிலேயே காத்திருந்தார்..சாராதா.. அவனை கண்ட பிறகு தான் நிம்மதி ஆனது அவரின் மனது
உடனே உள்ளே சென்று.. “என்னங்க சத்யன் வந்துட்டாங்க.. இப்போ தான் வந்தான்” என்றபடி தன் கணவனிற்கு தகவல் சொல்ல,
எந்த பதற்றமும் இல்லாமல் டிவி பார்த்து கொண்டு இருந்த விசு “அவனுக்கு ஒன்னும் ஆகாதுன்னு தான் தெரியுமே.. நீ தான் தேவை இல்லாம கவலை பட்டுக்கிட்டு இருந்த..சரி உட்கார்..டீவில சமையல் எப்படி பண்றதுனு சொல்லுறாங்க பாரு.. நீயும் தெரிஞ்சி கத்துக்கோ” என்ற படி அவரை வம்பிழுக்க.
“அட போங்க.. உங்களுக்கு வேலையே இல்லை.. புள்ளைய காணோம்னு நான் தவிச்சி போய் இருக்கே..நீங்க என்னனா இப்போ போய் கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்கீங்க” என்ற படி அவர் சலித்து கொண்டாள்.
“நான் என்ன இன்னும் சின்ன புள்ளையாமா.. எனக்காக பயப்பட…அப்பா மாதிரி கூலா இருக்க வேண்டியது தானே” வராத புன்னகையை வர வைத்த படி பேசினான் சத்யன்.
“இருப்பாங்க இருப்பாங்க.. போ போய் ஃபிரெஷ் ஆகிட்டு வா.. சாப்பிடலாம்” என்ற படி சாராத சமையல் அறை புக, சத்யன் தன் அறைக்குள் சென்றான்
குளித்து முடித்து சாப்பிட வந்து அமர்ந்தான் சத்யன்.. “அப்பா நீங்களும், ஹரிணியும் சாப்டாச்சா” என்ற படி அவனும் அமர்ந்தான்.
“அவுங்க எல்லாரும் சாப்பிட்டுட்டாங்கபா.. சாப்பிட்டுட்டு தான் ஹரினி தோட்டத்து பக்கம் போயிருக்கா.. எதோ ஃபிரன்டோட போன் வந்துது பேசிகிட்டு இருக்கா” பரிமாறிய படியே சாராத கூறினாள்.
“எந்த ஃபிரன்ட்.. எப்படி ஃபிரன்ட்.. அதை வீட்டுலேயே இருந்து பேச வேண்டியது தானே.. தோட்டத்துக்கு எதுக்கு போகணும்” வரிசையாக அவன் கேள்வியை எழுப்பிக்கொண்டே போனான்.
வாசலில் வெள்ளை ரோஜா ஒன்றை கையில் வைத்து ஆடிய படி உள்ளே வந்தாள் ஹரினி.
“இதோ வந்திட்டா பாரு மகாராணி.. அவளையே கேளு” என்ற படி சாராத ஒதுங்கி கொண்டாள்.
ஹரினியை கேள்வியாய் பார்த்தான் சத்யன்.. அதை புரிந்து கொண்டவள் “உள்ள டவர் கிடைக்கல அண்ணா.. அதன் வெளிய போய் பேசுனேன்.. என்னோட கூட படிக்குற பொண்ணு அபி இருக்கால.. அவ தான் போன் பண்ணா.. வேணும்னா நீயே பேசுறியா?” என்ற படி அவள் கேட்க
“ஒன்னும் வேண்டாம்.. எனக்கு உன்னோட பாதுகாப்புல தான் அக்கறையே தவிர.. உன் மேல சந்தேகம் எனக்கு எப்போதும் இருந்தது இல்ல…எந்த நிலையிலும் தவறான வழில போய்டா கூடாதுனு தான் நான் பயப்படுறேன்.. மத்த படி புரிஞ்சி தெரிஞ்சி நடந்து கிட்டா..எனக்கு கவலை இல்லை” தெளிவாக பேசினான் சத்யன்.
வந்தவள் நேரே டீவி முன் அமர்ந்து.. பாட்டு சேனல் ஒன்றை வைக்க.. அவளின் கெட்ட நேரம்..
“கண்ணன் வரும் வேளை
அந்திமாலை நான் காத்திருந்தேன்
சின்னச் சின்னத் தயக்கம்
செல்ல மயக்கம் அதை ஏற்க நின்றேன்”
பாடல் ஒளித்து கொண்டு இருந்தது.. அதில் வரும் கண்ணன் என்ற வார்த்தையை கேட்டதும்.. அதுவரை இருந்த இயல்பு மாறி..முகம் சுருங்கி… கண் சிவக்க ஹரினியை அவன் முறைத்தவன்.
