Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Imsai Kaathali

இம்சை காதலி – 6

“அஞ்சு! டெஸ்ட் எப்படி பண்ணுனடி??” என்று சுஜி திரும்பி உட்கார்ந்தாள்.

 

 



Advertisement

“ம்ம்…” நான்கு பக்கமும் தலையை ஆட்டினாள்.

Advertisement

Advertisement

 

 

“என்னடி நாளுப் பக்கமும் ஆட்டுற?” ஹேமா வேகமாக.

Advertisement

 

 

“அஞ்சு! நீ ஒழுங்கா பண்ணலனா விதுரன் அண்ணா உன்ன சும்மா விடமாட்டாங்க. உனக்கு தெரியும்ல? கஷ்டமா இருந்ததா?” ருத்ரா பதரியபடி.

 

 

அஞ்சு சிரிப்புடன் இரு கைகளால் டம்ஸ் காட்டிச் சிரித்தாள். “அப்ப நீ? சூப்பர்டி!” என்று மூவரும் அணைத்தனர்.

 

 

 

 

“என்ன நாளு பேரும் ஒரே ஹாப்பி போல! நானும் சேர்ந்துக்கவா?” விஷ்வா அவர்கள் பக்கத்தில் வந்து.

 

 

“யாருடி இந்த நியூ என்றி?” சுஜி மேல் இருந்து கீழ் வரை விஷ்வாவைப் பார்த்தபடி.

 

 

“நேம் விஷ்வா. நம்ம விதுரன் சாரோட தம்பி. எங்ககூடதான் ஸ்கூல் படிச்சான். விஷ்வா! இவ சுஜி. இவ ஹேமா” என்று அறிமுகம் செய்தாள்.

 

 

“ஹாய்! நானும் இனிமே உங்ககூட தான் ஒர்க் பண்ணபோறேன். இதான் என் ப்ளேஸ் ” என்று இவர்கள் இருந்த இடத்தைவிட்டு  ரெண்டு சேர் தள்ளி இருந்தது.

 

 

“ஓ… குட்! எந்த டீம்?” சுஜி.

 

 

“சுந்தர் அண்ணா டீம்”.

 

 

“அட! என் டீமு. நானும் அந்த டீம் தான்” ஹேமா சிரிப்புடன்.

 

 

“சூப்பர்! நா அஞ்சு டீம்தான் போட சொன்னேன். எங்க அண்ணா கேக்கல” கடுப்புடன். நான்குபேரும் சிரித்தனர். “ஏன் சிரிக்கிறீங்க?” பாவமாக.

 

 

“உன் அண்ணா டீம் போக அவ்ளோ ஆர்வமா? உன் அண்ணா இங்க வச்சு செய்றாங்க. அங்க போன ரொம்ப படிக்கணும். போறீயா?” ருத்ரா கிண்டலாக.

 

 

“என்னது! படிக்கணுமா?” அதிர்ச்சியுடன்.

 

 

“ஆமா. அஞ்சு படிச்சுக்கிட்டே இருப்பா. அந்த டீம்ல வீக்லி ரெண்டு டெஸ்ட் வைப்பாங்க. போறீயா?” ஹேமா கிண்டலாக.

 

 

“நாங்க வேணா ரெக்கமெண்ட் பண்ணட்டுமா?” சுஜி கிண்டலாக.

 

 

“அவன் இன்டர்வியூவே இல்லாம சேர்ந்து இருக்கான். அவனுக்கு நாம ரெக்கமெண்ட் பண்ணனுமா? உன் அண்ணா இன்டர்வியூ எடுக்காம உன்ன சேத்துக்க மாட்டாங்க. அப்புறம் எப்படி நீ  சேர்ந்த அத பஸ்ட் சொல்லு?” அஞ்சு யோசனையுடன்.

 

 

“அது..” என்று ஆரம்பிக்கும் போதே,

 

 

“சாப்பிட வராம இங்க என்ன பண்ணுறீங்க?” என்றபடி அர்வி வந்தான்.

 

 

“கிளம்பிட்டோம்” என்றனர் பெண்கள் நால்வரும்.

 

 

“சரி! வாங்க போலாம். விஷ்வா! நீ வரலயா? உன் அண்ணனுக்காக வெய்ட் பண்ணுறீயா?”.

