அசராமல் சொல்லிவிட்டு அவளை பார்த்தவனை கண்டு அதிர்ந்துப்போய் ஷைலஜா நிற்க,
“இன்பேக்ட் யாருன்னு தெரிஞ்சு தான் ‘சூட் அட் சைட்’ ஆர்டர் வேணுன்னு பிடிவாதமா கேட்டு வாங்கிருக்கேன்!” என்று சொல்ல, என்ன சொல்வதென்றே தெரியாமல் நின்றாள் ஷைலஜா.
“எப்படி?” இந்த ஒரு வார்த்தையை கேட்கவே அவளுக்கு அத்தனை சிரமமாய் இருந்தது.
ஒருமுறையாவது அவனை ஜெய்க்க வேண்டும் என அவள் நினைக்க, ஒவ்வொரு முறையும் தன்னை மண்ணை கவ்வ வைக்கும் அவன் மீது லேசாக எரிச்சல் கூட எட்டிப்பார்த்தது.
“எப்படி’ன்னா? அப்படி தான்… அதான் நான்!!!” என்றான் சிரித்துக்கொண்டு.
“என்கிட்ட சொல்லிருக்கலாமே!” என்றவளுக்கு மனது தாங்கவே இல்லை.
“ஷைலுமா! உனக்கே தெரியும்… சில விஷயம் வெளில சொல்லாம இருக்க வரை தான் சேஃப்’ன்னு!” என்றவன், “இப்போ நான் சொல்றதை பண்ணு!” என்றான்.
‘வேறு வழி!’
“விக்கிக்கு ஃபோன் பண்ணு… இப்போ நீ கலெக்ட் பண்ண எவிடென்ஸ் பத்தி டீடய்ல்டா சொல்லு… அந்த ஹெல்மெட் மேட்டரை சொல்லி, இப்போ நீ கூட அதே மாதிரி ஹெல்மெட் தானே போட்டுருந்த? நான் பாத்தேன்னு சொல்லிட்டு அவனை உடனே நேர்ல வர சொல்லு!” என்றான்.
மறுபேச்சில்லாமல் அவன் சொன்னதை செய்தாள்.
அவள் பேச பேச மறுமுனையில் விக்கியின் குரலே கம்மிப்போனது. இறுதியாய், ‘உன்னுதும் அதே மாதிரி இருக்கு’ என்று சொன்னபோது பேச்சே இல்லை அவனிடம்!
“ஷைலுமா! நான் எதையும் யோசிக்காம இல்லடா! ஒரு போலிஸ்… அதுவும் ஜூனியர்! அவன் இவ்ளோ தைரியமா அமைச்சர் பையன் மேல கை வச்சுருக்கான்னா… அவன் பின்னால யார் இருக்கான்னு தெரியணும்ன்னு நினைச்சேன்! அதான் கொஞ்சம் விட்டு பாத்தேன்! அது யாருன்னு மட்டும் தெரியல! மே பீ அப்படி யாரும் இல்லாமல் கூட இருக்கலாம்!”
‘எதை கேட்டாலும் அதற்கு ஒரு பதிலை ரெடிமேடாய் வைத்திருப்பான்!’
அவள் மனம் சலித்துக்கொண்டது.
அன்று மதியத்திற்கு மேல் வரை காத்திருந்து அவன் வரவில்லை என்றதும், அவனுக்கு மீண்டும் முயற்சித்தாள் ஷைலஜா.
‘சுவிட்ச் ஆஃப்’
உடனே மொபைல் ஜிபிஎஸ் மூலம் அவனை ட்ராக் செய்ய சொல்லி ஷைலஜா உத்தரவிட, போரூர் சிக்னல் என்று காட்டியது.
அவன் கடந்த நான்கு மணி நேரமாகவே அங்கு தான் இருப்பதாய் ட்ராக் செய்தவர்கள் சொல்ல, அங்கிருக்கும் காவலர்களை தொடர்பு கொள்ள முயன்றாள் ஷைலஜா.
“அப்போ அவனை தேடவே வேண்டாம்… விட்டுடலாம்ன்னு சொல்றீங்களா?” சற்று கோபமாக அவள் கேட்க,
“இப்போ தேடுனாலும் வேஸ்ட்… சிக்கமாட்டான்னு சொல்றேன்!” என்றவன், “நம்ம தேடுறது சாதாரண அக்யூஸ்ட இல்லை! அவன் ஒரு போலீஸ்! இவ்ளோ நாள் நம்ம கூடவே ஒன்னும் தெரியாதவன் மாதிரி இருந்துருக்கான்! ஹி நோஸ் அவர் ரூட்ஸ்! என்ன செய்வோம்… எப்படி செய்வோம்… எல்லாம் தெரியும் அவனுக்கு!
அவனை பிடிக்கிறது அவ்ளோ ஈஸி இல்லை” என்றான்.
அவளுக்கும் அது புரிந்தது.
“இப்போ என்னதான் செய்றது?” என்றாள்.
