அன்று காலை அலுவலகத்துக்குள் நுழைந்ததுமே ரகுனந்தபூபதியை தேடி சென்றாள் ஷைலஜா.
அவன் அறை கதவை தட்டிவிட்டு, லேசாக திறந்து, “எக்ஸ்யூஸ் மீ சார்!” என்று அவள் கேட்க,
அவளை திரும்பியும் பாராமல், “வா ஷைலுமா!” என்றவனின் பார்வை எதிரே இருந்த மானிட்டரில் நிலைத்திருந்தது.
உள்ளே வந்து அவள் சல்யூட் வைத்தபோது கூட அவன் அவளை பார்க்கவில்லை. ஏதோ தீவிர சிந்தனையில் மானிட்டரையே பார்த்திருந்தான்.
சில நொடிகள் நின்று பார்த்தவள், “சார்? எனிதிங் சீரியஸ்?” என்று கேட்க, “ஹான்?” என்று அவள் புறம் திரும்பியவள்,
“நத்திங் சீரியஸ்! பட் ஒரு கன்ஃபியூஷன்!” என்றான் மீண்டும் மானிட்டரை பார்த்துக்கொண்டு.
“என்னனு சொன்னா ஐ வில் ட்ரை டு சார்ட் இட் அவுட்”
அவள் சொன்னதும் சட்டென அவள்புறம் மானிட்டரை அவன் திருப்ப, ஆர்வமாய் பார்த்தவள் அதில் தெரிந்ததை கண்டதும் கடுகடுவென மாறிப்போனாள்.
அவனோ தீவிரமாய், “சலீம் படத்துல வர ‘மஸ்காரா’ பாட்டு இது! ஒரு வர்ஷன்ல அந்த பொண்ணு ஆடும்போது அது முன்னாடி ஒரு பொம்மை குதிச்சுகிட்டே இருக்கு… இன்னொரு வர்ஷன்ல அந்த பொண்ணு மட்டும் ஆடுது! எனக்கு என்ன டவுட்டுன்னா… இதுவே ஐட்டம் சாங்கு! இதுல எதுக்கு அந்த பொண்ணு தொப்புளை மறைக்க அந்த அனிமேட்டட் பொம்மையை ஆட விடனும்?” என்று கேட்டுக்கொண்டே இன்னமும் மானிட்டரை தான் பார்த்துக்கொண்டிருந்தான்.
எதிர் பக்கம் பதில் இல்லாது போக திரும்பிப்பார்த்தவன், அவனை ரணக்கொடூரமாய் அவள் முறைப்பது தெரிய, “ஹிஹி ஷைலுமா… நான் சும்மா கேட்டேன்… யூ பீ கூல்!” என்று மழுப்பினான்.
இன்னமும் அவனை முறைத்தவள், “காலங்காத்தாலேயே’வா?” என்றாள் அயர்ந்து.
“யூஷுவல்லா நம்ம காலைல எழுந்து வேலை செய்யும்போது கொஞ்சம் கடுப்பா இருக்கும்! அந்த நேரத்துல இப்படி ஏதாவது ஒரு ஐட்டம் நம்பரை ஓட விட்டுட்டு வேலை செஞ்ஜோம்ன்னு வையு! சும்மா நாடி நரம்பெல்லாம் முறுக்கேறி, செம்ம எனர்ஜியா போகும் அந்த நாளே! ட்ரை பண்ணு” என்றான் சின்சியராய்.
அவன் விளக்கம் கேட்டு தலையில் அடித்துக்கொள்ளலாமா என்று தான் இருந்தது அவளுக்கு.
‘பிரம்மன் இவனை தயாரிக்கும்போது என்ன மனநிலையில் இருந்திருப்பார்?’ என்று வேறு யோசிக்க தோன்றியது அவளுக்கு.
“அப்புறம் ஷைலுமா… என்ன காலைல வந்ததும் வராததுமா என்னை தேடி வந்துட்ட? நேத்து நைட்டு எபெஃக்ட்டு இன்னும் மிச்சம் இருக்கும் போலருக்கே!” என்று ஒரு மார்க்கமாய் சொல்ல, அவளுக்கு அதே நியாபகம் வந்து அவன் முகத்தை பார்க்க விடாமல் செய்தது.