 

 

“இல்லண்ணா. ஹெச்.ஆர் கூப்பிட்டாங்க. ஜாயினிங் ஃபார்மாலிட்டி எல்லாம் முடிச்சுட்டு வந்ததும், சுந்தர் அண்ணா கூப்பிட்டாங்க இப்பதான் விட்டாங்க” சலிப்புடன்.

 

 

“அதானே உன் அண்ணாக்காக நீ வெய்ட் பண்ணுறதாவது” என்று கிண்டலுடன் அழைத்துச் சென்றான்.இவர்களுடன் மற்றவர்களும் சென்றனர்.

 

 

“அண்ணா! எங்க உங்க ஃப்ரெண்ட்? நாம சாப்பிட்டே முடிச்சுட்டோம். இன்னும் ஆள காணோம்” என்றாள் பாதையைப் பார்த்தபடி.

 

 

“அஞ்சு! அவனுக்கு க்ளையண்ட் கால் இருக்குடா. அத முடிச்சுட்டு வந்து சாப்பிடுவான். நீ உன் ஒர்க்க பாருடா. நீ பண்ணலனா அதுக்கும் ஏதாச்சும் சொல்லுவான்” என்று சமாதானம் செய்தான்.

 

 

“ம்ம்…”.

 

 

“ருத்ரா! நா கொடுத்த ஒர்க்க முடிச்சுட்டியா?”.

 

 

 

“இன்னும் கொஞ்சம் இருக்கு. முடிச்சுட்டு அனுப்புறேன்”.

 

 

“சரி! அத முடிச்சுட்டு என் கேபினுக்கு வா. போலாம் அஞ்சு” என்று எழுந்தான்.

 

 

அஞ்சு கீழே வந்ததும் விதுரன் அறையை அடிக்கடி பார்த்தபடி வேலையைப் பார்த்தாள். சிறிது நேரத்தில் வெளியே வந்தவன் இவள் இடத்தைப் பார்த்தான். அஞ்சு அவனைப் பார்த்துவிட்டு கண்டுகொள்ளாமல் வேலை பார்ப்பது போல் நடித்தாள். விதுரன் நேராக இவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தான். அஞ்சு முழித்தபடி இவனைப் பார்த்தாள்.

 

 

“சாப்டியா?” என்றான் பக்கத்தில் வந்து.

 

 

“சாப்டேண்ணா. இன்னைக்கி நம்ம அம்மா நா வேலைக்குப் போறேன்னு  ஒரு முட்டை எக்ஸ்ட்ராவே வச்சாங்க” என்றான் விஷ்வா சிரித்துக் கொண்டே.

 

 

“நீதான் நல்ல சாப்டுருப்பான்னு  எனக்கு தெரியுமே! நா அஞ்சுவையும் ருத்ராவையும் கேட்டேன். நீ உக்காந்து வேலையப் பாரு. இவங்க கேபின் கிட்ட உனக்கு என்ன வேலை?” முறைப்புடன்.

 

 

“அது.. அஞ்சு கிட்ட டவுட் கேக்க வந்தேன்ணா” இழிப்புடன்.

 

 

“ஹேமா உன் டீம்தான். அவங்ககிட்ட கேளு. ஹேமா! அவனுக்கு சொல்லிக்கொடுங்க”.

 

“ஓகே சார்” என்றாள் திரும்பி உட்கார்ந்து.

 

“சரி அஞ்சு! ருத்ரா! சாப்டிங்களா?”.

 

“சாப்டோம்” என்றனர்.

 

“சரி! நா போய் சாப்டுறேன்” என்று நகர்ந்தான்.

 

“தனியாவா?” என்றாள் அஞ்சு வேகமாக.

 

விதுரன் சிரிப்புடன், “இல்ல. திவா வரான். அவனும்தான் என்கூட கால்ல இருந்தான். நீ படி” என்று சென்றான்.

 

 

 

“அஞ்சு! என் ஒர்க் ஓவர். நா போய் அர்விய பார்த்துட்டு வரேன்” என்று எழுந்து சென்று கதவைத் தட்டினாள்.

 

“எஸ்” என்றான்.

 

“சார்! முடிச்சுட்டேன்”.

