Toggle navigation
Home
Tamil Novels
What's new
Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள்,
[email protected]
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Advertising
புது வெள்ளை மழை 7
Post Views:
2,237
புது
வெள்ளை
மழை
அத்தியாயம்
– 7
கயல்விழி
தனியாக
இருந்தால்
,
இப்படித்தான்
எதையாவது
நினைத்துக்
குழப்பிக்
கொள்வாள்
என
நினைத்த
பத்மா
,
அருகில்
இருந்த
தன்
தங்கையின்
குடும்பத்தை
உடனே
வர
சொல்லிவிட்டார்
.
அவரது
தங்கைக்கு
இரண்டு
பெண்
மற்றும்
ஒரு
ஆண்
என
மூன்று
பிள்ளைகள்
.
அக்காவிற்குக்
கல்யாணம்
என்றதும்
,
தங்கைகள்
சந்தோஷத்தில்
குதித்துக் கொண்டு
,
அப்போதே
தங்கள்
பெற்றோருடன்
வர
,
வீட்டிற்கே
கல்யாணக் களை
வந்தது
.
அவர்கள்
பொறுப்பில்
கயல்விழியை
விட்டுவிட்டு
பத்மா
அவரது
வேலைகளைப்
பார்க்க
சென்றார்
.
“
அக்கா
,
நாங்க
மாமாவை
பார்த்தோம்
.
வெளிய
இருக்காரே
அவர்தானே
?
செமையா
இருக்காரு
கா
…
போலீஸ்காரர்
வேற
,
நீ
ரொம்ப
அதிர்ஷ்ட்டகாரி
.”
“
அவர்
பேரு
நந்தகுமார்
தானே
?
நம்ம
ஊரே
இப்ப
அவரைப்
பத்திதான்
பேசுது
.”
“
கல்யாணத்தை
ஏன்
மண்டபத்தில
வைக்காம
கோவில்ல
வைக்கிறாங்க
.”
“
எதாவது
வேண்டுதலா
இருக்கும்
.”
அவர்கள்
வீட்டில்
இருந்து
எடுத்து
வந்த
மருதாணியை
,
கயலுக்கு
ஆளுக்கொரு
கையில்
வைத்துவிட்டபடி
,
தங்கைகள்
இருவரும்
கதை
பேசினர்
.
அப்போது
புடவைக்காரர்
புடவைகளைக்
கொண்டு
வந்தார்
.
அந்த
இரவு
நேரத்தில்
பட்டு
புடவைகளை
வீட்டிற்கே
வரவழைத்துப்
பார்த்துக்கொண்டு
இருந்தனர்
.
பணம்
இருந்தால்
எல்லாமே
சாத்தியம்தான்
.
அப்போது
போன்
அடிக்க
,
பத்மாதான்
எழுந்து
சென்று
எடுத்தார்
.
அந்தப்
பக்கம்
பேசியது
வருண்
.
ஏற்கனவே
நந்தா
இந்த
வீட்டின்
தொலைபேசி
எண்ணை
கொடுத்து
இருந்தான்
.
“
இருங்க
மாப்பிளையைக்
கூப்பிடுறேன்
.”
என்றவர்
,
“
மாலா
,
சீதா
யாராவது
ஒருத்தர்
போய்
மாப்பிள்ளைக்குப்
போன்
வந்திருக்குன்னு
சொல்லுங்க
.”
என
அவர்
தன்
தங்கை
மகள்களிடம்
சொல்ல
…
“
நான்தான்
போய்ச்
சொல்வேன்
.”
என
இருவரும்
அடித்துக்
கொண்டனர்
.
அதற்கு
முன்
அவர்கள்
தம்பி
முருகன்
ஓடி
இருந்தான்
.
“
மாமா
,
மெட்ராஸில்
இருந்து
உங்களுக்குப்
போன்
.”
அவன்
மூச்சிரைக்க
ஓடி
வந்து
சொல்ல
.