“சாரி அண்ணா.. தெரியாம வெச்சிட்டேன்” என்று பம்மிய படி அவள் அவ்விடத்தை விட்டு ஓடி விட்டாள்.
கண்ணன் என்ற பேரை கேட்டவனுக்கு இருக்கிய மனநிலை வந்து தொத்திகொள்ள.. சாப்பாடை பாதியிலேயே விட்டு எழ முயற்ச்சித்தான்.. ஆனால் அவனை தடுத்தது விசுவின் குரல் தான்.
“மொத்தத்தையும் சாப்பிட்டுட்டு எழுந்திரு சத்யா..சாப்பிட்டுட்டு தோட்டத்துக்குவா.. உன் கிட்ட கொஞ்சம் பேசணும்”உத்தரவாய் ஒலித்தது அவரின் குரல்.
அவரின் குரலில் இருந்தே..அவரின் மனநிலை புரிந்து கொண்டவன்.. அப்படியே அமர்ந்து சாப்பிட்டான்..
முடித்தவன்.. தோட்டம் நோக்கி செல்ல.. அங்கு கைகளை பின்னால் கட்டி கொண்டு விறைப்பாகவே நின்று கொண்டு இருந்தார் விஸ்வநாதன்.
அவரின் கோவம், பிடிவாதம் எல்லாம் அவனுக்கு நன்கு பழக்கமே.. என்ன தான் கலகலப்புடன் பேசினாலும் ..அவரின் கண்டிப்பின் மேல் இன்றும் பயம் கொள்ள தான் செய்தான் அந்த மாவீரன்.
“அப்பா” தொண்டையை செறுமிய படி அவன் குரல் கொடுக்க.
“வா சத்யா.. உன் கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்.. அதன் வர சொன்னேன்” கம்பீரம் குறைய வில்லை அவர் குரலில்.
அவர் பேச போவது எதை பற்றி என்று நான்கு புரிந்தாலும் கூட.. அதை தவிர்க்க மனம் விழைந்தாலும் கூட.. தந்தையை எதிர்த்து பேச முடியாமல் அமைதி காத்தான் சத்யன்.
“இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படியே இருக்கலாம்னு இருக்க.. அன்னைக்கு எப்படி இருந்தியோ.. இன்னைக்கும் அதே கோவம்.. அதே வெறுப்புன்னு இருந்தா எப்படி முடியும்” என்றார் அவர்.
“இல்லபா.. என்னால அதுல இருந்து மீள முடியல.. அது இல்லாம…” என்று எதோ பேச வந்தவனை தன் கை காட்டி அமைதி படுத்தியவர்.
“நான் ஒரு முடிவு பண்ணி இருக்கேன் சத்யா.. அதை நீ ஏத்துக்கிட்டு தான் ஆகணும்.. ஆனால் இது உன்னுடைய திருமணம் சம்மந்தபட்டது இல்லை” என்ற படி அவர் முடிக்க.
யோசனையில் நின்று இருந்த சத்யனை கண்டவர்.. “எதையும் போட்டு குழப்பிக்காத சத்யா.. நாளைக்கு சீக்கிரம் வீட்டுக்கு வந்துடு” சத்யனின் தலையில் கை வைத்து.. அவரின் முடிவை கூறியவர்.. அவ்விடம் விட்டு நகர்ந்தார்.
ஆனால் சத்யனுக்கோ அந்த இரவு தூங்கா இரவாகி போனது…இந்த இரவு விடியாமல் நீண்டால் என்ன என்றும் அவனுக்கு தோன்றியது.
அவனின் பேச்சை விடியலும் கேட்காமல்.. விடிந்தே விட்டது.. அவனின் வாழ்வில் விடியலை கொடுக்கும் மனதோடு…
?????
ரம்மியமான அந்த காலை பொழுதில்… சூரியன் அவனின் செங்கதிர்களை விரித்தபடி பரவ..குயிலும், மயிலும் எதோ ஒரு பரவசத்தில் ஆடியும் பாடியும் கொண்டு இருக்க.. அதன் சூழலே மனதிற்கு அமைதியை கொடுத்து கொண்டு இருக்கும் அழகிய காலை பொழுது.
அடர்ந்த வனபகுதியில்.. போகும் திசை தொலைத்து…வந்த பாதை மறந்து…திசை தெரியாமல் விக்கித்து போய் நின்று இருந்தாள் உமா..