அவள் தடுமாறுவதை ரசித்தவன் எழுந்து அவள் அருகே வர, விறைப்பாய் நின்றுக்கொண்டாள். அதையும் அவன் கவனிக்க தான் செய்தான்.
மேசை மீது சாய்ந்தபடி அமர்ந்துக்கொண்டு அவளை பார்த்தவன், “இன்னும் நீ எனக்கு பதில் சொல்லல” என்றான்.
“என்ன பதில்?”
“என்னை பிடிச்சுருக்கா?” அவன் ரகசிய குரலில் கேட்க,
“சார்… நம்ம டியூட்டில இருக்கோம்!” என்றாள் ஷைலஜா.
“நேத்துக்கூட டியுட்டில தானே இருந்தோம்!” சிறிது கேலியுடன் அவன் வினவ,
“இல்லையே” என்றாள் ஷைலஜா.
மேலும், “நமக்கு ஒரு நாளைக்கு டுவல் டு ஃபோர்டின் ஆர்ஸ் தான் வொர்க் டைம்! சோ, இன் தட் கேஸ், நேத்து நடு ராத்திரி நம்ம டியூட்டிலயும் இல்லை! யூனிபோர்ம்லயும் இல்லை” என்றாள் தெளிவாய்.
மெலிதான சிரிப்பு அவனிடம்!
“அதனால, டியூட்டி முடிச்சு இதெல்லாம் வச்சுக்கலாம்ன்னு சொல்ற… ரைட்டு?” என்று கேட்டதும், தயங்காமல், “யெஸ்!” என்றாள் ஷைலஜா.
“ம்ம்ம்!” என ராகம் இழுத்தவன் நிமிர்ந்து நின்று பெல்ட்டோடு பேன்ட்டை அட்ஜஸ்ட் செய்தான். பின்பு வழமைப்போல அந்த பொட்டலத்தை பேன்ட் பாக்கெட்டில் இருந்து எடுத்து வாயில் கொட்ட, அப்படியே நின்றாள் ஷைலஜா.
“குட்!” என்றவன், “ஹாஸ்பிடல்ல அந்த பொண்ணு இறந்தப்போ எடுத்த எவிடென்ஸ் அண்ட் ஹைவேய்ஸ் மர்டர் அப்போ எடுத்த எவிடென்ஸ் எல்லாம் கேதர் செஞ்சு ஒரு மெயில் அனுப்பிடு ஐ.ஜி’க்கு!” என்றவன், என்னவோ இப்போதான் கோமால இருந்து முழிச்ச மாதிரி முதல்ல இருந்து வராரு” என்று சலித்தான்.
“ஓகே சார்!” என்றாள்.
“தென்?” என்றான் அவள் இன்னமும் நிற்ப்பதை கண்டு.
“நம்மளை நேத்து கொல்ல வந்தவங்க யாருன்னு தெரியனும்! ஒரு போலீசா இருந்துக்கிட்டு ஓடி ஒளிஞ்சது ரொம்ப அவமானமா இருக்கு! உங்களை மாதிரி எதையும் கண்டுக்காம என்னால இருக்க முடியாது சார்!” என்றாள்.
“சரி, தெரிஞ்சு என்ன செய்யப்போற?”
“என்ன கேள்வி இது? தெரிஞ்சாதானே.. அவனை யார் அனுப்பினாங்க… எதுக்கு அனுப்பினாங்கன்னு கண்டுப்பிடிக்க முடியும்?” என்றாள்.
“சார், உன் ஆசையாய் ஏன் கெடுப்பானேன்?” என்றவன், “வா என்னோட!” என்று வெளியேற, அவனோடே வேகமாய் சென்றாள் ஷைலஜா.
ஒரு மாடி வளைவை தாண்டி இருந்த கஸ்டடி அறைக்குள் நுழைந்தவள் பின்னே வந்தவள் அங்கே ஒருவன் கட்டி தலைகீழாய் தொங்கவிடப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டு நின்றாள்.
கையில் லத்தியுடன் அங்கே நின்றிருந்த காவலர்கள், “சார், எவ்ளோ அடிச்சாலும் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்றான் சார்” என்றனர்.
“இறக்கி விடுங்க… மேடம் விசாரிக்கட்டும்!” பூபதி சொன்னதும் அவனை இறக்கி கீழே விட, உயிர் இருக்கிறதா என்றே தெரியவில்லை. அந்த அளவுக்கு அடி வெளுத்துவாங்கியிருந்தனர்.