தன்
நண்பர்களிடம்
, “
இருங்க
வந்துவிடுகிறேன்
.”
எனச்
சொல்லிவிட்டு
நந்தா
வீட்டிற்குள்
விரைந்து
சென்று
போன்னை
எடுத்தான்
.
“
ஹலோ
…”
“
நான்தான்
டா
”
“
சொல்லு
வருண்
.”
“
இப்பத்தான்
இங்கிருந்து
நாங்க
எல்லாம்
வேன்ல
கிளம்புறோம்
.”
“
இப்பத்தான்
கிளம்புறீங்களா
?”
“
நீ
அங்க
இருந்திட்டு
நல்லா
பேசு
.
இங்க
இருந்து
ஒவ்வொரு
டிக்கெட்டையும்
கிளப்பிப்
பாரு
தெரியும்
.”
“
என்னமா
கேள்வி
கேட்குதுங்க
.
பதில்
சொல்லி
முடியலை
.
எதுக்கு
இப்படித்
திடீர்
கல்யாணம்ன்னு
கேட்டு
உயிரை
எடுக்குதுங்க
.”
“
நீ
என்ன
சொன்ன
?”
“
நீ
லவ்
பண்ற
பொண்ணு
வீட்ல
கல்யாணத்துக்கு
ஒத்துக்கலை
,
அதனால
திருட்டுக்
கல்யாணம்
பன்றோம்ன்னு
சொல்லி
வச்சிருக்கேன்
.”
“
டேய்
நான்
போலீஸ்
டா
.”
“
போலீஸ்
திருட்டுக்
கல்யாணம்
பண்ணக்கூடாதுன்னு
எந்தச்
சட்டத்திலாவது
இருக்கா
?”
“
கயலை
பத்தி
வேற
யார்கிட்டயும்
சொல்லலையே
?”
“
அம்மாவை
தவிர
வேற
யாருக்கும்
,
ஏன்
உன்
தங்கச்சிக்கு
கூடத்
தெரியாது
.”
“
சரி
.”
“
பெண்ணுக்கு
கல்யாணப்
புடவையும்
,
தாலியும்
நாமதான்
வாங்கனுமாம்
.
அம்மா
சொல்ல
சொன்னாங்க
.”
“
ஏன்
அவங்க
என்னோட
பேச
மாட்டாங்களா
?”
“
கோவமா
இருக்காங்களாம்
.
அதையும்
சொல்ல
சொன்னாங்க
.”
வருண்
சொன்னதற்கு
நந்தா
பதில்
சொல்லாமல்
அமைதியாக
இருக்க
.
“
டேய்
ஒரு
கல்யாணம்னா
இந்தச்
சலசலப்பு
கூட
இல்லைனா
எப்படி டா
?
அதுவும்
உன்
அத்தையை
வழியில்
திருச்சியில
போய்க்
கூடிட்டு
வரணும்
.
அவங்க
உன்
மேல
ரொம்பக்
கோபத்துல
இருக்காங்க
.”
“
முதல்ல
வரலைன்னு
சொன்னாங்க
.
அப்புறம்
திரும்பப்
போன்
பண்ணி
வரேன்னு
சொல்லி
இருக்காங்க
.
என்ன
கலாட்டா
நடக்குமோ
.”
ராதிகாவும்
வருவாளா
,
அவளையும்
வேறு
சமாளிக்க
வேண்டுமா
என்றிருந்தது
.
“
வேற
யாரெல்லாம்
வராங்க
?”
“
உன்
சித்தப்பா
குடும்பம்
,
உன்
பெரியம்மா
குடும்பம்
.
அப்புறம்
என்னோட
அப்பா
அம்மா
இவங்கதான்
மெட்ராஸ்ல
இருந்து
.
வர்ற
வழியில்
திருச்சியில
உன்
அத்தை
குடும்பம்
,
மதுரையில
இருக்க
உன்
தாய்மாமா
,
காலையில
நேரா
அங்க
வர்றேன்னு
சொல்லிட்டார்
.”