தூரத்தில் புலியும், சிங்கமும் கர்ஜித்து கொண்டு இருக்க..ஓநாய்களின் ஓலம் ஒரு புறம் ஒளிக்க…கிளிகளும் குயில்களும் கூட ஆனந்தமாய் பாடும் ஒளியும் இவற்றோடு சேர்ந்து கேட்க…விக்கித்து, பயந்து, மருண்டு போய் நின்று கொண்டு இருந்தாள் உமா.. அவளுக்கு எதோ சிங்கத்திடம் மாட்டிய இறை போன்ற உணர்வு மேலோங்கியே இருந்தது.
“இப்படியா பயப்படுறது… தைரியமா இருக்க வேண்டாமா” பின்னால் இருந்து அவளின் தோல் மேல் கை போட்ட படி ஒளித்தது ஒரு குரல்.
எதோ பரிச்சயம் ஆனா ஒரு தொடுகை.. நம்பிக்கையும், தைரியமும் கொடுக்கும் அந்த குரல்.. குரல் வந்த திசை நோக்கி திரும்பினாள், உமா
அவள் திரும்பவும்.. அங்கு நிற்கும் நபரின் முகம் எதோ மங்கலாய் தெரிய… பளீர் என்ற வெளிச்சம் கண்ணை கூச.. அதையும் பொருட்படுத்தாமல் அந்த முகத்தை காண அவள் எத்தனிக்கை..வெளிச்சம் முழுவதும் பரவி.. கண் விழித்தாள் உமா.
சிவகாமி பாட்டி அவளை அருகில் உசுப்பிய படி இருக்க…கண்டது கனவு என்று புரிய.. அவனின் முகத்தை பார்க்க முடியாமல் போனது தான் அவளுக்கு கடும் கோவத்தை உண்டு பண்ண…அதில் சிவகாமி பாட்டியை முறைத்தாள்.
“அடியே.. மணி நாலு ஆகுது..இன்னும் தூங்குற.. நேத்து எதோ கிருஷ்ண ஜெயந்திக்கு அது பண்ண போறே.. இது பண்ண போறேன்னு வாய் பேசிட்டு.. தூங்கிகிட்டு கெடக்குறா பாரு கழுத” என்று அவர் கூறிய பின் தான், இன்று கிருஷ்ண ஜெயந்தி என்பதே அவளுக்கு உரைத்து.
அவளுக்கு வந்த கனவை பாட்டியிடம் அவள் கூறினாள்..
“வருவான் வருவான்.. உனக்கான கண்ணன் இன்னைக்கு வருவான்..கவலை படமா எழுந்து குளிச்சிட்டுவாடி” என்ற படி அவர் சென்று விட்டார்.
அவர் கூறிய வார்த்தைகள் மெய்யோ பொய்யோ என்பதை எல்லாம் அவள் யோசிக்க வில்லை..நடந்தால் எப்படி இருக்கும் என்பதிலேயே பரவசம் அடைந்தது அவளின் மனம்.
குளித்து முடித்து ஆனந்தமாய் வீட்டில் உலா வந்து கொண்டு இருந்தது, சிவகாமி வீட்டின் குயில்..
அந்த காலை நேரத்தில் தோட்டத்தில் நின்று கொண்டு பூத்த அத்தனை மலர்களை பறிப்பதோடு நின்று விடாமல்.. மொட்டாய் இருக்கும் மலர்களை கூட பறித்து கூடையில் போட்டு கொண்டு அக்கப்போரு செய்து கொண்டு இருந்தாள் உமா..
“அடியே. .அது நாளைக்கு தான்டி பூக்கும்.. இப்போவே பறிச்சா வாடி போடும்டி… அடியே அந்த பக்கம் போகாத.. கிணறு திறந்து கெடக்குடி.. உள்ள விழுந்து தொலஞ்சிடாத” தோட்டத்தை ஒரு வழி செய்து கொண்டு இருந்த உமாவை அதட்டுவதாக ஆரம்பித்த சிவகாமி.. கடைசியில் கெஞ்சி கொண்டு இருந்தார்.
“ஏன் ஆச்சி.. என் மேல அவ்வளவு பாசமா.. கிணறு பக்கமே போகதனு சொல்லுற” ஆசையாய் கேட்டாள் உமா.