 

“சரி ருத்து! நா உன்ன வர சொன்னதே ஒரு முக்கியமான விஷயம் பேசதான். வந்து உக்காரு” என்று எழுந்து பக்கத்தில் வந்தான்.

 

“ம்ம்… சொல்லுங்க” என்று உட்கார்ந்தாள்.

 

அர்வி அவள் பக்கத்து சேரில் உட்கார்ந்து, “எனக்கு நீ ஹெல்ப் பண்ணணும்”.

 

“என்னால பண்ண முடிஞ்சா பண்ணுறேன். சொல்லுங்க”.

 

“உன்னால முடியும்டா” என்று அனைத்தையும் சொன்னான். முதலில் அதிர்ந்தவள் பிறகு யோசனையுடன் அவன் சொல்வதைக் கேட்டாள். “இந்த விஷயம் அஞ்சுக்கு தெரிய வேணா”.

 

“இல்ல. சொல்ல மாட்டேன்”.

 

“சரி ருத்து! நீ போய் ஒர்க் பாருடா” என்று எழுந்தான்.

 

“நம்மளால சரி பண்ண முடியுமா?” என்றாள் யோசனையுடன்.

 

“முடிஞ்சாகணும் உன்கிட்ட இன்னொரு விஷயம்கூட சொல்லாம விட்டுட்டேன். அது என்னனா?” என்று ஆரம்பிக்கும்போதே,

 

“அர்வி!” என்றபடி விதுரன் உள்ளே வந்தான்.

 

“என்னடா?”.

 

“என்ன ருத்ரா இங்க உக்கார்ந்துருக்கா? என்னாச்சு?” என்று புருவம் உயர்த்தினான்.

 

 

“ஒன்னும் இல்லடா. அவ பண்ணுன ஒர்க்ல மிஸ்டேக் இருந்தது. அத சொல்லிக்கொடுத்தேன். நீ சொல்லு மச்சி”.

 

“நா ஒரு நீயூ புராஜக்ட் பத்தி பேச வந்தேன்டா. சொல்லிக்கொடுத்துட்டியா? இல்லனா சொல்லிக்குடு டா. நா வெய்ட் பண்ணுறேன்” என்று ருத்ரா பக்கத்தில் உட்கார்ந்தான்.  ருத்ரா திருதிருவென்று முழித்தப்படி அர்வியைப் பார்த்தாள்.

 

“அது சொல்லிக் கொடுத்துட்டேன் டா. ருத்து! நீ போ” அவசரமாக.

 

“ம்ம்.. ஓகே சார்” என்று வேகமாக வெளியே சென்றாள்.

 

“என்னடா? ஆஃபிஸ்லயே லவ்ஸ்ஸா? பிச்சுப்புடுவேன் பிச்சி! லவ்ஸ்லாம் ப்ரேக் டைம்ல வெளிய வச்சுக்கோ. சரியா?” என்று கிண்டலாக அவன் முதுகில் அடித்தான்.

 

 

 

 

 

 

 

“டேய்! உண்மையாவே சொல்லித்தான் கொடுத்தேன்டா” சிரிப்புடன்.

“நீ இளிக்கிறதுலயே தெரியுது டா எரும! கொஞ்சம் வேலையை பார்க்கலாம் வா” என்று வேலை சம்பந்தமாகப் பேசிவிட்டு அவன் இடத்திற்குச் சென்றான்.

 

சிறிது நேரத்தில், “அஞ்சு! சார் கூப்பிட்டாங்க, வா” என்று அவள் டீமெட் அழைத்துச் சென்றான்.

 

“டெஸ்ட் எப்படி இருந்தது?” என்று அனைவரையும் பார்த்துக் கேட்டான்.

 

“நாட் பேட், குட்” என்றனர்.

 

“ம்ம்… லாஸ்ட் டெஸ்ட்டுக்கு இந்த டெஸ்ட் எல்லாருமே நல்லா பண்ணிருக்கீங்க கைஸ், குட்!” என்று சிரிப்புடன் கையைத் தட்டினான்.

 

‘உனக்கு சிரிக்கலாம் தெரியுமா?’ என்று அஞ்சு மனதிலே நினைத்தபடி பார்த்தாள்.

 

“தேங்க்ஸ் சார்” என்றனர்.

