‘அந்த கவலை எனக்கும் இருக்குதான்.. ஆனா என் மகன் எல்லாத்தையும் சரி செய்திடுவான்னு நம்பிக்கையிருக்கு.. சரி செய்ய கால தாமதம் ஆனாலும் ஆதிம்மாவை விட மாட்டான்.. அப்படித்தான ரூபா.?” என்றார் நம்பிக்கையாக.
‘அம்மா சொல்றதும் சரிதான் ரூபா.. நாங்க பொண்ணு கேட்காம இருந்திருந்தா கூட உனக்கு கொஞ்சம் சிரமம் குறைஞ்சிருக்கும்.. காலைல கூட ஆதிம்மா எங்ககிட்ட முகம் கொடுத்து பேசல.. காஞ்சனாகிட்ட பேசினதுக்கே கோபப்பட்டுகிட்டு கொஞ்ச நேரம் கழிச்சி வரேன்னு தனியா போய்டுச்சி.
இரண்டு பேருக்குமே நம்மளோட சம்பந்தம் வச்சிக்க பிடிக்கலன்னு தெரிஞ்சி திரும்பவும் எப்படி போய் பொண்ணு கேக்குறது.?” என்றார் வருத்தத்தோடு.
அதிரூபன்.. ‘நீங்க எதுவும் கேக்காதிங்கப்பா.. இனி நானே பார்த்துக்கிறேன்..” என்றான் மீண்டும்.
‘அப்போ பட்டுமா பிறந்த நாளுக்குள்ள கல்யாணத்தை பண்ணு..” என்றார் கனகா.
கணேசன்.. ‘அதுக்கு இன்னும் ஒன்றரை மாசம்தான இருக்கு.?”
கனகா.. ‘எப்போன்னாலும் பேசித்தான ஆகனும்.? அதை இப்பவே பேசிடு ரூபா.. அதான் ஒன்றரை மாசம் இருக்குல்ல.?” என்றார்.
அதிரூபன்.. ‘காலைலதான் தாத்தா பேசினேன்.. உங்களை பார்க்க ஹாஸ்பிட்டலுக்குள்ள நுழைஞ்சதும் ஆதிரைதான் கண்ணுல பட்டா.. அப்பவே என் விருப்பத்தை சொல்லிட்டேன்.. காஞ்சனாத்தை பொண்ணுதான் ஆதிரைன்னு எனக்கு தெரியாது..”
பெருமகிழ்ச்சியடைந்த கணேசன்.. ‘அப்புறமென்னடா.? இது நடக்காதுன்னு ரொம்ப வருத்ததில இருந்தேன்..” என சந்தோசித்தார்.
‘அப்பா.. நான் என் விருப்பத்தை சொன்னேன்தான்.. அதை அவ ஏத்துக்கிலன்றது கூட பரவால்லப்பா.. எதோ அவளை கீழ நினைச்ச மாதிரி அழுதுட்டா.. அதான் ரொம்ப கஷ்டமாயிருக்கு..” என்றான் வேதனையாக.
‘என்னப்பா இப்படி சொல்ற.?”
‘எதோ அவ ஏழைன்றதாலையும் அவங்கப்பா இல்லாததுனாலயும் அவளை இரண்டாந்தாரமா கேக்குறன்னு நினைச்சிட்டா..” என வருந்தினான்.
கணேசன் முகம் வாடிடவே.. ‘ஆதிரை என் விருப்பத்தை ஏத்துக்கிலதான்.. அதுக்காக என்னை பிடிக்கலன்னு இல்லப்பா..” என்றான் நம்பிக்கையாக.
கணேசன் சந்தோசப்பட.. கனகா.. ‘என் ரூபனை எப்படி பிடிக்காம போகும்.? இனி இந்த விசயத்துல நாம யாரும் தலையிட வேணாம்.. காஞ்சனாகிட்ட பேசி சம்மதம் வாங்குறது ரூபன் பொறுப்பு..” என்றார் பெருமையாக.
தான் விரும்பிய பெண்ணை மணக்க பெற்றோர் சம்மதித்தில் பெரும் சந்தோசமடைந்தான்.. அதோடு ஆதிரையிடம் தான் காதல் சொன்னபோது சில மணித்துளிதான் என்றாலும் அவளின் படபடப்பு தடுமாற்றம் எல்லாம் நினைவில் வர அதிரூபன் முகம் ஜொலித்தது.