“ஆமாம்.. பாசம் பொங்கி வழியுது.. நீயும் ரெண்டு டம்ளர் எடுத்து குடிச்சிக்கோ.. அடி போடி கூறு கேட்ட சிறுக்கி.. நீ உள்ள போய் விழுந்துட்டா.. தண்ணி கெட்டு போய்டும்.. அப்றம் நாங்க எதை பயன் படுத்துறது.. ஊர் எல்லையில போய் தண்ணி எல்லாம் சுமக்க முடியாது.. நீ ஒழுங்கா இங்க வா” மிகவும் சாதாரணமாக அவர் பேசிக்கொண்டே வீட்டு வாசலில் போய் அமர்ந்து கொண்டாள்.
“வர வர உனக்கு கூட வாய் அதிகம் ஆகிடுச்சு கெழவி.. போனா போகுதுனு விட்டா ரொம்ப தான் பேசுற நீயு.. இன்னைக்கு எதோ என்னோட கண்ணனுக்கு பிறந்த நாள்னு உன்னை சும்மா விடுறேன்” எச்சரித்த படியே உள்ளே சென்றாள் உமா.
“போடி போடி உன்ன மாதிரி எத்தனை பேரை பார்த்து இருக்கேன்.. வந்துட்டா.. பெரிய இவளாட்டம்… ஊருல இவ மட்டும் தான் கிருஷ்ணா ஜெயந்தி கொண்டாடுறா பாரு .. வீட்டையே ரெண்டாக்கி வெச்சி இருக்கா” புலம்பிய படியே பூக்களை காட்டினார் சிவகாமி.
“அம்மா, அம்மா” கத்திய படியே பூ கூடையுடன் கோமதியை தேடி சென்றாள் உமா.. அவரை காணாமல் போக…
சமையல் அறையில் இருந்த எழிலை பார்த்தவள் “பெரியம்மா அம்மா எங்க காணோம்.. எங்க இருக்காங்க” என்றபடி உள்ளே புகுந்தாள் உமா.
“பின்னாடி துளசி செடியை சுத்திகிட்டு இருக்காளே.. நீ பாக்கலையா” என்று அவர் கேட்க.
உதட்டை பிதுக்கி கொண்டு.. சிறு பிள்ளை போல் “இல்லையே” என்றாள் அழகாக.
“எதுக்குடி காலைலயே என் பேரை ஏலம் போட்டுக்கிட்டு இருக்க” அதற்குள் கோமதி உள்ளே வந்துவிட.
“ஜனா அண்ணா எங்கமா” என்று அவள் கேட்டாள்.
எழிலும், மதியும் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டு.. என்ன சொல்வது என்று புரியாமல் திகைத்து போய் நிற்க,
“உங்கள தான் கேக்குறேன்.. அண்ணன எங்க காணோம்.. போன் பண்ணாலும் எடுக்க மாட்டேங்குறான்.. ஆச்சி அவன் எங்கயோ போய் இருக்கான்னு சொல்லுறாங்க..என் கிட்ட சொல்லாம போக மாட்டானே.. எங்க அனுப்பி வெச்சி இருக்கீங்க” வரிசையாய் கேள்விகளாய் அவள் கேட்க.
என்ன பதில் சொல்வது என்று புரியாமல் இருவரும் முழிக்க.. அதில் சுதாரித்த மதி..
“இன்னைக்கு பூஜைக்கு சாமான் வாங்கிட்டு வர சொல்லி அனுப்பி இருக்கோம்டி..சாமான் வாங்க போன இடத்துல உன் போன் எடுத்து பேசிகிட்டு இருப்பானா அவன்.. இன்னும் கொஞ்சம் நேரத்துல வீட்டுக்கு வந்துடுவான்.. அப்போ பேசிக்கோ” என்று அவர் முடித்து விட்டார்.
“அது சரி.. என்ன எதுக்கு தேடுன.. அதை சொல்லு” அவளை யோசிக்க விடாமல் பேச்சை திசை திருப்பினார் கோமதி.
“இன்னைக்கு கிருஷ்ணா ஜெயந்தி இல்ல..நான் துளசி மடத்துகிட்ட கண்ணன் படம் வரையட்டா.. பெருசா” என்றாள்
“அதுக்கு எதுக்குமா கேட்டுகிட்டு இருக்க.. போ போய் வரை” எழில் ஒப்புதல் கொடுக்க.
“தேங்க்ஸ் பெரியம்மா” என்று குதித்த படி அவள் ஓடினாள்.
“அடியே நில்லுடி.. இந்தா டீ குடிச்சிட்டு போ” கோமதி குரல் கொடுக்க,
“இல்லமா.. வரஞ்சிட்டு வந்து குடிக்குறேன்” என்ற படி ஓடி விட்டாள் உமா.