 

“இந்த டெஸ்ட்ல சால்வ் பண்ண முடியாதபடி ஒரு புரோகிராம் கொடுத்தேன். அத சால்வ் பண்ணுனது ஒரு ஆள்தான்” என்று நிறுத்தினான். அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

 

“யாருன்னு நினைக்கிறீங்க?”.

 

 

 

 

 

 

 

“சதிஷா சார்?” என்றனர் சிலர். சதிஷ் முழித்தான்.

 

 

 

 

 

 

 

 

“சூப்பர்! சதீஷ்” என்றாள் அஞ்சு சிரிப்புடன்.

 

 

 

 

 

 

 

 

“தேங்க்ஸ்” என்று இளித்தான்.

 

 

 

 

 

 

 

“நா சதீஷ்னு சொல்லவே இல்லையே. அத முடிச்சது அஞ்சனா” என்று அவளைப் பார்த்துச் சிரித்தான்.

“சூப்பர்! அஞ்சு” என்றனர்.

 

“நீங்க யாருமே அந்த புரோகிராம்கு அன்ஸர் பண்ணல. அஞ்சனா மட்டும் தான் பண்ணிருக்காங்க. அஞ்சனா பண்ணுனத  உங்க எல்லாருக்கும் மெயில் பண்ணிருக்கேன். அத பாருங்க. புரியலனா கேளுங்க. அப்றம் நெக்ஸ்ட் ஃபைல் அனுப்பிருக்கேன். அத படிங்க. புரியலனா எப்ப வேணும்னாலும் கேக்கலாம். நீங்க போலாம்” என்று வேலையைப் பார்த்தான்.

 

அஞ்சு சந்தோஷமாக வந்து விதுரன் சொன்னதைச் சொன்னாள். “சூப்பர்டி!” என்று மூன்று பெண்களும் சிரித்தனர். சிறிது நேரத்தில், “ருத்து! எனக்கு இதுல டவுட் இருக்கு. நா போய் சார்கிட்ட கேட்டுட்டு வரேன்” என்று நோட்டுடன் எழப் போனாள்.

 

 

 

 

 

 

 

 

“இரு, நா பாக்குறேன். எனக்கு புரியலனா அப்றம் போய் கேளு” என்று அவள் சிஸ்டமைப் பார்த்தாள். சிறிது நேரத்தில் முழித்தபடி அஞ்சுவைப் பார்த்தாள்.

 

 

“புரியலதானே லூசு! நமக்கு இது தெரியாதுடி. இரு, நா போய் கேட்டுட்டு வரேன்” என்று எழுந்து சென்று கதவைத் தட்டினாள்.

 

 

“கமின்!”.

 

“சார்! எனக்கு சிலது புரியல. சொல்லி தரிங்களா?”.

 

“அஞ்சு மேடமுக்கே புரியலையா! சோ சேட்” என்றான் கிண்டலாக.

 

“சரி! நா போய் எங்க அண்ணா கிட்டயே கேட்டுக்குறேன்” என்று திரும்பினாள்‌.

 

“ஏய்! நில்லு நில்லு! சொல்லி தரேன்” அவசரமாக.

 

“ஒன்னும் வேணா” திரும்பி நின்றபடி.

 

“அஞ்சு குட்டி! வா! நீ என் டீம்ல? சமாதானம் சமாதானம்!”.

 

“ம்ம்… இனிமே இப்படி வம்பு பண்ணாம சொல்லிக் கொடுங்க சார். இல்லனா நா அண்ணாகிட்ட போயிடுவேன்” என்று பேரம் பேசினாள்.

 

“சரி சரி! வந்து உக்காரு தாயே! எதும் பண்ணமாட்டேன். எனக்கு நீ இவ்ளோ பயப்புடுவன்னு தெரிஞ்சுருந்தா போனா போகுதேன்னு விட்டுருப்பேன்” என்றான் மீண்டும் கிண்டலாக. முறைத்தபடி திரும்பிப் போகப் போனவளை வேகமாக வந்து அவள் கையைப் பிடித்து இழுத்தான். இழுத்த வேகத்தில் அவன் மார்பில் முட்டி நின்றபடி அவனைப் பார்த்தாள். அவனும் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். போனின் சத்தத்தில் இருவரும் வேகமாகப் பிரிந்தனர்.

