Toggle navigation
Home
Tamil Novels
What's new
Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள்,
[email protected]
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Advertising
உனக்குள் என் உயிரே 3
Post Views:
1,526
உனக்குள்
என்
உயிரே
அத்தியாயம்
3
கல்லூரியில்
மீராவிடம்
கோபமாகப்
பேசிவிட்டுப்
பைக்கில்
வீடு
நோக்கி
சென்று
கொண்டிருந்த
அர்ஜுனுக்கு
,
தன்
மீதே
கோபம்
வந்தது
.
ஆசையாகப்
பேச
வந்தவளை
முகத்தில்
அடித்தது
போல்
பேசிவிட்டோமே
,
ஒரு
வேளை
வருத்தப்பட்டு
அழ
போகிறாள்
என்று
நினைத்தவனால்
…
அதற்கு
மேல்
செல்ல
முடியாமல்
,
பைக்கை
திருப்பிக்
கொண்டு
மீண்டும்
கல்லூரிக்கே
சென்றான்
.
அங்கே
மீராவின்
கார்
நின்று
கொண்டிருப்பதைப்
பார்த்து
…
இன்னும்
அவள்
வீட்டுக்கு
போகவில்லை
என்று
உணர்ந்து
,
பைக்கை
நிறுத்திவிட்டு
மீராவை
தேடி
சென்றான்
.
மீரா
காண்டீனில்
அமர்ந்து
தோழிகளுடன்
சிரித்துப்
பேசி
அரட்டை
அடித்துச்
சாப்பிட்டு
கொண்டிருந்தாள்
.
அதைப்
பார்த்ததும்
நிம்மதி
அடைந்தவன்
,
நல்லா
தான்
இருக்கா
…
நாம
தான்
தேவை
இல்லாம
டென்ஷன்
ஆகிட்டோம்
.
மணி
என்ன
ஆகுது
?.
இன்னும்
வீட்டுக்கு
போகாம
இருக்கா
பாரு
.
இவங்க
வீட்ல
தேட
மாட்டாங்களா
என்று
நினைத்தவன்
,
திரும்பி
வந்த
வழியே
சென்று
,
தன்
வண்டியை
எடுத்துக்
கொண்டு
வீட்டிற்குச்
சென்றான்
.
அவனுக்கு
மீராவை
பற்றித்
தெரியவில்லை
,
மீரா
தன்னுடைய
வருத்தத்தை
மற்றவர்களிடம்
எப்போதும்
காட்டி
கொள்ளமாட்டாள்
.
அன்று
இரவு
வழக்கம்
போல்
தோட்டத்தில்
அமர்ந்து
எல்லோரும்
அன்று
நடந்த
கதையைப்
பற்றிப்
பேச
,
அர்ஜுன்
இன்று
பிரபுவை
அடித்ததைப்
பற்றி
மட்டும்
சொன்னவன்
,
மீராவை
பற்றி
எதுவும்
சொல்லவில்லை
.
மீராவை
பற்றிச்
சொன்னால்
…
அவளும்
இதே
கல்லூரி
என்பது
தெரிய
வரும்
ஆதியும்
,
ஆருவும்
மீராவை
பற்றியே
பேசுவார்கள்
…
இனி
மீராவை
பற்றி
நினைத்தும்
பார்க்க
கூடாது
என்று
அர்ஜுன்
,
மீராவை
பற்றிப்
பேசவில்லை
.
மறுநாள்
கல்லூரிக்கு
வந்த
அர்ஜுனை
கல்லூரியின்
முதல்வர்
அழைப்பதாகச்
சொல்ல
,
அவன்
அவரது
அறைக்குச்
சென்ற
போது
,
அங்கே
ஏற்கனவே
பிரபுவும்
,
மீராவும்
இருந்தனர்
.
“
சார்
குட்
மார்னிங்
,
என்னை
வர
சொன்னீங்களா
?”