“
இதே
ஒரு
இருபது
பேர்
ஆகுமேடா
…
ஒரு
கல்யாணத்துக்கு
இவ்வளவு
பேர்
போதாது
.
இதுல
இன்னும்
கயல்
பக்கமும்
வருவாங்க
.”
“
போதும்
டா
…
கலக்கிடலாம்
.”
“
சரிடா
சீக்கிரம்
வந்து
சேருங்க
.”
எனப்
போன்னை
வைத்துவிட்டு
வெளியே
வந்த
நந்தா
,
பத்மா
புடவைகளைப்
பார்த்துக்
கொண்டிருந்ததைக்
கவனித்தான்
.
“
அத்தை
,
நாங்கதான்
கயல்விழிக்கு
முஹுர்த்த
புடவை
வாங்கணும்.
இதுலையே
ஒன்னு
எடுத்திடலாமா
?”
அவன்
கேட்க
,
பத்மா
சரி
என்றார்
.
நந்தா
நின்றபடி
மேலோட்டமாகத்தான்
புடவைகளைப்
பார்த்தான்
.
குங்கும
நிறத்தில்
தங்க
நிற
சரிகையால்
மெல்லிய
கட்டமும்
,
அங்கங்கே
உடலில்
கொடி
போல
ஜரிகை
ஓட
இருந்த
புடவையைக்
காட்டி
,
விரிக்கச்
சொல்லி
பார்த்தவன்
,
அந்தப்
புடவை
கயல்விழிக்கு
மிகவும்
நன்றாக
இருக்கும்
என
அதையே
முஹுர்த்ததுக்கு
எடுத்தான்
.
அதே
குங்கும
நிறத்தில்
ரெடிமேட்
ரவிக்கையைப்
பத்மா
எடுத்து
கொடுத்தார்
.
புடவையின்
விலை
பதினோராயிரம்
என்று
இருந்தது
.
அவ்வளவு
பணம்
இப்போது
கையில்
இல்லை
.
பிறகு
பணம்
கொடுத்து
விடலாம்
என
நினைத்தான்
.
திரும்ப
அவன்
வெளியே
சென்று
நண்பர்களோடு
பேச
….
அப்போது
வெளியே
சென்றிருந்த
அன்பரசு
வந்தார்
.
தன்
ஆட்களை
அழைத்து
வீட்டின்
முன்பு
பிளாஸ்டிக்
சேர்களைக்
கொண்டு
வந்து
போட
வைத்தார்
.
அதில்
நந்தாவும்
அவன்
நண்பர்களும்
உட்கார்ந்து
கொண்டனர்
.
உள்ளே
சென்றவர்
, “
அவங்களுக்குக்
குடிக்க
டீ
எதுவும்
போட்டுக்
கொடுத்தியா
?”
எனப்
பத்மாவிடம்
கேட்க
,
அவர்
இல்லை
என்றார்
.
“
இன்னைக்கு
நைட்
புல்லா
புடவையே
எடுத்திட்டு
இருக்கப்
போறியா
?”
என
அவர்
எரிந்து
விழ
,
“
இல்லை
கயலுக்கு
அப்புறம்
வேற
யாருக்கும்
எடுக்கணுமா
?”
எனப்
பத்மா
கேட்டார்
.
“
வாசு
கல்யாணத்துக்கு
எல்லோருக்கும்
எடுத்துக்
கொடுத்துக்கலாம்
.
இப்ப
கயலுக்கு
மட்டும்
எடுத்தா
போதும்
.”
கணவர்
சொன்னபடி
மகளுக்கு
மட்டும்
நான்கு
புடவைகளை
எடுத்தவர்
,
சமையல்
அறைக்கு
விரைந்து
சென்று
டீ
வைத்தார்
.