அதன் பின் நான்கு நாட்கள் இங்குதான் இருந்தான்.. ஆதிரையிடம் பேசலாம் என தவித்தபோதும் தற்போது வேணாம்.. முன்பு தன்னிரக்கமாய் நினைத்தவள்.. தற்போது உதவி செய்ததற்கு பிரதிபலனாய் அவளை கேட்கிறேன் என நினைப்பாள் என ஆதிரையை சந்திக்கும் எண்ணத்தை தள்ளிவைத்தான்.
நாளை அதிகாலை சூட்டிங் இருக்க இன்று மாலை கிளம்பனும் என்றான் அன்னையிடம். ‘ஒரு வாரத்துக்கு இருக்க போறன்ன.?” என்றார் கோபமாக.
‘டைரக்டர் வர சொல்லிட்டார் ம்மா.. நான் என்ன செய்ய.?”
‘ஆமாம்மா.. ஆதியை பார்க்கலாம்னு இருக்கு..” என்றவன்.. ‘ஹ்ம்.. திடீர்ன்னு போன் வந்துடுச்சி.. சாய்ங்காலம் கிளம்பினாதான் லொகேசனுக்கு போய் சேரமுடியும்.. அடுத்தடுத்து டப்பிங் வேலை இருக்கு.. டைரக்டர் மாறன் வேற நல்ல ரோல் இருக்கு நீயே நடிங்கிறார். எனக்கு ஃபைட் வர அளவுக்கு ஆக்ட்டிங் வராதுன்னு சொல்லியும் அதெல்லாம் நான் வரவச்சிக்கிறேன்னு பிடிவாதம் செய்யிறார்..
அவர் எடுத்த எல்லா படமும் பெரிய ஹிட்.. இப்போ பிரபலமா பேசப்பட்டுட்டு இருக்க டைரக்டர்.. இதுக்கு மேல அவர்கிட்ட ஃபோன்ல மறுத்து பேசினா தலைகணம்னு தப்பா நினைச்சிடுவார்.. திரையில முகம் காட்டுறதுல எனக்கு விருப்பமில்லன்னு நேர்ல போய்தான் புரிய வைக்கனும்..” என தன் வேலைகளை அடுக்கினான் சலிப்பாகவே.
‘ரொம்ப டல்லடிகிறியேடா.. இரண்டு நாள் கழிச்சி வரன்னு கேட்டு பார்க்கலாமில்ல.?” என்றார் கணேசன்.
‘கிளைமாக்ஸ் சீன்ப்பா.. கதாநாயகி கதாநாயகன்னு நிறை பேர் மிங்கிளாகிற சூட்.. டூப்தான் போடறேன்.. ஆனா நான் போகலன்னா எல்லா வேலையும் நிக்கும்.. என் ஒருத்தனால ஸ்பாயிலானா பேர் கெட்டுடும்.. முடிந்தவரை பங்சுவாலிட்டி கீப்பப் செய்யனும்.. இல்ல ஃபீல்ட்ல நிக்க முடியாது..” என்றான்.
‘நீங்க என்ன சொன்னாலும் அவன் கிளம்பாம இருக்கமாட்டான்.. இப்போ மணி இரண்டுதான ஆகுது.. சாப்டுட்டு கொஞ்ச நேரம் படு.. சாய்ங்காலம் பட்டுவோட விளையாண்டுட்டு கிளம்புவியாம்..” என மகனிற்கு சாப்பிட கொடுத்தார் கனகா.
சாப்பிட்டு அறைக்கு வந்தவனிற்கு ஆதிரையின் நினைவேதான் வலம் வந்தது. ஒன்று காதல் சொல்லாமல் இருந்திருக்கனும்.. இல்லையேல் ஆதிரையை சந்தித்து மீண்டும் தன்னை விளக்கியிருக்க வேண்டும்.. இப்படி எதுவும் இல்லாமல் தற்போது சென்னை கிளம்புவது சரியில்லை என தோன்ற.. நீண்ட யோசனைக்கு பின்னே ஆதிரைக்கு அழைத்தான்.
புது நம்பராக இருக்கவே ஆதிரை அழைப்பை ஏற்கவில்லை. நான்காவது முறைதான் அழைப்பை ஏற்று.. ‘ஹலோ.. யாருங்க.?” என்றாள் சலிப்பாக. ம்.. பேக்கரியில் பில் கட்டுவதற்கு நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்க இந்த அறிமுகமில்லா எண்ணின் தொடர் அழைப்பு சலிப்பை வரவழைத்தது ஆதிரைக்கு.
‘எனக்கு அப்படி யாரையும் தெரியாது.. ராங் நம்பர்..” என கட்செய்தாள். இவனுக்கெப்படி நம்ம நம்பர் தெரிஞ்சிருக்கும்.? என கோபத்தோடு நினைத்திருக்க.. மீண்டும் அழைத்தான் அதிரூபன்.