 

“சாரி” என்று போனை எடுத்துப் பார்த்தவன் யோசனையுடன் பேசாமல் சைலண்ட்டில் போட்டுவிட்டு, “வா அஞ்சு! உக்காரு. சொல்லி தரேன்”.

 

மீண்டும் போன் அடித்தது, “நீங்க பேசுங்க சார். நா அப்பறம் வரேன்”.

 

“வேணா, நீ வா” என்று மீண்டும் சைலண்டில் போட்டான்.

 

“ம்ம்… சரி” என்று உட்கார்ந்தாள். அவள் பக்கத்தில் அவனும் அமர்ந்து சிஸ்டமை திருப்பினான்.

 

“இந்தா, இதுல எது டவுட்னு சொல்லு. நா சொல்லி தரேன்” என்று சிஸ்டமை காட்டினான். மீண்டும் போன் அடித்தது.

 

“முதல்ல பேசுங்க சார். நா இதுல பாக்குறேன். என்ன அவசரமோ? கால் பண்ணிட்டே இருக்காங்க” என்று சிஸ்டமைப் பார்த்தாள்.

 

போனை எடுத்து, “ஹலோ! போன் அட்டென்ட் பண்ணலனா பிஸின்னு தெரியும்ல? அப்றம் ஏன் இத்தன டைம் கால் பண்ணுற?”.

 

“….”

 

“ம்ம்… சரி! அப்றம் பண்ணுறேன்” என்று வைத்தான். அஞ்சு அவனைப் பார்த்தாள், “எடுத்துட்டியா?”.

 

“ம்ம்..‌ இதான்” என்று காட்டினாள். அதில் இருந்து ஒவ்வொன்றாக சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தான். சிறிது நேரத்திலே அவன் அனுப்பிய அனைத்தையும்  முடித்தான். கதவு தட்டும் சத்தம் கேட்டுத் திரும்பினர். அர்வியும் ருத்ராவும் உள்ளே வந்தனர்.

 

“சொல்லு டா” என்றான் விதுரன்.

 

“என்னத்த சொல்லுடா? டைம பார்த்தியா? எவ்ளோ நேரமா அஞ்சு வருவான்னு ருத்ரா வெயிட் பண்ணுறது? அதான் உள்ளேயே வந்துட்டோம்”.

 

கையைத் திருப்பிப் பார்த்துவிட்டு, “சாரி டா! டைம பாக்கல. அஞ்சு! நீ கிளம்பு நாளைக்கு பார்த்துக்கலாம்”.

 

“சரி” என்று எழுந்தாள்.

 

“இந்தாடி பேக். விஷ்வா வெளிய வெயிட் பண்ணுறான். நம்மள டிராப் பண்ணிட்டு தான் போவானாம்” என்று ருத்ரா சிரித்தாள்.

 

“டூவிலர்ல உங்க ரெண்டு பேரையும் டிராப் பண்ணப் போறானா? எப்படி?” என்றனர் அர்வியும் விதுரனும்.

 

“தெரியல. ஏதோ புலம்பிக்கிட்டே இருக்கான்” என்று சிரித்தாள்.

 

“இருங்க, ஒரு நிமிஷம்” என்று வேகமாக சிஸ்டமை நிறுத்திவிட்டு பக்கத்தில் வந்து, “வாங்க போலாம்” என்றான் மூவரிடமும்.

 

நான்குபேரும் சேர்ந்து கீழே இறங்கி வந்தனர். “அஞ்சு! போலாமா?” என்றான் விஷ்வா வேகமாக வந்து.

 

“மூணுபேர் எப்படி பைக்ல போக முடியும்? எங்க ஹாஸ்டல் பக்கத்தில தான்”.

 

“அதான் அர்வி அண்ணா எங்க அண்ணா இருக்காங்கள்ல! ருத்ரா கார்ல வருவா, நீ பைக்ல என்கூட வா” என்று கையைப் பிடித்து இழுத்தான்.

 

“டேய்! விடுடா” என்றனர் ஆண்கள் இருவரும்.

 

“நீங்களும் வாழமாட்டிங்க என்னையும் விடமாட்டிங்க” என்று எரிச்சலுடன் முணுமுணுத்தான்.