திரும்ப
அதை
யார்
கொண்டு
போய்
நந்தாவிடம்
கொடுப்பது
என
மாலாவுக்கும்
,
சீதாவுக்கும்
இடையே
போட்டி
.
இருவருமே
தாங்கள்
வைத்திருந்த
டீயை
நந்தாவிடம்
சென்று
நீட்ட
,
பார்த்த
அவனுக்குச்
சிரிப்பு
வந்துவிட்டது
.
“
முதல்ல
நீங்க
யாரு
சொல்லுங்க
?”
“
நான்
மாலா
,
இவ
சீதா
.”
மாலா
சொல்ல
,
“
நாங்க
கயல்
அக்காவோட
சித்தி
பொண்ணுங்க
.”
என்றாள்
சீதா
.
அவனைப்
பார்க்கும்
ஆர்வத்தில்
வந்திருக்கிறார்கள்
எனப்
புரிந்து
கொண்டவன்
,
இருவரிடமுமிருந்து
டீயை
வாங்கி
,
தன்
நண்பர்களிடம்
கொடுத்தான்
.
வேகமாக
வந்த
முருகன்
.
அவன்
கையில்
இருந்த
டீயை
நந்தாவிடம்
கொடுத்துவிட்டு
, “
நான்
கொடுத்த
டீயைதான்
மாமா
குடிக்கிறாங்க
.”
எனச்
சகோதரிகள்
இருவரையும்
வெறுப்பேற்றினான்
.
உள்ளே
வந்த
அவர்களைப்
பார்த்த
பத்மா
. “
டீ
கொடுக்க
இத்தனை
பேரா
?
போய்
அக்காவோட
இருங்க
.”
என்றார்
.
தந்தை
சொன்ன
வேலைகளை
முடித்து
விட்டு
வந்த
நவநீத
கிருஷ்ணன்
, “
சமையல்காரர்
காலை
அஞ்சு
மணிக்கு
எல்லாம்
கோவில்ல
இருப்பார்
.
தேவையான
மளிகை
சாமான்களை
,
வெள்ளன
கடை
திறந்து
எடுத்துக்
கொடுக்கச்
சொல்லி
இருக்கேன்
.”
என்றான்
.
“
சரி
நீ
போய்ப்
படு
.
காலையில
சீக்கிரம்
எழுந்து
கோவிலுக்குப்
போய்
வேலை
ஒழுங்கா
நடக்குதான்னு
பாரு
.”
“
சரிங்கப்பா
…”
என்றவன்
,
மாடியில்
இருந்த
அவர்கள்
அறைக்குச்
செல்ல
,
அங்கே
அவன்
மனைவி
அவனைப்
பிடித்துக்
கொண்டாள்
.
“
உங்க
தங்கச்சி
கல்யாணத்துக்கு
எல்லா
வேலையும்
பண்ணியாச்சா
?”
அவள்
நக்கலாகக்
கேட்க
,
“
வேற
வழி
,
அப்பா
சொல்றார்
செஞ்சுதான
ஆகணும்
.”
என்றான்
அலுப்பாக
.
“
ஓடிப்போனவளுக்கு
இன்னொரு
கல்யாணமா
…
கேவலமா
இருக்கு
.
இவளை
எல்லாம்
கொன்னு
போட்டிருக்கணும்.
அப்பத்தான்
இனி
யாருக்கும்
இப்படிச்
செய்யத்
தைரியம்
வராது
.
அதைவிட்டுட்டு
வெட்கமே
இல்லாம
இன்னொரு
கல்யாணம்
பண்றாங்க
.”
“
அம்மாவுக்காகத்தான்
கீதா
.”
“
ஏன்
அவங்களும்
சேர்ந்து
சாவாங்களா
?
அப்படிச்
செத்தா
செத்து
போகட்டுமே
.”