“அப்பாடா” என்று இருவரும் பெருமூச்சு விட்டபடி,
“இன்னும் எத்தனை நாளைக்கு தான் அண்ணி உமா கிட்ட இருந்து உண்மையை மறைக்க முடியும்.. அவளுக்கும் எல்லாம் தெரியணும் தானே.. அவ ஒன்னும் சின்ன பொண்ணு இல்ல..அவளுக்கும் விவரம் தெரிய ஆரம்பிச்சிடுச்சு.. ஊருல இருக்கவங்க இல்லாததும், பொல்லாததும் சொல்லி வெக்குறதுக்கு முன்னாடி.. நாமளே சொல்லிடலாம்” என்று எழில் கூறினார்
“ஜனா போயிருக்கான் அக்கா.. அவன் வரட்டும்.. அவன் என்ன செய்தி கொண்டு வரனோ.. அதை பொறுத்து அவனை விட்டே உண்மையை சொல்ல சொல்லிடலாம்.. அவன் தான் உமாவை சரியா புரிஞ்சி நேரத்துக்கு ஏத்த மாதிரி நடந்துப்பான்” கோமதி கூற.
“அதுவும் சரி தான்” என்ற படி மற்ற வேளையில் இறங்கினர் இருவரும்.
ஒன்றரை மணி நேரம் கழித்து ஆடை எல்லாம் கலர் கோல மாவை பூசி கொண்டு.. முகத்திலும் அதன் கரைகளுடன்.. கையில் ஒரு வாலியுடன் வந்தாள் உமா.
அதை பார்த கோமதிக்கு சிரிப்பு வர..
“ஏன்டி.. கோலம் போட போனியா.. இல்ல குஸ்தி போட்டிக்கு போனியா.. இப்டி வந்து நிக்குற.. ரயில் என்ஜினுக்கு கரி அள்ளி போட ஆள் இல்லையாம் போறியா” என்ற படி வம்பிழுத்தாள்.
“அம்மா” என்று சிணுங்கியவள்,
“நான் என்ன பண்ணட்டும்.. நான் கோலம் போடும் போது இதை கவனிக்கல” என்றாள் பாவமாக.
“சரி சரி விடு.. அது என்ன கையில வாலி”
“ஒன்னும் இல்லமா…கலர் போடி கை எல்லாம் இருந்துது.. அதை கழுவினேன்.. தண்ணி பாரு அப்டியே கருப்பு கலர்ல ஆகிடுச்சு.. அதான் இந்த தண்ணிய என்ன பண்ணட்டும்னு கேக்க வந்தேன்” என்றாள் உமா.
“அட பைத்தியக்காரி.. அதை அந்த செடிக்கு ஊத்திட்டு வேலைய பார்பியா.. அதை விட்டுட்டு.. வந்து கேள்வி கேக்குறா பாரு” என்ற படி அவ்விடத்தை விட்டு நகர்ந்தவர்,
“அடியே தண்ணியை ஊத்திட்டு உள்ளவா..சாப்பாடு எடுத்து வெக்குறேன் சாப்பிடுவா” என்ற படி அவர் உள்ளே சென்றார்.
“சரிம்மா” என்ற படி செல்லும் அவரின் பக்கம் பார்வையை வைத்த படி.. செடிகள் இருக்கும் பக்கம் தண்ணீரை மொத்தமும் வீசி ஊற்றி விட்டு அவள் திரும்ப,
விக்கித்து போய்.. பேய் முழி முழித்த படி நின்று கொண்டு இருந்தாள் உமா.
தண்ணீரின் கருமை நிறம் முகம் எங்கும் படர்ந்து இருக்க.. வெள்ளை வேட்டி சட்டையிலும் கருமை நிறம் பரவ துவங்க.. இத்தனை நாள் கிடந்த தவத்திற்கு பலனாய் கிருஷ்ண ஜெயந்தி அன்று அவளை வந்து சேர்ந்தான் அவளின் கண்ணன்.
எங்கோ ஆகாயத்தில் மிதந்த படி.. மகிழ்ச்சியில்.. சுற்றம் மறந்து…பிரமித்து போய்… இரண்டு வருடம் கழித்து அவனை பார்க்கும் மிரட்சியில் அவள் நின்று கொண்டு இருக்க.,
அவனோ.. உடல் மொத்தம் அழுக்கு நீரை கொட்டி விட்டு.. அசராமல் நிற்கும் அவளை..கொன்று விடுவதை போல் முறைத்து கொண்டு இருந்தான்.
காற்று வீசும்……