“இவன்தான் நேத்து நம்மமேல கத்தி வீசுனது! என்ன விசாரிக்கணுமோ விசாரி!” என்றுவிட்டு நாற்காலியில் கால்மேல் கால் போட்டு அமர்ந்தான் பூபதி.
“எதுக்கு எங்களை கொள்ள வந்த?” என்றாள் முதல்கேள்வியாய்.
அவனுக்கு பதில் சொல்லக்கூட தெம்பில்லை.
ஒரு காவலர் அவன் முகத்தை தண்ணீரை தெளித்துவிட்டு, வாயிலும் சற்று ஊற்ற, கண்ணை திறந்தவன் அவளை பார்த்தான். மீண்டும் அதே கேள்வியை கேட்டாள் ஷைலஜா.
“தெரியாது…” என்றான் அவன்.
“உன்னை யாரு அனுப்புனது?”
“தெரியாது!”
“எங்களை கொல்லசொல்லி உனக்கு வேலை கொடுத்தது யாரு?”
“தெரியாது!”
“உண்மையை சொல்லு… உன்னை விட்டுடுவோம்! இல்லன்னா இங்கேயே கடந்து சாவனும்”
இதற்கு அவன் எந்த பதிலும் சொல்லவில்லை.
இதற்குமேல் அவனை அடிக்கவும் முடியாது. லாக்கப் டெத் என்றாகி இவர்களுக்கு குடைச்சலை கொடுக்கும்.
“உன் உயிர் உனக்கு முக்கியமே இல்லையா?
விரக்தியாய் சிரித்தவன், “சொல்லலன்னா நீ கொன்னுடுவேன்குற… சொல்லிட்டா அவன் என்னை கொன்னுடுவான்” என்றான்.
ஷைலஜாவிற்கு பரபரப்பானது. பூபதி கூட சற்று கூர்மையாய் அவனை பார்க்க, “யார் உன்னை கொன்னுடுவா?” என்றாள் ஷைலஜா.
“தெரியாது!” என்றான்.
எரிச்சலாய் வந்தது அவளுக்கு.
“உனக்கு எவ்ளோ காசு கொடுத்தான்? எப்படி கொடுத்தான்?” வேறு விதமாய் விசாரணையை மாற்றினாள்.
“எவ்ளோன்னு எண்ணி பார்க்கல… நிறைய இருந்துச்சு!” என்றவன்,
“வீட்டு வாசல்ல ஒரு பை! அது நிறைய பணம்… கூடவே ஒரு லெட்டர் உங்க போட்டோ’வோட!” என்றான்.
“எப்போ வந்தது?”
“மதியம்”
பூபதி இடையிட்டு, “நம்ம கொலை பண்ணவன் ஒரு போலீஸ்’ன்னு கண்டுபிடிச்சதுக்கு பிறகு” என்றான் ஷைலஜாவிடம்.
ஆமோதிப்பாய் தலையசைத்தவள், “யார் என்னனு தெரியாம எப்படி இதுல இறங்குன?” என்றாள்.
“காசு கைக்கு வந்துடுச்சு! விஷயம் என்னன்னு தெரிஞ்ச பிறகு யார் சொல்லிருந்தா என்ன? இதானே என் தொழிலு” வெகு நியாயமாய் பேசினான் அவன்.
“இவ்ளோ சொன்னதே பெருசு” என்றான் பூபதி. ஷைலஜாவிற்கும் அது புரிந்தது.
“இவனை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க” என்று சொன்னவள் பூபதி அருகே சென்று நின்றுக்கொண்டாள்.
“அப்போ நம்ம கெஸ்ஸிங் சரிதான்! அதனால தான் நம்மளை கொலை பண்ண ஆள் அனுப்பிருக்காங்க?” என்று ஷைலஜா கேட்க, “யெஸ்!” என்றான் பூபதி.
இருவரின் சம்பாஷணையை வெளில் இருந்து ஒட்டிக்கேட்ட இரு செவிகளுக்கு சொந்தக்காரன் அடுத்த என்ன செய்யலாம் என சிந்திக்க ஆரம்பித்தான்.
***
ரகுனந்தபூபதி தன் வீட்டு சோபாவில் படுத்து கிரிக்கெட் மேட்ச் பார்த்துக்கொண்டிருந்தான்.
‘காலிங் பெல்’ சத்தம் கேட்டது.