கீதா
ஆத்திரமாகச்
சொல்ல
,
இவள்
அவ்வளவு
சீக்கிரம்
சமாதானம்
ஆக
மாட்டாள்
என்பதை
உணர்ந்த
கிருஷ்ணன்
, “
நாளைக்குக்
கல்யாணத்தைப்
பண்ணி
துரத்தி
விடப்
போறோம்
.
நீ
எதுக்கு
வீணா
அந்தக்
கழுதையைப்
பத்தி
பேசி
உன்
ஜீவனைக்
குறைச்சிக்கிற
.”
என்றான்
.
“
அந்தப்
போலீஸ்காரன்
ஏன்
இன்னும்
வீட்டுக்கு
போகாம
இருக்கான்
?”
“
அது
அவனைத்தான்
கேட்கணும்
.”
கொலைக்கும்
அஞ்சாத
கும்பல்
என்று
தெரிந்துதான்
நந்தா
வீட்டிற்குச்
செல்லாமல்
,
அங்கேயே
இருந்தான்
.
இவர்களே
விஷம்
கொடுத்துவிட்டு
,
கயல்விழி
மேல்
பழியைப்
போட்டாலும்
போடுவார்கள்
.
அதே
பயம்
பத்மாவுக்கும்
இருந்ததால்
…
உறங்காமல்
அடிக்கடி
மகளின்
மீது
ஒரு
பார்வையை
வைத்துக்
கொண்டே
,
வேலைகளைப்
பார்த்துக்
கொண்டு
இருந்தார்
.
காலையில்
வீட்டினர்
பார்த்த
போது
,
நந்தா
குளித்துத்
தயாராகி
வந்திருந்தான்
.
அவன்
எப்போது
வீட்டிற்குப்
போனான்
,
திரும்ப
எப்போது
வந்தான்
,
என
யாருக்குமே
தெரியவில்லை
.
வீட்டில்
இருந்து
பணம்
எடுத்துக்
கொண்டு
வந்திருப்பான்
போல
,
பத்மாவை
அழைத்துப்
புடவைக்கான
பணத்தைக்
கொடுத்து
விட்டான்
.
எட்டு
மணி
போலத்தான்
நந்தாவின்
வீட்டினர்
வந்து
சேர்ந்தனர்
.
அவர்கள்
வந்து
சேர்ந்த
தகவல்
வந்ததும்
,
உடன்
இருந்த
நண்பர்களையும்
குடும்பத்துடன்
திருமணதிற்கு
வர
சொல்லி
அனுப்பி
விட்டு
,
அவனும்
கிளம்பி
அவர்கள்
இருந்த
விடுதிக்குச்
சென்றான்
.
அப்போதும்
இரு
காவலர்களை
அங்கே
காவல்
வைத்துவிட்டே
சென்றான்
.
அவனைப்
பார்த்ததும்
,
தாரணியும்
,
பரணியும்
“
அண்ணா
…”
என
அழைத்தபடி
விரைந்து
வர
,
தன்
தம்பி
தங்கையைப்
பார்த்ததும்
நந்தாவுக்குச்
சந்தோஷமாக
இருந்தது
.
“
ஏன்
அண்ணா
திடீர்
கல்யாணம்
?”
தாரணி
கேட்க
,
“
உங்க
அண்ணியைப்
பார்த்ததும்
பிடிச்சிடுச்சா
,
இப்ப
விட்டா
வேற
யாரும்
தட்டிட்டு
போயிடுவாங்க
.
அதனாலதான்
சட்டுன்னு
கல்யாணத்தை
முடிச்சிடலாம்னு
.”
அண்ணன்
சொன்ன
காரணத்தைக்
கேட்ட
தாரணியும்
பரணியும்
சிரிக்க
,
அப்போது
அங்கே
குழலி
வந்தார்
.
அவரைப்
பார்த்ததும்
அவரிடம்
சென்றவன்
, “
அம்மா
…”
என
அழைக்க
….
அவர்
அவனைக்
கண்டுகொள்ளாமல்
இருந்தார்
.
Advertising
Advertising