Toggle navigation
Home
Tamil Novels
What's new
Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள்,
[email protected]
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Advertising
உனக்குள் என் உயிரே 3 2
Post Views:
1,545
“
எனக்காக
யாரும்
போக
வேண்டாம்
.”
என்றான்
அர்ஜுன்
.
ஆனால்
மீரா
“
இல்ல
…
எனக்குத்
தலை
வலிக்குது
,
நான்
கிளம்பறேன்
.”
என்றவள்
,
எல்லோரையும்
பார்த்து
ஒரு
பொதுவான
தலையசைப்புடன்
கிளம்பி
சென்றாள்
.
வாசலுக்குச்
சென்ற
மீரா
திரும்பி
அர்ஜுனை
பார்க்க
…
அப்போது
அர்ஜுனும்
மீராவை
தான்
பார்த்துக்
கொண்டிருந்தான்
.
இதை
எதிர்பார்க்காத
இருவரும்
ஐயோ
இப்படி
மாட்டிகிட்டோமே
என்று
நினைத்தனர்
.
மீரா
சென்றதும்
அர்ஜுனும்
மற்றவர்களும்
சேர்ந்து
ஒரு
மணி
நேரம்
விளையாடியவர்கள்
.
மற்ற
இரு
நண்பர்களையும்
வழி
அனுப்பிவிட்டு
வந்த
ஜீவா
“
அர்ஜுன்
…
உன்னைப்
பார்த்து
எத்தனை
நாள்
ஆச்சு
,
எப்படி
இருக்க
?
நீயும்
இங்க
மெம்பெரா
?
நான்
இதுவரை
உன்னை
இங்க
பார்த்தது
இல்லையே
? ”
என்று
கேள்விகளாகக்
கேட்க
…
“
டேய்
…
ஒரு
ஒரு
கேள்வியா
கேளுடா
…
நான்
நல்லா
இருக்கேன்
.
ஆமா
…
இங்க
நானும்
மெம்பெர்
…
சாயங்காலம்
வந்து
விளையாடுவேன்
.
இப்ப
சீசன்
டைம்
,
அதனால
கடையில
ரொம்பக்
கூட்டம்
.
அப்பா
என்னைச்
சாயங்காலம்
கடைக்கு
வர
சொல்லி
இருக்காரு
…
அதனால
தான்
காலையில்
வந்தேன்
.”
என்ற
அர்ஜுன்
ஜீவாவை
பற்றி
விசாரிக்க
,
தன்னைப்
பற்றிச்
சொன்னவன்
“
மீராவும்
உன்
காலேஜ்
தான்
.
உனக்குத்
தெரியுமா
?
நீ
அவளைப்
பார்த்திருக்கியா
?”
என்றான்
.
“
பார்த்திருக்கேன்
….”
“
அவளுக்கு
உன்னைத்
தெரியுமா
?”
“
தெரியும்
.”
“
அப்புறம்
ஏன்டா
ரெண்டு
பேரும்
தெரியாதவங்க
மாதிரி
இருந்தீங்க
?”
ஜீவா
ஆச்சர்யப்பட
…
“
தெரியும்
அவ்வளவுதான்
.
சரி
அதைவிடு
.
உனக்கு
மீராவை
ரொம்ப
வருஷமா
தெரியுமா
?”
அர்ஜுன்
பேச்சை
மாற்ற
….
“
எனக்கு
அவளை
ஒரு
வருஷமாதான்
தெரியும்
.
நாங்க
கொஞ்ச
பேர்
இங்க
விளையாட
வந்து
ப்ரண்ட்ஸ்
ஆகிட்டோம்
.
நாங்க
யாரும்
ரெகுலரா
வர
மாட்டோம்
.
ஆனா
…
மீரா
எல்லா
வாரமும்
வருவா
.
அதுக்காக
நாங்க
ரொம்ப
க்ளோஸ்ன்னு
நினைக்காத
,
எனக்கு
அவ
பெயரையும்
,
காலேஜ்யையும்
தவிர
ஒன்னும்
தெரியாது
.
மீரா
அவ
வீட்டை
பத்தி
ஒன்னும்
சொன்னது
இல்லை
.
