? எனதுயிரே ?
நான் முதன் முதலாக தொடர்கதை எழுத ஆரம்பிக்கிறேன், இது என் முதல்கதை, கதையின் முன்னுரையாக….. இதோ இந்த கதையில்இரண்டுஜோடிகள்..இந்த ஜோடிகளின் காதல் எப்படிப்பட்டது..? காதலா ?மோதலா ?……இவர்கள் நான்குபேரும் தங்களின் உயிரை கண்டுகொண்டார்களா….. இல்லையா? என்பதை காணப்போகிறோம் ஏதேனும் தவறுகள் இருப்பின் பெரிய மனது பண்ணி மன்னிக்கவும் உங்களின் ஆதரவுகளை என்றுமே…. வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்….
முதல் அத்தியாயம்
முதல்ஜோடி அனழேந்தி-சுபாலெட்சுமி இரண்டாவதுஜோடி விஸ்ணுவர்தன்-சாதனலெட்சுமிஹீரோவின் தந்தை பரசுராம் தி கிரேட் மில்லியன் ஓனரின் ஒரே வாரிசு “ஆதித்ய குரூப்ஸ்” என்ற பல நிறுவங்களை உள்ளடக்கிய மிகப்பெரிய நிறுவனம் எந்திர உதிரிப்பாகம் கொண்ட பல தொழிற்சாலைகளையும் இவர்களின் கிடைக்கும் தரமான பொருட்களின் வைத்து அவர்களின் நிறுவனம் நன்மதிப்பு உயர்ந்து நிற்கின்றது….. பரசுராம் குடும்பம் பற்றி பரசுராம் விசாலாட்சி தம்பதியின் மூன்று ரெத்தினங்கள் நெடுஞ்செழியன், அனழேந்தி, சாதன லெட்சுமி…. நெடுஞ்செழியன் அக்ரி முடித்துவிட்டு விவசாயத்தில் புது புது பயிர்களை இட்டு ஆராய்ச்சி செய்துகொண்டு இருக்கிறான் அவனுக்கு குணவதி என்ற பெண்ணை திருமணம் முடித்து இரண்டு முத்துகள் ராகவன் ராகவி என்று இரண்டும் ஒரு வயது வித்யாசம் தான்…..
அனழேந்தி ஆஸ்திரேலியா வில் MS படித்து விட்டு விஷ்ணுஆலன் என்ற மிகப்பெரிய நிறுவனதின் ஒன் ஆஃப் தி பார்ட்னர்ச்சிப் சூப்பர் கம்ப்யூட்டர் சம்மந்தமான ஆராச்சியில் ஈடுபட்டுள்ளான் அட்வான்ஸ்ட்மாடல் பார்ட்ஸ் உருவாக்கும் முயற்சியில் இருக்கிறான்……
ஹீரோவை பற்றி இவ்ளோதானா என்று கேட்கும் சிலருக்கு முறுக்கேறிய புஜங்கள் ஆண்மையின் மிடுக்கோடு நடந்து சென்றால் அவன் பின் சுற்றும் பெண் ரசிகைகள் ஏராளம் ஆனால் அவனோ கருமமே கண்ணாக தன் ஓட்டத்தை நிறுத்தாமல் அலட்சிய பார்வை வீசிச்செல்வான்…. கோதுமை நிறம் அவனுக்கு இன்னும் பொலிவை ஏற்றியது…… நுணுக்கமான அறிவும் எதையும் ஆராய்ந்து அறியும் திறன் வாய்க்க பெற்றவன் நம் ஹீரோ நம்பிக்கை கொள்வர் ஒவ்வொரு துறையும் அனழேந்தியின் செயல் திறன்மூலம் அனைவரும் வியந்து நோக்கும்படி அவனின் வளர்ச்சி உயரந்துக்கொண்டே சென்றது தன் முத்திரையை பதிப்பவன் அயல்நாடுகளில் நம் ஹீரோ வின் பேரை கேட்டாலே சும்மா கிடுகிடுங்கும்..அவனுக்கு தோல்வி என்பதே கிடையாது தன் குடுபத்தின் மீது மிகுந்த அன்புக்கொண்டவன் …….
அடுத்து நம் கதையின் இரண்டாவது ஹீரோயின் சாதனலெட்சுமி என்கிற துறுதுறு என்ற அழகி…..
சாதனலெட்சுமி MCA முதலாமாண்டு முதுகலை படிக்கும் பெண்
அழகிய தலைமுடி இடைத்தாண்டி நின்றது கொடிபோன்று உடல்வாகு பாலின் நிறம் சுட்டிப்பெண் மட்டும் இல்லை வால் இல்லாத பட்டாம்பூச்சி அவள்……
இருக்கும் இடம் சிரிப்பும் கும்மாளமும் நிறைந்தே காணப்படும் கோவம் என்றால் அறியாத பாலகி அவளிடம் கோவமாக பேசுவது யார் என்றாலும் கடைசியில் வயிறு குலுங்க சிரித்துவிடுவார்கள் அவ்வளவு ரகளைபட்டாசு….