‘ஹலோ..” என்றாள் கடுப்பாக.
‘என்னை மறந்து போக சான்சே இல்ல.. எதுக்கு தெரியாதுன்னு பொய் சொல்ற.?” என பேசிக்கொண்டிருக்கவே கட் செய்திருந்தாள்.
மீண்டும் அழைக்க எடுக்கவில்லை ஆதிரை. ‘கால் பிக்கப் பண்ணலன்னா வீட்டுக்கு வருவேன்..” என குறுஞ்செய்தி அனுப்பியவன் அதை பார்த்ததற்கான அடையாளம் தெரிந்தபின் மீண்டும் அழைத்தான்.
‘ஹலோ.. என்னை பொண்ணு பார்க்க வந்திருக்காங்க.. நான் பிஸியா இருக்கேன்.. எதுக்கு தொல்லை செய்துட்டிருகிங்க.?” என ரூபனை வெறுப்பேற்ற நினைக்க..
‘ஏம்மா.. பில் போடறதை விட்டுட்டு ஃபோன்ல என்னம்மா கதை பேசிட்டிருக்க.? எத்தனை நேரம் நிக்கிறது.?” என்ற கஸ்டமரின் கத்தலில் பெரிதாய் சிரித்தான் அதிருபன்.
‘ஹ.. லோ..” என்றவளின் குரல் இறங்கியிருக்க.. ‘நீ சரிப்பட மாட்ட.. இரு நான் பேக்கரிக்கே வரேன்..” என்றான் சிரிப்போடே.
‘இல்லயில்ல.. இங்க வந்திடாதிங்க.. ஃப்ரீயானதும் நானே கூப்பிடறேன்.. இப்போ கூட்டம் நிறைய இருக்காங்க..”
‘எப்போ ஃப்ரீ ஆவ.?”
அதிகாரத்தை பாரு என கடுப்பானவள்.. ‘நாலு மணிக்கு டீ டைம்.. அப்போ கால் பண்றேன்..” என்றாள்.
‘நைட் எட்டு மணிவரைக்கும் நீ பேக்கரிலதான் இருப்பன்னு எனக்கு தெரியும்.. உன் கால்க்காக வெய்ட் பண்ணிட்டிருப்பேன்.. சரியா நாலு மணிக்கு ஃபோன் வரலன்னா பேக்கரிக்கு வந்திடுவேன்..” என்று இணைப்பை துண்டித்தான்.
மணி நான்காகியிருக்க ஆதிரை அழைக்கவில்லையென்றதும் ஐந்து நிமிடம் பொறுமை காத்தவன்.. ‘நான் கிளம்பிட்டேன்.. ஒன் ஹார்ல வந்திடுவேன்..” என குறுஞ்செய்தியை அனுப்பினான்.
அடுத்த நொடி ஆதிரையிடமிருந்து அழைப்பு வர.. புன்னகையோடு அழைப்பை ஏற்றவன்.. ‘டீ ஆச்சா.? எவ்வளோ நேரம் பிரேக்..?”
‘இது என்ன என் சொந்த பேக்கரியா.? நாலு மணின்னா நாலுமணிக்கேல்லாம் போன் செய்ய முடியுங்களா..? ஒன்னு இரண்டு கஸ்டமர் இருந்தா பார்த்துட்டுதான் மத்ததெல்லாம்.. அதுக்குள்ள கிளம்பிட்டன்றிங்க.? நீங்க இங்க வந்ததும் உங்கள்ட்ட பேசிட்டிருந்தா மத்தவங்க என்ன நினைப்பாங்க.?” என்றாள் கடுப்பாக.
ம்.. ஆதி யோசிக்கிறதும் சரிதான் என இவன் நினைத்திருக்க..
அந்த பெண்ணின் கேசில் இன்ஸ்பெக்டரே இவனின் பேச்சை கேட்டது.. அரவிந்தன் தன்னை தவறாக பேசி அடிவாங்கியதில் ரூபனின் கோபம் என அனைத்தும் யோசித்தவளுக்கு தற்போது இவனின் அமைதியில் பயம் உண்டாகியிருக்க.. ‘ஹலோ..” என்றாள் பதட்டத்தோடு.
‘ம்.. என்னை திட்ட மட்டும் இவ்வளோ நேரம் கிடைக்குது..? ஐஞ்சி நிமிசம் முன்ன போன் செய்யிறதுக்கென்ன.?” என்றான் இலகுவாகவே.