மணியை பார்க்க அது இரவு ஒன்பது முப்பதை தாண்டிப்போக, ‘யார் இந்த நேரத்துல?’ என்ற கேள்வியோடு கதவை திறந்தவன் அங்கே ஷைலஜாவை சத்தியமாய் எதிர்ப்பார்க்கவில்லை.
“ஷைலுமா… வாட் அ சர்ப்ரைஸ்” என்றான் இன்னமும் விலகாத வியப்புடன்.
சிரித்தவள், “பக்கத்துல கோவிலுக்கு வந்தேன்! உங்க வீடு இங்க தான்னு நடேசன் சொல்லிருக்காரு! அதான் ஜஸ்ட் அ பிரன்ட்லி விசிட்” என்று சொல்ல,அவன்புருவம் உச்சி மேட்டை தொட்டது.
“கோவிலுக்கா?”
“யெஸ்”
“சாமி கும்பிடுற பழக்கம் இருக்கா?”
இவன் இப்படி கேட்க, “வீட்டுக்கு வந்தவங்களை வாசலோட திருப்பி அனுப்புற பழக்கம் உங்களுக்கு இருக்கோ?” என்றாள் கிண்டலாய்.
இன்னமும் வியந்து போனான்.
இவள் இப்படியெல்லாம் பேசும் ஆள் இல்லையே!
தன்போல அவன் உடல் நகர, உள்ளே நுழைந்தவள் வீட்டை சுற்றிலும் பார்வையை ஓட்டினாள்.
நல்ல மஞ்சள் நிறத்தில் எடுப்பான சுடிதார் அவள் நிறத்திற்கு கூடுதல் பொலிவை கொடுத்தது. நெற்றி பொட்டு, விபூதி குங்குமம் என வைத்து ஆளே சற்று வித்தியாசமாய் தெரிந்தாள் அவனுக்கு.
வீட்டை மேலோட்டமாய் சுற்றி பார்த்தவள், “ஏன் இவ்ளோ சின்ன வீடு? கவர்ன்மென்ட் தானே காசு கொடுக்கப்போகுது? கொஞ்சம் பெருசா பார்த்தா என்ன?” என்றாள்.
வாசல் கதவின் மீது சாய்ந்து நின்றவன், “பெரிய வீடா வச்சு என்ன செய்றது? நான் ஒரு ஆள் தானே? இதுவே அதிகம் எனக்கு” என்றான்.
“அதுவும் சரிதான்!”
“நிஜமா கோவிலுக்கா?”
“ஏன் இப்படி கேட்குறீங்க?”
“இல்ல… நீ சாமி கும்பிடுவன்னு நினைக்கல” என்றான் அவன்.
“ஏன் அப்படி?”
“தெரியல… தோனுச்சு!”
“நீங்க சாமி கும்பிட மாட்டீங்களா?” இன்னமும் வீட்டை ஒவ்வொரு இடமாய் பார்த்துக்கொண்டே கேட்டாள்.
‘மாட்டேன்’ என தலையாட்டினான் பூபதி.
“ஏன்?”
“ஏன்?” அவளை போலவே கேட்டவன், “நல்ல வசதியான குடும்பம்! நான் ஒரே பையன்… திடீர்னு ஒரு நாள் ரெண்டு பேரும் என்னை விட்டு போய்ட்டாங்க! மலை மேல இருந்து சட்டுன்னு கீழ தள்ளிவிட்டமாதிரி ஆச்சு என் நிலைமை!
காசுக்கு அவ்ளோ கஷ்டம்! பிச்சை எடுக்க தன்மானம் இடம் கொடுக்கல! சொந்தபந்தம்’ன்னு யாருமே இல்ல! என்னை நானே வளர்த்துக்கிட்டு ஒரு இடத்தை புடிச்சு உட்காருறதுக்குள்ள….” என்றவன், இகழ்ச்சியாய் உதடு வளைத்து,
“சாமின்னு ஒன்னு இருந்தா என்னை இவ்ளோ கஷ்டப்பட விட்டுருக்காது” என்றான்.
“சாமின்னு ஒன்னு இருந்ததால தான் உங்களுக்கு இவ்ளோ நல்ல பதவி கிடைச்சுருக்கு” என்றாள் அவள்.
“இதை இப்படியும் சொல்லலாமா?” என்றவன் சிரித்தான்.