அறிவும் அழகும் சேர்ந்த பேரழகு மொத்தத்தில் கடைக்குட்டி புல்புல்……
பரசுராமின்தொழிமுறையில் நண்பரான அருணன் என்பவர் இவரின் சொந்த மச்சானும் கூட சர்மா குரூப்ஸ் என்ற மென்பொருள் நிறுவனம் சிறப்பாக நடித்திவருகிறார் அருணன் அருள்விழி பிள்ளைகள் ஆநிரன் ஆருத்ரா இவர்கள் குடும்பம்…
தந்தையோடு சேர்ந்து நிறுவனத்தில் புதிய முயற்சிகள் புகுத்தி அவர் பலவருடங்களாக உழைத்ததை சர்வசாதரனமாக மூன்றே வருடத்தில் லாபத்தை ஈட்டினான் என்ற பெருமை உடையவன்…..ஆநிரன்
ஆருத்ரா பற்றி சொல்ல வேண்டும் என்றால்எதிலும் பிடிவாத குணம் தான் நினைத்ததை நடத்தி முடிக்கும் குணம் உடையவள்….
அமெரிக்காவில் மேற்படிப்புக்கு சென்றவள் அங்கே நல்ல வேலையுடன் கூடிய படிப்பையும் படிக்கிறாள்… இவரை பற்றி பிறகு காண்போம்……. முக்கிய கதாபாத்திரம் இந்த ஆருத்ரா போக போக தெரியும்……
இந்த இரு குடும்பத்துக்கு பொதுவான எதிரி எம். எல். ஏ ஏகாம்பரம் இவரின் தொழில் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து பல இல் லீகல் தொழிலை சட்டத்துக்கு புறம்பாக நடத்திவருகிறார் இவரின் தவப்புதல்வர்கள் வரதன், பரதன்……………
வரதன் அமைதியான குணம் கொண்டவன் சொந்தமான மில் தொழில் நடத்திவருகிறான்….. நேர்மையானவன்……
பரதன் ஆஸ்திரேலியா வில் படித்துவிட்டு அங்கேயே பிஸ்னஸ் என்ற பெயரில் எல்லா நிறுவங்களின் தன் கைகுள் அடிக்கி ஆளும் சர்வாதிகாரம் படைத்தவன் கிரிமினல் மைன்ட் அதே நேரம் அதிபுத்திசாலியும் கூட அவன் நல்லவனாக இருந்தால் ஆஸ்திரேலியா வணங்கும்……
ஆனால் தன் தொழிலை உயர்த்த குறுக்கு வழியில் செல்பவன்….. தந்தை எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயுமாம் இவன் அதையும் தாண்டும் வல்லமை படைத்தவன்…..
ஏகாம்பரம் செய்யும் தோழிகள் அயல்நாடுகள் வரை தன் தொழில் நீண்டு உள்ளது மிகுந்த வரவேற்பு இருப்பதால் நானே ராஜா நானே மந்திரி என்ற கர்வம் கொண்டவன் இறுமாப்போடு என்னையும் என் தொழில் அனைத்தையும் எவனாலும் முறியடிக்க முடியாது………
என்று மார்தட்டி கூறுகிறான் அவனிடம் மாட்டிய ஒரு பழி ஆட்டிடம்….. சிறிது நேரத்தில் அந்த உயிர் பரிதாபமாக அரக்கன் கையால் சிதைய போகுவது தெரியாமல் மயக்க நிலையில் கிடந்தது……தலையில் இருந்து வடியும் இரத்தம் முழுவதும் முகத்தை மறைக்க விழுந்துகிடந்தான்…… யார் அவன்…?
சுபாலெட்சுமியை பார்க்கப்போனால் சுருண்ட கேசம் ஒல்லியான தேகம் உடையவள் ஆழ்ந்து அறியும் ஆற்றல் கொண்டவள் MBA முதலாமாண்டு முதுகலை பயிலும் பெண் தன்னை வளர்த்தவரின் மேல் அதீத பாசமுடையவள் அவர் சொல்லே வேதவாக்கு அன்புக்கு எப்போதும் அடிமை அவளின் குணம்…..
விஷ்ணு வர்தன் நம்கதையின் இரண்டாவது ஹீரோ இவரை பற்றிகூறப்போனால் கிரேக்க சிற்பம் தோற்றுவிடும் முகம் மிகவும் கடுமையான மருந்துக்கும் புன்னகை என்பது கிடையாது கோவத்தின் மறு உருவம் விஷ்ணு வர்தன் such a wonderful business man பெண்களின் கண்டால் வெறுப்பு உச்சிக்கு செல்பவன்
தன் நண்பனின் வெற்றிக்கு இவன் வித்திடுவான் அவன் யார் ? வேறு யாரும் இல்லை அனழேந்தியே தான்…..
நல்ல பிரிண்ட்ஸ்.. விஷ்ணுவர்தன் தாய் தந்தை அவனது 12ஆவது வயதில் விபத்தில் இறந்துபோகின்றனர்……
தூரத்து உறவான பரசுராம் வீட்டிற்கு தஞ்சம் கொள்கிறான் நன்முறையில் படித்து விட்டு மேற்படிப்புக்கு ஆஸ்திரேலியா சென்று படித்து அங்கே அவனுக்கென்ற பெரிய நிறுவனத்தை ஏற்படுத்தி தன் அடையாளத்தை நிலை நிறுத்துகிறான்… தனியொருவனாக….
அடுத்து எபிசோடில் காணலாம் முழுவதும் …………………..
சிறு முன்னோட்டம் எம் எல் ஏ ஏகாம்பரத்தை உளவு பார்த்த ரகசிய நபரை கொலை செய்கிறான்.. தன்னை எதிர்க்க இந்த உலகத்தில் எவனும் இல்லை…….., என்று சவால் விடுகிறான் இரண்டாவது நமது ஹீரோ அனழேந்தி சர்ப்ரைஸ் ஆக சொந்த மண்ணில் கால் வைத்தவுடன் மூச்சை இழுத்து சுவாசிக்கிறான்…. இனிதான் ஆட்டம் ஆரம்பம்