அர்ஜுன்
கேட்க
… “
ஆமாம்
இரு
அர்ஜுன்
மீராகிட்ட
பேசிட்டு
உன்கிட்ட
பேசுறேன்
.”
என்றார்
.
“
மீரா
,
நான்
நேத்துக்
காலேஜ்
வரலை
.
இன்னைக்கு
வந்ததும்
நேத்து
நடந்த
விஷயத்தைக்
கேள்வி
பட்டேன்
.
நீ
சொல்லு
என்ன
நடந்தது
?”
ப்ரின்சி
கேட்க
…
மீரா
மெளனமாக
நின்றாள்
.
“
உன்னைப்
பிரபு
வேணும்னே
இடிச்சதாகவும்
,
பதிலுக்கு
நீ
அவனை
அடிச்சதாகவும்
,
பிறகு
பிரபுவுக்கும்
உனக்கும்
சண்டை
நடந்ததாகவும்
,
உனக்காக
அர்ஜுன்
அவனை
அடிச்சதாகவும்
கேள்விபட்டேன்
.
சொல்லு
அதெல்லாம்
உண்மையா
?”
மீரா
பிரபுவை
பார்த்தாள்
.
அவன்
முகம்
வெளிறி
இருந்தது
.
அவன்
தலை
குனிந்து
நின்றிருந்தான்
.
திருந்தியவனுக்குத்
தண்டனை
வாங்கிக்
கொடுத்தால்
,
அவன்
திருந்தியதற்கு
அர்த்தமே
இல்லை
என்று
நினைத்த
மீரா
, “
நான்
தான்
சார்
தப்பா
நினைச்சிட்டேன்
.
பிரபு
தெரியாம
தான்
மோதினாங்க
.
நான்
தான்
அவசரப்பட்டு
அடிச்சிட்டேன்
.
சாரி
சார்
.”
“
அர்ஜுன்எனக்காக
எதுக்குப்
பிரபுவை
அடிக்கணும்
?
அவங்களுக்கு
என்னை
யாருன்னே
தெரியாது
.”
என்றாள்
.
அவள்
பேசியதை
கேட்டு
அர்ஜுன்
,
பிரபு
இருவருமே
அதிர்ந்தனர்
.
நேற்று
அவ்வளவு
தூரம்
சண்டை
போட்டவள்
,
இன்று
இப்படிப்
பேசுவது
இருவருக்கும்
ஆச்சரியமாக
இருந்தது
.
பிரபு
தான்
இன்று
துளைந்தோம்
என்று
தான்
நினைத்துக்
கொண்டிருந்தான்
.
படிப்பை
முடிக்கப்
போகும்
நேரத்தில்
,
தான்
செய்த
தவறான
செயல்
…
ஒரு
கரும்புள்ளியாகத்
தன்
வாழ்கையில்
இருக்கப்
போவதை
நினைத்து
மனம்
வருந்தியவன்
,
தான்
பெண்களை
விளையாட்டாக
நினைத்ததற்கு
…
தனக்குத்
தண்டனை
தேவை
தான்
என்று
நினைத்துக்
கொண்டிருக்கும்
போது
,
மீரா
சொன்னது
அவன்
நெஞ்சில்
பால்
வார்த்தது
.
“
நீ
நிஜமா
தான்
சொல்றியா
?”
ப்ரின்சி
மீராவை
பார்த்து
கேட்க
…
அவள்
ஆமாம்
என்று
தலையாட்ட
…
ப்ரின்சி
அர்ஜுனிடம்
“
நீ
எதுக்குப்
பிரபுவை
அடிச்ச
?”
என்றார்
.
அர்ஜுன்
பிரபுவை
பார்த்துக்
கொண்டே
“
அவனுக்கும்
எனக்கும்
பேசிட்டு
இருக்கும்
போது
சண்டை
வந்துடுச்சு
,
கோபத்தில
அடிச்சிட்டேன்
.”
என்றான்
.