 

“அர்வி! நீ அவங்க ரெண்டு பேரையும் உன் கார்லயே கூட்டிட்டு வா. விஷ்வா! பைக் இங்கயே இருக்கட்டும். நாளைக்கு எடுத்துக்கலாம் என்கூட வா” என்று இழுத்துச் சென்றான். மற்றவர்கள் சிரிப்புடன் அர்வி காரில் ஏறினர்.

 

‘நீ யாருன்னு எனக்கு நல்லாவே தெரியும் டா. பைக்ல வந்தா நீ அவங்கள ஹாஸ்டல்குள்ள விடாம பேசிக்கிட்டே இருப்ப. இனி உன்ன வாச் பண்ணுற வேலையையும் சேர்த்து பாக்கணும் போல?’ என்று விதுரன் மனதிலே புலம்பினான்.

 

 

 

 

 

 

 

 

 

இப்படியே ஆறு மாதங்கள் சென்றது. விதுரன் அஞ்சு கேக்காமலேயே அவளுக்குப் பல விஷயங்கள் சொல்லிக் கொடுத்தான். விஷ்வாவை அஞ்சுவிடம் நெருங்கவிடாமல் சுந்தரை வைத்து  அர்வியும் விதுரனும் தடுத்தனர். அர்வியும் ருத்ராவும் காதலை மட்டும் பகிராமல் கண்களால் கவிதை எழுதினர். அனைவரும் ட்ரைனிங் முடிந்து புராஜக்டில் இணைந்தனர்.

 

அன்று நேரமாகியும் கிளம்பாமல் அஞ்சு வேலைப் பார்த்துக்கொண்டு இருந்தாள். வெளியே வந்த விதுரன் இவள் மட்டும் இருப்பதைப் பார்த்து இவளிடம் வந்தான். “என்ன அஞ்சு! கிளம்பாம இருக்க?”.

 

“அது.. சார்! கொஞ்சம் ஒர்க் இருக்கு. எரர் வந்துக்கிட்டே இருக்கு. அதான் பாக்குறேன் டைமாச்சு” என்றாள் சிஸ்டமைப் பார்த்தபடி.

 

அவள் பக்கத்தில் சேரை இழுத்துப் போட்டு உட்கார்ந்து,”நீ மட்டும் தனியா ஏன் இருக்க? ருத்ரா எங்க?”.

 

“அவளுக்கு கொஞ்சம் உடம்பு சரியால்ல. மதியமே லிவ் போட்டுட்டு ஹாஸ்டல் போயிட்டா”.

 

“சரி! நீ கிளம்பு. நா இத முடிச்சுறேன்”.

 

“வேணா சார். நா பண்ணுறேன். அப்பதான் கத்துக்க முடியும்”.

 

அவளைத் திரும்பிப் பார்த்துவிட்டு, “நீ ரொம்ப டையர்டா இருக்கடா. நா பார்த்துக்குறேன் இல்லனா நாளைக்கு வந்து பண்ணு”.

 

“இல்ல. இத முடிச்சுட்டா நா கொஞ்சம் ஃப்ரீயா இருப்பேன்” என்றாள் பிடிவாதமாக.

 

“எல்லாத்துக்கும் பிடிவாதம்தான். இரு, வரேன்” என்று எழுந்து சென்றவன் சிறிது நேரத்தில் கையில் காப்பியுடன் வந்தான்.

 

“எங்க போனீங்க?” என்றாள் சிஸ்டமைப் பார்த்தப்படி.

 

“முதல்ல இத குடி. நா பண்ணுறேன்” என்று அவளிடம் கொடுத்துவிட்டு உட்கார்ந்து வேலையைப் பார்த்தான். அஞ்சு காப்பியைக் குடித்தபடி அவனையே பார்த்தாள். விதுரன் வேலையைப் பார்த்தபடி திரும்பிப் பார்த்தவன் அவளயே பார்த்துக் கொண்டுருந்தான். இருவரின் கண்களும் கலந்தது.

 

“இங்க என்ன நடக்குது?” என்று குரல் கேட்டதும் இருவரும் பதறி நிமிர்ந்து பார்த்தனர்.

 

 

 

 

 

 

 

குரலுக்குச் சொந்தக்காரர் யார்?? அர்வி ருத்ராவிடம் என்ன சொன்னான்?? விதுரன் போனில் யாரிடம் பேசினான்?? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்…..

 

 

 

 

 

 

 

?இம்சை தொடரும் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!