“இந்த கேஸை க்ளோஸ் பண்ணி தூக்கிப்போட்டுட்டு மத்த வேலையை பார்ப்போம்!” என்றான்.
“அப்போ மினிஸ்டர்!?”
“ஓ…இய்யா! அவரை இப்போ பார்க்க முடியுமான்னு கேளு! போய் எல்லாத்தையும் சொல்லிட்டு வந்துடுவோம்! வேலை முடியும்!” என்றான்.
அவனை போல அவளால் இருக்க முடியவில்லை.
என்னவோ தடுத்தது… இது இல்லை… இது முடியவில்லை என்று மனம் சொல்லிக்கொண்டே இருக்க,
மினிஸ்டர் வீட்டை அடையும்வரை எந்த பேசும் இல்லை இருவரிடமும்.
இவர்களுக்காகவே காத்திருந்தார் அவர். உடன் ஐ.ஜியும் இருக்க, ‘ஒரே வேலையா முடிஞ்சுது!’ என்று எண்ணிக்கொண்டான் பூபதி.
“என்னாச்சு? ஏதோ முக்கியமான விஷயம்ன்னு சொன்னீங்க?” வந்ததுமே கேட்டார் அமைச்சர்.
“உங்க பையன் ஜெகனை கொன்னது ஷைலஜாக்கு அசிஸ்டன்ட்டா இருந்த விக்னேஷ் தான்!” தடாலடியாய் போட்டு உடைத்தான் பூபதி.
‘இப்படியா சொல்ல வேண்டும்?’ என்று ஷைலஜாவே திணற, ‘நம்ம டிப்பார்ட்மென்ட் ஆளா?’ என்று ஐ.ஜி அதிர்ந்தார்.
அவ்வளவு தான்!
அமைச்சர் ஒருபாடு ஆடி தீர்த்துவிட்டார்.
இதில் ஷைலஜாவை வேறு அவர் அவ்வப்போது ஊறுகாய் போல பேச்சில் தொட்டுக்கொண்டு தாண்டவமாட அங்கே பூபதி தவிர மீதமிருவரும் அயர்ந்துப்போயினர்.
“உன்கூடவே இருந்துருக்கான்… அதை கண்டுப்பிடிக்கக்கூட துப்பு இல்ல உனக்கு!” அமைச்சர் ஷைலஜாவிடம் மீண்டும் ஏற,
“இப்போவும் அவனை கண்டுப்பிடிச்சது நான் இல்லை… ஷைலஜா தான்!” என்று பூபதி சொன்னதும் ஒரு நொடி தன் ஆட்டத்தை நிறுத்தினார் அவர்.
அதை பயன்படுத்தியவன், “உண்மை தான்! கண்டுப்பிடிச்சது அவங்க! ரிபோர்ட் பண்றது தான் நான்!” என்றவன்,
“கண்டுப்பிடிக்குறதோட நீங்க எங்களுக்கு கொடுத்த வேலை முடிஞ்சுது! அவனை தேடி ஜெயில்ல போடுறதோ இல்ல சீக்ரெட்டா போட்டுத்தள்றதோ எதுவா இருந்தாலும் நீங்க சொல்லுங்க.. செய்ங்க!” என்றுவிட்டான்.
“அவனை என் கையாலயே கொல்லணும்ன்னு வெறி வருது! ஆனா, இன்னும் ரெண்டு மாசத்துல எலக்ஷன்! என் ஆளுங்களோ இல்ல என் பேரோ வெளில வேற மாதிரி ஆகிட கூடாது…” என்றார்.
‘ஹும்… புள்ளையே போனபிறகு கூட கட்சி, பதவி, பணம் தான் முக்கியம் போல’ கசப்பாய் நினைத்தாள் ஷைலஜா.
“என் ஆளுங்களை விட்டு தேட ரொம்ப நேரம் ஆகாது! அதுல ஒரு சிக்கல் இருக்கு… என் பையனை எதுக்கு கொலை செஞ்சான்குற கேள்வி வரும்? அதுக்கு பதில் கிடைக்குறது அவ்ளோ நல்லது இல்ல!” என்றவர்,
“எலக்ஷன் முடியட்டும்! அவனை நானே என் கையால கொல்றேன்!” என்றார்.
எழுந்துக்கொண்டான் பூபதி.
“கேஸ் கிளோஸ் பண்ணியாச்சு! ஐ’யம் லீவிங்” என்றவன் அங்கிருந்து வெளியேற, ஷைலாவுடன் சேர்ந்து ஐ.ஜி’யும் அவனோடே வந்தார்.
“மிஸ்டர் ரகுனந்தபூபதி… ஒன் மினிட்?” அவர் நிறுத்த, நின்றான் அவன்.
“விக்கி தான்னு கன்போர்ம்மா தெரியுமா?”
“யெஸ்!”
“அப்படின்னா தெரிஞ்சதுமே அவனை அரஸ்ட் பண்ணிருக்கணும்!”
“கரெக்ட்! ஐ டிட் அ மிஸ்டேக்!” உடனே ஒப்புக்கொண்டான் அவன்.