நாங்களும்
கேட்டது
இல்லை
.
வருவோம்
,
விளையாடுவோம்
,
பொதுவா
சில
விஷயம்
பேசுவோம்
…
கிளம்பிடுவோம்
அவ்வளவுதான்
.”
“
சரி
ஜீவா
கிளம்பலாம்
.”
அர்ஜுன்
தன்
வண்டியை
நோக்கி
செல்ல
… “
நாளைக்கு
வருவியா
…”
ஜீவா
அர்ஜுனை
கேட்க
“
வருவேன்
…”
என்றவன்
,
தன்
வண்டியை
எடுத்துக்
கொண்டு
கிளம்பினான்
.
மறுநாள்
காலை
ஆறு
மணிக்கு
எழுந்த
அர்ஜுன்
ஒரே
பரப்பரப்பாக
இருந்தான்
.
இன்று
ஷட்டில்
விளையாட
போகலாமா
வேண்டாமா
என்று
மூலையைப்
போட்டு
குழப்பியவனுக்கு
,
மீராவை
பார்க்க
வேண்டும்
என்ற
ஆசை
மற்ற
அனைத்தையும்
பின்னுக்குத்
தள்ள
,
வேகமாகக்
கிளம்பி
சென்றான்
.
அங்கே
அவன்
சென்ற
போது
,
நேற்று
மாதிரி
கூட்டம்
இல்லாமல்
இருந்தது
.
ஏன்
என்று
யோசித்துக்
கொண்டே
உள்ளே
சென்றவன்
,
அங்கே
கோர்ட்டில்
மீரா
மட்டும்
தனியாக
அமர்ந்திருப்பதைப்
பார்த்ததும்
,
அவன்
கால்கள்
அவன்
கட்டுபாட்டையும்
மீறி
அவளிடம்
சென்று
நின்றது
.
தன்
அருகில்
யாரோ
வந்து
நிற்பதை
பார்த்து
நிமிர்ந்த
மீரா
,
அங்கே
நின்ற
அர்ஜுனை
பார்த்ததும்
,
இவன்
இனி
இந்தப்
பக்கமே
வர
மாட்டான்னு
நினைச்சா
…
வந்திருக்கானே
என்று
ஆச்சர்யபட்டாள்
.
அவளின்
முகத்தில்
இருந்தே
அவள்
தன்னை
எதிர்பார்க்கவில்லை
என்பதை
உணர்ந்த
அர்ஜுன்
,
இப்போது
என்ன
செய்வது
என்று
தெரியாமல்
நிற்க
…
மீரா
எழுந்து
கோர்ட்டின்
மறுபுறம்
சென்று
விளையாட
தயாராக
நின்றாள்
.
அவள்
விளையாட
நிற்பதை
பார்த்த
அர்ஜுனும்
விளையாட
தயாராக
…
இருவரும்
சேர்ந்து
விளையாடினார்கள்
.
சிறிது
நேரம்
தனியாக
விளையாடியவர்கள்
,
வேறு
இருவர்
வந்து
சேர்ந்து
கொள்ளட்டுமா
என்று
கேட்டதும்
சரி
என்றனர்
.
அர்ஜுன்
சென்று
மீராவின்
பக்கம்
நின்றான்
.
சிறிது
நேரம்
பயிற்சி
செய்துவிட்டுக்
கேம்
விளையாட
தொடங்கினர்
.
மீரா
படப்படப்பாக
உணர்ந்தாள்
.
அவளுக்கு
அர்ஜுனோடு
சேர்ந்து
ஒரே
அணியில்
விளையாடுவது
ஒரு
மாதிரி
இருந்தது
.
எங்கே
அவனை
இடித்து
விடுவோமோ
என்ற
பயத்திலேய
ஆடினாள்
.
அதே
தான்
அர்ஜுனின்
நிலையும்
…
இருவருமே
மோதிவிடக்கூடாது
என்று
நினைத்து
விளையாடியதால்
,
சில
ஷாட்டை
அவள்
எடுக்கட்டும்
என்று
அர்ஜுனும்
…
சிலதை
அர்ஜுன்
அடிக்கட்டும்
என்று
மீராவும்
தவறவிட்டனர்
.