அதிரூபனின் உரிமை பேச்சில் இன்னும் பதட்டம் அதிகரிக்க.. ‘என்கிட்ட என்ன பேசனும்.? என் நம்பர் எப்படி உங்களுக்கு கிடைச்சது.?” என்றாள் குரல் இறங்கியவளாய்.
‘அன்னைக்கு ஸ்டேசன்லயே உன் நம்பரை வாங்கிட்டேன்.. அங்க இல்லன்னாலும் உன் நம்பரை வாங்குறதெல்லாம் பெரிய விசயமா.?” என சிரிப்போடு கேட்டு.. ‘நான் இன்னைக்கு சென்னை போறேன்.. வர ஒன்னு இரண்டு மாசமாகும்.. காதல் சொன்னவன் அதுக்கப்புறம் பேச்சை காணோமேன்னு நீ நினைச்சிடக் கூடாதில்ல.. அதான் உனக்கு என் சுட்டிவேசன் சொல்ல ஃபோன் செய்தேன்.” என்றான்.
‘ஒரு குழந்தையை பார்த்துக்கிற அளவுக்கு எனக்கு அறிவு கிடையாது.. வேற நல்ல பொண்ணா பார்த்துக்கோங்க.. உங்க சுட்டிவேசன் எனக்கு தெரிய தேவையில்ல..” என்றாள் அழுத்தமாக.
பட்டுமாதான் அவளுக்கு நெருடலாயிருக்கு வருந்தினாலும்.. தன்னை பிடிக்கவில்லை என சொல்லவில்லை என்ற நிம்மதி வர.. ‘பட்டுமாவை நினைச்சி வருத்திக்காத.. சில விசயங்களை சொல்ல முடியாது.. காலப்போக்குல தன்னால புரிஞ்சிப்ப..” என்றான் ஆதரவான குரலில்.
ஒரு மனிதனால் இரண்டாவது முறையாய் இப்படி காதலாய் பேச முடியுமா.? எப்படி உருகுறான் என ஆச்சர்யப்பட்டாலும்.. ம்.. குழந்தைக்கு அம்மா வேணும்ல.? என நினைக்க கண்ணீர்தான் வந்தது.
‘ஆதி.. நான் பேசுறதை கேக்குறியா.?”
ஆதிரையின் விசும்பல் சத்தமே பதிலாய் கிடைக்க.. ஒரு குழந்தைக்கு தகப்பன் விரும்பினவளை கேட்கும்போது எந்த பொண்ணுக்கும் சங்கடம் இருக்கும்தானே.? அழாதே என எப்படி சொல்வது.? என வருந்தியவன்..
‘எட்டு ஒன்பது மாசமா பொண்ணு தேடிட்டிருக்கேன்.. அப்போல்லாம் என் பட்டுமாவுக்கு இந்த பொண்ணு சரியான அம்மாவா இருப்பாளான்னு மட்டும்தான் யோசிப்பேன்.. ஆனா உன்னை பார்த்ததும் மட்டும்தான்.. எனக்கே எனக்கானவளை கண்டு பிடிச்ச சந்தோசம் கிடைச்சது ஆதிம்மா..” என்றான் உள்ளார்ந்து.
இதற்கு மேல் இவனின் பேச்சுகளை கேட்க முடியாது எனத் தோன்ற.. ‘டீ டைம் முடிஞ்சிடுச்சி.. நான் வைக்கிறேன்.. இனி கால் பண்ணாதிங்க.. எப்பவும்..” என கறாராய் சொல்வதாய் நினைத்து கெஞ்சலாய் முடித்து இணைப்பை துண்டித்தாள்.
‘எனக்கு உங்களை பிடிக்கலன்னு நாம ஏன் பட்டுன்னு சொல்லல.? என தன்மீதே கோபம் வந்தபோதும்.. நமக்கு அப்பா அண்ணன் இருந்திருந்தால் தைரியமாக பேசிடலாம்.. தற்போது சொல்ல முடியாதே.. எதையும் சாதிக்கும் வல்லவன் அவன்.. அவனிடம் பேசி வம்பை வளர்ப்பானேன்..
இங்கிருக்கவும்தானே பேக்கரிக்கு வந்திடுவேன்.. வீட்டுக்கு வருவேன்னு மிரட்டறான்.. இரண்டு மாசம் சென்னைல இருக்க போறதா சொல்றான்.. வல்லவன் திரும்ப வரதுக்குள்ள நம்மை நெருங்க முடியாதபடி எதாவது செய்யனும் என யோசித்து, முயன்று வேலையில் கவனமானாள்.