அவளும் சிரித்துக்கொண்டே அவன் அறையை எட்டிப்பார்த்தாள்.
“அது என் ரூம்” என்றான்.
“நான் உள்ளே போலாமா?” என்றாள் ஆர்வத்துடன்.
“நானும் வருவேன்… பரவாலையா?”
“வாங்க… அதனாலென்ன?”
“அப்பறம்… பாதில விட்டுட்டு ஓடிடக்கூடாது! எனக்கு ரொம்ப கஷ்டமாகிடும்!” விஷமத்துடன் சிரிக்காமல் அவன் சொல்ல, திரும்பி முறைத்தவள்,
சத்தமாய் சிரித்தவன், “ஏன் அப்டி?” என்று கேட்க, அவள் ஒன்றும் சொல்லவில்லை.
“நிஜமாவே கோவிலுக்கு தான் வந்தியா நீ?” மீண்டும் அவன் கேட்க இடுப்பில் கைவைத்து முறைத்தவள், “ஏன் இப்படியே கேட்குறீங்க?” என்றாள்.
“ஒருவேளை சமூக சேவை எதுவும் செய்ய வந்தியோன்னு தான்!”
“வாட் சமூக சேவை?”
“துர்காக்கு செஞ்சமாதிரி” என்றதும் அவள் பேசவில்லை.
“சொன்னா அன்னைக்கு… அவ ஒரு ரேப் விக்டிம்ன்னு… நாலு பேர்க்கிட்ட சிக்கி சாக கிடந்தப்போ நீ காப்பாத்திருக்க!” என்றவன்,
“அவ ரொம்ப லாயல்! இப்படி எல்லாம் ஒருத்தர் கிடைக்கவே மாட்டாங்க” என்றான் உள்ளார்ந்து.
“ட்ரூ” என்றவள், “ரொம்ப அக்கறை எடுத்துப்பா! கொஞ்சம் சிரிச்சுட்டா போதும், இது செய்யாதீங்க.. அங்க போகாதீங்கன்னு கெஞ்ச ஆரம்பிச்சுடுவா! அதான் அவக்கிட்ட சரியா பேச மாட்டேன்” என்றவள், இப்போது அறையை விட்டு வெளியேறி மற்றொரு சிறு அறை நோக்கி போக,
அவள் பின்னோடு வந்தவன், “மேடம் என் வீட்டுக்கு உறவாட வந்தமாதிரி தெரியல… ஏதோ உளவு பாக்க வந்தமாதிரி இருக்கு” என்றதும் விதிர்த்து திரும்பினாள் ஷைலஜா.
“எ…என்ன சொல்றீங்க?”
சிரித்தவன், மெல்ல மெல்ல அவளை நெருங்கி வந்து, “நான் கமிஷ்னர்… உனக்கு சீனியரும் கூட” என்று சொல்லி, அவள் கழுத்தில் கிடந்த கனமான டாலர் பதித்த சங்கிலியை தொட்டு காட்டியவன்,
“ஒரே பார்வைல கண்டுப்பிடிச்சுடுவேன்” என்றான்.
அவளுக்கு வியர்க்க ஆரம்பித்தது.
“இல்ல… அது.. சும்மா!” அவள் ஏதோ சொல்ல வர, “ஸ்பை கேம் வச்சுக்கிட்டு என் வீட்டுக்கு வர அளவுக்கு என்ன இருக்கு?” என்றதும் முற்றுமாய் தடுமாறிப்போனாள்.
அவள் மொபைல் ஒலிக்க, துர்கா தான் அழைத்திருந்தாள்.
“எடுத்து பேசு”
“இல்ல லேட்டாச்சுன்னு கூப்பிடுறா”
“சரி, அப்போ கிளம்பு” என்றதும், அங்கிருந்து வேகமாய் வெளியேறி சென்றவளை யோசனையாய் பார்த்துக்கொண்டு நின்றான் பூபதி.
எப்போதும் எல்லா காரியத்துக்கும் சரியாய் துடிக்கும் அவன் உள்ளுணர்வு, இப்போது இந்த கணத்தில் ஷைலஜாவின் மீது ‘ஒரு கண்’ வைக்க சொல்லி துடிக்க, அது சொல்வதை ஏற்றிக்கொள்ள முடியாமல் சற்றே தடுமாறிப்போனான் ரகுனந்தபூபதி.