இப்படியே
சென்றால்
தோற்றுவிடுவோம்
என்று
உணர்ந்த
இருவரும்
ஆட்டத்தில்
கவனம்
செலுத்த
,
இரண்டு
முறை
ஒருவர்
மீது
ஒருவர்
மோதிக்கொண்டனர்
.
முதல்
முறை
லேசாக
மோதி
கொண்டவர்கள்
,
இரண்டாவது
முறை
பலமாக
மோதிக்கொள்ள
…
கீழே
விழப்
பார்த்த
மீராவை
விழுந்துவிடாமல்
பிடித்த
அர்ஜுன்
“
வலிக்குதா
…”
என்று
கேட்க
…
மீரா
இல்லை
என்று
தலை
ஆட்டினாள்
.
ஹா
..
ஹா
என்று
கேட்ட
சிரிப்புச்
சத்தத்தில்
இருவரும்
நிமிர்ந்து
பார்க்க
…
அங்கே
ஜீவா
நின்று
கொண்டிருந்தான்
. “
ரெண்டு
பேரும்
இன்னைக்குத்
தான்
புதுசா
விளையாடுறீங்களா
…
எதோ
விளையாட
தெரியாதவங்க
விளையாடுற
மாதிரி
இருக்கு
.”
ஜீவா
போலியாக
வியக்க
…
அர்ஜுனும்
,
மீராவும்
முழித்தார்கள்
.
“
நாங்க
ரெண்டு
பேரும்
இதுவரை
சேர்ந்து
விளையாடியதில்லை
இல்ல
அதனால
தான்
.”
அர்ஜுன்
இருவருக்கும்
சேர்த்துப்
பதில்
சொல்ல
… “
டேய்
…
இந்தக்
கதை
வேண்டாம்
,
நேத்து
நீயும்
,
நானும்
விளையாடும்
போது
,
நீ
என்
மேல
இப்படி
மோதலையே
…”
ஜீவா
விடாமல்
வம்பு
இழுக்க
…
“
டேய்
…
நீ
சொல்றத
பார்த்தா
,
நான்
எதோ
வேணும்னே
மோதினேன்னு
அவங்க
நினைச்சுக்கப்
போறாங்க
.”
என்ற
அர்ஜுன்
மீராவை
பார்க்க
… “
நான்
ஒன்னும்
மத்தவங்களை
மாதிரி
அவசரபட்டு
யாரையும்
தப்பா
நினைக்க
மாட்டேன்
.”
பட்டென்று
சொன்ன
மீரா
, “
நான்
கிளம்புறேன்
.”
என்று
அங்கிருந்து
செல்ல
…
அர்ஜுனுக்குக்
கோபம்
சுள்ளென்று
தலைக்கு
ஏறியது
.
அர்ஜுன்
கோபமாக
மீரா
போவதையே
பார்க்க
, “
சரி
வா
விளையாடலாம்
.”
என்று
ஜீவா
அவனை
இழுத்துக்கொண்டு
சென்றான்
.
விளையாடி
முடித்ததும்
,
ஜீவா
“
என்னடா
நடக்குது
…
உங்க
ரெண்டு
பேருக்குள்ள
…”
என்றான்
ஆர்வமாக
.
“
ஒன்னும்
இல்லை
.
காலேஜ்ல
நடந்த
ஒரு
பிரச்சனையில
,
நான்
மீராவை
தப்பா
நினைச்சிட்டேன்
.
அதைத்
தான்
மேடம்
இப்ப
சொல்லி
காமிச்சிட்டு
போறாங்க
.
அதைவிடு
நீ
ஏன்
இன்னைக்கு
லேட்
?”
அர்ஜுன்
பேச்சை
மாற்ற
…
“
சாரி
அர்ஜுன்
,
சனிக்கிழமை
நைட்
பார்டிக்கு
போய்டுவேன்
.
அதனால
மோஸ்ட்லி
சண்டே
வர
மாட்டேன்
.