ப்ரின்சி
பிரபுவை
பார்க்க
…
அவன்
ஆமாம்
என்று
தயங்கி
கொண்டே
தலையாட்ட
…
மீரா
,
அர்ஜுன்
மற்றும்
பிரபு
மூவரையும்
,
இனி
இது
போல்
தவறு
நடக்கக்
கூடாது
என்று
ப்ரின்சி
எச்சரித்து
அனுப்பினார்
.
முவரும்
சரி
என்று
சொல்லிவிட்டு
வெளியே
வந்தனர்
.
வெளியே
வந்த
மீராவிடம்
பிரபு
”
தேங்க்ஸ்
மீரா
…
நான்
ரொம்பப்
பயந்திட்டேன்
.
எங்க
அப்பா
அம்மாவுக்குத்
தெரிஞ்சா
ரொம்ப
வருத்தபடுவாங்க
.
நான்
இனிமே
அது
மாதிரி
நடந்துக்க
மாட்டேன்
.”
என்று
மன்னிப்பு
கேட்க
…
“
நானும்
எங்க
அப்பாவுக்காகத்
தான்
நேத்து
பிரச்சனையைப்
பெரிசாக்காம
விட்டேன்
.
பிரபு
,
பொண்ணா
பிறந்தாலே
ஆயிரம்
பிரச்சனை
.
நாங்க
நிம்மதியா
,
சந்தோஷமா
இருக்கிற
ஒரே
இடம்
காலேஜ்
தான்
.
இங்கயும்
எங்களுக்குப்
பாதுகாப்பு
இல்லைனா
…
நாங்க
எங்க
போவோம்
?
தயவு
செஞ்சு
இனிமே
இந்த
மாதிரி
நடந்துக்காதீங்க
.”
என்றவள்
,
வேகமாக
அங்கிருந்து
சென்றாள்
.
அர்ஜுன்
மீரவையே
பார்த்துக்
கொண்டு
நிற்க
….
பிரபு
“
சாரி
அர்ஜுன்
.”
என்றதும்
,
அவன்
பக்கம்
திரும்பியவன்
“
கேட்டியா
என்ன
சொன்னான்னு
,
இனிமேலும்
நீ
திருந்தலைனா
…
நீ
மனுஷ
ஜென்மமே
இல்லை
.”
என்றான்
கோபமாக
.
“
இல்லை
அர்ஜுன்
,
நான்
என்
தவறை
உணர்திட்டேன்
.
சத்தியமா
இனிமே
ஒழுங்கா
நடந்துக்கிறேன்
.
நீ
என்கிட்டே
பழையமாதிரி
பேசணும்
அர்ஜுன்
.
பேசுவ
தான
…”
பிரபு
கவலையாகக்
கேட்க
…
“
நீ
யாரிடம்
தவறா
நடந்தியோ
,
அவளே
உன்னை
மன்னிச்சிட்டா
….
இனி
நான்
என்ன
சொல்ல
…
வா
கிளாஸ்க்கு
போகலாம்
.”
என்று
அர்ஜுன்
,
பிரபுவை
அழைத்துக்
கொண்டு
தங்கள்
வகுப்பிற்குச்
சென்றான்
.
அதன்
பிறகு
வந்த
நாட்களில்
அர்ஜுனும்
,
மீராவும்
ஒருவரை
ஒருவர்
பார்த்தாலும்
,
பார்க்காத
மாதிரியே
சென்றனர்
.
எப்போதும்
சனிக்கிழமை
மற்றும்
ஞாயிற்றுக்
கிழமைகளில்
மாலையில்
ஷட்டில்
விளையாட
செல்லும்
அர்ஜுன்
,
அவனது
அப்பா
அவனை
மாலை
வேளையில்
அவர்கள்
ஷோ
ரூமிற்கு
வர
சொன்னதால்
…
இந்த
வாரம்
காலை
சென்றான்
.