இன்னைக்கு
உனக்காகத்
தான்
வந்தேன்
.
அடுத்த
வாரம்
சீக்கிரம்
வரேன்
ஓகே
….”
ஜீவா
சொல்ல
…
“
அப்படியெல்லாம்
நீ
ஒன்னும்
கஷ்டப்பட்டுச்
சீக்கிரம்
வர
வேண்டாம்
.
நீ
லேட்டாவே
வா
.”
என்றான்
அர்ஜுன்
.
“
கரடி
மாதிரி
உங்க
ரெண்டு
பேருக்கும்
நடுவுல
வராதேன்னு
சொல்ற
…
ஓகே
..
ஓகே
…
என்ஜாய்
.”
என்ற
ஜீவா
வீட்டுக்கு
கிளம்ப
,
அர்ஜுனும்
கிளம்பினான்
.
அர்ஜுன்
குழப்பத்துடனே
வண்டி
ஒட்டி
கொண்டு
சென்றான்
.
இன்னைக்கு
நல்லா
தானே
இருந்தா
,
அதுக்குள்ள
என்ன
ஆச்சு
?
என்று
நினைத்துக்
கொண்டே
வீட்டிற்குச்
சென்றான்
.
மீராவிடம்
இருந்து
விலகி
இருக்க
வேண்டும்
என்று
நினைத்தாளும்
அவன்
மனது
அவன்
பேச்சை
கேட்காமல்
அவளையே
நாடியது
.
இவன்
வீட்டிற்குச்
சென்று
குளித்து
விட்டு
வரும்
போது
….
உணவு
மேஜையில்
எல்லோரும்
எதையோ
பற்றித்
தீவிரமாகப்
பேசிக்கொண்டு
இருந்தனர்
.
அர்ஜுன்
சென்று
அமர்ந்தவன்
“
இங்க
என்ன
கலாட்டா
?”
என்றதும்
,
“
நம்ம
ஆருவோட
பரதநாட்டிய
அரங்கேற்றம்
இன்னைக்கு
இருக்கு
.
அதுக்குத்
தான்
நாம
எல்லோரும்
போகணும்
.”
என்றார்
வித்யா
.
“
நீ
அரங்கேற்றம்
பண்ற
அளவுக்குக்
கத்துக்கிட்டியா
பரவயில்லையே
…”
ஆதி
தன்
தங்கையைப்
பாராட்ட
…
அர்ஜுன்
“
நான்
கடைய
பார்த்திகிறேன்
,
நீங்க
எல்லோரும்
போயிட்டு
வாங்க
”
என்றான்
.
“
அதெல்லாம்
இல்லை
.
நீயும்
கண்டிப்பா
வரணும்
.”
என்றாள்
ஆராதனா
பிடிவாதமாக
.
“
ஆமா
…
இந்த
அம்மா
பெரிய
நாட்டிய
பேரொளி
பத்மினி
,
கத்துக்குட்டிங்க
ஆடறது
எல்லாம்
என்னால
உட்கார்ந்து
பொறுமையா
பார்க்க
முடியாது
.”
அர்ஜுன்
அலட்டி
கொள்ள
….
“
நாங்க
அரங்கேற்றம்
பண்றவங்க
எல்லாம்
குரூப்பா
தான்
ஆடுவோம்
.
அதைத்
தவிர
இன்னும்
நிறையப்
பேர்
ரொம்ப
வருஷமா
கத்துகிட்டவங்க
ஆடுவாங்க
.
நாட்டிய
நாடகம்
எல்லாம்
இருக்கு
,
ரொம்ப
நல்லா
இருக்கும்
.
வா
அர்ஜுன்
ப்ளீஸ்
…”
ஆராதனா
கெஞ்ச
…
“
டேய்
அவளை
ஏன்டா
கெஞ்ச
வைக்கிற
”
என்ற
கணேசன்
, “
அதெல்லாம்
அவன்
வருவான்
.
நீ
கவலைபடாத
செல்லம்
.”
என்றதும்
,
தன்
அப்பாவை
எழுந்து
சென்று
கட்டிகொண்டாள்
ஆராதனா
.
Advertising
Advertising