அர்ஜுன்
சென்ற
போது
மணி
எழு
…
பொதுவாக
அந்த
நேரம்
ரொம்பப்
பேர்
விளையாட
வரும்
நேரம்
என்பதால்
,
அங்கிருந்த
பத்து
கோர்ட்டிலுமே
ஆட்கள்
விளையாடி
கொண்டு
இருந்தனர்
.
அர்ஜுன்
அங்கிருத்த
இருக்கையில்
அமர்ந்து
விளையாடுபவர்களை
வேடிக்கை
பார்க்க
ஆரம்பித்தான்
.
அர்ஜுன்
ஒவ்வொரு
கோர்ட்டாகப்
பார்த்துக்
கொண்டே
வர
…
ஒரு
கோர்ட்டில்
மீரா
மற்றும்
இன்னும்
சிலரும்
சேர்ந்து
டபுல்ஸ்
விளையாடி
கொண்டிருந்தனர்
.
மீரா
ட்ராக்
பான்ட்
மற்றும்
டி
–
ஷர்ட்
அணிந்து
,
முடியை
இழுத்துப்
பேண்ட்
மாட்டி
இருந்தாள்
…
மீரா
விளையாட்டில்
தீவிரமாக
இருந்ததால்
…
அர்ஜுனை
கவனிக்கவில்லை
.
அவள்
கூட
விளையாடிய
மற்ற
மூவரும்
ஆண்கள்
,
அவர்களை
விட
மீரா
தான்
நன்றாக
விளையாடினாள்
.
அவள்
லாவகமாகச்
சர்வீஸ்
போடுவதில்
இருந்தே
…
அவள்
ரொம்ப
வருடமாக
ஷட்டில்
விளையாடுகிறாள்
என்று
நன்றாகத்
தெரிந்தது
.
அர்ஜுன்
மீராவையே
கண்
எடுக்காமல்
பார்த்துக்
கொண்டிருந்தான்
.
சரியான
உயரத்தில்
அதற்கேற்ற
உடல்வாகுடன்
…
பார்க்க
சந்தனத்தில்
குழைத்து
செய்த
சிலை
போலத்
தான்
இருக்கிறாள்
என்று
நினைத்தவன்
,
ச்ச
..
அவளிடம்
இருந்து
விலகி
இருக்கனும்னு
நினைச்சா
,
இப்படித்
திரும்பத்
திரும்ப
அவளையே
பார்க்கிற
மாதிரி
இருக்கே
என்று
நினைத்துக்
கொண்டிருக்கும்
போதே
…
“
ஹாய்
அர்ஜுன்
.”
என்று
சத்தம்
கேட்க
…
அர்ஜுன்
குரல்
வந்த
திசையில்
பார்க்க
….
மீராவோடு
இணைந்து
விளையாடிய
ஜீவாவை
,
அப்போது
தான்
கவனித்தான்
.
அடப்பாவி
இவனும்
இங்க
தான்
இருக்கானா
…
இவனைக்
கவனிக்கவே
இல்லையே
என்று
நினைத்தவன்
,
மீராவை
பார்க்க
…
அவளும்
அப்போது
தான்
அவனைப்
பார்த்தவள்
,
அர்ஜுன
மகா
ராசாவுக்கு
இங்க
என்ன
வேலை
என்று
நினைத்தாள்
.
அர்ஜுன்
எழுந்து
அவர்கள்
அருகில்
சென்றதும்
,
ஜீவா
“
இவன்
அர்ஜுன்
என்னோட
ஸ்கூல்
ப்ரண்ட்
”
என்று
எல்லோருக்கும்
அறிமுகம்
செய்ய
….
அர்ஜுன்
எல்லோரையும்
பார்த்து
ஹாய்
என்றான்
.
அர்ஜுன்
ஜீவாவோடு
நின்று
பேசி
கொண்டிருக்க
,
மீரா
“u guys play… I am leaving.”
என்று
கிளம்ப
…
ஜீவா
“
ஏன்
மீரா
போற
?
நாம
ஒருத்தர்
மாத்தி
ஒருத்தர்
விளையாடலாம்
”
என்றான்
.
Advertising
Advertising